Followers

Thursday, February 14, 2019

நமது நாட்டின் ஒரு உயர் மட்ட ராணுவ அதிகாரி.....அஜீத் தோவல் ஐபிஎஸ்

நமது நாட்டின் ஒரு உயர் மட்ட ராணுவ அதிகாரி பாகிஸ்தானில் நாச வேலைகளை எப்படி எல்லாம் நிறைவேற்றினார் என்று தேச பக்தி போர்வையில் சொல்வதைப் பாருங்கள்.

சார்.... நீங்கள் வருடம் பாகிஸ்தானில் முஸ்லிமாக நடித்து உளவு பார்த்துள்ளீர்கள். அது பற்றிய அனுபவங்களை பகிரலாமே?

அஜீத் தோவல் ஐபிஎஸ்:

ஐந்து வருடம் அல்ல ஏழு வருடம் உளவு பார்த்துள்ளேன். பாகிஸ்தானின் லாகூரில் ஒரு மிகப் பெரிய தர்ஹா உள்ளது. நிறைய ஆட்கள் அந்த தர்ஹாவுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். நானும் ஒரு முஸ்லிமாக அந்த கூட்டத்தோடு கூட்டமாக வலம் வந்து கொண்டிருந்தேன். அந்த தர்ஹாவின் ஒரு மூலையில் நீண்ட வெள்ளை தாடியோடு ஒரு மகானைப் போல ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னை சைகையால் அழைத்தார். அழைத்து அவர் என்னிடம் கேட்டார்..


'நீ இந்துவா?' 


'இல்லை... நான் இந்து அல்லஎன்று மறுத்தேன்.


'என்னோடு வா...என்று என்னை அழைத்துக் கொண்டு ஒடுக்கமான சந்துகளின் வழியாக என்னை அழைத்துச் சென்றார். மறு பேச்சு பேசாமல் அவரோடு சென்றேன். அவருடைய வீடு வந்தவுடன் என்னை உள்ளே அழைத்துச் சென்று கதவை தாளிட்டார். கதவை தாளிட்டவுடன் என்னிடம் அவர் திரும்பவும் 


'நீ இந்துதானேஎன்று கேட்டார். நான் குழம்பிப் போய்


'ஏன் என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள்?' என்று கேட்டேன்.


'ஏனென்றால் உனக்கு காது குத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் காது குத்த மாட்டார்கள்என்றார்.


'ஆம்... நான் முன்பு இந்து. இப்போது முஸ்லிமாக மதம் மாறியுள்ளேன்என்று சொன்னேன்.


'இல்லை... பொய் சொல்கிறாய்... இப்போதும் நீ இந்துவாகத்தான் இருக்கிறாய். பயப்படாமல் சொல் நீ இந்துதானே'


'ஆம் நான் இந்துதான்'


'உடனே காதுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஓட்டையை அடைத்து விடு. பாகிஸ்தானில் உளவாளியாக இவ்வாறு திரிவது பெரிய ஆபத்தில் போய் முடியும்.'


'சரி நான் மறைத்துக் கொள்கிறேன்.'


'நீ இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படி கண்டு பிடித்தேன் என்பது உனக்கு தெரியுமா?' 


'தெரியாது நீங்களே சொல்லுங்கள்'


'ஏனென்றால் நானும் ஒரு இந்துதான்' (சபையில் கைத் தட்டல்) இந்த மக்கள் எனது முன்னோர்களை நிறைய கொன்றுள்ளார்கள். அதற்கு நான் இப்பொழுது பழிக்குப் பழி வாங்கிக் கொண்டுள்ளேன். உங்களைப் போன்ற உளவாளிகளைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.என்று சொல்லிக் கொண்டே அந்த அறையின் அலமாரியை திறந்து எனக்கு காண்பித்தார்.


'இதோ பார் சிவனின் சிலை... அருகில் துர்காவின் சிலை.... நான் இதைத்தான் தினமும் வணங்கி வருகிறேன். வெளியே சென்றால் நான் ஒரு இஸ்லாமிய சூஃபி மகானாக மதிக்கப்படுகிறேன். தர்ஹாவில் எனக்கு மிகுந்த மரியாதையும் கிடைக்கிறது.என்றார். 


அந்த பெரியவரை அதற்கு பிறகு நான் சந்திக்க முடியவில்லை. அவருக்கு அரசு தரப்பிலிருந்து உதவி ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். அது என்னால் முடியாமல் போய் விட்டது'

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது முஸ்லிம்களும் இந்துக்களும் பாதிக்கப்பட்டது உண்மை. ஆனால் அதற்காக வஞ்சம் தீர்க்க அவர்களின் பிள்ளைகளை குண்டு வைத்து கொல்வது என்ன நியாயம்? இதை பெருமையாக ஒரு ராணுவ அதிகாரி சொல்கிறார். படித்த பல இந்துத்வ மக்கள் கை தட்டி தேச பக்தி என்ற பெயரில் ஆர்ப்பரிக்கிறார்கள். 


1 comment:

Dr.Anburaj said...

ஏற்கனவே இந்த இந்த செய்தி தங்கள் இணையத்தில் போடப்பட்டுள்ளது. தற்சமயம் மீண்டும் இதை வெளியிடுவானேன் .

அதற்கு என்ன காரணம் தேவை உள்ளது. விஷமத்தனம்.

திரு.அஜித் அவர்கள் ஒரு இந்தியன். அவரின் சதி திட்டம் காரணமாக எத்தனை பாக்கிஸ்தானியர்கள் செத்தாா்கள்.தங்களிடம் கணக்க உளளதா ? எத்தனை கு்ண்டுகள் பாக்கிஸ்தானில் வெடித்தது.கணக்கு தங்களிடம் உள்ளதா ?

பாக்கிஸ்தான்காரன் எவ்வளவு அட்டுழியம் செய்து வருகின்றான். உளவு பணி என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு மிக தேவையான ஒன்று.இந்தியாவில் எண்ணற்ற நாச வேலை செய்து வரும் பாக்கிஸ்தானியரகளை எப்படித்தான் அடக்குவது.முஸ்லீம்களுக்கு முக்கியம் முஸ்லீம்கள்தான். பாக்கிஸ்தானிய முஸ்லீம்கள்தான் தங்களுக்கு உறவு நட்பு. இந்தியாவில் வாழும் இந்துக்கள் காபீர்கள்தானே. செத்தால் மகிழ்ச்சிதான் சுவனப்பிரியனுக்கு.இராமலிங்கம் என்ற காபீா் செத்து விட்டான். சகாரியா பதா் அல் ஜபீா் என்ற 6 வயது சியாகாபீா் செத்து விட்டான். 44 மத்திய ரிசர்வ் படைவீரா்கள்-காபீர்கள் செத்து விட்டாா்கள்.
ஒரு ஒட்டகததை வாங்கி அறுத்து அறுவிருந்து சமைத்து கொண்டாடுங்கள் தேசதுரோகியே.