Followers

Sunday, February 24, 2019

இரட்டையர்களான இரு குழந்தைகளை கொன்ற பஜ்ரங்தளத்தினர்!

இரட்டையர்களான இரு குழந்தைகளை கொன்ற பஜ்ரங்தளத்தினர்!
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சித்ராகோட் பகுதியை சேர்ந்த தொழிலதிபரின் மகன்கள் பிரியான்ஸ், தேவான்ஸ். இருவரும் சென்ற பிப்ரவரி 12 ந்தேதி பள்ளிக்கு சென்றுள்ளனர். பள்ளிக்கு சென்ற இவர்கள் வீடு திரும்பவில்லை. கடத்தல் கும்பல் ஒன்று குழந்தைகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டு 20 லட்ச ரூபாய் பிணைத் தொகையாகக் கேட்டுள்ளனர். குழந்தைகளின் தந்தை பணத்தை தர தயாராக இருந்துள்ளார். ஆனால் கடத்தல்காரர்கள் ஒரு கோடி பிணைத் தொகையாக கேட்டுள்ளனர். இவ்வளவு பணம் தந்தையால் தர முடியவில்லை.
இதனால் கோபமடைந்த கடத்தல் கும்பல் குழந்தைகளை கால் கைகளை கட்டி யமுனை நதியில் வீசியுள்ளனர். இறந்த நிலையில் குழந்தைகளை மீட்டது காவல்துறை.
குழந்தைகளை கடத்திய காரையும் கடத்தியவர்களையும் தீவிர விசாரணைக்குப் பின் காவல் துறை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் பஜ்ரங்தள்ளைச் செர்ந்தவர்கள். பஜ்ரங் தள்ளின் ராஜூ திரிவேதி, லக்கி தாமர், ரோஹித் திரிவேதி, ராகேஷ் யாதவ், பிந்து யாதவ், பத்மா சுக்லா என்ற இந்த 6 மனித மிருகங்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.
பால் வடியும் அந்த முகங்களை பார்த்த பின்பும் எப்படி கொல்ல மனம் வந்ததோ அந்த அரக்கர்களுக்கு. யமுனை ஆற்றில் கோவிலுக்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பணம்தான் குறிக்கோள் என்றால் கொல்ல வேண்டியதில்லை. இது நரபலியாகக் கூட இருக்கலாம். விசாரணையில் தெரிய வரும். தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் விசாரணையில் உண்மைகள் வெளி வரலாம்.
ஆர்எஸ்எஸ் ஆகட்டும், பிஜேபியாகட்டும், பஜ்ரங்தள் ஆகட்டும் எந்த பெயரில் இவர்கள் வலம் வந்தாலும் இவர்களால் இந்துக்களுக்கோ இந்து மதத்துக்கோ எந்த பலனும் இல்லை. தாங்கள் நலமாக வாழ்வதற்காக இந்து குடும்பங்களையே பலியிட தயங்காத மிருகங்கள் இந்த இந்துத்வாக்கள் என்பது இதிலிருந்து விளங்கும்.
தகவல் உதவி
ஜனதாகா ரிப்போர்ட்
24-02-2019


1 comment:

Dr.Anburaj said...

ஆர்எஸ்எஸ் ஆகட்டும், பிஜேபியாகட்டும், பஜ்ரங்தள் ஆகட்டும் எந்த பெயரில் இவர்கள் வலம் வந்தாலும் இவர்களால் இந்துக்களுக்கோ இந்து மதத்துக்கோ எந்த பலனும் இல்லை. தாங்கள் நலமாக வாழ்வதற்காக இந்து குடும்பங்களையே பலியிட தயங்காத மிருகங்கள் இந்த இந்துத்வாக்கள் என்பது இதிலிருந்து விளங்கும்.
----------------------------------------------------------------------
பச்சை பொய்.
----------------------------------------------
இதுபோன்ற விமர்சனங்கள் செய்யும் போது அதிக கவன் தேவை. பெயா் தாங்கி இந்துக்கள் செய்வதற்கு சக இந்துக்களோ இந்து இயக்கங்களோ பொறுப்பாக்கத் தேவையில்லை. சட்டம்தன் கடைமையைச் செய்யும்.கொடூரமான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை நமதுநாட்டில் வழங்கப்படுவது கிடையாது. இந்த நிலை மாறவேண்டும்.
ஆா்எஸ்எஸ ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் இந்து சமய மக்களிடையே உள்ள பல கோணல்கள் கோட்டம்கள் காலத்திற்கு பொருந்தாத சிந்தனைகளை நீக்க பாடுபட்டு வருகின்றது. இந்துக்களைஒருங்கிணைப்பதால் கிடைக்கும் நன்மைகளை பல எடுத்துச் சொல்வி வருகின்றது. தியாக புருஷர்கள் ஆயிரம் ....ஆயிரம் பேர்களை இந்தியாவிற்கு அளித்துள்ளது.