Followers

Saturday, December 24, 2022

பாட்டன், பூட்டன் காலத்தில் சபரிமலைக்கு செல்ல முடியாது.

30 ஆண்டுகள் சபரிமலை சென்றவர்களை குருசாமி என்பார்கள், இன்று எல்லா சாதியினரும் சபரி மலைக்கு செல்கின்றனர். ஆனால் நம் பாட்டன், பூட்டன் காலத்தில் அவர்களால் சபரிமலைக்கு செல்ல முடியாது. ஏன் என்றால் கேரளாவில் கோயில்களை சுற்றியுள்ள சாலையில் ஆடு,மாடு,பன்றி கூட நடக்கலாம். மனிதர்கள் நடக்க கூடாது என்ற நிலை இருந்தது.

பெரியாரின் வைக்கம் போராட்டத்தால் அனைவரும் கோவிலுக்கு செல்லலாம் என திருவிதாங்கூருக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதற்கும் சட்டம் இயற்றப்பட்டது.இன்று அனைத்து தரப்பினரும் ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கான உரிமையை வாங்கி கொடுத்தது பெரியார்!




No comments: