Followers

Wednesday, January 22, 2020

இந்துக்களையும் விட்டு வைக்கவில்லை இந்துத்வாவாதிகள்!

இந்துக்களையும் விட்டு வைக்கவில்லை இந்துத்வாவாதிகள்!
ராபின் வர்மா என்ற இந்து சகோதரர் உபி லக்னோவில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டார். ஒரு குடி மகன் என்ற முறையில் தனது எதிர்ப்பை தெரிவிக்க முழு உரிமையுள்ளது. ஆனால் உபி காவல் துறை அவரிடம் நடந்து கொண்ட விதத்தை விளக்குவதை கேளுங்கள்.
'சென்ற 20ந்தேதி டிசம்பர் மாதம் நானும் எனது நண்பன் உமர் ரஷீதும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த காவல் துறை எங்கள் இருவரையும் விசாரணைக்கு வருமாறு அழைத்தது. அங்கு சென்றவுடன் எங்களின் செல் போன்களை பிடுங்கிக் கொண்டனர். எங்கள் வீடுகளுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. கழிவறைக்கு செல்லக் கூட எங்களை அனுமதிக்கவில்லை. தாகம் எடுத்து தவித்தபோது தண்ணீரும் தரவில்லை.
'நீ ஒரு ஹிந்து. நீ ஏன் போராட்டத்தில் கலந்து கொண்டாய்? உனக்கு இதனால் என்ன பாதிப்பு?'
'ஒரு முஸ்லிம் உனக்கு எப்படி நண்பனாக இருக்க முடியும்? ராபின் என்ற பெயரை ஏன் வைத்துக் கொண்டாய்?
'எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் உனது மனைவியையும் மகளையும் விபசாரத்தில் தள்ளி விடுவோம். உன்னையும் பிணையில் வர முடியாத பெரும் வழக்குகளில் சிக்க வைத்து விடுவோம்'
இவை எல்லாம் காவல் துறை என்னிடம் கேட்ட கேள்விகள். நான் மிகவும் மனம் உடைந்து போயுள்ளேன்.'
இந்து மத வெறியானது இஸ்லாமியருக்கு மட்டும் சிரமத்தை தராது. நடு நிலையான இந்துக்களையும் கொடுமைபடுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தியதாக ராபின் வர்மா மேல் வழக்கு பதிந்துள்ளது காவல் துறை. உபியின் நிலைமை நாம் நினைப்பதை விட மிக மோசமாக உள்ளது. இறைவன் அந்த மக்களை பாசிசவாதிகளின் கொடுமையிலிருந்து காப்பாற்றுவானாக!
மொழிபெயர்ப்பு
சுவனப்பிரியன்


1 comment:

Dr.Anburaj said...

பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தியதாக ராபின் வர்மா மேல் வழக்கு பதிந்துள்ளது காவல் துறை.

------------------------------------------------

இதுதான் உண்மை.மற்ற பதிவுகள் அனைத்தும் சுவனப்பிரியன்அவிழ்த்து வீடும் அண்டப்புளுகு.

பொது சொத்துக்களை சேதப்படுத்தியஅனைவருக்கும் கிரிமினல் நடவடிக்கை தொடரும்.