Followers

Wednesday, February 03, 2021

சகோதர சகோதரிகளே!

 சகோதர சகோதரிகளே!

பாசிசம் தனது கோர முகத்தை காட்டத் துவங்கியுள்ளது. நேற்று கல்யாண ராமன் விஷத்தை கக்கினான். இன்று கோவையில் வேறொருவன் அதே போன்று நபிகள் நாயகத்தை தரக் குறைவாக பேசி முஸ்லிம்களை கொதிப்படையச் செய்துள்ளான். இவனையும் கைது பண்ணினாலும் வேறொருவனை இந்துத்வா களமிறக்கும்.
மோடி அமித்ஷாவைப் பொருத்த வரை நாட்டின் முன்னேற்றத்தை சொல்லி வாககு சேகரிக்க முடியாது. இந்து முஸ்லிம் கலவரத்தை உண்டு பண்ணி அதன் மூலம் அப்பாவி இந்துக்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் ஆட்சியை பிடிக்க வேண்டும். இதுதான் அவர்களின் திட்டம். உபியில் முஸ்லிம்களையும் ஜாட் இன மக்களையும் தேர்தல் நேரத்தில் மோத விட்டு வாக்கு அறுவடை செய்தது பாஜக.
எனவே நாம் உணர்ச்சிகளுக்கு பலியாகி வெட்டுவேன் குத்துவேன் என்று களமிறங்கினால் அதனால் பலனடையப் போவது பாஜகதான். எனவே நாம் நமது எதிர்ப்பை மிக சாதுர்யமாக காட்ட வேண்டும். இந்த பாஜக நபிகள் நாயகத்தை கேவலப்படுத்துவதால் நபிகளின் தரம் தாழ்ந்து விடப் போவதில்லை. நமது பிரசாரத்தை இன்னும் வேகமாக கொண்டு சென்று நபிகள் நாயகம் யார் என்பதை மக்களுக்கு விளக்குவோம். இந்த காணொளியில் வரும் தொப்புள் கொடி உறவைப் போன்ற இந்து சகோதரர்களை அவர்களுக்கு பதிலளிக்க வைப்போம். எக்காரணத்தை முன்னிட்டும் நாம் இந்துக்களின் கடவுள்களை நிந்தனை செய்ய வேண்டாம். தரம் தாழ்ந்த விமரிசனங்களையும் வைக்க வேண்டாம். எத்தனை பேரை கைது செய்தாலும் இன்னும் 10 பேரை அமித்ஷா கும்பல் களமிறக்கும். அந்த அளவு காசு கொட்டிக் கிடக்கிறது அவர்களிடத்தில்.
எனவே பொறுமை காப்போம். பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்வோம்.
-----------------------------------------------
நன்மையையும் தீமையும் சமமாக மாட்டாது, எனவே, நபியே நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக்கொள்வீராக! அப்போது யாருக்கும் உமக்கும் பகைமை உள்ளதோ அப்படியானவர்கூட உற்ற நண்பரைப் போன்று ஆகிவிடுவார்.
(அல்குர்ஆன்:- 41:34)



1 comment:

Dr.Anburaj said...

Play it cool என்பார்கள் ஆங்கிலத்தில். அதுபோல் முட்செடியில் வீழுந்த பட்டுதுணியை எடுப்பது போல் விசயங்களை மென்மையாக கையாள வேண்டும்.
கிறிஸ்டோபா் ஐசா்கூடு என்பவா் ஸ்ரீராமகிருஷ்ணரைப்பற்றி படிக்க வந்துள்ளதாக அறிவித்து மடத்தில் தங்கி நிறைய படித்தாா்.அவரது நடவடிக்கையால் பெரிதும் கவரப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ண மடம் அவரை பெரிதும் கௌரவித்து மிகுந்த கண்ணியத்துடன் நடத்தி உதவிகள் செய்தது. ஆனால் அந்த நீசன் லண்டன் சென்று ஸ்ரீராமகிருஷ்ணரையும் சுவாமி விவேகானந்தரையும் மிகக் கேவலமாக பதிவு செய்து புத்தகமாக வெளியிட்டாா். பெண் பித்தர்கள் என்று விமா்சனம் செய்து இருந்தாா்.அந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது திரு.எல்.கே.அத்வானி அவர்கள் மறுத்து விட்டாா்கள். விமா்சனங்களை-அவதுறுகளை நாம் சத்தியத்தால் வெல்ல வேண்டும் என்று புத்தகத்தை தடை செய்யக் கூடாது என்றாா்.குருதேவரின் புகழுக்கு எந்த களங்கமும் எற்படவில்லை.சொக்கத் தங்கத்தை கிறிஸ்டோபா் ஓட்டுச்சில் என்றாா். மக்கள் இல்லை அவர்கள் சொக்கத் தங்கம் என்று ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
----------------------------------------------------------------------------

விமா்சனங்களால் - தங்கத்தை பித்தனை என்றால் தங்கள் பித்தளை ஆகிவிடுமா?

இந்தஉறுதிப்பாடு இருந்தால் நாம் உணா்ச்சி பிழப்பாக மாற வேண்டியதில்லை. கல்யான ராமன் பேசியதை முகநுலில் நானும் கேட்டேன்.

கடுமையாக விமா்சனம் செய்ய முஹம்மதின் வரலாற்றில் உண்மை சம்பவங்கள் நிறைய இருக்கும்போது

கற்பனையாக யுகமாக விமா்சித்துள்ளாா்.தவிர்த்து இருக்க வேண்டும். உண்மை சம்பவங்களை எடுத்து பேசி இருக்க வேண்டும்.

ஆனால் எதிா்வினைகள் கா்ண கொடூரமாக உள்ளதே!கோவை ரஹமத்துலலா நாக்கை -----காலை ----- வெட்டுவேன் என்று பரணி பாடுகின்றாா். இந்தியாவிற்கே பாடம் கற்பிப்போம் என்கிறாரே ரஹமத்துல்லா. இவன் என்ன அவ்வளவுபெரிய ஆளா?
போா் முழக்கம் பலர் விடுக்கின்றாா்கள்.வாட்ஸ் அப்பில் வந்த வீடியோவில் இரு மு்லீம்கள் க.ராமனை கொலை செய்ய ரெடி என்கிறாா்கள். மு்ஸ்லீம்கள் இன்னும் கற்காலத்தில் இருக்கின்றார்கள் என்பதையே காடடுகிறது.
முஸ்லீம்கள் தங்களின் தரத்தை தாழ்த்தி உள்ளாா்கள். பாவம் .