Followers

Wednesday, February 10, 2021

தமிழ் முஸ்லிம்கள் தமிழ் மண்ணின் மைந்தர்களா?

தமிழ் முஸ்லிம்கள் தமிழ் மண்ணின் மைந்தர்களா?

இந்த வீடியோவில் தமிழ் இஸ்லாமியர்களின் வரலாறு அலசப்படுகிறது. தமிழ் முஸ்லிம்கள் வந்தேறிகள் அல்ல. இந்த மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லப்படுவது நூற்றுக்கு நூறு உண்மை. கடலோரத்தில் உள்ள ஒரு சில குடும்பங்கள் அராபியர்களோடு வணிக தொடர்பும் வைத்து திருமணமும் முடித்துக் கொண்டார்கள்.

மற்றபடி உருது முஸ்லிம்கள் வட மாநிலங்களில் மதக் கலவரம் வந்தபோது அபய பூமியாக தமிழகத்தை தேர்ந்தெடுத்து இங்கு குடும்பத்தோடு தங்கிக் கொண்டவர்கள். ஒரு சில உருது முஸ்லிம்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களோடு உதவிக்காக இங்கு வந்தவர்கள். மற்றபடி தொழுகை போன்ற அனைத்து இஸ்லாமிய சடங்குகளும் இருவருக்கும் ஒன்றே. தர்ஹா வணக்கம் போன்றவற்றில் உருது முஸ்லிம்கள் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். சில மூடப் பழக்க வழக்கங்களும் அதிகம் இருக்கும். தற்போது மாற்றங்கள் வரத் தொடங்கியுள்ளன. எங்கள் குடும்பத்திலும் உருது முஸ்லிமுக்கு பெண் கொடுத்துள்ளோம். இவ்வாறு தமிழகமெங்கும் பார்க்கலாம்.

 சில உருது முஸ்லிம்களிடம் தவறான புரிதல் உண்டு. ஒரு முறை ஒரு உருது முஸ்லிம் என்னிடம் உருது பேசுபவர்களே சிறந்த முஸ்லிம்கள் என்ற ரீதியில் பேசினார். நபிகள் நாயகம் பேசியது உருது அல்லவே என்றவுடன் உண்மையை விளங்கிக் கொண்டார்.

 அதே போல் மூன்று பேர் ஒன்றாக இருக்கும் போது இரு உருது முஸ்லிம்கள் உருதுவில் பேசிக் கொள்வார்கள். இதனை நபிகள் நாயகம் அவர்கள் கண்டித்துள்ளார்கள். ஒரு சபையில் எல்லோருக்கும் தெரிந்த பொதுவான மொழியில்தான் பேச வெண்டும்


மற்றபடி மொழிப்பற்று எல்லோருக்குமே இருக்கும். அதன் அடிப்படையில் வேலை போன்றவற்றில் அவரவர் மொழி தெரிந்தவர்களை வைத்துக் கொள்வார்கள். இதனால் உருது முஸ்லிமை உயர்வாகவோ தமிழ் முஸ்லிமை தாழ்வாக எவரும் நினைப்பதில்லை. அவ்வாறு நினைப்பவர் முஸ்லிமாக இருக்க முடியாது.

மேலும் இந்த வீடியோவில் வட மாநில முஸ்லிம்கள் படை எடுப்பாளர்கள் என்ற ரீதியில் பேசுகிறார். இதுவும் தவறு. இங்கு எப்படி பார்பன சாதி கொடுமை இருந்ததோ அதே அளவு வட மாநிலங்களிலும் இருந்தது. முகலாயர் ஆட்சி நடந்தபோது வட மாநிலங்களில் பல இந்துக்கள் மதம் மாறினர். பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் பார்பனர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள். ராமாயணத்தில் வரும் காந்தாரம் இன்று ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்குள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் மதம் மாறியவர்களே!


மற்றபடி திராவிட அரசியலையும் பேசுகிறார். ஸ்டாலினுக்கு இங்குள்ள தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதை அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை என்றே நினைக்கிறேன். சீமான் கருத்துக்களில் பிரபாகரன், முப்பாட்டன் முருகன் என்ற இரண்டையும் விலக்கி பார்த்தால் அவரும் ஒரு சிறந்த ஆளுமை என்றே சொல்வேன்.

மற்றபடி நான் தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். எனது தாய் மொழி தமிழ் என்பதிலும் பெருமை கொள்கிறேன். உலக மொழிகள் அனைத்தையும் விரும்புகிறேன். ஏனெனில் உலக மூல மொழிகள் அனைத்தும் மனிதன் ஒருவன் மற்றவரை விளங்கிக் கொள்ள இறைவனால் மனிதர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டவை என்று நம்புவன். குர்ஆனும் அதைத்தான் சொல்கிறது. அந்த வகையில் பார்த்தால் தமிழ் மொழியும் இறைவனால் அருளப்பட்டது என்பதில் நம்பிக்கையுடன் உள்ளேன்.

எனது தாய் மொழி தமிழ்: குர்ஆனை விளங்க அரபி படித்துக் கொண்டேன்: இனத்தால் திராவிடன்: மொழியால் தமிழன்: நாட்டால் இந்தியன்: பின் பற்றும் மார்க்கத்தால் இஸ்லாமியன்.

அவ்வளவுதான்: முடிந்தது :-)

 ஆக்கம்: சுவனப்பிரியன்







 

1 comment:

Dr.Anburaj said...

உடல் தமிழ்நாட்டில். மனம் விசுவாசம் அரேபியாவில் .

இதுதான் தமிழ்முஸ்லீம்களின் நிலை. உலகில் வாழும் அனைத்து முஸ்லீம்களும் தன் தாய் நாட்டிற்கு விசுவாசமாக இருப்பார்கள். இசலாமிய நம்பிக்கைக்கு பாதகம் வரும் வரை. அவர்களது நம்பிக்கை அரேபிய மண் மீதுதான். அதனால்தான் நான் அரேபிய அடிமைகள் என்று பதிவிடுகின்றேன்