Followers

Saturday, February 20, 2021

மலேசியாவில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்களைப் பற்றி!

 

 மலேசியாவில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்களைப் பற்றி!

 

இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் இந்துத்வாக்களின் பிரிவுகள் மலேசியாவிலும் இந்துக்களிடையே பரந்துள்ளது. ஹிண்ட்ராப் என்ற அமைப்பின் செயல்பாடுகளை கேள்விப்பட்டிருக்கலாம். சிறுபான்மையினரான இந்துக்களின் நலனை பாதுகாக்க அந்த அமைப்பு செயல்பட்டால் யாரும் குறை காணப் போவதில்லை. ஆனால் இவர்களின் இலக்கு அது அல்லாமல் தமிழ் முஸ்லிம்களை இந்து கலாசாரத்தை புகுத்தி அவர்களை இந்துக்களாக மாற்றும் முயற்சியில் இறங்கும் போதுதான் பிரச்னையாகிறது. இஸ்லாத்தை விட ஒரு சிறந்த வாழ்வு முறையை அவர்கள் காட்டித் தந்தாலும் நாம் வரவேற்கலாம். ஆனால் ஏற்கெனவே சாதி வெறி ஊறிப்போய் பிராமணன் சூத்திரன் என்ற பாகுபாட்டால் நிறுவப்பட்டுள்ள இந்து மதத்துக்கு அழைத்தால் யார்தான் வருவார்? அவ்வாறு வராத பட்சத்தில் பல அவதூறுகளை இந்துத்வாக்கள் முஸ்லிம்கள் மேல் வீச ஆரம்பிக்கின்றனர்.

 

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்த இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சூழலில் அவர்களை பிரிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை என்றும் அவர்கள் மலாய் முஸ்லிம்கள் என்றும் வடி கட்டிய பொய்யை தற்காலத்தில் பரப்பி வருகின்றனர். தமிழ் பேசும் இஸ்லாமியர்களை 'நீங்கள் தமிழில் பேச வேண்டாம்' என்றும் கோரிக்கை வைக்கின்றனர். எந்த அளவு வன்மம் இவர்கள் மனதில் உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.  இதனை இந்துக்களே நம்ப மாட்டார்கள். எனது உறவினர்கள் பலர் மலேசியாவில் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். அனைவரும் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களே!  ஆங்கிலம், மலாய் தெரிந்திருந்தாலும் இரு தமிழர்கள் சந்திக்கும் போது தமிழில்தான் உரையாடுவார்கள். தமிழ் மொழியை அந்த அளவு பிரியத்தோடு நேசிப்பவர்கள் தமிழ் முஸ்லிம்கள். ஆனாலும் பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி பார்பனர்களை பூர்வ குடி இந்தியர்கள் என்று எப்படி நம்ப வைத்தார்களோ அதுபோல் முஸ்லிம்களை அந்நியர்கள் என்று பொய் கூறும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளது.

 

'உங்களுக்கு என்னதாண்டா பிரச்னை? வாயை மூடிக் கொண்டு இருங்கடா' என்று இந்த இஸ்லாமிய பெண் ஆதங்கப்படுவதை பார்க்கிறோம்.  தமிழ் மொழியின் மேல் உண்மையான பற்று கொண்ட ஒருவன் இவ்வாறு பதிவு எழுதுவானா? இவர்களுக்கு உண்மையில் என்னதான் பிரச்னை?  பார்பனியத்தைப் பொருத்தவரை சமணம், பவுத்தம், கிருத்தவம், சீக்கியம் என்று பெரும்பாலான மார்க்கங்களை சிதைத்து அங்கும் வர்ணாசிரமத்தைப் புகுத்தி விட்டது. இதில் இன்று வரை தப்பியுள்ளது இஸ்லாம் மட்டுமே. எனவே தான் அவர்கள் எங்கு சென்றாலும் இஸ்லாத்தை மட்டுமே குறி வைக்கின்றனர்.

 

'ராவுத்தர் பேரவை' என்று அமைத்துப் பார்க்கிறார்கள். வேலூர் இப்றாஹிமுக்கு பணத்தை கொடுத்து இந்துத்வத்தை பேச வைக்கிறார்கள். என்ஆர்சி, சிஏஏ போன்ற சட்டங்களால் முஸ்லிம்களை அந்நியப்படுத்தப் பார்க்கிறார்கள். எந்த வகையில் எல்லாம் முஸ்லிம்களுக்கு தொல்லை தரமுடியுமோ அத்தனை வழிகளையும் முயற்சித்துப் பார்க்கிறார்கள். உலக முடிவு நாள் வரையில் இவர்களால் முஸ்லிம்களை வெற்றி காண முடியாது. இவர்கள் எந்த அளவு எதிர்க்கிறார்களோ அந்த அளவு இஸ்லாம் வளர்ச்சியுறும். இதனை நமது காலங்களிலேயே பார்த்து வருகிறோம்.

 

ஆக்கம்

சுவனப்பிரியன்




2 comments:

vara vijay said...

Atheistic humanitarian is my religion, we dont have God or any prophets. We believe in science, rational thinking and love for all living beings.

Dr.Anburaj said...


பொய்களை பதிவிடுவதில் வல்லவா் சுவனப்பிரியன்.

அமைப்பு ரீதியில் செயல்படும் திறன் அற்றவர்கள் இந்துக்கள்.ஆனால் மேற்படி திறன் மிகுந்தவா்கள். தமிழ் பேசும் முஸ்லீம்கள் இந்து தமிழா்களுக்கு எதிராக செயல்படுவது அன்றாட வாடிக்கை. முஸ்லீமுக்கு முஸ்லீம்தான் முக்கியம்.

தவறு செய்பவன் முஸ்லீமாக இருந்தாலும் சுவனப்பிரியன் இந்துக்களைதான் பழிப்பாா். இரத்தத்தில் ஊறிய பழக்கம்.