Followers

Tuesday, February 26, 2019

அஜித் தோவலின் மகன் சூர்யா தோவலின் பார்டனர் ஒரு பாகிஸ்தானி!




அஜித் தோவலின் மகன் சூர்யா தோவலின் பார்டனர் ஒரு பாகிஸ்தானி!
நமது நாட்டின் முக்கிய பதவியான பாதுகாப்பு ஆலோசகரகராக அஜீத் தோவல் இருக்கிறார். இவரது மகன் சூர்யா தோவல் தனது பிஸினஸ் பார்ட்னராக வைத்திருப்பது பாகிஸ்தானியரான சையது அலி அப்பாஸ். பாதுகாப்பு ஆலோசகரின் மகன் ஒரு எதிரி நாட்டின் பிரஜையோடு வியாபாரம் புரியலாமா? இதனால் எத்தனை ரகசியங்கள் பாகிஸ்தானுக்கு செல்லும் என்று நீங்கள் கேட்டால் 'தேச துரோகி' என்று அழைக்கப்படுவீர்கள். இதே காரியத்தை மற்றவர்கள் செய்திருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்.
காங்கிரஸ் கைது செய்து சிறையில் அடைத்த ஜெய்ஷே முஹம்மது தலைவன் மசூத் அசாரை விடுதலை செய்து பத்திரமாக ஆப்கானிஸ்தானில் இறக்கி விட்டதும் பிஜேபி ஆட்சியில்தான். மசூத் அசாரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதும் அஜீத் தோவல்தான். பிஜேபி எப்பொதெல்லாம் மக்கள் செல்வாக்கை இழக்கிறதோ அப்போதெல்லாம் மசூத் அசார் உதவிக்கு ஓடி வருவான். எங்காவது குண்டு வைத்து பிஜேபியின் செல்வாக்கை சரி செய்வான்.
இதே அஜீத் தோவல்தான் நேற்று பாகிஸ்தான் மீது 12 விமானங்களை பறக்க விட்டு ஆளில்லா இடத்தில் குண்டுகளை போட்டு விட்டு 2 கோடிக்கு கணக்கு காட்டியுள்ளார். 200 பேர் என்றும் 300 பேர் என்றும் ஆளாளுக்கு கணக்கை கூட்டிக் கொண்டுள்ளனர். ஆனால் குண்டு விழுந்ததோ ஆளில்லா பகுதியில். இதற்கான ஆதாரங்களை பன்னாட்டு பத்திரிக்கையாளர்களை அழைத்துச் சென்று காண்பிப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. இந்த உண்மைகளை எல்லாம் பேசினால் உங்களை தேச துரோகி என்றும் பாகிஸ்தானுக்கு ஓடு என்றும் சங்கிகள் கூறுவார்கள். 

2 comments:

Dr.Anburaj said...

சுவனப்பிரியன் தாங்கள் இவ்வளவு மடையனாக இருப்பீர்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
காந்தகாாில் நமது பயணிகள் விமானம் கடத்தி வைக்கப்பட்டு விமானமும் விமானப்பயணிகளும் பத்திரமாக வைக்க ஜெய்ஷே முஹம்மது தலைவன் மசூத் அசாரை மற்றும் சிலகூட்டாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு ஜெய்ஷே முஹம்மது தலைவன் மசூத் அசாரை விடுதலை செய்யப்பட்டாா்.காந்தகாருக்கு வெளிநாட்டு துறை மந்திரி கொண்டு ஒப்படைத்து விமானத்தை திரும்ப கொண்டு வந்தாா்கள.
----------------------------------------------------------------------------
முஸ்லீம் பயங்கரவாதியான ஜெய்ஷே முஹம்மது தலைவன் மசூத் அசாரை விடுதலை செய்ய வேண்டும் என்று விமானம் கடத்தப்பட்டு பணயம் பேசப்பட்டதை ஏன் மறைக்க வேண்டும் ?
--------------------------------------------------------------------------
பாக்கிஸ்தான் சொல்வதைத்தான் நீங்கள் நம்புவீர்கள்.இதுதான் அரேபிய மத சகோரத்துவம்.இசுலாமியசகோதரா் ஜனாப் இம்ரான்கான் முக்கியமா? இந்து காபீர்கள் முக்கியமா ? என்ன சுவனப்பிரியன்.
---------------------------------------------------------------------------------
முகாம்களை குண்டு வீசி தாக்கிய வீடியோ படம் வெளிவந்து விட்டது.பார்த்துக் கொள்ளுங்கள். காடையர்களின் இருப்பிடத்தை துல்லியமாக தாக்குவதைக் காணலாம். செத்தவர்களின்எணணிக்கையை பாக்கிஸ்தான் தரப்புதான் சொல்ல வேண்டும். அமெரிக்கா 700 பேர்கள் காலியாகி இருக்க வேண்டும் என்று சொல்கிறது.
--------------------------------------------------------
திரு.அஜத் தோவல் குறித்த இவ்வளவு வயித்தெரிச்சல் ஏன் ?
பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்றுமதி இறக்குமதி செய்ய அனுமதி சட்டப்படி இருக்கும் போது வியாபார பங்காளிகள் வரத்தானே செய்வரா்கள்.திரு.அஜித் தோவல் சாணக்கியன். வயித்தெரிச்சல் பட வேண்டாம்.

Dr.Anburaj said...


இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானத்து அதிபா் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

1000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளாா்கள என்று அறிவித்துள்ளாா்.

அரேபிய விஷத்தை படித்த பாக்கிஸ்தானிய காடையர்கள் இந்தியாவில் மட்டும் அல்ல ஆப்பானிஸ்தானிலும் ஈரானிலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி விட்டு பாக்கிஸ்தானில் ஒழிந்து கொள்கின்றாார்கள்.பாக்கிஸ்தானில் பயங்கரவாத காடையரகளுக்கு பயிற்சி சம்பளம் ஆயுதங்கள் மற்றும் செத்தால் பெரும் தொகை குடும்பத்திற்கு நட்ட ஈடு கிடைக்கின்றது.எனவே வேலை வெட்டியில்லாத முட்டாள்கள் மூளைச் சலவை செய்து இறந்தால் உடனே சொர்க்கம் .அஙகே 73 பெணகளோடு காம சல்லாபம் செய்யலம் என்ற ஆசை காட்டி மூளையை மளுங்கடித்து தாக்குதலுக்கு பயன்படுத்திக் கொள்கின்றாார்கள்.