Followers

Monday, February 08, 2021

குற்றால அருவியில் பார்ப்பனர்கள் மட்டும்தான் குளிக்க முடியும்...

 ''குற்றால அருவியில் பார்ப்பனர்கள் மட்டும்தான் குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் 

குளிக்க கூடாது", என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் "ஆஷ்'' என்ற வெள்ளைக்கார கலெக்டர் என்பது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?


இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை, சாதி வெறியனான வாஞ்சி நாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


ஒரு நாள் ஆஷ் துரை மாலை நேரத்தில் 

தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார். நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் சத்தம் பலமாக கேட்கிறது ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை.


அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர்  ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். "ஏன்" என்று வினவிய துரைக்கு "


அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும் நீங்கள் அங்கு போகக் கூடாது என்றும் சொல்லுகிறார்....!!!


உடனே ஆஷ் துரை ராவுத்தரை பார்த்து "சரி நீ போய் பார்த்து வா" என்றார். சேரிக்குள் போன

முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார்,


முதல் பிரசவம் துரை. சின்ன பொண்ணு ரெண்டு நாளா கத்திக்கிட்டு இருக்காளாம், பிள்ளை வயித்துல தலை மாறிக் கிடக்காம். பரிதாபம், இனி எங்கிட்டு துரை பொழைக்கப் போகுது" என்றார்.


ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக் கேட்க ,அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா. பின்ன எப்படி வண்டி கட்டி டவுனுக்கு கொண்டு போறது?, என்றார் ரவுத்தர்.


இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி. ஆஷ்துரை இறங்கி அக் குடிசை நோக்கி போனார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் ஒரு உயிரையேனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார். அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று 

உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையோட்டியைப் பணித்தார் துரை.


அந்த வழியாய் செல்ல வண்டிப்பாதை பிராமணர்களின் அக்கிரஹாரத்தை தாண்டித்தான் சென்றாக வேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டி மறிக்கப்படுகிறது.


ஒரு சேரிப்பெண்ணை ஏற்றிப் போகும் வண்டி 

இப் பாதை வழியே போகக் கூடாது என்று பார்ப்பணர்கள் வழி மறித்து வழி விட மறுக்கிறார்கள்...!!!


வண்டி கொண்டு வரச் சொன்னது துரையும் அவரின் மனைவியும் தான் என்று விபரம் சொன்ன பிறகும்  ஏற்க மறுக்கிறார்கள்.


இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார் ராவுத்தர்.  இதைக் கேட்ட ஆஷ் துரை அவர்கள்,தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.


குதிரையோட்டியின் பக்கதிலேறி அமர்ந்தும் கொண்டார். வண்டி அக்கிரஹாரத்திற்குள் நுழைகிறது.பார்ப்புகள் கூட்டமாய் வழி மறிக்கிறார்கள். "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக் கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது"

என்கிறார்கள்.


வழி விட சொல்லிப் பார்த்த துரை அவர்கள் வழி விட மறுக்கவே, வண்டியைக் கிளப்பு என்று உத்தரவிடுகிறார். மீறி வழி மறித்த பார்ப்புகளின் முதுகுத் தோல் துரை அவர்களின் குதிரை சவுக்கால் புண்ணாக்கப்படுகிறது. 


அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டாள்.


ஆஷ் துரை அவர்களிடம் அடி வாங்கிய கும்பலில்  ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான்.அவன் பெயர் வாஞ்சிநாதன்.


அப்போது வாஞ்சிநாதன் எடுத்தசபதம் தான்,

17.06.1911 அன்று ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட வஞ்சகமாக அமைந்து விட்டது.


மனித உயிரை விட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கப்பட்டு வருகிறது.


இதுவும் "ழான் வோனிஸ் எழுதிய "Ash. Official Notes"என்னும் குறிப்புகளில் அரசு ஆவணக் காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக் கொண்டிருக்கிறது..!!





3 comments:

Dr.Anburaj said...

உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் சவூதியில் உள்ள அணைத்து பெண்களுக்கும் சுக பிரசவம் மட்டும் தான் ஆகும் என்று சர்ஜெரி செய்ய சவுதியில் அனுமதி இல்லை - இது எப்படி சாத்தியம் சவுதியில் மட்டும் ..!!!!
சவுதியில் அரை மணி நேரத்தில் சுக பிரசவம் செய்து கையில் குழந்தையை தந்து விடுவார்கள் உடனே வீட்டிற்கு செல்லலாம் நம்ம ஊர் ல மாதிரி பத்து நாள் ஹாஸ்பிடலில் படுக்க தேவை இல்லை எல்லாம் பணத்திற்காக தான்
சவுதியில் தனியார் மருத்துவமனையில் சர்ஜெரி செய்தால் உடனே சவூதி அரசு அந்த ஹாஸ்பிடலின் அங்கீகாரத்தை ரத்து செய்து விடும்
(தவிர்க்க முடியாதா சூழலில் மட்டும் தகுந்த ஆதாரம் சமர்ப்பித்த பின்னே சர்ஜரி செய்யப்படும் நூற்றில் ஒருவருக்குத்தான் இவ்வாறு நிகழும் )
இந்தியாவில் மட்டும் ஏன் வயிற்றை கிழித்து பணம் சம்பாதிக்கிறார்கள்
எல்ல உயிரினங்களும் இயற்கையான முறையில் தான் சுக பிரசவம் ஆகிறது
ஏன் மனிதனுக்கு மட்டும் முடியாதா ??? எல்லாம் வியாபார தந்திரம்
குழந்தை பிறக்க ஒரு வழியை ஒரு உறுப்பை கொடுத்துள்ளான் இறைவன் அதை விட்டு விட்டு வயிற்றை கிழித்து குறுக்கு பாதையில் குழந்தையை தாயின் வயிற்றை கிழித்து எடுப்பது இயற்கைக்கு மாறான விஷயம் இல்லையா .??
பல லச்சம் செலவு செய்து படிக்கும் டாக்டர்கள் இப்படிதான் பணத்தை ரெகவர் செய்கிறார்கள்/
--------------------------------------------
குழந்தை பெரிதாக உள்ளது. குறுக்காக உள்ளது..... இப்படி பல பிரச்சனைகளின்அடிப்படையில் சிசேரியன் செய்யப்படுகிறது.
--------------------------------------------------------------
சவுதியில் சிசேரியன் இல்லாமல் குழந்தை பேறு நடக்கிறது என்றால அது ஆச்சரியமாக செய்தி. சம்பவம் உண்மை எனில் காரணம் அறிந்தால் நமது பெண் மக்களும் சவுதி மக்கள் சாப்பிடும் உணவு மருந்து பயிற்சி போன்றவற்றை பெற்று சிசேரியன் இல்லாது சுகபிரசவம் பெறுவார்களே!
சுவனப்பிரியன் தங்களின் கருத்தை பதிலிடலாமே.

suvanappiriyan said...

உண்மைதான் சிசேரியன் இல்லாமல்தான் இங்கு பெரும்பாலான குழந்தைகள் பிறக்கின்றன.

Dr.Anburaj said...

”உண்மைதான் சிசேரியன் இல்லாமல்தான் இங்கு பெரும்பாலான குழந்தைகள் பிறக்கின்றன”.

ஆச்சரியமான செய்தி.

இதற்கு காரணம் என்ன என்று ஏதேனும் கருத்துகள் இருந்தால் அதையும் பதிவிடலாமே!