Followers

Friday, November 13, 2015

சாதி வெறியர்களே! எப்போது திருந்தப் போகிறீர்கள்?



உழைக்கும் வர்க்கத்தை இப்படி கேவலப் படுத்தலாமா? பொது மக்களில் மற்ற சாதிகள் வரலாம், மற்ற மதங்கள், மார்க்கங்கள் வரலாம். ஆனால் தலித் மட்டும் வந்து விடக் கூடாது இல்லையா? இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் நீங்கள் திருந்தப் போவதில்லை.

Thursday, November 12, 2015

நான் இனிமேலாவது வெளியே வரலாமா? - மோடி



"சிவனேன்னு வெளி நாட்டுல ஹாய்யா சுத்திக்கிட்டு இருந்தேன். இந்தியாவுக்கு வரவழைத்து கேரளாவிலேயும் பீஹார்லயும் இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களேய்யா..."

"முக நூலையும் ட்விட்டரையும் திறக்க முடியல.... அந்த அளவு என்னை கலாய்க்கிறீங்க.... கலாய்த்தலெல்லாம் முடிந்ததா? இனி மேலாவது நான் வெளியே வரலாமா?"...

Tuesday, November 10, 2015

தீபாவளிக்கு அரசின் டாஸ்மாக் இலக்கு 370 கோடியாம்!




அரசு இலக்கை தொட்டு விட்டதா?

“சாராயத்தைப்பற்றியும், சூதாட்டத்தைப்பற்றியும், அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், நீர் கூறும், இவ்விரண்டிலும் பெரும் பாபம் இருக்கின்றது.மனிதர்களுக்கு சில பயன்களுமிருக்கின்றன. ஆனால் அவ்விரண்டிலுள்ள பாபம், அவ்விரண்டிலுள்ள பயனை விடப்பெரிது.”

- அல்குர் ஆன்-2:219

திப்பு சுல்தானுக்கு அரசு பூர்வ மரியாதை!


வெள்ளையனை ஆண்மையோடு எதிர்த்து வெள்ளையருக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த திப்பு சுல்தானின் நினைவு தினமாக நவம்பர் 10 ஐ கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதற்கான பிரம்மாண்டமான விழாவும் இன்று நடந்தேறியது. இனி வருடா வருடம் இந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

எங்கு நல்லது நடந்தாலும் அது ஆர்எஸ்எஸூக்கு பிடிக்காது. வழக்கம் போல் இங்கும் தனது குண்டர்'களை ஏவி விட்டு விழா நடத்த விடாமல் பிரச்னை பண்ணியது. கர்நாடக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கி விழாவை சிறப்பாக நடத்திக் காட்டியது.

ஒவ்வொரு அரசும் இந்துத்வாவாதிகளை இவ்வாறு இரும்புக் கரம் கொண்டு அடக்கினால் இந்தியா உலக அளவில் தனது பெருமையை நிலை நாட்டும்.


கர்நாடக அரசுக்கு நமது பாராட்டுதல்களை தெரிவிப்போம்.

தகவல் உதவி
மில்லி கெஜட்
10-11-2015

ஜப்பானில் இஸ்லாமிய விளக்க கூட்டம் - ஜாகிர் நாயக்.



இரண்டு நாள் முன்பு ஜப்பானில் நடந்த இஸ்லாமிய விளக்கக் கூட்டம். ஜாகிர் நாயக் அவர்களால் பல தெளிவுகளை அடைந்த ஜப்பானியரில் பலர் அரங்கத்திலேயே இஸ்லாத்தை தழுவிக் கொண்டனர். ஐந்து லட்சம் தருகிறோம் என்று சொல்லவில்லை. வாளைக் காட்டி மிரட்டவில்லை. ஒரு மார்க்கம் வளர்வதற்கு மக்களை சிந்திக்க தூண்ட வேண்டும். சிந்திக்கும் மக்கள் தாங்களாகவே இந்த மார்க்கத்தில் நுழைவார்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே