Followers

Thursday, July 05, 2018

மோடியின் ஆட்சியில் தேவதாசி முறை உயிர் பெறுகிறது!



கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்தியாவில் தேவதாசி முறை இருந்தது. நிலபிரபுகள், செல்வந்தர்கள், உயர் ஜாதியினர் தேவதாசி முறையில் உள்ள பெண்களை தங்களது விருப்பத்திற்கு வைத்துக்கொள்வார்கள்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்த தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று பெரும் போராட்டங்கள் நடைப்பெற்று தமிழகத்தில் உள்ள மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மிகக் கடுமையான போராட்டங்களை நடத்தி அந்த தேவதாசி முறைக்கு சட்டப்படி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்தியாவில் தென் மாநிலங்களில் இந்த தேவதாசி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டாலும் வட மாநிலங்களில் பெயர் மாறி தேவதாசி முறை இப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கு உதாரணம்தான், ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு பெண்களை மனைவிகளாக வைத்துக்கொள்வது. உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்த ஒப்பந்த மனைவிகள் முறை இன்றும் நீடித்து வருகிறது.

வசதியானவர்கள், உயர் ஜாதி வகுப்பினர் பெண்களை ஒப்பந்த அடிப்படையில் வைத்துக்கொள்ள அங்குள்ள ஏஜென்சிகள் மூலம் விண்ணப்பிக்கிறார்கள். குறைந்தபட்சம் 6 மாதம் அல்லது ஒரு வருடம் வரை பெண்கள் சம்மந்தப்பட்ட நபருக்கு மனைவியாக இருக்க வேண்டும். அப்படி செல்லும் அந்த பெண்ணுக்கு ஊதியம் மாதம் ரூபாய் 5 ஆயிரம் முதல் கொடுக்கப்படுகிறது. உணவு, தங்கும் அறை, மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

இதையெல்லாம் ஒப்பந்த பத்திரமாக பதிவு செய்யப்பட்டு, அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் சம்மந்தப்பட்ட நபர் வழங்குவார். ஒருவேளை காலக்கெடு முடிந்த பிறகு, அந்த பெண்ணே அவருக்கு தேவை என்றால் மீண்டும் ஒரு வருடம் காலநீடிப்பு ஒப்பந்தம் போடப்படுகிறது. இதுபோன்ற முறைகள் உத்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் செல்வந்தர்கள் குடும்பங்களில் இன்றும் இருந்து வருகிறது.

ஒப்பந்த மனைவிகளாக போகும் பெண்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பெண் அடிமைத்தனம் இல்லை. பெண்கள் சுயமாக இயங்குகிறார்கள், முன்னேறுகிறார்கள் என மத்திய அரசு சாதனை பட்டியலை வெளியிட்டுக்கொண்டிருக்க ஒழிக்கப்பட்ட தேவதாசி முறை புதிய பெயரில் ஒப்பந்தம் மனைவிகளாக வடமாநிலங்களில் நீடித்து வருகிறது.
தகவல் உதவி
நக்கீரன்

6 comments:

Dr.Anburaj said...


மோடியின் ஆட்சியில்தான் ஒரு சிறுமியை இரண்டு முஸ்லீம் ஆட்டோ டிரைவா்கள் ஏமாற்றி பாலயில் வக்கிரங்கள் செய்கின்றார்கள் என்று தாங்கள் தலைப்பு ஏன் போடவில்லை. மோடி ஒரு மகா பிரம்மச்சாரி.கற்பு நெறி யோடு வாழும் ஒரு அருமையான இந்து. இன்றுள்ள தினத்தந்தியைப் படியுங்களேன். இசுலாம் பற்றி வெளிவந்துள்ள கட்டுரை சிறப்பாக உள்ளது.

ஒரு கசப்பான உண்மையை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.பிறப்பின் அடிப்படையில் ஒரு பெண்ணிடம் அடங்காத ஆண்மக்கள் இருப்பது போல் ஒரு ஆணால் திருப்பதி படுத்தாத திருப்தி அடையாத பெண்கள்ள இருக்கின்றார்கள்.ஆகவே கற்பு என்பது தூரத்து பச்சைததான். இன்று விபச்சாரம் call girl என்று கௌரவம் பெற்றுள்ளது. தேசதாசி முறை தொடரவில்லை.விபச்சாரம் வாழ்கின்றது. சென்னை நகரத்தில் உள்ள லாட்ஜ்களில் கிடைக்காத பெண்களா ?

ஏன் சதா மோடிஜி அவர்களை கேவலப்படுத்துகின்றீா்கள்.

முட்டாள்தனம்.ஈனத்தனம்.எமாற்றுவேலை. தேசததுரோகம்.

Dr.Anburaj said...

எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு துன்பம் ஏற்படக் கூடாது. முஸ்லீம்கள் அனைவரும் ஏகபத்தினி விரதர்களா ? முஸ்லீம் பணக்காரர்கள் இந்த விளையாட்டு விளையாடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.தௌஹித் ஜமாத் இயக்க தலைவா்கள் அ னைவரம் இந்த தவறைத்தானே செய்து தொலைந்து போனார்கள். பெண்களை கண்ணியப்படுத்தாத எந்த சமூகமும் அழிந்து போகும்.பெண் என்பவன் தாய்மையின் அடையாளம்.
நமது சகோதரிகளை நமது தாய் மற்றும் சொந்தங்களை நாம் நேசிப்பது போல் பிறரின் பெண் உறவுகளை நாம் சத்ரபதி சிவாஜி போல மதித்து வாழ கற்றுக் கொடுக்க வேண்டும்.
சத்ரபதி சிவாஜியும் சுவாமி விவேகானந்தரும் பிறந்த மண்ணில் இப்படி நடப்பது ????? வேதனையாக உள்ளது. இந்து மதம் முறையாக மக்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

ASHAK SJ said...

இதெற்க்கெல்லாம் முன்னோடி முஹம்மதுதான் (ஸல்) ன்னு சொல்லிக்கிட்டு ஒரு கிறுக்கன் இப்ப வருவாரு, முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்திலேயே அதை ஒழித்துவிட்டார் ன்னு சொன்னாலும் புரியாத மரமண்டை, அப்பறம் இந்திய சட்டத்தை விடுங்க இதை ஹிந்து மதம் ஆதரிக்குதான்னு? கேட்டா பதில் சொல்ல மாட்டாங்க. மனிதனை பெண்ணை மரியாதை செய்யும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே

Dr.Anburaj said...

ஆண்கள் அனைவரும் இராமன் போல் திருமணமத்திற்கு முன்

அனுபிரம்பச்சரியம்

கடைபிடித்தும் திருமணத்திற்கு பின்

ஏகபத்தினிவிரதமும்

கடைபிடித்து வாழ்ந்தால் எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு இழிநிலை ஏற்படாது.

Dr.Anburaj said...

தம்பி ஆசிக்
பேரழகான இந்த பெண்ணைக் கண்டு நிச்சயம் சிவாஜி பெண்மோகம் கொள்வாா் என்று நம்பிய சிவாஜியின் தளபதிகள் அழகான முஸ்லீம் பெண் கைதியை சிவாஜயின் முன் விட்டனா்.

சத்ரபதி சிவாஜி அப்பெண்ணைப் பார்தது ”பேரழகு படைத்த உன் வயிற்றில் நான் பிறந்திருந்தால் நானும் மிக அழகான ஒருவனாகப் பிறந்திருப்பேன் ” என்று சொன்னாா்.

அந்த குமுஸ் பெண்ணை தனது தாயாகவே ஆக்கிவிட்டாா். இதுபோன்ற ஒரு சம்பவம் முகம்மதின் வாழ்க்கையில் அல்லது பதவிச் சண்டையில்....நாசமாகி அழிவு சக்தியாக விளங்கிய நபி தொழா்கள் வாழ்க்கையில் உண்டா ?

சொல்லுங்கள் அசிக்.

ASHAK SJ said...

முஹம்மது (ஸல்) மனைவிகள் தவிர வேறு பெண்களை தொட்டது கூட இல்லை, அந்நிய பெண்ணுடன் தனித்திருப்பதை விட இரும்பால் ஆனா ஆணியால் ஏன் தலையை கீறிக்கொள்வதே சிறந்தது என்று சொன்னார்கள், பெண்களை போகப்பொருளாக இஸ்லாம் சித்தரிக்கவில்லை