1400 வருடங்களுக்கு முன்பு அரபுலகம் பல தெய்வ வழிபாட்டிலும், சாதி வெறியிலும் மிகைத்திருந்த போது தமிழ் நாட்டில் நமது முன்னோர்கள் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மிக உயர்ந்த இடத்திலேயே இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் சில பாடல்களை பார்த்து வருகிறோம்....
நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்குந்
தானான உண்மைதனைச் சாருநாள் எந்நாளோ.
எனக்குள் குடி கொண்ட 'நான்' என்ற அகங்காரம், ஆணவம் போன்ற துர் குணங்கள் நான் அறியாமல் என்னை விட்டு அகல வேண்டும்: அவ்வாறு நீங்கியவுடன் எல்லா உயிர்களுக்கும் எல்லா உலகங்களுக்கும் தனது அருளை நீக்கமற செலுத்தி வரும் பரம் பொருளான அந்த இறைவனை காணும் நாள் எந்நாளோ?
தாயுமானவர் பாடல்கள் 636:7
இறைவனைக் காண வேண்டும்: அவ்வாறு காணும் நேரம் எனக்குள் இருக்கும் அகந்தை அகம்பாவம் அகங்காரம் அனைத்தும் நான் அறியாமலேயே என்னை விட்டு நீங்கி விட வேண்டும் என்கிறார் தாயுமானவர். எல்லாவற்றையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்ற இறைவனுக்கு முன்னால் அற்ப மனிதனாகிய நான் எதற்கு அகங்காரம் கொண்டு அலைய வேண்டும் என்று கேட்கிறார் தாயுமானவர்.
ஆணவம்,அகங்காரம், கர்வம் பற்றி குர்ஆன் கூறும் கருத்தையும் பார்ப்போம்.
மலைகளின் உயரத்தை அடையவே முடியாது!
'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது.'
17 : 37 - குர்ஆன்
மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ராக்கெட் தொழில் நுட்பத்தால் பூமிக்கு அப்பாலும் மனிதனின் அறிவு விரிகிறது. இன்னும் ஒரு இருபது வருடங்களில் ஏற்படப் போகும் மாற்றங்களை இப்பொழுதே நம்மால் கணித்து விட முடிகிறது. ஆனால் சில விஷயங்களில் உன்னால் முடியாது என்று இறைவன் சவால் விட்டு சில விபரங்களை குர்ஆனில் ஆங்காங்கே கோடிட்டு காட்டுகிறான். அது போன்ற சவால் விடும் வசனங்களில் ஒன்று தான் நாம் மேலே பார்த்தது.
மனிதன் இன்று வரை பூமியின் கீழ் துளையிட்டு அதிக தூரம் செல்ல முடியவில்லை. அதிகபட்சமாக அவன் சென்ற தூரம் முன்று கிலோ மீட்டர் மட்டுமே! இதற்கு மேலும் துளையிட்டு மனிதன் அங்கு செல்ல முடியாது. சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் கைவிரித்துவிட்டனர்.
மலைகளின் உயரத்தை....
உலகின் மிக உயரமான மலை இமய மலை ஆகும். இம் மலையின் உயரம் சுமார் ஒன்பது கிலோ மீட்டராகும். இமய மலையின் உச்சியை மனிதன் அடைந்து விட்டான். ஆனால் அந்த உயரத்திற்கு பூமியை துளையிட்டு மனிதனால் செல்ல முடியுமா என்றால் முடியாது என்று குர்ஆன் அடித்து சொல்கிறது. வலைப் பக்கத்திலேயே ஒரு சிலர் இறைவனை விட மனிதன் சக்தி படைத்தவன் என்று நாத்திக வாதம் பேசுவதைப் பார்க்கிறோம். அப்படிப் பட்டவர்களைப் பார்த்து இறைவன், 'இது போன்று ஆணவத்தில் பிதற்றி திரியாதே! உன்னால் பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அளவை அடையவே முடியாது' என்று எச்சரிக்கின்றான்.
விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற குர்ஆன் பூமிக்கு அடியில் நீண்ட மலையின் உயரத்திற்கு போக முடியாது என்று அடித்துச் சொல்கிறது.
தன் இனத்தை விட மற்ற இனம் தாழ்ந்தது என்று இன்றும் எழுதியும் பேசியும் வருபவர்களைப் பார்க்கிறோம். அதேபோல் நான் பெரும் சிந்தனையாளன், நான் இந்த நாட்டின் அதிபதி, நான் பெரும் கோடீஸ்வரன் என்றெல்லாம் இறுமாப்போடு உலகில் வலம் வருவோரையும் இன்றும் பார்க்கிறோம். இது போன்ற எண்ணம் கொண்டவர்களை எச்சரிக்கும் விதமாக மேற்கண்ட குர்ஆனிய வசனம் அமைந்துள்ளது.
நீ வானத்துக்கு மேலே போகலாம், கணிணித் துறையினால் உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வரலாம். ஆனால் உன் காலுக்கு கீழே இருக்கும் பூமியை பிளந்து மலைகளின் உயரத்தை அடைய முடியுமா என்றால் முடியாது. எனவே வீண் பெருமை பேசி கர்வத்துடன் உலகில் நடக்காதே என்பது இதன் மூலம் நமக்கு கிடைக்கும் பாடம். அதே போல் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு சொன்ன இந்த கருத்து இன்றும் இனி என்றும் மெய்ப்பிக்கப் படுவதால் இது நம்மைப்படைத்த இறைவனின் வார்த்தைதான் என்ற முடிவுக்கும் வருகிறோம்.
இறைவனே மிக அறிந்தவன்
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Showing posts with label தாயுமானவர். Show all posts
Showing posts with label தாயுமானவர். Show all posts
Wednesday, April 01, 2015
ஆணவம் அழித்தல் - குர்ஆனும் தாயுமானவரும்
Saturday, November 16, 2013
இறைவனின் உருவம் பற்றி தாயுமானவர்
அருவுருவம் எல்லாம் அகன்றதுவா யான
பொருளெமக்கு வந்து புலப்படுவ தெந்நாளோ.
பொருள்கள் எல்லாம் கட்புலனாகா நுண்மை நிலையில் அருவமாகவும், கட்புலனாய், உறுப்பு விளங்காப் பிழம்புநிலையில் அருவுருவமாகவும், உறுப்பு விளங்குநிலையில் உருவமாகவும் காணப்படும். இறைவன் இம் முத்திற நிலைகளையும் கடந்த முழுமுதல்வன். தானாக நிற்கும் பெரும்பொருள். அது திருவருளால் எளியேமுக்கு வந்து புலப்படுநாள் எந்நாளோ?
636:10
அருவம்: உருவமற்றது, காண முடியாத ஒன்று
அருவுருவம்: வடிவம் உண்டென்றும், வடிவம் இல்லை என்றும் சொல்ல முடியாத நடு நிலைமை
'உலகில் பொருட்கள் எல்லாம் ஆரம்ப நிலையில் கண்ணால் காண முடியாத ஒன்றாக இருந்து அது வடிவமைக்கும் போது உருவத்துக்கும் அருவத்துக்கும் இடைப்பட்ட நிலையான அருவுருவத்துக்கு வரும். அதன் பிறகு அந்த பொருள் முழுமையடைந்தவுடன் முழு உருவத்தையும் நமது கண்ணால் பார்க்க முடிகிறது.
நம்மை படைத்த இறைவனானவன் அருவம், அருவுருவம், உருவம் ஆகிய இந்த மூன்று நிலைகளையும் கடந்தவன். தானாக நிற்கும் அந்த பரம் பொருளான இறைவனை அவனது திருவருளால் இந்த எளியோன் காண்பது எந்நாளோ?' என்கிறார் தாயுமாவர்.
என்ன அழகாக இறைவனுக்குரிய இலக்கணத்தை தாயுமானவர் விவரிக்கிறார் என்பதை பாருங்கள். இறைவனின் உருவத்தை என்னால் கற்பனை செய்ய முடியாது என்று இவர் சொல்லும் போது நமது நாட்டில் இறைவனுக்கு எத்தனை உருவத்தை நமது சகோதரர்கள் கற்பித்து விட்டார்கள்?
இந்து மதத்தின் ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத்தில் 'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது.அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை' என்று வருகிறது.
இனி இறைவனின் உருவத்தைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'
குர்ஆன் 6 : 103
இறைவனை எந்த மனிதனோ இறைவனின் தூதர்களோ பார்த்ததில்லை என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறிகிறோம். இறைவனைப் பார்க்கும் சக்தி மனிதர்களாகிய நமது கண்களுக்கு கொடுக்கப்பட வில்லை என்பதை இதிலிருந்து அறிகிறோம்.
'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.
ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380
மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.
மோசே(மூஸா)யின் சமூகத்தார் இறைவனை நேருக்கு நேர் காட்டுமாறு மோசேயிடம் கேட்டபோது கோபமுற்ற இறைவன் அவர்களை இடியோசையால் தாக்கினான் என்று குர்ஆன் கூறுகிறது.
'முகம்மதே! 'வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் ' என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மோசேயிடம் கேட்டுள்ளனர்..'இறைவனைக் கண் முன்னே எங்களுக்குக் காட்டு' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது.
குர்ஆன் 4 :153
இந்த வரலாறுகளின் மூலம் நமக்குத் தெரிய வருவது இறைவனை யாராலும் நேரில் பார்க்க முடியாது என்பதே! 'நான் இறைவனைப் பார்த்தேன்' என்று எந்த ஆன்மீகவாதியாவது சொன்னால் மக்களை ஏமாற்றுவதற்காக பொய் சொல்கிறார் என்று தான் நாம் முடிவுக்கு வர முடியும். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விட முடியும். இன்று இந்து,இஸ்லாம், கிறித்தவம் என்று எந்த மார்க்கத்தையும் இந்த போலி ஆன்மீகவாதிகள் விட்டு வைக்கவில்லை.இதற்கெல்லாம் காரணம் நம்மை விட இந்த ஆன்மீகவாதிகள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற போலி நம்பிக்கைதான்.
ஒரு முறை எங்கள் கிராமத்தில் ஒரு மௌலானா(ஆன்மீக குரு) என்ற பெயரில் ஒரு பெரியவர் வெளியூர்க்காரர் அனைவருக்கும் ஓதி விடுவதாகவும் மறைவான விஷயங்கள் பலவற்றை சொல்வதாகவும் நிறைய காணிக்கைகள் சேர்வதாகவும் கேள்விப் பட்டோம்.எங்கள் நண்பர்கள் குழு அவரை சந்திக்க சென்றோம். பெரிய தாடி. பெரிய தலைப்பாகை.கையில் மணிகள் என்று பார்த்தவுடன் மரியாதை வந்து விடும். அவரிடம் கேட்டோம் 'மௌலானா! 'உங்களை தொழுகைக்கு பள்ளிவாசலில் பார்க்க முடிவதில்லையே!' என்று கேட்டோம். அதற்கு அவர்,'நாங்கள் அத்தகைய வணக்கத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.கேள்விகள் கேட்காதீர்கள்.' என்று சிடுசிடுத்தார். 'அடப்பாவி!நெஞ்சார பொய்தன்னை சொல்கிறானே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு இடத்தை காலி பண்ணினோம். அடுத்த இரண்டு நாளில் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் பண்ணினான் என்று ஊர்க்காரர்களே அடித்து விரட்டி விட்டனர். இது போல் பல நிகழ்வுகளை நாம் அன்றாடம் பத்திரிக்கைகளில் படித்தும் மக்கள் திருந்துவதாக இல்லை.
'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்,தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. மறுமையில் இறைவன் அவர்களுடன் பேசமாட்டான்.அவர்களைத் தூய்மைபடுத்தவும் மாட்டான்.அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'
குர்ஆன் 2 :174
போலி ஆன்மீக வாதிகளுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது மேற்கண்ட வசனம்.
பொருளெமக்கு வந்து புலப்படுவ தெந்நாளோ.
பொருள்கள் எல்லாம் கட்புலனாகா நுண்மை நிலையில் அருவமாகவும், கட்புலனாய், உறுப்பு விளங்காப் பிழம்புநிலையில் அருவுருவமாகவும், உறுப்பு விளங்குநிலையில் உருவமாகவும் காணப்படும். இறைவன் இம் முத்திற நிலைகளையும் கடந்த முழுமுதல்வன். தானாக நிற்கும் பெரும்பொருள். அது திருவருளால் எளியேமுக்கு வந்து புலப்படுநாள் எந்நாளோ?
636:10
அருவம்: உருவமற்றது, காண முடியாத ஒன்று
அருவுருவம்: வடிவம் உண்டென்றும், வடிவம் இல்லை என்றும் சொல்ல முடியாத நடு நிலைமை
'உலகில் பொருட்கள் எல்லாம் ஆரம்ப நிலையில் கண்ணால் காண முடியாத ஒன்றாக இருந்து அது வடிவமைக்கும் போது உருவத்துக்கும் அருவத்துக்கும் இடைப்பட்ட நிலையான அருவுருவத்துக்கு வரும். அதன் பிறகு அந்த பொருள் முழுமையடைந்தவுடன் முழு உருவத்தையும் நமது கண்ணால் பார்க்க முடிகிறது.
நம்மை படைத்த இறைவனானவன் அருவம், அருவுருவம், உருவம் ஆகிய இந்த மூன்று நிலைகளையும் கடந்தவன். தானாக நிற்கும் அந்த பரம் பொருளான இறைவனை அவனது திருவருளால் இந்த எளியோன் காண்பது எந்நாளோ?' என்கிறார் தாயுமாவர்.
என்ன அழகாக இறைவனுக்குரிய இலக்கணத்தை தாயுமானவர் விவரிக்கிறார் என்பதை பாருங்கள். இறைவனின் உருவத்தை என்னால் கற்பனை செய்ய முடியாது என்று இவர் சொல்லும் போது நமது நாட்டில் இறைவனுக்கு எத்தனை உருவத்தை நமது சகோதரர்கள் கற்பித்து விட்டார்கள்?
இந்து மதத்தின் ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத்தில் 'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது.அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை' என்று வருகிறது.
இனி இறைவனின் உருவத்தைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'
குர்ஆன் 6 : 103
இறைவனை எந்த மனிதனோ இறைவனின் தூதர்களோ பார்த்ததில்லை என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறிகிறோம். இறைவனைப் பார்க்கும் சக்தி மனிதர்களாகிய நமது கண்களுக்கு கொடுக்கப்பட வில்லை என்பதை இதிலிருந்து அறிகிறோம்.
'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.
ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380
மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.
மோசே(மூஸா)யின் சமூகத்தார் இறைவனை நேருக்கு நேர் காட்டுமாறு மோசேயிடம் கேட்டபோது கோபமுற்ற இறைவன் அவர்களை இடியோசையால் தாக்கினான் என்று குர்ஆன் கூறுகிறது.
'முகம்மதே! 'வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் ' என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மோசேயிடம் கேட்டுள்ளனர்..'இறைவனைக் கண் முன்னே எங்களுக்குக் காட்டு' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது.
குர்ஆன் 4 :153
இந்த வரலாறுகளின் மூலம் நமக்குத் தெரிய வருவது இறைவனை யாராலும் நேரில் பார்க்க முடியாது என்பதே! 'நான் இறைவனைப் பார்த்தேன்' என்று எந்த ஆன்மீகவாதியாவது சொன்னால் மக்களை ஏமாற்றுவதற்காக பொய் சொல்கிறார் என்று தான் நாம் முடிவுக்கு வர முடியும். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விட முடியும். இன்று இந்து,இஸ்லாம், கிறித்தவம் என்று எந்த மார்க்கத்தையும் இந்த போலி ஆன்மீகவாதிகள் விட்டு வைக்கவில்லை.இதற்கெல்லாம் காரணம் நம்மை விட இந்த ஆன்மீகவாதிகள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற போலி நம்பிக்கைதான்.
ஒரு முறை எங்கள் கிராமத்தில் ஒரு மௌலானா(ஆன்மீக குரு) என்ற பெயரில் ஒரு பெரியவர் வெளியூர்க்காரர் அனைவருக்கும் ஓதி விடுவதாகவும் மறைவான விஷயங்கள் பலவற்றை சொல்வதாகவும் நிறைய காணிக்கைகள் சேர்வதாகவும் கேள்விப் பட்டோம்.எங்கள் நண்பர்கள் குழு அவரை சந்திக்க சென்றோம். பெரிய தாடி. பெரிய தலைப்பாகை.கையில் மணிகள் என்று பார்த்தவுடன் மரியாதை வந்து விடும். அவரிடம் கேட்டோம் 'மௌலானா! 'உங்களை தொழுகைக்கு பள்ளிவாசலில் பார்க்க முடிவதில்லையே!' என்று கேட்டோம். அதற்கு அவர்,'நாங்கள் அத்தகைய வணக்கத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.கேள்விகள் கேட்காதீர்கள்.' என்று சிடுசிடுத்தார். 'அடப்பாவி!நெஞ்சார பொய்தன்னை சொல்கிறானே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு இடத்தை காலி பண்ணினோம். அடுத்த இரண்டு நாளில் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் பண்ணினான் என்று ஊர்க்காரர்களே அடித்து விரட்டி விட்டனர். இது போல் பல நிகழ்வுகளை நாம் அன்றாடம் பத்திரிக்கைகளில் படித்தும் மக்கள் திருந்துவதாக இல்லை.
'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்,தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. மறுமையில் இறைவன் அவர்களுடன் பேசமாட்டான்.அவர்களைத் தூய்மைபடுத்தவும் மாட்டான்.அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'
குர்ஆன் 2 :174
போலி ஆன்மீக வாதிகளுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது மேற்கண்ட வசனம்.
Thursday, November 14, 2013
ஆணவம் அழித்தல் - தாயுமானவர்

1400 வருடங்களுக்கு முன்பு அரபுலகம் பல தெய்வ வழிபாட்டிலும், சாதி வெறியிலும் மிகைத்திருந்த போது தமிழ் நாட்டில் நமது முன்னோர்கள் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மிக உயர்ந்த இடத்திலேயே இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் சில பாடல்களை பார்த்து வருகிறோம்....
நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்குந்
தானான உண்மைதனைச் சாருநாள் எந்நாளோ.
எனக்குள் குடி கொண்ட 'நான்' என்ற அகங்காரம், ஆணவம் போன்ற துர் குணங்கள் நான் அறியாமல் என்னை விட்டு அகல வேண்டும்: அவ்வாறு நீங்கியவுடன் எல்லா உயிர்களுக்கும் எல்லா உலகங்களுக்கும் தனது அருளை நீக்கமற செலுத்தி வரும் பரம் பொருளான அந்த இறைவனை காணும் நாள் எந்நாளோ?
தாயுமானவர் பாடல்கள் 636:7
இறைவனைக் காண வேண்டும்: அவ்வாறு காணும் நேரம் எனக்குள் இருக்கும் அகந்தை அகம்பாவம் அகங்காரம் அனைத்தும் நான் அறியாமலேயே என்னை விட்டு நீங்கி விட வேண்டும் என்கிறார் தாயுமானவர். எல்லாவற்றையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்ற இறைவனுக்கு முன்னால் அற்ப மனிதனாகிய நான் எதற்கு அகங்காரம் கொண்டு அலைய வேண்டும் என்று கேட்கிறார் தாயுமானவர்.
ஆணவம்,அகங்காரம், கர்வம் பற்றி குர்ஆன் கூறும் கருத்தையும் பார்ப்போம்.
மலைகளின் உயரத்தை அடையவே முடியாது!
'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது.'
17 : 37 - குர்ஆன்
மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ராக்கெட் தொழில் நுட்பத்தால் பூமிக்கு அப்பாலும் மனிதனின் அறிவு விரிகிறது. இன்னும் ஒரு இருபது வருடங்களில் ஏற்படப் போகும் மாற்றங்களை இப்பொழுதே நம்மால் கணித்து விட முடிகிறது. ஆனால் சில விஷயங்களில் உன்னால் முடியாது என்று இறைவன் சவால் விட்டு சில விபரங்களை குர்ஆனில் ஆங்காங்கே கோடிட்டு காட்டுகிறான். அது போன்ற சவால் விடும் வசனங்களில் ஒன்று தான் நாம் மேலே பார்த்தது.
மனிதன் இன்று வரை பூமியின் கீழ் துளையிட்டு அதிக தூரம் செல்ல முடியவில்லை. அதிகபட்சமாக அவன் சென்ற தூரம் முன்று கிலோ மீட்டர் மட்டுமே! இதற்கு மேலும் துளையிட்டு மனிதன் அங்கு செல்ல முடியாது. சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் கைவிரித்துவிட்டனர்.
மலைகளின் உயரத்தை....
உலகின் மிக உயரமான மலை இமய மலை ஆகும். இம் மலையின் உயரம் சுமார் ஒன்பது கிலோ மீட்டராகும். இமய மலையின் உச்சியை மனிதன் அடைந்து விட்டான். ஆனால் அந்த உயரத்திற்கு பூமியை துளையிட்டு மனிதனால் செல்ல முடியுமா என்றால் முடியாது என்று குர்ஆன் அடித்து சொல்கிறது. வலைப் பக்கத்திலேயே ஒரு சிலர் இறைவனை விட மனிதன் சக்தி படைத்தவன் என்று நாத்திக வாதம் பேசுவதைப் பார்க்கிறோம். அப்படிப் பட்டவர்களைப் பார்த்து இறைவன், 'இது போன்று ஆணவத்தில் பிதற்றி திரியாதே! உன்னால் பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அளவை அடையவே முடியாது' என்று எச்சரிக்கின்றான்.
விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற குர்ஆன் பூமிக்கு அடியில் நீண்ட மலையின் உயரத்திற்கு போக முடியாது என்று அடித்துச் சொல்கிறது.
தன் இனத்தை விட மற்ற இனம் தாழ்ந்தது என்று இன்றும் எழுதியும் பேசியும் வருபவர்களைப் பார்க்கிறோம். அதேபோல் நான் பெரும் சிந்தனையாளன், நான் இந்த நாட்டின் அதிபதி, நான் பெரும் கோடீஸ்வரன் என்றெல்லாம் இறுமாப்போடு உலகில் வலம் வருவோரையும் இன்றும் பார்க்கிறோம். இது போன்ற எண்ணம் கொண்டவர்களை எச்சரிக்கும் விதமாக மேற்கண்ட குர்ஆனிய வசனம் அமைந்துள்ளது.
நீ வானத்துக்கு மேலே போகலாம், கணிணித் துறையினால் உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வரலாம். ஆனால் உன் காலுக்கு கீழே இருக்கும் பூமியை பிளந்து மலைகளின் உயரத்தை அடைய முடியுமா என்றால் முடியாது. எனவே வீண் பெருமை பேசி கர்வத்துடன் உலகில் நடக்காதே என்பது இதன் மூலம் நமக்கு கிடைக்கும் பாடம். அதே போல் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு சொன்ன இந்த கருத்து இன்றும் இனி என்றும் மெய்ப்பிக்கப் படுவதால் இது நம்மைப்படைத்த இறைவனின் வார்த்தைதான் என்ற முடிவுக்கும் வருகிறோம்.
இறைவனே மிக அறிந்தவன்
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்
Labels:
அறிவியல்,
இஸ்லாம்,
குர்ஆன்,
தமிழ்,
தாயுமானவர்
Sunday, November 10, 2013
குர்ஆனும் தாயுமானவரடிகளின் உவமையும்!

அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
குர்ஆன் 24:35
இறைவன் இங்கு ஒளியை நேரிய இஸ்லாமிய மார்க்கத்திற்கும், அதன்படி மனிதர்கள் செயல்பட வேண்டும் என்றும் உதாரணத்தின் மூலம் விளக்குகிறான். இதே உதாரணத்தை நமது தமிழ் சித்தர் பாடல்களிலும் ஆங்காங்கு பார்க்க முடிகிறது.
தாயுமானவடிகள் திருப்பாடல்கள் -1
9. பொருளியல்பு
கைவிளக்கின் பின்னேபோய்க் காண்பார்போல் மெய்ஞ்ஞான
மெய்விளக்கின் பின்னேபோய் மெய்காண்ப தெந்நாளோ.
கையில் விளக்கினை ஏற்றிக்கொண்டு அவ்வெளிச்சத்தின் பின்னே சென்று தனக்கு வேண்டும் உலகியற் பொருள்களைக் காண்பார் போன்று, மெய்யுணர்வு என்று சொல்லப்படுகிற திருவருள் விளக்கை முன்வைத்து அவ்வருள் வெளிச்சத்தின் பின் சென்று மெய்ப்பொருளாம் இறைவனின் சீரிய வழிகாட்டுதலை அடைவது எந்நாளோ என்று தாயுமானவர் மிக உருக்கமாக பாடுகிறார்.
தமிழ்நாட்டில் நமது முன்னோர்கள் இறைவனைப் பற்றியும், இறைவனின் தன்மைகளைப் பற்றியும் மிக உயரிய கருத்தையே கொண்டிருந்திருக்கிறார்கள். பின்னால் வந்த கலாசார புரட்சியினாலும், ஆரியர்கள் போன்ற அந்நிய சக்திகளின் படையெடுப்பாலும் இறைவனைப் பற்றிய கொள்கைகளும் திரிந்து இன்று கண்டதையும் கடவுளாக்கும் நிலைக்கு தமிழன் சென்று விட்டான். தமிழ் பாடல்கள் பலவற்றை ஆராய்ந்தால் அங்கு ஏக தெய்வ கொள்கை பல பாடல்களில் ஊடுருவி வருவதைக் காணலாம்.
இனி வருங்காலங்களில் தமிழ் பாடல்களில் உள்ள ஏக தெய்வ கொள்கைகளை குர்ஆனோடு ஒப்பிட்டு சில ஆக்கங்களை தர முயற்சிக்கிறேன் இறைவன் நாடினால்......
Subscribe to:
Posts (Atom)