Followers

Sunday, July 29, 2018

இந்து சிறுவனின் உயிரை காப்பாற்ற நோன்பை முறித்த முஸ்லிம் இளைஞர்!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள ராஜேஷ் என்ற் சிறுவனுக்கு தலசீமியா என்ற நோய் பாதிக்கப் பட்டது. அவருக்கு உடனடியாக ரத்தம் தேவைப் பட்டது. ஆனால் அந்த அரிய வகை குரூப் ரத்தம் மருத்துவமனையில் இருப்பில் இல்லை.
உடனே இதுகுறித்து அன்வர் ஹுசேன் என்ற ரத்த தான குழு தலைவருக்கு தகவல் தரப்பட்டது. சிறுவனின் அரிய வகை ரத்தமும் அன்வர் ஹுசேனின் நண்பர் ஜாவேத் ஆலம் என்பவரின் ரத்தமும் ஒரே வகை என்பதை உணர்ந்த அன்வர் ஹுசேன் இதுகுறித்து ஜாவேத் ஆலத்திற்கு தகவல் கொடுத்தார்.
புனித ரமலான் மாதம் என்பதாலும் ஜவேத் ஆலம் நோன்பு வைத்திருந்ததால் ரத்தம் வெளியானால் நோன்பு முறிந்து விடும் என்பதை அறிந்த ஜாவேத் ஆலம் ஒரு சிறுவனின் உயிருக்காக நோன்பை முறிப்பதில் தவறில்லை என்பதை உணர்ந்து உடனே நோன்பை முறித்து ரத்த தானம் செய்ய முன் வந்தார்.
இதனை அடுத்து அவரது ரத்தம் சிறுவனுக்கு ஏற்றப் பட்டு சிறுவனின் உயிர் காப்பாற்றப் பட்டது. இதுகுறித்து தெரிவித்த ஜாவேத் ஆலம், " எங்கள் மதம் மனிதர்களுக்கு முதலில் உதவ வேண்டும் என்பதை எங்களுக்கு பயிற்றுவித்துள்ளது. உயிருக்கு போராடும் ஒருவருக்கு உதவுவதற்காக என் நோன்பை முறித்ததில் தவறில்லை என்பதை நான் உணர்வேன் அதையே செய்தேன்" என்றார்,
He said: "My religion teaches me to help a fellow human first, so I broke my fast and donated blood to save little Rajesh. Islam preaches that humanity is bigger than everything." 
தலசீமியா நோய் பாதிக்கப் பட்டவர்கள் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு ஒரு முறை ரத்தம் ஏற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி
கலீஜ் டைம்ஸ்
இந்நேரம்.காம்
24-04-2018

2 comments:

vara vijay said...

Why blood money is decided based on religion in Saudi Arabia.

Dr.Anburaj said...

இதை நான் எற்கனவே பதிவு செய்துள்ளேன்.மறந்து விட்டீர்களா.