Followers

Sunday, February 17, 2019

நம்மூர்ல இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்

நம்மூர்ல இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்
இன்று காலை, திடீரென்று கோவிந்தப்ப நாய்க்கன் தெரு, என் எஸ் சி போஸ் சாலை, ரிச்சி தெரு, காசி செட்டித் தெரு போன்ற இடங்களில் தேசியக் கொடிகளை ஏந்தி வந்த மார்வாடி கும்பலொன்று, வந்தேமாதரம் கோஷத்துடன் கடைகளை மூடச் சொல்லி வற்புறுத்தியுள்ளது.
பணிந்த ஒரு சிலர் சடசடவென ஷட்டர்களை இறக்கியிருந்திருக்கிறார்கள். நம்மாளுக மட்டும் மறுத்திருக்கிறார்கள். உடனே அவர்கள் உனக்கு தாய்நாட்டுப் பற்றில்லையா, பாரத் மாதா, ஜெய்ஹிந்த், அங்கே எல்லையில் ராணுவ வீரர்கள் என்றெல்லாம் சீன் போட, ஓரிரு முரடர்கள் ஷட்டர்களை அவர்களாக கீழிழுத்து, தட்டி என்றெல்லாம் அட்டகாசம் செய்ய முயன்றிருக்கிறார்கள்.
அங்கே இப்போது ஏராளமான சிசிடிவி கேமராக்கள் இருப்பதாலும், கடைகளை அடைக்க மறுத்தவர்கள் 100 க்கு அழைத்தளித்த புகார்களாலும், உடனடியாக கலவரத் தடுப்பு படைகளை அள்ளி வந்து குவித்தது பூக்கடை காவல் நிலையம்.
ஒவ்வொரு காவல் வீரரின் கைகளிலும் ஐந்தடி நீளத்தில் கனத்த கம்புகள். தேசியக்கொடி ஏந்தி வந்த வடக்கத்தியப் போராளிகள் எங்கு போய் ஒளிந்தார்கள் என்று சந்து சந்தாய்த் தேடிப்பார்த்து விட்டு, திறந்திருந்த கடைகளுக்குப் பாதுகாப்பாய் பத்தடிக்கு ஒருவர் வீதமாய், மேலே நான் குறிப்பிட்ட ஏரியாவைச் சுற்றி பாதுகாப்பளிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஏன்டா பொழைக்க வந்த இடத்துல குரைக்கறதே தப்பு கடிக்க ட்ரை பண்ணலாமா ? என்று ஒரு படத்தில் வடிவேலு கேப்பார். தெரிய வேணாமாடா ??
தமிழர்க்கு மட்டுமில்லை தமிழக காவலர்க்கென்றும் தனியே ஒரு குணமுண்டு, அதெல்லாம் உங்கப்பன், பாட்டன்களுக்கும் தெரியும், வந்தோமா, குட்கா, அட்டு வித்தோமா, வெஜ் அப்பார்ட்மெண்ட் வாங்கினோமான்னு கமுக்கமா இருக்கோணும். உங்கூர்ல போல, தேசியக்கொடிய பிடிச்சிக்கிட்டா ஏதும் பண்ணமாட்டாய்ங்கன்னு நம்பி ரோட்டுல இறங்கினீங்கன்னா, மவனே தேரே கான்ட் பழுத்து இன்னும் செவந்து பங்க்ச்சர் ஆகிடும், கபர்தார் !
தமிழகக் காவல்துறைக்கு மிக்க நன்றி 🙏
செளகார்பேட்டையிலிருந்து
ராஜா ராஜேந்திரன்,
16/02/2019

No comments: