Followers

Sunday, February 17, 2019

ஹபீஸ் சையிதுடன் இந்துத்வாவாதி பிரதாப் வைதிக்!

ஹபீஸ் சையிதுடன் இந்துத்வாவாதி பிரதாப் வைதிக்!
பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக பல தீவிரவாதிகளை அனுப்பி வரும் ஹபீஸ் சையிதை ஆர்எஸ்எஸ் ன் ஆதரவாளரான பிரதாப் வைதிக் பாகிஸ்தானில் சந்தித்து பேசுகிறார். அவர்களுக்குள் என்ன ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதோ சங்கிகளுக்கே வெளிச்சம். இதே காரியத்தை ஒரு காங்கிரஸ்காரன் செய்திருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து தேச பக்தி பாடம் எடுப்பார்கள்.
ஹபிஸ் சையத் எடுக்கும் அனைத்து காரியங்களாலும் பலனடைவது மோடியும் அவரின் பரிவாரங்களும் என்பதை கவனியுங்கள். தற்போது தமிழிசையிலிருந்து அனைவரும் இந்தியாவைக் காப்பாற்ற மோடி ஒருவரால்தான் முடியும் என்ற வாதம் வைக்கப்படுகிறது. இதை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஹபீஸ் சையத் யாருக்காக வேலை செய்கிறான் என்பது விளங்கும். பாகிஸ்தானில் நமது ஒற்றர்கள் அங்கிருந்து பல வேலைகளை செய்து வருவதாக தற்போதய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் பேசிய வீடியோவை சில நாட்களுக்கு முன்பு பார்த்தோம். இஸ்லாமிய பெயர்களில் பல இந்துக்கள் பாகிஸ்தானில் குண்டு வெடிப்புகளை நடத்தி வருவதாகவும் அந்த காணொளியிலேயே வருகிறது.
பாகிஸ்தான் அரசு இதில் சம்பந்தப்படவில்லை என்று தெளிவாக கூறியுள்ளது. பாகிஸ்தானின் தற்போதய பிரதமர் இம்ரான் கான் இந்தியாவையும் இந்திய மண்ணையும் நேசிப்பவர். படித்தவர். பண்பாளர். இந்தியாவோடு நேசக் கரம் நீட்டிய போது மோடியும் அவரது பரிவாரங்களும் அதற்கு தடைபோட்டன. ஏனெனில் பாகிஸ்தான் எதிர்ப்பு இல்லை என்றால் மோடியும் அமீத்ஷாவும் செல்லாக் காசுகள். இது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இனி குற்றத்தை ஒப்புக் கொண்டு வீடியோ வெளியிட்ட ஆதில் அஹமதைப் பற்றி பார்போம்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறிக் கொண்டு அங்குள்ள பொது மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக பொது மக்களும் ராணுவத்தினர் காவல்துறையினர் மீது கல்லெறிந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
இப்படி கல்லெறி தாக்குதலில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு தடுக்கிறோம் என்று சொல்லி இச்செயலில் ஈடுபடாதவர்களையும் சித்திரவதை செய்து வருகிறது நமது ராணுவம். அப்படி சித்திரவதை செய்யப்பட்டவர்களில் இந்த ஆதில் அஹமதும் ஒருவன்.
மூன்றாண்டுகளுக்கு முன்பாக தனது நண்பர்களோடு பள்ளிக்கூடம் சென்று திரும்பிய தனது மகனை இந்திய பாதுகாப்புப்படையைச் சேர்ந்தவர்கள் அடித்து சித்திரவதை செய்துள்ளதாக அவரது தந்தை தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்திற்கு பின் இந்திய ராணுவத்தின் மீது தன் மகனுக்கு கோபம் இருந்தது எனக்கூறும் குலாம் ஹஸன், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுக்காக ஜம்மு சென்ற தனது மகன் அதன் பின் வீடு திரும்பவில்லை என்கிறார். எங்குத் தேடியும் தன் மகன் கிடைக்கவில்லை எனக் கண்ணீர் மல்க கூறும் தந்தை, தன் மகன் தீவிரவாதியானதே, இந்த தாக்குதலுக்கு பின் தான் தனக்கு தெரிய வந்துள்ளதாக கூறியிருக்கிறார்.
காணாமல் போன ஆதிலை மூளை சலவை செய்து இவ்வாறு தயார் செய்திருக்கலாம். அல்லது சித்தரவதை செய்தும் இவ்வாறு பேச வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது ஹபீஸ் சையிதின் தயாரிப்பாகவும் இருக்கலாம். குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே குண்டு வைத்தது யார் என்று தகவல் தந்தது யார்? ஆர்டிஎக்ஸின் அளவையும் துல்லியமாக தந்தது யார்? ஆதிலின் வீடியோவை பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்தது யார்? விமானத்தில் செல்ல விருந்த ராணுவத்தினரை பேரூந்துகளில் அனுப்பச் சொன்னது யார்? இத்தனை பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி சர்வ சாதாரணமாக ஒரு முன்னேறி வர வழி அமைத்துக் கொடுத்தது யார்? இந்த கேள்விக்கெல்லாம் தேச பக்தி என்ற போர்வையில் பதில் மறுக்கப்படும்.
இதன் பின்னணியில் பாகிஸ்தான் அரசு இருப்பது நிரூபணமானால் ராணுவ நடவடிக்கை எடுத்து அந்நாட்டுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அது அல்லாமல் இது ஒரு அரசியல் விளையாட்டு என்றால் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும்.
ஒரு இந்தியனாக இருந்து கொண்டு இவ்வாறு சிந்திக்கலாமா? என்று கேட்கலாம். எனது தாய் மண்ணை அதிகம் நேசிப்பதால்தான் இது பற்றி அதிகம் கவலை கொள்கிறேன். பாகிஸ்தான் நம் நாட்டின் மீது படையெடுத்தால் முஸ்லிம்களை தவிர்த்து விட்டு குண்டு போட மாட்டான். அவன் போடும் குண்டில் நானும் சாகலாம் எனது குடும்பமும் சாகலாம். எனவே என்னைப் பொருத்தவரை பாகிஸ்தான் நமக்கு ஒரு அந்நிய தேசம். எல்லோரும் நலமாக இருக்க நினைப்போம். நமது நிமமதியை குலைக்க எவனாவது திட்டம் தீட்டினால் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம். இதுதான் எனது நிலை.
எனவே தேச பக்தி என்ற பெயரில் நமக்குள் எழும் சந்தேகங்களை மூடி மறைக்க வேண்டாம். இவ்வாறு மூடி மறைப்பதால் குற்றவாளிகள் மேலும் மேலும் குற்றம் செய்து கொண்டுள்ளார்கள். அப்பாவிகள் மேலும் மேலும் சிறை சென்று கொண்டுள்ளார்கள். மாலேகான் குண்டு வெடிப்பில் இறந்தது முஸ்லிம்கள்: கைது செய்யப்பட்டதும் முஸ்லிம்கள். முடிவில் ராணுவத்தில் பணி புரிந்த ஜெனரல் புரோகித் என்ற பார்பனன் ஆர்டிஎக்ஸை ராணுவத்திலிருந்து திருடி குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருக்கிறான். ஹேமந்த் கர்கரே என்ற நீதிவான் இருந்ததால் அந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது. அவரையும் கொன்று விட்டார்கள் பாசிசவாதிகள். அதற்கும் இவர்களுக்கு பாகிஸ்தான் தேவைப்பட்டது. அப்போதுதான் இவர்கள் மேல் சந்தேகம் வராது.
எனவே தேச பக்தி என்ற பெயரில் தயவு செய்து குற்றவாளிகளை தப்பவிட்டு விடாதீர்கள். சந்தேகப்படும் அனைத்து வழிகளிலும் விசாரணையை முடுக்கி விடுங்கள். 44 ராணுவ வீரர்களின் உயிர் இழப்பு வீணாகி விடக் கூடாது. ராணுவத்தையும், சங்கிகளையும் கொண்டு அப்பாவி காஷ்மீரிகளை துன்புறுத்துவதாலும் கொல்வதாலும் பிரச்னை தீர்ந்து விடாது. அது பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் என்பதை மோடியும் அவரது சகாக்களும் உணர வேண்டும்.


5 comments:

Dr.Anburaj said...

பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக பல தீவிரவாதிகளை அனுப்பி வரும் ஹபீஸ் சையிதை ஆர்எஸ்எஸ் ன் ஆதரவாளரான பிரதாப் வைதிக் பாகிஸ்தானில் சந்தித்து பேசுகிறார். அவர்களுக்குள் என்ன ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதோ சங்கிகளுக்கே வெளிச்சம்.
ஊகமாக கற்பனையாக வினாக்களை எழுப்புவது பண்பாடு அல்ல.
-------------------------------------------------------------------------------
ஹபிஸ் சையத் எடுக்கும் அனைத்து காரியங்களாலும் பலனடைவது மோடியும் அவரின் பரிவாரங்களும் என்பதை கவனியுங்கள். தற்போது தமிழிசையிலிருந்து அனைவரும் இந்தியாவைக் காப்பாற்ற மோடி ஒருவரால்தான் முடியும் என்ற வாதம் வைக்கப்படுகிறது. இதை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஹபீஸ் சையத் யாருக்காக வேலை செய்கிறான் என்பது விளங்கும்.
பயங்கரவாத தாக்குதல்களால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை.காபீர்கள் செத்தால் மகிழும் ஈனப்பிறவிகளுக்கு வேண்டுமானால்மகிழ்ச்சியாக இருக்கலாம்.நிச்சயம் திரு.மோடி அவர்கள் இத்தகைய செயல்களால் பெரிதும் வேதனையடைந்துள்ளாா்
----------------------------------------------------------------------------------
பதா் யுத்தத்தில் இறந்த இளைஞனின் தாய் வேதனையோடு முகம்மது அவர்களை அனுகிற போது“ தங்கள் மகன் சொர்க்கத்தில் இருக்கின்றான்“ என்று அருமையாக பேசினாா்.சொர்க்கம் என்ற சொல்லைக் கேட்டதும் அந்த தாய் மனம் மாறி சென்று விட்டாா்.இசுலாத்திற்காக ஷகித் ஆனால் செத்தால் நேரடியான சொர்க்கத்தில் 72 ஹசுர் பெண்களை ..... கூடி மகிழ்ந்து வாழலாம் என்று நம்பும் கேடு கெட்டவன் எதையும் செய்வான். தேசிய நெடுங்சாலையில் பேருந்துகள் அணிவகு்த்து பார்த்தே திட்டங்களை தீட்டியிருக்கலாம். காஷ்மீர் மக்கள் பாக்கிஸ்தானின் ஆதரவாளா்கள்.அதிக எண்ணிக்கையில் ராணுவ வாகனங்களின் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தும் முஸ்லீம் மக்களைக் கொண்டது காஷ்மீா் மக்கள்.மு்ஸ்லீம்கள் ஒரு ரகசிய நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட சமூகம்.நாச வேலைகளைக் கூட திறமையாக ஒருங்கிணைத்து செய்ய முடியும்.

Dr.Anburaj said...

திரு.ஹபீஸ“ அவர்களுக்குபாரத ரத்னா அளிகக்பரிந்துரை
ஏன் செய்யக் கூடாது.

Dr.Anburaj said...

இரண்டு பேர்களும் என்ன பேசினார்கள்.
இவர் பிரதாப் ஆா்எஸ்எஸ் ல் என்ன பொறுபபு வகித்தாா்.
ஆா்எஸ்எஸ் இவரை ஹபீஸ் சயதோடு என்ன பேசி முடிக்க அனுப்பினார்கள் ?
காந்தகாா் விமான கடத்தலுக்கு முன்னா் எடுக்கப்பட்ட புகைப்படமா ?

ஏதுவும் தெரியாத தாங்கள் இந்த சமயத்தில் இந்த புகைப்படத்தை வெளிடுவானேன் ?

பழியை இந்துக்கள் மீதுதான் போட திசைதிருப்ப அருமையாக பதிவுகளைச் செய்கின்றீர்கள். வாழ்க அரேபிய அடிமைத்தனம்.

Dr.Anburaj said...

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர்கள் ஹஸ்முக்பாய் சேத் மற்றும் அஜய் சங்வி. வைர வியாபாரிகள். இவர்களது மகன், மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அத்துடன் 15-ஆம் தேதியான நேற்று திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ராணுவ வீரர்கள் மரணமடைந்த செய்தியை கேட்ட இக்குடும்பத்தினர் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி திருமண வரவேற்பை ரத்து செய்ததோடு அனைத்து சம்பிரதாயங்களையும் ரத்து செய்து விட்டனர். மேலும் சமையல், அலங்காரம் உள்ளிட்டவற்றுக்காக ரூ. 5 லட்சம் பேசப்பட்ட நிலையில் மணமக்கள் வீட்டார் மேலும் ரூ. 6 லட்சத்தை சேர்ந்து ரூ. 11 லட்சமாக உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன் வந்துள்ளனர். சூரத் குடும்பத்தின் இந்த மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
---------------------------------------------------------------
அரசியல் லாபம் பெற அரசால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று நயவஞ்சக பிரச்சாரம் செய்யும் சுவனப்பிரியன்.

Dr.Anburaj said...

காஷ்மீா் மக்கள் அனைவருமே 90 சதம்பயங்கரவாதிகள் - ஜகாதிகள்தாம். இதில் ராணுவத்தின் பிழை ஏதும் இல்லை.ஜம்முவில் லடாக்கில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளாா்கள்.

சுவனப்பிிரியன்
இந்துக்கள் வாழும் இடங்கள் அமைதியாகவும் ஒழுங்காகவும் இருக்கின்றது.அதுஏன் என்று சற்று யோசித்துப் பாருங்களேன்.
முஸ்லீம்கள் வாழும் காஷ்மீரில் சதா காடைத்தனங்கள் அரங்கேறி வருவது ஏன் ?
1987 காஷ்மீரில் வாழ்ந்த இந்துசிறுபான்மையினா்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய காஷ்மீா் முஸ்லீம்கள் 4 லட்சம் இந்துக்களை வெளியே விரட்டி விட்டார்கள். காஷ்மீா் இந்துக்கள் உள்நாட்டு அகதிகளாக வாழ்வது ஏன் ? அதற்கு ஒரு தீா்வைச் சொல்லுங்களேன்.