Followers

Sunday, February 28, 2021

அன்பான பாஜகவினர்க்கு, ஒரு இந்துவின் கேள்வி ..?

 அன்பான பாஜகவினர்க்கு, ஒரு இந்துவின் கேள்வி ..?


நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் உண்மையான இந்துவே இல்லை, என நேரிலும், சமூக வலைதளங்களிலும், மிகவும் கீழ்தரமாக விமர்சிக்கிறீர்கள்..!!


நாங்கள் இந்து இல்லை என்பதை, எதை வைத்து நீங்கள் அளவீடு செய்கிறீர்கள் ?


பாஜக சொல்லித்தான் நாங்கள் கடவுளை வணங்குகிறோமா ?

                       அல்லது

RSS-காரர்கள் சொல்லித்தான் கோவிலுக்கு செல்கிறோமா ?

                       அல்லது


பெரியார் சொன்னதற்காக கடவுளை வணங்குவதை நிறுத்திவிட்டோமா.. !

இல்லையே..?


எப்போதும் மிகச் சரியானதையே, தேர்தெடுப்பவர்கள் நாங்கள்.!!


ஒட்டுமொத்த இந்துக்களையும் உங்களுக்கு "பத்திரம்" போட்டு யாரும் எழுதி கொடுத்தார்களா ?


நீங்கள் வருவதற்கு முன், நாங்கள் என்ன நிர்கதியாகவா இருந்தோம் ?


பாஜக என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமே..!!

முடிந்தால் மக்களுக்கு நன்மை செய்து மக்கள் மனங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்..!!


மாற்று மதத்தை சேர்ந்தவர்களே உங்களை ஆதரிப்பார்கள் அதை விட்டுவிட்டு பாஜகவை ஆதரிக்கவில்லை, என்கிற ஒரேகாரணத்திற்காக..


என் இந்து மக்களை, சூடு சொரனை இருக்கிறதா ?

சோற்றில் உப்பு போட்டு தின்கிறீர்களா" .? என விமர்சிப்பதும் சந்தேகிப்பதும் மிகவும் கீழ்தரமானது.


நாங்கள் உப்புபோட்டு உண்பதை, நேற்று வந்த வடமாநில கட்சியான உங்களிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை..!


நடுநிலை நக்கிகள் என்கிறீர்களே ?

உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம்,

முகத்திற்கு நேராக இந்த வார்த்தையை பயன்படுத்த முடியுமா ?


இதுதான் உங்கள் அரசியலா ?

இவ்வளவுதான் உங்கள் நாகரீகமா ?


பன்வாரிலால் புரோகித் தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பின் மாநில அரசின் பரிந்துரை இல்லாமல், மத்திய அரசின் வழிகாட்டுதலோடு தமிழகத்தில் கீழ்கண்ட உயர்பதவிகளை நியமனம் செய்தார்.. 


1. மதுரை பல்கலைக்கழகம் - எம் கிருஷ்ணன்..

2. அண்ணா பல்கலைக்கழகம் - சூரப்பா

3. தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகம் - சுதா சேஷய்யன்

4. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் - பிரமிளா குருமூர்த்தி

5. தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகம் - C பாலச்சந்திரன்


இவற்றில் 80 சதவிகிதம் பிராமணர்கள்.. அதாவது தமிழ்நாட்டில் வெறும் 1.5 சதவீதம் மட்டுமே இருப்பவர்கள்.. மீதம் 98 சதவிகிதம் இருக்கும் முதலியார், பிள்ளை, நாடார், செட்டியார் கவுண்டர், வன்னியர், பறையர், நாயுடு, யாதவர் போன்ற சமூகங்களிலிருந்து யாருமே இல்லையே ? நாங்கள் இந்துக்கள் இல்லையா 


அப்படி என்றால் இந்துக்கள் என்றால் பிஜேபி ஆர்எஸ்எஸ் பார்வையில் வெறும் பிராமணர் மட்டும்தானா ? 


தேர்தல் வேலை செய்வது , வாக்களிப்பது, கலவரங்கள் செய்து கோர்ட்டுகளில் கேஸ்களுக்கு அலைவது நாங்கள்...!! அதன் மூலம் கிடைக்கும் பதவி அதிகாரத்திற்கு பிராமணர்கள்..!! 


அந்த பிராமணர்கள் யாரும் தேர்தல்களிள் வாக்களிப்பது கூட கிடையாது. 


இதுதான் RSS பிஜேபியின் இலக்கணமா ?


அப்படியெனில்...!

"எங்கள் வாக்கு"

உங்களுக்கு நிச்சயமாக இல்லை..!

நீங்கள் எப்போதும்போலவே,

நோட்டாவுக்கு கீழேதான்..!


இப்படிக்கு...

(சோற்றில் உப்பு போட்டு உண்ணும்  மானமுள்ள தமிழன்).


(பகிரி வழி)

3 comments:

Dr.Anburaj said...

நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் உண்மையான இந்துவே இல்லை, என நேரிலும், சமூக வலைதளங்களிலும், மிகவும் கீழ்தரமாக விமர்சிக்கிறீர்கள்..!!............முடிந்தால் மக்களுக்கு நன்மை செய்து மக்கள் மனங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்..!!
மாற்று மதத்தை சேர்ந்தவர்களே உங்களை ஆதரிப்பார்கள் அதை விட்டுவிட்டு பாஜகவை ஆதரிக்கவில்லை, என்கிற ஒரேகாரணத்திற்காக..
--------------------------------------------------------------------------
நிச்சயம் இதுதான் சரியான வழி. பொது அமைப்பை நடத்தும் அனைவரும் பின்பற்ற வேண்டிய வழி.
--------------------------------------------------------------------------------

என் இந்து மக்களை, சூடு சொரனை இருக்கிறதா ?

சோற்றில் உப்பு போட்டு தின்கிறீர்களா" .? என விமர்சிப்பதும் சந்தேகிப்பதும் மிகவும் கீழ்தரமானது.
மிகவும் தவறானது.யாரையும் இப்படி பேச யாருக்கும் உரிமையில்லை. சிலர் ஏதோ ஆர்வக் கோளாறு காரணமாக இப்படி கதைக்கின்றார்கள். மன்னித்து விடுங்கள்.
---------------------------------------------------------------------------------
01. பாரதிய ஜனதா கட்சியை இந்து மதம் சார்ந்த கட்சி என்று பிறா் விமா்சனம் செய்யும் போது அரசியலில் இந்து நலன் காக்க முன்வரும் கட்சி பாஜகா என்று அனைவரும் பாராட்டுகின்றனா்.
02.தமிழா்கள் அனைவரும் உறுப்பினா்களாக நிர்வாகிகளாக இருக்கும் பாஜகட்சி இந்திய கட்சிதான். வடமாநில கட்சி அல்ல. வடமாநிலங்களில் பல இடங்களில் பாஜக தோற்றுள்ளது.
03. நாலுமாவடி என்ற ஊரில் ஜெபக் கூட்டம் நடத்தும் மோசஸ் லாசரஸ் தமிழக கோவில்கள அனைத்தும் சாத்தானின் கூடாரங்கள் என்று பேசிய பேச்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்ட போது திமுக ஸ்டாலின் எஸரா சற்குணம் வீரபாண்டியன் வீரமணி எடப்பாடி ...... பீற்றா் அல்போன்ஸ் . . ...போன்ற எவரும் கண்டிக்கவில்லையே! ஏன் .
பாரதிய ஜனதா கட்சி இந்துக்களை நேசிக்கும் கட்சி. இந்தியர்கள் அனைவரையும் நேசிக்கும் கட்சி.புரிந்து கொள் சகோதரா!
பாக்கிஸ்தானில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்து இந்தியா வந்தான். இந்தியாவிலிருந்து இந்துக்களை விரட்டும் காலம் வந்ததால் ...எங்கு போவாய் ? என் சந்ததிக்கும் ஆபத்து -மதமாற்றத்தால்.
சும்மா ஒன்றும் தெரியாமல் பேசாதே. உனது பேச்சை மத வெறியர்களும் இந்து துரோகிகளும் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.கவனமாக இரு.



Dr.Anburaj said...

சோற்றில் உப்பு போட்டு உண்ணும் மானமுள்ள தமிழன்

......சொல்லியா பாபா் இந்தியா மீது படையெடுத்தான்.
......சொல்லியா கஜினி முகம்மது இந்தியாவை 17 முறை படையெடுத்து செல்வங்களை கொள்ளையடித்து இந்து சகோதரிகளை ஆயிரக்கணக்கில் கைபற்றி அடிமைச் சந்தையில் விற்றான். பிற நாடுகளில் வைப்பாட்டியாக வைத்து சீரழித்தான்.
சொல்லியா காந்தாரம் ஆப்கானிஸ்தான் ஆனது. அங்கே வாழ்ந்த வாள்முனையில் இந்துக்கள் வேரும் வேரடி மண்ணுமாக அழிக்கப்பட்டார்கள்.
சொல்லியா பாக்கிஸ்தான் உருவானது.அங்கு இன்றும் இந்து சிறுபான்மையினா் இந்தியாவில் முஸ்லீம்கள் மகிழ்ச்சியாக வாழ்வதுபோல் வாழ முடியவில்லையே

பட்டியல் மிக மிக நீண்டு போகும் .போதிய உலக அனுபவங்கள் தகவல்கள் இல்லாது கருத்துக்களை படிவிடுகின்றவன் முட்டாள்.அறிவிலி.


Dr.Anburaj said...

Muslim schoolgirl from Chhindwara, Madhya Pradesh, learns Bhagavad Gita:
மத்திய பிரதேசம் சீகிந்த்வாரா என்ற ஊரில்உள்ள முஷாரிப் கான் என்ற முஸ்லீம் சிறுமி பகவத்கீதையை மனப்பாடம் செய்து வருகின்றாள்.BHOPAL: Religion is no barrier in attainment of spiritual knowledge. Mushariff Khan from Madhya Pradesh’s Chhindwara district is a perfect example of this. The Class VIII student can recite shlokas from the Bhagavad Gita with élan, much to the delight of her parents and teachers.

Mushariff started learning the holy Hindu scripture as part of memory retention training, and now she and her parents are proud that she has imbibed the best tenets of another religion.

The talented girl has learnt by heart 500 out of the total 701 shlokas in the Bhagavad Gita, using the memory retention technique taught by her Abacus and Vedic Mathematics teacher Rohini Menon.

“Mushariff is one of my best students. I gave her three options to showcase her memory retention technique: memorising the entire dictionary, the entire Constitution of India or the Bhagavad Gita. To the surprise of us all, she opted for learning the Bhagavad Gita. She started learning when she was in Class VI and has so far memorised 500 Sanskrit sholkas,” Menon told this newspaper.

Menon said many of her other students, too, have tried to learn the shlokas from the Bhagavad Gita, but only Mushariff has succeeded in memorising 500 shlokas till now and is determined to learn and understand the remaining ones, too.

மானமுள்ள இந்துவே உனக்கு பகவத்கீதை தெரியுமா? திருமந்திரம் அறிவாயா? உனக்காக தன் வாழ்வை அர்பணித்த சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம் அறிவாயா ?