இதுதான் இஸ்லாம் : நெஞ்சை நெகிழ வைத்த காணொளி....!!------------------------------------------------------சவூதி அரேபியா...
Posted by Nazeer Ahamed on Sunday, January 10, 2016
இதுதான் இஸ்லாம் : நெஞ்சை நெகிழ வைத்த காணொளி....!!
------------------------------------------------------
சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் பிரபல டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்தவர் தேவராஜன்,
ஜித்தாவிலிருந்து ரியாத்திற்கு லோடு ஏற்றி ஓட்டிக்கொண்டு வந்த லாரியை ஓரமாக ஒதுக்கி வைத்து தூங்கியுள்ளார். சொமாலியாவை சேர்ந்த சில திருடர்கள் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு சென்று விட்டனர்.
ரியாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவராஜனை நிறுவனத்தின் உரிமையாளர் விரைந்து வந்து காவல்துறையின் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலவரத்தை கூறிவிட்டு இரவு பகல் பாராமல் தேவராஜனுடன் இருந்து கூடப் பிறந்த சகோதரனைப் போல் சகோதர வாஞ்சையுடன் ஒவ்வொரு உதவிகளையும் செய்து வருகிறார்.
நெஞ்சை நெகிழ வைத்த காணொளி...
இந்த வீடியோவை அந்த உரிமையாளருக்கே தெரியாமல் அங்கிருந்தவர்கள் எடுத்துள்ளார்கள்.
வீடியோ உதவி : சாகுல் ஹமீது
நன்றி: டைம்ஸ் வீடியோ
-------------------------------------------------------
நபிகள் நாயகம் அவர்களுக்கு பணியாளராக இருந்த அனஸ் பின் மாலிக் அவர்கள் கீழ்வருமாறு கூறுகின்றார்கள்:
“நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடத்தில் பத்து வருடங்களாகப் பணிபுரிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் ஒருபோதும் எனக்கு "சீ" என்று கூறியதில்லை. இதனை ஏன் செய்தாய்? இதனைச் செய்யாதிருந்தால் என்ன? என்றாவது அவர் எனக்குச் சொன்னதில்லை. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மக்களுள் நற்குணமிக்கவராக இருந்தார்கள்.”
ஆதாரம்:முஸ்லிம்
----------------------------------------------------
ஒரு முறை ஒரு மனிதர் நபிகள் நாயகம் அவர்களிடம் வந்தார். தமக்கு ஏதாவது தருமாறு கேட்டார். இது கேட்ட நபிகள் நாயகம் அவர்கள் ‘உங்களுடைய வீட்டில் ஏதாவது இருக்கின்றதா” எனக் கேட்டார்கள்”. "ஒரு போர்வையும் ஒரு பாத்திரமும் இருப்பதாக"அவர் பதிலளித்தார். இவற்றைக் கொண்டு வருமாறு நபிகள் நாயகம் அவர்கள் பணித்தார்கள். இவ்விரு பொருள்களும் கொண்டு வரப்பட்டன. நபிகள் நாயகம் அவர்கள் அவற்றை ஏலத்தில் விற்றார்கள். அதற்கு இரண்டு திர்ஹம்கள் கிடைத்தன.
“இதில் ஒரு திர்ஹத்திற்கு உணவு வாங்கி குடும்பத்துக்கு கொடுக்குமாறும் அடுத்த திர்ஹத்துக்கு ஒரு கோடரி வாங்கி வாருங்கள்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். கோடரி வாங்கி வரப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட நபிகள் நாயகம் அவர்கள் அதற்கொரு பிடியைப் பொருத்தி இந்த மனிதரிடம் ஒப்படைத்தார்கள்.
“நீங்கள் விறகு வெட்டி விற்பனை செய்யுங்கள். பதினைந்து நாட்களுக்கு இந்தப் பக்கம் தலைகாட்டக் கூடாது” என்று கூறி அனுப்பி வைத்தார்கள். அவர் நபிகள் நாயகம் அவர்கள் கூறியபடி விறகு வெட்டி விற்பனை செய்து வந்தார். 15 நாட்களில் பின் நபிகள் நாயகம் அவர்களைச் சத்தித்து தனது வருமானத்தைப் பற்றிக் கூறித் திருப்தியடைந்து இதற்கு நன்றி கூறினார். அப்போது “ இறுதி நாளில் முகத்தில் கறுத்த குறிகளுடன் வருவதைவிட இத் தொழில் உமக்கு மிகவும் சிறந்ததாகும்” என்று நபிகள் நாயகம் அவர்கள் போதனை செய்து அவரை அனுப்பி வைத்தார்கள்.
ஆதாரம்:திர்மிதி
#தொழிலாளி #முதலாளி #இஸ்லாம்