Followers

Wednesday, July 04, 2018

அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்

خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَاَنْزَلَ لَـكُمْ مِّنَ الْاَنْعَامِ ثَمٰنِيَةَ اَزْوَاجٍ‌ يَخْلُقُكُمْ فِىْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ خَلْقًا مِّنْ بَعْدِ خَلْقٍ فِىْ ظُلُمٰتٍ ثَلٰثٍ‌ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ‌ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ فَاَ نّٰى تُصْرَفُوْنَ‏ 
அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க நீஙகள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்,
(அல்குர்ஆன் : 39:6)

وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰىۙ‏ 
இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் -
(அல்குர்ஆன் : 53:45)

فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰى‏ 
பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
(அல்குர்ஆன் : 75:39)



11 comments:

Dr.Anburaj said...

இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் -
(அல்குர்ஆன் : 53:45)
-----------------------------------------
அலி”திருநங்கை யை படைத்தது யாா் நண்பரே ? ஏன் படைத்தான் ? அவர்களுக்கு என்ன பயன் ? அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று அரேபிய நாகரீகம் வகுத்துள்ளது.?
கல்லறை வாழ்வு அவர்களுக்கு உண்டா ? சொர்க்கம் உண்டா ? 73 ஹோரில் ஆண்கள் அல்லது பெண்கள் உண்டா ?

Dr.Anburaj said...

இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் -
(அல்குர்ஆன் : 53:45)
-----------------------------------------
அலி”திருநங்கை யை படைத்தது யாா் நண்பரே ? ஏன் படைத்தான் ? அவர்களுக்கு என்ன பயன் ? அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று அரேபிய நாகரீகம் வகுத்துள்ளது.?
கல்லறை வாழ்வு அவர்களுக்கு உண்டா ? சொர்க்கம் உண்டா ? 73 ஹோரில் ஆண்கள் அல்லது பெண்கள் உண்டா ?

Dr.Anburaj said...

கொங்கு ஸ்ரீராம் என்பவா் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஃமுறையானசமய சமூக கல்வி பெறாதவா். நடமாடும் கோவில் என்று சக மனிதர்களை வர்ணிக்கும் திருமந்திர நெறி அறியாத மூடன்.இவனது கருத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்திருப்பது வம்பு.

suvanappiriyan said...

//அலி”திருநங்கை யை படைத்தது யாா் நண்பரே ? ஏன் படைத்தான் ? அவர்களுக்கு என்ன பயன் ? அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று அரேபிய நாகரீகம் வகுத்துள்ளது.?//

திரு நங்கைகளும் ஆண் வர்க்கத்தினரே.... இஸ்லாமிய பார்வையில்...

குரோமசோம் குறைபாடு உடையவர்களை சரி செய்ய சவுதியில் மருத்தவ மனைகள் உண்டு.

இந்தியாவில் இந்துக்கள் இவர்களை வணங்குவதால் பெருகி வருகிறார்கள்.

Dr.Anburaj said...

மருத்தவ வசதிகள் மிகச்சிறந்த முறையில் உள்ள இந்தியாவில் குரோமசோம்கள் கோளாறுகளை சரி செய்ய ஏன் இயலவில்லை.? வணங்குகின்றார்கள்களா ?
எனக்கு தொிந்து திருநங்கைகள் பிச்சை எடுக்கின்றார்கள்.சிலா் கோவில்களில் கணியான் கூத்து ஆடுகின்றார்கள். பலா் ஆண்களை ஏமாற்றி பாலியல் கவா்ச்சி காட்டி ஏமாற்றுகின்றார்கள். பாலியில் நோய்களுக்கு இவர்கள் ஆதாரம்.
ஆணாக பிறந்தவா்கள் தொடா்ந்து ஆணாகவே வாழ வைக்கவும், பெண்ணாகப்பிறந்தவா் பெண்ணாகவே வாழ வைக்க முடியும் என்ற நிலை இருக்கும் போது திருநங்கை என்ற ஒரு கூட்டமே இல்லாமல் செய்து விடலாமே. இதுகுறித்த அதிகபட்ச தகவலை எனக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

suvanappiriyan said...

//இதுகுறித்த அதிகபட்ச தகவலை எனக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.//

திருநங்கை ஒர் பார்வை.

பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப் படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களை 'திருநங்கை' என்று அழைக்கிறார்கள். இவர்களை அலி, கோஷா, ஒம்போது, அரவாணி போன்ற பெயர்களில் கேலியாக அழைக்கப்படுவதும் உண்டு. நாங்களும் அறியாத பருவத்தில் இவர்களை காணும்போதெல்லாம் கோஷா என அழைத்து கிண்டல் செய்திருக்கிறோம். அறியாத வயதில் நான் அவர்களை கிண்டலடித்ததை எண்ணி தற்போது வருத்தப்படுவதோடு அவர்களிடத்தில் மன்னிப்பு கேட்கும்விதமாகவும் இக்கட்டுரையை புனைகிறேன்.

இந்த பூவுலகில் அனைத்து ஜீவராசிகளையும் படைத்த இறைவன் மனித இனத்தை மட்டும் மேம்படுத்தியே படைத்திருக்கிறான். மனித இனம் என்பது ஆண், பெண் என்ற இரு பாலினத்தை மட்டுமே குறிக்கும். இந்த நிலையில் நம் சமுதாயத்தில் இப்போது திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அறிவித்திருக்கிறார்கள். இவர்களை மூன்றாம் பலினமாக அறிவித்திருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விசயமாகும். இறைவன் படைத்த மனித இனத்தில் ஆண், பெண் என்ற இரு பாலார் மட்டுமே உள்ளனர். இதில் மூன்றாம் பாலினம் என்ற ஒன்றுக்கே வேலை இல்லை. செயற்கை பாலினமாக மாற முனையும் இவர்களை ஒருக்காலும் மூன்றாம் பாலினமாக அறிவிக்க இஸ்லாத்திலும் அனுமதியில்லை.

மனித இனத்தில் குறைப்பாடுகளோடு விளங்குபவர்களே இந்த திருநங்கைகள் ஆவார்கள், ஆண், பெண் ஆகிய இரு பாலினங்களிலும் இதுபோன்ற குறைபாடுகளுடையவர்கள் இருக்கின்றனர். திருநங்கைகள் ஆணுக்குரிய அத்தனை உடல் அமைப்புகளோடும் தான் பிறந்து வளர்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் அவர்களுக்குள் மாற்றம் ஏற்பட்டு, பெண்ணிற்குரிய குணம், மனம், செயல் போன்றவைகளில் நாட்டம் அதிகமாகி பெண்களை போன்றே வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். இதே போன்று பெண்ணாக பிறக்கும் சிலருக்கும் மாற்றம் ஏற்பட்டு, பெண்மையை விட்டு விலகி, ஆணிற்குரிய குணாதிசயங்களோடு நடக்க தொடங்கி விடுகிறார்கள். இத்தகையவர்களை 'திருநம்பிகள்' என்று அழைக்கிறார்கள்.
பெண்களுக்குரிய நடை உடை பாவனை அனைத்தையுமே ஒருங்கே பெற்றவர்களாக ஆகிவிடுகின்றார்கள் இந்த திரு நங்கைகள். பெண்களைப்போன்றே உடையணிந்து, நகையணிந்து, தலையில் பூக்களைச் சூடி, பெண்களை போன்றே நடையுடன் பவனி வரும் இவர்களுக்கு பெண்களுக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைப்பதில்லை. அவர்களிடத்தில் பெண்ணியம் இல்லாததால் தான் கண்ணியம் கிடைப்பதில்லை.

suvanappiriyan said...

திருநங்கைகள் என்று அழைக்கப்படும் இவர்கள் என்னத்தான் பெண்களை போன்று தோற்றமளித்தாலும் இவர்கள் யாவரும் ஆண்களே ஆவார்கள். இவர்கள் ஒருபோதும் பெண்ணினமாக மாற இயலாது என்பதே உண்மையாகும். இந்த நவின உலகில் எத்தனை விதமான அறுவை சிகிச்சைகளை அவர்கள் மேற்க்கொண்டாலும், அவர்களால் ஒருபோதும் பெண்ணாக ஆக முடியாது. மேலும் பெண்ணிற்குரிய தகுதிகளையும் அடைய முடியாது. .

மேலும் அவர்களை குறித்தும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் ஏராளமான நபிமொழிகள் நமக்கு எச்சரிக்கின்றது. இவர்கள் பெண்களிடம் தங்களை பெண்களைப் போல் காட்டிக் கொண்டு அவர்களுடைய அங்க அவயவங்களை நோட்டமிடும் கீழ்தரமான காரியங்களை செய்பவர்கள். அதனால் இவர்களை ஒரு போதும் பெண்களுடன் தொடர்பு வைக்க அனுமதிக்கக் கூடாது என்பது நபியவர்களின் தெளிவான வார்த்தையாகும். திருநங்கைகள் விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும் அவர்களை ஆண்களாகத் தான் நாம் முடிவெடுக்க வேண்டும் அவர்களுடன் நமது பெண்கள் (அரவாணிகளை பெண்களாக நினைத்து) பழகுவதை தடுக்க வேண்டும்.

மேலும் அவர்கள் பெண்களுக்குரிய கோலத்தில் திரிவதாலும், அடக்கமில்லாமல் விரசமான முறைகளில் அலைவதாலுமே வக்கிர ஆண்களின் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். பெரும்பாலும் அவர்களுக்கு நேரும் பல தொல்லைகளுக்கு அவர்களின் விவேகமற்ற செயல்களே காரணமாக அமைந்து விடுகிறது. முன்பெல்லாம் அவர்களின் நிலை இவ்வாறே இருந்தது என்பது நடைமுறை உண்மையாகும். இதனாலேயே சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருந்து வந்தார்கள். சில நேரங்களில் அவர்களின் நிலைகளை பார்க்கும்போது, அவர்கள் பாவப்பட்டவர்களாகவே நம் மனதிற்கு படுகிறது. அந்த அளவிற்கு அவர்கள் வாழ்க்கையில் பல கஷ்ட்டங்களை அனுபவித்து வருகின்றார்கள்.

அவர்களுக்கு சரியான விழிப்புணர்வு அளிக்கப் படாததாலும், அவர்கள் முறையான கல்வியை பெறாததாலுமே பெரும் சீரழிவிற்கு உள்ளானார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறி வருகின்றதை அனுபவபூர்வமாகவே அறிய முடிகிறது. நமது அரசாங்கம் திருநங்கைகளின் நிலை அறிந்து, அவர்களுக்கு பல சலுகைகளையும், அவர்களின் முன்னேற்றத்திற்கு சில திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. இதனால் அவர்களுக்கு முறையான கல்வியும், விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகின்றது. இவைகளெல்லாம் நமக்கு மனஆறுதலையே அளிக்கிறது. திருநங்கைகள் ஆணுமல்லாத மற்றும் பெண்ணுமில்லாத நம் மனதுக்கு ஒவ்வாத நிலையில் வாழ்ந்து வந்தாலும், அவர்களும் நம்மை போன்ற ஒரு உயிர்தானே. திருநங்கைகளும் ஒரு மனித பிறவி அல்லவா? அவர்களும் இந்த சமுதாயத்தில் சுபிட்சமாக வாழ வேண்டும். அவர்களுக்கு நம்மால் உதவி செய்ய முடியாவிட்டாலும், உபத்திரவம் அளிக்க கூடாது.

Dr.Anburaj said...

சவுதி அரேபியாவில் மருத்துவனையில் அளிக்கப்படும் சிகிட்சை என்ன ? திருநங்கைக்கும் திருநம்பிக்கும் என்ன கிசிட்சை அளித்தால் அவர்கள் பழைய படியே மாறிவிடுவார்கள். சவுதியில் அளிக்கப்படும் சிகிட்சை விபரங்களைத்தான் நான் கேட்டேன். இசுலாமிய பார்வை என்பதே ஒரு முட்டாள்தனம். திருநங்கைகள் ஆண் என்றால் அவர்களுக்கு ஆண் குறி இருக்குமா ? எழுச்சியிருக்குமா ? உறவு கொள்ள முடியுமா ? விந்து இருக்குமா ? விந்தில் உயிா் அணு இருக்குமா ?
பெண்ணாக மாறியிருக்கும் பட்சத்தில் அந்த மாற்றம் எவ்வளவு தூரம் ? ஆண் குறி மறைந்து பெண்குறி வளா்திருக்குமா ? அவர்கள் பெண்கள் போல் மாறிய பின் மாத தீட்டு எற்படுமா ? கா்ப்பப் பை வளாந்திருக்குமா ? குழந்தை பேறு பெற முடியுமா ? பெற்றுள்ளாா்களா ?
இயற்பியல் படித்த நான் இந்த விசயத்தை குறித்து இதுவரை அறியாதவனாகவே இருக்கின்றேன். சிந்தித்தது இல்லை. ஒரு மருத்துவரிடம் கேட்கவும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
இசுலாம் என்றாரல முட்டாள்தனங்களுக்கு பஞ்சம் இருக்காது. இசுலாமிய நோக்கு என்றாலே ஏதோ நிக்கா ஹலால் போல் மடத்தனம் என்றுதான் அா்த்தம்.

திருநங்கைகளும் ஆண்கள்தான் என்பது அடிமுட்டாள்தனம்.திருநங்கைகளுக்கு இந்த குடும்ப வாழ்வில் -கருணாநிதிக்கு கிடைத்தயோகம் - இவர்களுக்கும் உண்டா ? கிடைக்குமா? கிடைக்காமல் -மறுக்கப்படுவதற்கு யார் காரணம். அல்லா இதற்கு என்ன பதில் சொல்லயிருக்கின்றான்.

அல்லாவின் படைப்பில் கோளாறுதான்.
எனது கேள்விகளுக்கு நேராயாக பதில் அளிக்க தெளிவில்லாமல் ஏதோ உளறிக்கொண்டியிருக்கின்றீா்கள்.

ASHAK SJ said...

நான்கு வர்ணங்களை நானே படைத்தேன் அதை நானே பாதுகாப்பேன் என்று சொன்ன கடவுளை வணங்குபவன் அப்படித்தான் பேசுவான், கடவுள் எவ்வழியோ பக்தனும் அவ்வழியே

Dr.Anburaj said...


நான் ஒரு பனை ஏறி நாடாா் சாதியை குடும்பத்தைச் சோ்ந்தவன். பகவத்கீதை சொல்லும் வர்ண பேதம் இயற்கையில் உள்ளது.அது இல்லாத நாடு தெரு ஊா் வீடு இல்லை.உலகை இயக்குவதே அதுதான். ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு திறமைகள் இருக்கும் என்பதுதான் அதன் பொருள். அப்படித்தன் உலகம் இருக்கின்றது.
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தா் என்ற அடிகளார் இயற்றிய ஸ்ரீமத்பகவத்கீதை என்ற அருமையான காவியத்தை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் திருப்பராய்த்துறை திருச்சி மாவட்டம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.அவசியம் அனைவரும் அதைசுப்படிக்க வேண்டும். அசல் நூலைப் படித்து விட்டு முறையாக புரிந்து கொண்டு பேசு தம்பி.எவனாவது வாந்தி எடுத்ததை தின்காதே.

ASHAK SJ said...

நாடார் சமுதாயத்தை ஒருகாலத்தில் பார்ப்பன சமுதாயம் எப்படி நடத்தியது என்று வரலாற்றை பார்த்தால் தெரியும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாடார் சமுதாய மக்கள் மேலாடை அணியக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்ததே பார்ப்பன கும்பல் தான், இதையெல்லாம் மறந்துவிட்டு பேசுவது மடமை

நாடார் சமுதாயம் பட்ட அவமானம் கிருஷ்ணர் கூறிய வாக்கியத்தால் உண்டானது, மீசையில உள்ள மண்ணை துடைச்சிக்கோங்க