Followers

Saturday, July 21, 2018

ராகுல் காந்தியின் ஆக்ரோஷமான பேச்சு!

ராகுல் காந்தியின் ஆக்ரோஷமான பேச்சு!
நாட்டில் அசாதாரண சூழ்நிலை உருவாகும் போது ஒரு தலைவன் தானாக உருவாகிறான். அல்லது உருவாக்கப்படுகிறான். கொலைகார கட்சியான பாஜகவை வீழ்த்த சிறந்த தலைவர் கிடைத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, பாஜ.வையும் பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கிப் பேசினார். அவர் பேசியதாவது:
பாஜ,வின் அரசியல் மோசடி ஆயுதத்துக்கு தெலுங்கு தேசம் கட்சியை போல் பல கட்சிகள் பலியாகி உள்ளன. இது, 21ம் நூற்றாண்டின் அரசியல் ஆயுதம். உங்களை போலவே விவசாயிகள், இளைஞர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், பெண்கள் என பல தரப்பினர் பாஜ அரசின் இந்த ஆயுதத்தால் பலிக்கடா ஆகி இருக்கின்றனர்.
குறிப்பிட்ட சிலருடன் பிரதமர் மோடி வைத்துள்ள நட்பு பற்றி எல்லாருக்கும் நன்றாக தெரியும். அவரை பிரபலப்படுத்துவதற்காக எவ்வளவு பணம் செலவு செய்யப்படுகிறது என்பதையும் அனைவரும் அறிவார்கள். இந்த பணத்தை யார் செலவு ெசய்கிறார்கள் என்பதும் தெரியும். அவருக்கு தெரிந்தவர்களில் ஒருவருக்குதான், ரபேல் போர் விமான ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அவர், ரூ.45 ஆயிரம் கோடி ஆதாயம் அடைந்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் பற்றி பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பொய் பேசி வருகிறார். இந்த ஒப்பந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கும் தனது நாட்டுக்கு அரசுக்கும் ரகசிய உடன்பாடு எதுவும் இல்லை என்று பிரான்ஸ் பிரதமர் தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறியுள்ளார். ஆனால், இது ரகசிய உடன்பாடு என்று நிர்மலா சீதாராமன் கூறி வருகிறார். இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட இந்த ஒப்பந்தம், அதனிடம் இருந்து பறிக்கப்பட்டு குறிப்பிட்ட ஒரு தொழிலதிபரிடம் ஏன் கொடுக்கப்பட்டது என்பதற்கான பதிலை பிரதமர் மோடி அளிக்க வேண்டும்.
பாஜ ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனுக்கும் தலா ரூ.15 லட்சம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதுதான் பாஜ.வின் ‘மோசடி தாக்குதல் நம்பர் ஒன்’. அடுத்து, ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இதுதான் பாஜ.வின் ‘மோசடி தாக்குதல் நம்பர் 2’.
பெரிய தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட ரூ.2.5 லட்சம் கோடி கடனை மோடி அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு கடன் ரத்து செய்வதற்கு அது மறுக்கிறது. மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக இதுவரை பல ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், சீனாவுக்கு அவர் திட்டமில்லா பயணம் சென்றபோது டோக்லாம் எல்லை பிரச்னையை பற்றி பேசவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார். ராகுல் அளித்த அதிர்ச்சி: நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து பேசிய ராகுல், பாஜ.வையும், மோடியையும் கடுமையாக தாக்கி பேசினார். அவையில் அமர்ந்திருந்த மோடி, அதை அமைதியாக கவனித்து கொண்ருந்தார். தனது பேச்சை முடிக்கும் தருவாயில், ராகுல் திடீரென பிரதமர் மோடியை நோக்கி வந்தார். அவரை கட்டிப்பிடித்தார். மோடி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்ன நடக்கிறது என்பது தெரியாமல் சிறிது நேரம் அப்படியே சிலை போல் அமர்ந்திருந்தார். அவரை கட்டிப்பிடித்த பிறகு ராகுலும் தனது இருக்கையை நோக்கி நடந்தார். சில நொடிகளில் சுதாரித்துக் கொண்ட மோடி, ராகுலை மீண்டும் அழைத்து அவரை கட்டிப்பிடித்து முதுகில் தட்டிக் கொடுத்தார். அப்போது இருவரும் ஒரு சில வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர். அது, யார் காதிலும் சரியாக விழவில்லை. மோடியின் பின்னால் அமர்ந்திருந்த பாஜ தலைவர்கள் வாயை பிளந்தபடி இந்த காட்சியை பார்த்து கொண்டிருந்தனர். மோடியும், ராகுலும் கட்டிப்பிடித்ததை அவையில் இருந்த சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும் பலத்த கரகோஷம் செய்து வரவேற்றனர்.
பின்னர் தனது இருக்கைக்கு திரும்பிய ராகுல், ‘‘இந்து என்பதற்கான சரியான அர்த்தம் இதுதான். உண்மையான காங்கிரஸ்காரன், உண்மையான இந்தியன், உண்மையான இந்து என்பதற்கான அர்த்தத்தை பிரதமர் மோடியும், பாஜ.வும் எனக்கு கற்று கொடுத்ததற்கு நன்றி. பாஜ,வும், மோடியும் என்னை வெறுக்கலாம். என்னை குழந்தை என்று அழைக்கலாம். அதற்காக நான் அவர்கள் மீது கோபப்பட மாட்டேன். வெறுக்கவும் மாட்டேன்.’’ என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.



2 comments:

Dr.Anburaj said...

போா் விமானங்களின் அமைப்பு ஆயுதங்களின் செயல் திறன் போன்ற எந்த தகவலையும் பகிரங்கப்படுத்துவது முட்டாள்களின் செயல். அந்த வகையில் ராகுல் வடிகட்டிய முட்டாள்.கடுகளவும் தகுதிஇல்லாதவா்.
----------------------------
மேல்நாடுகளில் உயா்ந்த தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கப்படும் போர் விமானங்கள் மற்றும்ஆயுதங்கள் தனியாா் கம்பெனிகள்தாம் தயாரிக்கின்றன. அரசின் கட்டுப்பாடு ஏதும் இல்லை.எனவேதான் சுதந்திரமான ஆராய்ச்சி காரணமாக நிறையபுதிய புதிய விஞ்ஞான யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டு அறிவியல் வளா்ச்சி முன் எடுத்துச் செல்லப்படுகின்றது.
இந்தியாவிலும் திரு.மோடி அரசு ராணுவ தளவாட உற்பத்தியில் தனியாா் கம்பெனி களை முழுமையாக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கு தமிழ்நாட்டில் 3 இடங்களில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றது.அதுபோல் ரபேல் போர்விமான உற்பத்தியில் தனியாா் கம்பெனி அம்பானி ஈடுபடுத்தப்பட்டுள்ளது தவறு அல்ல.நியாயம்தான். சிறந்த போர்விமானங்கள் உருவாக தனியாா் நிறுவனங்கள் காரணமாக இருக்கும். ஆக ராகுல் காந்தியின் இந்தவாதம் முட்டாள்தனமானது.பொய்யானது.
---------------------------------------------------------------
மொத்த பணத்தையும் கைபற்றினால் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் போட முடியும் என்பது ஒரு உவமை. கருப்ப பணத்தைகைப்பற்றினால் மக்களின் வங்கிக் கணக்கில் போடுவேன் என்று சொல்லவில்லை. பிடிக்கப்படமு் கருப்பு பணத்தை மக்களின் வங்கி கணக்கில் போடுவது தவறான செயலாகும். உடலில் உள்ள இரத்தக் குழாய்களின் மொத்தநீளம் இந்த புமியின் குறுக்கு வெட்டு நீளத்தை விட அதிகம் என்பதுபோல்.
-----------------------------
காங்கிரஸ்ஆட்சியில் ஊழல் மலிந்து காணப்பட்டது.2ஜைி ஊழல் விளையாட்டு போட்டிகள் நடத்தியதில் ஹெலிகாப்டதா் வாங்கியதில் ஊழல் நிலக்கரி ஊழல் என்று ஊழல்தான் இந்தியாவை நிறைத்தது. அதுகுறித்து தம்பி திரு.ராகுல் காந்த என்ன சொல்லப்போகின்றாா்.
-------------------------------------------------------
பெரிய நிறுவனங்களுக்கு வங்கிக்கடனையோ மானியமாகவோ எந்த தொகையும் அரசு அளிக்கவில்லை.பெரிய தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட ரூ.2.5 லட்சம் கோடி கடனை மோடி அரசு ரத்து செய்துள்ளது- என்பது தவறு என்று நிதி அமைச்சா் மறுத்து விட்டாா். எனவே நிரூபணம் தேவை.வங்கிக் கடளை செலுத்தவிட்டால் சொத்துக்கள்அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுமேற்படி நபா் திவாலா என்று அறிவிக்கப்படுவாா் என்ற சட்டத்தை திரு.மோடிஅரசு கொண்டு வந்துள்ளது. எனவே வங்கிக்கடன் செலுத்தமல் எமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ எனனாலும் இயலாது. இந்த சட்டம் வந்த பின் வங்கிக் கடன் கள் வேகமாக வசுலாகி வருகின்றது பொடியன் ராகுலுக்கு தெரியுமா ?
-----------------------------------------------------------------------------
அரசு காரியங்களைச் செய்ய வெளிநாட்டுக்குச் செல்ல தனது சொந்த கைகாசில் செல்ல பணவசதி திரு.மோடிஅவர்களிடம் இல்லை.ரயில் நிலையத்தில் டீ விற்பனை செய்தவா் மோடி அவா்கள்.வெளிநாட்டுப்பயணங்களில் நாட்டிற்கு ஆயிரம் நன்மைகள் உண்டு. இன்ப சுற்றுலா அரசு செலவில் செல்லவில்லை.
உறுதியான இறுதியான முடிவு எடுக்கப்பட்ட பின் அது குறித்து யாரிடமும் பேச தேவையில்லை. சீன எல்லை டோக்லாம் பகுதியில் இந்தியா எடுத்த நிலை உறுதியானது.இறுதியானது.எனவே சீன அதிபரிடம் அது குகுறித்து பேசுவது முட்டாள்தனம்.திரு.மோடி ஒரு அரசியல் மேதை. எனவே டோக்லாம் பிரச்சனைகுறித்து சீன அதிபரிடம் பேச வேண்டியதில்லை.இந்த விசயத்திலும் ரா?குல் காந்தியின் முட்டாளதனம்தான் வெளிப்பட்டுள்ளது.

ASHAK SJ said...

போர் விமானத்தின் செயல்திறனை அல்ல ராகுல் கேட்டது, விலையைத்தான் கேட்டார் என்பது முட்டாள்களுக்கு எப்போ புரியும் ?
மொத்த பணத்தையும் கைப்பற்றினால் 15 லட்சம் போடமுடியும் என்றால், எவ்வளவு கருப்பு பணம் உள்ளது என்று மோடிக்கு தெரிந்து இருக்கிறது என்று அர்த்தம், எப்படி மோடி மஸ்தானுக்கு தெரிந்தது என்பதே முக்கிய கேள்வி, மூடன்பதில் சொல்வானா?
சவப்பெட்டி ஊழல் , விளையாட்டு போட்டி ஊழல் புகழ் சுரேஷ் கல்மாடி ஒரு ஆர் எஸ் எஸ் காரர் , வியாபம், கடலைமிட்டாய் , பணமதிப்பிழப்பு ஊழலுக்கு மொடுமுட்டியிடம் பதில் உண்டா?
கடன் வாங்கியவர்கள் பாஸ்போர்ட்டை முடக்கமுடியாத கையாலாகாத அரசுதான் அவர்களின் சொத்தை முடக்கி பணத்தை வசூலிக்கும் ?
நாட்டின் பிரதமர் தனி நபருடன் நாடு சம்பந்தப்பட்ட விசயத்துக்கு சுற்றுலா சென்று ஆயிரக்கணக்கான ரூபாயை வீணாக்கியுள்ளார், இதனால் ஒரு பலனும் இல்லை
சீனாவுக்கு மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யவதால், டோக்லாம் பிரச்ச்னை பற்றி பேசமுடியாது என்பதே மோடியின் சாணக்கியத்தனம்

மொடுமுட்டியை மொடுமுட்டிகளே புகழ்வார்கள்