Followers

Monday, January 06, 2020

நாயைக் கண்டதும் பிடித்திருந்த பேய் ஓடியே விட்டது.....

நாயைக் கண்டதும் பிடித்திருந்த பேய் ஓடியே விட்டது.....
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 39:42
இந்த வசனத்தைச் சிந்தித்தால் இறந்தவரின் ஆவி பேயாக வரும் என்ற நம்பிக்கைக்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம். இறந்தவர்களின் உயிர்களை இறைவன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது. இறைவனது கட்டுப்பாட்டை விட்டு தப்பித்து, ஆவிகள் இந்த உலகுக்கு வந்து விடுகின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது.
இறந்தவர்கள் மீண்டும் உலகிற்கு வரமுடியாது என்பதற்கு ஹதீஸ்களிலும் ஆதாரம் உள்ளது.
உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சொர்க்க வாசியாக இருந்தால் சொர்க்கத்திலுள்ள அவரது இடம் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகிலுள்ள அவரது இடம் எடுத்துக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி 1379
இறந்தவர்கள் நல்லவர்களானாலும் கெட்டவர்களானாலும் உலக முடிவு நாள் வரை இந்த உலகத்திற்குத் திரும்பி வர வாய்ப்பே இல்லை என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே இறந்தவரின் ஆவி உலகத்திற்கு வந்து பேயாக நடமாடுகின்றது என்று யாரேனும் ஒருவர் நம்பினால் அவர் மேற்கண்ட குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் மறுக்கின்றார் என்று தான் பொருள்.
------------------------------------
இங்கு ஒரு பெண் தலை விரி கோலமாக பேய் பிடித்தவரைப் போல சாமி ஆடுகிறார். ஒரு நாய் குலைத்துக் கொண்டே அவர் அருகில் வந்ததும் அவரிடம் இருந்த பேய் ஓடி சகஜ நிலைககு வருகிறார். அவர் இதுவரை நடித்ததும் அம்பலமாகிறது. உலகில் பேய், பிசாசு என்று எதுவும் இல்லை என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு எடுத்துக்காட்டு.


4 comments:

Dr.Anburaj said...

உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சொர்க்க வாசியாக இருந்தால் சொர்க்கத்திலுள்ள அவரது இடம் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகிலுள்ள அவரது இடம் எடுத்துக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி 1379
--------------------------------------------------
மண்ணறை அவஸ்தையை ஏன் விட்டு விட்டீர்கள். கியாமத் நாளில்தானே நல்லவனா கெட்டவனா என்று முடிவு எடுக்கப்படும்.அதற்கு முன்பே கபுா் வேதனை எப்படி நடக்க முடியும். சொர்க்கத்தில் நரகத்தில் அவருககுரிய இடம் காட்டப்படும் என்பது முட்டாள்தனம் அல்லவா ?

கியாமத் நாளுக்கு முன்னால் சொர்க்கத்தில் அவருக்கான இடம் நரகத்தில் அவருக்கான இடம் காட்டப்படும் என்றால் நல்லவன் யாா் கெட்டவன் யாா் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதே. பிறகு கியாமத் நாள் தேவையில்லையே?
என்ன முரண்பாடு.
காட்டறபிகள் கைநாட்டு அரேபியர்கள் தயாரித்த புத்தகம் வேறு எப்படியிருக்கும் .
இதை நம்பும் அளவிற்கு சுவனப்பிரியன் முட்டாளா ?
முட்டாள்தனங்களை நம்பினால்தான் முஸ்லீமாக இருக்க முடியுமா ?
என்ன விபரீதம்.
சுவனப்பிரியன்
முஸ்லீம்களை உருப்பட விடுங்கள்.
காட்டறபிகளின் புத்தகங்களை அரபிக் கடலில் ஆழமான பகுதி பார்த்து கல்லில் கட்டி போட்டு விடுங்கள்.
உலகம் உருப்படட்டும்.

Dr.Anburaj said...

ஒளி ஒலி வெவ்வேறு அலை வரிசையில் பயணிக்கிறது.குறிப்பிட் அலைவரிசையில் வரும் ஒலிதான் நமது காதுக்கு கேட்கும். குறிப்பிட்ட அலைவரிசையில் வரும் ஒளிதான் நமது கண்ணுக்கு தெரியும். இயற்பியலில்குவாண்டம் மெக்கானிகஸ் என்று ஒரு பெரிய கோட்பாடு உள்ளது. நாம் பார்க்கும் பருப்பொருள் எல்லாம் ஒரு வகையில் குறிப்பிட்ட ஒளியைப் போல் ஒலியைப் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் இருப்பவைதான் .நினைத்து பார்க்க கடினமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.
---------------------------------------------------------------------------
பாண்டிச்சோரி ஆரோவில் ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை சம்பவம் ஒரு மாறுபட்ட கருத்தை விளக்குகி்ன்றது.
சுதந்திர போராட்டத்தில் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்ரீஅரவிந்தா் அலிபுர் குண்டு வெடிப்பு வழக்கில் ஜெயில் தண்டனை பெறுகின்றாா்.சுவாமி விவேகானந்தா் இறந்து ஒரு ஆண்டு கழிந்திருந்தது.அங்கே அவரது கவனம் ஆன்மீகம் நோக்கி திரும்புகிறது. கீதை உபநிடதங்கள் யோகா போன்ற விசயங்களைப் படிக்கின்றாா். சுவாமி விவேகானந்தாின் புத்தகங்கள் அவருக்கு பெரிதும் கைகொடுத்தது.ஆனாலும் ஏராளமான சந்தேகங்கள் மனதைக் குடைந்தது. அப்போது ஒருநாள் சுவாமி விவேகானந்தா் தனது ஆவி உடலோடு இவா் இருந்த சிறைக்கு வந்தாராம். அரவிந்தருக்கு எற்பட்ட சந்தேகங்களை தீர்த்து வைத்தாராம். இருவரும் ஒரே அறையில் தியானம் செய்தார்களாம். எப்போதெல்லாம் விவேகானந்தரை நினைக்கின்றாரோ அப்போதெல்லாம் விவேகானந்தர் அரவிந்தருக்கு பயிற்சி வகுப்பு எடுத்திருக்கின்றாா் .எடுத்த கருத்து எனக்கு முழுவதும் விளங்கும் வரை என் மண்டையில் ஏறம் வரை என்னை விடமாட்டாா் சுவாமி விவேகானந்தா் என்கிறாா் ஸ்ரீஅரவிந்தா்.
மனதை உடையவன் மனிதன்.அதிமனம் உடையவன் அதிமனிதன். ஆம் பரிணாமம் காட்டுமிராண்டியை -மிருகத்தை மனிதன் ஆக்கியது. தற்போது பரிணாமம் மனிதனை அதிமனிதன் ஆக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது என்ற கருத்தை முதல் முதலில் அரவிந்தருக்கு சொன்னவா் சுவாமி விவேகானந்தா்தாம் என்கிறாா் ஸ்ரீ அரவிந்தா்.ஸ்ரீஅரவிந்தா் எழுதிய பகவத்கீதை கட்டுரைகள் - Essays on Gita என்ற புத்தகம் விவேகானந்தரிடம் படித்த பாடம் என்கிறாா் ஸ்ரீ அரவிந்தா்.
-------------------------------------------
ஆச்சரியமாக இல்லை. ஸ்ரீஅரவிந்தா் ஒரு மன நோயாளி என்று குற்றம் சொல்ல முடியுமா ?
சொர்க்கத்தில் ஒரு ஆணுக்கு 73 பெண்கள் என்பதுதான் கோளாறாகத் தெரிகின்றது.

Dr.Anburaj said...
This comment has been removed by the author.
Dr.Anburaj said...

இறந்த ஆன்மாக்கள் ஒளி உடலோடு வாழ்ந்து வருகின்றது என்றும் அவைகள் வேறு ஒரு அலைவரிசையில் வாழ்வதால் நமது கண்களுக்கு தெரிய மாட்டார்கள் என்றும் விதிவிலக்காக சிலருக்கு ஒளி உடலைக்காணம் பாக்கியம் கிடைக்கின்றது என்கின்றனா் இந்து சமய பண்டிதர்கள்.
எனது நண்பர் இறந்து போனா். ஒரு வருடம் கழித்து மீண்டும் அவர் குடும்பத்தை பார்க்கச் சென்றேன். ” இறந்த நண்பா் படுத்த கட்டிலில் யாரும் படுக்க முடியாதாம். மாமனாா் படுத்திருக்கின்றாா். ஒரு மச்சினன் படுத்திருக்கின்றான் ” இரவு அவர்களை தொடா்ந்து படுக்க விடவில்லை” என்று மனைவி தெரிவித்தாா்.

எனக்கோ ஆச்சரியம். இப்படி நடக்குமா ? மூடநம்பிக்கையா ? விடை தெரியவில்லை.
இப்படி நம்பினால்தான் இசுலாம்-முஸ்லீம் என்று பேசுவது தவறு. உலகம் மிகப் பெரியது.குரானுக்குள் அடங்காது.