Followers

Friday, January 17, 2020

சாமியாரிடம் விபசாரத்திற்கு ஒத்துழைக்காத மனைவியை கொன்றவன்!

சாமியாரிடம் விபசாரத்திற்கு ஒத்துழைக்காத மனைவியை கொன்றவன்!
உத்தர பிரதேசம் ஆக்ராவில் வசித்து வந்துள்ளனர் மான்பால் மற்றும் அவரது மனைவி ரஜினி. திருமணமாகி 9 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் மன்பால் தொழிலில் நஷ்டமடைந்துள்ளார். அந்த நேரத்தில் சந்தான் ஜார்கண்டி என்ற சாமியாரின் நட்பு கிடைத்துள்ளது. தொழிலில் முன்னுக்கு வர மன்பால் அவரது மனைவியை தன்னிடம் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார் சாமியார். இந்த கிறுக்கனும் அதற்கு ஒத்துக் கொண்டு தனது மனைவி ரஜினியிடம் 'நமது தொழில் முன்னுக்கு வர நீ சாமியாரோடு படுக்கையை பகிர்ந்து கொள்' என்று சொல்லியுள்ளான். ஆனால் அதற்கு அந்த பெண் ஒத்துழைக்கவில்லை. இதனால் கோபமுற்ற கணவன் மனைவியை கொன்றுள்ளான். காவல் துறை சாமியாரையும், மன்பாலையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பெண்களின் நிலைமை இந்த லட்சணத்தில் உள்ளது. இதில் இந்துத்வாவை நாடு முழுக்க பரவலாக்க அமீத்ஷா முயற்சி எடுத்து வருகிறார். நாடு முழுக்க இந்துத்வா சட்டங்களை நடைமுறைபடுத்தினால் இந்து பெண்கள் அதிகம் பாதிப்படைவர். இந்து மதம் வேறு இந்துத்வா கொள்கை வேறு என்பதை நாம் பிரித்துப் பார்க்க தெரிந்திருக்க வேண்டும்.
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
15-06-2019


1 comment:

Dr.Anburaj said...

இதனால் கோபமுற்ற கணவன் மனைவியை கொன்றுள்ளான். காவல் துறை சாமியாரையும், மன்பாலையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இது தனிநபா் செய்யும் முட்டாள்தனங்கள்.அரேபியாவிலும் தன் மனைவிமார்களை விருந்திநா் கூட படுக்க வைக்கும் பழக்கம் இருந்தது. அரேபிய புத்தகங்களை படித்து இவன் குழம்பி விட்டான்.
-------------------------------------------------------------------------------

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பெண்களின் நிலைமை இந்த லட்சணத்தில் உள்ளது. இதில் இந்துத்வாவை நாடு முழுக்க பரவலாக்க அமீத்ஷா முயற்சி எடுத்து வருகிறார். நாடு முழுக்க இந்துத்வா சட்டங்களை நடைமுறைபடுத்தினால் இந்து பெண்கள் அதிகம் பாதிப்படைவர். இந்து மதம் வேறு இந்துத்வா கொள்கை வேறு என்பதை நாம் பிரித்துப் பார்க்க தெரிந்திருக்க வேண்டும்.
பதில்
போகி ஆதித்யாநாத் ஆட்சியில் எல்லாம் நல்லபடி நடக்கின்றது. நிறைய சாதித்திறருக்கின்றாா்.அரசு இயந்திரத்தில் ஊழல் கமிஷன் கூத்துக்களை அறவே ஒழித்து விட்டாா். காங்கிரஸ்காரன் செய்த முட்டாள்தனங்களால் ஏற்பட்ட குப்பைகள் அனைத்து துறைகளிலும் மண்டி நாறிக்கிடக்கின்றது. சுத்தம் செய்வது என்பது சாமானிய பிரச்சனையா.
சாதிப்பாா்.வெற்றி பெறுவாா்.