Followers

Showing posts with label 'ஆம் ஆத்மி'. Show all posts
Showing posts with label 'ஆம் ஆத்மி'. Show all posts

Thursday, February 12, 2015

'ஜாடு' ஸே 'ஜாது' கராதியா! (துடைப்பத்தால் ஏற்பட்ட மாயாஜாலம்)



'ஜாடு' ஸே 'ஜாது' கராதியா! (துடைப்பத்தால் ஏற்பட்ட மாயாஜாலம்)

மக்கள் நரேந்திர மோடியின் மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். ஏனெனில் மோடி துடைப்பத்தை ரொம்பவும் விரும்பி அதன் மூலம் தெருக்களை பெருக்கி ஆங்காங்கே பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்தார். துடைப்பத்தின் மேல் இவருக்குள்ள மதிப்பையும் மரியாதையையும் பார்த்து மெர்ஸலான(பரவசமடைந்த) டெல்லி மக்கள் மோடி விரும்பிய துடைப்பத்தையே தேர்ந்தெடுத்துள்ளனர். துடைப்பத்தால் ஒரு மாயாஜாலத்தையே டெல்லி மக்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

அதாவது....

'ஜாடு ஸே ஜாது கராதியா' :-)

Tuesday, February 10, 2015

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில ஆலோசனைகள்!





அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில ஆலோசனைகள்!

டெல்லி மக்கள் இன்று மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளார்கள். இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இருந்து அனைத்து மொழி பேசக் கூடிய மக்களும் வாழும் இடம் டெல்லி. ஒட்டு மொத்த இந்திய மக்களின் எண்ண ஓட்டமாகவே உங்களின் வெற்றியை பார்கிறேன். இந்த நாட்டின் பிரதமராக வருவதற்குரிய அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது.

டெல்லி இமாமின் சந்தர்பவாத ஆதரவை வேண்டாம் என்று ஒதுக்கியதும் உங்களின் ஆழ்ந்த உண்மையான இந்து மத பற்றும் மேலும் உங்களின் மதிப்பை என்னுள் உயர்த்தியுள்ளது. நரேந்திர மோடியைப் போன்றோ, அமீத்ஷா வைப் பொன்றோ ஆட்சிக் கட்டிலில் அமருவதற்காக இந்து மதத்தை தூக்கிப் பிடிப்பவர் அல்ல நீங்கள். அதனை பல சந்தர்பங்களில் நான் பார்துள்ளேன். இன்று ஒட்டு மொத்த இந்தியாவும் இந்துத்வாவின் பிடியில் சிக்கியுள்ளது. அவர்களின் ஆர்பாட்டமான அரை கூவல்களை உங்களின் இந்த வெற்றியானது சற்றே மட்டுப் படுத்தும். ஆனால் முற்றாக அடங்காது.

முற்றாக அடங்க வேண்டுமானால் டெல்லியின் ஆட்சியை மற்ற மாநில மக்களும் உணரும்படி சிறப்பாக கொண்டு செல்லுங்கள். ஊழலை அகற்றி வறுமையையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் உங்களால் முடிந்த அளவு முற்றாக ஒழிக்கப் பாருங்கள். சாதி மத மோதல்களை கட்டுக்குள் வைத்திருங்கள். இது ஒரு புறம் இருக்க....

ஒரு இஸ்லாமியனாக எனக்குள் ஒரு ஆதங்கம் இருக்கிறது. அதனையும் தெரிவிக்கிறேன்.....

----------------------------------------------

சென்ற ஆண்டு குடும்பத்தோடு டெல்லி சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது டெல்லியில் இரண்டு நாள் தங்கியிருந்தேன். புது டெல்லிக்கும் பழைய டெல்லிக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளதை அங்கு கண்டு ஆச்சரியப்பட்டேன். இது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வாக என்னால் பார்க்க முடியவில்லை. காங்கிரஸூம் பிஜேபியும் திட்டமிட்டு கடந்த 60 ஆண்டுகளாக பழைய டெல்லியை புறக்கணித்து வந்துள்ளனர். எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாமல் பழைய டில்லி கட்டிடங்கள் ஒரு வித சோகத்தில் உள்ளதை என்னால் பார்க்க முடிந்தது. வாடகைக்கு ஒரு மினி வேனை எடுத்து சுற்றிப் பார்க்க தயாரானோம்.

"டெல்லி ஜூம்ஆ மசூதிக்கு வண்டியை விடு" என்று சொன்னவுடன் டிரைவர்

'ஐயோ அங்கேயா போறீங்க.... அது ரௌடிகள் வாழும் இடமாச்சே... பெண்களோடு வேறு போகிறீர்கள். வேண்டாம் சார்' என்று தடுத்தார்.

'என்னப்பா இப்படி சொல்றே... நான் டெல்லி வந்ததே ஜூம்ஆ மசூதியை பார்கத்தான். வண்டியை அங்கேயே விடு' என்றேன்.

அங்கு சென்று பார்தவுடன்தான் அந்த இடம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். மசூதியை சுற்றி சிதிலமடைந்த பழைய கட்டிடங்கள். போதை மருந்து சாப்பிட்டு விட்டு ஒரு வித மயக்கத்தோடு சுவரோரங்களில் சாய்ந்து கிடக்கும் சாமான்ய மக்கள். அழுக்கு படிந்த உடைகளோடு தலைகூட வாரப்படாமல் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் சிறுவர்கள் சிறுமிகள். நரகல் நடையில் பேசிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் பல பிளாட்பாரக் குடும்பங்கள். என்று நான் நினைத்ததற்கு முற்றிலும் மாற்றமான சூழலையே அங்கு கண்டேன். மசூதியைச் சுற்றி எங்கும் பிளாட்பாரக் கடைகள். அதில் பொருட்களை வாங்க கூட்டம் அலை மோதுகிறது. அந்த கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டு பிக் பாக்கெட் அடிக்க ஒரு கும்பலும் சுற்றிக் கொண்டிருக்கிறது. மெட்ரோ பணிகளுக்காக குழிகளை ஆங்காங்கே தோண்டி அவை சரி வர மூடப்படாமல் அந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் தேங்கி ஒரு விதமான நாற்றமும் வந்து கொண்டிருந்தது. இதை எல்லாம் தாண்டி மசூதிக்கு உள்ளே சென்றவுடன் ஒரு வித நிம்மதி கிடைத்தது. தாஜ்மஹாலை எவ்வளவு நேர்த்தியாக ஷாஜஹான் கட்டினாரோ அதே சிரத்தையோடு ஜூம்ஆ மசூதி கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. கை கால்களை சுத்தம் செய்து கொள்வதற்காக மிகப் பெரிய ஹவுள் (தண்ணீர் தொட்டி) மையத்தில் இருந்தது. கை கால்களை அலம்பிக் கொண்டு நானும் எனது குடும்பமும் அந்த பள்ளியில் மதிய நேர தொழுகையை நிறைவேற்றினோம்.

உலகப் புகழ் பெற்ற மசூதிகளில் ஒன்று இந்த ஜூம்ஆ பள்ளி. உலக அதிசயங்களில் ஒன்றாகவும் பலரால் போற்றப்படுகிறது. வெளி நாட்டிலிருந்தும் பல தலைவர்கள் பொது மக்கள் என்று தினமும் வந்து போகும் ஒரு இடத்தைப் பற்றியே இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அதே நேரம் புது டில்லியில் உள்ள ராஜ்காட்டையும் பார்தேன். மஹாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்று அனைத்து சமாதிகளும் மிக சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. சாலைகளும் மிகத் தூய்மையாக உள்ளது. வேறொரு நாட்டுக்கு வந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

ஏன் இந்த பாகுபாடு? பழைய டில்லியில் உள்ளவர்கள் அதிகம் முஸ்லிம்கள் என்பதாலா? அரசு நினைத்தால் ஜூம்ஆ மசூதி சுற்று வட்டாரத்தை ஒரு வாரத்தில் சரி செய்து விடலாம். ஆனால் அரசு கெட்டு குட்டிச்சுவராகட்டும் என்று வேண்டுமென்றே கண்டு கொள்ளாமல் விட்டுள்ளது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சமுதாயம் தலை நகரில் ஒதுக்கப்பட்டால் அது ஒட்டு மொத்த நாட்டுக்கும் பின்னடைவு தானே. இதன் பாதிப்பு புது டில்லியையும் பாதிக்கும் அல்லவா?

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது ஒட்டு மொத்த மக்களின் முன்னேற்றமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சமுதாயத்தினர் அனைத்து செல்வங்களையும் அனுபவிப்பதும் மற்ற சமுதாயம் அரசால் கண்டு கொள்ளாமல் ஒதுக்கப்படுவதும் ஒரு நாட்டுக்கு மிகப் பெரிய கேடு என்பதை நமது முந்தய ஆட்சியாளர்கள் உணரவில்லை. புதிதாக ஆட்சியில் அமரும் நீங்கள் அந்த குறையை நிவர்த்தி செய்து பழைய டில்லியை புது டில்லியாக மாற்றுவதை உங்களின் பிரதான குறிக்கோளாக கொள்ளுங்கள். இந்த வாய்பை சரியாக பயன்படுத்தினால் அடுத்த மூன்றாண்டுகளில் பிரதமராக அமரும் வாய்பையும் இந்திய மக்கள் தருவார்கள்.

சாதி மத பேதமற்ற சிறந்த ஆட்சியை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்திக்கிறேன்.

Monday, February 09, 2015

ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது! வாழ்த்துக்கள்.



பெரும்பான்மை இந்துக்களின் மன ஓட்டம் இந்துத்வாவுக்கு எதிராக உள்ளதையே டெல்லி தேர்தலின் முடிவுகள் காட்டுகின்றன. இனிமேலாவது வறுமையிலும் தீண்டாமையிலும் தினம் செத்து மடியும் பெரும்பான்மை இந்துக்களை அவர்களின் உரிமைகளை பெற்றுத் தர இந்துத்வா முயலட்டும். இதை விடுத்து இஸ்லாமியரிடத்தில் தொடர்ந்து மோதல் போக்கை கடை பிடித்தால் இந்துக்களே பிஜேபியை ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்புவார்கள்.

தனக்கு மிகப் பெரிய ஆதரவு இருக்கிறது என்று படம் காட்டி வந்த டெல்லி இமாமின் ஆதரவை 'வேண்டாம்' என்று திருப்பி முகத்திலடித்து இன்று அறுதி பெரும்பான்மை பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை வாழ்த்தி வரவேற்போம். இந்தியா முழுக்க இதன் தாக்கம் இனி வரும் தேர்தலிலும் ஒலிக்கட்டும். காவிகளின் கொட்டம் துடைப்பத்தால் அடக்கப்படட்டும்.

Friday, February 06, 2015

'100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே! எசமான்!'



'100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே! எசமான்!'

இந்தியாவில் மத சகிப்புத்தன்மை இல்லை: ஒபாமா கருத்து


இந்தியாவில் தற்போது மத சகிப்புத்தன்மை இல்லாததை காந்தியடிகள் காண நேர்ந்தால், அவர் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.

தன் இந்தியப் பயணம் குறித்து வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா இது தொடர்பாக பேசும்போது, "மகாத்மா காந்தி மீது இந்தியா வைத்திருக்கும் அதே நன்மதிப்பை அமெரிக்காவும் கொண்டுள்ளது.
மிக அற்புதமான, பன்முகத்தன்மை கொண்ட அழகான நாடாக இந்தியா உள்ளது. அங்கு பார்த்த ஒவ்வொரு கலாச்சாரத்தையும் கண்டு நானும் மிஷேலும் வியப்படைந்தோம்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மதக் கோட்பாடுகளும், அவர்களது கலாச்சார நிகழ்ச்சிகளும் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது. இந்தியாவில் பலதரப்பட்ட மத நம்பிக்கைகளால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சகிப்புதன்மையின்மையை இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தி கண்டிருந்தால் அதிர்ந்து போயிருப்பார்" என்றார் ஒபாமா.
இதனை அவர் எந்த ஒரு மதத்தினரையும் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இந்திய பயணத்தின்போது, பாஜகவை மனதில் வைத்து மத தீவிரவாதத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை புதன்கிழமை தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா மீண்டும் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்த ஒபாமா, தனது பயணத்தின் இறுதி நாளான ஜனவரி 27-ம் தேதி டெல்லியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, நாட்டின் வளர்ச்சிக்கு மத சகிப்புத்தன்மை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி இருந்தார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தப் பேச்சு துரதிர்ஷ்டவசமானவை என்று பாஜக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
06-02-2015

ஏற்கெனவே கருத்துக் கணிப்புகள் அதிக மெஜாரிட்டியுடன் 'ஆம் ஆத்மி' வெற்றி பெறும் என்று சொல்கின்றன. இன்று டெல்லியில் தேர்தல். தேர்தலுக்கு முதல் நாள் இரண்டாவது முறையாக இவ்வாறு ஒபாமா கருத்து சொல்லியிருப்பது பிஜேபிக்கு படித்தவர்கள் மத்தியில் மேலும் பின்னடைவையே ஏற்படுத்தும்.



Thursday, April 24, 2014

அரவிந்த் கெஜ்ரிவால் மகனுடன் ஒரு பேட்டி!



அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்ற சமயம் எடுத்த நேர் காணல்.

நிருபர்: அரவிந்த் கெஜ்ரிவால் மகன் கொல்கேத் நம்முடன் உள்ளார். உங்கள் தந்தை டெல்லி முதல் மந்திரி ஆனது பற்றி உங்கள் கருத்து?

கொல்கேத்: எனது தந்தை முதல் மந்திரி ஆனது மகிழ்ச்சியளிக்கிறது. சாமான்ய மக்களின் பிரச்னைகளை எனது தந்தை தீர்ப்பார் என்று நினைக்கிறேன்.

நிருபர்: உங்கள் தந்தை பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் நிறைவேற்றுவார் என்று நம்புகிறீர்களா?

கொல்கேத்: தன்னால் எது முடியுமோ அதனைத்தான் எனது தந்தை மக்களிடம் வாக்குறுதியாக கொடுத்துள்ளார். மின்சாரக் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பேன் என்று சொன்னது போகிற போக்கில் தெளித்து விட்டு சென்ற வார்த்தைகள் அல்ல. பல அறிஞர்களைக் கொண்டு ஆய்வுகள் பல செய்து இதனை தன்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன்தான் வாக்குறுதிகளை எனது தந்தை கொடுத்துள்ளார். தற்போதய அரசின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸின் ஆதரவும் தேவைப்படும். சில நாட்களுக்குப் பிறகு சன்னம் சன்னமாக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் எனது தந்தை.

நிருபர்: உங்கள் தந்தை முழு நேர அரசியல்வாதியாகி விட்டதால் குடும்பத்தவர்களோடு செலவிடும் நேரம் குறைந்து விடவில்லையா? இது உங்களுக்கு ஒரு இழப்புதானே?

கொல்கேத்: இந்த நாட்டு நலனுக்காக எனது தந்தை அதிக நேரத்தை செலவிடுவது எனக்கு பெருமையே! பலரும் என்னிடம் 'உனது தந்தை பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்' என்று என்னிடம் கூறும் போது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்களோடு தனது நேரத்தை செலவிட எனது தந்தை தயங்கியதில்லை. எனவே எனக்கு இது ஒரு பிரச்னையாகவும் இருக்கவில்லை.

நிருபர்: உங்கள் தந்தைக்கு விஐபி களுக்காக தனி மரியாதை செய்வது பிடித்தமில்லாதது. ஆனால் தற்போது உங்களை எல்லோரும் 'அரவிந்தின் மகன்' என்று பார்ப்பர். பள்ளிகளிலும் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கொல்கேத்: அப்படி எல்லாம் எதுவும் நிகழாது. பழைய நண்பர்கள் அனைவரும் பழைய மாதிரியே தற்போதும் என்னிடம் பழகுகின்றனர். ஒரு சிலர் விளையாட்டுக்காக 'முதல்வரின் மகன்' என்று நகைச்சுவையாக கூறுவர். என்னைப் பொருத்த வரையில் படாடோபம் இல்லாத சாதாரண வாழ்வையே விரும்புகிறேன்.

நிருபர்: குடும்பத்தோடு உங்களின் தந்தை இருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்வார். படிப்பு விஷயங்களில் ஆலோசனைகளும் வழங்குவாரா?

கொல்கேத்: படிப்பில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் அதனையும் தீர்த்து வைப்பார். ஆலோசனைகளாக அவர் சொல்வது 'எது செய்தாலும் அதில் உண்மை இருக்க வேண்டும். எந்த நிலையிலும் தவறான வழியை தேர்ந்தெடுத்து விடாதே! எந்த மனிதருக்கும் துன்பத்தைக் கொடுக்காதே! வாழ்வில் முன்னேற நன்கு முயற்சி எடு. ஆனால் உண்மை வழியிலிருந்து பிறழ்ந்து விடாதே' என்று அடிக்கடி எனக்கு சொல்லிக் கொண்டிருப்பார்.

நிருபர்: படித்து பெரிய ஆளாக ஆனவுடன் என்னவாக விருப்பம் உங்களுக்கு. உங்கள் தந்தையைப் போல் அரசியலில் நுழைவீர்களா?

கொல்கேத்: எனது அப்பா எனது வருங்காலத்தை தீர்மானிப்பார். இது வரை நான் எதுவும் யோசிக்கவில்லை. பெரியவனானதும் அவசியம் ஏற்பட்டால் அரசியலுக்கும் வருவேன்.

நிருபர்: இவ்வளவு நேரம் எங்களோடு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

கொல்கேத்: உங்களுக்கும் எனது நன்றி!

இந்த சிறு வயதில் என்னவொரு ஆணித்தரமான ஆழமான பதில்கள். தந்தை எவ்வழி மகனும் அவ்வழி. இந்த சிறுவனிடம் எந்த நேரமும் ரத்த வெறியுடன் அலையும் நரேந்திர மோடியையும், அமீத் ஷாவையும், பாபு பஜ்ரங்கியையும் மற்ற இந்துத்வாவினரையும் பாடம் படித்துக் கொள்ள அனுப்ப வேண்டும். இது போன்ற சிறுவர்களே இந்த நாட்டை நிர்மாணிக்கப் போகும் வருங்கால சிற்பிகள்!

Monday, April 07, 2014

வாரணாசியில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெருகி வரும் ஆதரவு!





வாரணாசியில் ஒரு உழைப்பாளி ஆம் ஆத்மி தொப்பியோடு உலா வரும் காட்சி! இது பணம் கொடுத்து வந்த உறவு அல்ல.

Thursday, April 03, 2014

அரவிந்த் கெஜ்ரிவாலின் மற்றுமொரு அழகிய பேட்டி!



"இங்கு இந்த சபையில் அமர்ந்திருக்கும் நாம் அனைவரும் சிறந்த வாழ்க்கை முறையை பெற்றுள்ளோம். ஆனால் இது மட்டுமே இந்தியா அல்ல. வெளியே உண்ண உணவின்றி உடுக்க உடை இன்றி கோடிக்கணக்கான இந்தியர்கள் தினமும் அல்லல் படுவதை நாம் பார்த்து வருகிறோம். அந்த மக்களையும் கை தூக்கி விட நம்மால் முயன்றது என்ன என்பதை சிந்திக்கும் வேளை நெருங்கி விட்டதாகவே நினைக்கிறேன்.

'நான் குஜராத் சென்று ராம ராஜ்ஜியம் எவ்வாறு மோடி தலைமையில் செயல்படுகிறது என்று பார்க்க போனேன். ஆனால் என்னால் நம்ப முடியாத பல கொடுமைகளை அந்த மக்கள் அனுபவிப்பதை பார்க்க முடிந்தது. சாதாரண அரசு உத்தியோகம் பெற 10 லட்சம் ரூபாய் லஞ்சம்: அஸிஸடன்ட் கிளார்க் உத்தியோகத்திற்கு 35 லட்சம்: காவல் துறையில் வேலை மற்றும் பணி மாற்றத்துக்கு 3 கோடி ரூபாய் லஞ்சம்: தொழில் தொடங்க லைசென்ஸூக்கு லஞ்சம்: எஃப்ஐஆர் போடவும் லஞ்சம்: பிபிஎல் கார்ட் வாங்கவும் லஞ்சம் என்று எங்கும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

நரேந்திர மோடியின் அமைச்சர் பாபுலால் லஞ்சத்தில் பிடி பட்டு 3 வருடம் சிறைத் தண்டனை பெற்று தற்போது பிணையில் வந்துள்ளார். மற்றொரு மந்திரி ஷோலங்கி 450 கோடி ரூபாய் ஊழலில் பிடிபட்டு தற்போது கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். மாயா கோட்னானி சிறை தண்டனை அனுபவித்து வருவதும் உங்களுக்கும் தெரியும்.

குஜராத் கிராமத்தில் ஒரு விவசாயி தனது நிலம் ஏழரை ஏக்கர் அரசு குண்டர்களால் மிரட்டப்பட்டு கையகப்படுத்தப்பட்டு அதற்கு இன்று வரை ஒரு இழப்பீடும் கொடுக்கவில்லை என்றார். கேட்டால் ரோட்டை அகலப்படுத்தப் பொகிறோம் என்று சொன்னார்களாம். இவ்வாறு பிடுங்கப்பட்ட பல ஆயிரம் விவசாயிகளின் பல லட்சம் பெறுமானமுள்ள இந்த நிலங்கள் அதானிக்கும், அம்பானிக்கும், டாடாவுக்கும் ஸ்கொயர் மீட்டர் 2 ரூபாய், ஐந்து ரூபாய், 10 ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நான்கு லட்சம் விவசாயிகளின் வீடுகளுக்கு இது வரை மின்சார இணைப்பே கிடையாது. இது தான் ராமராஜ்யமா?

2002 கலவரத்துக்குப் பிறகு குஜராத்தில் இந்து முஸ்லிம் கலவரமே கிடையாது என்ற பொய்யை மோடி சொல்கிறார். ஆனால் இன்று வரை அங்கு 2002க்கு பிறகு 12 கலவரங்கள் நடந்துள்ளது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. முஸ்லிம்களை காங்கிரஸூம், இந்துக்களை பிஜேபியும் நன்றாகவே ஏமாற்றி வருகின்றன.

சிறு தொழில்கள் அனைத்தும் மோடி ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளன. அனைத்தும் டாடா, அம்பானியின் கைகளுக்கு சென்று விட்டது. ராபர்ட் வதேராவின் ஊழலை பிஜேபி கண்டு கொள்ளாது, அதே போல் அம்பானியின் உறவினர் மோடி அமைச்சரவையில் உள்ளார். அவர் பண்ணும் ஊழல்களை காங்கிரஸ் கண்டு கொள்ளாது. இரண்டு ஊழல்களையும் வெளிக் கொண்டு வந்தது ஆம் ஆத்மி பார்ட்டி.

குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட கிராமத்துக்கு அன்றைய வாஜ்பாய் அரசு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மருத்துவ மனை கட்டிக் கொடுத்தது. ஆனால் மோடி அரசு இது நாள் வரை அதனை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு இன்று அதனை அதானிக்கு அடி மாட்டு விலைக்கு கொடுத்துள்ளது. இதுதான் ராமராஜ்யமா?

பெண் பார்வையாளர் கேள்வி: மோடியின் மீது வரிசையாக குற்றச்சாட்டு வைக்கிறீர்களே? ஆனால் மூன்று முறை அந்த மக்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளார்களே? அது எப்படி?

அரவிந்த் கெஜ்ரிவால்: இதே கேள்விதான் எனக்குள்ளும் இருந்தது. அந்த மாநிலத்தில் பல மக்களிடம் கேட்ட கருத்துகளில் அதற்கான விடை கிடைத்தது.

முதலில் காங்கிரஸ் அங்கு மிக பலகீனமாகி விட்டது. பிஜேபியை விட காங்கிரஸை அந்த மக்கள் வெறுக்கின்றனர். அடுத்து காங்கிரஸின் பெரும் தலைவர்களை மிரட்டியோ, அல்லது பணத்தைக் கொண்டோ பிஜேபியில் இணைத்து விடுகின்றனர். எதுவும் முடியாத பட்சத்தில் முக்கிய புள்ளிகளை என்கவுண்டர் பண்ணி வேலையை சுளூவாக முடித்து விடுகின்றன. சரியான எதிர்கட்சி இல்லாத போது மோடியை அந்த மக்கள் எவ்வாறு எதிர்க்க முடியும். இது தான் மோடி திரும்பவும் முதல்வரான சூட்சுமம். ஆனால் இந்த முறை அது பலிக்காது.


http://www.youtube.com/watch?v=PtRUwZgmERU

Monday, March 17, 2014

நேற்று பெங்களூரில் கெஜ்ரிவாலுக்கு கூடிய கூட்டம்!



நேற்று பெங்களூரில் நடந்த கெஜ்ரிவாலின் கூட்டத்துக்கு திரண்ட மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி!



நம்ம மோடி அண்ணாச்சிக்கு வட மாநிலங்களில் உள்ள ஆதரவு எத்தகையது என்பதை இந்த கூட்டத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். :-)

Tuesday, March 11, 2014

பாரத் மாதா கீ ஜே!



டெல்லி ஜந்தர் மந்தரில் பெண்கள் தினத்திற்காக ஆம் ஆத்மி பார்ட்டி ஒரு கூட்டத்தை நடத்தியது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது உடன் அவருக்கு பின்னிருந்து வந்த 38 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் 'பாரத் மாதா கீ ஜே! பாரத் மாதா கீ ஜே!' என்று கோஷத்தை எழுப்பியவாறு யோகேந்திர யாதவ்வின் முகத்தில் கரியை பூச ஆரம்பித்தார். இதனை எவரும் எதிர் பார்க்கவில்லை. அருகில் இருந்த ஆம் ஆதிமி தொண்டர்கள் உடன் அவனை பிடித்து பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத யோகேந்திர யாதவ் பிறகு சுதாரித்துக் கொண்டார்.

ஆம் ஆத்மி வழக்கமாக அணியும் தொப்பியை அணிந்து கொண்டு யாரும் சந்தேகப்படாத அளவு முன்னேறி தனது காரியத்தை இந்த இளைஞன் செய்து முடித்துள்ளான். அவன் தனது செயலை செய்யும் போது 'பாரத் மாதா கீ ஜே' என்று கூப்பாடு போடுவதையும் பார்க்கிறோம்.

பாரத் மாதா யார்? இவருக்கு என்ன உருவம்? இவரால் இந்த நாட்டுக்கு என்ன நன்மை? ஒன்றும் இல்லை. பிஜேபியும் இந்துத்வாவும் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒரு கற்பனை பாத்திரம் தான் இந்த 'பாரத் மாதா'.

பிறந்த தாய் நாட்டை மதிக்க வேண்டும்: பிறந்த தாய் நாடு முன்னேற நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்: இதில் மாற்றுக் கருத்து இல்லை. இது ஒவ்வொரு குடிமகனுக்கும் இயற்கையாகவே வரக் கூடிய உணர்வு. ஆனால் 'பாரத் மாதா' என்ற போலியான ஒரு பிம்பத்தை உண்டாக்கி அதன் மூலம் தனது ஓட்டு அறுவடை செய்ய முனையும் பிஜேபியின் கீழ்தரமான அரசியல் விளையாட்டைத்தான் நாம் இங்கு கண்டிக்கிறோம்.

குஜராத்தில் நடந்த கலவரமாகட்டும், வேறு எந்த இடங்களிலும் இந்துத்வாவினர் தங்களின் வன்முறையை நிகழ்த்த கையில் எடுக்கும் ஆயுதம்தான் இந்த 'பாரத் மாதா'. ஆம் ஆத்மி வைக்கும் கேள்விகளுக்கு எந்த பதிலும் பிஜேபியிடம் இல்லை. மோடி அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து ஓட்டமெடுக்கிறார். கடந்த இரண்டு மாதங்களில் ஒட்டு மொத்த இந்தியாவில் அரவிந்த் கெஜ்ரிவாலின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அதே சமயம் நரேந்திர மோடியின் செல்வாக்கு அதே அளவு கீழிறங்கி உள்ளதாகவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. குஜராத்தில் கெஜ்ரிவாலுக்கு கூடும் கூட்டம் மோடியின் பிரதமர் கனவை ஏறத்தாழ களைத்து விட்டது என்றே கூறலாம்.

Wednesday, March 05, 2014

நரேந்திர மோடியின் சுயரூபம் வெளி வந்தது!



நேற்று குஜராத்தில் நடந்த வன்முறையை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆம் ஆத்மி தொண்டர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. எந்த காரணமும் இன்றி அரவிந்த் கெஜ்ரிவாலின் பயணம் நிறுத்தப்பட்டது. ஆம் ஆத்மி, பிஜேபி இரு கட்சி ஆட்களும் தற்போது மோதலில் உள்ளனர்.



மோடிக்கு உண்மையிலேயே பயம் வந்து விட்டது. ஏனெனில் உண்மையில் குஜராத்தில் முன்னேற்றம் என்பது மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகச் சொற்பமே! இது வரை ஊடகங்களுக்கு கோடிக் கணக்கில் பணம் கொடுத்து மோடி என்ற நச்சுக் கிருமியை பூதாகரமாக்கிக் காட்டினர். கெஜ்ரிவால் என்ன முன்னேற்றம் என்பதை நான் பார்க்கப் போகிறேன் என்று சொன்னதும் மோடிக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. கண்டிப்பாக உண்மைகளை கெஜ்ரிவால் வெளிக் கொண்டு வந்து விடுவார் என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும்.

எனவே தனது கட்சி குண்டர்களை விட்டு கெஜ்ரிவாலின் காரின் கண்ணாடிகளை உடைத்து பல ஆம் ஆத்மி தொண்டர்களை வன்முறையாக தாக்கியும் உள்ளனர். இந்த தாக்குதல் டெல்லி வரை சென்றுள்ளது என்றால் இவர்களின் நெட்வொர்க் எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். தனது மாநிலத்தை சுற்றிப் பார்க்க வரும் ஒரு அரசியல் தலைவரையே அனுமதிக்க முடியாத துர்பாக்கிய நிலையில் தற்போது மோடி உள்ளார். இவர் கையில் இந்த நாட்டை கொடுக்க துடிக்கும் மேல் சாதி பார்பனர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு தனது குஜராத் பயணம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளதாகவும், தாம் எதிர்பார்த்ததை விட குஜராத்தின் நிலை மிக மோசமாக இருப்பதாகவும் பத்திரிக்கையாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியுள்ளார். "சமி மருத்துவமனை மிகப் பெரிய ஒன்று. அங்கு நான் பார்வையிட சென்றேன். நான் எங்கெல்லாம் செல்கிறோனோ அத்தனை இடங்களையும் செல் போனில் ஒரு அதிகாரி மேலிடத்துக்கு தகவல் சொல்லிக் கொண்டே இருந்தார். மருத்துவமனை சுகாதாரமற்று 31 பெட்களோடு எந்த நோயாளிகளும் இல்லாமல் இரண்டு டாக்டர்களை கொண்டு மட்டும் நடத்தப்டுகிறது. சுகாதாரம் மோசமாக அந்த பகுதியில் இருந்ததை பார்வையிட்டேன். திடீரென்று போலீஸார் அங்கிருந்து அகன்று விட்டனர். இதற்கு மேல் எனக்கு அவர்கள் அனுமதி தர முடியாது என்று தடுத்தனர். தாக்குதலும் ஆரம்பமானது. இதை நான் விடப் போவதில்லை. 25 இடங்களில் ஆத் ஆத்மி தொண்டர் படை குஜராத் முழுக்க ஆய்வுகளை மேற் கொள்கின்றனர். உண்மையை மக்கள் மன்றத்தில் நாங்கள் கொண்டு வந்தே தீருவோம்" என்றும் சொல்லியிருப்பது அரசியல் நோக்கர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

குஜராத் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தேர்தலில் பாஜகவின் 'ABVP' சங்கத்துக்கும் காங்கிரஸ் கட்சியின் 'NSUI' மாணவர் அமைப்புக்குமிடையில் 10 இடங்களில் நடந்த தேர்தலில் 6 இடங்களில் ABVP படுதோல்வி அடைந்து விட்டது. நான்கு இடங்களில் மட்டுமே பிஜேபி வெற்றி பெற்று மற்ற ஆறில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியானது பாராளுமன்ற தேர்தலிலும் கண்டிப்பாக எதிரொலிக்கும் என்கின்றனர் நோக்கர்கள். இது மற்றொரு பெரும் பின்னடைவை மோடிக்கு ஏற்படுத்தியுள்ளது.

"கற்களால் அடி வாங்கினாலும், லத்திகளால் தாக்கப் பட்டாலும், இந்த போராட்டத்தில் நமது உயிரே போனாலும் எதற்கும் கவலைப்படாத தன்னலமற்ற தொண்டர்கள் மட்டும் என்னோடு வாருங்கள்." என்று குஜராத்தை ஆய்வு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். மோடி மிக பயங்கரமான கிரிமினல். அமீத்ஷாவின் யோசனையில் எதையும் செய்யத் துணியலாம். எனவே அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் பாதுகாப்போடு இருக்க வேண்டியது அவசியம்.

நாடு முழுக்க நூறு எம்பி சீட்டுகளையாவது ஆம் ஆத்மி கைப்பற்ற வேண்டும் என்பது எனது ஆசை. தமிழகத்தில் ஐந்து சீட்டுகளாவது இவர்களுக்கு கிடைக்க வேண்டும். ஆளும் காங்கிரஸூம், அதிமுகவும் தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வில்லையாதலால் தவ்ஹீத் ஜமாத் ஆம் ஆத்மியை ஆதரிக்க முன் வரலாம் என்பது எனது விருப்பம். நரேந்திர மோடி இந்த நாட்டின் சாபக்கேடு என்றால் அது மிகையில்லை. மோடி என்ற இந்த தீய சக்தியின் கடைசி அரசியல் அத்தியாயமாக இந்த தேர்தல் அமைய வேண்டும். பிறபடுத்தப்பட்ட மக்களும், தலித்களும், சிறுபான்மையினரும், கம்யூனிஸ்டுகளும் ஒரு அணியில் நின்று பொது எதிரி நரேந்திர மோடியை வீழ்த்த வேண்டும். நமது நாடு அமைதி பூங்காவாக தொடர இதனை நாம் அவசியம் செய்தே ஆக வெண்டும்.

Wednesday, December 11, 2013

'ஆம் ஆத்மி' - அரவிந்த் கெஜ்ரிவால்!



சிறந்த பேட்டி! மிகச் சிறந்த அரசியல் தலைவராக எனக்கு தெரிகிறார். டெல்லியைப் பொருத்த வரை போன முறை பெற்ற ஓட்டை விட பிஜேபி குறைவாக பெற்றுள்ளதை சுட்டிக் காட்டி மோடி அலை என்ற ஒன்று இல்லை என்பதை அநாயசமாக விவரிக்கிறார். காங்கிரஸ், பிஜேபி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதையும் குறிப்பிட தயங்கவில்லை. வரும் நாடாளுமன்றத் தேரிதலில் மோடிக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறப் போகிறார். இவர் ஆட்சியைப் பிடிக்கா விட்டாலும் பிஜேபி மத்தியில் ஆட்சியில் அமருவதை கணிசமாக தடுப்பார். இதனால் காங்கிரஸ் திரும்பவும் மத்தியில் ஆட்சி அமைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

"முஸ்லிம்களுக்கு காங்கிரஸான எங்களை விட்டால் வேறு போக்கிடம் இல்லை" என்று இறுமாந்திருந்த காங்கிரஸையும் தற்போது கெஜ்ரிவாலின் வெற்றி ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸூக்கு காலாகாலமாக ஓட்டளித்துளித்து வந்த முஸ்லிம்களின் ஓட்டை கணிசமாக கெஜ்ரிவால் பெற வாய்ப்புண்டு. தேர்தல் நெருங்கும் போதுதான் மேலும் நிலவரம் துல்லியமாகத் தெரியும். அதுவரை பொறுப்போம்.