Followers

Wednesday, July 11, 2018

கர்நாடகா மண்டலம் செயல் வீரர்கள் கூட்டம்


கர்நாடகா மண்டலம் செயல் வீரர்கள் கூட்டம் 
========================================
பெங்களூரு 06, ஜூலை 2018

அனைத்திந்திய தவ்ஹீத் ஜமாஅத், கர்நாடக மண்டலம் சார்பாக 06-07-2018 வெள்ளிக்கிழமை மாலை கர்நாடக மண்டல செயல் வீரர்கள் கூட்டம் பெங்களூர் கேஜி ஹல்லி மஸ்ஜித்துத் தவ்ஹீத் இல் வைத்து மாநில பொதுச்செயலாளர் சகோ. தவ்பீக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

மாநில செயலாளர் சகோ. முஹம்மது கனி அவர்கள் தாவா பணியின் அவசியம் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.

மாநில செயலாளர் சகோ. காஞ்சி இப்ராஹீம் அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு சம்பந்தமாக கிளை நிர்வாக செயல்பாடுகளை கேட்டு அறிந்து , மாநாட்டு செயல் திட்டங்களை மக்களிடம் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பன பற்றி அறிவுரைகளை வழங்கினார்.

இறுதியாக மாநில பொது செயலாளர் சகோ. த்வபீக் அவர்கள் திருக்குர்ஆன் மாநாட்டை எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பது பற்றி செயல் வீரர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் பெங்களூரில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகளும் மற்றும் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ் .


1 comment:

Dr.Anburaj said...

இந்திய மண்ணை நேசிக்காத
மண் வாசனையற்ற மக்களின் கூட்டம்.
அரேபிய மண்ணை நேசிக்கும் மக்களின் கூட்டம்.