'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, February 09, 2013
சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு!
இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
மஸ்ஜித்களுக்கு எதிராகச் செயற்படுதல், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் சிக்கலை உண்டுபண்ணுதல் என இவர்களது தேசத் தூரோகச் செயல்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதை அண்மைய நிகழ்வுகள் மூலம் நாம் அறியமுடிகின்றது.
இந்த நாட்டின் எதிர்க்கட்சியினரும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பேசி சிங்கள இனவாத சக்திகளைக் கவரும் மனநிலைக்கு மாறியுள்ளனர். இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் முஸ்லிம்கள் விரும்பாத இன்னும் சில கருத்துக்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிய பேச்சுக்கள் இதனையே உணர்த்துகின்றன. எனவே, இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக முஸ்லிம் சமூகம் ஓரணியில் திரண்டு நல்லெண்ணம் வளர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னனி அரசாகங்கத்தின் அமைச்சருமான பாடலீ சம்பிக ரணவக்க எழுதியுள்ள “அல் ஜிஹாத், அல் கைதா இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் கடந்த காலம், தற்காலம், எதிர்காலம்” என்ற நூலில் பெரும் சரித்திரப் புரட்டைச் செய்துள்ளார்.
“வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களது சொத்துக்களை புலிகள் கைப்பற்றிக் கொண்டது போல் தப்பி வந்த அந்த முஸ்லிம்கள் புத்தளத்திலும் கல்பிட்டியிலும் உள்ள சிங்களவர்களது சொத்து, செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள். (பக்கம் 278)”
இப்படி ஒரு அண்டப்புழுகை தனது நூலில் அமைச்சர் என்ற உயர் அந்தஸ்தில் இருந்து கொண்டு பதிவு செய்துள்ளார். புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் உண்ண உணவில்லாது அடுத்தகட்ட வாழ்க்கைக்கே வழிதெரியாமல் வந்தவர்கள். எப்படி சிங்கள மக்களது சொத்துக்களை அபகரித்தார்கள்? புலிகள் ஆயுத முனையில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல் சிங்கள மக்களை முஸ்லிம்கள் எதைக் கொண்டு வெளியேற்றினார்கள்? புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை உலகமே அறியும்! சிங்கள மக்களது சொத்துக்களை முஸ்லிம்கள் அபகரித்தார்கள் என்று இவர் மட்டும்தான் சொல்கின்றார். அப்படி முஸ்லிம்கள் அபகரித்திருந்தால் சிங்களவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? பிரச்சினை வந்திருக்காதா? குறைந்த பட்சம் பொலீஸிலாவது முறைப்பாடு செய்யாமல் இருந்திருப்பார்களா? நமது கண்ணுக்கு முன்னால் நடந்த உண்மை நிகழ்வுகள் குறித்தே இப்படி பொய்யை அவிழ்துவிட்டவர் கடந்த காலம், எதிர்காலம் பற்றிப் பேசினால் எவ்வளவு பெரிய பொய்களையும், கற்பனைகளையும் வெளியிடுவார் என்பதை எவரும் எளிதாக யூகிக்கலாம்.
புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை ஒத்துக்கொள்ளும் இவர், புலிகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் தொடர்பிருந்ததாக சித்தரிக்க முற்படுவது அடுத்த அண்டப்புழுகாகும்.
தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் புலிகளுடன் இணையாமல் நாட்டுக்கு விசுவாசமாகவே நடந்து கொண்டனர். முஸ்லிம்கள் புலிகளுக்கு உதவாத காரணத்தினால்தான் வடக்கிலிந்து முழுமையாக விரட்டப்பட்டார்கள். இந்தத் தியாகத்தை சம்பிக்கவோ, அவர் சார்ந்த அமைப்பினரோ இந்த நாட்டுக்காக செய்திருப்பார்களா?
புலிகள் கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற முற்பட்டனர். அதற்காக காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை என முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கடத்தல், கப்பம் கோரல், கொலை செய்தல் என எல்லா இன்னல்களையும் தாங்கிக் கொண்டு கிழக்கிலேயே முஸ்லிம்கள் வாழ்ந்தனர். அன்று முஸ்லிம்கள் உயிருக்குப் பயந்து வெளியேறியிருந்தால் புலிகளின் தமிழ் ஈழக் கனவு நனவாகியிருக்கும். பிரபா-கருணா பிரிவும் தவிர்க்கப்பட்டிருக்கும். இன்று வடகிழக்கு தனி நாடாக மாறியிருக்கும். முஸ்லிம்களது உயிர்த் தியாகத்தால்தான் இன்று இது ஒன்றுபட்ட ஒரு தனி தேசமாக திகழ்கின்றது. இந்தத் தியாகத்தைச் செய்த முஸ்லிம்களைத்தான் புலிகளுடன் சேர்ந்தவர்கள் என்றும் தேசப் பற்றில்லாதவர்கள் என்றும் சம்பிக்க சாடி வருகின்றார்.
இந் நாட்டில் புலிகள் நடாத்திய முக்கியமான பல தாக்குதல் சம்பவங்களுக்குப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பலரும் துணை போயுள்ளனர். பணத்துக்காக பல முக்கிய அதிகாரிகளே புலிகளுக்கு உதவியுள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் இத்தகைய ஈனச் செயல்களில் ஈடுபட்டதில்லை. ஒரு கட்டத்தில் “சிங்கள கொட்டியா” (சிங்களப் புலிகள்) என்ற சொல் பயன்படுத்தப்படும் அளவுக்கு சிங்கள மக்கள் சிலரது உதவி புலிகளுக்குக் கிடைத்துள்ளது. இப்படியிருக்க முஸ்லிம்களுக்குப் புலிகளுடன் தொடர்பிருந்ததாகவும் முஸ்லிம்கள் தேசத் துரோகிகள் என்றும் சம்பிக்க கூறுவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.
கடாபி இலங்கை வந்த போது இலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று பேசினாராம். கடாபி நாற்பது வருடம் ஆட்சி செய்த லிபியாவையே அவர் இஸ்லாமிய நாடாக மாற்றாத போது இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று அவர் எப்படிப் பேசுவார் என்றெல்லாம் யோசிக்காமல் சம்பிக்க போன்றவர்கள் கிணற்றுத் தவளைகள் போல் சிந்திப்பது கேள்விக்குறியாயுள்ளது.
முஹம்மத் இப்னு காஸிம் இந்தியா வந்த போது 5000 பிக்குகளைக் கொன்றார் என்றொரு தகவலையும் அவர் குறிப்பிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றுகின்றார். இந்தியாவை முஸ்லிம்கள் 800 வருடங்கள் ஆண்டுள்ளார்கள். இருந்தும் அங்கே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறவில்லை. இந்தியா வந்த முஹம்மத் இப்னு காஸிம் பிக்குகளைக் கொன்று குவித்திருந்தால் ஆலயங்களை அழித்திருந்தால் 800 வருடங்கள் இது நடந்திருந்தால் எச்ச சொச்சங்கள் கூட இல்லாத அளவுக்கு அங்கு சிலை வணக்கம் அழிக்கப்பட்டிருக்குமே! ஏன் அப்படி நடக்கவில்லை? என்று இந்த சிந்தனைச் சூனியங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
உண்மை என்னவென்றால், இந்தியாவை ஆண்ட முஸ்லிமல்லாத மன்னர்களை விட முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்திய மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டதால்தான் சிறு தொகையினராக இருந்த முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்களை 800 வருடங்கள் ஆள முடிந்தது. இல்லையென்றால் பிரிட்டிஷை விரட்டியதை விட வேகமாக முஸ்லிம் ஆட்சியாளர்களை இந்திய மக்கள் விரட்டியிருப்பார்கள். ஆயுத பலத்தை விட ஆள்பலமே மேலோங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்களது ஆட்சியை அவர்கள் அங்கீகரிக்கும் அளவுக்கு முஸ்லிம் மன்னர்கள் நாட்டு மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டனர் என்பதுதான் உண்மை வரலாறாகும்.
இஸ்லாம் பரவுவதற்கு காமமும் பணமும் தான் காரணம் என்று வக்கிர வார்த்தையால் தாக்கியுள்ளார் சம்பிக்க!
“சிலருக்கு அரபிகளது வியாபார மற்றும் காம கலாசாரத்துடன் இணைவதற்கு பாரம்பரிய பௌத்த மதம் தடையாக இருந்தது. உதாரணமாக மலாயாவின் அரசன் (1400 ஆம் வருடம்) பல மனைவியரை வைத்துக் கொண்டு காம சுமகம் பெற பௌத்தம் தடையாக இருந்ததனால் அவன் இஸ்லாத்திற்குள் சென்றான். இஸ்லாம் அப்பகுதிகளில் அப்படித்தான் பரவியது.” (பக்கம் 55)
இது அப்பட்டமான பொய் என்பதற்கு நடைமுறை உலகே சான்றாகும். சில பௌத்த துறவிகள் துறவி ஆடையை அணிந்து கொண்டே காம லீலைகளில் ஈடுபட்ட நிகழ்வுகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. இப்படியிருக்கும் போது ஒரு மன்னன் காமத்துக்காக மதத்தை மாற்ற வேண்டுமா? சம்பிக்க கூட பல பெண்களுடன் வாழ்க்கை நடாத்த விரும்பினால் சட்டபூர்வமாக திருமணம் செய்யாமல் எத்தனை பெண்களுடனும் வாழ எந்த நாட்டிலும் தடையில்லை. இதிலிருந்து இது இவரது கீழ்த்தரமான வக்கிர புத்தியால் எழுந்த கற்பனை என்பது வெள்ளிடை மழை.
இவர் சொல்வது உண்மையென்றால் இஸ்லாத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் பலதார மணம் புரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். அப்படியும் நடக்கவில்லை. இன்று ஐரோப்பாவில் வெகு வேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது. அங்கு காமத்துக்கு எந்தத் தடையும் இல்லை. ஆட்டம், பாட்டு, கூத்து, ஆபாசம் என்று அலைபவர்களைக் கூட இஸ்லாம் கவருகின்றது. அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்னர் பழைய காம வாழ்க்கை வாழ முடியாது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் வருகின்றார்கள்! இப்படியிருக்க சம்பிக்க கூறும் கூற்று எவ்வளவு பெரிய பொய்யென்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
காமத்தைக் காட்டி மதத்தைப் பரப்புவதென்றால் முஸ்லிம்களும் ஆண்-பெண் வேறுபாடின்றி அரைகுறை ஆடையுடன் கலந்து கொஞ்சிக் குலாவும் மதக் கிரியைகளையும் அங்கீகரித்திருப்பர். வேறெந்த மதத்திலும் கடைப்பிடிக்கப்படாத அளவுக்கு ஆண்-பெண் கலப்பில்லாத, கவர்ச்சியான ஆடையமைப்பில்லாத ஆட்டம், பாட்டு, கூத்து போன்றவற்றை அங்கீகரிக்காத சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பதை நடுநிலை மக்கள் சிந்தித்துப் பார்த்து இவரின் கோர முகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இவர் தனது நூலில் அரபு மத்ரஸாக்கள், குர்ஆன் மத்ரஸாக்களைக் கூட தீவிரவாதத்தின் மையங்களாகச் சித்தரித்துள்ளார். இத்தகைய கருத்துக்கள் இனங்களுக்கு மத்தியில் தப்பெண்ணங்களை வளர்ப்பதினாலும் எதிர்காலத்தில் இனக்கலவரங்களுக்குக் காரணமாக அமைவதாலும் இது போன்ற கருத்துக்களையுடைய நூற்களை அரசு தடைசெய்ய வேண்டும்.
தேசிய ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் சீர்குலைக்க எத்தணிக்கும் இத்தகைய தேசத் துரோகக் குற்றவாளிகள் மீது நீதித்துறை தமது கவனத்தைத் திருப்ப வேண்டும்.
இவரது இந்த சிந்தனையை உள்வாங்கிய ஒரு குழு முஸ்லிம்களது கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஒரு கலவரத்தை உண்டுபண்ண சதி செய்து வருகின்றது. கல்விக் கூடங்களில் கூட சில நெருக்கடிகளை முஸ்லிம் மாணவர்கள் சந்திக்கும் இக்கட்டான நிலையும் ஏற்பட்டு வருகின்றது.
எனவே, முஸ்லிம் சமூகப் புத்திஜீவிகள், அரசியல் தலைமைகள் இது குறித்து நிதானமான தூரநோக்குப் பார்வையுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.
சம்பிக்கவின் இது போன்ற கருத்துக்கள் ஐம்பது அல்லது நூறு வருடங்களின் பின் சரித்திரமாக மாறலாம். இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் கூட இந்நூல் இனக்கலவரங்களை உண்டுபண்ணும். எனவே, இக்கருத்துக்களுக்கான மறுப்புக்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இது போன்ற நூற்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்து அதையும் ஒரு பதிவாக்க வேண்டியுள்ளது. இராமர் கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற தவறான சரித்திரம்தான் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட அடித்தளமானது. இது போன்று எதிர்காலத்தில் இலங்கையில் பிரச்சினைகள் எழாமல் இருக்க மறுப்புக்களும் பதியப்பட வேண்டும். இது குறித்து முஸ்லிம் புத்திஜீவிகள் கவனம் செலுத்த வேண்டும் என பணிவாய் வேண்டிக் கொள்கின்றோம்…..
இவ்விடயத்தில் அனைத்துத் தரப்பினரையும் அல்லாஹ் ஒன்றிணைப்பானாக!
- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
– ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
சிங்கள மொழி தெரிந்தவர்கள் இந்த கட்டுரையை மொழி பெயர்த்து சிங்களவர்கள் மத்தியில் பரப்ப வேண்டும். ஒரு பொய்யை இன்று பதிந்து விட்டால் இன்னும் 10 வருடங்களில் அது வரலாறாக பதியப்பட்டு விடும் கொடுமையை பல இடங்களில் பார்த்து வருகிறோம். சிங்கள மக்களுக்கு தேவையற்ற அச்சத்தை உண்டு பண்ணி குழப்பம் விளைவிக்க பலர் முயன்று வருகின்றனர். இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும், பவுத்தர்களும் பகையை மறந்து நட்பு சூழல் உருவாவதை சில நாச காரா சக்திகள் விரும்புவதில்லை. அதற்கு பலியாகி விடாமல் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.
--------------------------------------------------------------------
//நீங்கள் நினைப்பதுபோல் கிறிஸ்தவ பாதிரி எவரும் எரித்துக் கொல்லப்படவில்லை. நீங்கள் குறிப்பிடுவது ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்து வனவாசிகளிடையே மத மாற்றம் செய்வதில் ஈடுபட்டவர் தமது மகனுடன் வண்டிக்குள் உறங்குகையில் தீப்பற்றி எரிந்த சம்பவம். அவரது பிரசார வேனில் வெப்பத்தைத் தணிப்பதற்காகக் கூரையிலும் வேனுக்குள் தரையிலும் வைக்கோல் பரப்பப்பட்டிருக்கும்.//
இவ்வளவு அப்பட்டமாக நடந்த ஒரு கொலையை மலர் மன்னன் என்ற ஒருவரால்தான் விபத்து என்று சமாளித்து எழுத முடியும். இதையே மாற்றி எழுதுபவர்கள் 2000 வருடங்களுக்கு முன்பு எந்த மாதிரியான சரித்திர புரட்டுகளை அரங்கேற்றியிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. வாழ்க பாரதம். வெல்க மலர்மன்னனின் சமாளிப்புகள்.:-(
திண்ணையில் மலர் மன்னன் எழுதிய ஒரு கருத்துக்கு நான் இட்ட பின்னூட்டமே இது. இந்துத்வா வாதிகள் எந்த அளவு தங்கள் தவறை மறைக்க எவ்வளவு பெரிய பொய்களை வேண்டுமானாலும் அரங்கேற்ற துணிய மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.
அடுத்து அப்சல் குருவை தூக்கில் போட்டாகி விட்டது. அவன் உண்மையிலேயே எனது நாட்டின் பாராளுமன்றத்தை தாக்க வந்திருந்தால் தூக்கில் போட மிக தகுதியான நபரே. ஆனால் சமூக ஆர்வலர்கள் சொல்வது போல் இது பிஜேபி செய்த அரசியல் நாடகம் என்றால் இதற்கான விலையை இந்த உலகத்தில் பெறா விட்டாலும் மறுமையில் பெற்றுக் கொள்வார்கள். நாம் அனைவரும் கண்டிப்பாக அங்கு சமூகமளித்திருப்போம்.
----------------------------------------------------------
அப்சல் குரு மீதான விசாரணை மற்றும் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அருந்ததி ராய் எழுப்பிய பதிமூன்று கேள்விகள்.
http://www.guardian.co.uk/world/2006/dec/15/india.kashmir
கேள்வி 1 : இந்த தாக்குதல் நடப்பதற்கு பல மாதங்கள் முன்பிருந்தே பாராளுமன்றத்தின் மீது பெரும் தாக்குதல் நடக்க விருக்கிறது என்று காவல்துறையும் அரசாங்கமும் சொல்லிக் கொண்டேயிருந்தது. 12 டிசம்பர் 2001 அன்று பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒரு தனிப்பட்ட கூட்டத்தில் பாராளுமன்றம் மீது பெரும் தாக்குதல் நடக்கவிருக்கிறது என்று கூறினார். டிசர்பர் 13 அன்று பாராளுமன்றம் தாக்கபட்டது. இத்தனை எச்சரிக்கைகள், பாதுகாப்பு நடைமுறைகள் அங்கு இருந்தபோதும், எப்படி வெடிப் பொருட்களுடனான அம்பாசிடர் கார் பாராளுமன்ற வளாகத்துல் நுழைந்தது?
கேள்வி 2 : இந்த தாக்குதல் நடந்த சில தினங்களில் டெல்லி காவல்துறை இந்த தாக்குதல் ஜைஸ்-ஏ-முகம்மது மற்றும் லக்சர் ஏ தோய்பா ஆகிய இரு இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை என்று அறிவித்தது. இந்த தாக்குதலை 1998 காந்தகார் விமான கடத்தலில் ஈடுபட்ட முகமது தான் செய்தார் என்று காவல்துறை மிக துள்ளியமாக தெரிவித்தது. (இதனை பின்பு சிபிஐ மறுத்தது) இவைகளில் எவையும் நீதிமன்றத்தில் நிறுபிக்கபடவில்லை. இப்படி கூறிய காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவிடம் என்ன சான்றுகள் இருந்தது?
கேள்வி 3: இந்த மொத்த தாக்குதல்களும் பாராளுமன்றத்தின் கண்கானிப்பு காமிராக்களில் பதிவாகியிருந்தது. காங்கிரஸ் எம்பி கபில் சிபில் அவர்கள் இந்த தாக்குதல்களில் பதிவுகள் எல்லாம் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் காட்டப்பட வேண்டும் என்றார். அவரது வாதத்தை ராஜ்ய சபாவின் துணை தலைவர் நஜ்மா ஹெப்பதுல்லா ஆதரித்தார், மேலும் இந்த தாக்குதல்கள் தொடர்பான விபரங்கள் அனைத்திலும் பல குழப்பங்கள் உள்ளது என்றார் அவர். பாராளுமன்ற காங்கிரஸ் அவை தலைவர் ப்ரியரஞ்சன் தாஸ்முன்சி அவர்கள் , “நான் அந்த காரில் இருந்து ஆறு பேர் இறங்கியதை பார்த்தேன், ஆனால் ஐந்து பேர் மட்டுமே சுட்டுக் கொல்லப்பட்டனர், கண்கானிப்பு காமிராவின் பதிவில் ஆறு பேர் இறங்கியது பதிவாகியுள்ளது.” என்றார். தாஸ்முன்சி கூறுவது சரி என்றால் ஏன் காவல்துறை ஐந்து பேர் தான் இருந்தார்கள் என்று கூறுகிறது? அப்படி என்றால் யார் அந்த ஆறாவது நபர்? அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்? அந்த கண்கானிப்பு காமிராவின் பதிவு ஏன் இந்த வழக்கு விசாரனையில் சாட்சியமாக அளிக்கபடவில்லை? இந்த பதிவை ஏன் பொதுமக்கள் பார்வைக்கு அவர்கள் வெளியிடவில்லை?
கேள்வி 4 : இப்படியாக சில கேள்விகளை பாராளுமன்ற் உறுப்பினர்கள் எழுப்பியவுடன் ஏன் அவை ஒத்திவைக்கபட்டது?
கேள்வி 5 : டிசம்பர் 13 தாக்குதல் நடந்து சில தினங்கள் கழித்து இந்திய அரசு இந்த தாக்குதல்களில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பது தொடர்பாக மறுக்கமுடியாத சாட்சியஙக்ள் உள்ளது என்று அறிவித்தது. அதனால் உடன் இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஐந்து லட்சம் ராணுவ துருப்புகளை அனுப்பினார்கள். பெரும் அணு ஆயுத போர் சூழல் நோக்கி இந்திய துணை கண்டமே நகர்த்தப்பட்டது. அப்சலை சித்தரவதை செய்து பெற்ற வாக்குமூலங்கள் (இந்த வாக்குமூலங்களை கூட அதன் பின் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது) தவிர்த்து அப்படி எந்த அசைக்க முடியாத சாட்சியம் அரசிடன் இருந்தது?
கேள்வி 6 : எல்லை நோக்கிய இந்த படைகள் அனுப்புதல் என்பது தாக்குதல்களுக்கு வெகு முன்பாகவே தொடங்கப்பட்டதா?
கேள்வி 7: இந்த ராணுவ படைகள் எல்லையில் குவிப்பு ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்தது, அதற்கு மொத்தம் எவ்வளவு செலவானது? இந்த நடவடிக்கைகளில் எத்தனை ராணுவ வீரர்கள் பலியானார்கள்? கண்ணிவெடிகள் கையாண்டதில் மொத்தன் எத்தனை ரானுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் இறந்தார்கள்? தொடர் ராணுவ வாகணங்கள் இந்த கிராமங்களில் வழியே சென்றதால் எத்தனை கிராமவாசிகள் தங்களின் வீடுகளை, வயல்களை இழந்தார்கள்? இந்த விவசாயிகளின் வயல்களில் எத்தனை கண்ணிவெடிகள் புதைக்கபட்டது?
கேள்வி 8 : ஒரு குற்றப்புலனாய்வில் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடையங்கள் எவ்வாறு குற்றம் சாட்டபட்டவருடன் தொடர்புடையவை என்பதை நிறுவுவது காவல்துறையின் பணி. காவல்துறை எவ்வாறு அப்சல் குருவை வந்தடைந்தது? கிலானியின் வாக்குமூலங்களின் வழிதான் நாங்கள் அப்சல் குருவை நெருங்கினோம் என்றது சிறப்பு புலனாய்வு பிரிவு. ஆனால் கிலானியை கைது செய்வதற்கு முன்பாகவே ஸ்ரீநகர் காவல்துறை அப்சல் குருவை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது. எந்த வகையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அப்சல் குருவையும் டிசம்பர் 13 அயும் இனைத்தது?
கேள்வி 9 : அப்சல் குரு ஒரு சரணடைந்த தீவிரவாதி அவர் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்துடன் (STF-J&K)தொடர்பில் இருந்தவர் என்பதை நீதிமன்றமே ஆமோதித்தது, இந்திய ராணுவத்தின் நேரடி கண்காணிப்பில் இருந்த ஒருவர் எப்படி இத்தனை பெரும் தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட்டார்?
கேள்வி 10 : லக்சர் ஏ தோய்பா, ஜைஸ் ஏ முகம்மது போன்ற அமைப்புகள் இந்தியா மீது ஒரு தாக்குதலை தொடுக்க STF-ன் நேரடி தொரட்பில், கண்காணிப்பில் உள்ள ஒருவரை இந்த பெரும் சதியின் முக்கிய தொடர்பாளராக தேர்வு செய்யுமா?
கேள்வி 11 : தன்னிடம் தாரிக் என்பவர் முகமத் என்பவரை அறிமுகம் செய்து “இவரை நீ தில்லிக்கு அழைத்து செல்” என்று கூறியதாக நீதிமன்றத்தில் அப்சல் குரு தெரிவித்தார். தாரிக் காஷ்மீர் STF-ல் பணியாற்றியவர், தாரிக்கின் பெயர் காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது. யார் இந்த தாரிக், அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்?
கேள்வி 13 : டிசம்பர் 19, 2001, தாக்குதல் நடந்து ஆறு தினங்கள் கழித்து மகாராஷ்டிரத்தின் தானே பகுதி காவல்துறை கண்கானிப்பாளர் எஸ்.எம்.சாங்காரி பாராளுமன்ற தாக்குதல்களில் கொல்லபட்ட ஒருவரை லக்ஷர் ஏ தோய்பாவின் முகமத் யாசின் ஃபதே என்று அடையாளம் காண்பித்தார், இவரை மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்த்தாகவும், கைது செய்தவுடன் முகமத்தை ஜம்மு காஷ்மீர் காவல்துறை வசம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார். இதற்கு சான்றாக அவர் மிக விரிவான விவரனைகளையும் அளித்தார். காவல்துறை கண்காணிப்பாளர் சாங்கிரி கூறுவது சரி என்றால் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் எப்படி பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்? அவர் சொல்வது தவறு என்றால், முகமத் யாசின் இப்பொழுது எங்கே இருக்கிறார்?
கேள்வி 13 : பாராளுமன்ற தாக்குதலில் கொல்லபட்ட ஐந்து தீவிரவாதிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் ஏன் இன்றுவரை வெளியிடப்படவில்லை?
இந்த கேள்விகள் எல்லாம் மிக நியாயமான கேள்விகள், இந்த பாராளுமன்ற தாக்குதல்கள் தொடர்பான அருந்ததி ராய் அவர்களின் முழு கட்டுரையை வாசித்தால் இந்த விஷயங்கள் இன்னும் குவிமையம் பெறும். இவை பெரும் ஆய்வு செய்து கேட்கபட்ட கேள்விகள் அல்ல மாறாக அந்த நேரத்தில் இந்திய பத்திரிக்கைகள் மற்றும் அரசியல் வாதிகளில் பேச்சுகளை தொடர்ந்து கேட்கும் எவருக்கும் இந்த கேள்விகள் கொஞ்சம் யோசித்தாலே வருபவையே. பாராளுமன்ற தாக்குதல் தொடர்பான இந்த கேள்விகளுக்கு இன்று வரை எந்த பதிலும் இல்லாமல் அவை இந்தியாவின் மீது மிதந்தவண்ணம் உள்ளது, இன்று அந்த கேள்விகள் எல்லாம் ஒரு கருமேகமாக தில்லியின் திகார் சிறைச்சாலை மீது ஒரு சாரல் மழையாக பொழியக்கூடும்.
http://www.amuthukrishnan.com/index.php?option=com_content&view=article&id=259%3A-13--13-&catid=22%3A-1&Itemid=52
Thursday, February 07, 2013
அமெரிக்காவில் முஸ்லிம் பல்கலைக் கழகம்!
ஜெய்துனா கல்லூரி கலிபோர்னியாவில் திறக்கப்பட்டுள்ளது. இது முதல் இஸ்லாமிய கல்லூரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------------
பலராலும் பார்க்கப்பட்ட புதிய தலைமுறை பிஜேயின் பேட்டி.
Wednesday, February 06, 2013
டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!
டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!
நம்மோடு இணைய விவாதங்களில் பலமுறை கலந்து கொண்ட டோண்டு ராகவன் அவர்கள் இன்று நம்மிடம் இல்லை. அதிர்ச்சியான செய்தி. இந்த வயதிலும் பதிவுகள் எழுதுவதிலும அதற்கு பதில் தருவதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தவர். இவரிடம் எனக்கு பல மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் பழகுவதற்கு மிக இனிமையானவர். சென்னை மீனம்பாக்கத்தில் எனது தாத்தா ஹஜ் முடிந்து வந்தபோது அழைக்க சென்றிருந்தேன். அப்பொழுது அலை பேசியில் அழைத்து அவரோடு சுமார் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். தாத்தாவைப் பார்த்தவுடன் மரியாதை நிமித்தமாக காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத தாத்தா சற்று அதிர்ச்சி அடைந்தார். 'மனிதனுக்கு மனிதன் இவ்வாறு காலைத் தொட்டு வணங்குவது தவறு என்று நீ உனது நண்பருக்கு சொல்லக் கூடாதா?' என்று கேட்டார். 'அது அவர்கள் கலாசாரம். இதை பெரிதுபடுத்தாதீர்கள்' என்று நான் சொன்னாலும் அவர் சமாதானம் அடையவில்லை. தாத்தாவிடம் ராகவன் சார் இறந்த செய்தியை இன்னும் சொல்லவில்லை.
இணையத்தில் போலி டோண்டு விவகாரத்தில் மிக உக்கிரமாக பணி புரிந்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்ததை பழைய பதிவர்கள் இன்றும் ஞாபகம் வைத்திருக்கலாம். திரு டோண்டுவை 'டோண்டு சார்' என்று கூப்பிட்டதற்காக போலி டோண்டுவிடமிருந்து காட்டமான அர்ச்சனைகளை பெற்றேன். :-). பிரஞ்ச்,ஜெர்மனி,ஆங்கிலம், தமிழ் என்று பல மொழிகளையும் சரளமாக எழுத வல்லவர். மொழி பெயர்ப்பு வேலைகளில் நிறைய சம்பாதிததார். எதையும் ஒளிவு மறைவின்றி போட்டு உடைத்து விடுவார். இதனால் பார்ப்பனர்களிலேயே பலருக்கு டோண்டு சாரை பிடிக்காது. பழகுவதற்கு மிக இனிமையான மனிதர்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்"
-குர்ஆன் 62:8
"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்” -குர்ஆன் 21:35
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!”
-குர்ஆன் 4:78
"அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் இதை உணர்வதில்லை."
-குர்ஆன் 23:55,56
"இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?"
-குர்ஆன் 26:129
இது போன்ற திடீர் மரணங்கள் எல்லாம் நமக்கு இறைவனைப் பற்றிய அச்சத்தை அதிகமாக்க வேண்டும். நமக்கும் ஒரு நாள் இது போன்ற மரணம் நிகழப் போகிறதே...அதற்கான நன்மையான காரியங்களை நாம் செய்திருக்கிறோமா என்று ஒவ்வொருவரும் தனக்குத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.
---------------------------------------------------------------
டோண்டு ராகவன் அவர்களுடன் ஒரு சந்திப்பு!
இரண்டு நாட்களுக்கு முன்பு புனித ஹஜ் பயணம் முடித்து வரும் என் தாத்தாவை அழைப்பதற்காக சென்னை சென்றிருந்தேன். இதுவரை முகம் தெரியாமல் இணையத்தின் மூலமே தொடர்பு கொண்டிருக்கும் ஒரு சில வலைப்பதிவர்களை சந்தித்தால் என்ன? என்ற எண்ணம் வரவே நமது டோண்டு ராகவன் சாருக்கு தொலை பேசினேன். டோண்டு சார் 15 நிமிடத்தில் பன்னாட்டு விமான நிலையத்தில் ஆஜர்.
விமானம் ஏழரைக்கு சென்னையை அடைந்தது. இமிக்ரேஷன் முடிந்து தாத்தா வெளியாக 9.30 ஆகி விட்டது. இடைப்பட்ட இந்த இரண்டு மணி நேரத்தை நம் ராகவன் சாரோடு கழித்தேன். முதல் சந்திப்பு என்றாலும் நெடுநாள் பழகியது போல் மிகவும் இயல்பாக பேசினார். மதத்தால் கலாச்சாரத்தால் வேறுபட்டிருந்தாலும் இணையத் தமிழ் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது. இருந்த இரண்டு மணி நேரத்தில் மனிதர் சளைக்காமல் பல விபரங்களை சொல்லிக் கொண்டும் என்னிடம் சில கேள்விகள் கேட்டுக் கொண்டும் இருந்தார். சிலருக்கு வயது ஏற ஏற இளமை கூடிக் கொண்டு போகும் என்பது இதுதானோ!
டோண்டு ராகவன் பற்றி முன்பு நான் இட்ட பதிவு
http://suvanappiriyan.blogspot.com/2007/02/blog-post_04.html
-------------------------------------------------------------------
நான் இட்ட பதிவுக்கு பதிலாக டோண்டு சார் இட்ட பதிவு
முந்தா நேற்று (01.02.2007) அவரிடமிருந்து காலை 7.15 அளவில் ஃபோன் வந்தது. தான் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு வருகைகள் அருகில் வெளியே நிற்பதாகவும் தன்னை வந்து நான் பார்க்க முடியுமா என்று கேட்டார். அவர் தனது அன்னை வழி தாத்தாவை ரிசீவ் செய்ய நிற்பதாகவும் கூறினார். எங்கள் வீட்டிலிருந்து ஏர்போர்ட் ரொம்ப தூரம் இல்லை, 5 கிலோமீட்டர்கள் சாலை வழியே, 2 கிலோமீட்டர்கள் மட்டுமே, நீங்கள் காக்கையாக இருக்கும் பட்சத்தில்.
ஆட்டோ எடுத்து சென்று அவரைச் சந்தித்தேன். அப்போது மணி காலை 7.30. சுவனப்பிரியன் என்னை அடையாளம் கண்டு கொண்டார். மனிதர் ஆறடி உயரத்துக்கு நல்ல ஆஜானுபாகுவாக இருந்தார். சவுதி ஃப்ளைட் வந்து விட்டிருந்தது. அதில்தான் அவர் தாத்தா தனது ஹஜ்ஜை முடித்து கொண்டு வந்திருந்தார். ஆனால் உள்ளேயே பல ஃபார்மாலிட்டீஸ்கள். கிட்டத்தட்ட 2 மணி நேரம் போல ஆகிவிட்டது. அவர் வெளியே வரும்போது மணி 9.30.
எங்களின் சந்திப்பு சம்பந்தமாக ராகவன் அவர்கள் போட்ட பதிவு இங்கே
http://www.dondu.blogspot.com/2007/02/blog-post.html
நம்மோடு இணைய விவாதங்களில் பலமுறை கலந்து கொண்ட டோண்டு ராகவன் அவர்கள் இன்று நம்மிடம் இல்லை. அதிர்ச்சியான செய்தி. இந்த வயதிலும் பதிவுகள் எழுதுவதிலும அதற்கு பதில் தருவதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தவர். இவரிடம் எனக்கு பல மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் பழகுவதற்கு மிக இனிமையானவர். சென்னை மீனம்பாக்கத்தில் எனது தாத்தா ஹஜ் முடிந்து வந்தபோது அழைக்க சென்றிருந்தேன். அப்பொழுது அலை பேசியில் அழைத்து அவரோடு சுமார் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். தாத்தாவைப் பார்த்தவுடன் மரியாதை நிமித்தமாக காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத தாத்தா சற்று அதிர்ச்சி அடைந்தார். 'மனிதனுக்கு மனிதன் இவ்வாறு காலைத் தொட்டு வணங்குவது தவறு என்று நீ உனது நண்பருக்கு சொல்லக் கூடாதா?' என்று கேட்டார். 'அது அவர்கள் கலாசாரம். இதை பெரிதுபடுத்தாதீர்கள்' என்று நான் சொன்னாலும் அவர் சமாதானம் அடையவில்லை. தாத்தாவிடம் ராகவன் சார் இறந்த செய்தியை இன்னும் சொல்லவில்லை.
இணையத்தில் போலி டோண்டு விவகாரத்தில் மிக உக்கிரமாக பணி புரிந்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்ததை பழைய பதிவர்கள் இன்றும் ஞாபகம் வைத்திருக்கலாம். திரு டோண்டுவை 'டோண்டு சார்' என்று கூப்பிட்டதற்காக போலி டோண்டுவிடமிருந்து காட்டமான அர்ச்சனைகளை பெற்றேன். :-). பிரஞ்ச்,ஜெர்மனி,ஆங்கிலம், தமிழ் என்று பல மொழிகளையும் சரளமாக எழுத வல்லவர். மொழி பெயர்ப்பு வேலைகளில் நிறைய சம்பாதிததார். எதையும் ஒளிவு மறைவின்றி போட்டு உடைத்து விடுவார். இதனால் பார்ப்பனர்களிலேயே பலருக்கு டோண்டு சாரை பிடிக்காது. பழகுவதற்கு மிக இனிமையான மனிதர்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்"
-குர்ஆன் 62:8
"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்” -குர்ஆன் 21:35
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!”
-குர்ஆன் 4:78
"அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் இதை உணர்வதில்லை."
-குர்ஆன் 23:55,56
"இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?"
-குர்ஆன் 26:129
இது போன்ற திடீர் மரணங்கள் எல்லாம் நமக்கு இறைவனைப் பற்றிய அச்சத்தை அதிகமாக்க வேண்டும். நமக்கும் ஒரு நாள் இது போன்ற மரணம் நிகழப் போகிறதே...அதற்கான நன்மையான காரியங்களை நாம் செய்திருக்கிறோமா என்று ஒவ்வொருவரும் தனக்குத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.
---------------------------------------------------------------
டோண்டு ராகவன் அவர்களுடன் ஒரு சந்திப்பு!
இரண்டு நாட்களுக்கு முன்பு புனித ஹஜ் பயணம் முடித்து வரும் என் தாத்தாவை அழைப்பதற்காக சென்னை சென்றிருந்தேன். இதுவரை முகம் தெரியாமல் இணையத்தின் மூலமே தொடர்பு கொண்டிருக்கும் ஒரு சில வலைப்பதிவர்களை சந்தித்தால் என்ன? என்ற எண்ணம் வரவே நமது டோண்டு ராகவன் சாருக்கு தொலை பேசினேன். டோண்டு சார் 15 நிமிடத்தில் பன்னாட்டு விமான நிலையத்தில் ஆஜர்.
விமானம் ஏழரைக்கு சென்னையை அடைந்தது. இமிக்ரேஷன் முடிந்து தாத்தா வெளியாக 9.30 ஆகி விட்டது. இடைப்பட்ட இந்த இரண்டு மணி நேரத்தை நம் ராகவன் சாரோடு கழித்தேன். முதல் சந்திப்பு என்றாலும் நெடுநாள் பழகியது போல் மிகவும் இயல்பாக பேசினார். மதத்தால் கலாச்சாரத்தால் வேறுபட்டிருந்தாலும் இணையத் தமிழ் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது. இருந்த இரண்டு மணி நேரத்தில் மனிதர் சளைக்காமல் பல விபரங்களை சொல்லிக் கொண்டும் என்னிடம் சில கேள்விகள் கேட்டுக் கொண்டும் இருந்தார். சிலருக்கு வயது ஏற ஏற இளமை கூடிக் கொண்டு போகும் என்பது இதுதானோ!
டோண்டு ராகவன் பற்றி முன்பு நான் இட்ட பதிவு
http://suvanappiriyan.blogspot.com/2007/02/blog-post_04.html
-------------------------------------------------------------------
நான் இட்ட பதிவுக்கு பதிலாக டோண்டு சார் இட்ட பதிவு
முந்தா நேற்று (01.02.2007) அவரிடமிருந்து காலை 7.15 அளவில் ஃபோன் வந்தது. தான் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு வருகைகள் அருகில் வெளியே நிற்பதாகவும் தன்னை வந்து நான் பார்க்க முடியுமா என்று கேட்டார். அவர் தனது அன்னை வழி தாத்தாவை ரிசீவ் செய்ய நிற்பதாகவும் கூறினார். எங்கள் வீட்டிலிருந்து ஏர்போர்ட் ரொம்ப தூரம் இல்லை, 5 கிலோமீட்டர்கள் சாலை வழியே, 2 கிலோமீட்டர்கள் மட்டுமே, நீங்கள் காக்கையாக இருக்கும் பட்சத்தில்.
ஆட்டோ எடுத்து சென்று அவரைச் சந்தித்தேன். அப்போது மணி காலை 7.30. சுவனப்பிரியன் என்னை அடையாளம் கண்டு கொண்டார். மனிதர் ஆறடி உயரத்துக்கு நல்ல ஆஜானுபாகுவாக இருந்தார். சவுதி ஃப்ளைட் வந்து விட்டிருந்தது. அதில்தான் அவர் தாத்தா தனது ஹஜ்ஜை முடித்து கொண்டு வந்திருந்தார். ஆனால் உள்ளேயே பல ஃபார்மாலிட்டீஸ்கள். கிட்டத்தட்ட 2 மணி நேரம் போல ஆகிவிட்டது. அவர் வெளியே வரும்போது மணி 9.30.
எங்களின் சந்திப்பு சம்பந்தமாக ராகவன் அவர்கள் போட்ட பதிவு இங்கே
http://www.dondu.blogspot.com/2007/02/blog-post.html
Tuesday, February 05, 2013
நமது நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி அருகே ஒருதலை காதலால், பள்ளி மாணவி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட, இரு குழந்தைகளின் தந்தை மீது, மண்ணெண்ணெய் தெறித்ததில், அவரும் கருகி இறந்தார்.
சினிமாக்களில் காதலை புனிதமாக்கி இது போன்ற கிறுக்கர்களை உருவாக்கியதுதான் மிச்சம். வாழ வேண்டிய அந்த குருத்து இன்று கருகி விட்டது. வெளியில் வந்த செய்தி இது. வெளியில் வராமல் மண்ணுக்குள் புதைக்கப்படும் நிகழ்வுகள் ஏராளம். மாணவியை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
-----------------------------------------------------------
பீகார் மாநிலத்தில் பகவல்பூர் என்னும் இடத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு தூக்கில் தொங்கவிட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த பெண் தலித் சமூகத்தை சேர்ந்தவர். டெல்லி மாணவிக்காக குரல் கொடுத்த எவருமே இந்த அபலைப் பெண்ணுக்கு ஒரு அசைவைக் கூட காட்டவில்லை. கற்பழிப்பை கண்டிப்பதில் கூட சாதி வித்தியாசம் பார்க்கும் நாடு நமது நாடாகத்தான் இருக்கும்.
-----------------------------------------------------------
சென்ற மாதத்தில் மட்டும் நமது அண்டை மாநிலங்களில் நடந்த கற்பழிப்பு கொடூரங்கள். கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவதின் மூலமும் ஆபாச சினிமாக்களை தடை செய்வதன் மூலமாகவும் இந்த கொடுமைகளை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த நாட்டில் உழைக்கும் சாதியில் பிறந்ததுதான் இந்த பெண்கள் செய்த குற்றமா?
Man gets life term till death for kidnapping, raping minor
A 40-year-old man was sentenced to life imprisonment till death by a local court for raping a minor girl repeatedly for nearly a week after kidnapping her. Gwalior: A 40-year-old man was sentenced to life imprisonment till death by a local court for raping a minor girl repeatedly for nearly a week after kidnapping her.
By Zee NewsPosted at January 25 2013, 5:13 pm
Tags: Madhya Pradesh, Minor, Rape, Life Imprisonment
Minor girl alleges molestation by judicial officer
A judicial officer has been accused of engaging in an obscene act with a minor girl. Gonda: A judicial officer has been accused of engaging in an obscene act with a minor girl, with the Civil Bar Association on Thursday threatening to boycott the court of the magistrate concerned until action was taken against him in the matter. According to Dinesh Kumar Pandey, the secretary of the lawyers` body, a 13-year-old girl has complained to their president that the said magistrate locked her inside a room and tried to engage in an obscene act with her when she went to him on January 21 to record her statement in a case of kidnapping. Gonda SP Navneet Rana said that he had written to the Gonda district judge regarding the incident and was awaiting his orders before taking any steps.
By Zee NewsPosted at January 24 2013, 2:12 pm
Tags: Uttar Pradesh, Molestation, Minor gir, Judicial officer
Fast track court acquits man accused of raping girl
A 38-year-old man, accused of kidnapping and raping a girl has been acquitted by a fast track court here after the alleged victim deposed that she had lodged the complaint against him under duress from her family. New Delhi: A 38-year-old man, accused of kidnapping and raping a girl has been acquitted by a fast track court here after the alleged victim deposed that she had lodged the complaint against him under duress from her family. The judgement was passed by one of the special fast track courts set up here to try exclusively the cases of sexual offences. Additional Sessions Judge Yogesh Khanna let off Faridabad resident Shakil Ahmed saying "nothing incriminating" has been said against the accused by the girl or her parents in their statements to prove the charges against him.
By Zee NewsPosted at January 21 2013, 2:40 pm
Tags: Rape, Fast track court, Delhi
Girl gang-raped, filmed and thrown out of moving car in Punjab
A woman has alleged that she was raped by two men after being abducted from Chandigarh and later thrown out of a car in Bathinda district, police said. Bathinda: Another incident of gang rape came to light in north India when a woman was thrown out of a moving car after being forced upon for two days in Punjab. A man and two women kidnapped the victim, who had gone to Chandigarh for a job interview, on Friday (January 18) on the pretext of asking directions, after which she was drugged and raped at a deserted location. The accused then drugged her again and threw her out of a moving car near Bathinda on Sunday (January 20), where she was found and taken to a local hospital.
By Zee NewsPosted at January 21 2013, 10:55 am
Tags: Punjab, Gangrape, Girl gang-raped
Thane youth jailed for abduction of teenage girl
A 21-year-old youth was sentenced to 18-month rigorous imprisonment by a local court after he was found guilty of kidnapping a teenage girl and taking her to Delhi in 2011. Thane: A 21-year-old youth was sentenced to 18-month rigorous imprisonment by a local court after he was found guilty of kidnapping a teenage girl and taking her to Delhi in 2011.
By Zee NewsPosted at January 19 2013, 10:41 pm
Tags: Maharashtra, teenage girl, abduction
Thane youth jailed for abduction of teenage girl
A 21-year-old youth was sentenced to 18-month rigorous imprisonment after he was found guilty of kidnapping a teenage girl and taking her to Delhi in 2011. Thane: A 21-year-old youth was sentenced to 18-month rigorous imprisonment by a local court after he was found guilty of kidnapping a teenage girl and taking her to Delhi in 2011. Thane Additional Sessions Judge A A Sayeed convicted Ravi Kanchan Agrasen on Thursday after he allegedly abducted the minor, a tenth grade student whom he befriended on an earlier trip to Delhi after which they exchanged numbers and kept in regular touch. According to prosecution, 0n July 9, 2011, the accused wooed the girl and took her to Mumbai Central, from where they boarded a train to Delhi.
By Zee NewsPosted at January 19 2013, 12:08 pm
Tags: Mumbai, Thane youth, Thane teenager
Minor dalit girl kidnapped in Moga
A case has been registered against an unidentified youth for allegedly kidnapping a minor Dalit girl here, police said Friday. Moga: A case has been registered against an unidentified youth for allegedly kidnapping a minor Dalit girl here, police said Friday.
By Zee NewsPosted at January 18 2013, 2:58 pm
Tags: Moga, Punjab, Dalit Girl Kidnapping
Police draw flak for crackdown on young lovers in Odisha
Young girls & boys were made to kneel down in front of police station for allegedly "kissing, cuddling & holding hands" in public places by cops. Jajpur: Young girls and boys were made to kneel down in front of police station for allegedly "kissing, cuddling and holding hands" in public places by cops in Jajpur district, sparking criticism from activists. While women organisations and human rights body alleged that it was violation of rights, police claimed the the "drive is being undertaken taken to avoid complications like rape, murder or kidnapping of young girls". The incident took place yesterday when the Jajpur police "caught" at least three couples, all college students, from a park at Jajpur town.
By Zee NewsPosted at January 16 2013, 10:39 pm
Tags: Jajpur district, girls and boys, public places, Odisha police
My husband should be hanged, demands rapist`s wife
The wife of a serial offender, who allegedly raped and murdered a minor girl following release from jail after serving sentence in similar offences, says her husband should be "hanged for the heinous crime." Shirdi: The wife of a serial offender, who allegedly raped and murdered a minor girl following release from jail after serving sentence in similar offences, says her husband should be "hanged for the heinous crime." "My husband has committed a heinous crime and he should be punished as soon as possible. He should be hanged to death," said 28-year-old Sarika Salve, the wife of Sunil Suresh alias Pappu Salve (32) who was arrested two days ago for kidnapping, raping and then murdering a nine-year-old girl in Shirdi town of Maharashtra`s Ahmednagar district on December 28 last year.
By Zee NewsPosted at January 14 2013, 6:47 pm
Tags: Maharshtra, Rape, Husband, wife, hang
Minor girl kidnapped, 4 youths arrested in Odisha
Four youths, including two engineering students, were arrested for allegedly kidnapping a minor girl who was rescued by the police in Jajpur district. Jajpur (Odisha): Four youths, including two engineering students, were arrested for allegedly kidnapping a minor girl who was rescued by the police in Jajpur district, police said on Monday. The 14-year-old girl who was abducted and confined to an abandoned house at Sapanpur under Jajpur municipal town limits was rescued by the police yesterday. The youths aged around 20 years were arrested from the spot, they said. While the principal accused, Raghunath Behera alias Dipu, managed to escape, those arrested were identified as Kharavela Rout of Sanabazar, Debiprasad Samal of Sanabazar, Manas Bhattacharya of Ambikai and Chiranjit Rout of Srirampur. While Kharavela and Debiprasad are engineering students, Manas and Chiranjit are studying in a private ITI.
By Zee NewsPosted at January 14 2013, 1:13 pm
Tags: Odisha, Minor girl, Kidnap, rape
http://www.india.com/topic/kidnapping+girl/page/2.html
Sunday, February 03, 2013
சினிமா வீழ்ந்தால் தமிழகம் நிமிரும்!
ஒரு வழியாக விஸ்வரூபம் பிரச்னைகள் முடிந்து வெளியிட தயாராக உள்ளது. பிராமணர் சங்கம் இடையில் ஒரு காட்சியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களாம். அது அவர்களின் உரிமை. இப்படியே போனால் நாங்கள் எப்படி படம் எடுப்பது என்ற வாதமும் வைக்கப்படுகிறது. இந்த கூத்தாடிகளின் வருமானத்துக்காக மற்றவர்கள் பலிகடா ஆக வேண்டுமா என்று நாமும் அவர்களைப் பார்த்து கேட்கலாம். இது போன்ற பிரச்னைகளால் சினிமா தொழில் படுத்து விடும் என்று நினைக்கலாம். அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அது தமிழகத்துக்கு ஒரு விடிவு காலமாகவே அமையும். இன்று வரை சமூகம் சீரழிந்ததற்கு முக்கிய காரணம் இந்த சினிமா என்றால் மிகையாகாது. சமூகத்துக்கு இந்த சினிமாவால் விளைந்த நன்மைகள் என்று தேடிப் பார்த்தாலும் கிடைக்காது. எனவே சினிமா வீழ்ந்தால் தமிழகம் நிமிரும் என்றால் அது மிகையில்லை.
இது ஒரு படம் தானே! ஏன் இந்த அளவு எதிர்ப்பு என்று பலரும் யோசிக்கலாம். வேறு நாட்டவருக்கு இந்த இஸ்லாத்தின் மகிமை தெரிய வாய்ப்பில்லை. ஆனால் ஆண்டாண்டு காலமாக சாதியின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த இந்த பாரத நாட்டில் இஸ்லாம் என்று நுழைந்ததோ அன்றே வர்ணாசிரமத்துக்கு சாவு மணி அடிக்கப்பட்டது. எங்கு செல்வது என்று திக்குத தெரியாமல் தவித்த அந்த மக்களை அன்பாக அரவணைத்துக் கொண்டது இஸ்லாம். அந்த மக்களுக்கு மதம் மாறிய இஸ்லாமியருக்கு வழி வழியாக அதே இன்பம் இன்று வரை கிடைத்து வருகிறது. வேத நூலான குர்ஆன் மற்றவர்களுக்கு ஒரு சாதாரண புத்தகமாக தெரியலாம். ஆனால் முஸ்லிம்களுக்கோ தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சட்ட புத்தகம்.
இந்து மதத்தை பலமுறை கேலி செய்துள்ளார். நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே? நீங்கள் ஏன் கொதிக்கிறீர்கள்? என்று வாதம் வைக்கப்படுகிறது. இந்து மக்களில் 90 சதவீதமான பேர் தங்களின் வேதத்தின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. விரும்புவதும் இல்லை. அந்த வேதங்கள் இறைவன் அருளியதுதானா என்ற நம்பிக்கையும் பலருக்கு இருக்கவில்லை. நாத்திகனாகவும் ஆத்திகனாவும் இருந்து கொள்ள இந்து மதம் அனுமதிக்கிறது. ஆனால் குர்ஆனை இறை வேதம் என்று நம்பவில்லை என்றால் அவன் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவதாக இஸ்லாத்தின் கட்டளை. கமல் தனது மதத்தின் குறைகளை பொதுவில் வைப்பதற்கும் இஸ்லாத்தை வம்புக்கிழுப்பதற்கும் நிறைய வித்தியாகம் உள்ளது. தாலிபான்களின் நடவடிக்கைகள் இஸ்லாத்துக்கு மாற்றமாக உள்ளதாக கதை பிண்ணனி அமைந்திருந்து பிறகு அந்த இளைஞன் குர்ஆனின் வசனங்களை படித்து திருந்துவதாக காட்சி அமைத்திருந்தால் முஸ்லிம்களும் வரவேற்றிருப்பர். ஆனால் இவரோ தீவிரவாத செயல்களுக்கு குர்ஆனின் வசனங்களும் இஸ்லாமிய சட்ட திட்டங்களுமே காரணம் என்பதை மிக லாவகமாக புகுத்துகிறார். இஸ்லாமியர்களிலும் நாத்திகர்கள் உருவாக வேண்டும் என்று கனவு காண்கிறார். அமெரிக்காவை புகழ்ந்து தனது ஆஸ்கார் கனவை நனவாக்கத் துடிக்கிறார். இது அனைத்துமே கானல் நீர்தான் என்பதை சில காலம் கழித்து புரிந்து கொள்வார்.
சமீபத்தில் விஸ்வரூபம் சம்பந்தமாக நான் படித்த சில விமரிசனங்களை அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன். படிதது கருத்துக்களை பகிருங்கள்.
-----------------------------------------------------------
விஸ்வரூபம் 100/100
டக்ளஸ் அண்ணே,
கமல் கோய்ச்சிக்கிட்டு தமியகத்தை விட்டு அமெரிக்காவுக்கு ஓடிப் போகப் போறதும் இல்லை;
ரசினி காந்து 'தோ வர்றேன் தோ வர்றேன்னனு' சொல்லிட்டு அரசியலுக்கு வரப்போறதும் இல்லை.
இது சினிமாண்ணே... டிக்கிட்டு வாங்கினோமா, பார்த்தமான்னு போய்ட்டே இருக்கணும்.
000
"டேய் மவனே, நம்மள ஏசப்பா காப்பாத்திட்டாரு. கை விடலை. அல்லேலுயா. இல்லைன்னா துப்பாக்கிக்கும் இதே கதிதான் ஆகி இருக்கும்." எஸ். ஏ. சந்திர சேகர் இப்படி இளைய தளபதியிடம் சொல்லி இருக்க சான்ஸ் நிறைய இருக்கு!
000
"கமல்ஹாசன், ஒபாமாவிடம் சூட்கேஸ் வாங்கிய புகைப்பட ஆதாரம் என்னிடம் இருக்கிறது!"
விஸ்வரூபம் படத்துக்கான ஓசி டிக்கெட் கிடைக்கவில்லையென்றால், சு.சாமி இப்படியும் சொல்லக்கூடும்.
விஸ்வரூபம் : பட விமர்சனம் :
சினிமாட்டிக்கா சொல்லணும்னா, சரியான சிச்சுவேஷன்!
மிகச் சரியான லொகேஷன்!
மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டான்னு மக்களால கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மெஸ்மரைசிங் மெலடி.
நான் இந்தியனா, தமிழனா, அமெரிக்கனா, இடியட் இந்துவா அல்லது முட்டாள் முசுலீமா என நம்மையே குழப்பிவிடும் அற்புதமான எடிட்டிங்.
ட்விஸ்ட்டுமேல ட்விஸ்ட்டா வந்த திரைக்கதை அமைப்பு.
இந்துக்களும் முசுலீம்களுக்குமான அந்தர் பல்ட்டி ஸ்டண்ட்.
"இந்தியா இடம் கொடுக்கலைன்னா நான் அமெரிக்கா போறேன்" போன்ற சென்டிமென்ட் வசனங்கள்.
கோலிவுட்டில் கோலி விளையாடிய ஹாலிவுட் தமிழ்ப்படம். ஃபன்டாஸ்டிக் ப்ரிமியர்.
நாம முட்டாளா இருந்தா, இந்தப் படத்துக்கு கண்டிப்பா, மார்க் 100/100.
000
கோர்ட்டு தீர்ப்பு மட்டும் வராமல் இருந்திருந்தால், "விஸ்வரூபம் படத்தைப் பார்த்தால் கிட்னிக்கு மிகவும் நல்லது," போன்ற அறிவுபூர்வமான விஞ்ஞான விளக்கங்களை நம்ம 'பாஞ்சி நாள் புகழ் நாராசாமி' அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கலாம்!
000
http://puthiyapaaamaran.blogspot.com/2013/01/100100.html
--------------------------------------------------------------
Noorul Amin
“மெல்லிய இதயம் உள்ளோர்க்கு ஒரு எச்சரிக்கை: தினம் உலகச் செய்திகளில் காணும் வன்முறைக் காட்சிகள் சில எம் படத்திலும் கதைக்கேற்ப சித்தரிக்கப்பட்டுள்ளது. திடமனதுடன் காண்க.” என்கிற வாசகத்தோடு ஆரம்பிக்கிறது விஸ்வரூபம். இங்கு வாசிக்கும்/கேட்கும் என்ற சொல் இல்லாமல் “காணும்” என்கிற சொல்லின் பின்னால்தான் கமல் தன் பாசிச பரப்புரையை கட்டமைக்கிறார். பொதுவாக செய்திகளில் கழுத்தறுப்பது தூக்கிலிடுவது போன்ற வன்முறை காட்சிகள் காணொளியாகவோ புகைப்படமாகவோ காண்பிக்கப்படுவதில்லை. அப்படியே காட்டப்பட்டாலும் சில இடங்கள் மறைக்கப்பட்டிருக்கும் .இவற்றை எந்த செய்தி ஊடகங்களில் “கண்டார்” என்பதை கமல்தான் விளக்க வேண்டும். அவர் செய்திகளில் “கண்ட” கருவருத்தல் காட்சியை உன்னைப் போல் ஒருவன் படத்தில் காட்சிப்படுத்தாமல் வசனம் மூலமாக சொல்லத் தெரிந்த கமலுக்குக்கு விஸ்வரூபத்தில் பல செய்திகளை காட்சிப் படுத்தம் தேவையை அவரது ஹாலிவுட் தாகம் ஏற்படுத்தியிருக்கிறது பாவம். அல்லது படத்திற்கு நிதியுதவி செய்ததாக சந்தேகிக்கப்படும் அவரது ரகசிய முதலாளிகளின் ஏகாதிபத்திய அரிப்பிற்கு இதமாக சொறிந்துவிட கமல் தன் கலை விரலகளை பயன்படுத்தியிருக்கலாம்.
இங்கு ஒரு சிறிய நினைவுறுத்தல். ஹாலிவுட் இயக்குனர் குவெண்டின் டாரண்டினோ ஒரு பேட்டியில் கில் பில் படத்தில் சில வன்முறை காட்சிகளை அனிமேஷனில் காட்டும் உத்தியை ஒரு இந்திய திரைப்படத்தில் இருந்து எடுத்துக் கொண்டதாக சொல்லியிருக்கிறார். அந்த படம் ஆளவந்தான். ஹாலிவுட் இயக்குநகளே வியக்கும் வண்ணம் தன் படங்களின் காட்சிகளை அமைக்கும் திறம் படைத்த கமல் கழுத்தறுப்பு, தூக்கிலிடும் காட்சிகளை அப்பட்டமாக காண்பித்தது தற்செயலானது அல்ல. ஏற்கனவே ஹேராம் படத்தில் ஒரு முஸலிம் வன்முறையாளன் ராணி முகர்ஜியின் கழுத்தை அறுக்கும் காட்சி தத்ரூபமாக எடுக்கப்பட்டதும் தற்செயலாக இருக்க வாய்ப்பில்லை.
தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் தலையை வெட்டும், கையை வெட்டும் காட்சிகளை கமல் வைத்திருந்தாலும் அந்த படங்களின் இயக்குனர் கமல் இல்லை. அந்த படங்களின் காட்சிகள் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அமைக்கப் பட்டதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படாததால் அவை கற்பனையானவை என புறந்தள்ளிவிடலாம்.
நிருபமா (பூஜா குமார்) படத்தின் ஆரம்பத்திலேயே ”மிடில் கிளாஸ் ஊழல்” என்று எதை கூறுகிறார் என்று ஒரு குழப்பம் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் லோ கிளாஸ் ஆக இருந்தவர்களையெல்லாம் இடஓதுக்கீடு இன்று மிடில் கிளாஸ் ஆக்கியிருக்கிறது. ஒருவேளை இதைதான் மிடில் கிளாஸ் ஊழல் என படத்தின் இயக்குனர் குறிப்பிடுகிறாரோ?
பணத்தை வங்கியில் போடாமல் இரும்பு பெட்டியில் ஏன் வைக்கிறாய் என்கிற நிருபமாவின் கேள்விக்கு அமேரிக்க வங்கிகளின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் என்னுடைய மத்திய கிழக்கு வாடிக்கையாளர்கள் மேல் அமேரிக்க வங்கிகளுக்கு நம்பிக்கையில்லையே என தீபக் பதிலளிக்கிறான். அமேரிக்காவின் மிகபெரிய வங்கியான சிட்டி வங்கியின் கணிசமான பங்குகளை வைத்திருப்பது சவுதி இளவரசர்களில் ஒருவரான அல் வலித் பின் தலால் என்பதை அறியாத மக்களுக்கு இந்த வசனம் ஆச்சரியமளிக்காமல் இருக்கலாம். எனக்கு சற்று வியப்பை தந்தது என்னவோ உண்மைதான். அந்த காட்சியியை தொடர்ந்து ஓசாமா கொல்லப்பட்டதை குறித்து அமேரிக்க அதிபர் ஓபாமாவின் உரை வருகிறது.. அப்போது விஸ்வநாத் “மனுஷாளோட சாவை இப்படியா தீபாவளி மாதிரி கொண்டாடுறது” என தன் எதிர்ப்பை தெரிவிக்கிறார்.. மேலும் அங்கு ஆண்ட்ரியா “அசுராளக் கொன்னா கொண்டாடதானே செய்வா?” என கேட்க அதற்கு சேகர் கபூரின் பதில். ”அத அசுரனோட அண்ணன், தம்பி, பொண்டாட்டி புள்ளைகிட்ட சொல்லு பாப்போம்” என்கிறார். இங்கு ஒசாமாவின் சாவை பார்ப்பன பெண்ணான ஆண்ட்ரியா கொண்டாடுகிறாள், பார்ப்பனரான சேகர் கபூர் நடுநிலை வகிக்கிறார். பார்ப்பன பெயரில் வாழும் முஸ்லிமான கமல் மட்டும் வருத்தம் தெரிவிக்கிறார்.. இதற்கு அடுத்த காட்சியிலேயே கமல் பள்ளிவாசலுக்கு சென்று தொழுவது காட்டப் படுகிறது.. அதாவது என்னதான் இந்திய உளவு அமைப்பான ரா வின் அதிகாரியாக இருந்தாலும், விஸ்வநாத் என்கிற இந்துப் பெயரில் வாழ்ந்தாலும், அமேரிக்க மண்ணில் பிழைப்பு நடத்தினாலும் ஒரு (இந்திய) முஸ்லிம் ஓசாமா போன்ற பயங்கரவாதிகள் கொல்லப்பட்டால் வருத்தப்படத்தான் செய்வான் என்னும் பாசிச கருத்துருவாக்கத்தை சப்தமில்லாமல் செய்கிறார் கமல்..
பின்னர் கமல் ஒரு முஸ்லிம் என தெரிந்த பிறகு தீபக் கமலிடம் நீ முஸ்லிமா? அதன் பிறகு நம்முடைய பிரச்சினையை மூன்றாவது மனிதன் பேச வேண்டாமே என அவளை (தன் மனைவியை) தனியாக இழுத்து செல்லும் கமலைப் பார்த்து ”அவள தொட்டன்னா கையை உடைச்சுடுவேன்” என மிரட்டும்போது ஒரு இந்து பெண்ணை முஸ்லிமான நீ எப்படி தொடலாம் என்னும் துணைக் கேள்வி தொக்கி நிற்கிறது.. குஜராத் கலவரத்தின்போது முஸ்லிம் ஆண்களை காதலித்து மணந்த இந்துப் பெண்களை இந்துத்துவ தீவிரவாதிகள் குறி வைத்து கொன்ற செய்திகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் நிருபமா கமலுடன் உடல் ரீதியாக கணவன் மனைவியாக வாழாத (வாழந்திருந்தால் கமல் முஸ்லிமா என்கிற சந்தேகம் என்றோ வந்திருக்குமே) காரணத்தினாலும். அவளே கமலுடன் வாழவிரும்பாத காரணத்தினாலும் மன்னிக்கப் படுகிறாள்.
வாயில் ஒட்டுவதற்கான டேப்பை கமல் வீட்டு கத்திரியை எடுத்து வெட்டும் தீவிரவாதியை பார்த்து ”எங்காத்து கத்திரியால உன் டேப்பை ஏன் வெட்டற” என நிருபமா சொல்லும் தீண்டாமை வசனங்கள் வேறு இடைச் செருகலாக வருகின்றன. தன்னை எதுவும் செய்யும்முன் துஆ செய்யவேண்டும் என் கோரிக்கை விடுத்து கைக்கட்டுகளை அவிழ்த்த பிறகு அந்த இடத்தில் இருக்கும் தீவிரவாதிகளை அடித்து வீழ்த்தும் காட்சிகளையும் அங்கு பின்னணியில் வரும் “யாரென்று தெரிகிறதா. இவன் தீ என்று புரிகிறதா” எனும் பஞ்ச் பாடலையும் பார்த்து ஒரு முஸ்லிமை வீரனாக காட்டிருக்கிறாரே என்று புளகாங்கிதமடைந்து விடுவார்கள் இந்த முட்டாள் துலுக்கர்கள் (காலம்காலமாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு வழக்குச் சொல்தான்) என்ற கணக்கில்தான் இது முஸ்லிகளுக்கு எதிரான படம் இல்லையென மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கிறார் கமல். ..
கமல் தீவிரவாதியின் பிடியில் இருந்து தப்பித்து சென்றபின் “இத்தனை பேர் இருக்கும்போது எப்படி அவன் தப்பிச்சு போனான்?” என்கிற கேள்விக்கு உமரின் பதில் ”மறந்துட்டியா? இதில் என்ன ஆச்சரியம்? அவன் ட்ரெயினிங் குடுத்த்து அல் காய்தாவிற்கே?” ஒரு இந்திய/தமிழ் முஸ்லிமை நம்பிக்கையோடு ரா போன்ற அமைப்புகளில் சேர்த்துக் கொண்டாலும் அவன் வாய்ப்பு கிடைத்தால உளவு பார்க்கும் வேலையை விடுத்து அல் காயிதாீபோன்ற தீவிரவாத அமைப்புகளுக்கே பயிற்சி அளிப்பான். ஆப்கான்/அரேபிய முஸ்லிம் தீவிரவாதிகளை விட புத்திசாலியான தமிழ் முஸ்லிம் தீவிரவாதி (அவன் ரா உளவாளியாகவே இருந்தாலும்) ஆபத்தானவன் என்கிற கருத்துருவாக்கத்தை ஏற்படும் முயற்சியாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது.
தாலிபான் தீவிரவாதி உமரின் அறிமுக காட்சியில் அவன் தனது செயற்கை கண்னை பொறுத்துகிறான். உண்மையான தாலிபான் தலைவன் முல்லா உமருக்கும் ஒற்றைக் கண்தான். என்று செய்திகளில் படித்தது நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. இந்த கதை கற்பனையல்ல உண்மைதான் என நிறுவும் முயற்சியாகதான் இதை பார்க்க வேண்டியிருக்கிறது.,
அமேரிக்காவில் வாழும் எல்லா இஸ்லாமிய தீவிரவாதிகளும் தமிழ் பேசுகிறார்கள். விஸ்வநாத்தையும் நிருபமாவையும் கடத்தி செல்லும் காட்சிகளில் மட்டும் யெல்லா யெல்லா (நட நட) என அரபியில் கதைக்கிறார்கள் (ஒருவேளை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு போன தமிழ்நாட்டு தீவிரவாதிகள் எல்லாம் அமேரிக்காவில குடியேறிவிட்டார்களோ என்னவோ?) ஆப்கான் தீவிரவாதி ஒருவன் தமிழ் பேசுவது ஒரு லாஜிக் ஓட்டையாக மட்டுமே பார்க்கப்பட்டிருக்கும். சமீபத்தில் வந்த சிறுத்தை என்கிற மசாலா படத்தில் கூட ஆந்திராவில் நடக்கும் கதையில் எல்லோரும் தமிழ் பேசுவதை ஒரு விளக்க செய்தியை போட்டு ஏற்க வைத்திருப்பார்கள். பல ஆஸ்கர் விருதுகளை வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் கூட மும்பையின் தாராவியின் குடிசைப் பகுதியில் வளரும் குழந்தைகள் சரளமாக ஆங்கிலம் பேசியதை உலகத்தின் பெரும்பாலான ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே ஆப்கன் தீவிரவாதி தமிழ் பேசுவதற்கான காரணியை விளக்கும் உரையாடலின் பின்னால் உள்ள அரசியலை புரிந்துகொள்வதில் சிரமமேற்படவில்லை.
”நீங்க எங்கே தமிழ் கத்துகிட்டிங்க?”
”தமிழ்நாட்டுல! ஒரு வருஷம் ஒளிஞ்சுகிட்டுருந்தேன். கோயம்புத்தூர், மதுரை, அயோத்தியா. அகமதாபாத்.” இதில் அயோத்தியாவையும், அகமதாபாதையும் எப்போது தமிழ்நாட்டில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை.
இந்த நான்கு நகரங்களில் கடந்த காலங்க்ளில் குண்டுவெடிப்புகள் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கும் வடநாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கும் தொடர்பு இல்லாததாகவே நம்ப பட்டிருக்கிறது. இவற்றிற்கு எல்லாம் தொடர்பு உண்டு என நம்ப வைக்கும் முயற்சியன்றி வேறென்ன?
தமிழ்நாட்டில் உமர் மட்டும்தான் சுற்றினானா அல்லது அவன் அல்லக்கைகளும் சுற்றினார்களா?. சுற்றாத பட்ச்ததில் அவர்கள் எப்படி தமிழ் பேசுகிறார்கள்? முற்றிலும் அந்நியமான ஒரு மொழியை ஒரே வருடத்தில் கற்றுக் கொள்வது என்பது சாத்தியமே இல்லை. இது என் சொந்த அனுபவம். நான் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாகவும். தெலுங்கு, கன்னடம் ஒரளவிற்கு நன்றாக பேசுவேன். ஆனால் எனக்கு முற்றிலும் அந்நியமான் மொழியான அரபு மொழியை ஒரு வருடத்திற்கு மேலாகவும் சவுதி அரேபியாவில் வேலை பார்த்தும் கற்றுக் கொள்ளமுடியவில்லை; நான் இரண்டு வருடம் ஜெர்மனியில் இருந்து கற்றுக் கொண்ட ஜெர்மன் மொழி பயிற்சி இல்லாததால் சுத்தமாக மற்ந்தேவிட்டது. இதில் ஆபகானி ஒருவன் ஒரே வருடத்தில் தமிழ் போன்ற ஒரு பழமை வாய்ந்த மொழியை கற்றுக் கொண்டானாம். கேக்குறவன் கேனப் பயலா இருந்தா கார்ல் மார்க்ஸோட பேரன்தான் கமலஹாசன்னு சொல்லுவாங்க போல..
ஆப்கன் தீவிரவாதிகளை தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுடன் தொடர்பு படுத்தும் நோக்கத்துடனே எழுதப் பட்டதாக் தோன்றுகிறது. ரோஜாவில் காஷ்மீர் தீவிரவாதியாக வரும் பங்கஜ் கபூர் தமிழில் பேசுவதற்கான காரணம் அவர் கோவையில் படித்ததாகஇருக்கும். காஷ்மீரை சேர்ந்த ஒரு இந்திய குடிமகன் கோவையில் படிப்பதில் ஆச்சரியமேதுமில்லை. மணிரத்னம் உருவாக்கியதை விட மிக ஆபத்தான ஒரு கருத்துருவாக்கத்தை கமல் இங்கு முயற்சிக்கிறார்..
உமரின் நினைவுபடுத்தலில் நாசர் கமலைப் பார்த்து உனக்கு நீ ஆங்கிலத்தில் குர்ஆன் படித்திருக்கிறாயா என கேட்கிறார்.. அதற்கு கமல் இல்லையென பதிலளிக்கிறார். தாலிபான் போன்ற ஒரு அடிப்படைவாத இயக்கத்தில் குர்ஆனே படித்திராத ஒரு மதப்பற்று அல்லது மதவெறியே இல்லாத ஒரு முஸ்லிம் மிக எளிதாக சேர்ந்துவிட முடிகிறது. நாளை நான் எங்காவது சென்று நான் குர்ஆனைப் படித்ததில்லை என்ற உண்மையை சொன்னாலும் இவனுக்கும் தாலிபான்களை போல தீவிரவாத சிந்தனை இருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்ற் கருத்து உருவாவதற்கான வாய்ப்பிருக்கிறது. இது மிதவாத முஸ்லிம் என்று யாருமே கிடையாது என்கிற ஆர். எஸ். எஸ் சின் நச்சுப் பரப்புரையை ஒத்திருக்கிறது.
”அப்பன் இல்லாத பசங்க உஷாரா இருப்பாங்க. உன்னை மாதிரி. தமாஷ்” இது ராகுல் போஸ் (உமர்) கமலை பார்த்து பேசும் வசனம்.. அதற்கு கமலின் பதில் “அப்பன் யாருனே தெரியாத பசங்க அதைவிட உஷாரா இருப்பாங்களோ உங்களை மாதிரி.. தமாஷ்?” இது கமல் அளிக்கும் பதில். இந்திய முஸ்லிமகள் தம் மனைவியரை தலாக் செய்துவிடுவார்கள். ஆப்கானிய பெண்கள் பெயர் தெரியாத யாருடனும் உறவு கொண்டு பிள்ளை பெற்றுக் கொள்வார்கள் என ஒரு ஆப்கானிய முஸ்லிமும் இந்திய முஸ்லிமும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் விமர்சித்துக் கொள்கிறார்கள். ஒருவன் கையை வைத்து அவன் கண்ணைக் குத்தும் கலை கமலுக்கு நன்றாகவே வருகிறது.. அதற்கு பிறகு “டேஞ்சர்பா இந்த ஆளு” என அந்த காட்சியை முடிக்கிறார் ராகுல் போஸ். அதாவது இந்திய/தமிழ் முஸ்லிம்கள் தாலிபான் பார்வையிலேயே மிகவும் ஆபத்தானவர்களாம்.. உசாமா பின் லேடன் போன்ற உருவ அமைப்பை உடைய ஒருவன்“ உச(ர)மா இருப்பாரே நம்ம ஷேக்” என விளிக்கபடுகிறான். பின்னர் “ஷேக் உசாமா எங்கே? அவர பாதுகாக்க வேணாம்” என கமலே கேட்கிறார் இன்னாரை இன்னார் என்று அறிமுகப்படுத்தும் நேர்மை கூட கமலிடம் வெளிப்படவில்லை. இந்த லட்சணத்தில் படத்தின் ஆரம்பத்தில் ஒரு வெங்காய விளக்கம் வேறு.. ஒரு குகைக்குள் அந்த உச(ர)மான ஷேக் கண்முன் தோன்றியதும் கமல் பக்கத்தில் இருக்கும் தீவிரவாதியிடம் ”அது?” என உறுதி படுத்திக் கொள்ளும் தொணியில் வினவ “அவரேதான்! எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது” என பதில் வருகிறது. அந்த காட்சியின் முடிவில் கடவுளைக் கண்ட பக்தனை போல அந்த உச(ர)மான ஷேக்கைக் கண்டு காமுற்றுக் கொண்டே குகையை விட்டு வெளியேறுகிறான் அந்த இந்திய./தமிழ் முஸ்லிம். ஒரு ரா உளவாளி அவன் முஸ்லிமாக இருந்தால் அந்த உச(ர)மான தீவிரவாதியை பார்த்து பேரின்பம் அடைவான் என ஒரு வக்கிரமான பாசிச செய்தியை இந்த காட்சியின் மூலம் கருத்துருவாக்கம் செய்யப்படுகிறது..
தங்களை காட்டிக் குடுத்ததாக தாங்கள் நம்பும் அரபியை பொது இடததில் தாலிபான்கள் தூக்கிலிடுகிறார்கள்.. அவனது அம்மாவும் அப்பாவும் கதறி அழுகிறார்கள். அப்போது சூரா- அல்- பாத்திஹா ஓதப்படுகிறது. (சூரா அல் பாத்திஹாவின் அர்த்தம், அல்லாவே எங்களுக்கு நேர்வழியை காட்டுவாயாக! எனபதாகும்). அங்கு குழுமியிருக்கும் முஸ்லிம்கள் (கமல் உட்பட) எல்லாரும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். அந்த அரபி மரணத்துவிட்டான் என்பது உறுதிபடுத்தியபின் சுற்றியிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் ஆர்ப்பரிக்கிறார்கள்.
அணு விதைத்த பூமியிலே அறுவடைக்கும் அணுக் கதிர்தான் என கமலின் குரலில் ஒரு பாடல் வேறு ஆப்கானிய காட்சிகளிலே வருகிறது.. அப்படி பார்த்தால் சி.ஐ,ஏ மூலமாக ஓசாமா பின் லேடனை விதைத்ததே அமேரிக்காதான். ஓசாமாவை விதைத்துவிட்டு உமர் கய்யாமையா அறுவடை செய்யமுடியும்.
ஆனால் இத்தனையும் வெளிப்படையாக செய்யும் நேர்மை கமலுக்கு கிடையாது.. தனது பாசிச கருத்துருவாக்கத்திற்கு ஒரு கேடயம் வைத்திருப்பார். ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் படங்களில் மகாத்மா காந்தி. ஆனால் ஆப்கானிஸ்தானில் நடக்கும் கதையில் காந்தியை எங்கு கொண்டு வருவது. அதனால் விசாம் (கமல்) என்னும் கதாபாத்திரத்தின் மனசாட்சியையே கேடயமாக்கி கொள்கிறார். “நான என் வாழ்க்கையில நிறைய நல்லதும் செஞ்சிருக்கேன். கெட்டதும் செஞ்சிருக்கேன். ஆனா நான் செத்தாலும் அழிக்கமுடியாத பாவம் என் நெத்தியில எழுதியிருக்கு.” என்று அமேரிக்க படைகளுக்கு தாலிபான்களை காட்டிக் கொடுத்தவன் என்று கமல் மற்றும் அவரது ரா கூட்டாளியின் தவறினால் பொய்யாக குற்றம்சாட்டபட்டு தூக்கிலடப்படும்) தவுபீக் என்னும் தீவிரவாதியின் மரணத்திற்காக வருந்துகிறார். ஒரு முஸ்லிமை ரா உளவாளியாக்கினால் அவன் கடமையை மறந்து ஒரு தீவிரவாதிக்காக அனுதாபப் படுவான் என இங்கும் ஒர் கருத்துருவாக்கம்..
இதற்கு மேல் எழுதுவதற்கு எனக்கே அலுப்பாக இருக்கிறது. படம் முழுக்க பாசிச விஷக் கருத்துகள் மிகவும் கவனமாக மறைமுகமாக விதைக்கபட்டிருக்கின்றது.. மொத்தத்தில் விஸ்வரூபம் ஒரு பார்ப்பனிய பாசிச மலம்!
http://m.facebook.com/photo.php?fbid=10200311647372226&refid=52&_ft_=qid.5839283837983940140%3Amf_story_key.-9030655700719840830&refsrc=http%3A%2F%2Fwww.facebook.com%2Fstory.php&_rdr
-----------------------------------------------------
Thaagam Senguttuvan
அன்புள்ள கமல் அவர்களுக்கு வணக்கம் ....1992-93 ஆம் ஆண்டுகளில் இயங்கிய கமல் நற்பணி இயக்க அனைதுக்கல்லூரி மாணவர் அமைப்பின் பச்சையப்பன் கல்லூரி பொறுப்பாளர் செங்குட்டுவன் எழுதுவது !
இன்றைக்கு யாதவர் சங்கத்தில் உள்ள நண்பர் குணசீலன் அன்று உங்கள் நற்பணி இயக்கத்தின் தலைவர் . நாங்கள் படித்த சென்னை முத்தையா செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நீங்களும் படித்தீர்கள் என்று அன்றைக்கு பெருமைகொள்வோம் நாங்கள் .1992 ஆம் ஆண்டு தாகம் அனைதுக்கல்லூரி மாணவர் இதழாய் வெளியிடும் விழாவுக்கு நீங்கள் வருவதாக இருந்து ,குணா படத்தின் படப்பிடிப்புக் காரணமாக நீங்கள் வாழ்த்து செய்தி மட்டும் அனுப்புனீர்கள். தாகத்தின் முதல் ஆண்டு விழாவில் கலந்துக்கொள்வேன் என்று சொன்னீர்கள் ."சுட்டி" "தேன்மழை " போன்ற மாணவர் இதழ்கள் போல மாணவர் பருவத்தோடு நின்றுவிடாமல் "தாகம் " தொடர்ந்து வெளிவரவேண்டும் என்று வாழ்த்தினீர்கள். இந்த 22 ஆண்டுகளில் தாகத்தில் உங்களை விமர்சித்து எத்தனையோ க்கட்டுரைகள் வெளிவந்து விட்டது .இன்றைக்கு விஸ்வரூபத்திற்காக நீங்கள் தமிழ் நாட்டை விட்டே செல்கிறேன் என்று சொன்னபோது எனக்கும் கண் கலங்கியது ...ஆனால் கமல், உங்களை 5 வயது முதல் பாராட்டி சீராட்டி இன்று உங்களை கலைஞானியாக ,கோடீஸ்வரனாக உயர்த்திய தமிழ் நாட்டை எவ்வளவு எளிதாக உங்களால் தூக்கி வீச முடிகிறது . காஷ்மீர் முதல் கேரளா வரை என்று தமிழ் நாட்டை நீங்கள் தவிர்தபோது இஸ்லாமிய சகோதரனை விட எனக்கு உங்கள் மீது கடும் கோபம் வந்தது ! 50 ஆண்டுகாலம் உங்களை சுமந்த நாட்டிற்கு ,உங்கள் நாத்துடுக்கால் சிதம்பரம் நிகழ்ச்சியில் பேசிய காரணத்தால், உங்களை இன்றைய அரசு பந்தாடும் நிலையில்,தமிழர்களும் தமிழ் நாடும் என்ன பாவம் செய்தது உங்களை வளர்த்ததை த்தவிர ? ராசி அழகப்பன்,குணசீலன்,உங்கள் ராஜ்கமல் நிறுவனத்தின் நிழலாக இருந்த டி.என் .யெஸ் (குணா படத்தை தயாரித்து அழிந்து போனவர் ) அய்யா அவர்களின் மகன் சக்தி .புதுக்கல்லூரி இப்ராஹிம் இப்படி எத்தனையோ தளபதிகள் அன்று உங்களுடன் இருந்தனர் .இன்று அவர்கள் எல்லாம் எங்கே ?
இந்தியாவில் ஏதேனும் ஒரு மதசார்பற்ற மாநிலத்தில் தங்குவேன் என்று சொல்கிறீர்களே ...கமல் உண்ட வீட்டிற்க்கே ரெண்டகம் செய்கிறீர்களே ,இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர ஒரு மதசார்பற்ற நாட்டை உங்களால் சொல்லமுடியுமா ? அக்ரகாரத்தில் பிறந்த உங்களை இன்று இந்த மதச்சார்பற்ற நாடுதானே உச்சியில் நிற்க்கவைத்துள்ளது ?ஏதாவது ஒரே ஒரு அக்ரகாரத்து அம்பி உங்களுக்காக இன்று சாலை மறியல் செய்திருப்பானா ? உங்கள் அக்ரகாரத்து எழுத்தாளர்கள் சோ ,மதன் ,s .v .சேகர் ,உங்கள் குரு பாலச்சந்தர் உங்களை சந்தித்திருப்பார்களா ? இன்று உங்கள் வீட்டின் முன் அழுதவன் எல்லாம் இளிச்சவாய தமிழன் தானே ?எனக்கு அரசியல் கிடையாது ..மதம் கிடையாது என்று சிறு பிள்ளை தனமாக புலம்புகிறீர்களே கமல் ,ஹேராம் ,உன்னைப் போல் ஒருவன் ,விஸ்வரூபம் ,அன்பேசிவம் போன்றப் படங்கள் அரசியல் பேசாமல் எதைப்பேசின? மதம் பேசாமல் எதை பேசின ? 1983 இல் ஈழப் படுகொலைக்காக உங்கள் தலைமையில் பல்லாயிரம் ரசிகர்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினார்களே இன்று உங்களுக்கு அந்த உணர்வே இல்லையா ?
ஏன் இலங்கை தீவிரவாதம் பற்றி உங்களால் படம் எடுக்க இயலாதா ?அதற்கு ஒபாமா ஒப்புதல் தரமாட்டாரா ? காரணம் நீங்கள் இந்தியனாகி பல காலம் ஆகிவிட்டது கமல் ! தமிழனாக ..பிறகு இந்தியனாக ,,,இந்தியாவில் வாழ முடியாதப் பட்சத்தில் அமெரிக்கனாக ...அடடா...என்ன ஒரு மனித நேயம் உள்ள மனிதர் ..நடிகர் ! இன்றைக்கு இங்கு நடக்கும் கூத்து ,உலகில் எங்காவது நடக்குமா கமல்? உங்களை ஆளாக்கிய மண்ணிற்காக நீங்கள் ஒரே ஒரு படம் எடுத்ததில்லை ..ஆனால் ,உங்களை அமெரிக்காவின் விசுவாசியாக காட்டிக்கொள்ள, கேவலம் ஆஸ்கார் விருதுக்காக பலநூறு ஆண்டுகளாக நம்முடன் பிணைந்திருக்கும் இஸ்லாமிய சகோதரர்களை தொடர்ந்துக் கொச்சைப் படுத்திக்கொண்டே இருப்பீர்கள் ? உங்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற உடன் இங்கிருந்து வெளியேறுவேன் என்று அழுகிறீர்கள் ! வெட்கம் வெட்கம் !
நீங்கள் தமிழர்கள் படும் அவலங்களை வைத்து ஒரு படம் எடுத்து அதற்க்கு தடை என்றால் தமிழகம் உங்களை விட்டுக்கொடுத்திருக்குமா ? நீங்கள் சிறந்த நடிகர்தான் ..ஆனால் தமிழகத்திற்கு நன்றி உள்ள மனிதனா ? என்று உங்களை தொட்டுக்கேட்டுப் பாருங்கள். இந்த தமிழ்நாடும் தமிழனும் உங்களுக்குக் கோடி கோடியாக அள்ளித்தரவேண்டும், ஆனால் நீங்கள் இந்த மக்களைப் பற்றி படம் எடுக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்லை எதாவது ஒரே ஒரு தமிழர் பிரச்சனைக்காக நீங்கள் குரல் கொடுத்தது உண்டா கமல் ? தயவுசெய்து நீங்கள் போகும் ஊரில் உள்ள மக்களுக்காகவாவது குரல் கொடுங்கள் ...அவர்களையும் ஏமாற்றி விடாதீர்கள் ? எங்களைப் போல் அவர்கள் ஏமாற மாட்டார்கள் !போகும் போது இன்று தமிழக ரசிகர்கள் உங்கள் கடன் அடைக்க அனுப்பும் பணத்தையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள் !அடுத்தப் படம் எடுக்க உதவும் ! இந்தக் கடிதம் உங்களுக்கு மட்டும் அல்ல. எங்களை இன்றைக்கு சுரண்டிக்கொண்டிருக்கும் அத்தனை நடிகர்களுக்கும்தான். தயவு செய்து அவர்களையும் உங்களுடன் மதச்சார்பற்ற நாடான குஜராத்திற்கு அழைத்துச் சென்று விடுங்கள் ! நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம் !!
என்றும் அன்புடன்
தாகம் செங்குட்டுவன்
மற்றும் பழைய நற்பணி மன்ற தோழர்கள் .
Subscribe to:
Posts (Atom)





