Followers

Tuesday, February 26, 2019

பல்வேறு போராட்டத்துக்குப் பிறகு மருத்துவரானார் ஹதியா!

பல்வேறு போராட்டத்துக்குப் பிறகு மருத்துவரானார் ஹதியா!
எத்தனை போராட்டம்: என்ன ஒரு துணிச்சல்: முடிவில் சத்தியம் வென்றது.
இந்துத்வா பின்னணியில் வாழ்ந்து வந்த அசோகன் அவரது மகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை ஜீரணிக்க முடியாமல் வழக்கு தொடர்ந்தார். தனது மகளை 'லவ் ஜிஹாதில்' வென்று விட்டதாகவும் ஐஎஸ்ஐஎஸில் சேர்த்து தீவிரவாதியாக மாற்ற உள்ளதாகவும் பொய்யாக வழக்கு தொடர்ந்தார். ஆனால் இவரது மகளோ நீதிபதி முன்னால் தான் யாராலும் மூளை சலவை செய்யப்படவில்லை என்றும் தானாக ஆய்வு செய்து இஸ்லாத்தை தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார். வேறு வழியின்றி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
நீண்ட காத்திருப்பிற்கு பிறகு தற்போது மருத்துவராகியுள்ளார். ஹதியாவின் உறுதிக்கு இறைவன் மேலும் வெற்றியை தருவானாக! நம் தாய் நாடான இந்த மண்ணில் ஜாதி மத பேதமின்றி மருத்துவம் பார்க்கும் பக்குவத்தை தந்தருள்வானாக!
இவரது தந்தை அசோகன் சொன்னது போல் இவர் தீவிரவாதியாக மாறவில்லை. மருத்துவராக சேவை செய்ய வந்துள்ளார்.
எல்லா புகழும் இறைவனுக்கே!


No comments: