Followers

Monday, February 08, 2021

ஒரு அடையாளம் காட்டிவிட முடியுமா...?

 ஒரு நாட்டின் மாமன்னராக இருந்த போதிலும் கடைசி வரை குடிசையிலேயே வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு கம்யூனிஸ்டை அடையாளம் காட்டிவிட முடியும்...!

அடிமையாக (கருதிய) வம்சத்திலிலிருந்து வந்த பிலால்(ரலி) அவர்களை முதன் முதலாக பள்ளிக்கு தொழுகைக்கு அழைப்பு கொடுக்க வைத்த உலகத்தின் வழிகாட்டி முஹம்மது நபி (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு சாதி_மறுப்பாளரை அடையாளம் காட்டிவிட முடியும்...!
தாயின் காலடியில் சொர்க்கம் என்பதை சுட்டிக்காட்டிய முஹம்மது நபி(ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு பெண்ணியவாதியை அடையாளம். காட்டிவிட முடியும்...!
வெறும் முன்னூறு பேருடன் போருக்கு சென்று யுத்தகளத்திலே வெற்றி வாகை சூடிய முஹம்மது நபி (ஸல்)அவர்களை விடவா உங்களால் ஒரு போர்ப்படை_தளபதியை அடையாளம் காட்டிவிட முடியும்...!
உங்கள் மார்க்கம் உங்களுக்கு அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு என்று கூறிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு மதநல்லிணக்க தலைவரை அடையாளம் காட்டிவிட முடியும்...!
என் மகளே திருடியிருந்தாளும் அவர் கையையும் வெட்டுவேன் என்று கூறிய முஹம்மது நபி (ஸல்)அவர்களை விடவா உங்களால் ஒரு நீதியாளரை அடையாளம் காட்டிவிட முடியும்...!
குலப்பெருமையை எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன். அரபி மொழி பேசுபவர் அரபி மொழி பேசாதவரை விட உயர்ந்தவரல்ல... அவரவர் செய்யும் நற்காரியங்களால்தான் உயர்வடைகிறார் என்று சொன்ன நபிகள் நாயகத்தை விடவா உலக மொழிகளை மதிக்கின்ற ஒரு தலைவரை நீங்கள் காட்டி விட முடியும்?

தான் சபைக்கு வரும் போது தனக்கு யாரும் எழுந்து மரியாதை செய்யக் கூடாது: தனது காலில் யாரும் விழக் கூடாது என்று தனது தோழர்களை தடுத்த நபிகள் நாயகத்தை விடவா ஒரு சுய மரியாதைக் காரரை உலகில் காட்டி விட முடியும்?
நீங்கள் எந்த விடயத்தை எடுத்தாலும் எமது முஹம்மது நபி (ஸல்)அவர்களை மிஞ்சி ஒரு அடையாளம் காட்டிவிட முடியுமா...?
நிச்சயம் முடியாது.!!
என் தலைவர் முஹம்மது நபி ஸல்..
என் வழிகாட்டி முஹம்மது நபி ஸல்...
அவர்களைத் தான் நான் பின் பற்றுகிறேன்...
என் இறுதி மூச்சு இருக்கும் வரை பின்பற்றுவேன் இறைவன் நாடினால்..
Saleem SKM
அதையே நானும் முன் மொழிகிறேன்...
சுவனப்பிரியன்



தாடி நீளமாக வைத்துக் கொள்வதால் ரவீந்திர நாத் தாகூர் ஆகி விட முடியுமா?'

 'தாடி நீளமாக வைத்துக் கொள்வதால் ரவீந்திர நாத் தாகூர் ஆகி விட முடியுமா?'

''இன்குலாப் சொல்லி விடுவதால் ஒருவர் பகத்சிங் ஆகி விட முடியுமா?'
முன்பு அதானிக்கு விமான நிலையங்களை தாரை வார்த்தீர்கள். நேற்று ரயில்வேயையும் அதானிக்கு கொடுத்துள்ளீர்கள். இன்று எங்கள் நிலத்தின் மீது கை வைக்க வருகிறீர்கள்.
விவசாயிகளின் நிலம் விவசாயிகளுக்கே சொந்தமானது. அதில் விளையும் பயிர்களுக்கான விலையை நிர்ணயிப்பதும் விவசாயிகளாகத்தான் இருக்க முடியும்.
எந்த விலை கொடுத்தாவது அதானிக்கும் அம்பானிக்கும் எங்கள் நிலம் செல்வதை நாங்கள் தடுப்போம். அதற்காக எங்கள் உயிர்களை தரவும் தயாராக இருக்கிறோம். ''



இஸ்லாத்தை ஏற்ற அன்று தீரும் இந்த தீண்டாமைக் கொடுமை

 என்று தீரும் இந்த தீண்டாமைக் கொடுமை...

இஸ்லாத்தை ஏற்ற
அன்று தீரும் இந்த தீண்டாமைக் கொடுமை



அதே நேரம் பள்ளிக் கூடமும் அனுப்புகிறார்கள்.

 மேலை நாடுகளில் இளம் வயதிலேயே குழந்தைகளை வேலை செய்ய வைத்து பழக்குகிறார்கள். இது அவர்களின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். அதே நேரம் பள்ளிக் கூடமும் அனுப்புகிறார்கள்.




Sunday, February 07, 2021

அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ’ என்றும் சொல்ல வேண்டாம்.

 “(நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ’ என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறிய போதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங் கள்”.


“அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி ‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!’ என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்”. (திருக்குர்ஆன் 17:23,24)