Followers

Showing posts with label சுகாதாரம். Show all posts
Showing posts with label சுகாதாரம். Show all posts

Thursday, May 14, 2015

அகோரிகள் என்றால் யார்? - சென்னி மலை

அகோரிகள் என்றால் யார்? - சென்னி மலை

//இஸ்லாமிய குடியிருப்பு சுத்தமாக இருக்குனு உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா???!
வந்தவாசி கோட்டை எப்படி இருக்குன்னு தெரியுமா???? //

இஸ்லாமிய குடியிருப்புகளுக்கு அரசு உதவி முறையாக சென்று சேராததும் ஒரு காரணம்.

மற்றபடி இந்தியாவை பொருத்த வரை இந்து , முஸ்லிம், கிருத்தவர்கள் என்று எல்லா குடியிருப்புகளும் அசுத்தமாகத்தான் உள்ளன. ஆனால் கங்கையின் அசுத்தம் என்பது புனிதம் என்ற பெயரில் நாமாக வரவழைத்துக் கொள்வது. அதற்கு மாற்று ஏற்பாடு இருக்கும் போது அதனை செயல்படுத்துவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? இதற்காக மக்களின் வரிப் பணம் 20000 கோடி செலவழிப்பதால் எந்த பலனும் இல்லை என்று ஆய்வாளர்கள் சொன்ன பின்பும் ஏன் இந்த முயற்சி? முதலில் கங்கை அசுத்தமாவதற்கு காரணங்களை கண்டு பிடித்து அதனை நிறுத்தி விட்டல்லவா தூய்மைப் பணியை தொடங்க வேண்டும்?

//அகோரிகள் அப்படினா யார்????
எந்த அகேரியேட ஆசிரமத்து வீடியோவாவது உங்களிடம் இருக்கா????//

https://www.youtube.com/watch?v=g9YepUqlR44

https://www.youtube.com/watch?v=wl4O2dg3txQ

https://www.youtube.com/watch?v=T2RhDq7-_Ec

https://www.youtube.com/watch?v=Qf3NLel3Tl4

https://www.youtube.com/watch?v=IqSelBNHRqU

சன் டிவியில் வந்த 'காசியின் மறுமுகம்' என்ற இந்த ஐந்து தொடரையும் தமிழில் பார்த்து விட்டு இந்த அகோரிகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள். இவர்களின் பின்னால் இந்து இளைஞர்கள் சென்றால் அவர்களின் வாழ்வு 'நான் கடவுள்' படத்தில் உள்ள ஆர்யாவின் வாழ்வு போல்தான் மாறிப் போகும். இந்து மறுமலர்ச்சி என்று இதைத்தான் சொல்கிறீர்களா?

//செத்த பிணத்தை தின்பதாக சொல்லும் நீங்க உயிரோட மனுசனை அறுத்து தின்னும் காட்டுமிராட்டிகளை பற்றி ஏன் பதிவு போடவில்லை, //

ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம், அல்சபாப் போன்ற தீவிரவாத குழுக்கள் செய்யும் எந்த செயலும் இஸ்லாம் கூறும் செயல் அல்ல. அவர்களைப் பற்றி கடுமையாக விமரிசித்து பல பதிவுகள் முன்பு எழுதியுள்ளேன்.அப்பாவிகளை பெண்களை சிறுவர்களை மத குருமார்களை போர்களில் கூட கொல்லக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிட அதற்கு மாற்றமாக நடக்கும் இந்த தீவிரவாதிகள் இஸ்லாமியர்களா? மனிதனை வெட்டி அவனது கறியை சாப்பிட்டு அதனை வீடியோவாக்கி வெளியிடும் இவர்கள் இஸ்லாமியர்களா? கண்டிப்பாக இல்லை. உலக அளவில் இஸ்லாமிய வளர்ச்சியை தடுக்க அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய அரசுகளால் உருவாக்கப்பட்ட கூலிப் படைகள் இவர்கள்.

வெளி நாடுகளுக்கு ஏன் போகிறீர்கள்? உங்களோடு அண்ணன் தம்பிகளாக பழகி வரும் தமிழக இஸ்லாமியரிகளிடம் இது பொன்ற தீவிரவாத எண்ணம் கொஞ்சமாவது இருக்கிறதா? ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் யார் என்பது விளங்கும்.

//கங்கை மூலமாக லச்சம் கோடிகணக்கில் சம்பாதிக்கும் அரசு ஏன் சில ஆயிரம் கோடிகள் அதை சுத்தம் செய்ய உபயோகிக்க கூடாது???? //

தாராளமாக செய்யட்டும். 'நோய் முதல் நாடி' என்ற சொல்லுக்கேற்ப கங்கை அசுத்தமாவதற்கான காரணத்தை முதலில் சரி செய்து விட்டு பிறகு தூய்மைப் பணியை துவங்கட்டும் என்பதுதான் எனது வாதம்.

Monday, May 11, 2015

நடைபாதையில் சிறு நீர் கழிப்பதை தடுக்க.....




நமது பக்கத்து நாடான பங்களாதேஷில் ஒரு முக்கியமான மார்க்கெட் பகுதியின் சுவற்றில் சிறு நீர் கழிப்பதை வழக்கமாக சிலர் கொண்டிருந்தனர். மார்க்கெட் நிர்வாகம் பல முறை எச்சரிக்கை போர்டுகளை வைத்தும் ஒரு பலனுமில்லை. இது போன்ற பிரச்னை பல இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தும் ஒரு பயனும் ஏற்படவில்லை. அப்போது மத விவகாரங்களைக் கவனித்து வரும் ஒரு அதிகாரி சிறந்த யோசனை ஒன்றை சொன்னார். அதாவது 'இங்கு சிறுநீர் கழிப்பது தடை செய்யப்பட்டள்ளது' என்ற வாசகத்தை அந்த சுவற்றில் அரபி மொழியில் எழுதி வைத்து விடுவது என்ற யோசனையே அது.

உலகின் பெரும்பாலான முஸ்லிம்கள் குர்ஆன் அரபி மொழியில் இறங்கியதால் அந்த மொழிக்கு தன்னையறியாமல் ஒரு மரியாதையை கொடுப்பர்.(ஆனால் இஸ்லாமிய பார்வையில் தேவ மொழி என்று ஒன்று இல்லை. உலக மொழிகள் அனைத்தையும் இறைவனே படைத்ததாக குர்ஆன் கூறுகிறது) இதனை விளங்கிய அதிகாரி இவ்வாறு வாசகங்களை மக்கள் சிறுநீர் கழிக்கும் இடங்களில் எழுதி வைத்து விடச் சொன்னார். அன்வர் ஹீசைன் என்ற அரசு அதிகாரி இது பற்றி கூறும் போது 'அரபு மொழியில் எழுதி வைத்தவுடன் அது சிறந்த பலனை எங்களுக்குக் கொடுத்தது. அந்த இடங்கள் தற்போது மிகவும் தூய்மையாக உள்ளன. பல நாட்களாக எங்களுக்கு இருந்த பிரச்னையும் தீர்ந்தது' என்கிறார். :-)

நம் நாட்டில் பெரும் பஸ் நிறுத்தங்களில் நுழையும் போதே மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் நுழைகிறோம். குளிர் சாதனங்களோடு அமைந்த நிழற்குடைகளை வைக்கும் அரசாங்கம் சிறந்த கழிப்பிடங்களை கட்டி வைப்பதில்லை. சிறுநீர் கழிக்கும் இடங்களில் தண்ணீர் ஊற்றுவதற்கான வசதிகளையும் செய்து தருவதில்லை. அந்த இடங்கள் உப்பு படிந்து பார்க்கவே அறுவறுப்பாக உள்ளது. நாற்றமும் சகிக்கவில்லை. ஆண்களாவது பரவாயில்லை. பெண்கள் பாடு இன்னும் திண்டாட்டம். சிலர் சுத்தம் கருதி வெளியூர் சென்றால் கழிவறைகளை உபயோகிக்காமல் வீட்டில் வந்தே தங்களின் இயற்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

தற்போது பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தனது சிறுநீரை சேமித்து செடிகளுக்கு ஊற்றி சிறந்த விளைச்சலை பெற்றதாக கூறியுள்ளார். எனவே அரசு இது போன்ற சிறுநீர்கள் வீணாகாமல் சேமித்து வைக்க ஒரு அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். அல்லது பங்களாதேஷைப் போன்று மக்கள் புனிதமாகக் கருதுபவர்களின் படங்களை பொது இடங்களில் வைத்து விட்டால் பொது இடங்களில் சிறு நீர் கழிப்பதாவது குறையும்.

தகவல் உதவி
சவுதிகெஜட்
07-04-2015

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20150507242953

Thursday, January 01, 2015

சூரிய குளியல் புற்று நோயை வரவழைக்கும்! ஆஸ்திரேலியாவில் தடை!



ஆஸ்திரேலியே கடற்கரைகளில் சூரிய குளியல் படுக்கைகளில் படுத்துக்கொண்டு நிறத்தை கறுக்க செய்யும் முறைக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது.

புத்தாண்டு முதல் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மானியா, குயின்ஸ்லாந்து, சிட்னி ஆகிய கடற்கரைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் அதிகம் ஈர்க்கப்பட்டு வந்த செயற்கை சூரிய குளியல் படுக்கைகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த தடையை ஆஸ்திரேலிய புற்றுநோய் ஆணையம் வரவேற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் 70 வயதை கடந்த 3-ல் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கபடுகின்றனர். இதனால் சூரிய குளியல் படுக்கைகளுக்கு தடை விதிப்பதன் மூலம் தோல் புற்றுநோயை தடுக்க முடியும் என்று அந்த ஆணையம் ஆஸ்திரேலிய அரசுக்கு அறிவுறுத்தி வந்தது.

இது குறித்து ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் அந்த ஆணையத்தின் இயக்குனர் பால் க்ரோகன் கூறுகையில், "சூரிய குளியல் முறையால் புற ஊதாகதிர்களின் தாக்கம் அதிகமாக உடலில் பாய்கிறது. இதனால் மெலனோமா அளவு அதிகரித்து தோல் புற்றுநோய் உள்ளிட்ட பல அபாயமான நோய்கள் ஏற்படுகிறது.

கனடா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளை விட ஆஸ்திரேலியாவில் புற்றுநோய் அபாயம் அதிகமாக உள்ளது எங்கள் அரசை கவலையடைய செய்துள்ளது" என்றார்.

கடந்த 2011-ல் ஆஸ்திரேலியாவில் 2000-த்துக்கும் அதிகமானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த இறப்பு அனைத்துக்குமே மெலனோமா அளவு அதிகரித்ததே காரணமாக கண்டறியப்பட்டது. இதற்கு அந்த நாட்டின் தட்பவெப்ப நிலையும் காரணமாக உள்ளது.

இதனால் அந்த அரசு பொதுமக்கள் அனைவரும் சன்ஸ்க்ரீன், தொப்பிகள் மற்றும் கருப்பு கண்ணாடிகளை அணிய அறிவுறித்தி வருகிறது. அதோடு அந்த நாட்டில் மிகப் பெரிய பொருளாதார வரவேற்பை பெற்ற சூரிய குளியல் படுக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
31-12-2014

பொது இடங்களில் பெண்கள் மேலாடை எதுவும் இன்றி வெட்கமில்லாமல் சூரிய குளியல் நடத்தும் இந்த முறைக்கு தடை விதித்ததை வரவேற்போம். புற்று நோய் வருவதையும் இதன் மூலம் தடுக்கலாம்.

யோகா என்ற பெயரில் சூரிய நமஸ்காரம் செய்யும் நம் ஊர் பழக்கத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தி அதன் தீமையை உணர வைக்க வேண்டும். யோகாவில் சொல்லப்படும் மற்ற பயிற்சிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரலாம். ஆனால் சூரிய வணக்கத்தை அதில் சேர்க்க முடியாது. பல பள்ளிகளில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சூரிய நமஸ்காரத்தால் கண் பார்வையில் பலருக்கு பிரச்னையை உண்டு பண்ணியுள்ளது. உடல் ஆரோக்கியத்தை பெறுகிறேன் என்று உடலுக்கு தீங்கை வரவழைக்கும் சூரிய குளியல், சூரிய நமஸ்காரம் போன்றவற்றை அரசுகள் கவனத்தில் எடுத்து மக்களின் அறியாமையை போக்க முன் வர வேண்டும்.

Thursday, September 19, 2013

குல்சும் அப்துல்லாஹ் - பாராட்டப்பட வேண்டியவர்.

குல்சும் அப்துல்லாஹ் - பாராட்டப்பட வேண்டியவர்.



பெண்கள் விளையாட்டு என்றாலே அது உடை குறைப்பாகத்தான் இருக்கும். அங்கு குழுமும் கூட்டமும் விளையாட்டை பார்க்க வராது. அந்த பெண்களின் அங்கங்களை ஆராய்வதற்கே வரும். ஆண்கள் போட்டிகளை விட பெண்கள் அரை குறை ஆடைகளோடு கலந்து கொள்ளும் போட்டிகளில் நமது ஆண் மக்கள் அரங்கு நிரம்பி வழிவதும் அதற்குத்தான்.



35 வயதான குல்சும் அப்துல்லா அமெரிக்க குடியுரிமை பெற்ற பாகிஸ்தானிய பெண். கம்யூட்டர் என்ஜினியரிங்கில் பிஎச்டி பண்ணியுள்ளார். சர்வதேச பளு தூக்கும் போட்டியில் பெண்கள் இவ்வாறுதான் அரை குறை ஆடை அணிய வேண்டும் என்ற நியதி உள்ளது. ஆனால் இவர் மேலதிகாரிகளோடு வாதிட்டு 'இஸ்லாமிய உடை, பளு தூக்கும் என்னைப் போன்ற பெண்களுக்கு எந்த சிரமத்தையும் கொடுப்பதில்லை. நான் இஸ்லாமிய உடைகளோடு மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்வேன்' என்று கூறி முடிவில் வெற்றியும் பெற்றுள்ளார். அதிகாரிகள் தற்போது போட்டியின் விதி முறைகளை திருத்தி இஸ்லாமிய உடை அணிந்தும் பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்று மாற்றியுள்ளனர்.

தற்போது இந்த உடையில் இந்த பெண்ணை நாம் பார்க்கும் போது நம்மையறியாமல் மரியாதை வருகிறது. போராடினால் எந்த மாற்றத்தையும் கொண்டு வரலாம் என்பதற்கு இந்த பெண் முன்னுதாரணமாக உள்ளார். வாழ்த்துக்கள் சகோதரி...

இதே போல் ஈரானிய பெண்கள் முழு ஆடையோடு விளையாட வந்ததற்காக ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம். இனி வரும் காலத்தில் இதை முன்னுதாரணமாகக் கொண்டு அனைத்து போட்டிகளிலும் பெண்கள் தங்கள் உடலை மறைத்து கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட வேண்டும். இதை ஆரம்பித்து வைத்த அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டிக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

பெண்கள் புர்கா அணிந்து வெளியில் வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண முடியாது என்று சொல்பவர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் குல்சும் அப்துல்லா.

Thursday, April 11, 2013

போலியோ ஒழிப்புக்கு 30 மில்லியன் டாலர்!

போலியோ ஒழிப்புக்கு 30 மில்லியன் டாலர்!



'வலீத் பின் தலால் அறக்கட்டளையின்' தலைவர் இளவரசர் வலீத் பின் தலால் உலக மக்களிடமிருந்து போலியோவை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட தனது பங்காக 30 மில்லியன் டாலரை நன்கொடையாக தர முன் வந்துள்ளார். இந்த நல்ல முயற்சியை மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸோடு இணைந்து செயல்படுத்த இளவரசர் முன் வந்துள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் இளவரசர் வலீத் பின் தலாலும், பில்கேட்ஸூம் கையெழுத்திட்டனர்.

'முன்னேற்றத்தைக் கொண்டாடுவோம்: உயிர்களைக் காப்போம்' என்ற உறுதி மொழியோடு இந்த அமைப்பானது வரும் ஏப்ரல் 24 ந்தேதி அபுதாபியில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. ஐநா செயலாளர் பான்கிமூனும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்கிறார். இந்த கருத்தரங்கில் உலக தலைவர்கள், நன்கொடையாளர்கள் என்று பலரும் கலந்து கொள்கின்றனர். 2013 லிருந்து 2018 க்குள் உலகில் போலியோவை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது இம்மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று.

நம் நாட்டு அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான டாலர்கள் சுவிஸ் வங்கியில் எவருக்கும் பயனளிக்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறது. கொள்ளையடித்த அந்த பணங்களை எல்லாம் இது போன்ற நல்ல காரியத்துக்கு பயன்படுத்தினால் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாவது கிடைக்கும். பெரிதாக ஒன்றும் செய்து விட வேண்டாம. இந்திய மக்கள் அனைவருக்கும் கழிவறை இல்லாத வீடுகளுக்கு இலவசமாக கழிவறை கட்டிக் கொடுத்தாலே போதுமானது. என்னங்க....நான் சொல்றது சரிதானே!

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் கடுமையாகப் பரவும் ஒரு நோயாகவே போலியோ இருக்கிறது. நம் நாட்டிலும் சுகாதார குறைபாடுகளினால் இந்நோய் பரவும் அபாயம் அதிகமாகவே உள்ளது. அத்துடன் போலியோ ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட சில நாடுகளிலும் அது மீண்டும் பரவியுள்ளது.போர் காரணமாகவும், தொற்று நோய் தடுப்பு மருந்துகள் மீது போதுமான நம்பிக்கை இல்லாமை காரணமாகவும் சில நாடுகளில் மிகச் சிறிய அளவிலான குழந்தைகளுக்கு மாத்திரமே போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.போலியோவை ஒழிப்பதற்கான உலக முயற்சி தோல்வியடையுமானால், அந்த நோய் மீண்டும் உலக அளவில் பரவும் நிலை உருவாகும்.எனவே போலியோ பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் அனைத்து நாடுகளும், தமது நாட்டு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



போலியோ பாதிப்புக்குள்ளான சிறுவர்கள்: சிறுமியர்:கழிவறை கட்டுவதை விட செல் போன்களை வாங்குவதில்தான் நமது மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்று நமது மத்திய மந்திரியே வருத்தப்படும் அளவுக்குத்தான் நமது நாட்டின் நிலைமை இருக்கிறது. செல் போன்களை பிறகு வாங்கிக் கொள்வோம்: முதலில் ஒவ்வொரு வீட்டுக்கும் சுகாதாரமான கழிவறை வசதிகளை ஏற்படுத்தி விட்டு பிறகு வித விதமான செல்போன்களால் நமது பேச்சுக்களை தொடர்வோம். :-)
-------------------------------------------

போலியோ (இளம்பிள்ளை வாதம்)

போலியோ நோய்தொற்று முழு உடலையும் பாதிக்கக்கூடியது. ஆனாலும் இந்நோய் எப்போதும் நரம்புகள் மற்றும் தசைகளை பாதிக்கிறது.

காரணங்கள்

வைரஸ் நோய் தொற்றினால் போலியோ ஏற்படுகிறது மனிதனின் மலம் மற்றும் கழிவுகளில் போலியோ வைரஸ் காணப்படும். இவ்வைரஸினால் மாசுபட்ட உணவுகளை உட்கொள்ளும் போது போலியோ பரவுகிறது. மனித மலம் கழிவுகள் மூலம் மாசுபட்ட குடிதண்ணீர் அல்லது கிணறு/குளங்கள்/ஏரிகள் போன்றவற்றில் நீரில் நீந்தும் போதோ, குளிக்கும் போதோ அல்லது குடிக்கும் போதோ போலியோ வளர்ந்த பிள்ளைகள் மற்றும் வாலிபர்களைகளிடம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான நேரங்களில், இவ்வகை வைரஸ் மலத்திலிருந்து வாய் வழியாகவே ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது.

இவ்வகை வைரஸ் மூக்கு அல்லது வாய் வழியாக நுழைந்து, பின்னர் குடல் பகுதியை சென்றடைகிறது. குடல் செல்களில் எண்ணிக்கையில் பெருக்கம் அடைகின்றது. பின்னர் இவ்வைரஸ்கள் மலத்தின் மூலம் வெளியேற்றப்படுகிறது (சில வாரங்களில்). இவ்வாறு வாழ்க்கை சுழற்சியை புதுப்பித்து, முழு சமுதாயத்திற்கும் ஆபத்தினை விளைவிக்கிறது.

டாக்டர் பெஞ்சமின் சாண்ட்லர் என்பவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். இவர் போலியோ நோய் பற்றி பல ஆய்வுகள் செய்தார். 1951 இல் இவர் தன்னுடைய ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். அதில் போலியோ நோயை தூண்டுவதற்கு கீழ்க்காணும் மூன்று முக்கிய காரணங்களை கூறுகிறார்.

1. தட்ப வெப்பம்: வெயில் காலத்தில்தான் போலியோ நோய் பரவுகிறது. அதிக அளவில் சர்க்கரை உட்கொள்வதாலும் போலியோ தடுப்பு மருந்து கொடுத்த பின்பும் போலியோ நோய் அதிகம் பரவுகிறது. வெயில்காலத்தில் நீச்சல் குளத்தில் நீர் குளிர்ந்திருப்பதும் குழந்தைகளை குளிர்ந்த புல் தரையில் அமர வைப்பதும் கூட போலியோ நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கான காரணங்களாகும்.

2. உடற்பயிற்சி: அளவான அல்லது தீவிரமான உடற்பயிற்சி.

3. தாகம் : குளிர்பானங்கள் பருகுவது, ஐஸ்க்ரீம் மற்றும் இனிப்பு பானங்கள் பருகுவது, சர்க்கரை அளவு குறைவதால் உடல் திசுக்களில் ஏற்படும் மாற்றம்.

சர்க்கரையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்ட நாடுகளில் எல்லாம் போலியோ நோய் பரவி வந்தபோது சர்க்கரையை மிகவும் குறைந்த அளவில் சேர்த்துக்கொண்ட நாடுகளில் இந்நோய்த் தொற்று சுத்தமாக இல்லாதிருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு உணவில் சர்க்கரையை அதிகமாகச் சேர்த்துக் கொண்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு நோய்த்தொற்றும் அதிகமாக இருந்தது என்கிறார் டாக்டர் சாண்ட்லர்.

அமெரிக்காவில் போலியோ நோய்த்தடுப்பு நடவடிக்கையாக போலியோ தடுப்பு மருந்து பரவலாக கொடுக்கப்பட்டதன் விளைவாக போலியோ நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உயர்ந்தது. 1954இல் 273 ஆக இருந்த எண்ணிக்கை தடுப்பு மருந்து கொடுத்ததன் விளைவாக 1955இல் 2027 ஆக உயர்ந்தது. அதாவது 642 சதவீதம் உயர்ந்தது. தி பெடரல் சென்டர்பார் டிஸ்ஸீஸ் கண்ட்ரோல் என்னும் அமைப்பு அமெரிக்காவில் இன்று போலியோ நோய்த்தொற்று இருப்பதற்கான முக்கிய காரணம் உயிருள்ள போலியோ நோய்க்கிருமிகளை நோய்த் தடுப்பு மருந்தாக பயன்படுத்தியதுதான் என்று கூறுகிறது. 1973ஆம் ஆண்டிற்கும் 1983ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் போலியோவினால் பாதிக்கப்பட்டவர்களில் 87 சதவீதம் பேர்கள் போலியோ தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்கள். மிகவும் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு போலியோவினால் தாக்கப்பட்ட அனைவருமே (இரண்டு பேர்களைத் தவிர) தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்கள்தான். (ஆதாரம் : ஹோமியோபதி லின்க்ஸ் -பிப்ரவரி 2003).

மேற்கண்ட ஆதாரபூர்வமான விஷயங்களை கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும்.

நம் நாட்டில் போலியோ நோய்த்தடுப்பு நடவடிக்கையாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஒரே நாளில் நாடு முழுவதும் கொடுக்கப்பட்டு வருகிறது. போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதால் போலியோ நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை விரைவில் கண்டறியவேண்டும். வாய்ப்புள்ளது என்பது உறுதி செய்யப்பட்டால் போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும்.

மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் “உணவில் சர்க்கரையின் அளவை வெகுவாக குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் வைட்டமின் ‘சி’ மிகுந்த உணவை தினமும் தவறாது எடுத்துக் கொள்ளவேண்டும்” என்பதையும் வானொலி மற்றும் தொலைக்காட்சியின் வாயிலாக பிரச்சாரம் செய்யவேண்டும்.

- நன்றி : அப்ரோச் ஹோமியோ நண்பன் - அக்-2003


போலியோ பரவ மேலும் சில காரணங்கள்:

சிறுபிள்ளைகளுக்கு போலியோ ஏற்படும் அதிக ஆபத்து உள்ளது. கழிவறைகளில் மலம் கழிக்கும் பழக்கம் கற்றறியாத பிள்ளைகளை குறிப்பாக பாதிக்கிறது. போலியோ தடுப்பு ஊசி எடுத்துக் கொள்ளாத பெரியவர்கள். இந்நோய் கண்ட நபரின் மலத்தின் மேல் மொய்க்கும் ஈக்கள் உண்ணும் உணவின் மேல் உட்கார்ந்து உணவை மாசுபடச் செய்யும் சூழல் உள்ள பகுதிகள். இந்நோய்க் கிருமியுள்ள குடிதண்ணீர் (கழிவு நீர் தேங்கியுள்ள பகுதிக்கு அருகாமையில்). எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைந்து காணப்படும் போது. சுகாதாரமாக நமது சுற்றுப்புறத்தை வைத்துக் கொண்டாலே ஓரளவு இந்நோயைக் கட்டுப்படுத்தி விடலாம.

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'



Friday, November 23, 2012

எனது முதல் காவல் நிலைய அனுபவம்!


எனது முதல் காவல் நிலைய அனுபவம்!

போன வருடம் எங்கள் ஊர் காவல் நிலையத்துக்கு போகும் ஒரு அவசிய தேவை ஏற்பட்டது. எஸஐ யிடமிருந்து பையன் படிப்பின் ஆவணங்கள் சம்பந்தமாக ஒரு கையெழுத்து வாங்க வேண்டும். எனவே இது வரை காவல் நிலையத்துக்கு செல்லாத நான் முதன் முதலாக காவல் நிலையத்துக்குள் பிரவேசித்தேன். முன்னால் அமர்ந்திருந்த எழுத்தரிடம் 'எஸ்ஐ எப்பொழுது வருவார்?' என்று கேட்டேன். 'இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவார்' என்று சொன்னார். அதுவரை நேரம் போக வேண்டுமே? எனவே காவல் நிலையத்துக்கு வெளியே மர நிழலில் உள்ள பெஞ்சில் சற்று அமர்ந்தேன். பக்கத்தில் இந்த பக்கம் ஒரு 15 பேர். அந்த பக்கம் ஒரு 10 பேர் கும்பலாக நின்று காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசியல் கட்சிகள் சம்பந்தமாக ஏதும் தகராறோ என்று நினைத்தேன். என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று நானும் எனது காதை கூர்மையாக்கி கேட்கத் தொடங்கினேன்.

'மாப்ள...நீ ஒன்னும் கவலைப்படாதே! இன்னைக்கி ரெண்ட்ல ஒன்னு பார்த்திடுவம்'

'என்ன தைரியம்யா அவனுக்கு...கடை பூந்து அடிக்கிறான்யா..'

'இப்படியே உட்டோம்னா நாம சேலை கட்டிக்க வேண்டியதுதான்'

அதற்குள் இரு சக்கர வாகனமான புல்லட்டில் முரட்டு மீசை தடியான உடம்போடு ஒரு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த கும்பலில் வந்து இறங்கினார். இவர்கள் கிராமத்தின் நாட்டாமை என்பது பேச்சிலேயே தெரிந்தது.

'ராமையா! என்னய்யா ஆச்சு. என் வேலை எல்லாம் போட்டுட்டு இப்போ வந்திருக்கேன்.'

'ஐயா.. வாங்க...நம்ம வெத்தல பொட்டி மகன் சுப்ரமணியன தெரியுங்களா?'

'ஆமாம்..குடிச்சு புட்டு உருண்டு கெடப்பானே அவனா'

'அவனேதாங்க ஐயா! நேத்து சாயங்காலம் நம்ம மருதமுத்து சாராய கடையில போய் சாராயம் கேட்டுருக்கான். ஏற்கெனவே 200 ரூபா அவன் பாக்கி தரணுமாம். பழைய பாக்கியை கொடுத்தா சாராயம் தர்றேன்டு சொல்லியிருக்கான். இதுல தகராறு முத்திபோயி மருதமுத்துவை நல்லா அடிச்சுட்டான். அடிச்ச அடியில நிறைய ரத்தமும் வந்துடுச்சு. அதான் அவன்மேல் மருத முத்து கேஸ் குடுத்துருக்கான். இன்ஸ்பெக்டர் வர்றதுக்காக காத்துகிட்டு இருக்கோம்.'

'இந்த அடிதடி சமாசாரத்தை எல்லாம் ஏன்யா ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு வர்றீங்க. நம்ம கிராமத்துலேயே பேசி முடிச்சிருக்குலாம்ல...சரி சரி...எஸ்ஐ வந்தவுடன் கேஸை வாபஸ் வாங்கிட்டு ஊர் வந்து சேருங்க எங்கே சுப்ரமணியன்?'

'சுப்ரமணி! ஐயா கூப்புட்றாருல.....'

'ஐயா...சொல்லுங்க!'

'ஏலேய்! எண்டா இப்படி ஊர் பேரை கெடுத்துகிட்டு அலையிறீங்க...அடிச்ச அடியிலே செத்து கித்து தொலைஞ்சிறுந்தான்னா வாழ்க்கை பூரா கம்பி எண்ணனும் தெரியுமல...'

'ஏதோ தெரியாம நடந்து போச்சுங்கண்ணா! இனிமே கவனமா இருக்குறேன்'

ஊர் நாடடாமை கொஞ்சம் விரைப்போடு மருத முத்துவிடமும் பேசி விட்டு இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து கிளம்பினார். இது போன்ற வசனங்களை எல்லாம் சினிமாவில் பார்த்த எனக்கு இப்படி ஒரு அருமையான நேரிடையான காட்சியை காணும் வாய்ப்பும் கிட்டியது. இரு தரப்பும் நாட்டாமை போன வுடன் திரும்பவும் இரு பிரிவாக பிரிந்து பல ரகசியங்களை பேசிக் கொண்டிருந்தனர். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சற்று களைப்பு ஏற்பட அருகில் இருக்கும் தேனீர் கடையில் ஒரு டீயை வாங்கி குடித்து விட்டு எஸ்ஐயின் வரவுக்காக நானும் காத்திருந்தேன்.

தட தட என்ற சத்தத்தோடு புல்லட் காவல் நிலையத்தின் உள்ளே புகுந்தது. எஸஐ வந்து விட்டார். வந்தவர் நேரே தனது அறைக்கு சென்று விட்டார். தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டே நானும் உள்ளே நுழைந்தேன். எழுத்தர் என்னை முதலில் உள்ளே போகச் சொன்னார். எஸஐ அறையில் நுழைந்தேன். நுழைந்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். நான் எதிர்பார்த்தது வீரப்பனை யொத்த மீசையோடு வயிறு சரிந்து முரட்டு சுபாவத்தோடு கூடிய ஒரு எஸ்ஐயை. ஆனால் அங்கு அமர்ந்திருந்ததோ 30 வயது மதிக்கத்தக்க ஒரு அழகிய பெண். அந்த பெண்ணின் முகத்துக்கும் அந்த உடைக்கும் கொஞ்சமும் ஒட்ட வில்லை. 'உனக்கு ஏம்மா இந்த வேண்டாத வேலை' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு 'குட்மார்னிங் மேடம்' என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தேன்.

'வாங்க! உட்காருங்க! என்ன விஷயம்' என்று கேட்கவும் நான் கொண்டு வந்த பேப்பர்களை கொடுத்தேன். படித்துக் கொண்டு இருந்தவர் வெளியில் ஏகமாக சத்தம் வரவே 'அங்கே என்னய்யா சத்தம்?' என்று எஸ்ஐ கேட்டார்.

'அடி தடி கேசும்மா! கிராமமே திரண்டு வந்துருக்கானுங்க'

'இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை. வரச் சொல்லு எல்லாரையும்'

எழுத்தர் போய் 'அம்மா கூப்பிடுராங்க! எல்லாரும் வாங்கய்யா?' என்றார். சொன்னவுடன் திபு திபு வென்று 10 பேர் உள்ளே நுழைந்தனர். ஏற்கெனவே அது சின்ன அறை. முழு அறையும் ஓரளவு நிரம்பி விட்டது.

'என்னய்யா தகராறு?' அதிகார தொனியில் எஸ்ஐயின் குரலிலும் ஒரு மாற்றம் தென்பட்டது. அதில் உள்ள ஒரு வயதானவர் 'அம்மா! சுப்ரமணிங்கற பய குடி போதையில மருதமுத்துங்கறவன அடிச்சுட்டாங்க. மருத முத்து கேஸ் குடுத்துருக்கான. அதான் ஐயா இன்னைக்கி வந்து உங்களை பார்க்க சொன்னாரு'

'அடி தடி கேசு. உங்க ஊர்ல ஏன்யா இப்படி தினமும் ஏதாவது ஒரு கேஸை கொண்டு வர்றீங்க...உருப்புட்ற ஐடியா ஏதும் இல்லையா' என்று சொல்லிக் கொண்டேமூக்கைப் பொத்திக் கொண்டார்.

'ம்...ஹூம்....சாராய நெடி. யார்யா சாராயம் குடிச்சிறுக்கிறது. தண்ணி அடிச்சுட்டு ஸ்டேஷனுக்கே வர்றீங்களோ! தண்ணி அடிச்சவனை முதல்ல வெளியில அனுப்பு' என்றார் சற்று கோபத்தோடு. அந்த கும்பலில் இருந்து இரண்டு பேர் தாங்களாகவே வெளியேறினர்.

பையனின் பேப்பர்களை பார்த்தவர் 'இப்போ இந்த சாராய கேசால கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். நீங்க நாளைக்கு காலையில வாங்க பாய்! ரெடி பண்ணி தர்றேன்' என்றார். பேப்பர்களை பார்த்து நான் முஸ்லிம் என்பதை உணர்ந்து கொண்டார்.

'ஓகே மேடம்! அப்போ நான் வர்றேன்'!

'வாங்க'

அடி தடி கும்பலிடம் விசாரணை ஆரம்பமானது. அவர்களில் எவரையுமே அந்த மேடம் உட்கார சொல்லவில்லை. அவரை விட வயதில் மூத்தவர்களையும் அந்தம்மா ஒருமையிலேயே பேசியது எனக்கு என்னவோ போல் இருந்தது. இந்த உழைக்கும் மக்களை அரசு அதிகாரிகள் ஏன் இவ்வாறு நடத்துகிறார்கள். என்னிடம் மிகவும் பணிவோடும் மரியாதையோடும் பேசிய அந்த எஸ்ஐ இவர்களிடம் ஏன் தனது பேசும் தொனியையே மாற்றிக் கொள்கிறார்.

அந்த மக்களும் அழுக்கு படிந்த உடை. செருப்பில்லாத கால். வெத்தலை சுண்ணாம்பால் காவி ஏறிய உதடுகள் சாராய நெடி என்று தங்களை மாற்றிக் கொள்ளாமலேயே இன்னும் இருக்கிறார்கள். இது எதிர் தரப்பார்களை மிக அலட்சியமாகவும் அருவருப்பாகவும் பார்க்க வைக்கத் தூண்டுகிறது. இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் தங்களின் பெருமை மற்றும் உரிமைகளை அறியாது குடியிலும் கூத்திலும் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்களே என்று வருத்தமோடு எனது ஊரை நோக்கி பயணப்பட்டேன்.

Monday, November 19, 2012

கொசுவைப் பற்றி இன்று விரிவாக பார்ப்போமா?

கொசுவைப் பற்றி இன்று விரிவாக பார்ப்போமா?


பதிவர் திரு நம்பள்கி அவர்கள் போன பதிவில்

//எதை சொன்னாலும், மதத்துடன் சம்பந்தப் படுத்துகிறீர்கள்; சரி! கொசுவைப பற்றி எழுதி மதத்துடன் சமபந்தப் படுத்தி எழுதுங்கள் பார்க்கலாம் ...!//

என்று சலிப்போடு கேட்டிருந்தார். அவருக்காகவே இந்த பதிவை தருகிறேன்.

அன்றைய சிலையை வணங்கிக் கொண்டிருந்த அரபுகளை நோக்கி இறைவன் கூறுகிறான்

'மனிதர்களே! உங்களுக்கு ஒரு உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவி தாழ்த்தி கேளுங்கள். ஏக இறைவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.'
-குர்ஆன் 22:73


மற்றோர் இடத்தில்....

'ஏக இறைவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பலஹீனமானது. அதை அவர்கள் அறியக் கூடாதா?'
-குர்ஆன் 29:41


இவ்வாறு இரண்டு இடங்களில் பல தெய்வ வணக்கம் புரிவோரைப் பார்த்து இறைவன் கேட்கிறான். இதனால் கோபமடைந்த அரபிகள் முகமது நபியிடம் கிண்டலாக 'உதாரணத்துக்கு உங்கள் இறைவனுக்கு வேறு உயிரினங்கள் கிடைக்கவில்லையா? அற்பமான ஈயையும் சிலந்திப் பூச்சியையும் உதாரணமாகக் காட்டுகிறானே?' என்றனர்.

இவர்களின் கிண்டலுக்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாக இறைவன் கீழ் கண்ட வசனத்தை இறக்குகிறான்.

'கொசுவையோ அதை விட அற்பமானதையோ உதாரணமாக கூற இறைவன் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் 'இது தமது இறைவனிடம் இருந்து வந்த உண்மை' என்பதை அறிந்து கொள்கின்றனர்.'

-குர்ஆன் 2:26


அதாவது மனிதர்கள் நேர் வழி பெறுவதற்காக எந்த அற்ப உயிரினங்களையும் உதாரணமாகக் கூற இறைவன் தயங்க மாட்டான் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. மனிதர்கள் அற்பமாக நினைக்கும் இந்த கொசுவை இறைவன் எவ்வளவு நேர்த்தியாக படைத்துள்ளான் என்பதை இனி பார்ப்போம்.






1. அது பெண்கொசு. 2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள். 3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள். 5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள் 7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படி பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.

அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான். நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு உயிரினத்தையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவோ அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை இறைவனே நன்கறிந்தவன்.





இதில் நூறு கண்கள் இருக்கமுடியுமா? என்ற ஐயம் நம்மில் எழலாம். அதற்கு விடையாக, படம்-1 கொசுவின் முகத் தோற்றத்தின் ஒரு பகுதியையும், படம்-2 . A. முகத் தோற்றத்தையும், B அதன் நுண்ணிய கண்களையும், C அதைப் பெரிது படுத்திக் காட்டிய கண்களையும் படத்தில் காணலாம். இறைவனே யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.வல்லமையுள்ளவன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

---------------------------------------------------------

கொசுக்களை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச் சுருள், மேட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவகை ஒவ்வாமை ஏற்பட்டு, நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய்விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை, அப்போது பிறந்த, அல்லது பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தை தொடர்ந்து சுவாசித்தால் அதற்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. மும்பையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கொசு விரட்டிகளில் உள்ள `டையாக்சின்', புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது, `அலெத்ரின்', மனிதர் களின் எடையை குறையைச் செய்யக்கூடியது என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வேறு வழியில்லாமல்தான் கொசுவிரட்டிகளை நாடுகிறோம். வேறு என்னதான் வழி என்கிறீர்களா? சுற்றுப்புறத்தைத் தூய்மையாக, தண்ணீர் தேங்காமல் வைத்துக்கொள்ளுங்கள். கொசு வலையையும் பயன்படுத்தலாம்.

http://harunyahya.com/en/works/3043/the-miracle-in-the-mosquito/chapter/161

http://www.answering-christianity.com/mosquitoes_miracle.htm

http://miracleinthemosquito.com/3.htm

http://kaheel7.com/eng/index.php/gods-creations/340--mosquitos-head

http://www.islamicbulletin.org/newsletters/issue_20/science.aspx

http://doesgodexist.multiply.com/journal/item/122?&show_interstitial=1&u=%2Fjournal%2Fitem

Saturday, October 20, 2012

மீன்களையும் விட்டு வைக்கவில்லை என்டோசல்ஃபான்!

மீன்களையும் விட்டு வைக்கவில்லை என்டோசல்ஃபான்!



'நம்ம வீட்டுக்கார பையனோட லேப்டாப்புல ஒரு சேதிய நான் சைடுல பார்த்தேன். அத நான் சொல்லட்டுமா?'

'ம்..ம்......சொல்லு... சொல்லு.....'

'என்சைக்ளோபீடியா தகவல்படி பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு நம்ம மூதாதையர்களில் பல பேர் கால் முளைத்து பரிணாமம் அடைந்து நில வாழ் உயிரினமா மாறிட்டாங்களாம்'

'அடடே....ஆச்சரியமா இருக்கே! அப்போ நீரில் வாழும் நம்முடைய சுவாச உறுப்புகளும் மாற்றமடைந்திருக்கணுமே! அது எப்படி ஆச்சு?'

'இப்படி குறுக்கு கேள்வி எல்லாம் கேட்டா எனக்கு என்ன தெரியும்? நான் சொல்றதை கண்ணை மூடிக்கிட்டு நம்பணும். புரியுதா?'

'???????????????'

--------------------------------------------------------

பல்வேறு வகையான மீன்களில் ஆராய்ச்சி செய்த சலீம் அலி சென்டர் பார் ஆர்னிதாலாஜி அண்ட் நேச்சுரல் ஹிஸ்டரி (SACON) என்ற அமைப்பு கேரளாவில் சிறப்பாக இயங்கி வருகிறது. மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் ஊக்கத்தில் இந்த அமைப்பு செயல்படுகிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சிகரமான உண்மைகளை நமக்கு தந்திருக்கிறது.

கேரளாவில் பாயும் நதிகளில் பூச்சிகொல்லி மற்றும் தீங்கு விளைவிக்கும் விஷங்கள் பற்றி ஆய்வு செய்ய இந்த அமைப்பை கேரளா பயோ டைவர்சிடி போர்டு சமீபத்தில் அங்கீகாரம் அளித்து நியமித்தது. பாலக்காடில் பாயும் சித்துர்புழா என்ற ஒரு சிறு ஆற்றைத் தவிர ஏனைய 44 நதிகளையும் இந்த SACON அமைப்பு ஆய்வு செய்தது.



மிகவும் அதிர்ச்சிக்குரிய கண்டுபிடிப்பாக, ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 159 மீன்களில் அனைத்திலும் DDT எனப்படும் பூச்சிகொல்லி மருந்தும், என்டோசல்பான் எனப்படும் நச்சு பொருளும் கலந்துள்ளது தெரிய வந்தது.

சமீபத்தில் என்டோசல்ஃபான் உற்பத்திக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் அணி திரண்டதும் இந்தியா அதற்கு ஆதரவு அளித்ததும் பிறகு உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசுக்குக் கொட்டு வைத்ததும் மத்திய அரசு என்டோசல்பான் உற்பத்தியாளர்களுக்கு வக்காலத்து வாங்கி நீதிமன்றத்தில் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

'இது சாதாரண விஷயம் அல்ல. இந்த டிடிடி மறறும் என்டோசல்ஃபான் பாதிப்பானது மண், நீர், தாவரம், மிருகங்கள், பறவைகள, மனிதர்கள் என்று அனைத்து ஜீவன்களையும் பாதிக்க தொடங்கியுள்ளது. ஆற்றோரங்களில் உள்ள பலர் தங்களின் குடிநீராக ஆற்று நீரையே பயன்படுத்தி வருகின்றனர். ஆறு மட்டுமல்ல கடலும் பொலிவிழந்து வருகிறது. தொழிற்சாலை கழிவுகள் கடலில் கொட்டப்படுவதால் அங்குள்ள மீன்களும் மிகுந்த பாதிப்படைந்து மனிதனுக்கு தீங்கு விளைவிக்கின்றன' என்கிறார் ஆய்வாளர் சி.எம்.ஜாய்.

விட்டமின் சி உடம்புக்கு தேவை என்று வாரத்துக்கு இரண்டு முறை மீன் குழம்பை விரும்பும் பிரியர்கள் நோய்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்களோ? நமது வீட்டிலேயே ஒரு குளத்தை வெட்டி இனி நாமே மீன் வளர்க்க வேண்டியதுதான்.

முன்பு எங்கள் வீட்டில் அழகிய கிணறு இருந்தது. மோட்டர் பம்பு வைத்ததால் எவருமே கிணறை உபயோகப்படுத்துவதில்லை. எனவே அதனை மணலை போட்டு மூடி விட்டோம். முன்பெல்லாம் அந்த கிணற்றில் அருமையான கெழுத்தி மீன்களை வளர்ப்போம் குழம்புக்கு மிக ருசியான மீன். இனி அந்த கிணற்றை சுத்தம் செய்து அதில் மீன் வளர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.

தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆற்றில் கலப்பதாலேயே அதிகமாக நீர் மாசுபட காரணமாகிறது. ஆற்றோரங்களில் வாய்க்கால் ஓரங்களில் பலர் காலைக்கடனை கவலையினறி கழிக்கிறார்கள். மழை பெய்தால் அத்தனையும் ஆறுகள் வாய்க்கால்களில் கலந்து நீர் மாசுபடுகிறது. பல வீடுகளின் கழிவு நீர் ஆறுகளிலும் வாய்க்கால்களிலுமே கலக்கின்றன. இவற்றை எல்லாம் அரசு கவனத்தில் கொண்டு கழிவறைகளின் அவசியத்தை மக்களுக்கு போதிக்க வேண்டும். பாடபுத்தகங்களிலும் இது பற்றிய விழிப்புணர்வை சிறு வயதிலிருந்தே மாணவர்களின் மனத்தில் பதிய வைக்க வேண்டும்.
http://www.deccanchronicle.com/channels/cities/kochi/ddt-kerala-fish-453

Wednesday, August 22, 2012

குடிகாரன் பேச்சு- ஒரு கலக்கல் அனுபவம்!

20 வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. ஒரு முறை திருச்சியை சேர்ந்த குமார் எங்களோடு எப்போதும் ஒன்றாகவே இருப்பான். சவுதி வந்த புதிதில் கடைகளுக்கு ஏதும் வாங்க சென்றால் அங்கு பெப்ஸி, மற்றும் மிராண்டாவோடு பீரும் வைத்திருப்பார்கள். அதைப் பார்த்த எனககு அதிர்ச்சி. நம் ஊரில் கூட மதுவை பொதுவில் விற்பதில்லையே! இது ஒரு முஸ்லிம் நாடு என்று சொல்கிறார்கள். சிறுவர்கள் பெண்கள் எல்லாம் வந்து போகும் இந்த கடையில் இவ்வளவு பப்ளிக்காக விற்கிறார்களே! என்று எனக்கு ஆச்சரியம். சவுதி சட்டத்தை விமரிசித்தால் நமக்கு பிரச்னை என்பதால் யாரிடமும் கேட்காமல் மனதுக்குள் நினைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

பிறகு எங்களுக்கு பல ஆண்டுகள் முன்பே சவுதி வந்தவரிடம் இது பற்றி கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே 'இந்த பீரை ஹலால் பீர் என்று சொல்வார்கள். இதில் உள்ள போதை நீக்கப்பட்டு உடலுக்கு குளிர்ச்சியை மட்டுமே தருமாறு இந்த பானம் தயாரிக்கப்பட்டிருக்கும். நீயும் குடித்து பார். ஒன்றும் பிரச்னை இல்லை' என்று அவரே கடையில் வங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.

பீர் பாட்டிலை கையில் பார்த்தவுடன் எனக்கு மனது திக் திக்கென்று அடித்துக் கொண்டது. ஒருக்கால் போதை வந்து விட்டால் என்ன செய்வது? என்று யோசிக்கலானேன். நண்பரோ 'சும்மா குடிப்பா.. ஒன்னும் ஆகாது' என்று சொல்லவே பீரை குடிக்க ஆரம்பித்தேன். அது லெமன் கலந்த பீர். புது ருசியாக நன்றாகவே இருந்தது. ஆனால் நான் குடித்ததை குமார் கவனிக்கவில்லை.

குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) எப்போதுமே தான் தனது கிராமத்தில் சாராயத்தை மிக அனாயசமாக குடித்ததாகவும் எவ்வளவு குடித்தாலும் ஸ்டடியாக இருப்பேன் என்றும் பெருமை பேசுவான். தங்கள் கிராமத்தில் குடியால் வந்த சண்டைகளையும் அதனால் ஏற்பட்ட பஞ்சாயத்து தீர்ப்புகளையும் பல முறை சொல்லியிருக்கிறான். நாங்களும் அவன் சொல்லும் கதைகளெல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்போம். ஒரு முறை நானும் எனது நண்பன் முபாரக்கும் குமாரை கலாய்க்க முடிவு செய்தோம். இந்த ஹலால் பீரை யாருக்கும் தெரியாமல் கொண்டு வருவது போல் கொண்டு வந்து அனைவரும் அமர்ந்து குடிப்பது என்று முடிவு செய்தோம். நாங்கள் பேசியது குமாருக்கு தெரியாது.

புதன் கிழமை இரவு குமாரிடம் 'டேய் குமார்...நாளை விடுமுறை. எனவே ஒரு இடத்தில் ஒரு பார்ட்டியிடம் பீருக்கு ஆர்டர் பண்ணியிருக்கிறோம். இரவில் யாருக்கும் தெரியாமல் குடிக்கலாம். இதை வெளியில் யாரிடமும் சொல்லி விடாதே' என்றோம். அவனும் சந்தோஷமாக தலையாட்டினான்.

வியாழன் இரவும் வந்தது. இரவு சாப்பாடு முடிந்தவுடன் சிலர் சினிமா பார்க்க சென்று விட்டனர். முபாரக் கடைக்கு சென்று நான்கு பீர் பாட்டில்களை வாங்கி வந்தான். நான், குமார், முபாரக், அலி இந்த நான்கு பேரும் அறையை பூட்டிக் கொண்டு மிக்சர் சகிதமாக டேபிளில் அமர்ந்தோம்.

'முபாரக்! இங்க கொண்டு வரும் போது யாரும் பார்க்கல்லியே' - குமார்

'இல்லப்பா! மாட்டினால் அவ்வளவுதான். மறைத்துதான் கொண்டு வந்தேன்'- முபாரக்.

'இனிமேல் வாங்க போனால் துணி பை கையோடு கொண்டு செல்லவும். அப்பொழுதுதான் வெளியில் தெரியாது. பிளாஸ்டிக் பையில் ஒருக்கால் தெரிந்து விடும்'- சுவனப்பிரியன்.

இத்தனை களேபரங்களுக்கு இடையில் ஹலால் பீரை குடிக்க ஆரம்பித்தோம். ஹலால் பீர் என்ற ஒன்று உள்ளதை அறியாத குமார் ஒரிஜினல் மது என்ற நினைப்பில் குடிக்க ஆரம்பித்தான். நாங்கள் எல்லாம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரம் கழித்து குமார், 'ரொம்ப நாளைக்கு அப்புறம் குடிப்பதால் போதை கொஞ்சம் லேட்டாத்தான் ஏறுது' என்று சொன்னவுடன் நானும் அலியும் முபாரக்கும் வாய் விட்டு சிரித்து விட்டோம். நாங்கள் சிரித்ததை போதையில் சிரிப்பதாக நினைத்துக் கொண்டு அவனும் ஒரு மாதிரியாக போதையோடு சிரித்தான். அதாவது போதை வருவதாக நினைத்துக் கொண்டு சிரித்தான். எங்களால் சிரிப்பை அடக்க முடியாமல் அவன் தலையில் தட்டி 'இது ஹலால பீர்டா...இதில போதையே கிடையாது. உனக்கு எங்கிருந்து வந்தது போதை?' என்று கலாய்க்கவும் பிறகு சுதாரித்துக் கொண்டு 'அதானே...போதையே ஏறலியேன்னு பார்த்தேன்' என்று அப்பாவியாக கேட்டான்.

இந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும். உடல் வலிக்காக மதுவை குடிக்கிறோம் என்று சொல்பவர்கள் ஆல்கஹால் நீக்கப்பட்ட மதுவை குடிக்கலாமே. அது குடலுக்கு குளிர்ச்சியை தரும். ஆல்கஹால் கலந்த மது குடலை அரிக்க ஆரம்பிக்கும்.

ஹலால் பீர் தயாரிக்கும் நிறுவனங்கள், "இந்த பீரில் 0.01% ஆல்கஹால் இருப்பதாக" விளம்பரம் செய்கின்றது. அதுதான் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் குழு அனுமதிக்கும் ஆல்கஹால் அளவு. இந்த அளவை மீறி ஒரு பானத்தில் ஆல்ஹகால் அதிகமாக கலக்கப்படுமானால் அது போதை ஏற்றக் கூடியதாக மாறி விடுகிறது. இதனை இஸ்லாம் தடை செய்கிறது.

“சாராயத்தைப்பற்றியும், சூதாட்டத்தைப்பற்றியும், அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், நீர் கூறும், இவ்விரண்டிலும் பெரும் பாபம் இருக்கின்றது.மனிதர்களுக்கு சில பயன்களுமிருக்கின்றன. ஆனால் அவ்விரண்டிலுள்ள பாபம், அவ்விரண்டிலுள்ள பயனை விடப்பெரிது.” அல்குர் ஆன்-2:219

மது குடிப்பதால் சில பயனுண்டு என்று அல்குரான் கூறுவதை, இன்றைய நவீன அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.அதாவது இதய நோய் மற்றும் மாரடைப்பு (Coronary Heart Diesease) வராமல் தடுப்பதில் சிறிது பங்குண்டு.ஆயினும் இப்படி சிறிது மது குடிப்பவனின் நிலமை,ஒருவன் செங்குத்தாக வழுக்குப்பாறையில் ஏறுவதற்க்குச்சமம்.எந்த நிலையிலும் அவன் சறுக்கி விழலாம் உயிருக்கு ஆபத்து. ஆகவேதான் இதில் பல மடங்கு தீமை உள்ளது என்று அல்லாஹ் தடை செய்கின்றான்.

உலகப்புகழ் பெற்ற மருத்துவ ஆய்வுக்கழகமான அமெரிக்காவின் மாயோ மருத்துவ கழகமும் இதையே கூறுகின்றது.( Mayo Foundation for Medical Education and Research )
“Alcohol may offer some health benefits, Especially for your heart. On the other hand, alcohol may increase your risk of health problems and damage your heart. Certainly, you do not have to drink any alcohol,and if you currently do not drink, and do not start drinking for the possible health benefits. In some cases, its safest to avoid alcohol entirely – the possible benefits do not outweigh the risks. ” ——www.mayoclinic.com/health/alcohol

விசுவாசம் கொண்டோரே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் (வணக்கத்திற்காக) நாட்டப்பட்டுள்ளவைகளான சிலைகளும் குறிபார்க்கும்(சூதாட்ட) அம்புகளும் ஷைத்தானுடைய செயல்களிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே இவைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றிபெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

நபி அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: முஸ்லிம்)

கள் குடி பற்றித் திருமந்திரம்

உள்உண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்
தென் உண்மை ஞான சிவயோகம் சேர்வுறார்
கள் உண்ணும் மாந்தர் கருத்தறியாரே.

திருக்குறள்

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

மனுதர்மசாஸ்திரம்

மருந்துக்காவது மதுபானம் அருந்தியவன் அப்பாபத்தைப் போக்க கந்தை வஸ்திரத்தைத் தரித்து, சடை முடியுடன் ஓராண்டு நெய்யை அல்லது பிண்ணாக்கை சாப்பிட்டு இருக்க வேண்டும்.

டிஸ்கி: நம் வீடுகளில் பெண்கள் சமையலுக்காக கசகசா என்ற ஒரு பொருளை சேர்ப்பார்கள். அது மிக வீரியமுள்ள போதைப் பொருளாம். இது தெரியாமல் சில பெண்கள் பார்சல் கட்டிக் கொண்டு சவுதி வந்து விடுவார்கள். விமான நிலையத்தில் இதனை மிகப்பெரும் பிரச்சினையாக்கி விடுவர் அலுவலர்கள். எனவே சவுதி வருபவர்கள் கசகசாவை எக்காரணத்தை முன்னிட்டும் கொண்டு வந்து விட வேண்டாம். யாரும் பார்சல் கொடுத்தாலும் பிரித்து சோதித்து விட்டே வாங்கிக் கொள்ளுங்கள்.

எழுத்தாளர் சுஜாதா துபாய் போகும் போது இந்த பிரச்னையை சந்தித்துள்ளார். அப்பொழுதுதான் அவருக்கே கசகசா போதைப் பொருள் என்பது தெரியுமாம். 'ஸ்ரீரங்கத்து திண்ணைகளில் பல அம்பிகள் கசகசாவை விழுங்கி விட்டு உருண்டு கிடந்தது ஏன் என்பதன் காரணம் இப்போது தான் விளங்குகிறது' என்று ஹாஸ்யமாக அதனை விளக்குவார். :-)

Monday, August 13, 2012

உலகின் குப்பைத் தொட்டி நமது இந்தியாவா?



இந்தியாவின் வலிமையினை உலகுக்கு பறைசாற்றும் தொழிநுட்ப புரட்சியின் வித்தாய் திகழ்வது மின்னணுவியல். தகவல்-தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மருத்துவம் என இதன் எல்லையில்லா பங்களிப்பு தொடர்வது கொண்டிருக்கும் வேளையில் நம்நாடு மட்டுமன்றி மேலைநாடுகளில் பயன்படுத்தப்பட்டு உபயோகமற்ற எலக்ட்ரானிக் கழிவுகளுக்கு புதைகுழியாய் நம்நாட்டின் நகரங்கள் மாறிவருகிறது.

மின்னல் வேகத்தில் வளரும் இந்திய பொருளாதரத்தில், ஒவ்வொரு ஆண்டும் 5 ,00 ,000 டன் எடை கொண்ட மின்னணு குப்பைகளும் சேர்ந்தே வளர்கின்றது. இது 2012 ல் ஒரு மில்லியன் டன் அளவுக்கு வளரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நம்நாட்டில் பயன்படுத்தப்பட்டு இன்று உபயோகமற்ற நிலையில் இருக்கும் கம்ப்யூடர் பாகங்களும், செல்போன்களும், மருத்துவ உபகரணங்களும் என ஒரு புறம் இருந்தாலும், 1992 ம் ஆண்டு உலக வல்லரசுகளை சமாதானம் செய்வதற்காக தற்கொலைக்கு சமமான 'காட்' ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அதன் உட்கூறாய் நம் மீது திணிக்கப்பட்ட 'ஓபன் ஜெனரல் ரைட்ஸ்' எனும் விதியின் கீழ், மேலை நாடுகளில் சேரும் கழிவுகள் 'கொடை' என்ற பெயரிலும், மறுசுழற்சி என்ற போர்வையிலும் நம் மீது திணிக்கப்படுகிறது.




நம்நாட்டைப் பொறுத்தவரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூடர் என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அந்த சமயத்தில் கம்ப்யூட்டரும் அதன் உதிரி பாகங்களும் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களும் அந்த முறையில் நம்நாட்டிற்கு தருவிக்கப்பட்டது. ஆனால் அந்த சட்டம் இன்று வளர்ந்த நாடுகளின் குப்பைகளை கொண்டு வந்து இந்தியாவில் கொட்டும் அரசாங்க ஆணையாக செயல்படுகிறது.

கடந்த 2006 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் மேலைநாடுகளிலிருந்து தானமாக(!) வழங்கப்பட்ட கழிவுப் பொருட்கள் 190 மடங்கு அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் அலறுகிறது.

இந்தியாவிற்கான ஒட்டுமொத்த இறக்குமதியில் 48 % மேலை நாடுகளின் குப்பை கழிவுகள்.

பேரழிவுகளைத் தரக்கூடிய கழிவுகளை இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் சட்டம், உரிமை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்தாலும் மேற்சொன்ன 'ஓபன் ஜெனெரல் ரைட்ஸ்' என்ற விதி எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாக் கழிவுகளையுமே இந்தியாவில் இறக்குமதி செய்ய நங்கூரமிடுகிறது.

ஆபத்தின் ஆழமறியா நம்மூர் அப்பாவி குடிசைவாசிகள் அதுபோன்ற குப்பைகளை தரம் பிரித்து காசு பார்க்க அலை மோதுகின்றனர், குடிசைத் தொழிலதிபர் ஆவதற்காக.




மேற்கு தில்லியின் மாயாபுரி பகுதியில் தீபக் ஜெயின் என்ற பழைய இரும்புக்கழிவு வியாபாரி உட்பட ஆறு தொழிலாளர்கள் மயங்கி சரிந்து விழுந்து உயிருக்கு போராடத் துவங்கியவுடன் அள்ளிக் கொண்டுபோய் அப்போல்லா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் இருவருக்கு கை, கால் மற்றும் உடல்பகுதியில் உள்ள முடிகள் உதிரத் தொடங்கி, மெழுகுபோல் அவர்கள் கை, கால்கள் உருகத்தொடங்கியதைக் கண்ட மருத்துவக்குழு செய்வதறியாது திகைத்து நின்றது. நோயாளிகளின் பின்புலங்களை ஆராய்ந்தபோது, அவர்களுடைய இருப்பிடம், குடோன் ஆகியவற்றை பரிசோதிக்குமாறு அகில இந்திய மருத்துவக்கழகம் பணித்தது. மாநகராட்சி, மாநகர காவல்துறை, அணுசக்தி ஒழுங்குமுறைக்கழகம் என பலரும் களத்தில் இறங்கினர்.

ஆய்வின் முடிவில் "முறுக்கேற்றப்பட்ட இரும்புக்கம்பி பின்னல்கள்" என்ற பெயரில் எட்டு மூட்டைகளை பாதிக்கப்பட்ட ஜெயின் குடோனிலிருந்து கைப்பற்றியது அணுசக்தி ஒழுங்குமுறைக்கழகம்.பரிசோதனைக்கு பிறகு பகீர் தகவலையும் வெளியிட்டது. காமாக் கதிர்களை வெளியிடும் கோபால்ட் - 60 என்ற உயிர்க்கொல்லும் கதிரியக்கப் பொருள்தான் இந்த மோசமான விளைவுக்குக் காரணம் என்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்திவிட்டு தன் கையைக் கழுவிக்கொன்டது அணுசக்தி ஒழுங்குமுறைக் கழகம். ஆனால் "இது பாதுகாப்பனதோ அல்லது பாதுகாப்பற்றதோ என்பதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை" என்கிறார்கள் கம்ப்யூடர் கேபிள்களை உருக்கி அதிலிருந்து தாமிரக் கம்பியினைப் பெறும் வேலையினைச் செய்யும் பெண் தொழிலாளர்கள்.

தாமிரம் பெறுவதற்காக நச்சுப்புகையில் கருகும் இவர்களை கேன்சர் நோய் மட்டுமல்லாது குழந்தைப் பேறின்மை, சிறுநீரகங்கள் செயலிழப்பு, நரம்புகளின் செயலிழப்பு போன்ற பெருநோய்களும் தாக்கலாம். தாமிரம் எடுத்துக்கொண்டபின் எஞ்சியுள்ள பாதரசக் கலவை மற்றும் ஈயம் போன்றவற்றினை ஆறுகளிலும், விளைநிலங்களிலும் வீசி விடுகின்றனர் உணவு தானியங்கள் மூலம் மற்றவர்களுக்கும் அப்பெரும் வியாதிகள் பரவும் என்பதினை அறியா அப்பாவிகள்.

கிராமப்புறத்தில் வாழ்பவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெறும் சவாலாய் நிற்கும் இப்பிரச்சனைக்கு சட்ட வல்லுனர்கள் முன்னின்று இந்தியப் பெருநாட்டின் மக்களின் வாழ்வில் நஞ்சைக் கலக்கும் இந்த அதிநவீன தொழில்நுட்ப குப்பைகளை முறையாக, சுற்றுச்சூழலுக்கும், மனித மற்றும் மற்ற உயிரினங்களுக்கும், விவசாயப் பெருந்தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அழித்திட வகைசெய்யும் ஆலைகளை அமைத்தல் வேண்டும். மேலை நாடுகளிலிருந்து 'கொடை' அல்லது 'மறுஉபயோகம்' எனும் பெயரில் நம் மீது குப்பை கொட்டுவதை தடைசெய்யப்பட வேண்டும். கோபால்ட்-60 விவகாரம் மக்களவையில் விவாதிக்கப்பட்டு விவாதப்பொருளாகவே அறியப்பட்டது போலில்லாமல், மக்களின் வாழ்க்கையையும், உயிர் உடைமைகளையும், உலக வெப்பமயமாதல் என்ற நெருங்கிவரும் அச்சுறுத்தலையும் கவனத்தில் கொண்டு புதிய சட்டங்கள் வகுப்பதன் மூலமே இப்பேராபத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளமுடியும்.

நன்றி--புதுசுரபி
அதிரை நிருபர்



Most of that waste is bought from Indian consumers by scrap dealers and sold in underground recycling markets like Seelampur. But a 2007 study by the Manufacturers' Association of Information Technology and the German Agency for Technical Cooperation in India found that an additional 50,000 tons of e-waste is imported to India from developed countries every year, despite the nation's bans on the dumping and disposal of foreign waste and on the importing of old computers and their accessories. According to activists, importers have long exploited a loophole in the bans that allows for imports of used electronics as donations.

Read more: http://www.time.com/time/world/article/0,8599,2071920,00.html#ixzz23NSe3H95

------------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 20

Tuesday, June 26, 2012

விளக்கை அணைக்காததால் மூன்று உயிர்கள் பலி!

விளக்கை அணைக்காததால் மூன்று உயிர்கள் பலி!

நாமக்கல் : நாமக்கல் அருகே உள்ள எருமப்பட்டியைச் சேர்ந்தவர் சசிகலா(28). இவரது மகன்கள் ஸ்ரீகாந்த்(8), பிரேம்நாத்(6). நேற்று இரவு வீட்டில் மின்சாரம் இல்லாததால் சிமில் விளக்கு ஏற்றி வைத்துள்ளனர். விளக்கு தவறி விழுந்ததில் சசிகலாவின் உடையில் தீப்பற்றியது. அவர் வீட்டில் அங்கும் இங்கும் ஓடியதால் வீடு முழுவதும் தீ பரவி உள்ளது. இதில் சசிகலாவும், அவரது இரு மகன்களும் தீக்காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனளிக்காமல் சசிகலாவும், ஸ்ரீகாந்தும் நேற்று இரவு உயிரிழநதனர். இந்நிலையில் பிரேம்நாத்தும் இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-தினமலர்
27-06-2012

சிறிய அலட்சியம் எந்த அளவு சோகத்தை தந்து விடுகிறது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இரவு படுக்கப் போகும் முன் எரியும் திரிகளை அணைத்து விட்டு படுப்பதால் என்ன சிரமம் வந்து விடப் போகிறது? இதற்கு சோம்பல் பட்டு படுதது விடுவதால் மூன்று உயிர்களை அந்த குடும்பம் இழந்துள்ளது. அந்த குடும்பத்துக்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

இது போன்ற தனி மனித பாதுகாப்பில் கூட இஸ்லாம் சில கட்டளைகளை மனிதனுக்கு இடுகிறது. கீழ் வரும் நபி மொழிகள் மனிதர்கள் படுக்கப் போகும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அழகாக நமக்கு சொல்லித் தருகிறது.

'இரவில் தாமதமாகி வருவதை தவிர்ந்து கொள்ளுங்கள், இரவு என்பது நிசப்தமானது, உங்களைச் சுற்றி எந்த வகையான விலங்கை இறைவன் அனுப்பியுள்ளான் என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள், தண்ணீர் பாத்திரத்தை மூடி விடுங்கள், உணவுப்பாத்திரத்தை மூடுங்கள், விளக்கை அணைத்து விடுங்கள்' என்று நபி அவர்கள் கூறினார்கள்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(நூல்: புஹாரி - 6295,6296, புஹாரியின் அதபுல் முப்ரத்)

கதவை தாழிடுதல்:

முதன்முதல் அறிவுரை தூங்கச் செல்லு முன் கதவை தாழிட்டுக் கொள்வதாகும். இப்பொழுதெல்லாம் திருட்டு பல இடங்களில் சர்வசாதாரணமாகி விட்டது. அதனால் கதவை தாழிட்டுக் கொள்வதை சொல்லாமலேயே செய்து விடுவார்கள். திருட்டு பயம் இல்லாதிருந்தாலும் கதவை இரவில் தாழிட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.
மேலும் தூங்கிக் கொண்டிருக்கும் போது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகள் வீட்டுக்குள் நுழைந்து விடாமல் இருக்க கதவை தாழிடத்தான் வேண்டும்.
கதவை மூடி தாழிட்டுக் கொள்வது பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

தண்ணீர் பாத்திரத்தை மூடுதல்:

அந்த காலத்தில் குடிப்பதற்கும் வீட்டு உபயோகத்திற்கும் போதுமான தண்ணீர் கிடைக்காத காலம். போதுமான தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். குடிநீர் தண்ணீர் பைகளிலே சேகரித்து வைத்துக் கொள்வார்கள். தண்ணீர் பைகளாகட்டும் தண்ணீர் உள்ள பாத்திரமாகட்டும் தண்ணீர் பைகளின் வாய் கட்டப்படவும் தண்ணீர் பாத்திரங்கள் மூடிவைக்கப்படவும் வேண்டும் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.
அப்போது தான் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களோ பூச்சிகளோ அதில் விழுந்து விடாமல் பாதுகாக்க முடியும்.

உணவுப் பாத்திரத்தை மூடுதல்:

இதே முறை மற்ற உணவுப் வைத்திருக்கும் பாத்திரத்திற்கும் குழம்பு வைத்திருக்கும் பாத்திரத்திற்கும் பொருந்தும். மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சிகள் அதற்குள் சென்று விடலாம். தூசியோ தீங்கு விளைவிக்கும் பொருளோ அதில் விழுந்து விடலாம். அது உடலுக்கு சக்தி கொடுக்கும் உணவாக இருப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் உணவாக மாறி விடலாம்.

விளக்கை அணைப்பது:

இங்கே சொல்லப்பட்டிருப்பது அகல்விளக்கு அல்லது அது போன்று திறந்த நிலையில் எண்ணெய் ஊற்றி திரியின் மூலம் எரிக்கப்படும் விளக்காகும். இப்படிப்பட்ட விளக்குகள் காற்று கூறுதலாக வீசும் போது அதன் தீப்பிளம்பு கூடும், அல்லது பூனை போன்ற விலங்குகளால் தீ விபத்து ஏற்பட முடியும்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

'நீங்கள் உறங்கச் செல்லும் போது உங்கள் வீட்டில் உள்ள நெருப்பை அணைக்காமல் விட்டுவிடாதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: புஹாரி - 6293, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி - 1873, இபுனுமாஜா)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
'உங்கள் வீடுகளில் விளக்கை திறந்திருக்கும் நிலையில் விட்டு விடாதீர்கள், அது உங்களது பகைவனாகும்' நபிமொழி. (நூல்: புஹாரியின் அதபுல் முஃப்ரத்)

முஸ்லிமல்லாத மக்களில் சிலர் தங்களது சில பண்டிகையின் போது அதிநவீன மின்சார விளக்குகள் இருந்தும் பெருவாரியான அகல்விளக்குகளை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக கார்த்திகை தீபம் அன்று இவ்வாறு அகல்விளக்கை பயன்படுத்துகிறார்கள். அப்போது குறைந்தது விபத்துக்கள் ஏற்படும் போது அதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது அவசியம்.


Monday, June 04, 2012

வாய்மையே வெல்லும்-மருத்துவத் துறை-அமீர்கான்!

நமது நாட்டில் மிகவும் புனிதமான தொழில்களில் ஒன்று இந்த மருத்துவத் துறை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் மிகவும் கேவலப்பட்டுப் போன ஒரு துறை என்னவென்றால் அதுவும் மருத்துவத் துறைதான். இதில் ஏழை பணக்காரன் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் என்றாவது ஒரு நாள் மருத்துவத் துறையினரால் வஞ்சிக்கப்பட்டு இருப்போம். எனது உறவினர் ஒருவருக்கு அபெண்டிக்ஸ் ஆபரேஷன் பண்ணிய ஒரு இருபது நிமிடத்தில் வெளியில் வந்த மருத்துவ சிப்பந்தி '500 ரூபாய் கொடுங்கள்?' என்றார். 'எதற்கு?' என்று கேட்டோம். 'எல்லோரும் கொடுக்கிற மாமூல்தான் வேலை செய்பவர்கள் பிரித்துக் கொள்வோம்' என்று ஒரு அதிகார தோரணையில் கேட்டவுடன் எனக்கு கோபம் வந்து 'தர விருப்பமில்லை' என்றேன். 'வாங்காமல் நாங்கள் போகப் போவதுமில்லை' என்றவுடன் மேலிடம் வரை ரிப்போர்ட் சென்று அந்த சிப்பந்தியை தற்காலிக வேலை நீக்கம் செய்தனர். இது தனியார் மருத்துவ மனையில் தஞ்சையில் நான் கண்ட அனுபவம்.

'வாய்மையே வெல்லும்' தொலைக் காட்சி தொடரில் மருத்துவத் துறையைப் பற்றிய கலந்துரையாடலை சற்று பார்ப்போம்.



அமீர்கான்: நிறைய மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்த மாணவ மாணவிகள் வந்துள்ளீர்கள்? என்ன காரணத்தினால் இந்த துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

மருத்துவ துறை மாணவர்: கிராமங்களில் மருத்துவ வசதி மிக குறைவாக உள்ளது. மருத்துவராகி கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த துறையைத் தேர்ந்தெடுத்தேன்.

மற்றொரு மாணவர்: நமது நாட்டில் பலர் தொடர் வியாதியால் துன்புறுகின்றனர். அவர்கள் நமது நாட்டுக்கு ஆற்ற வேண்டிய பணி இதனால் தடைபடுகிறது. இது போன்ற நிலையில் உள்ளவர்களை குணமாக்கி இந்த நாட்டுக்கு அவர்களின் பங்களிப்பையும் தர என்னால் முடிந்த உதவியை செய்ய இந்த துறையைத் தேர்ந்தெடுத்தேன்.

அமீர்கான்: வாவ். அருமை... (கைத் தட்டல்) மருத்துவ துறையில் தற்போது நடந்து வரும் சில விரும்பத் தகாத நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். முதலில் மும்பையைச் சேர்ந்த திரு வெங்கடேஷின் அனுபவத்தைக் கேட்போம்.

வெங்கடேஷ்: எனது காலின் விரலில் சிறு பிரச்னை. எனவே ஒரு டாக்டரிடம் சென்று காட்டினேன். 'மிகவும் அபாயகரமான நிலையில் விரல் உள்ளது. உடன் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார். அபரேஷன் செய்யும் போது மறதியாக எலும்பை உள்ளே வைத்து தைத்து விட்டனர். இதனால் புரையோடிப் போய் எனது விரலை எடுக்கும் படி ஆகி விட்டது. இதற்கான செலவு எனக்கு இரண்டு லட்சம். தற்போது எனது நடையிலும் சிறு மாற்றங்கள். இந்த ஆபரேஷனுக்கு அவசியமே இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு மருத்துவரின் பண ஆசையால் எனது விரலும் போனது. பணமும் போனது.

அரவிந்த் ஹைதரபாத்: வாந்தியும் வயிற்று வலியினாலும் அவதிப்பட்ட நான் ஒரு மருத்தவரை அணுகினேன். உடன் என்னை ஐசி வார்டில் மூன்று நாள் வைத்து 'இப்பொழுது ஆபரேஷன் பண்ணவில்லை என்றால் இறந்து விடுவீர்கள்' என்று சொல்லவே நான் ஒத்துக் கொள்ளாமல் வேறொரு மருத்துவரிடம் காண்பித்தேன். அபண்டிக்ஸ் ஆபரேஷனுக்கு எந்த அவசியமும் இல்லை என்று அவர் சொல்லி சில மருந்துகளைக் கொடுத்தார். இன்று நலமாக இருக்கிறேன். இரண்டு மருத்துவ மனையிலும் எனக்கு செலவான மொத்த தொகை ஒரு லட்சதத்து நாற்பதாயிரம். தற்போது மருத்துவர்களைக் கண்டாலே பயம் ஏற்படுகிறது. மருத்துவர்களை கடவுளுக்கு சமமானவர் என்கிறோம். எல்லாம் சுத்த பேத்தல்.

சீமா பங்கஜ் என்ற பெண்மணிக்கு கிட்னி பிரச்னையினால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஓய்வு பெற்ற கணவர் மேஜர் பங்கஜின் அனுமதி இல்லாமல் அவர் பெண்ணிடமும் அனுமதி வாங்காமல் ஆபரேஷன் செய்து முடிவில் அவர் இறந்தும் விடுகிறார். தற்போது கோர்டில் கேஸ் நடக்கிறது.

அமீர்கான்: இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துவது என்ன? நம்பிக்கைத் துரோகம். அதுவும் கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்து உங்களை நம்பிக் கொண்டிருக்கும் அந்த நோயாளிகளிடமா இப்படி ஒரு துரோகம்? வெட்கம்.

அடுத்ததாக ஒரு நோயாளி மருத்துவமனை சென்றவுடன் மருத்துவர் இரத்த பரிசோதனை செய்து வா என்று சில லேபுகளுக்கு அனுப்புவார். அப்படிப்பட்ட ஒரு லேபை நடத்தி வரும் டாக்டர் அனில் பிச்சடை சந்திப்போம்.

அனில் பிச்சட்: எங்கள் லேபுக்கு நோயாளிகள் வருவது குறைந்தால் உடன் மருத்துவர்களை சென்று பார்ப்போம். மருத்துவர் எங்களிடம் 'அதற்கு பகரமாக என்ன தருவாய்?' என்று கேட்பர். 'வரும் வருமானத்தில் 40 சதவீதம் அல்லது ஐம்பது சதவீதம் உங்களுக்கு கமிஷனாக தருகிறோம்' என்று சொன்னவுடன் மருத்துவர் எங்களுக்கு அனைத்து நோயாளிகளையும் டெஸ்ட்டுக்காக அனுப்பி விடுவார். எங்கள் வியாபாரமும் ஜோராக நடக்கும். மருத்துவருக்கும் நல்ல வருமானம். ஆனால் இவ்வாறு தவறாக சம்பாதித்ததால்தானோ என்னவோ எனது குடும்பத்தில் மிகப் பெரிய ஒரு சோகம் நடந்தது. அன்றிலிருந்து மருத்துவர்களுக்கு நான் கமிஷன் கொடுப்பதில்லை. டெஸ்ட்டுக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டுமே நோயாளிகளிடம் வாங்குகிறேன். முன்பை விட தற்போது நன்றாகவே சம்பாதிக்கிறேன். நேர்மையாகவும் சம்பாதிக்கிறேன்.

அமீர்கான்: வெரிகுட். உங்கள் லேப்புக்கு பக்கத்தில்தான் எனது வீடும் அமைந்துள்ளது. எங்கள் குடும்பத்தவர் அனைவரையும் இனி உங்கள் லேபுக்கே அனுப்புகிறேன். நன்றி!

அடுத்து அமுல் பண்டிட் என்ற புற்று நோய் நிபுணரின் அனுபவத்தைப் பார்ப்போம். வெளிநாட்டில் படித்து தாய்நாட்டில் வேலை செய்ய வேண்டும் என்று வந்த இவரிடம் நோயாளிகளை அனுப்ப சக மருத்துவர்கள் கமிஷன் கேட்டார்களாம். இதனால் வெறுத்துப் போய் தற்போது தாய் நாட்டில் பணியாற்றும் ஆசையை தூரமாக்கி தற்போது வெளிநாட்டிலேயே மருத்துவம் பார்த்து வருகிறார்.

ஏன் இவ்வாறு மருத்துவர்கள் பணம் பணம் என்று அலைகிறார்கள்? என்ன தேவை வந்தது அவர்களுக்கு?

ஆந்திர பிரதேசம் கௌடிபாட்லி மேடக் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் நடந்த கொடூரம் ரொம்பவும் அநியாயமானது. அங்குள்ள பெண்களில் 75 சதவீதமான பேருக்கு பிரசவத்தில் ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளார்கள். அத்தனை பேரும் அதிகமாக வயல் வேலை செய்பவர்கள். உடல் உழைப்பை செய்து வருபவர்களுக்கு இயற்கையாகவே குழந்தை நார்மலாக வந்து விடும். இந்த ஏழை மக்களிடம் கூட பணத்துக்காக இந்த மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்துள்ளார்கள். சிலர் அபரேஷனுக்காக நிலத்தை விற்றிருக்கிறார்கள். ஆபரேஷனில் கர்ப்பப்பை எடுத்ததை தெரிந்து கொண்ட கணவன் மனைவியை விவாகரத்து செய்து விட்டானாம்.

பாதிக்கப்பட்ட பெண்: இப்போ ஆபரேஷன் பண்ணலேன்னா நீயும் உன் குழந்தையும் செத்துப் போயிடுவீங்கோ என்று டாக்டர் சொல்லும் போது நாங்க என்ன பண்றது.? 'சரி ஆபரேஷன் பண்ணுங்கோ' என்று சொல்லுவோம். சொத்தையும் விற்று இன்று உடலாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

அந்த மக்கள் 'ஆபரேஷனுக்குப் பிறகு எங்களால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை' என்று அழுதது கல் நெஞ்சையும் கரையச் செய்யும். இந்த அனுபவம் ஆந்திர பிரதேசத்தோடு அல்ல எனக்கும் உங்களுக்கும் கூட இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்.

இவ்வளவு கீழிறங்கிச் செல்லவேண்டுமா நமது மருத்துவர்கள்?

அமீர்கான்: டாக்டர் பேதி! உங்களின் 25 வருட அனுபவத்தில் எத்தனை பேருக்கு ஆபரேஷன் செய்திருப்பீர்கள்?

டாக்டர் பேதி: வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு. அதுவும் கேன்சர் போன்ற பிரச்னைகள் இருந்தாலே ஆபரேஷனுக்கு அவசியம் ஏற்படும். ஒரு கிராமமே இவ்வாறு ஒட்டு மொத்தமாக ஆபரேஷன் செய்து குழந்தை எடுப்பது சாதாரணமான ஒன்றல்ல. பணத்திற்காக திட்டமிட்டு செய்யப்படுவது.

அமீர்கான்: இவ்வளவு அநீதிகளை இழைத்து வரும் இந்த மருத்துவர்களை எவ்வாறு கட்டப்படுத்துவது? தண்டிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? ஆம். இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு(Medical council of India) உள்ளது. இதன் தற்போதய தலைவர் திரு டாக்டர் தல்வார் நம்மோடு உள்ளார். உங்களை வரவேற்கிறோம் டாக்டர். காலையிலிருந்து அனைத்தையும் பார்க்கிறீர்கள். இவை எல்லாம் உண்மைதானா? இதை ஏன் உங்கள் தலைமையில் உள்ள மருத்துவ கவுன்சிலால் கட்டுப்படுத்த முடியவில்லை?

டாக்டர் தல்வார்: அமீர்! ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் சில சட்ட சிக்கல்கள் நீங்கள் அறியாதது அல்ல. நான் தற்பொதுதான் பொறுப்பேற்று இருக்கிறேன். இனிமேல்தான் ஏதாவது செய்ய வேண்டும்.

அமீர்கான்: இந்திய மருத்தவ கவுன்சிலின் சட்டத்தின்படி ஒரு மருத்தவர் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மருத்துவம் பார்க்காமல் நோயாளியின் மனநிலை அறிந்து தொண்டுள்ளத்தோடு செயல்பட வேண்டும் என்கிறது. மேலும் வேறொரு மருத்துவருக்கு பரிந்துரைக்கும் போது அதற்காக கமிஷன் வாங்குவதும் தடை செய்யப்பட்டது. அடுத்து ஒரு நோயாளிக்கு ஒரு மருத்துவர் நோயை அதிகப்படுத்தியோ அல்லது குறைத்தோ பணம் பண்ணும் நோக்கில் செய்வது குற்றம் என்பதை எல்லாம் சட்டமாக்கி வைத்திருக்கின்றீர்கள்? இந்த சட்டத்தின் படி பார்த்தால் நமது நாட்டில் எட்டு லட்சம் மருத்துவர்கள் உள்ளனர் இவர்களில் எத்தனை பேருடைய லைசென்ஸ் நிலைக்கும்? இது வரை எத்தனை பேருக்கு லைசென்ஸ் ரத்தாக்கப்பட்டள்ளது?

டாக்டர் தல்வார்: கவுன்சிலின் அத்தனை சட்டங்களையும் ஒன்று விடாமல் ஃபாலோ செய்வது என்பது எங்கும் இல்லாத ஒன்று. அதற்கென்று ஒரு கமிட்டியும் உள்ளது. அடுத்து எமசிஐயில் என்ன நடக்கிறது என்பதை ஜென்ரல் அழகாக எடுத்துச் சொன்னார். நான் பொறுப்பெடுத்து சில மாதங்களே ஆகிறது. இனி நிலைமையை சரியாக்க முயற்சி எடுக்கிறேன்.



அமீர்கான்: 2008 லிருந்து தற்போது வரை ஒரு டாக்டரின் லைசென்ஸ் கூட கேன்சல் ஆக வில்லை. ஆனால் இங்கிலாந்தில் 2008ல் 42 மருத்துவர்களும் 2009ல் 68 மருத்தவர்களும் 2010ல் 73 மருத்தவர்களும் பிடிக்கப்பட்டு அவர்களின் லைசென்ஸ் ரத்தாக்கப்பட்டிருக்கிறது. ஒன்று பிரிட்டன் மருத்துவர்கள் மோசமானவர்கள். நமது இந்திய மருத்துவர்கள் அனைவரும் பத்தரை மாற்று தங்கங்கள். இல்லையா டாக்டர்?

டாக்டர் தல்வார்: தவறு நடப்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

அமீர்கான்: ஆந்திர பிரதேசத்தில் அநத ஏழைகள் வடித்த கண்ணீரை பார்த்தோம். உங்கள் பவரை உபயோகித்து தவறு செய்தவர்கள் மேல் நடவடிக்கை எடுங்கள் டாக்டர்?

டாக்டர் தல்வார்: கண்டிப்பாக! என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்கிறேன்.

அமீர்கான்: இந்த புரோக்ராமுக்குப் பிறகு எனக்கு இந்தியாவில் எந்த டாக்டரும் மருத்துவம் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நன்றி டாக்டர் (கரகோசம்)

இந்த மருத்துவர்கள் பணத்துக்கு அலைவதன் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது டொனேஷனாக கல்லூரிகளில் அவர்கள் செலுத்திய பணத்தை. ஒரு மருத்தவ படிப்புக்காக 50 லட்சம் 60 லட்சம் செலவழித்து படித்து முடிக்கும் ஒரு மாணவன் தான் செலவழித்த பணத்தை எப்படியாவது சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறான். அரசு நடத்தும் மருத்துவ கல்லுர்ரிகள் மிக சொற்பமே. தனியார் கொள்ளையடிக்க அரசு வசதி செய்து கொடுக்கிறது. அதன் பலனை ஏழை மக்கள் அனுபவிக்கின்றனர்.



மருத்துவக் கல்லூரிகள் அதிகப்படுத்தப் பட வேண்டும். தவறு செய்யும் மருத்துவர்களை தண்டிக்கும் அதிகாரம் முறைப்படுத்தப்பட வேண்டும். மருத்துவ கவுன்சிலின் அதிகாரம் அரசியல் தலையீடு இல்லாதிருக்க வேண்டும். போன ஆட்சியில் கொண்டு வந்த இலவச காப்பீட்டுத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும். இன்று ஒரு நோயாளியின் உயிரோடு பணத்துக்காக விளையாடினால் நாளை உனக்கோ உனது மனைவி மக்களுக்கோ அதே போன்ற நிலை வரும் என்ற பய உணர்ச்சி வர வேண்டும். குறைந்த செலவில் இன்சூரன்ஸ் திட்டத்தை அமுல்படுத்தினால் அதுவும் ஏழைகளுக்கு மிக உதவியாக இருக்கும். இதை பற்றியும் மருத்துவர் அழகாக விளக்குகிறார். (ஹாவ்........தூக்கம் வருகிறது....இதற்கு மேல் உட்கார முடியாது.... மற்றதை நீங்கள் புரோக்ராமை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.) :-)

டிஸ்கி: நமது தோழர் எதிர்க்குரல் ஆஷிக் அவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை அன்று பாண்டிச்சேரியில் திருமணம் இனிதே நடைபெற்றது. வரதட்சணை வாங்காமல்: மாலை போட்டுக் கொள்ளாமல்: சீர்கள் என்ற பெயரில் பெண் வீட்டாரை பிழியாமல் தேவையற்ற சடங்குகள் இல்லாமல் மணமகன் செலவில் திருமண விருந்தை கொடுத்து கல்யாணம் நபி வழியில் நடந்தது. சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதல்வரும் திருமணத்தில் கலந்து கொண்டார்.மற்றொரு முக்கிய விருந்தினரான சுவனப்பிரியன்:-) ரியாத்தில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்நேரத்தில் அவரை வாழ்த்துவோம்.

பாரகல்லாஹ் லக; வபாரக அலைக; வஜமஅ பைனகுமா ஃபீ ஹ்கைர்..!

இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக..! உங்கள் சந்ததிகளிலும் அருள் பொழிவானாக..! மணமக்களான உங்களிருவரையும் நல்லறங்களில் ஒன்றிணைப்பானாக..!




Wednesday, March 21, 2012

பெண்மைக்கு ஒரு அழகிய முன்மாதிரி சகோ ஹயாத் சிந்தி!

சர்வதேச பெண்கள் தினத்தில் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை ஒன்று உலகின் தைரியமிக்க பெண்கள் 150 பேரை தேர்ந்தெடுத்து கௌரவித்துள்ளது. அதில் முன்னால் அமெரிக்க அதிபர் கிளின்டன் மனைவி ஹிலாரி கிளிண்டனும் ஒருவர். இந்த பட்டியலில் சவுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று போராடிய மனால் அல் ஷரிஃப். மற்றொரு சவுதி பெண்மணி அறிவியல் அறிஞர் ஹயாத் சிந்தி.



இந்த பட்டியலில் உள்ள மேலும் சிலர்: நோபல் பரிசு வென்ற எமனைச் சேர்ந்த தவக்கல் கேர்மன், நோபல் பரிசு வென்ற சோமாலியாவின் ஹவா அப்தி, லிபியாவின் இமான் அல் ஒபைதி, சிரியாவின் தல் அல் மல்லோகி, எகிப்தின் தேவர்தஸ், ஆப்கானிஸ்தானின் நூர்ஜஹான் போன்ற சிறந்த பெண்மணிகள் இடம் பெற்றுள்ளனர்.

'இவர்கள் அனைவரும் தங்கள் நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டதற்க்காக எங்கள் பத்திரிக்கையின் பட்டியலில் தைரியமிக்க பெண்மணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என்கிறது இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் குழு.

டெய்லி பீஸ்ட் என்ற இந்த பத்திரிக்கை உயிரியல் துறை ஆராய்ச்சியில் சாதனை புரிந்ததற்காக இந்த தேர்வை செய்திருக்கிறது. இவரது கண்டுபிடிப்பு வளரும் நாடுகளில் பல உயிர்களைக் காப்பாற்றக் கூடியதாக இருக்கும் என்று இந்தப் பத்திரிக்கை மதிப்பிடுகிறது. இவரது கண்டு பிடிப்பால் மருத்துவர் அல்லாதவர் கூட நோயாளியின் நோய் தாக்கத்தைக் கண்டறிய முடியும்.

ஹயாத் சிந்தியின் ஆரம்ப பள்ளிப் படிப்பு சவுதி அரேபியாவிலேயே தொடங்கியது. அதன்பிறகு தனது கல்லூரி வாழ்க்கையை லண்டனில் தொடங்க ஆசைப்பட்டார். இவரது தந்தை ஒரு பெண் தனியாக நாடு விட்டு நாடு சென்று படிப்பதை விரும்பவில்லை. இருந்தும் இந்தப் பெண் தனது தந்தையை வற்புறுத்தி கல்லூரி படிப்பை லண்டனிலேயே தொடங்கினார். லண்டன் வந்த இவர் முதலில் சேர்ந்தது இங்கிலீஷ் கல்லூரி. அதன்பிறகு கேம்ப்பிரிட்ஜ் பலகலைக் கழகத்தில் சேர்ந்து கல்வி பயின்றார். லாப நோக்கமற்ற அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு ஆராய்ச்சி பணியில் தன்னை தற்போது இணைத்துக் கொண்டுள்ளார் ஹயாத் சிந்தி.

ஹயாத் சிந்தி ஏற்கெனவே 100 சகதி மிக்க பெண்கள் பட்டியலில் சியோ மேகஸின் நடத்திய போட்டியிலும் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

மேலும் இவர் அறிஞர்களின் கற்பனைகள், புத்தி கூர்மை போன்றவற்றை ஒருமுகப்படுத்தி அதனை தொழில் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற நோக்கில் செயல்படும் ஒரு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் வளைகுடாவில் உள்ள அறிஞர்களை பயன் படுத்தி இந்த பிராந்தியத்தில் சிறந்த மாற்றங்களை கொண்டு வரவும் முயற்சி எடுக்கிறார்.

'நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்பதில் பெருமைபடுகிறேன். எனது அடையாளத்தை நான் என்றுமே உதாசீனப்படுத்தியதில்லை. சில நேரங்களில் சில அறிஞர்கள் தங்களின் முன்னேற்றத்திற்க்காக அவர்களின் கலாசாரத்தை கைவிடுவர். ஆனால் நீங்கள் உங்கள் அடையாளத்தோடுதான் உங்களின் முன்னேற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் உங்களுக்கு உண்மையான வெற்றி' என்கிறார் தனது வாழ்நாளில் அதிக நாட்களை அமெரிக்காவில் கழித்த சகோதரி ஹயாத் சிந்தி,

-நன்றி அரப் நியூஸ்
14:03:2012

இஸ்லாத்தை ஓரளவு தனது ஆட்சியிலும் சவுதி அரேபியா கடைபிடித்து வருவதை அறிவோம். இஸ்லாமிய ஆட்சிகளில் பெண்களின் உரிமை ஏகத்தக்கும் மறுக்கப்படும் என்ற வாதம் வைக்கப்படுகிறது. அத்தகைய வாதம் தவறு என்பதை இது போன்ற செய்திகள் உறுதிபடுத்தகின்றன. பெண்கள் முன்னேற்றத்துக்கு இஸ்லாம் தடையில்லை என்பதற்கு இந்த பெண்மணியும் ஒரு உதாரணம்.

நம்நாட்டிலும் பல பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அது இயல்பாக நடைபெற்று வரும் ஒன்று. அனால் இஸ்லாமிய சூழலில் இஸ்லாத்தை முழுவதும் கடைபிடித்து இது போன்று சமூக சேவையிலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த பெண்மணி இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு முன் மாதிரி என்றால் மிகையாகாது.

--------------------------------------------------------------

சவுதி அரேபியா சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த செய்தி மற்றுமொரு உதாரணம்:

By ABDULATEEF AL-MULHIM, ALMULHIMNAVY@HOTMAIL.COM
Published: Mar 17, 2012 01:01 Updated: Mar 17, 2012 01:01

AS IN THE present and in the past, the biggest challenge for any governing body is educating the youth. Saudi Arabia is one of the countries which has a high percentage of its population being young men and women between the ages of 16-30. The government of Saudi Arabia had and still has education as its most important priority. Schools are in every city, town and village. Education is free from elementary to the university level and beyond. Saudi Arabia had always had educated Saudis abroad.

In the mid the 1970s, King Khaled announced a new council of ministers reshuffle. The new Cabinet had had many Saudi Ph.D. graduates from the US. The doctorate degrees were from the best schools in the world, such as Yale University. Those ministers were a fine product of an ongoing program of overseas scholarship for young Saudis by the government. In today’s world, Saudi Arabia had and still has the highest number of students who are on full scholarships abroad. This scholarship covers plane tickets, tuition, medical insurance, monthly pay, accompanying spouse pay, children's day care expenses, annual round trip ticket and emergency leave round trip ticket from wherever the student is to his hometown in the Kingdom. In addition, there is within the Kingdom scholarships for Saudi students at private universities. Public, government universities are free for all citizens. And each student attending public university in the Kingdom is eligible for a monthly pay of $300 per month.

The overseas scholarship started long time ago. It started at a very small scale when the founder of modern Saudi Arabia, King Abdul Aziz, saw the need for Saudis to have the best education in the most advanced countries. During the 1940s and 1950s, Saudi Arabia had massive oil explorations and with the wealth coming from oil revenue, new projects for the benefit of Saudi citizens were in the planning. At that time, there was severe shortage of university graduates or skilled workers. And a number of young Saudi men were sent to the West for higher education. The scholarship continued and peaked in 1974 when King Faisal saw the need for graduates with various specialties during the 1970s economic boom. The program slowed down in the 1980s after many universities and specialties were introduced to the education system in Saudi Arabia.

When Custodian of the Two Holy Mosques King Abdullah became king in August 2005, he launched the largest scholarship program for Saudis in history. Tens of thousands of students (male and female) were sent from Saudi Arabia to top world universities all over the world. The United Sates and the United Kingdom had the lion’s share. But, there are Saudi students in Australia, New Zealand, Canada, China, Europe and many other countries as well. Saudi Arabia ranks number one in the world with the highest percentage of its budget being allocated for education. And while the world economy is slowing down, the Saudi economy is booming. Thus, this new Saudi economic boom is in need of more educated Saudis with more advanced sciences. The Custodian of the Two Holy Mosques scholarship program is designed to get young Saudis the best education from the best international schools. Thirty percent of Saudi students abroad are enrolled in the top 100 schools worldwide and 70 percent are enrolled in the top 500 schools. Billions of dollars have been allocated for this program and there was massive expansion of the Saudi educational missions in major world capitals. The expansion is designed to take care of the tens of thousands of Saudi students abroad. Those educational missions have round-the-clock supervision of the conduct of the students. The Saudi educational missions are on daily contact with the students. All needs of the students are reported, monitored and met.
Nowadays, Saudi infrastructure and massive build up of new roads, hospitals, railroad tracks, universities, airports and sea ports require the finest educated brains. And the presence of thousands of Saudi students in various countries had and still has a positive impact for Saudi Arabia, not only in education, but also in social development. Those young Saudi students are the best ambassadors for Saudi Arabia. They learn from the world and they give the world a taste of Saudi culture. We have seen many events and exhibitions which were organized by Saudi students in their universities and communities about Saudi food, heritage and history. And in addition to cultural exchanges, Saudi students are exposed to the work ethics of different countries. For Saudi students living abroad, it is a lesson of self-reliance and understanding of other cultures which would make them appreciate what they and others have. The majority of the Saudi students abroad are there for their bachelor degrees, but a lot are seeking higher education. Either master's degrees or Ph.Ds. The health care sector has especially benefited from sending students abroad supervised by the Ministry of Higher Education. The ministry is spending $6 billion to build additional hospitals which are attached to some Saudi universities and to expand some existing hospitals. They are called university hospitals. The medical treatment in these hospitals are free of charge. These hospitals will need a very high number of Saudi doctors. And at this time, there are hundreds of doctors who graduated from Saudi medical schools, but they are continuing their specializations in countries like America and Canada. Most of the Saudi medical graduates from Saudi medical schools enroll in KAPLAN Medical Prep programs for their United States Medical Licensing Exam (USMLE). Also the scholarship is going to be an asset for the Kingdom to bring very important and strategic new innovations. New graduates will bring with them the knowledge of sciences which would help Saudi Arabia enter the field of research and development. The overseas scholarship is in parallel to the expansion of the existing universities and the establishment of new universities in the Kingdom. King Abdullah and Crown Prince Naif are always in constant communication with education officials to ensure that the best standards are met. King Abdullah and Crown Prince Naif are always present when an educational institute is being officially inaugurated. And they are both present when a major graduation ceremony is held in any university in the Kingdom. Saudi Arabia is investing billions of dollars in the most important assets for any country, the youth.

In present time, due to the constant graduation of Saudi students in different countries, there is an annual graduation ceremony for Saudi students being held in some world capitals such as Washington D.C. and it is attended by Saudi officials from the Ministry of Higher Education and various government departments. At this stage, Saudi new graduates are ready to be part of the driving force to build and maintain the country. And with thousands of students coming back home to the Kingdom, it is very important for these new Saudi graduates to be oriented and briefed about the availability of jobs and the description of those jobs in the Kingdom. The Ministry of Higher Education under the leadership of Dr. Khalid Al-Anqari can hire some of the new graduates to be a link between the Saudi job market and the new graduates. Those hired by the Ministry of Higher Education can be like a public relations body which would give the Saudi companies the status of new graduates, their specialty and their track record of education while abroad. Also, it is important for the new public relation body to be like a hiring agent for the new students and they would direct them to the proper place and the proper company or government agency. The Saudi job market is the largest in the Middle East. So, it is very important for the new Saudi graduates to be hired short time after their arrival from abroad. And with the present economic boom, it is not difficult to absorb the new graduates in the job market. We all know that the other Gulf states also have an economic boom and those countries are also in need of highly skilled and highly educated young men and women. And if our young men and women are not absorbed by our job market, then we will see Saudi brains being utilized by other Gulf states. Saudi government has spent time and billions of dollars to educate those young men and women, so, it would be a great loss for us to see them leave the country and work in a neighboring Gulf state.




We, the Saudis have to give our young men and women time to adopt and time to refine their skills. And it is also important to give them more on job training in order to refine and improve their skills. We, the Saudis want to cultivate what we have planted. Taking care of the youth and educating them is the most important thing for any country to develop itself. Youth are the driving mechanism for the development of any society. Saudi Arabia now is entering a new era in development. The government is looking for different venues to diversify the massive Saudi economy. Now, we are looking for solar energy. Mining for different minerals is expanding. All those new projects need the finest educated Saudis to develop them and to sustain its operation. The Kingdom of Saudi Arabia now is one of the leading countries in human developments and the Ministry of Education and the Ministry of Higher Education went the extra mile to fulfill the goals of development. The Custodian of the two Holy Mosques scholarship program to educate young men and women is an important and strategic step to ensure the continuity of the Saudi prosperity.

'என் இறைவா! எனக்குக் கல்வி ஞானத்தை அதிகப்படுத்து' எனக் கூறுவீராக!
-குர்ஆன் 20:114

Tuesday, February 28, 2012

நாசாவில் ஒரு சவுதி யுவதி!

சுற்றுச் சூழல் மற்றும் உயிர் தொழில் நுட்ப பிரிவில் டாக்டரேட் பட்டம் பெற்ற மஜ்தா அப்ராஸ் என்ற சவுதி பெண்மணி நாசாவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் லண்டன் பல்கலைக் கழகத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றவர்.

நாசா வளைகுடா பிராந்தியத்தின் தலைவரான முஹம்மது இபுறாகிம் கூறும்போது 'மஜ்தா அப்ராஸ் வளைகுடா பகுதிகளில் சுற்றுச் சூழலை கண்காணிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டு அதில் வெற்றியும் பெற்றதற்காக இப்பதவியில் அமர்த்தப்படுவதாக' கூறினார்.




பதவி ஏற்பு விழாவில் அப்ராஸ் பேசும் போது 'எனது இந்த வெற்றிக்கு காரணமான மன்னர் அப்துல்லாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த வழிகாட்டியை இந்த நாடு பெற்றுள்ளது. பெண்கள் முன்னேற்றத்தில் மன்னர் அதீத அக்கறை காட்டுகிறார். பிரின்ஸ் நூரா பல்கலைக் கழகம் மூலம் இனி சவுதி பெண்கள் சமூகத்தில் சிறந்த இடத்தைப் பெற முடியும். மேலும் அதிகார மையமான சூரா கவுன்ஸிலிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகாரத்தை பெண்களுக்கும் பகிர்ந்தளித்திருக்கிறார் மன்னர். மேலும் எனது இந்த முன்னேற்றத்திற்கு பிரின்ஸ் துர்க்கி பின் நாஸரும் ஒரு காரணம். அவர் கேட்டுக் கொண்டதால்தான் சவுதி சுற்றுச் சூழல் அமைப்பின் பெண்கள் பிரிவுக்கு தலைவியாக இருக்கிறேன்.' என்றார்.

மேலும் மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக் கழகத்தின் உயிரியல் பிரிவில் ஆசிரியராகவும் நுண்ணுயிரியியல், சுற்றுச் சூழல் என்று பல தலைப்புகளில் விரிவுரையும் ஆற்றியுள்ளார். ஜெத்தா பெண்கள் அமைப்பிலும், கேன்ஸர் சம்பந்தமான அல் ஈமான் குரூப்பிலும், எகிப்திய ஆராய்ச்சி சென்டரிலும், சவுதி எய்ட்ஸ் தடுப்பு அமைப்பிலும் உறுப்பினராக உள்ளார் மஜ்தா அப்ராஸ்.

நன்றி அரப் நியூஸ்
25-02-2012

எட்டு மணி நேரம் வேலை பார்க்கவே நமக்கு உலகத்து டென்ஷனும் வந்து விடுகிறது. இந்த பெண்மணி இத்தனை வேலைகளையும் சளிப்பில்லாமல் பார்ப்பது ஆச்சரியம்தானே!
முந்தய பதிவில் ஒரு அன்பர் இஸ்லாமிய ஆட்சி வந்தால் பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் அமைதி போய் விடும் என்றும் பின்னூட்டமிட்டிருந்தார். அவருக்கு நான் சொல்லிக் கொள்வது.

பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, டுனீஷியா போன்ற எந்த நாடுகளும் இஸ்லாமிய ஷரீயாவை பின்பற்றவில்லை. அதன் ஆட்சியாளர்கள் மக்களை சுரண்டுவதிலும், தங்களின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எதையும் செய்யக் கூடியவர்களாகவுமே இருந்தனர். ஆட்சித் தலைமை மார்க்கப் பற்றுடன் இருந்தால் அதன் குடிமக்களும் மன்னனையொட்டி நேர்மையாக நடப்பர். நாட்டு மக்களும் சுபிட்சமாக இருப்பர். சதாமிலிருந்து கடாபியிலிருந்து அனைத்து தலைவர்களும் ஆடம்பர வாழ்விலும் சுகபோகங்களிலும் திளைத்தனர். நேரம் பார்த்து அமெரிக்காவுக்கு எண்ணெய் வயல்கள் மீது மோகம் வர நாட்டின் எதிர்ப்பாளர்களை பயன்படுத்திக் கொண்டு ஆட்சிகளையும் வீழ்த்தியது. ஆனால் அமெரிக்கா நினைத்ததற்கு மாற்றமாக புதிதாக ஆட்சியில் அமர்ந்த அனைத்து நாடுகளிலும் இஸ்லாமிய சட்டங்கள் பின் பற்றப்படுகின்றன. மக்களும் அதனை விரும்புகின்றனர். தங்களுக்கு அமைதியும் சுபிட்சமும் இஸ்லாமிய சட்டங்கள் மூலமாகத்தான் கிடைக்கும் என்று எண்ண ஆரம்பித்துள்ளனர். இனி வரும் காலங்களில் இந்த நாடுகளில் முழுமையான இஸ்லாமிய சட்டத்தால் அமைதி திரும்பும்.

சவுதி அரேபியாவில் கராமா என்ற அமைப்பு அல்வலீது பவுண்டேஷன் மற்றும் இளவரசி அமீரா துணையோடு 90000 டாலர் அன்பளிப்பில் தற்போது இயங்கி வருகிறது. முஸ்லிம் பெண் வழக்கறிஞர்களை உலக தரத்திற்கு உயர்த்துவதே கராமாவின் நோக்கம். உலக அளவில் மனித குலத்தின் கண்ணியம், மத சுதந்திரம், மத உரிமை, இஸ்லாமிய சட்டங்கள் போன்றவற்றில் முஸ்லிம் பெண்கள் சிறந்த இடத்தைப் பெற வேண்டும் என்பதற்காக இவ்வமைப்பு பாடுபடுகிறது. இந்த அமைப்பு வாஷிங்டனிலும் தனது கிளையை துவக்கியுள்ளது.

உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் ஓரளவு ஷரியத் சட்டத்தின் படி ஆட்சி நடைபெறும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இங்கு பெண்களுக்கு கல்வி கற்பதில், வேலைக்குச் செல்வதில் எந்த விதத்திலும் சவுதி அரசு தடை போடவிலலை. இஸ்லாமும் அதற்கு தடை போடவில்லை. ஆண்களை விட பெண்களே இன்று கல்வி கற்பதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். பெண்களுக்கு கல்வியைக் கொடுப்பதோடு அவர்களின் பாதுகாப்புக்கும் அரசு ஆவண செய்கிறது.

//The king’s latest announcement promised that women could vote in the next municipal elections, scheduled for 2015. Half of the municipal council’s seats are elected, and the other half are appointed by the government. The powers of the councils remain unclear and are not significant, though recent changes ensure that each municipal council can directly work with the local mayor and governor, and not only report to the minister of municipal and rural affairs in Riyadh.

The king also announced that women could become full voting members of the Shura Council, an appointed consultative body that has authority to review laws and question ministers but cannot propose or veto legislation and has no binding powers. In 2006 the Shura Council appointed six women as advisors, a number that has now risen to 12. //-BBC




2015ல் நடக்கவிருக்கும் தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமையையும் பெண்கள் பெற்றுள்ளனர். அதிகார மையமான சூரா கவுன்சிலிலும் அங்கததினர்களாயுள்ளனர் பெண்கள்.

நம் நாட்டில் என்ன செய்கிறோம். பெண் விடுதலை என்ற பெயரில் ஆணும் பெண்ணும் கல்லூரியிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் சேர விட்டதனால் பல இடங்களில் பிரச்னை. விபரம் தெரியாத இந்த கல்லூரி பருவத்தில் காதலில் விழுந்து தங்களின் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்பவர்களே அதிகம்.

வேலை பார்க்கும் இடங்களிலும் பெண்களுக்கு சில ஆண்கள் கொடுக்கும் டார்ச்சர் சொல்லி மாளாது. எனவேதான் இஸ்லாம் படிப்பதாக இருந்தாலும் வேலை பார்ப்பதாக இருந்தாலும் பெண்களையும் ஆண்களையும் தனித்தனியாக்கி விடுங்கள் என்கிறது. இதனால் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ என்ன பிரச்னை வந்து விடப் போகிறது?http://www.blogger.com/img/blank.gif அலுவலக நேரங்களில் பெண்களிடம் ஜொள்ளு விட்டுக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து மாறி தங்களது வேலையில் கவனத்தை செலுத்துவார்கள். கல்லூரிகளிலும் பெண்களின் பின்னால் சுற்றுவதை விட்டு விட்டு இவன் படிப்பில் கவனத்தை செலுத்துவான்.


உலகின் மிகப் பெரிய பெண்கள் பல்கலைக்கழகமான பிரினஸ் நூரா பல்கலைக் கழகத்தைப் பற்றி நான் முன்பு இட்ட பதிவு.

-------------------------------------------------------------

பெண் விடுதலை என்று கூறி நாம் பெண்களை எந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளோம் என்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த செய்தியை பார்ப்போம்.

ராமநாதபுரம்:முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை சுப்பிரமணி மகள் ரேணுகா, 27. இவரது 14 வயதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தென்னரசு, வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார். பட்டுக்கோட்டையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை ரேணுகா சந்தித்தார். அப்போது முதல் திருமணத்தை மறைத்த ரேணுகா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்து கொண்டார். (செந்தில்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்).

இருவரும் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தநிலையில், அரண்மனை அருகே ஒரு கடையில் ரேணுகா வேலைக்கு சென்றார். அங்கு வந்து சென்ற வாடிக்கையாளரான மதுரை திருப்பரங்குன்றம் செந்தில்மனோகரன் என்பவரிடம் ரேணுகா, முதல் இரண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் விபரத்தை மறைத்தார். இவர்கள், கடந்த ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வசித்து வந்தனர்.

மனைவியை காணவில்லை என செந்தில்குமார் தேடி வந்தபோது, சக்கரக்கோட்டையில் வசித்து வருவது தெரிந்தது. அங்கு சென்று ரேணுகாவை தன்னுடன் அனுப்பி வைக்க செந்தில் மனோகரனை வற்புறுத்தினார். இருவருக்கும் இடையே, ரேணுகா, யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில், ""ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழவே, முதல் மற்றும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொண்டேன்,'' என தெரிவித்தார்.

"இனி ராமநாதபுரம் பக்கமே தலைகாட்டக்கூடாது' என எச்சரித்து, பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோரிடம் ரேணுகாவை, போலீசார் ஒப்படைத்தனர். இதில் ஏமாற்றமடைந்த செந்தில்மனோகரன், செந்தில்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
-dinamalar 23-02-2012

பேசாமல் அந்த கணவர்கள் சீட்டு குலுக்கிப் போட்டு மனைவியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

------------------------------------------------------------

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக வாசலில், மகளை கழுத்தறுத்து கொலைமுயற்சி செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் வானமாதேவி பகுதியை சேர்ந்தவர் ஞானவள்ளி. இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் காதல் வயப்பட்டிருந்த நிலையில், இவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர்கள் உறவினர் பையனை நிச்சயம் செய்தனர். இதுதொடர்பாக, பெற்றோருக்கும், ஞானவள்ளிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை கல்லூரிக்கு வந்த ஞானவள்ளியை, அவரது தந்தை கல்லூரி வாசலிலேயே கழுத்தை அறுத்தார். இதில், படுகாயமடைந்த ஞானவள்ளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு நிலவிவருகிறது. சிதம்பரம் போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dinamalar 20-02-2012

Saturday, February 18, 2012

'இந்தியர்களிடம் சொல்லி பலனில்லை' - சவுதி முனிசிபாலிடி!

சவுதி தலைநகர் ரியாத்தில் பத்ஹா என்ற சிட்டியை வெளிநாட்டவர் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இது பற்றி முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டு உள்ளேன். விடுமுறை நாட்களில் இங்கு வந்து நேரத்தை கழிப்பது பலருக்கு தொடர்கதை. அவ்வாறு வாராவாரம் வரும் போது ஒரு முக்கியமான சந்திப்பில் அனைவரும் கலந்துரையாடுவது வழக்கம். இதில் தமிழர்கள் சீகோ பில்டிங் என்ற காம்ப்ளக்ஸீக்கு அருகில் ஒன்று கூடுவர். மதியம் 3 மணிக்கு கூடும் கூட்டம் கலைவதற்கு இரவு 11 மணி கூட ஆகும்.




தங்களது குடும்ப கவலைகள் கம்பெனி பிரச்னை என்று பல விஷயங்களும் இங்கு அலசப்படும். இவ்வாறு பேச்சு தொடர்ந்தால் அது 2 மணி 3 மணி நேரம் வரை கூட தொடரும். இடையில் சிறு நீர் கழிக்க என்ன செய்வது?

பக்கத்தில் மசூதி இருக்கிறது. மாற்று மதத்தவரும் பயன்படுத்த வேண்டி கழிவறைக்கான வழியை மசூதியின் மறுபக்கம் வைத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 50 க்கு மேற்பட்ட கழிவறைகள் இலவசமாக பயன்படுத்த அரசால் கட்டப்பட்டிருக்கிறது. அனால் நம் உடன் பிறப்புகள் ரத்தத்தின் ரத்தங்கள் அதனை உபயோகப்படுத்த மாட்டார்கள். வேறு என்ன செய்வார்கள்.?

சீகோ பில்டிங்குக்கு எதிர்ப்புறம் மேம்பாலத்துக்குக் கீழ் மிகப் பெரிய காலியான இடம் உண்டு. நம் மக்கள் அந்த இடத்தையே பப்ளிக் டாய்லெட்டாக உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். நான் சில நேரம் அந்த வழியாக போனால் நம் ஊர் பேருந்து நிலையங்கள்தான் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவு சிறுநீர் நாற்றம் அந்த ஏரியாவையே அசிங்கப்படுத்தும்.

சவுதி காவல் துறை இவ்வாறு சிறுநீர் கழிப்பவர்களை தடுத்து சில நேரங்களில் விரட்டவும் செய்வார்கள். ஆனால் நம் மக்கள் காவல்துறைக்கு போக்கு காட்டி விட்டு அவர்கள் கொஞ்சம நகர்ந்தவுடன் திரும்பவும் தங்கள் வேலையை ஆரம்பித்து விடுவர்.



ரியாத் முனிசிபாலிடியில் இது பற்றி ஆலோசித்தனர். இதற்கு என்ன தீர்வு? போலீசார் எவ்வளவுதான் கடுமையாக நடந்து கொண்டாலும் சிறுநீர் கழிப்பதை தடுக்க முடியவில்லை. 'இந்தியர்களிடம் சொல்லி ஒரு பயனுமில்லை. இதற்கு நாம் தான் ஒரு முடிவு கட்ட வேண்டும்' என்று கூடி பேசினர். கடைசியில் ஒரு முடிவெடுத்தனர். பாலத்துக்கு கீழ் வெற்று இடங்களை இரும்பு வேலி அமைத்து சிறுநீர் கழிப்போரை தடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அந்த பாலத்தின் இரு மருங்கிலும் படத்தில் உள்ளது போல் இரும்பினால் ஆன வேலியை அமைத்து விட்டனர். தற்போது நமது உடன் பிறப்புகள் மசூதிக்கு அருகில் உள்ள பொது கழிவறையை நோக்கி மிகவும் மன சோர்வுடன் சென்று தங்கள் இயற்கை தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். :-)

தற்போது அந்த இடம் மிகவும் சுகாதாரமாகவும் சுத்தமாகவும் உள்ளது. இப்பொழுது கழிவறையை நாடும் இந்த மக்கள் முன்பு ஏன் செல்லவில்லை? என்பது எனக்கு புரியவில்லை. எப்படியோ அந்த இடம் சுகாதாரமானது கண்டு மகிழ்ச்சி!

239. 'ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4

இங்கு இரண்டு கட்டளை சொல்லப்படுகிறது. தேங்கிய தண்ணீரில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்றும் அது போன்ற அசுத்தமான குட்டைகளில் குளிக்கக் கூடாது என்றும் விளங்குகிறோம். அடுத்து வேறொரு அறிவிப்பில் மேட்டுப் பகுதியில் சென்று சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

6128. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒரு கிராமவாசி மஸ்ஜிது(ந் நபவீ பள்ளி வாசலு)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் குதித்தெழுந்தனர். அப்போது மக்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரைவிட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை' என்று கூறினார்கள்.
Volume :6 Book :78

6322. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும்போது 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி' என்று கூறுவார்கள்.
(பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

_____________________________________________________________


நம் நாட்டு மக்களை நமது மத்திய அமைச்சர் எந்த அளவு புரிந்து வைத்துள்ளார் என்பதற்கு இந்த செய்தி ஒரு உதாரணம்.



புதுடில்லி: ""பெண்களை பொறுத்தவரை, தங்களுக்கு மொபைல் போன் வேண்டும் என கேட்கின்றனரே தவிர, கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கேட்பதில்லை. நம் நாட்டில் பொது சுகாதாரம் என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது,'' என, மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்த நிகழ்ச்சி, டில்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது: பொது சுகாதாரம் என்பது, நம் நாட்டில் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. தற்போது, நமது வாழ்வியல் அணுகுமுறை மாற்றம் குறித்து அதிகம் பேசுகிறோம். அதே நேரத்தில், மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களை பொறுத்தவரை, தங்களுக்கு மொபைல் போன் வேண்டும் என, கேட்கின்றனரே தவிர, கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, யாரும் கேட்பதில்லை. இது போன்ற அணுகுமுறை தான், தற்போது நம்மிடையே உள்ளது.
-தினமலர்
17-02-2012



'ஹலோ...சார்....இவ்வளவு சொல்லியும் திரும்பவும் பப்ளிக் டாய்லடடா! திருந்துங்க உடன் பிறப்புக்களே!....' :-)

டிஸ்கி: 'பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்போம்'