Followers

Sunday, January 19, 2020

82 வயதான போராளி மோடியை நோக்கி வைக்கும் கேள்விகள்!

82 வயதான போராளி மோடியை நோக்கி வைக்கும் கேள்விகள்!
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டில்லி ஷஹீன் பாக் மைதானத்தில் 24 மணிநேரமும் அமர்ந்து பெண்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். பெருங்கூட்டமாக அதிகரித்துக்கொண்டுள்ள அப்பெண்களை எதிர்கொள்ள முடியாமல் திணறியபின்பு, அவர்களை 'கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள்' என்று நேற்று பாஜக இழிவாக அவதூறு கூறியது. அதைக்கேட்டு வெகுண்டெழுந்த பெண்கள் சரமாரியாக கேள்விகள் கேட்கின்றனர். அதில் ஒரு 82 வயதான போராளி பேசுவதை கேளுங்கள்.
'மோடிஜீ.... நாங்கள் பணத்துக்கு அழைத்து வரப்பட்டதாக உங்கள் ஆட்கள் கூறுகின்றனர். அது போன்ற பணத்தை நாங்கள் தொடக் கூட மாட்டோம. ஐந்து வேளை இறைவனை நினைத்து தொழுகிறோம்: நோன்பு வைக்கிறோம்: இஸ்லாமிய வாழ்வை கண்ணியமாக வாழ்ந்து வருகிறோம்.
'நாங்கள் இந்த நாட்டில் வாழ்வதும் உணவு உண்பதும் எங்களை படைத்த இறைவனின் கிருபையாலாகும். உங்களை பற்றி நீங்கள் என்ன நினைத்து கொண்டுள்ளீர்கள்? மக்களாகிய நாங்கள்தான் உங்களை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளோம். தேர்ந்தெடுத்த நாங்களே உங்களை பதவியிலிருந்து இறக்க ஒரு நொடி போதும். NRC, CAA போன்ற மக்களை பிரிக்கும் சட்டங்களை இனியும் நீக்கவில்லை என்றால் உங்களை ஆட்சியிலிருந்தே அகற்றுவோம். 500 ரூபாய்க்கு அழைத்து வரப்பட்டதாக கூறியுள்ளீர்கள். நீங்கள் இங்கு வந்து அமருங்கள். உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தருகிறோம்.'


No comments: