Followers

Wednesday, February 24, 2021

#ஹாதியா.

 #ஹாதியா.

கேரளா மாநிலத்தில் தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இஸ்லாம் மார்க்கத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதற்காக சங்பரிவார் கும்பல்களால் வேட்டையாடப்பட்டவர்தான் Dr ஹாதியா.
வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டும் மனநோயாளியாக முத்திரை குத்தப்பட்டும் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டார்.
துரதிருஷ்டவசமாக அவரது தந்தை அசோகனும் சங்பரிவார் கும்பலின் பேச்சில் மதியை இழந்து சொந்த மகளிடமே கடினமாக நடந்து கொண்டார்.
இறுதியில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தன் கணவர் ஷெரினுடன் சென்றார்.
இதோ இப்போது தன் மகள் ஹாதியாவின் கிளினிக்கில் மகிழ்ச்சியாக இருக்கும் அசோகனும் மனைவியும்.
மதங்கள் மாறினாலும் உறவுகள் ஒருபோதும் மாறாது என்பதே இஸ்லாம் காட்டும் வழிமுறை.
அசோகன் & ஹாதியாவின் தற்போதைய மகிழ்வு அதைத்தான் காட்டுகிறது.



4 comments:

vara vijay said...

Dont hide, prophet ordered killing kaffir parents of muslim son

Dr.Anburaj said...

மரணப்படுக்கையில் இருந்த முஹம்மதின் பெரியப்பா-(உறவு முறை சரியாக நினைவில்லை- கடைசிவரை முஸ்லீம் ஆக மாறவில்லை) - வுக்காக இறைவனை பிரார்த்தனை செய்ய முஹம்மது மறுத்து விட்டாா். மதங்களை கடந்து மனிதம் உறவு முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இந்து பண்பாடு.

ஆனால் காட்டறபிகள் பிற மதத்தவர்களை ”காபீா்”கள் என்று இழிவு படுத்துவது வாடிக்கை.
ஒரு முஸ்லீம் பெண் இந்துவாக மாறியிருந்தால் எந்த இசுலாமிய தகப்பனும் தாயும் இப்படி உறவை மதித்து வர மாட்டாா்கள்.
எனக்கு தெரிந்த 3 பேர்கள் முஸ்லீம் பெண்களை மணந்து அந்த பெண்கள் இந்துவாக வாழ்ந்து வருகின்றார்கள். கோலம் போடுவதில் இந்த பெண்களுக்கு இருக்கும் ஆா்வம் மிக அதிகம்.
ஆனால் முஸ்லீம் பெற்றோர்கள் மகள் என்ற உறவை முற்றிலும் துண்டித்து விட்டாா்கள்.

Dr.Anburaj said...

இந்துவாக இருப்பவன் ஏமாளியாக வாழ்கிறான்.

பூமி கோளவடிவமானது.
என கண்டுபிடித்தவர்கள் அயல்நாட்டினர். நம் வரலாற்று புத்தகத்தில் நாம் படிப்பது இதுவே.
ஆனால்……
#பூகோல_சர்வதோ_விர்தா.
-எல்லா நிலையிலும் பூமி வட்டமாய் உள்ளது.
#ஆரியபட்டியம்_கோலபாத_சுலோகம் 9,
கிமு 6000 ஆண்டுகளுக்கு முன். நம் இந்திய அறிஞர்கள்.
ஆனா பூமி கோளவடிவமானது என முதலில் சொன்னது கெப்ளர், கோப்பர்னிகஸ், கலிலியோ. 17 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார்களாம்.
#பன்கா_மகாபூதா_மயா_சத்ரங்கானா_பஞ்சரே_மகிகோளா.
-கோளவடிவமான பூமி பஞ்சபூதங்களால் உருவாகி, நட்சத்திரங்களால் அழகுசெய்யப்பட்டு கூண்டுக்குள் தொங்கும் இரும்பு உருண்டையாக வானத்தில் தொங்குகிறது.
*கிமு 6000 வருடங்களுக்குலமுந்தைய வானவியல் அறிஞரான #வராகமிகிரர் தனது #பஞ்சசிந்தாதி என்ற வானவியல் சாத்திரத்தில் கூறியுள்ளார்.
#சக்ரநாஸ்ஹா_பரிணாம்_பிரித்வியா
-கோளவடிவமான பூமியின் மேற்பகுதியில் மக்கள் வசிக்கிறார்கள்.
*ரிக்வேதம்-1338
#மத்யி_சமன்தண்தாசியா_பூகோள_வியோமீனி_திஸ்தாதி.
-பிரபஞ்சத்தின் நடுவில் கோளவடிவமான பூமி உறுதியாக நிற்கிறது.
*கிமு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான #சூரியசித்தாந்த என்ற பண்டைய நூல்.
கிமு பதினோறாம் நூற்றாண்டைச் சார்ந்த #பாஸ்கர_ஆச்சார்யா தனது #லீலாமத் என்ற புத்தகத்தில் லீலாவதி என்கிற தன் மாணவி கேட்ட கேள்விக்கு கீரயழ்கண்டவாறு பதிலளிக்கிறார்………
உனது கண்கள் என்ன பார்க்கிறதோ அது உண்மையானதல்ல, நீ பார்ப்பதுபோல் பூமி தட்டையானதல்ல. அது கோளவடிவமானது.
ஒரு பெரிய வட்டத்தை வரைந்துவிட்டு அதன் சுற்றளவில் நான்கில் ஒரு பங்கு தூரத்தில் நின்றுகொண்டு பார்த்தால் அது நீண்ட கோடாகவே தெரியும். ஆனால் உண்மையில் அது ஒரு வட்டம். அதைப்போலவே பூமியும் வட்ட வடிவம் கொண்டது. எனக் கூறினார்.
11 ஆம் நூற்றாண்டில் நம் தேசத்தின் வானியலில் மிகச்சிறந்த விஞ்ஞாணி ஆரியபட்டரின் ஆரியபட்டியம் என்ற வானியல் சாஸ்திர நூல் லத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. அயல்நாட்டு விஞ்ஞாணிகள் இந்நூலை அதகளவில் விரும்பிக்கற்று அவர்கள் மொழிகளில் வெளியிட்டனர் அதுவே காலப்போக்கில் அந்நாட்டு அறிஞர்கள் பெயரிலேயே அறியப்பட்டு நம்தேசத்திற்கும் வந்திருக்கிறது.
ஆரியபட்டர் தன் நூலில் சூரிய சந்திர கிரணத்துக்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
#சடையாட்டி_சசி_சூர்யம்_சகினாம்_மகதி_க_பூச்சயா
-ஆரியபட்டியம் கோல் பாதம் சுலோகம்37
*சூரியனை சந்நிரன் மறைக்கும்போது சூரிய கிரகணம் தோன்றுகிறது.
பூமி சந்திரனை மறைக்கும்போது சந்திர கிரகணம் தோன்றுகிறது.
மேலும் அவர் கிரகணங்கள் எப்போதெல்லாம் உருவாகும் என மிகத்துல்லியமாக கணித்துள்ளார்.
பூமி சூரியனை சுற்றிவர 365 நாட்கள், 12 ஆரியபட்டர் நிமிடம், 30 விநாடிகள் எடுத்துக்கொள்வதாகவும்,
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 23 மணி, 56 நிமிடம், 4.1 விநாடி எடுத்துக்கொள்வதாகவும் விளக்கியுள்ளார்.
இந்திய மொழியில் ஜாக்ரபி என்ற சொல் பூகோள சாஸ்திரத்தையே குறிக்கிறது. 'பூகோளம்' என்ற சொல்லிற்கு 'கோள வடிவமான பூமி' என்பதே பொருள். இதன்மூலம் அயல் நாட்டவன் கல்வியை இன்னதென்றே அறிவதற்கு முன்பே நாம் வானியல் புள்ளியல் கணிதம் என அனைத்திலும் கோலோச்சினோம் என்பதை மறந்துவிட்டு சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் நம் வரலாறுகளை நம் சாதனைகளை நம் கண்டுபிடிப்புகளை நாம் நம் சந்ததிகளுக்கு சொல்ல மறந்ததால் மறுத்ததால் வந்த விணை இன்று நாம் பெற்ற பிள்ளைகளுக்கு அயலவனின் இனிசியலை போட்டுக்கொண்டு நாமே வளர்த்துவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளதை மறுக்கமுடியாது.
இனியும் அந்த அவலம் நீடிக்காமல் கற்றரிந்த பெருமக்களே அறிவள்ள மாணவ இளைஞர்களே நம்வரலாறை முதலில் ஆதிமுதல் அந்தம்வரை தெளிவாய் கற்போம், பின்பு அவற்றை நம் சந்ததிகளுக்கு கற்பிப்போம்.

suvanappiriyan said...

//Dont hide, prophet ordered killing kaffir parents of muslim son//

காஃபிரான உறவு :

எமக்கு காஃபிரான இரத்த உறவு இருந்தாலும் அவர்களுக்குரிய அந்தஸ்த்தைக் கொடுக்க நாம் தயங்கக் கூடாது. இதில் இஸ்லாம் எவ்வளவு தூரம் விசாலமாகச் சிந்திக்கின்றது என்பதைப் பின்வரும் அறிவிப்பு உணர்த்துகின்றது.

“நீங்கள் நிச்சயமாக எகிப்தைக் கைப்பற்றுவீர்கள் அப்போது அவர்களுடன் மிக இங்கிதமாக நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்கு அவர்களுடன் குடும்ப உறவும் – திருமண உறவும் உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்

இஸ்மாயில்(அலை) அவர்களின் தாயார் அன்னை ஹாஜரா அவர்கள் கிப்தி இனத்தவராவார். அவ்வாறே நபி(ஸல்) அவர்களின் மகன் இப்றாஹிமின் தாய் மரியதுல் கிப்தியாவும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். இதனையே நபி(ஸல்) அவர்கள் மேற்குறித்த நபிமொழியில் குறிப்பிட்டார்கள். தனக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹாஜரா அவர்களின் குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிர்காலத்தில் நடந்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் எமது உடன் பிறப்புக்கள், எமது பெற்றோரின் உடன் பிறப்புக்கள், அவர்களுடைய குழந்தைகளுடன் நாம் எவ்வளவு இங்கிதமாக நடந்துகொள்ளப் பணிக்கப்பட்டுள்ளோம் என்பதை எண்ணிப்பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் நபி(ஸல்) அவர்கள் இதனைக் கூறும் போது அந்த கிப்தி இனத்தவர் கிறிஸ்தவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எனவே, காபிர்களாக இருந்தால் கூட இரத்த உறவுகளுக்கு நாம் முக்கியத்துவம் வழங்கத் தவறக் கூடாது.