Followers

Saturday, July 28, 2018

கரை புரண்டு ஓடும் காவிரி நீர்......

தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் குடமுருட்டி ஆற்றில் கரை புரண்டு ஓடும் காவிரி நீர். இங்கிருந்து பிரியும் பல வாய்க்கால்களின் தண்ணீர் ராஜகிரி பண்டாரவாடை கிராமங்களின் குடி நீர் தேவையை பூர்த்தியாக்குகின்றன.

ஆனால் வாய்க்கால்கள் பராமரிப்பு இன்றி இருப்பதால் தண்ணீர் பல இடங்களில் வீணாகிறது. பொது மக்களும் வாய்க்கால் குளங்களில் குப்பைகளை கொட்டி தங்கள் பங்குக்கு நீராதாரத்தை வீணாக்குகின்றனர். மக்களிடம் நீர் நிலைகளை பராமரிப்பதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும். கிராமங்களில் உள்ள தவ்ஹீத் ஜமாத் போன்ற இயக்கங்கள் மக்களிடம் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முன் வர வேண்டும்.


No comments: