Followers

Thursday, January 23, 2020

"நீ பணத்துக்காகத்தானே முஸ்லிம் மதத்துக்கு மாறுன...?"

"நீ பணத்துக்காகத்தானே முஸ்லிம் மதத்துக்கு மாறுன...?"
நான் முஸ்லிம்களிடம் ஒரு ரூபாய்கூட காசு வாங்கியதே கிடையாது. யாசகம் வாங்கக்கூடாது; மாறாக, தர்மம் செய்யச்சொல்லி வலியுறுத்தும் மார்க்கம்தான் இந்தப் புனித இஸ்லாம்.
"நீ முஸ்லிம் பொண்ண லவ் பண்ணிருக்க. அத கல்யாணம் பண்ணதான் மதம் மாறிருக்க; பள்ளிவாசலுக்கும் போற"
நான் காதல் கீதல் எல்லாம் செய்வதில்லை. நான் எனது வாழ்க்கையில் எந்தவொரு முஸ்லிம் பெண்ணிடமும் நேரில்கூட பேசியதே கிடையாது. முஸ்லிம்களது நேரடித் தொடர்பில்லாமல் இஸ்லாத்திற்கு வந்தவன் நான். அதையெல்லாம் புரிந்துகொள்ளக்கூடிய தன்மை உங்களுக்கு இல்லை.
"பிரியாணிக்கு ஆசப்பட்டு மதம் மாறிட்டான் போல"
பிரியாணிக்கு ஆசைப்பட்டெல்லாம் யாரும் மதம் மாற மாட்டார்கள். ஆசைவந்தால் காசு கொடுத்து கடையில் வாங்கி சாப்பிடுவோம். இதற்காகவெல்லாம் மதம் மாற மாட்டோம்.
- - - - * - - - -
மேலே சொல்லப்பட்டுள்ள காரணங்களுக்காக யாரேனும் இஸ்லாத்திற்கு வந்தால், அவர்கள் வந்த வேகத்திலேயே இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவர். இறைவனால் தூக்கி எறியப்படுவார். அதாவது, இழிவுபடுத்தப் படுவார். இஸ்லாம் வேறு; நீங்கள் சொல்லும் காரணங்கள் வேறு. இதற்காகவெல்லாம் நான் இங்கு வரவில்லை. இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமே கிடையாது. நான் மதங்களை ஆராய்ந்தேன். இஸ்லாத்தை ஆராய்ந்தேன். இஸ்லாம்தான் இறைவனின் உண்மை மார்க்கம் என்பதை உணர்ந்ததால்தான் இஸ்லாத்தையே தழுவினேன்.
Ramu Raj தனது அனுபவத்தை பதிவாக தந்துள்ளார். இனியாவது உண்மையை இந்துத்வாவாதிகள் உணர்வார்களாக!


4 comments:

Dr.Anburaj said...

தூத்துக்குடி மாவட்டத்தில் வாழும் நான் அறிந்து முறையான இந்து சமய கல்வி பெற்ற ஒரு

இந்து கூட பைபிள் குரான் படித்து தெளிந்து கிறிஸ்தவனாக முஸ்லீம் ஆக

மாறவில்லை.அனைவரும் வேலைக்காகவும் கிறிஸ்தவ முஸ்லீம் பெண்களைக் காதலித்ததன்

பாவம் மதம் மாறியிருக்கின்றார்கள்.முஸ்லீம் பெண்கள் 3 பேர்கள் இந்துவாக மதம்மாறி இந்து

கணவனை கைபிடித்து மகிழ்ச்சியாக வாழ்கின்றனா்.
-----------------------------------------------------------
ஆனால் முஸ்லீம் பெண்களை மணந்த இரண்டு பேர் பட்டபாடு பெரும்பாடு. முதலில் இரண்டு பேரும் இந்துவாக மாறி திருமணம் செய்து கொண்டார்கள்.பின் பெண்வீட்டாா் மருமகனை முஸ்லீம்ஆக மாற வற்புருத்த துவங்கினார்கள். மருமகன்கள் மறுத்து விட்டார்கள்.எனவே வரதட்சணை வழக்கு -குலா என்று பெரும் வம்புகள் செய்து பிரித்துக் கொண்டு சென்றுவிட்டாா்கள்.

நான் பொது இடங்களில் பேசும் போதுஇந்து இளைஞர்கள் முஸ்லீம் பெண்களை காதலிக்க கூடாது என்று எச்சரிக்கை செய்துவருகின்றேன்.

Dr.Anburaj said...

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி 23.01.2020
வருங்கால மனைவிக்கு மெஹா் தொகையாக பகவத்கீதை உட்பட 100 புத்தகங்கள் வழங்கிய முஸ்லீம் மணமகன்.
-------------------------------------------------------------------
அஷ்யா நசீம் என்ற முஸ்லீம் பெண்ணுக்கு புத்தகங்களின் மேல் பிரியமானவா்.bibliophile.
அவருக்கு இஜாஸ் ஹக்கீம் என்ற இளைஞனுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டது.நசீம் தனக்கு மெஹா் தொகைக்கு தங்கம் வேண்டாம் புத்தகங்கள் அளிக்க வேண்டும் என்று கேட்டாா்.அதன் படி மணமகன் குரான் பகவத்கீதை பைபிள் உட்பட 100 புத்தகங்களை மஹா் ஆக கொடுத்து திருமணம் செய்துள்ளாா்.இது கொல்லம் மாவட்டத்தில் போரிடம் என்ற இடத்தில் நடந்துள்ளது.
----------
அரேபிய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி முட்டாளாக வாழ நவீன முஸ்லீம்கள் விரும்பவில்லை என்பதை மேற்படி சம்பவம் எடுத்து காட்டுகிறது.

வாஹாபி முஸ்லீம் இப்படிச் செய்வானா ?

vara vijay said...

I analysied deeply. Yet i dont find any reason to embrace islam however i found one and only reason to avoid islam is prophethood.

Dr.Anburaj said...

ஆம். நபித்துவம் என்பது முட்டாள்தனமானது.
ஆபிரகாமிக் மதங்கள் இப்படி ஒரு கொள்கையை பரப்பி அரசியல்-ஆதிக்க போர் நடத்தி வருகின்றது. மஹம்மதுவும் இயேசுவும் மனிதர்கள் தாம் என்றால் அவரால் முடிந்தது மற்ற ஒரு மனிதனுக்கும் சாத்தியமானதாக இருக்க வேண்டும்.

இறைவன் யாரையும்நபியாக நியமன உத்தரவு கொடுத்து அனுப்பி வைக்க வில்லை.

க01.இயேசுவிடம் விபசாரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணை கல்லால் ஏறிந்து கொல்ல அனுமதி கேட்டு வந்தவர்களிடம் உங்களில் யோக்கியன் -கற்பு நெறி தவறாதவன் - பிரம்மச்சரியம் காத்தவன் - முதல் கல்லை போடட்டும் என்றாா். வந்தவன் யாரும் யோக்கியன் இல்லை. கல்லை போட யாரும் அங்கு இல்லை. இனி பாவம் செய்யாதே என்று அன்பு மொழி பேசி அனுப்பி விட்டார்.
ஆனால்முஹம்மது கல்லால் ஏறிந்து கொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாா். இன்றும் அது பின்பற்றப்படுகின்றது.
ஆண்களுக்கு கற்பு வேண்டாம்.பெண்ணுக்கு வேண்டும் என்பது வலுத்தவன் வகுத்தது வாய்க்கால் என்ற தத்துவம் தான்.அரேபிய சமூகம் இத்தகையதே.

ஆக இறைவன் இயேசுவிடமும் பேசவில்லை.முஹம்மதிடமும் பேசவில்லை. பேசியிருந்தால் இரண்டு பேரின் கருத்தும் ஒரே மாதிரியாக இருந்திருக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------
02. இயேசு தனது நபித்துவத்தை நிரூபிக்க முடியாமல்தான் தோற்று போனாா்.சுழல் காற்றில் வானத்திற்குள் சென்ற எலியா வந்தபின் கிறிஸ்து- மெசியா -நபி வருவார் என்பது வேத வாக்கு.
இயேசு யோவானை எலியா என்றும் தான் கிறிஸ்து என்றாா்.
ஆனால் வானத்திற்கு உயிருடன் சென்ற எலியா அப்படியே கீழே இறந்கி வர வேண்டும்.
தாய் வயிற்றில் பிறந்து வளா்ந்தவன் எலியாவாக இருக்க முடியாது என்றது நீதி மன்றம்.
இயேசு நபி- மசியா -கிறிஸ்து அல்ல என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தன்னை பொய்யாக கிறிஸ்து -நபி -மெசியா என்று சொன்னதால் இயேசுவை வேதப்புரட்டன் என்ற குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்தாரகள்.சீடர்களால் காப்பாற்றப்பட்டாா். சிலுவையில் சாகவில்லை.3ம் நாள் உயிர்த்தெழவில்லை.இயேசுவின் இரத்தத்திற்கும் பாவத்திற்கும் சம்பந்தமில்லை.
( இந்த கருத்து குரானில்இல்லை.முஸ்லீம்களுக்கு தெரியாது.யாரும் இந்த உ்ண்மையை அறிந்து பேசியதாக எனக்கு தோன்றவில்லை.)

தவத்தாலும் பண்பட்ட வாழ்வு வழி மனிதன் உயா்நிலையை அடைய முடியும். இந்தியாவில் அதற்கு ஜீவன் முக்தன் என்பது பெயா். அனைத்து மனிதனும் அதை அடைய வேண்டும்.அடைந்தே தீர வேண்டும்.

அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் என்பது திருவாசகம்.

அனைத்து மனிதர்களையும் அந்தணன் ஆக்குவதுதான் இயற்கையில் பரிணாமம்.

இன்றும் இந்த உலகில் ஜீவன் முக்தர்கள் ஆன்மீகத்தில் சதம் போட்டவர்கள் இருக்கின்றார்கள். எங்கு இருக்கின்றார்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பது நமக்கு தெரியாமல் உள்ளது.அவ்வளவுதான்.தனி மனதனையோ புத்தகத்தையோ குருட்டுத்தனமாக பின்பற்றுவது ஆன்மவியல் அல்ல.ஆதிக்க போா். ஜீவ நதியில் சாக்கடை தேங்காது.உருவாகாது.தேங்கிய தண்ணீா் சாக்கடையாகிவிடும்.
இசுலாம் பிறப்பிலே அரேபிய வல்லாதிக்க இயக்கம். அரபி அல்லது அரபி போல் வாழ். இல்லையேல் அழிந்து போ என்பது அதன் கொள்கை.

இயேசு ஆன்மவியலை யுதர்களுக்கு போதித்தாா்.கிறிஸ்தவ திருச்சபைகள் ஆன்மவியல் என்றால் என்ற வென்று புரியாது இன்றும் ஆதிகக போரை நடத்தி வருகின்றார்கள்.

கத்தோலிக்கன் பிராடெஸ்டுகள் பெந்தேகோஸ்தேகள் இடையே இவ்வளவு பகை ஏதற்கு ?
கூட்டம் அதற்கு தலைமை பொருள் தேடல் அரசியல் பொருளாதார ஆதிக்கம் ஆகியவை காரணம்.

இந்துக்களின் தலைமை கோவணம் மட்டும் கட்டிய ஆண்டிகள். முற்றும் துறந்தவர்கள்தான் லட்சியம்.

ஹிந்துக்கள் கிறிஸ்தவ அரேபிய வல்லாதிக்க போர்களை தாக்குபிடிக்க முடியாமல் தவித்து விட்டார்கள்.தற்போதுதான் அதற்கான எதிர்வினைகள்-antigen - தோன்றியிருக்கின்றது.