Followers

Sunday, July 01, 2018

போதைக்கு அடிமையாகிய மகன் ....

போதைக்கு அடிமையாகிய மகன் அதிலிருந்து மீண்டும் மார்க்க சிந்தனை உடையவனாக மாற்றி தரும் படி தாயார் கண்ணீர் உடன் தவ்ஹீத் ஜமாத்திடம் கோரிக்கை...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை நிர்வாகத்திடம் ஒரு தயார் தன்னுடைய மகன்  போதைக்கு அடிமை ஆகி இருக்கிறான் அதிலிருந்து மீட்டு தரும்படி நம்முடைய ஜமாத்திடம் கோரிக்கை வைத்தனர் அதன் தொடர்ச்சியாக அந்த சகோதரனை சந்தித்து அவனுக்கு மார்க்க சம்பந்தமான போதனைகள் செய்யப்பட்டு அதிகம் அதிகமாக திருகுர்ஆன் மற்றும் பள்ளிவாசல் உடனாக அதிமாக தொடர்பு படுத்தி கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

மாற்றம் ஏற்ப்பட ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்தததுடன். அவரை தொடர் கண்கானிப்பில் எடுத்து தனி அக்கறையுடன் போதையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் போதைக்கு எதிராக தொடர் பிரச்சாரத்தை கையில் எடுக்கவும். தனி நபர்களை சந்தித்து போதைக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

ஏற்கனவே கஞ்சா சம்பந்தமாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விசாரித்து விட்டு. கீழக்கரையில் தொடர்ந்து இளைஞர்களை குறிவைத்து போதைக்கு அடிமையாக்கும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க. மாநில நிர்வாகத்தின் ஆலோசனையுடன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தவ்ஹீத் ஜமாஅத் தயாராகி வருகிறது.

1 comment:

Dr.Anburaj said...


கடைவிரித்தேன்.கொள்வாரில்லை.கட்டிவிட்டேன் என்றாா் வள்ளலாா்.

கொள்வாருண்டு என்பதால் போதை வியாபாரம் கொடி கட்டிப் பறக்கின்றது.
குழந்தைகளை நன்கு வளா்த்தால் இந்த பிரச்சனை தீர்க்கப்படலாம்.
கொள்வாரில்லை என்ற நிலை உருவாக வேண்டும்.
தீவிர கவனம் செலுத்தி போதை பழக்கத்தை ஒழிக்க வேண்டும்.