Followers

Saturday, July 12, 2014

நிர்வாண சாமியாரை நேர் படுத்திய சர்தார்ஜி!



மத நம்பிக்கை என்பது மற்றவர்களை சங்கடப்படுத்தாமல் இருக்க வேண்டும். நிர்வாணமாக பொது வெளிகளில் நடந்தால் அங்கு எத்தனை பெண்கள் மற்றும் சிறுவர்கள் வருவார்கள். அவர்கள் மனதும் எவ்வளவு சங்கடப்படும். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இவ்வாறு உடை இல்லாமல் வெளியில் வந்தால் பார்க்கும் வெளி நாட்டுக் காரர்கள் நமது நாட்டைப் பற்றி என்ன நினைப்பர். சர்தார்ஜிகள் செய்ததை நான் ஆதரிக்கிறேன்.

ஆனால் அதற்காக அவர்கள் அந்த சாமியாரை அடித்தது கண்டிக்கத் தக்கது. உடையை உடுத்த விட்டு இனி இவ்வாறு நடக்காதே என்று கண்டித்து விட்டிருக்கலாம். மன்னிப்பு கேட்டு தலையை கீழே வைத்தவரை காலால் எட்டி உதைத்தது கண்டிக்கத்தக்கது. நமது அறிவுரையை பயத்தினால் அவருக்கு வர வழைப்பதை விட அன்பினால் அழகிய சொற்பொழிவினால் வர வழைத்திருக்கலாம்.

இந்து மதத்தைக் காக்க புறப்பட்டிருப்பதாக சொல்லும் நரேந்தி மோடி இது விஷயத்தில் கவனத்தை ஏற்படுத்தி இது போன்ற நிர்வாண சாமியார்களின் நகர் வலத்தை தடுக்க முனைவாராக!

No comments: