Followers

Monday, February 08, 2021

ஒரு அடையாளம் காட்டிவிட முடியுமா...?

 ஒரு நாட்டின் மாமன்னராக இருந்த போதிலும் கடைசி வரை குடிசையிலேயே வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு கம்யூனிஸ்டை அடையாளம் காட்டிவிட முடியும்...!

அடிமையாக (கருதிய) வம்சத்திலிலிருந்து வந்த பிலால்(ரலி) அவர்களை முதன் முதலாக பள்ளிக்கு தொழுகைக்கு அழைப்பு கொடுக்க வைத்த உலகத்தின் வழிகாட்டி முஹம்மது நபி (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு சாதி_மறுப்பாளரை அடையாளம் காட்டிவிட முடியும்...!
தாயின் காலடியில் சொர்க்கம் என்பதை சுட்டிக்காட்டிய முஹம்மது நபி(ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு பெண்ணியவாதியை அடையாளம். காட்டிவிட முடியும்...!
வெறும் முன்னூறு பேருடன் போருக்கு சென்று யுத்தகளத்திலே வெற்றி வாகை சூடிய முஹம்மது நபி (ஸல்)அவர்களை விடவா உங்களால் ஒரு போர்ப்படை_தளபதியை அடையாளம் காட்டிவிட முடியும்...!
உங்கள் மார்க்கம் உங்களுக்கு அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு என்று கூறிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு மதநல்லிணக்க தலைவரை அடையாளம் காட்டிவிட முடியும்...!
என் மகளே திருடியிருந்தாளும் அவர் கையையும் வெட்டுவேன் என்று கூறிய முஹம்மது நபி (ஸல்)அவர்களை விடவா உங்களால் ஒரு நீதியாளரை அடையாளம் காட்டிவிட முடியும்...!
குலப்பெருமையை எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன். அரபி மொழி பேசுபவர் அரபி மொழி பேசாதவரை விட உயர்ந்தவரல்ல... அவரவர் செய்யும் நற்காரியங்களால்தான் உயர்வடைகிறார் என்று சொன்ன நபிகள் நாயகத்தை விடவா உலக மொழிகளை மதிக்கின்ற ஒரு தலைவரை நீங்கள் காட்டி விட முடியும்?

தான் சபைக்கு வரும் போது தனக்கு யாரும் எழுந்து மரியாதை செய்யக் கூடாது: தனது காலில் யாரும் விழக் கூடாது என்று தனது தோழர்களை தடுத்த நபிகள் நாயகத்தை விடவா ஒரு சுய மரியாதைக் காரரை உலகில் காட்டி விட முடியும்?
நீங்கள் எந்த விடயத்தை எடுத்தாலும் எமது முஹம்மது நபி (ஸல்)அவர்களை மிஞ்சி ஒரு அடையாளம் காட்டிவிட முடியுமா...?
நிச்சயம் முடியாது.!!
என் தலைவர் முஹம்மது நபி ஸல்..
என் வழிகாட்டி முஹம்மது நபி ஸல்...
அவர்களைத் தான் நான் பின் பற்றுகிறேன்...
என் இறுதி மூச்சு இருக்கும் வரை பின்பற்றுவேன் இறைவன் நாடினால்..
Saleem SKM
அதையே நானும் முன் மொழிகிறேன்...
சுவனப்பிரியன்



2 comments:

vara vijay said...

Paradise under mother feet,it is almost Equating mother with Allah i need proof for this statement.

Dr.Anburaj said...

இப்படி பேசி பேசி எழுதி எழுதி உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் முஸ்லீம்கள்.

அரபி தான் உயா்ந்தவன் என்று இன்றும் நினைத்துக் கொணடிருக்கின்றான். அரபிமதம்தான் உலகில் சிறந்தது என்று அரபி நினைத்து செயல்படுகின்றான். இதுவும் ஒருவகை அகம்பாவம்தான்.

முஹம்மதுவை பற்றி நான் பல விமா்சனங்களை -வரலாறு அடிப்படையாகஉண்மையான விமா்சனங்களை பதிவிட்டுள்ளேன்.திரு.கல்யாண ராமன் போல் அல்ல.
ஆனால் எந்த முஸ்லீமும் அதற்க பதில் பதிவிட வில்லையே.
இறையில்லா இசுலாம் என்ற இணையத்தில் விமா்சன கட்டுரைகள் குவிந்து கிடக்கிறதே. சவால்விடுபவர்கள் யாரும் இல்லையே.

ஏன் ?

எல்லாம் கொஞ்சம் அழுகிய பழம்தான்.