Followers

Wednesday, July 04, 2018

சமுதாய பணி

சமுதாய பணி
மதுரை அண்ணா நகர் கிளை அருகில் வண்டியூர் பகுதியில் அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது, இரண்டு தினங்களுக்கு முன்பு நமது கிளை சகோதரர்கள் அந்த பள்ளிக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்து அங்குள்ள கல்வி தரத்தை பற்றியும் இங்கு என்ன தேவை என்பதையும் கேட்டதன் அடிப்படையில் குழந்தைகளுக்கு இன்னும் இலகுவாக கல்வி கற்றுக்கொடுக்க கணிப்பொறி (கம்ப்யூட்டர்)தேவை என்று கூறினார்கள், கிளையில் ஒரு சகோதரர் மூலம் ரூபாய் 20000 இருபதாயிரம் மதிப்புள்ள இரண்டு கணிப்பொறி (கம்ப்யூட்டர்) ஒரு டச் மொபைல் (டேப்) பெறப்பட்டு 2/7/2018 அன்று மதுரை வண்டியூர் அரசு தொடக்க பள்ளியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் அண்ணா நகர் கிளை சார்பாக கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் ஒப்படைத்தோம்,
அல்ஹம்துலில்லாஹ், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டு பெறும் மகழ்சியடைந்து ஒரு விஷயத்தை சொன்னார்கள் இதற்க்கு முன்பு நிறையபேர் கேட்டுவிட்டு திரும்ப வந்ததில்லை ஆனால் உடனே இதை ஏற்பாடு செய்து தந்துவிட்டீர்கள் என்று கூறினார்கள்,
அந்த மன நெகிழ்வை பார்க்கும் போது இன்னும் இது போன்ற பணிகளை செய்து இறைவனிடத்தில் நற்கூலியை பெறவேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. இதை போன்று மற்றகிளைகளிலும் அரசு பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்கு பயன் பெறும் வகையில் இது போன்ற சமூக பணிகளை செய்து இறைவனிடம் கூலியை பெற ஆர்வமூட்டுகிறோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அண்ணாநகர் கிளை மதுரை மாவட்டம்
அல்ஹம்துலில்லாஹ்.....


No comments: