Followers

Showing posts with label ஆரியர்கள். Show all posts
Showing posts with label ஆரியர்கள். Show all posts

Monday, August 24, 2020

விநாயக சதுர்த்தியும் குத்தாட்டமும்.....

 விநாயக சதுர்த்தியும் குத்தாட்டமும்.....

பக்தி என்பது மனதில் உதிப்பது. இறைவனை அன்போடும் பக்தியோடும் அணுகி நமது கோரிக்கைகளை வைப்பது வழக்கம். ஆனால் இங்கு நடப்பது பக்தியா? 10 வயது சிறுவனும் 20 வயது இளைஞர்களும் சாராயத்தை உள்ளே தள்ளி விட்டு கடைகளை உடைப்பதும் நடைபாதைகளை சேதப்படுத்துவதும்தான் விநாயக சதுர்த்தியா?

இங்கு குத்தாட்டம் போடும் சிறுவர்களில் யாராவது ஹெச்.ராஜா குடும்பத்து பார்பன குழந்தைகள் உண்டா? நாராணயன், கே.டி. ராகவன் குடும்பத்து பிள்ளைகள் யாராவது இந்த கும்பலில் இருக்கிறார்களா. கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். கலவரம் வரலாம்: வெட்டு குத்துகள் நடக்கலாம்: வழக்கும் பதியப்படலாம். எனவே இங்கெல்லாம் ஹெச்.ராஜா தனது குடும்ப உறுப்பினர்களை அனுப்ப மாட்டார். ஆண்மையற்ற அரசு என்று அறிக்கை விடும் ஹெச்.ராஜா தனது குடும்பத்து உறுப்பினர்களை இந்த கூட்டத்துக்கு அனுப்பியிருக்க வேண்டுமல்லவா?

பார்பன குழந்தைகள் சிறந்த பள்ளி, கல்லூரிகளாக பார்த்து தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளும் முயற்சியில் இருப்பார்கள். மறந்தும் ராஜாக்களும் நாராயணன்களும் தங்களின் குழந்தைகளை ஊர்வலத்துக்கு அனுப்ப மாட்டார்கள்.

இங்கு பின்னால் இருந்து ஹெச்.ராஜா, ராகவன் போன்றவர்கள் பணம் கொடுத்து பிரியாணியும், சாராயத்தையும் கொடுத்து தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை களத்தில் இறக்கி விட்டுள்ளார்கள். இனி விநாயகர் சதுர்த்தியில் குத்தாட்டம் போடும் இந்த இளைஞர்களின் வாழ்வு இப்படியே தான் கழியும். குற்றப் பரம்பரைகளாக வளருவர். இதைத்தான் ஹெச்.ராஜா போன்றவர்கள் விரும்புகின்றனர். இதனை உணர்ந்து கொள்ளாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த அப்பாவி மக்கள் பகடைக் காய்களாக பயன்படுத்தப்படுவார்களோ?



Tuesday, October 10, 2017

ஆரியர்கள் தமிழகத்தில் காலூன்றியது எவ்வாறு?



ஆரியர்கள் நம் நாட்டின் பூர்வ குடிகள் அல்ல என்பதை அவர்களின் தோற்றங்களையும் பேசும் முறைகளையும் வைத்தே நம்மால் ஊகித்து விட முடியும். இது பற்றிய பல செய்திகளை ஆதாரங்களோடு 'வழிப்போக்கன்' என்ற பதிவர் தனது தளத்தில் பதிவுகளாக பதிந்துள்ளார். அதனை இனி பார்போம்.

அரசனைக் கைக்குள் வைத்து இருந்தால் அவனை மட்டுமே கட்டுப் படுத்த முடியும், ஆனால் ஆன்மீகத்தினை கையில் வைத்து இருந்தால் யாரை வேண்டும் என்றாலும் கட்டுப்படுத்தலாம் என்ற உண்மை ஆரியர்களுக்கு நன்கு தெரிந்து இருந்தது. அதனால் அரசனின் துணையுடன் ஆன்மீகத்தினை தங்களின் பிடிக்குள் கொண்டு வர முயல்கின்றனர்.

ஒரு நாட்டினைப் பிடிக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் அரசனை வெல்ல வேண்டும். அதனைப் போன்று ஆன்மீகத்தை தங்களுக்கு உரிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீகத் தலைவர்களைக் கொல்ல வேண்டும். அது தான் தமிழக வரலாற்றில் நிகழ்ந்து இருக்கின்றது. சித்தர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
பிராமணர்களை எதிர்த்த சித்தர்கள் காடுகளுக்குள் விரட்டப்படுகின்றனர். பின்னர் அதுவும் போதாதென்று உயிருடன் குகைகளுள் அடைக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுக்கு 'ஜீவ சமாதி' அடைந்தார் என்று பட்டத்தையும் தந்து சிறப்பித்தனர் என்பது வரலாறு. மேலும் சிலரை உயிருடன் எரித்து விட்டு அவர் முக்தி அடைந்து விட்டார் என்றப் பட்டத்தையும் தந்து அவர்கள் கொலை செய்யப்பட்டதை மறைத்த செயல்களும் இங்கே நிகழத்தான் பெற்று இருக்கின்றன.


அதனைப் போன்றே இறுதி நாயன்மாரான நந்தனாரின் கொலையும், இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரின் கொலையும் நிகழப் பெற்று சைவ கோவிலின் தலைமையிடமான சிதம்பரமும், வைணவக் கோவிலின் தலைமையிடமான திருவரங்கமும் பிராமணர்களின் வசம் செல்லுகின்றது.

சோழர்களின் வீழ்ச்சியும், தமிழக கோவில்கள் பிராமணர்களின் கைகளின் செல்வதும் தற்செயலான செயல்களா அல்லது ஒரு மிகப் பெரிய சதியின் பகுதிகளா என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. நிற்க.

சோழர்களின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து பாண்டியர்கள் சிறிது வலு பெறுகின்றார்கள். ஆனால் அவர்களும் என்ன செய்ய முடியும், நேரிடையாகப் போர் புரியும் எதிரியை வெல்லலாம் ஆனால் சூழ்ச்சியினால் முதுகில் குத்துபவனை எவ்வாறு அறிவது? பாண்டியர்களும் சிறிதுக் காலத்தில் வீழ்ச்சியினைத் தான் அடைகின்றனர்.

இக்காலத்தில் தான் பிராமணர்களின் முழு செல்வாக்கினைப் பெற்ற விசய நகரப் பேரரசு தமிழகத்தினைக் கைப்பற்றுகின்றது. தமிழர்களின் நிலை அடிமை நிலைக்குச் செல்லுகின்றது.


கோவில்கள் பிராமணர்களின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன...

"அபிசேகப் பண்டாரம் என்னும் பார்ப்பனர் அல்லாத சாமியார் நிர்வாகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது. பார்பனர் தம் பாதம் தாங்கியான திருமலை நாயக்கன் அப்பண்டாரத்தை அச்சுறுத்தியும் நிலம் பணம் முதலியன கொடுத்தும் மீனாட்சி அம்மன் கோவில் ஆளுகையினைப் பறித்துக் கொண்டான். பரிதாபத்துக்குரிய பண்டாரமும் அரசு ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பயந்து ஒதுங்கிக் கொண்டார்.

திருமலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினை ஏற்றுக் கொண்ட பின் முதல் வேலையாகக் கோவில் வழிபாட்டிற்கு என்று பார்ப்பனர்களான குலசேகரப் பட்டன் வகையறாவினரையும் விக்கிரம பட்டன் வகையறாவினரையும் நியமித்துக் கொழுக்க வைத்தான்"
என்றே "பார்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்" என்ற நூலினில் புலவர். கோ. இமயவரம்பன் கூறுகின்றார்.

இதைப் போன்ற நிலை தான் பழனிக் கோவிலிலும் நிகழ்ந்து இருக்கின்றது என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

மன்னராட்சிக் காலத்தில் அரசன் நமக்குத் துணை நின்றான் என்றால் நாம் கூறுவது தானே உண்மை. அவ்வாறே உண்மைகள் புனையப்படுகின்றன...தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இக்கொடுமைகளை எதிர்த்த ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், வீரர்கள் ஆகியோர் அனைவரும் தாழ்த்தப்படுகின்றனர். அவர்கள் பஞ்சமர்கள் என்று முத்திரைக் குத்தப் பெற்று நாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இன்றைக்கு தாழப்பட்டவர்களாக இருப்பவர்கள். மேலும் தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகள் பிறப்பின் அடிப்படையிலான ஒன்றாக மாற்றம் பெறத் துவங்கியது இக்காலத்தில் தான் என்பதும் சிலரும் கூற்று.

பிராமணர்களின் இச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்து அதிகாரங்களையும் செல்வங்களையும் பெற்ற தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்றே மாற்றப்பட்டார்கள். இன்றுக் கூட சைவ வைணவ மடங்களில் இருப்பவர்கள் பிராமண செல்வாக்கு உடனேயே இருப்பதும், சமசுகிருதத்தை மீறி தமிழ் வர கூடாது என்று இருப்பதும், அம்மடங்களில் குறிப்பிட்ட சாதியினரே இருக்கலாம் என்று பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதனையும் நாம் காணத் தானே செய்கின்றோம். அவர்கள் அவ்வாறு இருப்பதற்காக அவர்களுக்கு பிராமணர்கள் கொடுத்த பட்டம் தான் சற்சூத்திரர். அதாவது சிறந்த அடிமைகள் என்றே பொருள் வரும்.

தமிழன் பிராமணனோ, சத்திரியனோ அல்லது வைசியனோ கிடையாது...அவன் சூத்திரன் அல்லது பஞ்சமன். அதன் அடிப்படையில் தான் பிராமணர்கள் தங்களுக்கு உதவிய தமிழர்களை சிறந்த அடிமைகள் என்ற பொருள் படி 'சற் சூத்திரர்' என்றும்...ஒன்றுமே செய்யாது இருந்த சாதாரண மக்களை அடிமைகள் என்னும் பொருள் படி 'சூத்திரர்' என்றும், அவர்களை எதிர்த்த தமிழ் அறிஞர்களை பஞ்சமர்கள் என்றும் பிரித்து வைக்கலாயினர்.

அரசனின் செல்வாக்கினைப் பெற்ற பிராமணர்களை மக்களால் ஒன்றும் செய்ய இயலாது போயிற்று. தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து அடிமைகளாயினர். கல்வியினைக் கண்ணாக மதித்து வந்த ஒரு சமூகம் அறியாமை இருளில் மூழ்கத் தொடங்கியது....இன்று வரை அது அவ்வாறு தான் இருக்கின்றது.

Monday, March 07, 2016

இந்திய பெண்களின் மார்புக்கும் வரி வசூலித்த நம்பூதிரிகள்!



புலையர் சாதி, சாணார் சாதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பார்பன நம்பூதிரிகள் கேரளாவில் செய்த கொடுமைகளை நாம் அறிவோம். கேரளாவிலும் கேரளாவை ஒட்டிய கன்யாகுமரி, நாகர் கோவில் போன்ற ஊர்களிலும் தாழத்தப்பட்ட மற்றும் நாடார் சாதி மக்களுக்கு 'முலை வரி' என்ற ஒன்றை வசூலித்தனர். ஒரு பெண்ணின் மார்பின் அளவுக்கேற்ப அந்த வரியானது போடப்படும். இதனை வசூலிப்பதற்கென்றே மானங்கெட்ட நம்பூதிரிகள் ஆட்களை நியமித்திருந்தனர். வரி கட்டாத பெண்களின் மார்புகள் அறுத்தெறியப்பட்டன. இதற்கு பயந்து கொண்டு தங்கள் உழைப்பில் பெரும் பகுதியை அக்கிரமக்கார நம்பூதிரிகளுக்கு கொடுத்து வந்தனர் தாழ்த்தப்பட்ட பெண்கள். உலகிலேயே இப்படி ஒரு கொடுமை நமது தமிழகத்திலும் கேரளாவிலும் தான் நடந்துள்ளது.

நாஞ்செலி என்ற அழகிய தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு முலை வரி பாக்கி இருந்தது. இதனால் அந்த பணத்தை வசூலிக்க மானங்கெட்ட அதிகாரிகள் நாஞ்செலியின் வீட்டின் கதவை தட்டினர். 'முலை வரி' கட்ட அந்த பெண்ணிடம் பணம் இல்லை. உடனே உள்ளே சென்று ஒரு இலையை எடுத்து வந்து தரையில் பரப்பினார். தனது இறைவனை நெஞ்சுறுக வணங்கி விட்டு உடன் தனது இரு மார்பகங்களையும் அறுத்து அந்த இலையின் மீது வைத்து அந்த அதிகாரிகளுக்கு காணிக்கையாக்கினார். இந்த தகவல்களை கண்ணூரைச் சேர்ந்த ஓவியர் முரளி பத்திரிக்கையாளர்களிடம் விவரித்தார்.

கேரளாவில் உள்ள செர்தாலா என்ற இடத்தில் இந்த கொடுமை அரங்கேறியது. இது நடந்து நூறு ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது அந்த இடம் 'முலச்சிபுரம்' என்ற பெயரில் பலராலும் அறியப்படுகிறது.

ஓவியர் முரளி மேலும் தொடர்கிறார் 'செர்தாலா என்ற இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் நாஞ்செலியின் சோக வரலாறை அறிவர். இந்த காட்சிகளை ஓவியமாக வடித்துள்ளேன்' என்கிறார்.

இதே கிராமத்தைச் சேர்ந்த அசிஸ்டன்ட் புரபஸர் தாமஸ் புலிக்கல் (53) கூறும் போது 'சிறு வயதிலிருந்தே இந்த கொடுமைகளை எனது குடும்பம் பார்த்து வந்துள்ளது. நெஞ்செலி போன்ற வீர மிக்க பெண்களை பெற்றது இந்த மண்' என்று நினைவு கூறுகிறார்.

பார்பன நம்பூதிரிகளின் கொடுமை திருவிதாங்கூர் மன்னனின் கொடுமை இவற்றை எல்லாம் தாங்காமல் பெரும்பாலான நாடார் சாதி மக்கள் கிருத்துவத்தை தழுவினர். இதனால்தான் இன்றும் கன்யாகுமரி, நாகர் கோவில் போன்ற ஊர்களில் கிருத்தவ மக்கள் அதிகமிருப்பதை காணலாம்.

மார்புகள் திறந்த அந்த பெண்களின் புகைப்படத்தை நான் பதிய விரும்பவில்லை. எனக்கே இந்த உணர்வு இருக்கும் போது அந்த பெண்களின் கூச்ச உணர்வை நினைத்து பார்கிறேன்.

ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு பஞ்சம் பிழைக்க வந்த ஒரு கூட்டம் இந்திய நாட்டு மக்களை அடிமை படுத்தி அவர்களை என்னவெல்லாம் செய்தார்கள் என்பதற்கு இந்த சம்பவங்களெல்லாம் இன்றும் நமக்கு சாட்சி பகர்ந்து கொண்டுள்ளன.

Sunday, November 01, 2015

ம.க.இ.க வின் எழுச்சிமிகு பாடல்..

ஹரிசனன் ந்னு பேரு வைக்க யாரடா நாயே!!ம.க.இ.க வின் எழுச்சிமிகு பாடல்..

Posted by Pandian Periyaiha on Saturday, October 31, 2015

Wednesday, June 24, 2015

சித்தர்களின் ஓகக் கலை பார்பனர்களின் யோகக் கலையாக மாறியது!



தமிழர்களின் மண் சார்ந்த ஓகக் கலையையே சில மாற்றங்களை செய்து அதற்கு இந்து மத சாயம் பூசி 'யோகக் கலை' என்று பெயர் வைத்து விட்டனர் பார்பனர்கள். இது வழக்கமாக நடைபெறக் கூடிய ஒன்றே. எங்கெல்லாம் ஆரியர்கள் அடி எடுத்து வைத்தனரோ அந்நாட்டு கலாசாரத்தை தங்கள் கலாசாரமாக மாற்றி பெயர் வாங்கி விடுவார்கள். ஆட்சி அதிகாரம் இவர்கள் கையில் அன்றிருந்து இன்று வரை இருப்பதால் இது போன்ற புரட்டல்களை வெகு இலகுவாக இவர்களால் செய்ய முடிந்தது.

சித்தர்களின் மதம் கலக்காத 'ஓகக் கலை' க்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். இனி அதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஆர்வத்தோடு உள்ளேன். ஆனால் பார்பனர்களால் கடன் வாங்கப்பட்ட இந்து மதம் முலாம் பூசப்பட்ட 'யோகக் கலையை' எந்நாளும் நானோ அல்லது சக இஸ்லாமியர்களோ ஏற்கப் போவதில்லை. எனவே இந்த கலை வளருவதற்கு 'ஓகக் கலை' என்ற பெயரில் சித்தர்களின் வாயிலாகக் கொண்டு சென்றால் சிறந்த பலன் ஏற்படும்.

மாறாக 'யோகக் கலை' என்ற பெயரிலேயே இது அறிமுகப்படுத்தப்படுமானால் பார்பனர்களைத் தவிர வேறு யாரும் இதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். மோடியின் ஆட்சி முடிந்த பிறகு வழக்கம் போல் இந்த யோகாவும் காணாமல் போய் விடும்.

இனி ஓகக் கலையைப் பற்றி சில சுவாரஸ்யத் தகவல்களை பார்போம்.

----------------------------------------------------------------------


மண்ணோடு நேரடி உறவுள்ளவன் நாலாமவன் (சூத்திரன்). மண்ணுக்குச் சற்று மேலே கூலத்துடன் அல்லது தவசத்துடன் (தானியம்) உறவுள்ளவன் வணிகன் (வைசியன்). மண் மீதான ஆளுமையுடன் தொடர்புள்ளவன் அரசன் (சத்திரியன்). மண்ணோடு எந்த உறவுமில்லாதவன் பார்ப்பனன் (பிராமணன்).



தமிழனின் தொன்மைக்கும் பண்பாட்டுச் சிறப்பிற்கும் அறிவியல் மேன்மைக்கும் நிலைக்கலனாக நிற்பது ஓகக் (யோக) கலை. உடல்நலனை நல்ல இயங்காற்றலோடு வைத்திருப்பதற்கும் உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் அடிப்படையானது இந்த “ஓகக்கலை”. இந்தக் கலை முழுவதும் சமற்கிருத மயமாக்கப்பட்டிருக்கிறது. யோகா, யோகாசனம், அத யோகம், இராச யோகம் என்றெல்லாம் வடமொழியாகவே இருக்கிற இந்தக்கலை, நமது தமிழரின் அரிய கலைச்செல்வம், பரம்பரச் சொத்து என்று நிறுவுகிறார் அசித்தர். இன்று எந்த இதழைப் புரட்டினாலும் ஊழ்கம் (தியானம்), மனப்பயிற்சி என்று பல பக்கங்களில் படமும் இடமும் பிடித்துக் கொண்டிருக் கிறார்கள். அவர்கள் மனம் சார்ந்த செய்தியாகவே ஓகக் கலையை அடையாளங் காட்டுகிறார்கள். ஓகக் கலை முழுக்க முழுக்க உடல் சார்ந்த கலை என்றும் மனதை ஒன்றில் திரும்பத் திரும்பச் சுழலவிடுவது பித்துக்கு இட்டுச் செல்லும் என்றும் கவனப்படுத்தி (எச்சரித்து) அறிவுறுத்துகிறார் அசித்தர்.

ஆரியரின் வண்ணக் கொள்கையை (வர்ணாசிரமத்தை) ஓர் எதிர்மறைக் கோணத்தில் வைத்து மண்ணுக்கும் மாந்தனுக்குமான உறவை இவர் முன்வைப்பது சிந்தனைக்குரியது. மண்ணோடு நேரடி உறவுள்ளவன் நாலாமவன் (சூத்திரன்). மண்ணுக்குச் சற்று மேலே கூலத்துடன் அல்லது தவசத்துடன் (தானியம்) உறவுள்ளவன் வணிகன் (வைசியன்). மண் மீதான ஆளுமையுடன் தொடர்புள்ளவன் அரசன் (சத்திரியன்). மண்ணோடு எந்த உறவுமில்லாதவன் பார்ப்பனன் (பிராமணன்). எனவே இந்த மண்ணுக்குச் சொந்தக்காரன் ஐந்தாமவனான ஒடுக்கப்பட்டவனும், நாலாமவனும் (சூத்திரன்) தான் என்பதும், இந்த மண்ணின் மைந்தர்களுக்காகவே சொல்லப்பட்டதுதான் சித்தர் கோட்பாடு என்பதும் அவரது அறிவிக்கை (பிரகடனம்).

வாழ்தலுக்கும் பிழைத்தலுக்குமான உறவானது, கோட்பாடு அல்லது கோட்பாட்டுச் சரிவு என்கிற நூலிழை இடைவெளியில்தான் உள்ளுறைந்து இருக்கிறது. பிழைப்பில் கொடிகட்டிப் பறக்கும் பெரும்பான்மை அறிவாளிகள் நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவாளராகத் திகழ்கிறார் அசித்தர். அவரைச் சந்திப்போம் வாருங்கள்.

அசித்தருடன் ஒரு நேர்காணல்
- பாவெல் சூரியன்


* யோகாசனக் கலையை தாங்கள் "ஓக இருக்கை" என்கிறீர்கள். அதன் விளக்கம் என்ன?

"யோக்" என்பது வடமொழிச் சொல். அதுவேதான் ஆங்கிலத்திலும் யோகா என்றாகியது. ஆனால் நம்முடைய தமிழில் "ஓகம்" என்ற சொல்தான்,இந்த யோகா என்பதற்கான அடிப்படை மூலம். நெடுங்காலமாக இங்கே புதிர் ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது. நம்முடைய கலைகளை வடமொழி தனதாக கையகப்படுத்திக் கொண்டு மாற்றியமைத்து, திரித்து, தனது போலவும், இவற்றினுடைய மூலமே தங்களது போலவும் தமிழர்களிடம் உள்ள எல்லா நல்லவற்றையும் களவாடிக் கொண்டது.

ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு. ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.

* தவம் என்பது உழைப்பு என்பதற்கான எதிர்நிலை பொருள்
இல்லையா?

பொதுவாக "தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை" என்பார்கள். எந்தத் தாயும், தகப்பனும் காட்டுக்குப் போனார்கள்? தவமிருந்தார்கள்? அப்படி எதுவும் இல்லை. ஒரு தாய் குழந்தையைப் பெற்றெடுக்கிறது, உருவாக்கிக் கொடுக்கிறது, உலகத்தின் கடினங்களிலேயே மிகப்பெரிய கடினம். வேறு எதுவும் அதற்கு இணையாக, ஈடாக நிற்க முடியாது. அந்தப் பெண்ணுக்கு கணவனாக, குழந்தைக்கு தகப்பனாக கூடவே இருந்து வளர வளர எல்லாச் சுமைகளையும் ஏந்துவது இவனது பாடு. அப்படி ஒரு தாயும் தந்தையுமாக காப்பாற்றிச் சுமந்து எவ்வளவு பாடுபட்டார்கள். உழைத்தார்கள், முயற்சி பண்ணினார்கள், முனைப்பு காட்டினார்கள். இவையெல்லாம்தான் அந்த தவத்திற்குப் பொருள்.

தவம் என்பதற்கான உங்களின் வினாவேறு வகையில் அமைந்திருக்கிறது. தவம் என்றாலே காட்டுக்குப் போவது என்கிற ஒரு காட்சி நமக்குள் வரும். அது நமது சொந்தக் கருத்தல்ல, கருத்தியலாக நமக்குள் விதைக்கப்பட்டது. போலி மெய்யியல் வழியில் நமக்கு வந்து சேர்ந்த தப்பு. ஆரிய கருத்துக்கள் எங்கெல்லாம் கொண்டு வந்து விடப்பட்டதோ அங்கெல்லாம் இந்தக் கருத்துக்களில் மாற்றம் செய்திருக்கிறார்கள். தமிழர்கள் முறையில் இப்படி எங்கேயோ காட்டிலோ, மேட்டிலோ போய் உட்கார்ந்து கொண்டு தவம் செய்கிறதெல்லாம் கிடையாது. எதற்காகவும் குடும்பத்தை விட்டு ஓடுகிறவன் கோழை. சித்தர்கள், அறிவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள்.

சாரல் வாழ் தவசிகாள்
சருகருந்தி நீர் குடித்து வாழ்விரேல்
தேகங்குன்றி சஞ்சலம் உண்டாகுமே
உண்டு உடுத்தி வளர்மனை சுகிப்பீரே.
- என்கிறது சித்தர் பாடல்.


* மணமிலி (பிரம்மச்சர்யம்) பற்றிய சித்தர்களின் கோட்பாடு என்ன சொல்கிறது?

ஓர் உயிர் இருப்பிற்கான அடிப்படைத் தேவைகள் நான்கு.

(1) உணவு சாப்பிட்டாக வேண்டும். (2) சாப்பிட்டதை கழிய வேண்டும். (3)குறிப்பிட்ட நேரம் ஓய்வு எடுத்தே தீர வேண்டும். (4) இனப்பெருக்கம். ஓர் உயிர் என்றால் இந்த நாலும் பொதிந்து இருக்க வேண்டும். இதில் எது இல்லையென்றாலும் அது உயிர் இல்லை. இவை இல்லாமல் ஒரு மாந்தன் இருக்கக் கூடாது என்பது தான் இயற்கையின் சட்டம். இவைகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு இருக்கிறது தவம் இல்லை.
(2) சித்தர்கள் நூலிலேயே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இன்னின்ன நூல்கள், இன்னவகை மருந்து செய்முறைகள்,இவைகளை கற்றுத் தேறி மருத்துவத்தை செய்யுங்கள். பொருள் கிடைக்கும். உணவு, உடை இருப்பிடம் இந்த அடிப்படைகளை குடும்பத்திற்கு வழங்கி, நீங்கள் வேறு வழியில் ஆய்வு, ஆராய்ச்சி என்று செய்யலாம். குடும்ப பொருளியலுக்கும் வழி செய்து கொடுத்து உங்களை வழி நடத்திக் கொண்டு போங்கள். அதை தவிர்த்து குடும்பத்தை விட்டு ஓடிப்போகிறது, தனித்திருக்கிறது, திருமணம் ஆகாமல் மணமிலியாக (பிரம்மச்சர்யம்) இருக்கிறது. அப்படியாக வாழ வேண்டும் என்கிற கோட்பாடு நம்முடைய வழக்கிலேயே இல்லை.
ஓகம் என்பது பல்வேறு உழைப்பு நிலைகளை கைக்கொண்டு பயில்வது, பயிற்சி செய்வது தான்.

* ஓக முறைகள் படிமலர்ச்சி (பரிணாமம்) அடைந்தது எப்படி?

படிமலர்ச்சிக்கு ஒரு நீண்ட இயற்கை வரலாறு உண்டு. எந்தக் கலையையும் திட்டமிட்டு, யாருமே எங்கேயுமே வடிவமைக்கிறதில்லை. எப்பொழுதுமே இருப்பு நிலைகளில் மாந்தன் எதை எதை புரிந்து கொள்ளத் தொடங்குகிறானோ அவைகளை, மெல்ல நடைமுறைகளிலும், பயிற்சிகளிலும் கொண்டுவர, கொண்டுவர அவை முறையாக ஒரு கலையாக வளர்ச்சியடையும். இதுதான் எல்லா கலைகளுக்கும் அடிப்படை. இதில் ஒவ்வொருத்தர் பட்டறிவு என்று இருக்கும். ஒவ்வொரு இடத்திலே,ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பட்டறிவை அடைந்திருப்பார்கள். அங்கங்கே மக்களிடையே புழங்கிக் கொண்டிருக்கிற இந்தப் பட்டறிவை ஒரு குறிப்பிட்ட காலகட்ட வளர்ச்சியில் தொகுக்கிறவர்கள் தான் பண்டிதர்களாகவும், அறிஞர்களாகவும் இருக்கிறார்கள். நூலாசிரியர்களாக,குருவாக உருவாகிறார்கள். அவர்கள் கிட்டதட்ட தொகுப்பாளர்கள் என்று சொல்லலாம். இவைகள் தான் ஒரு முறைக்குள்ளேயும், வடிவத்திற்குள்ளேயும் வந்து கலையாக தங்கி நிற்கிறது. இவைதான் ஒரு கலைக்கு இருக்கக் கூடிய அடிப்படைக் கட்டங்கள்.


* இப்படித்தான் ஓகக்கலையும் தொகுக்கப் பெற்றுள்ளதா?
ஆம். இயற்கையுடன் நமக்கு என்ன உறவு இருக்கிறது. என்கிறதை மாந்தன் என்றைக்கு பார்க்கத் தொடங்கினானோ அப்பொழுதிலிருந்தே இந்தக் கலை வளர்ச்சியடைய தொடங்கி விட்டது. இது ஏதோ அகநிலையிலிருந்து நாம் பார்க்க முயற்சிக்கிறது இல்லை. மாந்தன் தனக்குள், தன் இனம்,குடும்பத்துக்குள்ளாக பார்க்கிறவை என்பது ஒன்று. தனக்கு குழந்தை பிறக்கும் போது அதை உற்றுப்பார்க்கிறான் அவன். ஒவ்வொரு கட்டத்திலும் அது என்ன செய்கிறது. பிறந்ததிலிருந்து அதன் அசைவுகளை கூர்ந்து கவனித்தாலே இந்த ஓக இருக்கைக் கலைகள் எங்கிருந்து தோன்றின என்பதற்கு விடை கிடைக்கும்.

ஓக இருக்கைக் கலையில் எண்ணிலடங்கா பல இருக்கை நிலைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட காலத்தில் அவரவர்கள் உருவாக்கியவை ஓர் எண்ணிக்கை. அவரவர்கள் முயற்சி செய்ய செய்ய இன்று 2000,3000 வரை வளர்ந்து இருக்கின்றன.

அடிப்படையாக இருக்கக் கூடியவை சிலதான். இந்த அடிப்படையான இருக்கை நிலைகள் மொத்தத்தையும் ஒரு குழந்தை நிற்க, நடக்கத் தொடங்குகிற காலத்துக்குள்ளே இவை எல்லாவற்றையும் பயிற்சி செய்து முடிக்கிறது. அந்த ஒவ்வொரு பயிற்சியையும் செய்ய செய்யத்தான் அதனால் அடுத்த கட்டத்துக்கு நுழைய முடிகிறது. வளர முடிகிறது. படுத்துக் கொண்டிருப்பது, தவழத் தொடங்குவது, அதிலிருந்து நிமிரத் தொடங்குவது இவைகளுக்கெல்லாம் வலு தேவைப்படுகிறது. கால்களுக்கு, கைகளுக்கு வலு தேவை.

அப்பொழுது அவை கால்களையும் கைகளையும் பல்வேறு கோணங்களில் இயக்கி அந்தந்தப் பயிற்சிகளை செய்கின்றன. இவற்றையெல்லாம் கூர்ந்து பார்க்கும் பொழுது தான் அது புலப்படும். குழந்தைகளின் அசைவை, அதன் வளர்ச்சிக் கட்டங்களை அசையும் படப்பிடிப்பு கருவியில் (MOVIE CAMERA) எடுத்தால் எல்லா ஓக இருக்கை நிலைகளும் அதில் வந்து விடும். முதலில் இந்த வளர்ச்சிக் கட்டங்களை கவனித்து உடலில் இன்னின்ன சிக்கல்கள் வந்தால் இன்னின்ன பயிற்சிகள் செய்யலாம் என்று எதிர் நிலையில் பார்த்தால் அது ஓர் உன்னிப்பாக / உத்தியாக மாறும்; கலைமுறையாக மாறும்.

* மொத்த ஓக இருக்கை நிலைகளும் இவற்றிலேயே அடங்கி விடுகின்றனவா?

முதல் கட்டத்தைத்தான் இப்போது சொல்லியிருக்கின்றேன். அடுத்து இவற்றுக்கு அப்பாற்பட்டு நமக்கு புறத்தே நிலவக்கூடிய இயற்கையை பார்த்தார்கள். கதிரவன், நிலா, நிலவின் பிறை, மரம், மலை இப்படியாக இயற்கையை ஒப்பீட்டளவில் பார்த்தார்கள். மரங்கள் வடிவில், அடியில் பருத்தும், நுனியில் போகப் போக சிறுத்தும் கிளைகள் இலைகள், இவற்றைச் சிந்தித்து பார்த்து அப்பொழுது இன்ன தன்மையில் இருந்தால் இன்ன வலு இருக்கும் என்றும் அது போல நமக்கு சிலவகையான தேறுதல் நமது உடலுக்கு வேண்டும் என்றால் இது போன்ற பயிற்சிகளை நாம் பொருத்தி விட்டோம் என்றால் அந்த வலு கிடைக்கும் என்றும் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். இயற்கையின் படிமலர்ச்சியில் உயிர் தோன்றியது நீரில் தான். நீர் வாழ்வன,ஊர்வன, பறப்பன, நடப்பன இவற்றை ஆய்ந்தும், தொழில் சார்ந்தனவாகவும்,பொருட்கள், கருவிகள் இப்படியும் ஓக இருக்கைக் கலை வளர்ந்தது.

* தொழில் சார்ந்த ஓக இருக்கை என்றால் என்ன?

தொழில் சார்ந்த வடிவங்களை அடிப்படையாக கொள்வது. சான்றாக "தையல் இருக்கை" (COBLERS POSTURE - பத்ராசனம்). செருப்பு தைப்பதை பார்த்திருப்பீர்கள். இரு கால்களையும் குத்த வைத்து, செருப்பை காலடிகளுக்கிடையில் வைத்து தைப்பார்கள். அது போலவே செய்கிற ஒரு பயிற்சி தையல் இருக்கை. அவர்களுக்கு எப்பொழுதும் மூத்திரக்காய் தொடர்பான பிணிகள் வருவதில்லை. இது ஒரு பட்டறிவு வரலாறு. சில தலைமுறைகளை கணக்கிடும்பொழுது தான் இது போன்று இவர்களுக்கு வருவதில்லை என்று கணக்கிட முடிகிறது. இப்படித்தான் பயன்பாடுகள் தொகுக்கப்படுகின்றன.


* ஓக இருக்கை நிலைகள் எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்தியிருக்கிறீர்கள். தங்களின் தமிழாக்க முயற்சியின் நோக்கமென்ன?

நம்முடைய வாழ்க்கையிலிருந்து விலகியிருக்கும் ஓகக் கலையை நடைமுறையில் புழக்கத்திற்கு கொண்டு போக வேண்டும். நம்முடைய வழக்கங்களுக்கு கொண்டு போகும்போது மட்டும்தான் ஒரு கலை நம்முடைய கலையாக நிற்கும். ஆக நம்முடைய கலையான இந்த தமிழ்க் கலையை தமிழ்ச் சொற்களாலே விளம்புவது, தமிழில் நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது தான் அடிப்படை நோக்கம. இதிலே என்னென்ன திரிபுகள் உள்ளே வந்திருக்கின்றன. என்னென்ன தப்புகள், குற்றங்கள் இருக்கின்றன என்று அவற்றை கண்டுபிடித்து உடைத்தோம் என்றால், விளக்கினால் நம்முடைய மக்களை சரியாக, நலமுடன் வைத்திருக்க முடியும். இந்த நோக்கத்தில் தான் முயற்சிகளை தொடங்கினோம்.

ஆங்கில மொழியை எடுத்துக் கொள்ளும்போது அவன் வடமொழிப் பெயர்களை எல்லாம் அப்படியே எடுத்துப் போட்டுக்கொள்வான். ஆனால் தன் மக்களுக்கு தன் மொழியில் விளக்கத்தை கொடுத்திருப்பார்கள். இப்பொழுது முதுகுத் தண்டு நிமிர்ந்த நிலையை (SPINE ERECT POSTURE) என்று விளக்கத்தை எழுதியிருப்பான். இப்படிப்பட்ட விளங்கிக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு முயற்சி அவனிடம் இருக்கிறது. ஆனால் நம்முடைய தமிழர்கள் நம்முடைய கலையை பறிகொடுத்து விட்டு அதில் இருக்கிற கலைச் சொற்களையும் தமிழ்ச் சொற்களையும் பறிகொடுத்துவிட்டு வடமொழியாக திரிபாக்கம் பெற்று விட்ட நிலைமை. அதில் ஒரு சிறு முயற்சி கூட எடுக்காமல் இருக்கிறது எவ்வளவு இழிவு. நமக்கு மட்டும் அந்த முனைப்பு இல்லை என்றால் எப்படி? என்கிற நோக்கமும் எங்கள் முயற்சிக்கான அடிப்படையாக அமைந்தது.

* தமிழ் படுத்துவது என்றால் நேரடியாக கலைச் சொல் மொழியாக்கமா?என்ன அடிப்படையில் செய்திருக்கிறீர்கள்?


அப்படியே நேருக்கு நேர் கலைச் சொல்லாக்கம் செய்யவில்லை. எந்த ஒரு கலையும் மக்களிடம் தான் பிறக்கிறது. மக்களிடம் தான் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் நடைமுறையில் எளிமையான புழக்கத்தில் அருமையான கருத்துக்களையும், பொருள்களையும் உள்ளடக்கி வருகிறது. ஆக தமிழில் ஓக நிலைகளுக்கு பெயரிடும் பொழுது புழக்கத்திலிருப்பதை எடுத்துக் கொண்டதுதான் அதிகம். நாங்களாகப் பொருத்தியது மிகவும் குறைவு. பல்வேறு பழைய தமிழ் நூல்களிலே அழகிய சொல் ஆக்கங்கள், கையாள்பவைகள் இருக்கின்றன. தேவைப்படுகிற இடங்களிலே அவற்றையும் பயன்படுத்திக் கொண்டோம்.

* உங்களுக்கு முன்பு இந்தத் துறையில் வேறு யாரும் முயற்சி செய்திருக்கிறார்களா?

ஓகக் கலை நிலைகளை மொழிபெயர்க்க வேண்டும் என்று பல பக்கங்களிலிருந்தும் கோரிக்கைகள் பல காலமாக வெளிப்பட்டிருந்தாலும் யாரும் சரியாகச் செய்யவில்லை. எங்ளுக்கு முன்பிருந்தவை அரைகுறை முயற்சிகள்தான். பாதி தமிழும் பாதி வடமொழியுமான வேலை தான் நடந்திருக்கிறது. எல்லோரும் அரை கிணறு தாண்டியவர்கள்.

1. பல தமிழர்கள் ஓக இருக்கை ஆசான்களாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஆரிய காலடி தாங்கிகள். பார்ப்பனர்களை உரசிக் கொண்டுதான் இவர்களின் பிழைப்பும் பணம் பண்ணுதலும் உள்ளன.
2.
. எதைத் தொட்டார்களோ அதில் பழக்கமில்லை. எங்களுக்கு சரியான தமிழை பேச வேண்டும் என்கிற முயற்சி இருந்தது. நம்முடைய கலையை சரியான கலைச் சொல்லாக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பு இருந்தது. இந்தத் துறை பற்றிய புரிதல் இருந்தது. அதனால் செய்வது எங்களுக்கு எளிதாக முற்றுப் பெற்றது.

* மொழி ஆக்கத்தில் தாங்கள் சந்தித்த பட்டறிவுகள் (அனுபவங்கள்)........... அறைகூவல்கள் (சவால்கள்)........... !!?

அறைகூவல் என்று சொன்னால், இந்த ஓகக்கலை மட்டும் யாருமே கைத்தொடாத பகுதியாக இருந்தது தான். எங்களுக்கு முன் இருந்தவை அரை குறையான முயற்சிகள் தான். முதலில் படிமலர்ச்சி (பரிணாம) அடிப்படையில் நீர்வாழ் உயிரினங்களிலிருந்து இந்தப் பணியை தொடங்கினோம். மீன் இருக்கை (மச்சாசனம்), சுறாமீன் இருக்கை (மகராசனம்) என்று பல. அடுத்து பொருட்கள், கருவிகள். எடுத்துக்காட்டாக தேர் இருக்கை (சாரதாசனம்). தேரைப் போலவே வடிவம், நிலை கொண்டது. ஏர் இருக்கை (அலாசனம்),நாற்காலி இருக்கை (உட்கட்டாசனம்). இப்படி பலவும் பெயரிடப்பட்டன.

உடல் சார்ந்த இருக்கைக்கு மட்டும் தான் பெயரைப் பொருத்துகிற வேலை சற்று கடினமாக இருந்தது. வெறுமனே உடலின் இருப்பு நிலையை மட்டுமே வைத்துச் சொல்லுவதா அல்லது கருத்துக்களைப் பொருத்திச் சொல்லுவதா என்கிற தடை வந்தது
வடமொழியில் சொல்லப்படுகிற சிரசாசனத்துக்கு தலை இருக்கை என்றும் புசங்காசனத்துக்கு முழு உடல் இருக்கை என்றும் பதிவு செய்தோம். இன்னொன்று; அதை விபரீதகரணி என்று சொல்வார்கள். விபரீதம் என்றால் தமிழில் எதிர், முரண் என்று பொருள். இயல்பாக இருக்கிறதை விட கால்களை தூக்கி தலைக்கு பின்னோக்கி எடுத்துக் கொண்டுபோகிறது. முரண் நிலை என வைக்கலாம் என்று எண்ணம் இருந்தது. ஏறுமாறு இருக்கை என்று வைக்கலாமா எனவும் எண்ணிப் பார்த்தோம். நானும் என் இணையரும் பல காலம் உரையாடி பொருத்திப் பார்த்து, உடலை முழுமையாக வளைத்து மேல் தூக்கிச் செய்யும் பயிற்சி முழு உடல் இருக்கை, பாதி மட்டுமே வளைத்து மேல் தூக்கிச் செய்வது அரை உடல் இருக்கை. எனப் பதிவு செய்தோம். இப்படி ஒவ்வொரு அசைவிலும், ஆக்கத்திலும் முனைப்போடும் பொறுப்போடும் செயல்பட்டு முடித்திருக்கின்றோம்.

* இந்த மொழியாக்கத்தின் நடைமுறை பயன்பாடு எப்படி இருக்கிறது?

முதலில் நாங்கள் தமிழிலே சில ஓக இருக்கை பெயர்களை முன்மொழிந்த பொழுது எல்லாவற்றுக்கும் முழுமையாக கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்றார்கள். நாங்கள் அரும்பாடுபட்டு அதை முழுமையாக்கிக் கொடுத்த பொழுது சில ஓக இருக்கை நிறுவனங்கள் அதை வாங்கி தங்களின் இதழ்களிலே அச்சிட்டார்கள். ஆனால் அதனை தொடர்ந்து புழக்கத்தில் கொண்டு வரவில்லை. பட்டியலே கொடுத்தும் ஏன் பயன்படுத்தவில்லை என்று வினவினால் மிக எளிமையான கரணியத்தைச் சொன்னார்கள்.

"தமிழிலே கலப்பை இருக்கை, நாற்காலி இருக்கை என்று சொன்னால் கலப்பை போல, நாற்காலி போல என்று மாணவர்களுக்கு எளிதாகப் புரிந்து போய் விடுகின்றது. "நவகாசனா" என்று வடமொழியில் சொன்னால் விளக்கம் வேண்டுவார்கள். "நவ்கா" என்றால் படகு, ஆசனான்னா இருக்கை என்று விளக்கம் சொல்ல முடியும்."

ஆக இவர்களுக்கு விளக்கிச் சொல்கிறதற்கு, ஒரு ஆசிரியனா வேலை செய்கிறதற்கு, ஒரு வாய்ப்பு இருக்கிறதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி வணிக நோக்கமும், பிழைப்பும் முதன்மையாக வைத்திருக்கும் இவர்கள் நல்ல தமிழ்ச் சொற்களை எப்படி ஏற்பார்கள். மக்கள் நலன், குமுக (சமூக) நோக்கம் கொண்டவர்கள் தான் முன்னோடிகளாக இவற்றைக் கையாண்டு புழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.


* ஓகக்கலை என்கிறோம். இப்போதெல்லாம் நோய் பண்டுவ (சிகிச்சை) முறையாக, மருத்துவமாக கையாள்வதாகச் சொல்கிறார்கள். ஓக இருக்கை ஒரு கலையா? அதையும் தாண்டி ஓர் அறிவியலாக அது வளர்ச்சி கண்டிருக்கிறதா?

உண்மையான அறிவியல் என்பது மக்களிடம் சென்றடைய வேண்டும். அதைச் செய்யாதது அறிவியல் கிடையாது. மக்களிடம் சேரும் போது தான் அது முழுமையான வடிவத்துக்கு வரும். அறிவு இயலாகவே அது நிற்கும். அப்படியில்லாமல் அது எங்கெங்கேயோ, யார் யாருடைய ஆளுகைக்குள்ளே. மேலாண்மைக்குள்ளே இருக்குமானால் அது அறிவியல் இல்லை. மொழி ஞாயிறு பாவாணர் தொடக்கக் கால கட்டத்திலிருந்தே (SCIENCE) என்பதை "கலையியல்" என்று தான் மொழியாக்கம் கொடுத்திருக்கிறார்கள். அது கலைகளுடைய ஓர் இயலாகத்தான் இருக்கிறது. அறிவு இயலாக அது இன்னும் தன்னை வளர்த்துக் கொள்ளவே இல்லை. ஏன் என்றால் அதற்கு மாந்தநேயம் கிடையாது. வணிக நேயமும் மக்களைச் சுரண்டும் எண்ணம் ஆகியவற்றை மட்டுமே கருத்தாக வைத்திருக்கிறது.

மருத்துவத்தையும் பொறியியலையும் தமிழ்ப்படுத்தி கற்பிக்கக் கூடாதா? அதை ஒரு பாடநூலாக முழுக்கத் தமிழிலே போட்டீர்கள் என்றால், தமிழிலே இருக்கிறதாலே ஊரிலே போகிற வருகிற அத்தனைபேரும் எடுத்து படிக்க முடியும். அவனவன் தானே உருவாகிக் கொள்ள முடியும். அப்படி அவனுடைய ஆளும் முதலாளிகளின் வணிக எல்லைக்கு வெளியே போய்விடக் கூடாது என்றும் படிக்க வருகிறவன் இவ்வளவு பணம் கொடுக்கவேண்டும். அதிலே இவனும் ஈட்டவேண்டும் என்கிற ஒரு வினைக்காகவும் தடைபடுத்தி வைத்திருக்கான்.

ஆக மருத்துவம் அது சார்ந்த "ஓகக் கலை" எல்லாம் மக்களிடம் முழுமையாகச் சேரும்போது மட்டும்தான் அது அறிவியலாக வளர முடியும். அதுவரை அது சிலரின் ஆளுகைக்குள் இருக்கிற கலையியல்தான்.

*அப்படியெனில் வாழ்வியல் மூலங்கள் (ஆதாரங்கள்) எல்லாமும் மக்களிடமிருந்து அயன்மைப் (அன்னிய) பட்டுத் தானே இருக்கின்றன?

இல்லை, நாட்டின் மூலை முடுக்குகளில் கூட மூலிகைகள் பற்றிய அறிவுச் செல்வம் ஒவ்வொரு மாந்தரிடத்தும் பெருமளவு குவிந்திருக்கிறது. ஒவ்வொரு மாந்தனின் மண்டைக்குள்ளும் நிரம்பியிருக்கிறது. பாட்டி மருத்துவம் என குடும்பப் பெண்மணிகளிடம் குடிகொண்டு அவர்களை பெண் மருத்துவர்களாக ஆக்கி நிலைநிறுத்தி நமது தலைமுறைகளைக் காத்திருக்கிறது. அது அறிவியல். மருத்துவத்தைப் பற்றி அவ்வளவு ஆழமாக கொண்டு சென்று பதிப்பித்திருக்கிறார்கள். பெரிய கல்லூரிகள் இல்லாமல் நிறுவனங்கள் என்பது நடத்தப்படாமல் சித்தர்களால் எல்லா மக்களையும் இந்த மருத்துவம் எட்டி அடைந்திருக்கிறது. அசைக்க முடியாதபடி, ஆழமாக வேர்விட்டு இன்னமும் மக்களிடம் தங்கியிருக்கிறது. அதுதான் அறிவு இயலாக மக்களிடையே புழக்கத்தில் இருக்கிறது.

* ஓகக் கலையின் குருவாக பதஞ்சலி முனிவர் என்பாரை குறிப்பிடுகிறார்களே. அதுபற்றி தங்கள் கருத்தென்ன?

இது ஆரிய புளுகணிவேலை, புரட்டல் (பித்தலாட்டம்) வேலை. ஆரியர்கள் இந்நாட்டிற்குள் வந்து அனைத்தும் எமது என காட்டிக் கொண்டனர். நம்முடையவற்றை அழித்து சமற்கிருதத்தில் தமது போலவே உருவாக்கிக் கொண்டனர். நமது நான்மறை நால் வேதமானது. நமது ஆயுள் நீட்டிப்பு மருந்து ஆயுர்வேதமானது. நமது வானியல் வானசாத்திரமானது. நமது கணியம் சோதிடமானது. தமிழிசை கருநாடக சங்கீதமானது. நடனம் நாட்டியமானது. பண் இராகமானது. வேதியல் வேதமானது. இன்னும் பலவற்றைச் சொல்ல முடியும். களவாடின ஒவ்வொரு துறைக்கும் ஒரு வல்லுனர் பெயரை நிறுவி மொழி பெயர்த்து தமது என காட்டிக் கொள்வது ஆரியத்துக்கு பழகிய எத்து வேலை தான்.

அவர் இந்தக் காலத்தில் வாழ்ந்தாரா, இதை அவர்தான் எழுதினாரா என ஒரு சில முரண்களுக்கு, உரையாடுதலுக்கு நாம் இடம் கொடுக்கிறதில்லை. அது வரலாற்று ஆசிரியர்களுடைய வேலை. ஆயினும் பதஞ்சலியே தமிழ் அறிவர்தான் என்கிற கூற்றும் உண்டு. அந்த தொன்மை காலகட்டத்தில் வடக்குப் பகுதியும் நாம் வாழ்ந்த பகுதிதானே. நமது கலைகள் எல்லா பகுதிகளிலேயும் பரவியிருந்தன. பல கால கட்டங்களிலே நம்மவர்கள் செய்த மொழி பெயர்ப்புப் பணிகள் நிறைய உண்டு. நம்முடைய செய்திகள் மற்ற மொழிகளிலேயும் பரவ வேண்டும் என்கிறதற்காக நிறையவும் நடந்திருக்கின்றன.

இவற்றை யெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டும். மற்றபடி பழமை என்பது நமக்கு மிகவும் சொந்தமானது. தொல்குடி என்கிறதற்கு வேறு சான்று ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.

தமிழ் இசையை திருடி, கருநாடக சங்கீதம் என்று திரித்தபடி, பெருவங்கியம் என்கிற இசைக் கருவியை நாதசுவரம் என்று பெயர் மாற்றித் திரித்தபடி,ஒருகட்பறையை - ஒரு+ கண்+ பறை- தபேலா என வடமொழியில் பெயர் மாற்றியபடி, பதலை எனும் கருவியை தவில் என்று மாற்றியபடி, மத்தளம் அல்லது மதங்கம் கருவியை மிருதங்கம் என்று மாற்றியபடி, சல்லரி கருவியை சால்ரா என்று மாற்றியபடி. தமிழ் இசையையே தியாகராச பாகவதர் இயற்றினார் என்று புளுகு மூட்டை அவிழ்த்து விட்டபடி, ஓக இருக்கைக்கும் பதஞ்சலி எனும் முனிவர்தான் தொகுத்தார் என வஞ்சகப் புரட்டு வேலை செய்திருக்கிறார்கள்.

ஒன்றை மட்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். ஆடு மாடு மேய்த்துக் கொண்டு, மேய்ச்சல் நிலத்துக்கு நாடோடிகளாய் அலைந்து கொண்டிருப்பவர்களின் நடுவில் கலைகள் வளர்வதற்கான வாய்ப்புகள் அறவே கிடையாது. நிலையாக, ஊராக வாழும் மக்களிடம்தான் கலைகள் தோன்றும் எனும்போது, ஆரிய நாடோடிகளுக்கு கலை வாய்ப்பு எள்ளளவும் கிடையாது என்பதும், தமிழ் மக்களுக்கே இவ்வகை வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன என்பதும் கண்கூடான செய்தியாகும்.

* ஓகக்கலை முதன்மையாக (பிரதானமாக) உடல் பற்றியதா? மனம் பற்றியதா?

முதன்மையாக உடலைப் பற்றியதுதான். மனதைப் பற்றியது அல்லவே அல்ல. "உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" என்பார் திருமூலர். அவரே "உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே"" என்கிறார். எவ்வளவு கருத்து வளர்ச்சி பெற்றும் அவைகள் எனக்கு உதவவில்லை. உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்ந்தது என்று சொல்வார். அந்த உயிரினுடைய கூறுகள் தான் அறிவு, மனம் இன்னும் பல்வேறு நிலைகளும், உடலை ஓம்பும் கலைதான் ஓகவிருக்கைக் கலை. உடலை ஓம்புவதே ஓகம். ஓம்பு எனும் சொல்லே குறுகி ஓம் என்றானது. உடலைப் போற்றி வாழ்ந்தோமானால் மனம் என்பது தானாகவே சீராக இருக்கும். இது தான் அடிப்படை.

* ஓகக்கலை உடலுழைப்பாளர்களுக்கு தேவையா (அவசியமா)?

தேவையில்லை, இந்த வினாவே யார் யாரெல்லாம் இந்த பயிற்சியை செய்யலாம் என்பீர்களானால் உழைப்பு இல்லாமல் சோம்பி இருப்பவர்கள்,கருத்தால் உழைக்கிறவர்கள், உட்கார்ந்த நிலையிலேயே பேச்சுப்பணி,எழுத்துப்பணி செய்கிறவர்கள் ஆகிய இவர்கள் தான். ஆனால் இதில் சில செய்திகளையும் கணக்கிலெடுக்க வேண்டும்.

இன்றைக்கு சூழல் முழுக்க புதிய ஒருவகை வணிகப்போக்கு வடிவத்திற்கு போயிருக்கிறது. முன்பு விடியலுக்கு வேலைக்குப் போனால் அந்திவரை வேலை இருக்கும். இப்பொழுதெல்லாம் நகர்புறத்திலேயும்,நாட்டுபுறத்திலேயும் எல்லாமும் குத்தகை பணிகளாக மாறிவிட்டன. இவ்வளவு கூலி என்று பேசிக் கொண்டு மொத்தமாக நான்கு, ஐந்துபேர் சேர்ந்து ஒன்றிரண்டு மணிக்குள்ளாகவே வேலையை செய்து விட்டு அடுத்த வேலைக்காக காத்துக் கொண்டு சும்மா உட்கார்ந்து இருக்கிறார்கள். அப்படியானால் அவர்களும் கொஞ்ச நேரம் உழைத்துவிட்டு, மற்ற நேரங்களிலே சோம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் உழைக்காத கூட்டத்திலே சேர்ந்து கொண்டு வருகிறதாலே பயிற்சி செய்தாக வேண்டும் என்கிற பட்டியலில் சேருகிறார்கள்.

* நடைமுறையில் ஓகப் பயிற்சிகள் என்பவை உடலை பின்னைக்குத் தள்ளி மனதை முன்னிலைப் படுத்தும் ஒரு கருத்தியல் கலையாக ஆதனிய (ஆன்மீக) செய்தியாக (விசயமாக) சித்துவேலை என்கிற மாயையாக ஆக்கப்பட்டிருக்கிறது. இது பற்றிய தங்களின் விளக்கமென்ன?

சித்தர்கள் துறைக்கும் மாயைகளுக்கும் எவ்வகை தொடர்பும் கிடையாது. அகத்தியர் "விழி மூடில் ஒளி எங்கே காண்பாய் விளம்புவாயே"" என்பார். இப்பொழுதெல்லாம் கண்ணை மூடி தவம் பண்ணுவது என்று தானே சொல்கிறார்கள். மனதை காட்டித்தான் மொத்த வழியிலேயும் மக்களை திசை திருப்புகிறார்கள் நம்முடைய மனதை கவர்ந்திட்டால் தவறான திசை வழிக்கு கொண்டு போய் ஆளுமை செய்யலாம். அதுதான் மனதை குறித்து தொடும் முயற்சி.

நீங்கள் நேரடியாக ஒரு முத்திரையை போட்டுக் கொள்வதானால், மனம் தொடர்பாக உங்களிடம் பேச வருகிறவர்களெல்லாம் உங்களை ஏமாற்ற - ஏய்க்க வருகிறார்கள் என்று முடிவுகட்டிக் கொள்ளலாம்.

உடலுக்கு ஏற்படும் தூண்டுதல், துலங்கள்களுக்கு இலக்காகி நடந்து கொள்கிற நிலைதான் உணர்ச்சி, அதைப்பற்றிய நிகழ்வுக்கு பிற்பாடான சிந்தனை அல்லது தெளிவே அறிவு, அறிவு அடிப்ப டையிலான ஆய்வே உணர்வு.

தூண்டுதல் வந்தவுடன் அதை முடிக்க வேண்டும் என்று செய்து விட்டு வந்துவிடுவோம். அதற்குப் பின்னாடி தான் செய்தது சரியா, இல்லையா என்று அறிவு வேலை செய்கிறது. அந்த உணர்ச்சிகள் என்பது என்னவென்று சொன்னால், இப்பொழுது எரிச்சல் வருகிறது என்று வைத்துக்கொண்டால் பித்தப்பை மிகையாக பணியாற்றுகிறது என்று பொருள். அதில் சுரப்பு ஏற்பட்டால் எரிச்சல் கொடுக்கும். சினம் அதிகமாக வரும். சினம் அதிகமாக வந்தால் கல்லீரல் மிகையான நிலைக்கு போய்விட்டது என்று பொருள். உங்கள் உறுப்புகள் உள்ளே என்னென்ன ஆகிறதோ, அதுதான் உங்கள் வெளிப்பாடுகள். வெளியில் உணர்ச்சிகளும், உணர்வுகளும் உடலும் மனமுமாக இருக்கிறது. ஆக எளிதாக உடலுக்கும் மனதிற்கும் உறவு போட்டு பார்க்கலாம்.

ஆக ஓகப் பயிற்சிகள் மனம் பற்றியது அல்ல. உள்ளொளியியல் பற்றியதல்ல. மாயையாக இருக்கவில்லை. மாறாக உடல் பற்றியது. இயல்பானது. இயற்கையானது.

* அப்படி எனில் ஓக இருக்கை (அத யோகம்,), அரச ஓகம் (இராச யோகம்) என்று தனியே உடல், மனம் தொடர்பாக சொல்லப் படுவது ஏன்?

சித்தர்கள் இரு பிரிவுகளாக குறிப்பிடுவது உண்மை தான். உடற்பயிற்சி செய்யும் ஓகத்தை ஓகவிருக்கை (அதயோகம்) என்கிறோம். இப்பயிற்சிகள் எளிய மக்கள் தங்கள் பிணிகளை, உடல் கோளாறுகளை சீர்படுத்திக் கொள்ள சித்தர்களால் ஆய்வு செய்து வழங்கப்பட்டவை.

அரச ஓகம் என்பதை மனம் சார்ந்த பயிற்சியாக பார்ப்பனக் கூட்டங்கள் திரித்து பரப்பியுள்ளன. இதனை நிறுவுவதற்காக அதனை சமற்கிருதப்படுத்தியவர்கள் ஓகவிருக்கையை உடல் ஓகம் (அத யோகம்) என்று மொழிபெயர்த்தார்கள். சித்தர்கள் அறிவர்கள் கூறும் அரச ஓகம் என்பது பெருநெறி. பெரும் ஓகம். இதில் கை, கால் நீட்டி பயிற்சிகள் செய்ய வேண்டிய தில்லை. சித்தர்களிடமிருந்து பேரறிவைக் களவாட வந்தவர்கள்தான் சமணம்,பவுத்தம், ஆரியம், முகமதியம், கிறித்துவம் போன்ற மதங்கள். அறிவுக் களவாட வந்தவர்கள் வணிகமும், அதை பாதுகாக்க படைகளுடனும் தமிழ்நாட்டின் உள்ளே வந்தேறினர். ஆனால் சித்தர்கள் இம்மரபை காப்பிட்டு இன்று வரை பாதுகாத்து வந்துள்ளனர்.

* ஓகக் கலையில் ஊழ்கம் (தியானம்), ஆழ்நிலை ஊழ்கம் (தியானம்), மனப்பயிற்சிகள் முதன்மையாக பேசப்படுகிறது. மனம் அமைதி பெற வாழ்வின் தேவையாக அறிவுறுத்தப்படுகிறது. இது பற்றி....

மனதை ஆளுமை செய்யக்கூடாது என்று முன்னமே சொன்னேன். மனதை அடிமை செய்ய நினைக்கிறீர்களா? மன ஆளுமை என்றால் ஊழ்கம் (தியானம்) செய்தல் என்கிறார்கள். ஓர் எதிர்நிலையிலிருந்து பார்க்கலாம். ஒரு பித்தனை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அவனுக்குள் ஏதோ ஒன்றைப் பற்றிய எண்ணங்கள் மட்டுமே சுழன்று கொண்டிருக்கிறது. கீறல் விழுந்த இசைத்தகடு போல ஒரே சொல்லையே திரும்பத் திரும்ப பிதற்றிக் கொண்டிருப்பான்.

இந்த மனப்பயிற்சி எப்படி? ஒரு பொருள் பற்றிய நினைவு, சிந்தனை அல்லது ஒரு சொல்லை / ஓம் / திரும்பத் திரும்ப சொல்வது. இந்த வகைமுயற்சிகளை செய்தால் நீங்களும் ஒன்றைப் பற்றி மட்டுமேயான ஒரே சுழலிலேயே போய் வலம் வருகிறீர்கள். இயல்பாகவே ஒருவருக்கு பித்தம் அதிகமாக கூடிவிட்டாலே இந்த எண்ணச் சுழல் அதிகமாகிவிடும். தூக்கம் இல்லாதவர்களுக்கும், குடிகாரருக்கும் ஏதோ ஒன்றைப் பற்றியான எண்ணச்சுழல் அதிகமாயிருக்கும்.
அப்பொழுது பயிற்சி என்று ஒன்றைப் பற்றி மட்டுமேயான எண்ணச் சுழலிலே போய் கொண்டிருந்தீர்கள் என்றால் பேரிடரான (ஆபத்தான) நிலையை நோக்கி போய்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். எவ்வளவு நேரம் ஊழ்கத்தில் உட்காருகிறீர்களோ அவ்வளவு நேரமும் பித்தனாக ஆகிறீர்கள் என்று பொருள். எவ்வளவு நாள் இதைச் செய்திருக்கிறீர்களோ அவ்வளவு நாட்கள் அளவிற்கு பித்தனாகிறீர்கள் என்று பொருள்.

இந்த பயிற்சிகள் செய்பவர்கள் தவ முனிவர்களைப் போல கருதி மாயையில் போய் விழுந்து கொண்டிருக்கிறார்கள். இதை ஏன் செய்கிறார்கள் என்றால் நம்முடைய இளைஞர்களை பேடிகளாக்க வேண்டும்; காயடிக்க வேண்டும் என்றும் தான். இதன் முதல் முனைப்புச் செயல்தான் இது. எது ஒன்றையும் திரும்பத்திரும்ப நினைக்காதீர்கள். திரும்பத் திரும்ப ஒலிக்காதீர்கள். அது வேண்டாம். எல்லா மந்திரங்களும் இதே இழிவு நிலையைதான் உருவாக்கும். மனமது செம்மை யானால் மந்திரம் துதிக்கவேண்டாம் என்று சொல்கிறது அகத்தியர் பாடல். இதுதான் அதற்கான விடை. மனமது செம்மையாக வேண்டும் என்றால் உடலது செம்மையாக வேண்டும்

* உளவியல் மருத்துவத்தின் மன ஆளுமை என்பது பயனுள்ளதாகத்தானே இருக்கிறது?

மனப்பயிற்சிகளிலேயே சில கலைகள் இருக்கின்றன. மனவசியம் போன்றவை. அதை மருத்துவத்திற்காக சிலர் பயன் படுத்துகிறார்கள். வேடிக்கை, பொழுதுபோக்கு, கேளிக்கை போன்றவற்றிற்கும் செய்கிறார்கள். ஆனால் இதை ஒட்டுமொத்தமாக இந்த தலைமுறையின் மீதும் இனமக்களின் மீதும் திணித்து நம்மையே பேடிகளாக்குவதும், ஒன்றுமில்லாத வெற்றுப் பயல்களாக்கி விடுவதும் நமது சிந்தனையின் திடத்தை உடைத்துவிடும் ஒரு கருவியாகவும் பயன்படுத்துகிறார்கள். இந்த கவர்ச்சியில் ஆட்பட்டு மன அமைதி அது, இது என்று இளைஞர்கள் இறங்குவது சரியானதல்ல. உடல் அமைதியாகாமல் மனம் அமைதியாகாது. உடல் மகிழ்ச்சி அடையாமல் மனம் மகிழ்ச்சி அடையாது. உடல் ஊக்கம் அடையாமல் மனம் ஊக்கம் அடையாது.


* ஓகக்கலையாகவும், மருத்துவமும் சேர்ந்த சித்தர்கள் முறை சாகாக்கலை என்று கூறப்படுகிறதே, உண்மையில் மாந்தன் சாகாமல் இருக்க முடியுமா?

பிறப்பதெல்லா மிறப்பதுண்டு பேதை மக்கள் தெரிகிலார்..
- சிவ மொழியார் (வாக்கியர்) பாடல் - 643.

சாகாதிருப்பதற்கு தான் கற்ற கல்வியன்றோ
வாகான மெய்க்கல்வி வகுத்தறிநீ கன் மனமே.
- இடைகாட்டுச் சித்தர் பாடல் - 65.

சித்தர்கள் பற்றிய பல்வேறு செய்திகள் இருக்கின்றன. இவர் 700 ஆண்டுகள் வாழ்ந்தார். அகத்தியர் ஏழு கோடி ஆண்டுகள் வாழ்ந்தார் என்றெல்லாம் சொல்வார்கள். இவற்றுக்கெல்லாம் சித்தர்களே விடை சொல்லிவிட்டார்கள். ஐயா, சாகாமல் இருக்க முடியுமா? என்று தன்குரு அகத்தியரிடம் மாணவர் புலத்தியர் கேட்கிறார். பிறந்தவர்கள் எல்லாம் இறந்துதான் ஆகனும் என்பதுதான் அகத்தியரின் விடை. ஆனால் பிறக்கிறதெல்லாம் பிறப்பல்ல என்று சித்தர் மெய்யியல் பற்றிய செய்திகள் ஆழ்ந்து போகின்றன.அது வேறு.

சாகாமல் இருக்க வேண்டும் என்றால் மாந்தன் பிணியும் நோயும் இல்லாமல் இருக்க வேண்டும். பிணியும் நோயும் இல்லாமல் இருக்க முடியுமா? இதிலிருந்துதான் மருத்துவத்தை பற்றி ஆழமான வேர்கள் போகின்றன. மருத்துவத்தை கலையியலாக, அறிவியலாக வளர்த்து எடுத்துக் கொண்டு போகிற முயற்சிகள் அங்கிருந்து தான் தொடங்குகிறது. தாயும் சேயும் அல்லது புடவியும் உலகும் என்று சித்தர்கள் கோட்பாட்டில் சொல்வார்கள். வட மொழியில் அண்டம், பிண்டம் என்று சொல்வது. உலகும் வெளியும் அல்லது உள்ளும் - புறமும் என்பதானவை. அதிலிருந்து தான் உருவானது இது. இரண்டிலும் அதே உறைவடக்கம் தான் வெளிப்பாடாக அமையும். இன்ன விதையிலிருந்து இன்ன மரம்தான் வர முடியும். வேறொன்றாக வராது.

ஆக இயற்கையிலிருந்து விலகிப்போனால், அதற்கு எதிராகப் போனால் நோயும் பிணியும் வரும். பிணி இல்லாமல் இருந்தால் அதுவே சாகாத வாழ்க்கை. சாகாமல் என்றால் ஒரு மாந்தன் 100 ஆண்டுகளாவது வாழ வேண்டும். சித்தர்கள் நூலில் இப்படியான ஒரு வாழ்க்கைச் சூழல் பற்றிய சில குறிப்புகள் வருகின்றன. நரை என்பது நமது அறுபதாவது அகவையிலும் பல் விழுவது எண்பதாவது அகவையிலும் என்று சொல்கிறார்கள். இப்பொழுது எல்லாம் அதில் பாதிக்குள்ளேயே எல்லாம் முடிந்து போய்விடுகிறது. அப்படி ஒரு வாழ்க்கைச் சூழலுக்கே நாம் போய் சேரவில்லை. வெறும் பிழைப்பு வட்டத்துக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கிறோம். அப்படி யானால் வாழ்க்கைக்கு உள்ளே நாம் எட்டிப்பார்க்க வேண்டும். இயற்கையோடு இயைந்த வாழ்வும், சீரான மூச்சும்,நல்ல நடத்தையும் கைக்கொண்டால் பிணிகள் இல்லாமல் வாழமுடியும். இதுதான் சித்தர்களுடைய பேருண்மை. நோய், பிணியில்லாமல் நலமாக வாழ்தலையே சாகாக் கலை என்று சொல்கிறார்கள்.

* இயற்கையை வெல்வது தான் அறிவியல், நீங்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என்றீர்களே. எப்படி?

இயற்கையிலிருந்து மிகப்பெரிய தவறான, முரணான திசைக்கு மாந்தன் போயிருக்கிறான்.அவனுடைய முயற்சிகள் எல்லாம் இயற்கையை வெல்வதற்காக போனவைதான். ஆனால் இயற்கையை வென்று மீள திரும்பி வாழ்ந்து கொண்டு வரமுடியாது. இதுபற்றி காரல் மார்க்கசு சொன்ன கருத்துகளின் பொருள் வேறு. எப்பொழுதுமே மாந்தனின் போராட்டம் இயற்கையை வெல்வதாகத்தான் இருந்தது என்று அவர் சொல்வது அறிநிலை கட்டங்களைத்தான். இயற்கையை புரிந்துகொண்டு வளர்கிற மாந்த வாழ்க்கையின் வளர்ச்சிக் கட்டங்களைத்தான். இயற்கையை பற்றிய புரிதல் / அறிநிலை சுழிய {0} நிலையில் இருந்தது.படிப்படியாக இயற்கையின் இயக்கவியலை அறிந்து கொண்டதைதான் இயற்கையை வெல்வது என்று காரல் மாக்கசு குறிப்பிட்டார்.

அப்படியான முறையில் இயற்கையை வெல்ல வெல்ல குமுகங்கள் (சமூகம்) மாறிக் கொண்டே இருந்தன. முதலில் எப்பொழுது பழம் பழுக்கிறதோ அப்பொழுதுதான் சாப்பிட வேண்டும் எனும் நிலை. விதை மண்ணில் விழுந்த பிறகு தண்ணீர்பட்டு கதிரவன் ஒளி கிடைத்தால் செடியாக முளைக்கிறது. செடி முளைத்தால் நமக்கு காய்கனி கொடுக்கிறது. இதற்குப் பின்னால்தான் வேளாண்மை வந்தது. இயற்கையில் விளைச்சல் (உற்பத்தி) இருந்தது. இயற்கையைப் புரிந்து கொண்ட மாந்தன். மறுவிளைச்சல் (மறு உற்பத்தி) செய்தான். இதுதான் வேளாண்மை. இந்த விளைச்சல் முறைகளில் ஏற்பட்ட மாறுதல்கள்தான் குமுக மாறுதல்களைத் தோற்றுவித்தன.

இன்று முதலாளிய கட்டம் வரை வந்துவிட்டது. இதைத் தான் இயற்கையை வெல்கிறது என்று சொன்னார்கள். இதை அறிவியல் என்கிற பெயரில் மேலை அறிவியல் கூட்டங்கள் இயற்கையை அழிப்பது,மாசுபடுத்துவது, ஒழிப்பது என்கிற அளவிற்கு போய் விட்டார்கள். இயற்கையைப் புரிந்து கொள்வதைத்தான் இயற்கையை வெல்வது என்று சொன்னார்கள். அதை சீர்கெட வைத்து, அழித்து முரணாக பயன்படுத்துவது இயற்கையை வெல்வது அல்ல. அப்படி எந்த வகையிலும் அதை வெல்ல முடியாது. அதன் எதிர் விளைவுகளை நாம் சந்தித்தே தீர வேண்டும். மீள இயற்கைக்கே நாம் திரும்பியாக வேண்டும். இதுதான் உண்மை. அதனால் சித்தர்கள் வலியுறுத்தியது. "இயற்கை வாழ்வியம்" இதை இன்னும் பண்பாடு, நாகரீகம் என்பதோடு ஒப்பீட்டளவில் பார்த்தால் நுட்பமான செய்திகள் விளங்கும்.

* பண்பாடு, நாகரிகம் என்பதற்கும் இயற்கைக்குமான உறவு என்ன?

நாம் வழிவழியாக மரபு வழியாக நம் நிலம் சார்ந்தும், இயற்கை சார்ந்தும் ஒரே இடத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு இந்த வகைப்பட்டதுதான் என்று இயற்கையில் வடிவமைந்த சில தன்மைகள் உண்டு. நாம் மூன்று வேளையும் அரிசி சோறு சாப்பிடுகிறோம். வட நாட்டானாலே அப்படி முடியாது. ஏன் என்றால் அங்கே பிறந்தவர்கள்,அங்கங்கே என்ன விளைகிறதோ அதனோடு வழக்கமாகி இருக்கிறார்கள். இதெல்லாம் மரபு சார்ந்தது. பண்பாடு. நமக்கு வேட்டியினை மடித்து இரண்டு குழாயாக தைத்து போடத் தெரியாதா? இப்படி இருந்தால்தான் இந்த வெய்யில் நாட்டுக்கு, காற்று ஏந்துக்கு (வசதிக்கு) நன்றாகயிருக்கும் என்று நமக்கு ஏற்ற ஆடைகளை வடிவமைத்தோம். இதெல்லாம் பண்பாட்டுக் கூறுகள். சிலவற்றை மீறி நாம் செயல்பட முடியாது. செயல்பட்டால் எதிர் விளைவுகள் இயற்கையிடமிருந்து உடனே வரும்.

இந்த குமுகம் (சமூகம்) வளர்ச்சியடைந்து கொண்டு இருக்கிறது. வளர்ச்சிக்கேற்ப அன்றாடத் தேவைகள் இருக்கின்றன. அன்றாடத் தேவைகளுக்கு எந்தெந்த ஏந்துகள் (வசதிகள்) வேண்டுமோ அவற்றைதான் நாகரிகம் என்று சொல்கிறோம்.
நாங்கள் பண்பாட்டை முன்னிருத்துகிறவர்கள். இருப்பினும் நான் இரு சக்கர ஊர்தி வைத்திருக்கிறேன். இது நாகரிகம். விரைவாக போய் வேலை முடிக்க அதைப் பயன்படுத்துகிறேன். நேரம் பார்க்க கடிகாரம், தொடர்புக்கு செல்லிடப்பேசி, செய்திக்கு தொலைக்காட்சி, இப்படி தேவைக்காகத்தான் அவைகள். தொலைக்காட்சி இருக்கிறது என்பதற்காக அதையே 24 மணிநேரமும் பார்க்க முடியாது. அது நமது வேலை இல்லை. போக வேண்டிய இடத்துக்கு போய் வந்த பின்பு வண்டியை வெளியிலேயே விட்டுவிட வேண்டியதுதான். அதிலேயே படுத்து தூங்குகிறது கிடையாது.

வழிவழியாய் பல தலைமுறைகளாய் நடைமுறையில் உள்ளவை வழக்கம் எனப்படும். நம் வாழ்நாளுக்குள் பழகும் நடைமுறைகள் பழக்கம் எனப்படும்..

வழக்கங்கள்தான் பண்பாடு. பழக்கங்கள்தான் நாகரிகம். ஆனால் இன்றைக்கு நாகரிகம் தான் மொத்தமும் என்று படைத்துக் காட்டப்பட்டிருக்கிறது. வாழ்க்கைக்கான அடிப்படைக் கூறுகளை நாம் மாற்றிக் கொள்ள முடியாது. அது இயற்கையோடு இணைந்தது. அதை தொலைவாக தூக்கி போட்டால் வாழ்க்கை அழிந்து போய்விடும்.

என்ன ஆடைபோட வேண்டும், என்ன வழக்கங்கள் வைத்திருக்கவேண்டும். எத்தனை மணிக்கு உண்ணவேண்டும். தூங்கவேண்டும். இவ்வளவு செய்திகளும் பண்பாட்டுக் கூறுகளாக வருகின்றன. இவ்வனைத்திலும் நமது மரபுக் கூறுகள் இருக்கின்றன. இப்படித்தான் இப்படித்தான் என்று அறிவால் அன்றைக்கே உணரப்பட்ட செய்திகள் இருக்கின்றன. அவ்வளவையும் புறந்தள்ளிவிட்டு இன்றைக்கு புதிய புதிய நாகரிகக் கூறுகளை கொண்டு வந்து எல்லாவற்றையும் சேர்த்துவிட்டோம். அதனால் இன்றைக்கு முகாமையாக இருக்கிறது பண்பாட்டுப்போர். ஒரு பண்பாட்டுப் போரில் ஈடுபடாமல் எந்த இனமும் குமுகமும் எந்த ஒரு முன்னேற் றத்துக்கும் போய்ச் சேர முடியாது.

* இப்போது ஓகக்கலையின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?

மருத்துவம், ஓக இருக்கை, அலகு குத்துதல் / ஊசி மருத்துவம் (ACUPUNCTURE), மருமக்கலை (வர்மம்), ஒடிவு முறிவு சாரி, எலும்பு முறிவு மருத்துவம், இப்படி சித்தர்களின் கலை ஒவ் வொன்றும் ஒவ்வொரு துறையாக பிரிந்து இருக்கிறது. ஒன்று தனியாக பிரிந்து போகும்போது தான் வளர்ச்சி கண்டு ஒட்டு மொத்த துறையும் வளர இயலும். அப்படி தனியாக பிரிந்து போனவை அதனதன் துறைகளில் வளர்ச்சி கண்டிருக்கின்றன.

அவற்றுள் இந்த ஓக இருக்கை கலை மிக எளிதாக உலகம் முழுதாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கிறது. எளிய பயிற்சிகள்,பயிற்சியின் போது அதிக ஆற்றலை செலவழிக்க வைக்கிறதில்லை. மென்மையாகவே உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கிறதால் பெரியவர்கள், பள்ளி பிள்ளைகள் போன்றவர்களுக்கு மன வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது.

* மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் என்று எவற்றைப் பரிந்துரைக்கிறீர்கள்?


மாணவர்களும், இளம்பிள்ளைகளும் செய்வதற்காக "திருக்குறள் ஓக இருக்கை" என்று ஒன்றை உருவாக்கி வடிவமைத்திருக்கிறோம். ஆரிய வடமொழி திரிபாளர்கள் நம்முடைய கலையில் மந்திரம் போன்றதெல்லாம் உள்ளே நுழைத்து சீரழித்திருக்கிறார்கள். அதை நீக்கி விட்டு உள்ளே என்ன பொருத்துவது என்று பார்த்தபொழுது தான் திருக்குறளை தெரிவு செய்தோம். அதை ஓதும் பொழுது நல்ல சொல்லாடல் பயிற்சியும் உரையாடல்,நற்சிந்தனைப் பயிற்சியும் நமக்கு கிடைக்கும். இந்தப் பணிகூட இத்தனை ஆண்டு காலத்தில் எவராலும் செய்யப்படவில்லை என்கிறது நீங்கள் கவனிக்கவேண்டிய செய்தி.

உடல் நலந்தான் நம் மக்களுக்கு செல்வம் என்று சொல்வார்கள். ஆக நம் மக்களுக்கு, பிள்ளைகளுக்கு இளந்தலை முறையினர்க்கு உடல் நலத்தை தவிரவேறு ஒன்றும் கொடுத்துவிட்டுப் போக வேண்டிய தேவையில்லை அந்த ஓக இருக்கையை சிறு பருவத்திலேயே நன்கு கற்றுக்கொடுத்துவிட்டார்கள் என்றால் அவர்கள் வளர்ந்து காலம் முழுக்க கைக்கொண்டு பின்பற்றி வருவார்கள். இதை ஒரு பேரியக்கமாக கட்டியமைக்க வேண்டும் என்று தான் இந்த வடிவங்களை உருவாக்கினோம். எதையுமே முறைமை என்று வந்தால்தான் ஏற்றுக்கொள்வார்கள். அதனால் கட்டுப்பாடுகளோடு நேரக்கணக்கீடுகளுடன் பயிற்சி செய்முறைகள் ஏற்படுத்தியிருக்கின்றோம். ஒரு பக்கம் திருக்குறள் ஒலித்துக் கொண்டேயிருக்க இன்னொரு பக்கம் அதற்கேற்ப அசைவுகள், பயிற்சிகள் இருக்கும். குழந்தைகள் கூட்டமாக நின்று செய்கிற அந்தவிரைவு வேகம் நம்முடைய மனதை ஈர்க்கும். நமது இனத்தின் எதிர்கால நலவாழ்விற்கு இதை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றோம்.

* சித்தர்கள் பாடல்கள் தமிழ் இலக்கிய கட்டமைப்புக்கு வெளியேயான ஒரு தனிவகை இலக்கியம் என்பதாக கவனிக்கப்படுகிறது. இதன் கரணியம் என்ன?அதன் வடிவமா? சாரமா?

சித்தர் பாடல்கள் ஓர் இலக்கியமே கிடையாது என்று சொல்கிறவர்களெல்லாம் உண்டு. அது என்னவோ ஆசிரிய விருத்தப்பாவிலே ஏதோ பேதைத்தனமாக பாடி வைத் திருக்கிறார்கள். அதுவெல்லாம் பாட்டே கிடையாது என்று சொல்கிற இலக்கியக்காரர்கள் உண்டு. ஆனால் சித்தர்கள் இதை இப்படி உருவாக்கினதற்கு ஒரு கரணியம் இருந்தது. அவர்கள் அந்த காலகட்டத்திலேயே எதிர்காலத்தை கணக்கிட்டுப் பார்த்துதான் எழுதியிருக்கிறார்கள். இந்த பார்ப்பனியம் உள்ளே நுழைந்த பிறகு சாதிகள் அதுவதற்கு ஒரு மேலாண்மைத் தன்மையை ஏற்றிக் கொடுக்க தொடங்கியாகி விட்டது. அப்படியான பிறகு பல சாதிகள் ஒடுக்கப்பட்ட சாதிகளாக இருக்க வேண்டிய சூழல் வந்தது. இந்த ஒடுக்கப்பட்ட சாதிகள்தான் உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். உண்மையிலேயே இவர்களுக்குத்தான் நம்முடைய மண்ணும் நமது கருத்துக் கோர்வைகளும் அறிவுக் கருவூலகங்களும் சொந்தம். உட்கார்ந்து தின்கிறவனுக்கு இல்லை. ஆகையினாலே இந்த மக்களுக்காக இயற்றப்பட்டது தான் சித்தர் பாடல்கள்.

அதை இவர்களைப் போல வெண்பாவிலேயும் வேறு உயர் வடிவிலேயும், இன்னொருத்தர் நடுவில் உட்கார்ந்து விளக்கம் சொல்கிற அளவுக்கு எழுதினால் அவனுக்கு அது புரியாது. அதனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் எவனொருவனுக்கு படிக்கத் தெரியுமோ அவன் படித்து சொன்னால் போதும். இவன் உட்கார்ந்து கேட்டால் போதும் என்கிறதற்காக, அவனுக்கு அப்படி கேட்டாலே பொருள் புரிய வேண்டும் என்கிறதற்காக எளிய இலக்கிய வடிவில் நீங்களும் நானும் பேசுகிற வடிவில் அந்தப் பாடல்களை உருவாக்கிக் கொடுத்தார்கள். அவனுடைய மொழியிலேயே, நடையிலேயே ஒரு மிகப் பெரிய மருத்துவ அறிவைக் கொண்டு வந்து அவனுக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து செய்யப்பட்ட இலக்கியந்தான் அது. அதனாலே அதை எல்லா இலக்கியத் துடனும் வைத்துப் பொதுவாக கணக்கிட முடியாது. அதற்கும் அப்பாற்பட்டு இந்த மண்ணுக்கு சொந்தமானவனுக்குச் சொல்லப்பட்ட எளிய பாக்கள் கொண்ட உயர்ந்த இலக்கியம் அதுதான்.மக்கள் இலக்கியத்தின் முன்னோடிகள் சித்தர்கள்தான்.

* சித்தர்களின் சுவடிகள் அப்படியே கிடைத்திருக்கிறதா?

அறிவர்களின் பணிகள் தொடக்க காலத்தில் வாய்மொழி அளவில்தான் பாக்கள் வடிவில் வழங்கப்பட்டு வந்தன. மனப்பாட, மனனவழியில் நிற்க வேண்டும் என்பதற்காகவே பாடல் வடிவில் தங்கள் கருத்துக்களைப் படைத்தனர்.

பிற்பாடு எழுத்துக்கள் கற்றுத் தேர்ந்த ஒருவன் சுவடியில் இவற்றை எழுதியிருப்பான். சுவடிகளின் வாழ்நாளே 200 ஆண்டுகள்தான். அதற்கு மேலே அது இருக்காது. சிதைந்து போகும். அப்படியானால் அகத்தியர் எழுதிய சுவடி அப்படியே இங்கே வராது. அது ஒன்று எழுதியிருந்தால் அதை ஒரு 10 மாணவர்கள் மனப்பாடம் செய்திருப்பார்கள்.

அவனும் ஒவ்வொரு ஊருக்குப் போயிருப்பான். அவர்கள் தன் பகுதிகளில் நான்கைந்து தலைமுறைகள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அதில் எழுத கற்றுக் கொண்டவன் ஒருவன் எத்தனையோ தலைமுறை கழித்து சுவடியிலே எழுதி வைப்பான். அதனாலேதான் ஒரே நூல், ஒரே ஒரு குறிப்பிட்ட தலைப்பு சார்ந்த நூல் பல பகுதிகளில் அதனுடைய சுவடிகள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றிலேயும் சிற்சில பாட வேற்றுமைகள் இருக்கும். ஏனெனில் அதை எழுதுகிறவர்களுடைய வெவ்வேறு ஆட்கள், வெவ்வேறு காலகட்டம் கரணியமாக ஏற்படுகிற வேற்றுமைகள் தான்.

* ஓகக்கலை பயிற்சிகள் நோய்க்கான பண்டுவ (சிகிச்சை) முறையாக வழங்கப்படுவதாக சொல்கிறார்களே, அது சரியா?

சரிதான். ஓக இருக்கை என்பதே நம்முடைய உடல் நலத்திற்காகத்தான். பலன் என்னும் போது உடலில் கோளாறுகள், பிணிகள் எந்த சிக்கல்கள் இருந்தாலும் அவற்றை தீர்ப்பதற்கான ஒரு தீர்வு முறைதான் அது. ஒரு பண்டுவ முறையாக (TREATMENT) இலங்குவதற்கான எல்லா தகுதியும் பெற்றது, இந்த ஓக இருக்கைக் கலை, அந்தந்த பிணிகளுக்கு ஏற்றார்போல, மக்களுக்கு ஏற்றார்போல, இவற்றை செய்வது இயலும்,செய்வதும் முறைதான். அப்படி செய்வதனால் பயன்களும் உண்டு.

* சித்தர் என்பதற்கு மாறான பெயராக அசித்தர் என்று பெயர் வைத்திருக்கிறீர்களே, கரணியம் என்ன?

குருவாக இருப்பவர்கள் எங்களுக்கு பெயரிடுதல் என்று ஒரு நடைமுறை உண்டு. அப்படி அவர்கள் தேர்ந்தெடுத்த இந்த பெயரை நானும் விரும்பி ஏற்றுக் கொண்டேன். ஒரு சொல்லுக்கு முன்னாலே "அ" வந்தால் தமிழில் எதிர்மறை ஆகாது. வடமொழியில் தான் அப்படி வரும். வடமொழிச் சொற்களில் பார்த்தோம் என்றால் "சுத்தம்" என்று சொன்னால் "அசுத்தம்," "யோக்கியன்" என்று சொன்னால் "அயோக்கியன்" என்று இப்படி எதிர்மறைக்குப் போகும். ஆனால் தமிழில் தூய்மை, துப்புரவு என்பதற்கு அதூய்மை, அதுப்புரவு என்றோ அநல்லவன் என்றோ சொல்லுவது இல்லை. (சுத்தம்) - தூய்மை, துப்புரவு, (யோக்கியன்) - நல்லவன்.

தமிழில் எதிர்மறையாக வேண்டும் என்று சொன்னால் "அ" கூட "வ" அல்லது "ன்" அல்லது அல் சேர்த்தால்தான் எதிர்மறைக்குப் போகும். எடுத்துக்காட்டாக - அவநம்பிக்கை, அன்று, அல்+அது=அல்லது-. அதை வைத்து நீங்கள் அவையெல்லாம் வடமொழி என்று புரிந்து கொள்ளலாம். "அ" என்றால் அகரம். இந்த "அகரம்" தான் சித்தர்களின் அடிப்படை. இந்த அகரத்திலிருந்துதான் எல்லாவற்றின் தோற்றத்தையும் எடுத்தார்கள் சித்தர்கள். அவர்கள் கண்டெடுத்த மெய்ப்பொருளுக்கு அகரம் என்று தான் பெயர். ஆகையால் அந்த அகரத்தை முன்னிருத்தி அகரச் சித்தராக வைத்ததின் சுருக்கம் தான் "அசித்தர்". எல்லா இடங்களிலேலேயும் என்னை அசித்தர் என்று சொல்லிக் கொண்டு வருகிறேன். ஆனால் எல்லோரும் என்னை சித்தர் என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள். தன்னை சித்தர் என்று கூறிக் கொண்டவர்கள் எல்லாம் எத்து வேலைகளால் இன்று சிறைக்குள் இருக்கிறார்கள்.

* சித்தர்கள் மக்களுக்கு சொன்ன செய்திகள் என்ன?

மூடபழக்கங்கள், மூட மத நம்பிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் ஈ.வெ.ரா. பெரியார் என்பது நமது கால கட்டத்தின் செய்தி. காலமறியா காலத்திலேயே இந்த மூடப்பழக்கங்களுக்கு தவறான கொள்கைகளுக்கு, திரிபு கருத்துக்களுக்கு எதிராகக் கலகக் குரல் எழுப்பியவர்கள் சித்தர்கள் தான். சரியான அறிவாளர்களாக, புரட்சியாளர்களாக இருந்தவர்கள் அவர்கள்,நலத்தோடு வாழ்வது இயற்கையோடு இயைந்து வாழ்வது, நல்ல சிந்தனையுடன் வாழ்வது, ஒருத்தர் மேல் கீழ் என்று பார்க்காமல் வாழ்வது,மூடக் கருத்துக்களை வைத்துக் கொள்ளாமல் வாழ்கிறது, இவைதான் சித்தர்களின் செய்திகள்; பணிகள். சாதிய எதிர்ப்பு, மத எதிர்ப்பு, மூடச் சடங்கு எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, போலி துறவிகள் / முனிவர்கள் எதிர்ப்பு,போலி மெய்யியல் எதிர்ப்பு, வந்தேறிகள் எதிர்ப்பு, மாயை எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழ் மொழிப் பற்று, இவை சித்தர்கள் செய்த பணிகள்.
அவர்கள் சொன்னதில் வாழ்க்கைக்கு உதவாத ஒன்றுமேயில்லை. அவர்கள் சொல்வதெல்லாம் மருந்தாக இருக்கும். பயிற்சியாக இருக்கும். உணவாக இருக்கும். நடைமுறையாக இருக்கும். ஒழுக்கங்களாக இருக்கும்.
உடலை ஒம்புவதன் மூலமாக உள்ளத்தையும், உயிரையும் ஆற்றல் பெறச் செய்வது, நீண்டு வாழ்வது, நலமாக வாழ்வது, இவைதான் சித்தர்களின் "இயற்கை வாழ்வியம்". சித்தர்களுடைய இயக்கம் என்பது மக்களுடைய நலவாழ்வு மட்டுமே.


கருத்துக் கடிதங்கள்

அசித்தருடன் ஒரு நேர்காணல், ஆழ்ந்த சிந்தனைக்குட்பட்டது. ஆழ்ந்து படிக்க வேண்டும்.
- பூந்தை கோ. வி. திருநாயகம், கடலூர்

உடல் சார்ந்த ஓகக் கலை, மனம் சார்ந்த யோகக் கலையாக சமற்கிருதமயமாக்கப்பட்டது தொடங்கி திராவிடர்களின் முயற்சியில் உருவான பலவும் ஆரியர்களால் அவர்களது போலவே உருவாக்கப்பட்ட பித்தலாட்டம் என்று ஒன்று விடாமல் பல விசயங்களையும் தொட்டுச் செல்கிற மிக நீண்ட நேர்காணல் நன்று.
- நேயன் மதுராந்தகம்

சிற்றிதழ் வரலாற்றில் யாரும் செய்யாத புதுமையாக அசித்தர் நேர்காணலை வெளியிட்டு வரலாறு படைத்துவிட்டீர்கள். இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் தமிழ்ப்பணி என்று நான் இதை மதிப்பிடுவேன். 1. அசித்தர் முகவரி,புகைப்படம். 2. பாவெல் சூரியன் புகைப்படம் 3. தமிழவன் முகவரி கிடைத்தால் உதவியாக இருக்கும். நேரடித் தொடர்புகளை தூண்டும் வகையில் பெயர் முகவரிகளை (உரியவர் மறுத்தால் தவிர) வெளியிடுவது இதழியல் கடமை என்று கருதுகிறேன். அசித்தர் நேர்காணல் தமிழக வரலாற்றின் சுருக்கம். பார்ப்பனர் திருடியதையும், மாற்றியதையும் புனைக்கதைகள் ஏற்படுத்தியதையும் வரிக்கு வரி சொல்லுகிறார். தமிழர்கள் ஆடிப் பெருக்கிலும், மார்கழி சொக்கப் பனையிலும் ஏடுகளை அழித்தது பார்ப்பன சூழ்ச்சியே. பைபிளை பார்த்து பகவத் கீதை செய்ததும், இசுலாமிய முகரம் ஊர்வலம் பார்த்து திலகர்பார்ப்பான் பிள்ளையார் ஊர்வலம் அறிமுகம் செய்ததும் வரலாறு. கண்முன்னே தமிழர் சதிர் ஆட்டத்தை திருடி பரதநாட்டியம் என்று சொல்லிக்கொண்டு காசுமீரில் வாழ்ந்த பரத முனிவர் அக்கலையைச் செய்தார் என்று பத்மாசுப்ரமணியம் போன்றவர்கள் புளுகி,நூல் எழுதி பரத முனிவருக்கு கோயில் கட்ட செயலலிதா நிலம் ஒதுக்கிய கூத்து எல்லாம் நடந்தது. பொய், திருட்டு, வஞ்சகமே பார்ப்பனர் வாழ்வியலாக இருக்கிறது. யோகம், தியானம், வாழ்வியல் கலை என்று ஒரு பொடியன் சிறீலசிறீலசிறீ. ரவிசங்கர் மகாராச் ஊரை ஏய்ப்பதற்கு பார்ப்பன ஊடகங்களில் பெரு விளம்பரம் தருவது அறிவீர். நன்று செய்தீர். வாழ்த்துக்கள்
- சங்கமித்ரா, சென்னை

அசித்தரின் நேர்முகத்தில் அவர் தந்துள்ள சித்தர் பற்றிய விளக்கங்களும் தத்துவ கருத்துக்களும் வட மொழியாளர்களின் ஆதிக்கத்தில் தமிழர்கள் ஏமாந்த அவலத்தோடு பூணூல் விலக்கப்பட்ட வள்ளுவரின் ஓவியமும் நெஞ்சில் நிலைப்பவையாய் பளிச்சிட்டன.
- புலவர் ந. குணசேகரன், திருலோக்கி

அசித்தருடன் நேர்காணல் கூர் மிக சுவாரசியமாக உள்ளது. ஒரு தொகுப்பாக தொகுக்கும் வண்ணமுள்ளது.
- பொன். குமார், சேலம்

அசித்தருடன் ஒரு நேர்காணல் இரண்டும் அதிக பாதிப்பைத் தந்தன. அசித்தருடன் தமிழ் ஓகம் எப்படி வைதீகர்களால் ஊடுருவப்படாத யோகா ஆயிற்று என்பதைப் பார்க்கும்போது நம்முடைய இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் நிறைய இழப்புகள் நினைவுக்கு வருகின்றன.
- பொன்னீலன், பதிகட்டிப் பொட்டல்

அசித்தருடன் ஒரு நேர்காணல் நிறைய விசயங்கள் தெரிந்து கொள்வதாய் அமைந்துள்ளது. பூணூல் அணியாத திருவள்ளுவர், அசித்தர் தூய தமிழ் சொற்களுக்காய் ஆற்றும் முயற்சிகள், ஆரியர்களின் அவதாரங்களை, புனைக்கதைகளை மேலும் அறிந்து கொள்ள செய்திருக்கிறது. சித்தர்கள் ஞானத்தை தேடுபவர்கள். அதை கண்டு மனிதர்களின் வாழ்வை வளமாக்க முயற்சித்தவர்கள். மாயக்கதைகளும், மந்திரங்களுமில்லை எனத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆரிய பக்தி மார்க்கத்தையும் தமிழ் கடவுள்கள், தமிழ் குல தெய்வங்கள் கூட ஆரியத்திற்கு பறி கொடுத்த நிலையை மேலும் அறிந்து கொள்ள ஆய்வு செய்யவும் தூண்டுகிறது. நேர்காணல் செய்த பாவெல் சூரியன் மற்றும் தமிழவன் அவர்களுக்கும் வெளியிட்ட சுகனுக்கும் நன்றி பல.
- கூ. வேதாராமன், சேந்தமங்கலம்


பாவெல் சூரியனாரது அசித்தருடனான நேர்காணல் பயனுள்ளதாக பல செய்திகளைப் பகிர்ந்தது.
- இ. ரெ. இராசகணேசன், என். சின்னையக் கவுண்டன், வலசு

அசித்தருடைய நேர்காணல் உள்ளேயே நான் நுழைய விரும்பவில்லை
- வளப துரையன், கடலூர்,


திரு.சங்கமித்ரா கடிதம்
அன்புடன் அசித்தருக்கு வணக்கம், நலமறிய ஆசை, உங்கள் முகவரி சவுந்தர சுகன் தந்தார், அவ்விதழில் வெளியான உங்கள் பேட்டி- மிகச் சிறந்த வரலாற்று ஆவணம், மாபெரும் படிப்பாளராகவும் ஆய்வாளராகவும் உங்களை அது இனங்காட்டுகிறது. தமிழர்களிடம் திருடியவையே ஆயுள் வேதம் - பரதநாட்டியம் முதலிய பல சங்கதிகள். ஆபிரகாம் பண்டிதர் இசைத் திருட்டை அம்பலப்படுத்திய மாதிரி - பாவாணர் வேர்ச் சொல் ஆய்வு செய்தது போல நீங்கள் ஓகம், பற்றிய பல செய்திகளை வெளிக் கொணர்ந்தீர்கள். நான் உங்களை ஒருமுறை சந்திக்க ஆசைப்படுகிறேன், பாவெல் சூரியனுக்கும் இது குறித்து எழுதியிருக்கிறேன், நீங்கள் எழுதின நூல்கள் இருந்தால் படிக்க ஆசை. வெற்றோசைத் தமிழ் கும்பல் மத்தியில் உங்களைப் போன்ற ஒரு ஞானி இருப்பது பெரு வியப்பு.
18.02.2007
பெரியார் தமிழ்ப் பேரவை,
ப. எண். 1/429,மலைநோக்கு குடியிருப்பு,
தென் பெரும் நெடுஞ்சாலை,
வண்டலூர் வாயில்,
சென்னை – 600 048.


திறனாய்வு (விமர்சனம்)
‘உண்மையான அறிவியல் என்பது மக்களிடம் சென்றடைய வேண்டும். அதைச் செய்யாதது அறிவியல் கிடையாது. மக்களிடம் சேரும் போதுதான் அது முழுமையான வடிவத்துக்கு வரும். அறிவு இயலாகவே அது நிற்கும். அப்படியில்லாமல் அது எங்கெங்கேயோ, யார் யாருடைய ஆளுகைக்குள்ளே. மேலாண்மைக்குள்ளே இருக்குமானால் அது அறிவியல் இல்லை’,என முழங்கும் சித்தர் மரபு பேசும் அசித்தரின் குரல் புயலின் வலிமையும் எரிமலையின் ஆவேசமுமாய்க் கனல்கிறது.

‘களவாடின ஒவ்வொரு துறைக்கும் ஒரு வல்லுனர் பெயரை நிறுவி மொழி பெயர்த்து தமது என காட்டிக் கொள்வது ஆரியத்துக்கு பழகிய எத்து வேலை தான்.’(பக்.180)

‘மனம் தொடர்பாக உங்களிடம் பேச வருகிறவர்களெல்லாம் உங்களை ஏமாற்ற - ஏய்க்க வருகிறார்கள்’(பக்.182)

‘எது ஒன்றையும் திரும்பத் திரும்ப நினைப்பது, ஒலிப்பது நம் இளைஞர்களை பேடிகளாக்க காயடிக்கச் செய்கிற வேலை.’(பக்.185)

‘இயற்கையைப் புரிந்து கொள்வதைத்தான் இயற்கையை வெல்வது என்று சொன்னார்கள். அதை சீர்கெட வைத்து, அழித்து முரணாக பயன்படுத்துவது இயற்கையை வெல்வது அல்ல. அப்படி எந்த வகையிலும் அதை வெல்ல முடியாது. அதன் எதிர் விளைவுகளை நாம் சந்தித்தே தீர வேண்டும்.’(பக்188)

‘வழிவழியாய் பல தலைமுறைகளாய் நடைமுறையில் உள்ளவை வழக்கம் எனப்படும். நம் வாழ்நாளுக்குள் பழகும் நடைமுறைகள் பழக்கம் எனப்படும்.. வழக்கங்கள்தான் பண்பாடு. பழக்கங்கள்தான் நாகரிகம்,’ என அசித்தர் ஆழ்ந்த தத்துவத்தை எளிய சொற்களில் விளக்கிவிடும்போது பண்பாட்டு மானுடவியலின் ஒளி கசிகிறது.
‘மக்கள் இலக்கியத்தின் முன்னோடிகள் சித்தர்கள்தான்’ என உரத்துக் கூறும் அசித்தரின் நேர்காணல் ஓகக் கலை, சித்தர் மரபு, சித்தர் பாடல்கள், தமிழர் தத்துவம், ஆரிய சதி என விரிந்து பரவுகிற அதிசய மொழிப்புலம்.
கோ.கலியமூர்த்தி
நூல் திறனாய்வு (விமர்சனம்)
நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், ஆகத்து,2010.


__________________________________________________________________

2007 – சவுந்தர சுகன் இதழில் வெளியிடப்பட்டது.
2009- ‘காலத்தின் உரையாடல்’, தமிழ்க்கூடம் வெளியீடு,
நேர்காணல்கள் தொகுப்பு.
--------------------------------------------------------------





ஓகம் என்றால் என்ன?
தமிழ் மரபில் உருவாகி சித்தர்களால் வளர்க்கப்பட்ட ஒரு கலை எப்படியோ வடமொழியின் ஆளுமைக்குட்பட்டு வடவர் கலையாக தோற்றப்படுதலை மாற்றியமைக்க மீண்டும் அக்கலையை தமிழ்ப்படுத்தப் புறப்பட்டிருக்கும்அசித்தருடன் நேர்காணல் ஒன்றை சௌந்தரசுகன் வெளியிட்டிருக்கிறது.

அந்தக்கலை யோகக்கலை. இன்று உலகம் யோகா என்று பிரமிப்புடன் பார்க்கும் அந்தக்கலையை வெறும் மனம் சார்ந்ததாக இன்று பலர்ரும் கருதி கற்று வருகிறார்கள்..அது மனம் சார்ந்த கலையே அல்ல முற்றும் உடல் சார்ந்த கலைதான் என்கிறார் அசித்தர். உடலுக்கு உறுதி தரும் ஒரு பயிற்சி அது.அதனால் ஏற்படும் புத்துணர்ச்சியை மனப்பயிற்சி என்று தவறாகக் கருதுகிறார்கள்.ஒவ்வொரு ஆசனமும் உடலுக்கு பயிற்சி அளிக்கும் விதத்திலேயே அமைக்கப்ட்டிருக்கிறது என்கிறார்.

ஒரு குழந்தை பிறந்து தவழ்ந்து நடக்கத் தொடங்கும் காலம்
வரை அது செய்யும் முயற்சிகளும் பயிற்சிகளும்தான் இக்கலைக்கு
அடிப்படை {அட சரிதான்}.யோகாவின் எல்லா நிலைகளையும் ஒரு குழந்தை இயல்பாக ஒருமுறையாவது செயல்படுத்தும்.தமிழ் மரபில் உருவாக்கப்பட்ட இயல்பான உடற்பயிற்சி முறைதான் ஓகக் கலை.

ஆம்.யோகம்,யோகா என்றழைக்கப்படும் கலைதான் ஓகக்கலை.

-------000000--------------------

வருணாசிரமம்கூட அசித்தரால் புரட்டிப் போடப்படுகிறது.நால் வருணம் குறித்த அசித்தரின் விளக்கம;

மண்ணோடு உறவுள்ளவன் சூத்திரனும் ஒடுக்கப்பட்டவனும்.விளையும் கூலமுடன் (தானியம்) உறவுள்ளவன் வைசியன்.
------------000000---------------------99999999999----------

சிந்தா நதி – இணையதள ஏட்டிலிருந்து.

Thursday, June 18, 2015

வாஞ்சி நாதன் ஐயருக்கு இன்று பிறந்த தினமாம்!



ஆஷ்துரை Vs வாஞ்சிநாதன்....

ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்....!

அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்..!

அவர் செய்த மகத்தான சாதனை , குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மரபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்...!

இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்டது மட்டுமில்லாது தானே முன்னின்று நட்த்தவும் செய்தார்...!

அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும்...! வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக்கொள்ள அவர்களைப்போலவே நடந்துக்கொண்ட இனம்!) சேர்த்துக்கொண்டு ஆஷ் செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்தனர்..!

ஆஷ் தொடர்ந்து சாதியிலான வேறுபாட்டை எதிர்த்து வந்தார்..!

பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அருந்த்தி சமுதாயத்தைச் சேர்ந்த பெண், பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக மருத்துவமனைக்கு போக வேண்டியதிருந்தது. அவர்களை பிராமணர்கள் உள்ளே விட மறுத்தனர்...?

அப்போது அவ்வழியாக வண்டியில் வந்த ஆஷ்துரையும் அவரது மனைவியும் அந்தப்பெண்னை அவர்கள் வண்டியிலேயே ஏற்றி பிராமணர் தெரு வழியாக சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்..!

அவரின் இந்த செயல்களால் பிராமண குலத்திற்க்கு இழுக்கு நேர்ந்ததாக பாரத மாதா சங்கத்தினர் கருதினர்...?

அதனால் ஆஷை கொன்றுவிட தீர்மானித்தனர். அதன்படியே வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்..!

அவன் சட்டைப் பையில் இருந்த கடித்தின் மூலம் அந்த சங்க உறுப்பினர்களின் ஆதிக்க சாதி வெறி தெரிகிறது.

வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே :

“ ஆங்கில சத்துருக்கன் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு ,அழியாத சனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன்,சிவாஜி,கிருஷ்ணன்,குரு கோவிந்தர்,அர்ஜுன்ன் முதலியோர் இருண்ட்க தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனையே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இது தான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”.

இப்படிக்கு,
R. வாஞ்சி ஜயர்.

நியாயமாப் பார்த்தா தீண்டாமையை எதிர்த்து போராடி அதில் ஒரு சாதிவெறி பிடித்த மனிதனால் உயிர் இழந்த ஆங்கிலேய பிரபுவுக்கு நாம் அஞ்சலிதான் செலுத்த வேண்டும்.

ஆதாரம்: அருந்ததியர் வாழும் வரலாறு .
ஆசிரியர் : மாற்கு.

Monday, April 13, 2015

தமிழரின் வருடப் பிறப்பு சித்திரை மாதமா அல்லது தை மாதமா?



தைபிறந்துவிட்டால் தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்துவிடும்.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப்பொங்கல் என்று கொண்டாடப்படும் தைப்பிறப்பா அல்லது சித்திரை வருடப்பிறப்பு என்று சொல்கிறோமே அதுவா என்கின்ற மயக்கம் இன்னும் தமிழ்மக்களிடையே இருக்கிறது. சரிவரத் தெரியாத மக்களிடம் இருப்பது மயக்கம். சரியெதுவெனத் தெரிந்த தமிழர்கள்கூட சரியானதைப் பின்பற்றாமல் விடுவதற்குக் காரணம் வழக்கம். அதனை மாற்றுவதா என்கின்ற தயக்கம்.

இத்தனைக்கும் சித்திரையைப் புத்தாண்டாகக் கொள்ளுகின்ற வழக்கம் தமிழர்களிடையே தொன்றுதொட்டு இருந்துவந்த தொன்றல்ல. பண்டைத் தமிழகத்திலே இருந்த பண்பாடுமல்ல. தொன்மைமிகு சைவசமயத்தோடு தோன்றியதும் அல்ல. ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இடைக்காலத்தில் நம்மை இறுகப் பற்றிக்கொண்ட எண்ணற்ற மூடநம்பிக்கைகளைப் போலவே ஏற்பட்டுவிட்ட ஒரு பழக்கம் இது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டிருந்த செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்களாயிருந்தார்கள். அவர்கள் அறிவியல் முதிர்ச்சியால் அகிலத்திற்கே வழிகாட்டியவர்கள் விண்ணையும் மண்ணையும் ஆராய்ந்து வியப்புமிக்க நூல்களை ஆக்கியவர்கள் வானிலைக்கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். நட்சத்திரங்களையும் அவற்றின் நடமாட்டங்களையும் அவற்றின் பலாபலன்களையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து கணித்தவர்கள். உலகுக்குப் பயன்தரும் முடிவுகளை அளித்தவர்கள். அவர்கள்தான் கதிரவனின் ஒளியினால்தான் பயிர்கள் வளர்கின்றன என்றும் காய்க்கின்றன என்றும் கண்டுபிடித்தவர்கள்.

அதனால்தான் களனி விளைந்து கதிரைப் பறித்ததும் தமது புத்தாண்டுப் பிறப்பன்றே முதன் முதலில் அந்தக் கதிரவனுக்கு நன்றி செலுத்தினார்கள். புதுப்பானையில் பொங்கலிட்டுப் படைத்து வணங்கினார்கள். சிந்துவெளி நாகரிகக் காலத்திற்கு முந்தியிருந்தே இந்தப் புத்தாண்டும்ää பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டு வந்தமையை அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறில் பொங்கல் பற்றிய குறிப்பொன்று காணப்படுகின்றது.

சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்

என்று புறநானூற்றில் 168 ஆவதாக இடம்பெறுகின்ற பாடலிலே கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் புதிர் உண்ணுகின்ற செய்தியைப் பதிவுசெய்துள்ளார். புதிதாகக் கறந்து நுரையெழும்பும் தீம் பாலிலே புத்தரிசியையிட்டு சந்தனக்கட்டைகளை விறகாகக் கொண்டு அடுப்பெரித்து ஆக்கிய பொங்கலைப் பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தை அழகாகச் சொல்கின்றார் புலவர்.

அத்தகைய தொன்மைச் சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகை உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல. உழுவார் உலகத்தார்க்கு அச்சாணியானவன் என்கின்றார் வள்ளுவர். எனவேää கதிரவனுக்கு நன்றிசெலுத்தும் பொங்கல் உலகத்திற்கே பொதுவானது. அதை உணர்ந்து தான் பண்டைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கத்திலேயே அதனை ஒரு பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சித்திரைப் புத்தாண்டு தமிழர்களின் புத்தாண்டு அல்ல. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புதுவருடப்பிறப்பு அல்ல. அது இந்துக்களின் புதுவருடப்பிறப்பு என்று சொல்லப்படுகின்றது. சிங்களவர்களுக்கும் சித்திரையில்தான் புதுவருடம் பிறக்கிறதாம். இலங்கை நாட்காட்டிகளில் ஏப்பிரல் 14 ஆம் திகதி இந்துää சிங்கள புதுவருடப்பிறப்பு என்றுதான் குறிப்பிடப்படுகின்றது. தமிழர்களின் புதுவருடப்பிறப்பு என்று குறிப்பிடப்படுவதில்லை. அவ்வாறு எங்காவது குறிப்பிடப்பட்டிருந்தால் அது தவறாகும்.

சித்திரைப் புத்தாண்டுதான் வருடப்பிறப்பு என்பதற்கு இந்து மதத்தவர்களிடையே நிலவுகின்ற புராணக்கதையையும் நாம் இங்கு நினைவுகூருதல் பொருத்தமாகும்.

புராண காலத்தில் நாரதமுனிவருக்குக் காம இச்சை ஏற்பட்டதாம். அந்த இச்சை தாங்கொணாதபடி அதிகமாகவே அதைத் தீர்த்துக்கொள்வதற்காக அவர் கிரு~;ணரோடு உறவுவைத்துக்கொண்டாராம். அதன் மூலம் அறுபது ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாராம். பிரபவமுதல் அட்சய ஈறாக பெயர் சூட்டப்பட்ட அந்த அறுபது குழந்தைகளின் பெயர்களால்தான் ஆண்டுகளின் தொடக்கம் கொண்டாடப்படுகிறதாம். அபிதான சிந்தாமணி என்ற நூலில் இந்தக்கதை சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய கேவலமான புராணக்கதையினைப் பின்னணியாக வைத்துத்தான் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடுகின்றோமாம். இந்தக்கதை அறிவியலுக்குப் பொருந்துமா? தமிழ் மரபுக்கு உகந்ததா? தமிழ்ப் பண்புக்குள் அமைந்ததா? நமது குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியுமா?

உண்மை என்னவென்றால் இந்த 60 ஆண்டுப்பெயர்கள் சாலிவாகனன் என்னும் வடநாட்டு அரசனின் பெயரால் ஏற்படுத்தப்பட்டவை. தமிழ்மக்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இருந்ததில்லை. மேலும் 60 வருடங்கள் முடிந்ததும் அதாவது அட்சய வருடம் முடிந்ததும் மீண்டும் பிரபவ வருடம் வரும். மீண்டும் 60 வருடங்கள் கழிந்ததும் அட்சய வருடம் வரும். இப்படியே சுற்றிக் கொண்டிருப்பதால் சித்திரைப் புத்தாண்டு முறையால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை வரலாற்று ரீதியாகக் கணக்கிட முடியாது. குறித்துரைக்க இயலாது.

உதாரணமாக பிரபவ வருடத்தில் உலகத்தில் வரலாற்றுச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தால் அல்லது ஒரு பெரியார் பிறந்ததாகச் சொன்னால் எந்தப் பிரபவ வருடத்தில் அது நடந்ததென்று எப்படிக் கணக்கிட்டு வைக்கமுடியும்? அறுபது வருடங்களுக்கொருதடவை பிரபவ வருடம் வரும் அல்லவா?

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்போரலையைப்பற்றி இன்னும் நூற்றி ஐம்பது வருடங்களுக்குப் பிறகு சொல்லும்பொழுது ஆழிப்பேரலை தாரண வருடத்தில் மார்கழி மாதத்தி;ல் தாக்கியது என்றுசொன்னால் எந்தத் தாரண வருடத்தில் என்று தெரியவருமா? எத்தனை வருடங்களுக்கு முன்னர் அந்த அனர்த்தம் நடந்தது என்று கணக்கிட முடியுமா? ஏனென்றால் இன்றிலிருந்து நூற்றைம்பது வருடங்களுக்குப்பிறகு இரண்டு மூன்று தாரண வருடங்கள் வந்துவிடும் அல்லவா?

இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சித்திரையில் பிறப்பதுதான் தமிழ்ப்புத்தாண்டு என்றால் அதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள அறுபது வருடங்களின் பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லையே! ஏன் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?

ஆனால் சிந்துவெளி மக்கள் தைமுதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதங்களையே தமிழ் மாதங்களாகப் பின்பற்றிவந்துள்ளனரென்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சான்று பகர்ந்துள்ளனர். தை முதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதப் பெயர்களும் சுத்தமான தமிழ்ப் பெயர்கள் என்பதுடன்ää தொல்காப்பியர் காலத்திலேயே அவை வழக்கத்திலிருந்தன என்று கூறுகின்றார் மொழியறிஞர் சி. இலக்குவனார் அவர்கள். யேசு கிறீஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கி.மு என்றும் கி.பி. என்றும் உலக வரலாறு வரையறுக்கப்பட்டு வருகின்றது. அதேபோலப் புத்தரின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு புத்த சமயத்தினர் புத்த ஆண்டு என்று கணித்துப் பின்பற்றுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்ப் புத்தாண்டு வழக்கத்தை இடையிலே கைவிட்டுவிட்டு எதையெதையோவெல்லாம் தமிழர்கள் பின்பற்றுவது எவ்வளவு துர்ப்பாக்கியமானது.

தைமுதல்நாள் தமிழர் திருநாள் மட்டுமல்ல அதுவே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளுமாகும். அதனால்தான் தமிழ்ப் புத்தாண்டுபற்றிய உண்மைநிலையைத் அறிவுபூர்வமாகவும்ஆராய்ச்சியின் அடிப்படையிலும் தமிழ்மக்களுக்கு உணர்த்துவதற்காக 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே தமிழ் அறிஞர்கள் செந்தமிழ்ப் புலவர்கள் கூடி ஆராய்ந்திருக்கிறார்கள். தமிழ்க்கடல் நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகள் அவர்களது தலைமையிலே அந்த ஆராய்ச்சி நடைபெற்றிருக்கின்றது.

மாபெரும் தமிழறிஞர்களும் கல்விமான்களுமான தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியம்பிள்ளை சைவப்பெரியார் சச்சிதானந்தம்பிள்ளை நாவலர் சோமசுந்தர பாரதியார் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் அந்த அறிஞர் குழவிலே இருந்திருக்கிறார்கள்.

அத்தனை அறிஞர் பெருமக்களும் ஒன்றாகக்கூடி தமிழ்ப் புத்தாண்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். முடிவுகண்டிருக்கிறார்கள். 500 இற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் அந்த முடிவிற்குத் தமது ஏற்பிசைவை வழங்கியிருக்கின்றார்கள். அவர்களது முடிவின்படி இயேசுகிறீஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் திருவள்ளுவர் என்றும் அவரது பெயரில் தொடர்ஆண்டுக் கணக்கீட்டைப் பின்பற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அந்த முடிவுகளின்படி திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல்நாள் ஆகும். கிழமை நாட்கள் ஏழு. அவைஞாயிறு திங்கள் செவ்வாய் அறிவன் வியாழன் வெள்ளி காரி என்பனவாகும். புதனும் சனியும் தமிழ்ப்பெயர்கள் அல்லவென்பதால் அவற்றுக்கான பண்டைய தமிழ்ப்பெயர்களான அறிவன் காரி என்பன முறையே வழங்கப்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆங்கில ஆண்டுடன் 31ஐக் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு. அதுவே தமிழ் ஆண்டுக் கணக்கு.

அறிஞர்களது தீர்மானத்தை அன்றைய தமிழக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது. அதன்படி திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு நாட்குறிப்பிலும் பின்னர் 1972 இலிருந்து தமிழக அரசின் அதிகாரபூர்வமான இதழிலும் 1981 இலிருந்து தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. 2009 இல் தமிழக அரசு தைப்பிறப்பையே தமிழ்ப்புத்தாண்டு என்றும் சித்திரைமாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு இல்லை என்றும் சட்டபூர்வமாக ஆணை பிறப்பித்தது. தமிழ் மக்களின் புத்தாண்டு விடயத்திற்குச் சட்டரீதியான அந்தஸ்துக் கொடுக்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமே.

ஆனால் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரின் அரசியல் முதிர்ச்சியற்ற நிலைமையும் நாகரிகமற்ற தன்மையும் தமிழ்ப் புத்தாண்டு விடயத்தையும் அரசியல் சாக்கடைக்குள் தள்ளிவிட்டிருப்பது தமிழ் இனத்தின் துர்ப்பாக்கியமாகும். தைப்பிறப்பைத் தமிழ்ப் புத்தாண்டென அரசாணை பிறப்பித்தது கலைஞர் கருணாநிதி அவர்களின் தி.மு.க. அரசு என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கப் பிறகு ஆட்சிக்கு வந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள் அந்த அரசாணையை மாற்றி சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு என தீர்மானம் போடும் முடிவுக்கு வந்திருக்கிறார். தைப்பிறப்பே தமிழ்ப்புத்தாண்டு என்பது கலைஞர் கருணாநிதியின் தீர்மானம் அல்ல. கலைஞர் பிறப்பதற்கு முன்னரே 1921 ஆம் ஆண்டு தமிழ் இனத்தின் சார்பாகத் தமிழ்ப் புலவர்களாலும்அறிஞர்களாலும் எடுக்கப்பட்ட முடிவு அது. இதனை நன்கறிந்த தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் செல்வி ஜெயலலிதா அவர்களின் கட்சியிலும் இருக்கிறார்கள். என்ன செய்வது எடுத்துச்சொல்லும் திராணியற்றவர்களாக இருக்கிறார்கள்!
யாரும் அறிவுரை சொல்லப் பயப்படுகின்ற நிலைமையைத் தமிழ் தலைமைகள் பேணிவந்தமையும் மாற்றுக் கருத்துக்களைச் சொன்னவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டமையும்தான் தமிழ் இனத்தின் வீழ்ச்சிக்கு காரணமானவை என்பதுதானே வரலாறு. அந்த நிலை இன்னும்தான் நீடிக்கிறது.

தைமாதத்தைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடினால் கிரக மாற்றங்களில் குளறுபடி ஏற்படுமாம் பஞ்சாங்கக் கணிப்புத் தவறாகிவிடுமாம் என்றெல்லாம் சிலர் மக்களைக் குழப்புகின்றார்கள். இது என்ன பேதைமை! சித்திரையை அடிப்படையாக வைத்துத்தான் கிரக சஞ்சாரங்கள் நடைபெறுகின்றன என்றால் அவை அப்படியே நடக்கட்டும். அவற்றுக்கு அமைவாக எழுதப்பட்ட பஞ்சாங்கங்கள் அப்படியே இருக்கட்டும். சித்திரை மாதக் கிரக நிலையைத் தைமாதத்திற்கு நகர்த்தும்படி யாரும் கூறவில்லை. பஞ்சாங்கங்களைத் திருத்தும்படி யாரும் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் சித்திரை மாதம் என்பது தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் அல்ல. தைமாதமே தமிழ்ப்பத்தாண்டின்முதல் மாதம் என்றும்ää தைமுதல் திகதியே தமிழ்ப் புத்தாண்டின் முதல்திகதி என்றும் கொண்டாடுவோம். அவ்வாறு நாம் கொண்டாடுவதால் கிரகமாற்றங்களில் கோளாறு ஏற்படும் என்பதும் பஞ்சாங்கம் பொய்த்துவிடும் என்பதும் இந்துத்துவத் திமிர்பிடித்த மூடநம்பிக்கைகள். மடத்தனமான விதண்டா வாதங்கள். மக்களைக் குழப்பும் முயற்சிகள்.

தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
பத்தன்று, நூறன்று பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்

என்று தைத்திங்கள் திருநாளை, தமிழினத்தின் திருநாளாக, தமிழ் வருடத்தின் முதல்நாளாக, தமிழ்ப பண்பாட்டின் பெருநாளாக போற்றிப் பாடுகின்றார் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் அம்மொழியே பொன் மொழியாகட்டும். அனைத்துலகத் தமிழர்களுக்கும் ஒரே வழியாகட்டும்.

எனவே தைமுதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டெனக்கொண்டாடும் நமது பண்டைய வழக்கத்தினை உலகத் தமிழ்மக்கள் அனைவரும் வழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டும்.


பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கடந்து விட்ட வருடத்தின் கடைசிநாள்.
வீட்டிலுள்ள வேண்டத்தகாத பொருட்களையெல்லாம் வீசி எறியும் நாள்.
வீட்டிலும், வீட்டைச்சுற்றவரவும், காணிகளிலும் உள்ள அழுக்குக்களை,
குப்பை கூழங்களையெல்லாம் கூட்டிப்பெருக்கித் தீயிட்டுக்கொழுத்தி
துப்பரவுசெய்யும் நாள்.

புலரும் பொழுதில், மலரும் பொங்கல்பண்டிகையை, புத்தாண்டுப் பிறப்பை வரவேற்க வீடுகள்தோறும் விடியவிடிய மகிந்திருக்கும் நாள்.
வீட்டுச்சுவர்களுக்கு வெள்ளையடிப்பதும், வர்ணச்சாயம் தீட்டுவதுமாக
அன்றைய நாள் முழுவதும் ஊரே மகிழ்ச்சியில் அமர்க்களப்படும்.
அந்த நாளைப் போகி நாள் என்று சொல்வார்கள்.
கடந்த வருடத்தைப் போக்குதல், க~;டங்களைப் போக்குதல்,
உறவினர்களுக்கிடையே இருந்த உரசல்களைப் போக்குதல்,
அகத்திலும் புறத்திலும் உள்ள அழுக்குக்களைப் போக்குதல் என்றெல்லாம் பொருளமைந்ததுதான் போகி நாள், போகிப் பண்டிகை!

திருமணமாகித் தனிக்குடும்பம் நடாத்தும் தங்கள் பெண்களுக்கும், சகோதரிகளுக்கும் பெற்றோரும், சகோதரர்களும் சீர்வரிசை செய்வதும் அன்றைய நாளில்தான்.

நெல்லு, அரிசி, குரக்கன், சோளம் முதலிய தானியங்கள் முக்கனிகள், இனிப்புப் பலகாரங்கள், புத்தாடைகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றையெல்லாம் இல்லறம் நடத்தும் தம் பிள்ளைகளின் வீடுகளுக்கு எடுத்துச்சென்று கொடுத்து மகிழ்வார்கள். இல்லத்தையும், சுற்றுப்பறத்தையும் எல்லோருமாகச் சேர்ந்து துப்பரவுசெய்து, புதுப்பொலிவு ஊட்டுவார்கள். அது பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள். புத்தாண்டுக்கு முதல்நாள். கடக்கும் வருடத்தின் கடைசிநாள். அதுதான் போகிநாள்!

தைத் திங்கள் முதல்நாளே தமிழர் நமது புதுவருடப் பெருநாள். தங்கத் தமிழினத்தின் தைப்பொங்கல் திருநாள். எனவே, பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை, பொங்கல் திருநாளிலேயே நமக்குப் புதுவருடம் பிறக்கிறது என்பதை, பொங்கல் திருநாளே நமது புத்தாண்டு என்பதை, எங்கும் பறைசாற்ற வேண்டும். எப்போதும் அதனைப் பின்பற்ற வேண்டும். தப்பாமல் நம் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டும். வாசலில் கோலமிட்டு, மாவிலையிலும், மஞ்சள் குருத்தோலையிலும் தோரணங்கட்டி, புத்தரிசி கொண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, தலைவாழையிலையில் பொங்கலும்,பழங்களும், கரும்பும் படைத்து, கதிரவனை நோக்கிக் கைகூப்பித்தொழுது நன்றிதெரிவிக்கும் நந்நாளே பொங்கல் திருநாள்.

காலையில் வழிபாடு. பகலில் உறவினர்களோடு மகிழ்ந்து உறவாடல். உணவு பரிமாறல். உண்டு களைப்பாறல். மாலையில் களியாடல். கலைகள் அரங்கேறல். ஊரே திரண்டு ஒன்றாய் மகிழ்ந்து கொண்டாடல். இதுதான் தமிழரின் தாயகங்களின் தைத்திருநாள். அது வருடத்தில் ஒருநாள். புத்தாண்டின் முதல் நாள். தமிழருக்கு அது பெருநாள். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நமது தாயகங்களிலே நாம் கொண்டாடி மகிழ்ந்த அந்த நாட்களை நினைவுகூரவேண்டும்.

வாழுகின்ற இடத்தால் வேறுபட்டாலும், வணங்குகின்ற மதத்தால் வேறுபட்டாலும், சார்ந்துள்ள அரசியல் கருத்தால் வேறுபட்டாலும், தனிப்பட்ட குணத்தால் வெறுபட்டாலும் தமிழர் என்ற இனத்தால் ஒன்றுபடுவோம். தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். தைமுதல்நாளே புத்தாண்டு என்று உறுதி பூணுவோம். எங்கு வாழ்ந்தாலும் அந்த வழக்கத்தைப் பேணுவோம்.

தைபிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். கல்வியைத் தொடங்கும் பிள்ளைகளுக்கு வழிபிறக்கும். புதுவகுப்பிற்குச் செல்லும் மாணவர்க்கு வழிபிறக்கும். பல்கலைக்கழகம் செல்லும் இளையோர்க்கு வழிபிறக்கும். திருமணத்திற்குக் காத்து நிற்கும் காதலர்க்கு வழிபிறக்கும்ää பிள்ளைப் பாக்கியத்திற்குக் காத்திருக்கும் தம்பதிகளுக்கு வழிபிறக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகின்ற பெற்றோருக்கு வழிபிறக்கும். இவ்வாறு சிறியோர்க்கும், பெரியோர்க்கும் எல்லோர்க்கும் தைபிறந்துவிட்டால் வழிபிறக்கும்.


பிற்குறிப்பு:

2001 ஆம் ஆண்டு தைமாதம் 6 ஆம் திகதி மலேசியாவிலே “தைமுதல்நாளே தமிழ் ஆண்டுத் தொடக்கம்” என்று பரப்புரைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. 2006 ஆம் ஆண்டு, அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய தமிழ்க் கலாசாரக் கழகத்தின் பொங்கல் விழாவில் எனது தலைமையில் எழுநூற்றுக்கும் அதிகமான பங்களிப்பாளர்களின் முன்னிலையில், “தைத்திருநாளே தமிழரின் புத்தாண்டு” என்று உறுதிமொழி பிரகடனப்படுத்தப்பட்டது.

-சு.சிறீகந்தராசா

http://www.tamilmurasuaustralia.com/2015/01/blog-post_8.html

Friday, March 06, 2015

இந்து மதத்தில் பசு மாமிசம் - ராஜா ராஜேந்திரலால் மத்ரா

இந்து மதத்தில் பசு மாமிசம் - ராஜா ராஜேந்திரலால் மத்ரா

தற்போது பசு மாடுகளை உணவுக்காக வெட்டக் கூடாது என்று மத சட்டங்களைக் காட்டி ஏழைகளின் உணவான பசு மாமிசத்தை மகாராஷ்ட்ராவில் தடை செய்துள்ளனர். நாடு முழுக்க மிகுந்த எதிர்ப்பை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது. பண்டைய காலத்தில் பசு மாமிசம் எவ்வாறு கையாளப்பட்டு வந்தது என்பதை இந்து மதத்தை ஆசாரமாக பின்பற்றும் ஒருவரின் ஆராய்ச்சியை இனி பார்போம்.

இந்து நிபுணரான ராஜா ராஜேந்திரலால் மத்ரா எல்.எல்.டி., சி.ஐ.இ., வங்காள வைஷ்ணவர். இவரால் எழுதப்பட்ட "இந்து ஆரியன்" என்ற புத்தகத்தில் 6வது அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயத்தின் ஒரு பகுதியை நாம் இனி கீழே பார்போம்:

“பசு மாமிசத்தை உணவாக புசிக்கலாம் என்று நினைத்தவுடனேயே இந்துக்களின் மனம் புண்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான இந்துக்கள் தானென்ன? லட்சக்கணக்கான இந்துமதப் பற்றுடைய இந்துமத நிபுணர்களும் கூட பசு மாமிசம் என்ற பெயரையுங் கூட வாயால் சொல்ல அருவறுக் கிறார்கள். நம் நாட்டில் பசு வதை செய்யும் விஷயத்தில் பெருங் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் உயிர்ப் பிராணிகளை அறுப்பதால் சில ஆத்மாக்கள் அமைதியாக இருந்தது மட்டுமல்லாமல், அவ்வாறு அறுக்கப்படுவது விருந்தினர்களுக்கெனக் கருதப்பட்டும் வந்தது. மேலும், இறந்து போன இந்துவுடன் ஓர் பசுவையும் சேர்த்து மயானக் கரையில் வைத்து எரிக்கப்பட்டு வந்தது. இவ்வந்தரங்கமான விஷயத்தை வெளியிடுவதன் நிமித்தம் இந்துக்களின் தற்போதைய கிளர்ச்சிகளை யுணர்ந்த இந்தியர்களுள் பெரும் ஆச்சரியத்தையும் கிளர்ச்சியையும் உண்டுபண்ணும். இவ்விஷயங்களை நான் எந்த கிதாப் (புத்தகம்) பிலிருந்து எடுத்திருக்கின்றேனோ அக்கிரந்தங்களில் எத்தகைய சந்தேகமும் அதிருப்தியும் கொள்ள முடியாது.

மனுஸ்மிருதியில் பசு மாமிசம்

எக்காலத்திலுமே பசு மாமிசம் சாப்பிடலாமென மனுஸ்மிருதி அனுமதிக்கிறது. ஆனால் அதைச் சாப்பிடுவதற்கு முன் ஒரு துண்டைத் தேவதைகளுக் கென்றாவது, பெரியோர்களின் ஆத்மாக்களுக்கென்றாவது, விருந்தாளிக்கென்றாவது மனதில் ஞாபகம் செய்து கூப்பிட வேண்டும். மேலும் மனுஸ்மிருதியில் வரையப்பட்டிருப்பதாவது: யாதொரு மனிதன் கிரயத்திற்காவது, இலவசமாகவாவது பசுமாமிசத்தை வாங்கி தேவர் களுக்காவது அல்லது ஆத்மாக்களுக்காவது ஸ்தோத்திரம் செய்த பிறகு அம் மாமிசத்தைச் சாப்பிடுவதில் எத்தகைய பிணியும் கிடையாது. (மனு 235)

ஆனால் மனுஸ்மிருதி பசு மாமிசத்தை ஓர் உணவாகக் கூறவில்லை யாயினும், மனிதன் சாப்பிடக்கூடிய உயிர்ப் பிராணிகளின் நாமங்களைக் கூறப்பட்டிருக்கும் அத்தியாயத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

முள்ளெலி, பெருச்சாளி, ஆமை, முயல் ஆகியவைகளை இந்து மத நிபுணர்கள் உண்ணலாமென வைத்திருக்கின்றார்கள். நான்கு கால் மிருகங்களில் ஒட்டகம் ஒன்று மட்டும் நீங்கலாக ஒரு பக்கத்தில் மட்டும் பல்லிருக்கக் கூடிய மிருகங்கள் எதானாலும் சாப்பிடலாம். (மனு 185)

மேலே கூறப்பட்ட நிபந்தனைப்படி பசுவும் அதில் சேர்ந்ததென்பதில் ஐயமில்லை. ஏனெனில் பசுவுக்கு ஒரே பக்கத்தில்தான் பற்களுண்டு என்பது மனு ஸ்மிருதியில் மறைவானதன்று, மனு பசுவைச் சாப்பிடக் கூடாதென்று விலக்கியிருந்தால் ஒட்டகத்தோடு சேர்த்துப் பசுவையும் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாதென விலக்கியிருப்பார்கள். ஆனால் முன்பின் வாசகங்களைக் கவனிப்பது கொண்டு பசுவைச் சாப்பிடக் கூடாதென விலக்கவில்லை யென்று நாம் அர்த்தம் செய்து கொள்வது சரியான அத்தாட்சியாகமாட்டாது. ஆதலின் பிரமச்சாரியானவர் தம் வீட்டிற்கு திரும்பி வருவதற்காக குருவுக்கு சில காணிக்கைகள் கொடுக்கின்றார்கள். இவ் விஷயம் மனு ஸமிருதியில் தக்க ஆதாரமாக இருக்கிறது. அதில் எழுதியிருப்பதாவது:

பிரமச்சாரிகள் விவாகத்திற்கு முன் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் காணிக்கைகளைச் சேகரித்து புஷ்பங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கம்பளத்தில் உட்கார்ந்து மார்க்கக் கோட்பாட்டின் படி குருவுக்கு ஒரு பசுவை வெகுமதியாக கொடுக்கவேண்டும். (மனு 6 3)

அதன் பின்வரும் ஒரு வாசகத்தில் காணப்படுவது: இராஜாக்கள் பிரபல விருந்தினர்களுக்காக இன்பமான சாதமும் பசு மாமிசமும் செய்யப்பட்டு வந்திருக்கின்றது.

குர்ஹீயா சூத்திரத்தில் பசு குர்பானியின் முறை ஓர் விதமாகக் கூறப் பட்டிருக்கிறது. அதற்கு சுடப்பட்ட பசு மாமிசம் உப்புக் கண்டம் எனக் கூறப்படுகிறது. அதற்காக வேண்டி பசுக்களில் நல்ல பசுவாகவும், கொழுத்த தாகவும் இருப்பதுடன் பாதரம் நிறமாகவும் இருக்கக் கூடாது. இவ்வாறு இந்தப் பசுவுக்கு பல நிபந்தனைகளுண்டு. அவ்வாறு குர்பானி செய்யப்படும் பசுவிற்கு எத்தனை நிபந்தனைகளிட்டிருக்கின்றார்களோ அத்தனை நிபந்தனைகளும் பொருந்திய ஓர் பசுங்கன்று கிடைத்தால் வெந்நீர் கொண்டு குளிப்பாட்டி அதை ரூரா (சுவாமி)வுக்கு வேண்டுதலைசெய்து கட்டிவைத்து வளர்த்து வருகின்றார்கள்.

அந்தக் கன்றுக்குப் பற்கள் பூராவும் முளைத்து குறிப்பிட்ட தவணை வந்தவுடன் குர்பானியின் மந்திரம் கிரிவுக்கள் தெரிந்த புர்ஹத் பிராமணனை அழைத்து அவர் படிக்க வேண்டிய மந்திரங்களைப் படித்து நெருப்பில் போட வேண்டிய வஸ்துக்களைப் போட்டு செய்ய வேண்டிய கிரியைகள் பூராவையும் செய்து முடித்துவிட்டு புது நூதனமாக தயார் செய்யப்பட்ட ஓர் இடத்திற்கு அந்தப் பசுவைக் கொண்டுபோய் பொதுவான சட்டப்படி அறுத்து அதன் ஈரலை எடுத்து ஓர் தட்டில் வைத்து 12 தேவதைகளின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே அந்தத் தட்டை நெருப்பில் வைத்து விடுகிறார்!

அதன் பிறகு வைக்கோல் புற்களை விரித்து கொஞ்சம் அரிசிப் பொத்தலையும் பசு மாமிசத்தையும் வைத்து ரூரோவுக்கு பூஜை செய்கின்றார்கள். பூர்வீக காலத்தில் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசுவின் எலும்பு, ஜவ்வு, தோல் இவைகளை நெருப்பில் போட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு வந்தது. அதற்குப் பிறகு வந்த சம்பீதா ரிஷியானவர் அவ்வாறு நெருப்பில் போடப்படும் வஸ்துக்களில் பொது ஜனங்களுக்குப் பிரயோஜனம் தரக்கூடியதான தோலை நெருப்பில் போடுவதற்கு பதிலாக செருப்பாக தைத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாமென பொதுவாக உத்தரவு செய்து விட்டார். அவ்வாறு ரூராவுக்கு பூஜை செய்ததன் பிறகு பிராமண பூசாரியானவர் இடது பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு நேராக எழுந்து நின்று ஏதோ சில மந்திரங்களைப் படித்துக்கொண்டே அறுக்கப்பட்ட பசுவின் இரத்தத்தை அவ்விடங்களிலிருக்கும் சாப்பங்களுக்கு சேர்க்கை செய்து விடுகிறார். இவ்வெல்லாக் கிரியைகளும் செய்து முடித்த பிறகு கடைசியாக (சுவிஸ்த்தாக்கிர்த்) என்ற ஒரு பூஜையும் செய்யப்படுகிறது. பிறகு அப்பசுவுடைய நெஞ்சு மாமிசத்தினின்றும் சுடுவதற்காகக் கொஞ்சம் மாமிசத்தை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அதன் பிறகு மீதியாயிருக்கும் அப்பசுவின் மாமிசத்தைப் பொதுவாக எல்லோரும் சாப்பிடலாமென்று சில சூத்திரங்கள் கூறுகின்றன. சில சூத்திரங்கள் அப்பசுவை குர்பானி செய்தவர்கள் மட்டும் சாப்பிடலாமெனக் கூறுகின்றன.

இவ்வாறு ஒரு மனிதன் குர்பானி செய்து விட்டால் அவனுக்கு வயது அதிகமாகிறதென்றும், செல்வந்தனாவானென்றும், நல்ல நிலைமையிலே இருப்பானென்றும், தன் மதத்தில் கௌரவமுடையவனாக இருப்பானென்றும், சந்ததிகள் அதிகமாகுமென்றும், கால் நடை மிருகங்கள் அவனுக்கு அதிகமாகு மென்றும், அவ் வேதத்தில் ஆசை காண்பிக்கப்பட்டிருக்கிறது. சகல தனவந்தர் களும் அவர்கள் வயதில் ஓர் விடுத்தமாவது இவ்வாறு குர்பானி செய்ய வேண்டியது முக்கியமென்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசு மாமிசம் எவ்வாறு சமைக்கப்பட்டதென்ற விஷயம் விரிவாகக் கூறப்படாதது மிகவும் வருந்தத்தக்கதே. சமைக்கப்படும் முறை விவரமாக கூறப்படாவிடினும் அறுக்கப்பட்ட பசுவின் நெஞ்சு மாமிசத்திலிருந்து சுடுவதற்காக மாமிசம் எடுப்பதே அவர்கள் சமைக்கும் முறையை நன்கு விளக்கிக் காட்டுகிறது.

பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை மார்ச்சு 1936
-குடியரசு

எங்கள் கிராமத்தில் மாட்டுக் கறியில் உப்புக் கண்டம் போடும் பழக்கம் இன்றும் இருக்கிறது. தமிழக முஸ்லிம்கள் இந்து மதத்திலிருந்து வந்தவர்கள் ஆதலால் பழைய பாரம்பரிய பழக்கம் தொடர்ந்து வருகிறதோ என்று நினைக்கிறேன். :-)

மாட்டுக் கறியை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தலித்களும், பிற்படுத்தப்பட்ட இந்துக்களும், முஸ்லிம்களும், கிருத்தவர்களும் தங்கள் புராதன இந்து மதத்தின் ஒரு கொள்கையை வழி வழியாக பின்பற்றி வருகிறார்கள் என்றே இதனை பார்க்க வேண்டியாதாயிருக்கிறது.

எனவே இந்து மதத்தின் பழைய கொள்கையான மாட்டுக் கறி படையலை மீண்டும் கொண்டு வந்து இந்து மதத்தின் பெருமையை நரேந்திர மோடி நிலை நாட்ட வேண்டும் என்பதே பெரும்பானமை இந்திய மக்களின் விருப்பமாக உள்ளது.

தலித் தலைவர் திருமா வளவனும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸூம் மாட்டுக் கறிக்கான தடையை வன்மையாக கண்டித்திருப்பதையும் இங்கு நாம் நினைவு கூறுகிறோம்.

Wednesday, August 27, 2014

தாழ்த்தப்பட்டவர்கள் உருவாக மொகலாயர்களே காரணமாம்!



//சுருங்கச் சொல்வதானால், இஸ்லாமிய ஆட்சியானது காடுகளுக்குள் ஒளிந்து வாழ்ந்த பல இந்துக்களை அவர்களின் சொந்த சாதியிலிருந்து விலகி இருக்கக் காரணமாகியதுடன், அவர்கள் ஒரு வேறொரு புதிய சாதியினரான, தாழ்த்தப்பட்ட ஒரு சாதியினராக ஆக்கியது. இஸ்லாமிய ஆட்சியினால் இறுகிய சாதி அமைப்பிற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.//

இந்துத்வா தளத்தில் வந்த ஒரு கட்டுரை. அடப்பாவிகளா! பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இல்லையா? இன்று நமது நாட்டில் சாதி வெறி ஓரளவு மட்டுப்படுத்தப் பட்டுள்ளதே 1000 ஆண்டு கால மொகலாயர் ஆட்சி என்பதை சரித்திரம் சொல்லுமே!

இந்த நாட்டில் சாதி எவ்வாறு வேரூன்றியது என்பதை இனி பார்போம்.

யஜூர் வேதம் பிறப்பினடிப்படையில் என்ன கூறுகிறது? .......

அத்தியாயம் 31 சுலோகம் 11 என்ன கூறுகிறது?
ஃப்ராஹ் மணோஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய க்ருத:1 ஊருததஸ்மா யத்வைஸ்ய பத்யாம் சூத்ரோ அஜாயத் - 11.
பிரம்மனின் முகத்திலிருந்து பிராம ணன் பிறந்தான்; தோள்களினின்றும் சத்திரியன் பிறந்தான்; துடைகளினின்றும் வைசியன் பிறந்தான்; பாதங்களினின்று சூத்திரன் பிறந்தான் என்பது இதன் பொருள்.

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.
1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்
3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்
4) விபச்சாரி மகன்
5) விலைக்கு வாங்கப்பட்டவன்
6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)

மனுதர்மம் அத்தியாயம் ஒன்று சுலோகம் 87
அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத் தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார்.

பிறப்பினடிப்படையில் மனிதனை பிரித்ததில் வேதம் ஸ்ருதி ஸ்ருமிதி,இதிகாசம் புராணம்,வரலாறு,நிகழ்கால நடைமுறை என அனைத்திலும் இருக்கும் போது இந்துமதத்தில் இல்லை என்பதும் இதற்கு மொகலாய மன்னர்களே காரணம் என்பதும் ஏமாற்று வேலை அல்லவா?

சூத்திரன் என்ற இனத்தை இந்த அளவு கேவலப்படுத்தினால் அவனை சமூகம் எந்த அளவில் வைத்திருக்கும் என்பது நாம் சொல்ல வேண்டியதில்லை. மொகலாயர்களின் ஆட்சியோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வந்தது. ஆனால் தாழ்த்தப்பட்ட இனம் உருவாகி 3000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இவ்வளவு துணிச்சலாக பொய் கூறுவதற்கும் அதனை ஒரு பொது தளத்தில் பிரசுரிப்பதற்கும் கொஞ்சம் கூட வெட்கப்படாதவர்கள் இந்த இந்துத்வாவினர்.

இனி தலித்கள் உருவாக மற்றொரு காரணத்தையும் பார்ப்போம்.....

தலித்களின் மூலமதமாகவும் பௌத்தம் இருந்தது. தலித்களின் தாழ்வு நிலைக்கு காரணம் பௌத்தம் சமயம்தான் (அதாவது பெளத்ததை பின்பற்றியதால் தலித்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள் ). அதே பௌத்தம் சமயம்தான் தலித் விடுதலைக்கும், அதிகாரம் பெறுவதற்கும் உறுதுணையாகவும் வழியாகவும் இருக்கவேண்டியுள்ளது. இந்திய பாரம்பரியம் பௌத்த மதமாக இருந்தது என்கிறார் அதனை தன் தமிழ் புலமை மூலம் விளக்குகிறார். இந்திய என்ற சொல் 'இந்திரம்' என்பதன் திரிபு. இந்திரனாகிய புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு 'இந்திரதேசம்' என்ற பெயர் வந்தது. ஆரியர் வாருகைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது அந்த தேசியத்தை பௌத்தம் உருவாக்கியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம், சமத்துவம்,அறக்கருதொற்றுமை மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அன்னியரான வெளியாரின் ஊடுருவால். படையெடுப்பால் கால்ப்போக்கில் அது மந்திர அல்லது மாயத்தன்மையென திரிக்கப்பட்டது என்று பண்டிதர் விளக்குகிறார். சொந்த நாட்டின் சாதியற்ற பண்பாட்டை அயல் சக்திகள், வெளியாட்கள் நசித்துதிரித்துவிட்டார்கள். பிறப்பால் ஏற்ப்படும் ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத்தை நோக்கி நடைபோடும் ஓர் அரசியல் கருத்தியலை உருவாக்கும் ஒரு தேசியத்தை கட்டமைக்க முயற்சிகிறார்.


சாதியின் தோற்றம்

சாதியின் தோற்றம் பற்றிய பல்வேறு கருதுகோள்கள் வேறுபட்ட அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதியின்மானிடவியல் கோட்பாடுகள்[1] என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. சாதியின் தோற்றம் குறித்து இந்த பகுதியில் இடம்பெறும் தகவல்கள் அந்த நூலையே அடிப்படையாக கொண்டவை. அதில் சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:
1. மரபுக் கோட்பாடு (traditional theory)
2. தொழிற் கோட்பாடு (occupational theory)
3. சமயக் கோட்பாடு (religious theory)
4. அரசியற் கோட்பாடு (political theory)
5. இனக் கோட்பாடு (racial theory)
6. படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)

மரபுக் கோட்பாடு

சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும். ரிக் வேதம், மனு தர்மம், பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது என குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன.

தொழிற் கோட்பாடு

சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தன என்பதுவே தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக ‘தூய்மை’ ‘தீட்டு’ வரையறை செய்யப்பட்டன.

பிறப்பு ரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர், தொழில் ரீதியிலான தமிழ் சமூக அமைப்பு இயல்பான என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.

சமயக் கோட்பாடு

சாதி முறைக்கு அடிப்படை சமயமே என்பது சமயக் கோட்பாடு. குறிப்பாக இந்து சமய சூழலே சாதி முறையை தோற்றுவித்தது.

அரசியற் கோட்பாடு

உயர் சாதியினர் தமது சலுகைகளை தக்கவைக்க ஏற்றவாறு அமைத்துகொண்ட அமைப்பே சாதி என்பது அரசியற் கோட்பாடு.
இனக் கோட்பாடு

ஆரியர்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. “குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாக திகழ்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டை காட்டத் தொடங்கினர்.”[2]

இந்திய சாதி அமைப்பு

இந்திய துணைக்கண்டத்தில் சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர் பிறப்படிப்படையில் மாற்றாம் பெற்றது. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு போக்குகளால் பிறப்படிப்படையில் சாதிகள் அடையாளம் கொண்டு இன்றளவும் நிலைப்பெற்றுள்ளன.

தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய் தொழில் அடிப்படையில் (பரம்பரைத்தொழில்) இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல; ஆனால், எப்பொழுது எவ்வப்பகுதிகளில், எத்தனை வலுப்பெற்று இருந்தது என்பது திண்ணமாய்த் தெரியவில்லை. சாதி வகுப்புமுறைமைகளும் படிமுறை அமைப்பும் இடத்துக்கிடம் வேறுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், முற்கால அரசரிடமும், பிற செல்வந்தர்களிடமும் இருந்த நெருக்கம், அணுக்கம் பற்றிய உறவாட்ட வேறுபாடுகளினாலும், சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மாறி வந்துள்ளன.
வடமொழியில் உள்ள மனு ஸ்ம்ரிதி ( மனுநீதி சாத்திரம் ) என்னும் நூலும் அவ்வரிசையில் உள்ள பிற வடமொழி நூல்களும், தமிழரிடையே சாதியின் அடிப்படையில் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் ஊட்டவும் வலியுறுத்தவும் துணை செய்தன. தமிழில் பிறப்பின் அடிப்படையில் படிமுறையில் ஏற்றத்தாழ்வுகள் கூறும் நூல்கள் யாதும் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆன காலப்பகுதியில் இருபதாகத் தெரியவில்லை.

http://tamilanmanian.wordpress.com/2013/10/22/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D


Tuesday, August 19, 2014

இந்திய கலாசாரத்தைப் பற்றி ஏ ஆர் ரஹ்மான்!



சென்னை: இந்தியர்கள் தங்கள் கலாச்சாரத்துக்கு தொடர்பே இல்லாமல் வெளிநாட்டு கலாச்சாரத்தைப் படமாக்குவது ஏன்? என்று ஏ ஆர் ரஹ்மானிடம் பிரபல ஈரான் இயக்குநர் மஜித் மஜிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதனை ரஹ்மானே நேற்று தெரிவித்தார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காவியத் தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.

விழாவில் படக்குழுவினருடன் ஏஆர் ரஹ்மானும் பங்கேற்றார். இறுதியாக ரஹ்மானைப் பேச அழைத்தனர். அவர் பேசியது முப்பது வினாடிகள்.. நான்கே வரிகள். அவரது பேச்சு: "நான் இதுவரை 3 தலைமுறைகளுக்கு இசையமைத்திருக்கிறேன். சில தினங்களுக்கு முன்பு ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்திடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அவர் என்னிடம், நான் உங்களுடைய படங்கள் எல்லாம் பார்த்து வருகிறேன். ஏன் உங்கள் கலாச்சாரத்தை விட்டுவிட்டு, வெஸ்டர்ன் கலாச்சாரத்தையே பின்பற்றி வருகிறீர்கள் என்றார். அவருக்கான பதிலாக இந்தப் படம் இருக்கும்."

(குறிப்பு: சாங் ஆப் ஸ்பேராஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களைத் தந்தவர் மஜித் மஜிதி. 'இந்தியாவில் ஏன் நடிகர்களுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்' என்று கேள்வி எழுப்பியவர்).

-பத்திரிக்கை செய்தி




இந்திய கலாசாரம் என்பது என்ன? மனிதனை நான்கு பிரிவுகளாக பிரித்து அவனது தொழிலுக்கு ஏற்ப அவனது தகுதியை நிர்ணயித்து மேல் சாதி கீழ் சாதி என்று பிரித்து வைத்துள்ள மனு நீதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய இன்று வரை இயக்கப்படுவதற்கு பெயர்தான் இந்திய கலாசாரம். ஆதி தமிழர்கள் ஏக இறைவனை வணங்கி வந்துள்ளதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆரிய படையெடுப்புகளால் தமிழன் தனது கலாசாரத்தை தொலைத்தான். பல தெய்வ வணக்கத்தில் வீழ்த்தப்பட்டான். இதற்கு உடன்படாத தமிழர்களை கழுவில் ஏற்றி கொன்றனர் இந்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆரியர்கள். மேலும் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் பல ஆண்டுகளாக போர் செய்து விவசாய நிலங்கள் கழனிகளையும் வெற்றிக் களிப்பால் அழித்தது நமது கலாசாரம்.

பெண்கள் தங்களின் மார்பை மறைத்துக் கொள்வதற்கு போராட்டம் நடத்தில் பார்பனர்களின் விடாப்பிடியால் முடிவில் கிறித்தவ மதத்தில் தங்களை ஐக்கியமாக்கிக் கொண்டது நமது கலாசாரம். கன்யாகுமரி சுற்று வட்டாரத்தில் நாடார்களிடம் இதனைக் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். 'முலை வரி' என்ற ஒன்றை போட்டு பெண்களின் மார்புக்கும் வரி வசூல் செய்தது நமது கலாசாரம்.

இன்று வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிரட்டையில் தேனீர் கொடுக்கும் பழக்கமும் தனிக் குவளை முறையும் உள்ளது. ஆதிக்க சாதியினர் உள்ள ஊர்களில் பள்ளிக்கு செல்லும் தாழ்த்தப்பட்ட சிறுவர் சிறுமியர் தங்கள் காலணிகளை கைகளில் எடுத்துச் செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது. இதுவும் கூட நமது கலாசாரம்தான்.

அடுத்து சாதி மாறி காதலித்த ஒரே குற்றத்திற்காக தருமபுரியில் இரண்டு கிராமங்களை முற்றாக அழித்து அதனை இன்று வரை நியாயம்தான் என்று பேசிக் கொண்டும் இருக்கிறோம். முடிவில் தாழ்த்தப்பட்ட அந்த இளைஞனை கொன்று அதனை தற்கொலையாக மாற்றியதும் நமது கலாசாரம்தான்.

காஞ்சிபுரம் கோவிலில் நடந்த பாலியல் அநியாயங்களை தட்டிக் கேட்ட கடவுள் பக்தர் சங்கரராமனை பட்டப் பகலில் கொலை செய்து, அதற்கு காரணமானவர்கள் இன்றும் மக்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருப்பதும் நமது கலாசாரம்தான்.

கந்து வட்டி, ரியல் எஸ்டேட், பெண் பிரச்னை, மாமூல் வசூலிப்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு அதனால் கொலையுண்ட பல இந்துத்வா நபர்களை நாம் அறிவோம். அவர்கள் இந்துத்வாவில் தொடர்பு உள்ளவர்கள் என்ற ஒரே காரணத்தினால் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வழக்கை முடித்துக் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லாமல் அதற்கு மத சாயம் பூசி அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை விசாரணைக் கைதிகளாக அடைத்து வைத்திருப்பதும் நமது கலாசாரம்தான்.

கணவன் இறந்தால் எரியுட்டப்படும் அந்த சிதையிலேயே இளம் பெண்களை 'சதி' என்ற பெயரில் சதி செய்து நெருப்பில் தள்ளுவதும் நமது கலசாரம்தான். அவ்வாறு தங்கள் உயிரை விட துணியாத பெண்களை கோரஷாக சப்தமிட்டு அந்த பெண்களை வலுக்கட்டாயமாக நெருப்பில் தள்ளி கொன்றதும் நமது கலாசாரம்தான்.

உலகிலேயே கற்பழிப்புகள் நடைபெற்று அந்த பெண்களை மரத்தில் தொங்க விடுவதும் நடப்பது நமது நாட்டில்தான். பெண் கொடுமைகள் நடப்பதில் உலகிலேயே முதலிடத்தை பெற்றவர்களும் நமது நாட்டவர்தான்.

இப்படியாக நமது கலாசாரத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மஜீத் மஜீதி அவர்கள் ஈரானில் அமர்ந்துள்ளதால் இந்த கலாசார புரட்சிகளெல்லாம் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் சிறு வயது முதலே இந்து கலாசாரத்தில் வளர்ந்து பழக்கப்பட்ட ரஹ்மானுக்கு இவை எல்லாம் தெரியாதா? நமது நாட்டோடு சென்று விட்ட இந்த கலாசார புரட்சியை உலகுக்கும் திரைப்படமாக எடுத்துப் போட்டு நமது மானத்தைக் கப்பலேற்ற வேண்டுமா? இந்திய கலாசாரங்களை ஒவ்வொன்றாக திரைப்படங்களாக எடுத்து அதனை மஜீது டைரக்ட் செய்து ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்தால் கண்டிப்பாக அது வெற்றி பெறும். பல ஆஸ்கார் விருதுகளையும் குவிக்கும். ஆனால் இந்தியர்களாகிய நாம் வெளி நாட்டுக்கு சென்றால் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டுதான் செல்ல வேண்டும். இந்த நிலை நமக்குத் தேவைதானா? என்பதை ரஹ்மான் சற்று யோசிப்பாராக!