Followers

Showing posts with label ஜாகிர் நாயக். Show all posts
Showing posts with label ஜாகிர் நாயக். Show all posts

Monday, March 20, 2017

ஜாகிர் நாயக்கின் 18 கோடிரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன



//மதபோதகர் ஜாகிர் நாயக்கின் 18 கோடிரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. //
-தினமலர்
20-03-2017

---------------------------------------------------------------

மதங்களுக்கிடையே ஒற்றுமையை உண்டாக்கி 'நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்' என்று முழங்கியவரின் சொத்துக்கள் முடக்கம்.

முஸ்லிம் பெண்களை கற்பழியுங்கள் என்று பகிரங்கமாக சொன்ன யோகி ஆதித்யநாத் உபி முதல்வர்.

இந்திய நாடு தனது அழிவை இந்துத்வாவால் பெற்றுக் கொண்டுள்ளது. இது இந்து மதத்தை மேலும் அழிவுக்குள்ளாக்கும்.

Sunday, January 03, 2016

ஜாகிர் நாயக்கிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை!

மிகச் சிறந்த அறிவாளி! குர்ஆன் வசனங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். ஆங்கிலத்தில் நல்ல புலமை. உர்து, சமஸ்கிரதம் போன்ற ம...

Posted by Nazeer Ahamed on Sunday, January 3, 2016

மிகச் சிறந்த அறிவாளி! குர்ஆன் வசனங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். ஆங்கிலத்தில் நல்ல புலமை. உர்து, சமஸ்கிரதம் போன்ற மொழிகளையும் சரளமாக பேசக் கூடியவர். இந்து மத புராணங்களை வசன எண் முதற் கொண்டு மனனமாக சொல்லும் திறன் படைத்தவர். ஆயிரக்கணக்கான மக்கள் இவருடைய பேச்சின் மூலம் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.

இவரது மாற்று மதத்தவருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் இரு முறை நேரிடையாக ரியாத்தில் கலந்து கொண்டுள்ளேன். நேரிடையாக பார்த்து பேசியும் இருக்கிறேன். சவுதி நாட்டவர் இவருக்கு ஏக மரியாதையை கொடுக்கின்றனர். உலகம் முழுக்க இதுதான் நிலை.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒருவருக்கு ஷாருக்கான் போல் சல்மான் கான் போல் மேலிருந்து பறந்து வர வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது என்று ஆச்சரியப்படுகிறேன். இவருடைய உருவத்தைப் பார்த்தோ அல்லது இவரது மேடை அலங்காரங்களைப் பார்த்தோ இந்த கூட்டம் கூடவில்லை. ஜாகிர் நாயக் பேசுவது இறைவனின் வார்த்தை. அதற்கு அழகிய முறையில் விளக்கம் கொடுக்கிறார் என்பதால்தான் மரியாதை தருகிறோம். வானத்திலிருந்து இறங்குவது போல் கோமாளித் தனங்களை செய்ய ஆரம்பித்தால் இருக்கும் மதிப்பு போய் விடும் என்று சொல்லி வைக்கிறோம். ஜாகிர் நாயக்கோடு தொடர்பில் இருக்கும் நண்பர்கள் இது விஷயமாக பேசி அவரை நேர்வழிப் படுத்துவார்களாக.

---------------------------------------

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பேரீச்சம் நாறினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே நபிகள் நாயகம் அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது.
நூல்: புகாரி - 6456.

அபூ புர்தா(ரஹ்) அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) எங்களிடம் ஒட்டுப் போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக் காட்டி, 'இதை உடுத்திக் கொண்டிருக்கும்போது தான் நபிகள் நாயகம் அவர்கள் மரணமடைந்தார்கள்" என்று கூறினார்கள்.
நூல்: புகாரி - 3108.

Monday, March 02, 2015

டாக்டர் ஜாகிர் நாயக் 'மன்னர் ஃபைஷல்' விருதைப் பெற்றுக்கொண்டார்!



பல கல்வி நிறுவனங்களை நடத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ள உலகமெங்கும் பயணித்து வரும் டாக்டர் ஜாகிர் நாயக்கை சவுதி அரேபியா கவுரவித்து அவருக்கு மன்னர் ஃபைஸல் விருதை வழங்கியது. 37 வது விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக் கிழமை விமரிசையாக நடந்தது. மன்னர் சல்மான் அவர்கள் இந்த விருதினை அனைவருக்கும் வழங்கினார்.

24 கேரட் தங்க மெடலும் 2 லட்சம் ரியாலும் பண முடிப்பாக வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. இஸ்லாமிய அழைப்புப் பணியை தொய்வின்றி செய்து வருவதனை கவுரவிக்கும் முகமாக இந்த விருதினை சவுதி அரசு அளித்துள்ளது. ஜாகிர் நாயக் பிறந்த சொந்த நாடு கவனிக்கா விட்டாலும் இவரின் அருமையை உணர்ந்த சவுதி அரசு கண்ணியப்படுத்தியுள்ளது. சவுதியின் இந்த செயலை நாம் பாராட்டுவோம்.

இறந்து போன 'மண்ணுருண்டை மாளவியா' வை எல்லாம் தேடி பிடித்து விருது வழங்கும் மோடி அரசு வருங்காலத்தில் ஜாகிர் நாயக் போன்ற வாழும் சாதனையாளர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள முயற்சிக்குமா? அந்த அளவு பரந்த மனப்பான்மையினை எல்லாம் இந்துத்வாவிடம் நாம் எதிர் பார்க கூடாது என்கிறீர்களா? அதுவும் சரிதான் :-)

டாக்டர் ஜாகிர் நாயக்கின் மாற்று மதத்தவருடனான கலந்துரையாடலை ரியாத்தில் இரண்டு முறை நேரிலேயே கேட்டுள்ளேன். எந்த புத்தகங்களின் உதவி இல்லாமல் இந்து இஸ்லாம் கிறித்தவ வேதங்களின் வசன எண் முதற்கொண்டு ஞாபகத்தில் வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துபவர். இறைவன் இவருக்கு உடல் நலத்தை கொடுத்து மேலும் பல்லாண்டு காலம் இறைப் பணியை தொடர்ந்து செய்ய நாமும் பிரார்த்திப்போம்.

This year’s award winners are Dr. Zakir Naik for Services to Islam, Dr. Abdulaziz Bin Abdulrahman Kaki for Islamic Studies, Prof. Jeffrey Ivan Gordon for Medicine, and Prof. Michael Grätzel and Prof. Omar Mwannes Yaghi, who were jointly recognized for Science.

No prize was awarded in the Arabic Language and Literature category this year.

Dr. Zakir Naik is the president of the Islamic Research Foundation in India and one of the world’s most renowned non-Arabic speaking Islamic scholars. He was awarded the KFIP for Services to Islam for a lifetime’s teaching about Islam, his work on comparative religion, and for founding the Peace Channel, the world’s comparative religion TV channel.

Winner of the Islamic Studies category is Dr. Abdulaziz Bin Abdulrahman Kaki, a consultant at Al-Madinah Al-Munawwarah Development Commission, who was recognized for his research on the cultural heritage of Madinah.

தகவல் உதவி
சவுதி கெஜட்
02-03-2015


Wednesday, February 04, 2015

"மன்னர் ஃபைஸல் விருது" - ஐந்து பேருக்கு அறிவிப்பு!



சவுதி அரேபிய அரசு 'மன்னர் ஃபைஸல்' விருதுக்கு ஐந்து நபர்களை தேர்ந்தெடுத்துள்ளது.

1. டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹ்மான் - இஸ்லாமிய படிப்புக்காக

2. ஜெஃப்ரி ஐவன் கார்டன் (வாஷிங்டன்) - மருத்துவ துறையில் சிறந்து விளங்கியமைக்காக...

3. மைக்கேல் க்ராட்ஸல் - அறிவியல் துறையில் சிறந்து பணியாற்றியதற்காக...

4. உமர் வான்ஸ் யாகி - அறிவியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக

5. டாக்டர் ஜாகிர் நாயக் - இஸ்லாமிய பணிகளுக்கு தன்னை அர்பணித்துக் கொண்டதற்காக...

ஒரு கோல்டு மெடல். அரபியில் கையால் எழுதப்பட்ட ஒரு சான்றிதழ். அன்பளிப்பாக பரிசு பெற்றவருக்கு 750000 சவுதி ரியால். இவை அனைத்தும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும். வருடா வருடம் இந்த விருது வழங்கப்படுகிறது.

விருது கிடைத்த அனைவரையும் நாமும் வாழ்த்துவோம்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
03-02-2015

Thursday, August 21, 2014

கண் மருத்துவரின் சந்தேகம் தீர்ந்தது!



சோப்ரா : எனது பெயர் சோப்ரா. நான் ஒரு கண் மருத்துவர். 1984 லிருந்து துபாயில் வேலை செய்து வருகிறேன். ஜாகிர் நாயக்கான உங்களின் சொற்பொழிவுகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். மிகவும் தர்க்க ரீதியான கேள்விகளுக்கும் அழகிய முறையில் பதில் அளிக்கும் உங்களின் சொற்பொழிவு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. எனது கேள்விக்கு வருகிறேன். கடவுள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்றால் மக்காவில் உள்ள கஃபா என்ற இடத்தில் மட்டும் இறைவன் இருப்பதாக நம்புவது முரண்பாடாக தெரிகிறதே? இதற்கான விளக்கம்?

ஜாகிர்நாயக்: தோழரே! நான் சொன்னதை நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள். இறைவன் இந்த பூமியின் மையத்தில் இருப்பதாக நான் சொல்லவில்லை. கஃபா என்ற கட்டிடம் உலகின் மையப் பகுதியில் இருப்பதாகத்தான் சொன்னேன். உலக முஸ்லிம்கள் ஒரே சீரான வணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக கஃபாவின் திசையை நோக்கி தொழுகிறோம். இது பற்றி குர்ஆனிலேயே இறைவன் மிகத் தெளிவாக சொல்லி விடுகிறான்.

'உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக இறைவன், இறுதி நாள், வானவர்கள், வேதம் மற்றும் நபிமார்களை நம்புவோரும், உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு மன விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே இறைவனை அஞ்சுபவர்கள்.'
-குர்ஆன் 2:177


இந்த வசனத்தின் மூலம் ஒரு திசையை நோக்கி தொழுது விடுவதால் மட்டுமே ஒருவனுக்கு நன்மையாகி விடாது. அவனது செயலில் மேலே குறிப்பிட்ட அனைத்தும் இருக்க வேண்டும். அவரே உண்மையாளர் என்கிறான் இறைவன். எனவே உலக ஒற்றுமைக்காக இந்த ஏற்பாட்டை செய்யப்பட்டதேயொழிய கடவுள் மெக்காவில் உள்ள கஃபாவில் இருக்கிறார் என்பது அதன் அர்த்தமல்ல. நான் சொன்னதை தவறாக விளங்கியுள்ளீர்கள்.

சோப்ரா: சீக்கியர்களின் புனித ஸ்தலமான அமிர்தஸரஸில் அனைவரும் அனுமதிக்கப்படும் போது மெக்காவில் முஸ்லிம்களைத் தவிர மற்ற யாரையும் அனுமதிப்பதில்லையே ஏன்?

ஜாகிர் நாயக்: அமிர்தசரஸ் பாதுகாப்பட்ட தூய்மைபடுத்தப்பட்ட பகுதியில் வரவில்லை. ஆனால் கஃபா வருகிறது. அங்குள்ள புல் பூண்டுகளைக் கூட முஸ்லிம்களே பிடுங்கக் கூடாது. வேட்டையாடுதலும் தடுக்கப்பட்டது. இது முஸ்லிம்களுக்கு நன்கு தெரியும். ஆனால் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லையாதலால் தவறுகள் நேர்ந்து விடும் என்பதற்காக அனுமதிப்பதில்லை. நீங்கள் உலகின் மற்ற எந்த பள்ளிகளுக்கும் வர பிரியப்பட்டால் நான் அழைத்துச் செல்கிறேன். துபாயில் உள்ள எந்த பள்ளிக்கும் நீங்கள் வர பிரியப்பட்டால் நான் அழைத்துச் செல்கிறேன். மெக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல வேண்டும் என்றால் அதற்குரிய விசாவைப் பெற வேண்டும். 'லாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் அதாவது இறைவன் ஒருவனைத் தவிர வேறில்லை: முகமது நபி அந்த இறைவனின் தூதராக உள்ளார்கள்' என்ற வாக்கியத்தை நீங்கள் நாவால் மொழிந்தால் அந்த விசா உங்களுக்கு கிடைத்து விடும்.

சோப்ரா: இவ்வாறு நான் சொல்லி விட்டால் என்னால் மெக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல முடியுமா?

ஜாகிர் நாயக்: ஆம்...... கண்டிப்பாக..... நான் முன்பு சொன்ன வார்த்தைகளை சொல்கிறீர்களா?

சோப்ரா: மற்றவர்கள் சொன்னதையும் பார்த்தேன். அந்த வார்த்தைகளை சொல்வதில் எந்த ஆட்சேபணையும் எனக்கு இல்லை.

ஜாகிர் நாயக்: வாயால் சொல்வது மாத்திரம் அல்ல. அந்த நம்பிக்கை உங்கள் மனதில் வர வேண்டும். அத்தகைய நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

சோப்ரா: ஒரு உண்மையை நம்புவதில் தயக்கமில்லை. நான் நம்புகிறேன்.

(பலத்த கரகோஷம்)

ஜாகிர் நாயக்: இறைவன் ஒருவன் என்பதை நம்புகிறீர்களா?

சோப்ரா: ஆம். கண்டிப்பாக....

ஜாகிர் நாயக்: முகமது நபி அந்த இறைவனின் தூதுவர் என்பதையும் ஒத்துக் கொள்கிறீர்களா?

சோப்ரா: ஆம்.... அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

ஜாகிர் நாயக்: இதை உளப்பூர்வமாக ஒத்துக் கொண்டு விட்டீர்கள் என்றால் நீங்கள் ஒரு முஸ்லிம். மெக்காவுக்கும் மதினாவுக்கும் செல்வதற்கு உங்களை யாரும் இனி தடுக்க முடியாது.

சோப்ரா: நான் உளப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன்.

(பலத்த கரகோஷம்)

ஜாகிர் நாயக்: வாழ்த்துக்கள் நண்பரே! அந்த உறுதி மொழியை அரபியிலும் ஆங்கிலத்திலும் சொல்கிறேன். அதனை திருப்பி சொல்லுங்கள்.

(அந்த உறுதி மொழியை ஜாகிர்நாயக் சொல்ல சகோதரர் சோப்ராவும் அதனை திரும்ப சொல்லி இஸ்லாமிய வட்டத்துக்குள் நுழைகிறார். எல்லா புகழும் இறைவனுக்கே!)

ஜாகிர் நாயக்: சகோதரர் சோப்ரா! நீங்கள் மெக்கவுக்கு சென்று வர நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன்.

சோப்ரா: நன்றி, உங்களின் இந்த செய்தியானது என்னைப் போன்று அறியாமையில் சிக்கியிருக்கும் பல கோடி மக்களையும் சென்றடைய வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரரே!

Wednesday, January 29, 2014

ஜாகிர் நாயக் நாளை ரியாத் வருகை! மறக்க வேண்டாம்!





நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

இறைவன் நாடினால் எதிர்வரும் 30ம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் சொற்பொழிவு சவுதி தலைநகர் ரியாத்தில் நடைபெற உள்ளது.

சகோதர சகோதரிகள் தவறாமல் கலந்து பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

முஸ்லிம் அல்லாத நண்பர்களையும் உடன் அழைத்து வரவும்.

இடம்: மன்னர் ஃபகத் கலாச்சார மையம்,ரியாத்,

நாள்: 30/01/2014 வியாழக்கிழமை

வரைபடம் இணைப்பில் உள்ளது.


Friday, January 10, 2014

ஜாகிர் நாயக் மறுபடியும் ரியாத் வருகை!





நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

இறைவன் நாடினால் எதிர்வரும் 30ம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் சொற்பொழிவு சவுதி தலைநகர் ரியாத்தில் நடைபெற உள்ளது.

சகோதர சகோதரிகள் தவறாமல் கலந்து பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

முஸ்லிம் அல்லாத நண்பர்களையும் உடன் அழைத்து வரவும்.

இடம்: மன்னர் ஃபகத் கலாச்சார மையம்,ரியாத்,

நாள்: 30/01/2014 வியாழக்கிழமை

வரைபடம் இணைப்பில் உள்ளது.

Friday, October 19, 2012

பரிணாமவியலை கேள்வி கேட்டால் ஜாகிர்நாயக் பதிலாகி விடுமா!

பரிணாமவியலை கேள்வி கேட்டால் ஜாகிர்நாயக் பதிலாகி விடுமா!

குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள இடைப்பட்ட படிமங்களின் ஆதாரத்தை விளக்கி இனி பதிவுகள் எழுதப் போகிறேன் என்று சில நாள் முன்பு சார்வாகன் சொன்னார். நானும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தால் அதைப் பற்றிய அறிவிப்பு எதையும் காணோம். ஆனால் சம்பந்தமில்லாமல் ஜாகிர் நாயக்கையும் பிஜேயையும் சம்பந்தப்படுத்தி காமெடி செய்து பரிணாமவியலின் தவறை மறைக்க பார்க்கும் தந்திரத்தை தற்போது செய்து வருகிறார். சரி அதிலாவது தனது தரப்பு வாதம் நிற்கும்படியான செய்திகளைத் தரப்படாதோ? இனி சார்வாகன் சொல்வதைக் கேட்போம்.

//ஜாகிர நாயக் மீது இபோது முஸ்லிம்களே ஒத்துக் கொள்ளும் இருகுற்றச்சாட்டுகள் உண்டு.
1.குரான் 79.30ல் டஹாஹ என்னும் அரபி சொல்லுக்கு இலாத த்வறான பொருள் நெருப்புக் கோழி முட்டை என்று சொல்லி உலகம் நெருப்புக் கோழி முட்டை போல் இருக்கிறது என பொய் சொன்னார்.
http://satyagni.com/science-zakir/

zakir Naik says:
The earth is not exactly round like a ball, but geo-spherical i.e. it is flattened at the poles. The following verse contains a description of the earth’s shape “And the earth, moreover, Hath He made egg shaped.” [Al-Qur'aan 79:30]
The Arabic word for egg here is dahaha, which means an ostrich-egg. The shape of an ostrich-egg resembles the geo-spherical shape of the earth. Thus the Qur’aan correctly describes the shape of the earth, though the prevalent notion when the Qur’aan was revealed was that the earth is flat// - சார்வாகன்!

இது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

'பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்.'
-குர்ஆன் 51:48

'இதன் பின்னர் பூமியை விரித்தான்'
-குர்ஆன் 79:30

'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு 'விரித்தல்' என்ற ரீதியில் பொருள் கொள்வதுதான் அரபு இலக்கணத்தின் படி சரியாகும். ஜாகிர் நாயக்கும் இதை ஒத்துக் கொள்கிறார்.

மேலதிக விபரமாக தனது சொந்த விளக்கமாகத்தான் 'முட்டை' வடிவிலானது என்ற கருத்தை வைக்கிறார் ஜாகிர் நாயக். இவர் ஒரு டாக்டர். அறிவியல் அறிஞர் கிடையாது. எனவே இவரது கருத்தில் தவறும் இருக்கலாம்.

'சார்பியல்' தத்துவத்தை சொன்னபோது ஐன்ஸ்டீனே தவறிழைக்கவில்லையா? 1923 இல் ஐன்ஸ்டைன் மாறாத பிரபஞ்சத்தைப் பற்றி எழுதியதைத் 'தான் செய்த மாபெரும் தவறு ' என்று ஒப்புக் கொண்டார்! அலெக்ஸாண்டர் ஃபிரைட்மன் கருத்தை ஏற்றுக் கொண்டு விரியும் பிரபஞ்சக் கோட்பாடைப் பிரதி பலிக்க, ஐன்ஸ்டைன் தன் சமன்பாடுகளைத் திருத்தி எழுதினார்!

ஆக.. ஐன்ஸ்டீனுக்குக் கூட ஆராய்ச்சியில் தவறு மனிதன் என்ற முறையில் வரலாம். ஜாகிர் நாயக்குக்கும் வரலாம். பிஜேக்கு கூட வரலாம். ஆனால் இறை வேதத்தில் வராது.

'பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோள்களும் நமது பூமி உட்பட உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.

இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று கூறுகிறான்.. விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா!

'பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ' என்று புன்னகை புரிகிறார், ஹாக்கிங்!

நான் போன பதிவில் கூறியது போல் ஆய்வுகளில் தவறுகள் வரலாம் அது இயற்கை. அதுதான் ஜாகிர் நாயக்கிடம் நடந்தது. ஆனால் பரிணாமவியலை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக மனிதனின் மண்டை ஓட்டையும் குரங்கின் தாடையையும் ஒட்ட வைத்து பற்களுக்கு சாயங்களை பூசி 40 வருடம் அறிவியல் உலகை ஏமாற்றியிருக்கின்றனர் பரிணாமவியலார். ஒரு சாதாரண படிப்பறிவில்லாதவனை ஈஸியாக புரியாத மொழியில் பேசி சம்மதிக்க வைத்து விடலாம். ஆனால் ஒரு ஆய்வுக் கூடத்தில் அறிவியல் அறிஞரகள் நிறைந்த சபையில் 40 வருடம் இதை மறைக்க வேண்டும் என்றால் ஒரு பெரும் குழுவே வேலை செய்திருக்க வேண்டும். புதிய படிமங்கள் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் பரிணாமவியல் உண்மைதான் என்று இன்று வரை சாதித்துக் கொண்டிருப்பர்.

http://en.wikipedia.org/wiki/Ultimate_fate_of_the_universe
http://simple.wikipedia.org/wiki/A_Brief_History_of_Time

------------------------------------------------------

//2. ஜாகிர் நாயக், பி.ஜேவின் " இயேசு இறைமகான என்னும் புத்த்கத்தை அப்படியே த்னது சொந்த சரக்காக் பி.ஜே விடம் அனௌமதி பெறாமல் ஆங்கிலத்தில் எழுதி விட்டார்

இப்போது ஜாகிர் நாயக்கின் மோசடிகள், தவறால் குரான் தவறாகி விடும் என்றால், பில்ட் டௌன் மோசடியால் பரிணாமமும் த்வறாகி விடலாம்
நன்றி//- சார்வாகன்

பி.ஜே யின் புத்தகத்தை அனுமதி பெறாமல் ஜாகிர் நாயக் ஆங்கிலத்தில் மொழி பெய்ர்த்தால் அது அவர்கள் இருவருக்குமிடையில் உள்ள காப்பீட்டு பிரச்னை. பிஜே தனது பதிவுகளை இவ்வாறு காப்பி செய்தால் அதை அதிகம் பெரிதுபடுத்துவதும் இல்லை. சவுதி அரசே கூட பிஜேயின் பல புத்தகங்களை அரபியிலும் ஆங்கிலத்திலும் இன்னும் உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்துள்ளது. அதற்கு கூட எந்த பிரதிபலனையும் எதிர் பாராமல் இலவசமாகவே மொழி பெயர்க்க அனுமதி கொடுத்தார். ஜாகிர் நாயக் ஏசுவின் வாழ்வை தவறாக விமர்சித்து இருந்தால்தான் அல்லது பொய் சொல்லியிருந்தால்தான் அதை பிரச்னையாக்க முடியும்.

இதனால் பில்ட் டவுன் மோசடியை நியாயப்படுத்தப் பார்க்கிறார். என்ன ஆனது உங்களுக்கு சார்வாகன் உரிக்க உரிக்க வெங்காயம் போல் சென்று கொண்டிருக்கிறதே உங்கள் அனைத்து வாதங்களும்? :-)

---------------------------------------------------------

பிரபஞ்சம் விரிவடைதலைப் பற்றி நான் முன்பு இட்ட பதிவை மேலதிக விபரமாக தருகிறேன்.

பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது உண்மையா?

இதன் பின்னர் பூமியை விரித்தான்'
-குர்ஆன் 79:30

'வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்: நிச்சயமாக நாம் அதை விரிவாக்கம் செய்பவராவோம்.'
-குர்ஆன் 51:47

'பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்.'
-குர்ஆன் 51:48

பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
-குர்ஆன் 15:19



மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
-குர்ஆன் 13:3

இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.

-குர்ஆன் 55:10


'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு தஹ்வு என்ற சொல்லுக்கு விரித்தல் என்ற பொருள் வரும்.

நாம் அமரும் பாயை சுருட்டுங்கள் என்கிறோம். பாயை விரியுங்கள் என்கிறோம். இங்கு சுருக்கப்பட்ட பொருள் விரிவடையும்போது என்ன வார்த்தையை பயன்படுத்துகிறோமோ அதே வார்த்தையை கொண்டு பூமியையும் இறைவன் கையாள்கிறான்.




பல காலமாகவே இந்த பிரபஞ்சம் நிலையான ஒன்று என்றுதான் அறிவியலார் கூறி வந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ரஷ்ய இயற்பியல் விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃபிரைட்மேனும் பெல்ஜிய விஞ்ஞானி லேமைட்ரீயும் பிரபஞ்சத்தின் விரிவடைதலை கண்டறிந்தனர். இந்த உண்மை 1929ல் தொலைநோக்கி சோதனை மூலம் விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபிக்கப்பட்டது. மேலும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஒன்றை யொன்று விலகிச் செல்வதையும் தனது சோதனையில் கண்டறிந்தார் ஹப்பிள்.

பிரபஞ்சம் விரிவடைவது சம்பந்தமாக மூன்று அமெரிக்கர்கள் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டனர். அதன் காணொளியைப் பார்ப்போம்.



உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.
இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆனில் கூறுகிறான். விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா
!


முன்பு பூமியில் இருந்த நிலப்பரப்பு அனைத்தும் ஒன்றாகவே இருந்தன. பூமியானது விரியத் தொடங்கியவுடன் ஒன்றாக இருந்த நிலப்பரப்புகள் கண்டங்களாகவும், நாடுகளாகவும், தீவுக் கூட்டங்களாகவும் பிரிகின்றன. இதனை இந்த காணொளி அழகாக விவரிக்கிறது.



ஹாக்கிங் கூறுகிறார்:

'இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒருவர் கூட பேரண்டம் விரிந்து செல்கிறது அல்லது சுருங்கி வருகிறது எனும் கருத்தைத் தெரிவிக்கவில்லை. பேரண்டம் மாற்றமே இன்றி நாம் காண்பது போலவே எக்காலமும் இருந்திருக்கிறது என்றே பலரும் நம்பி வந்தனர். பெரும்பாலான மக்களின் மன நிலையும் இதை ஒட்டியே அமைந்திருந்ததும் காரணமாக இருக்கலாம்.'

-எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (பக்கம் 6)

“The discovery that the universe is expanding was one of the great intellectual revolutions of the 20th century.
(பேரண்டம் விரிவடைகிறது எனும் இக்கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகும்)
(அதே புத்தகம் பக்கம் 42)



உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் கூட பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற செய்தியை அறிந்திருக்கவில்லை. அது பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு எழவில்லை. இது போன்ற ஒரு வார்த்தைப் பிரயோகத்தை முகமது நபி என்ற ஒரு மனிதரால் சொல்லியிருக்க முடியுமா? என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். படிப்பறிவற்ற அந்த சமூகத்தையும் தனது தாய் மொழியையே எழுத படிக்க தெரியாத முகமது நபியையும் இங்கு நாம் நினைவில் நிறுத்தி பார்க்க வேண்டும். இந்த உண்மைகளை ஆராய்ந்தால் குர்ஆனின் வார்த்தைகள் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் என்ற முடிவுக்கே வருவோம்.

மேலும் விபரங்கள் அறிய...
http://en.wikipedia.org/wiki/Universe


Friday, January 06, 2012

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? -ஃபாரிக் நாயக்

நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான ஜாகிர்நாயக்கின் மகன் ஃபாரிக் நாயக் தனது தந்தையைப் போலவே அழைப்புப் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார். தந்தையைப் போலவே மனனத்தில் சிறந்து விளங்குகிறார். பல வேதங்களின் அதிகாரங்களையும் இந்த வயதிலேயே மனனமிட்டு எந்த மேடை பயமும் இல்லாமல் பிரசங்கம் பண்ணுவது எல்லோருக்கும் வந்து விடக் கூடியது அல்ல. இறைவன் இவரைப் போல பல இளைஞர்களை உருவாக்கி அவனது மார்க்கத்தை நிலை நிறுத்துவானாக!



ருஷ்தா நாயக்! ஜாகிர் நாயக்கின் மற்றொரு மகளும் மார்க்க அழைப்புப் பணியில் அதிகம் ஆர்வம் உடையவராக உள்ளார். இறைவன் கொடுத்த ஒரு மகனையும் ஒரு மகளையும் மறுமையில் கிடைக்கும் நன்மைக்காக அழைப்புப் பணியில் ஈடுபடுத்த விரும்பும் ஜாகிர்நாயக் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி. ருஷ்தா நாயக்கின் பேச்சையும் கேளுங்கள்.




காலைப் பத்திரிக்கை யில் வந்த பழைய செய்தி:

//70 வயதான கலீல் அஹமது என்ற பெரியவர் சென்னைக் கூடுவாஞ்சேரி மெயின் ரோடில் உள்ள காட்டுச் செடிகள் ஓரத்தில் அவருடைய மகன்களால் காரில் கொண்டு வரப்பட்டு அனாதையாக தள்ளப்பட்டார். ஒட்டிய வயிறும், மெலிந்த தேகமும் கொண்ட அவரைக்கண்ட அந்த வழியாகச் சென்ற இரக்கக் குணம் கொண்ட சிலர் தின்பதற்காக தின்பண்டங்களை அவர் அருகில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

அதனைக்கூட அவர் எடுக்கக்கூடிய திராணியில்லை. அதனை தெருநாய்கள் சாப்பிட்டதாகவும், அந்த பரிதாப நிலையினைப் பார்த்த சிலர் அருகில் இருந்த காவல் துறையினரை அனுகியதாகவும். அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லையென்றும், ஆகவே காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டருக்கு செல்ஃபோனில் தகவல் சொன்னதாகவும், அவர் தாசில்தாரை அனுப்பி மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாகவும், ஆனால் அந்த முதியவர் எவ்வளவோ அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் அவரை அனாதையாக விட்டுச் சென்ற மகன்கள் பெயர்களைச் சொல்லத் தயாராகவில்லை என்றும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.. //

தான் துன்பப்பட்டாலும் தன்னை நடுத் தெருவில் அனாதையாக விட்ட பிள்ளைகளைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை என்று அறியும் போது அவரது பிள்ளைப்பாசத்தின் அழுத்தம் நமக்கு தெரிகிறதல்லவா? இது போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடக்க என்ன காரணம்?

தற்காலங்களில் பிள்ளைகளை படிக்க வைக்க நிறைய செலவு செய்கிறோம். இதில் தவறில்லை. ஆனால் அந்த பிள்ளைக்கு சிறு வயதிலேயே மார்க்க கல்வியை முறையாக கற்றுத் தர தவறி விடுகிறோம். இங்குதான் தவறு நடககிறது. வளரும் குழந்தை இஸ்லாமிய வாழ்வு முறையையும் மறுமையின் பயத்தையும் சுமந்தவனாக வளர்ந்தால் இரு உலகிலும் வெற்றி பெற்றவனாகிறான். தனது பெற்றோரை கவனிக்காமல் விட்டால் நாளை மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டி வரும் என்ற பயம் அந்த பிள்ளைகளுக்கு இருந்திருந்தால் இப்படி அந்த முதியவரை அநாதையாக எறிந்து விட்டு சென்றிருக்க மாட்டார்கள்.

மார்க்கத்தை சொல்லிக் கொடுக்கும் தற்கால மதரஸாக்களும் குர்ஆனையும் ஹதீஸையும் சொல்லித் தராமல் மொகலாயர் காலத்து சட்டங்களை மத்ஹப் என்ற பெயரிலே சொல்லித் தருகின்றனர். இந்த கல்வியினால் அந்த மாணவனுக்கு எந்த பயனும் இல்லை. குர்ஆனையும் ஹதீஸையும் நமது வீட்டிலேயே ஒரு உஸ்தாதை வைத்து பாடம் எடுக்கலாம். தேவையில்லாத வற்றிற்கெல்லாம் எவ்வளவோ செலவு செய்யும் நாம் மறுமையிலும் வெற்றியைத் தரக் கூடிய மார்க்கக் கல்விக்கு சில ஆயிரங்கள் செலவழிப்பதைப் பற்றி யோசிக்கிறோம். தமிழகததில் ஊருக்கு இரண்டு அரபி மத்ரஸாக்கள் நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவற்றால் இஸ்லாத்துக்கோ அல்லது உலகக் கல்விக்கோ எந்த பயனையும் இதுவரை தரவில்லை. எங்கள் ஊரில் மட்டும் ஐந்து மதரஸாக்கள் உள்ளன. ஆனால் இந்த மதரஸாக்களில் எங்கள் ஊர் பிள்ளைகள் ஒருவரும் படிக்கவில்லை. படிப்பது அனைவரும் ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்தது மக்களே!! உள்ளூர் பிள்ளைகள் அனைவரும் படிப்பது மெட்ரிகுலேசன் பள்ளிகள். அந்த அளவு தரத்தில் இருக்கிறது நமது மதரஸாக்கள்.

முழு பாடததிட்டங்களையும் இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும். சவுதி அரேபியா இதில் முழு வெற்றி அடைநதுள்ளது. பி.ஜெய்னுலர்லாபுதீன், ஜாகிர்நாயக், கே.வி.எஸ் ஹபீப் முகமமது, போன்ற அறிஞர்களின் வழி காட்டுதலில் பாடத் திட்டங்களை வகுககலாம்.

நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான ஜாகிர் நாயக்கின் மகனும் மகளும் இஸ்லாத்தை எத்தி வைக்கும் தாவா பணியில் தற்போது எவ்வாறு சிறந்து விளங்குகின்றனர் என்பதை நாம் பார்த்தோம். அவரைப் போலவும் அவரது குழந்தைகளைப் போலவும் உலகக் கல்வியையும் மார்க்கக் கல்வியையும் ஒருங்கே பெற்ற நன் மக்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கி அருள்புரிவானாக!

'யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்துக்குச் செல்லும் பாதையை இறைவன் எளிதாக்குகிறான்' என்று முகமது நபி அவர்கள் கூறினார்கள்.

ஆதார நூல் முஸ்லிம் (5231)