Followers

Thursday, July 17, 2014

இஸ்லாம் பிரிவுகளை அங்கீகரிக்கிறதா?

திரு முரளிதரன்!

// சுவனப்ரியன் அவர்களே!

மேலும் உங்களுக்கு ஒரு கேள்வி ஒரு மனிதன் பிற மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறி வந்தால் அவரை எந்த பிரிவு மனிதராக ஏற்று கொள்வீர்கள். ஷியாவாகவா? , சுன்னியாகவா?, அஹ்மதியாகவா?, .அல்லது உட்பிரிவுகளான ராவுத்தராகவா?. மறைக்காயராகவா ?, பட்டாணியாகவா? லப்பையாகவா?.
என்றெண்டும் அன்புடன்,
பா. முரளி தரன்.//


குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பிலும் வந்து வெகு நாட்களாகிறது. குர்ஆனின் சட்டங்கள் தான் ஒரு முஸ்லிமைக் கட்டுப்படுத்தும். அந்த குர்ஆன் முழுக்க நீங்கள் தேடினாலும் அதில் ஷியா, என்றோ, சுன்னிகள் என்றோ, ராவுத்தர் என்றோ, பட்டாணி என்றோ ஒரு வார்த்தையையும் பார்க்க முடியாது. ஏனெனில் முகமது நபிக்கு அருளப்பட்ட இந்த வேதத்தில் அன்றைய சமூகத்தில் இது போன்ற எந்த பிரிவுகளும் இல்லை. அனைவரும் இஸ்லாமியர்கள் என்ற வட்டத்துக்குள் வந்து விடுவர்.

இஸ்லாத்தின் வளர்ச்சியை அரபு நாடுகளில் தடுக்க நினைத்த யூதர்கள் முஸ்லிம்களாக மதம் மாறுவதாக நடித்து அன்றைய ஈராக்கில் பல வதந்திகளை பரப்பி விட்டனர். ஊடக வசதி இல்லாத அந்த காலத்தில் எகிப்திலிருந்து வந்த ஒரு யூத குழு இஸ்லாமிய போர்வையில் பல குழப்பங்களை ஏற்படுத்தினர். இதற்கு நமது நாட்டு பார்பனர்களும் அன்று உடந்தையாக இருந்தனர். 'ஹுசைனி பிராமணர்கள்' என்று இன்றும் அறியப்படுபவர்கள் அவர்கள். இந்த கூட்டு சதியினால் உருவானதே ஷியா என்ற பிரிவு. ஷியா பிரிவு முஸ்லிம்களை சுப்ரமணியம் சுவாமி வானளாவப் புகழ்வதும் இதற்காகத்தான். பிற்கால முஸ்லிம்களும் அந்த மாய வலையில் அறியாமையால் வீழ்ந்து விட்டனர்.

எனவே புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர் இஸ்லாமியர் என்றுதான் பார்க்கப்படுவார். நீங்கள் குறிப்பிடும் எந்த பிரிவுகளிலும் வர மாட்டார். உங்களுக்கு பரிச்சயமான ஏ ஆர் ரஹ்மனோ, யுவன் சங்கர் ராஜாவோ, நடிகை மோனிகாவோ, பெரியார் தாசனோ முஸ்லிம்களாகத்தான் அறியப்படுகின்றனர். நீங்கள் குறிப்பிட்ட எந்த பிரிவுகளிலும் அவர்கள் இல்லை. ஏனெனில் குர்ஆன் பிரிவுகளை அங்கீகரிக்கவில்லை.

3 comments:

ஆனந்த் சாகர் said...

//இஸ்லாத்தின் வளர்ச்சியை அரபு நாடுகளில் தடுக்க நினைத்த யூதர்கள் முஸ்லிம்களாக மதம் மாறுவதாக நடித்து அன்றைய ஈராக்கில் பல வதந்திகளை பரப்பி விட்டனர். ஊடக வசதி இல்லாத அந்த காலத்தில் எகிப்திலிருந்து வந்த ஒரு யூத குழு இஸ்லாமிய போர்வையில் பல குழப்பங்களை ஏற்படுத்தினர். இதற்கு நமது நாட்டு பார்பனர்களும் அன்று உடந்தையாக இருந்தனர். 'ஹுசைனி பிராமணர்கள்' என்று இன்றும் அறியப்படுபவர்கள் அவர்கள். இந்த கூட்டு சதியினால் உருவானதே ஷியா என்ற பிரிவு.//

இது முழுக்க முழுக்க பொய். பொய்யை தவிர வேறெதுவும் இல்லை. இஸ்லாமிய வரலாறை படிக்காத பாமர மக்களை ஏமாற்ற சுவனப்பிரியன் செய்யும் மோசடி பொய் பிரசாரம் இது. அவரின் பதிவுகள் அனைத்தும் இப்படிப்பட்ட பொய் புனைவுகளே. மேற்கண்ட பொய்யும் அந்த வகையை சார்ந்ததே.

ஆனந்த் சாகர் said...

//அந்த குர்ஆன் முழுக்க நீங்கள் தேடினாலும் அதில் ஷியா, என்றோ, சுன்னிகள் என்றோ, ராவுத்தர் என்றோ, பட்டாணி என்றோ ஒரு வார்த்தையையும் பார்க்க முடியாது. ஏனெனில் முகமது நபிக்கு அருளப்பட்ட இந்த வேதத்தில் அன்றைய சமூகத்தில் இது போன்ற எந்த பிரிவுகளும் இல்லை. அனைவரும் இஸ்லாமியர்கள் என்ற வட்டத்துக்குள் வந்து விடுவர்.//

இப்படிதான் ஹிந்துக்கள் மத்தியில் உள்ள ஜாதி பெயர்களும் ஹிந்து வேத நூகளில் கூறப்படவில்லை. அவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்ற வட்டத்துக்குள் வந்து விடுவர்.

ஆனந்த் சாகர் said...

//எனவே புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர் இஸ்லாமியர் என்றுதான் பார்க்கப்படுவார். நீங்கள் குறிப்பிடும் எந்த பிரிவுகளிலும் வர மாட்டார். உங்களுக்கு பரிச்சயமான ஏ ஆர் ரஹ்மனோ, யுவன் சங்கர் ராஜாவோ, நடிகை மோனிகாவோ, பெரியார் தாசனோ முஸ்லிம்களாகத்தான் அறியப்படுகின்றனர். நீங்கள் குறிப்பிட்ட எந்த பிரிவுகளிலும் அவர்கள் இல்லை. ஏனெனில் குர்ஆன் பிரிவுகளை அங்கீகரிக்கவில்லை. //

இதுவும் பச்சை பொய். எந்த ஒரு முஸ்லிமும், புதிதாக முஸ்லிமாக மாறியவரும் ஏதாவது ஒரு இஸ்லாமிய பிரிவு ஒன்றின் மூலமே அறியப்படுகிறார். அவர் சுன்னியாகவோ ஷியாவாகவோ அஹ்மதியாகவோ இஸ்மாயிலாகவோ போஹ்ராவாகவோ பஹ்லவியாகவோ மட்டுமே பார்க்கப்படுகிறார். இதுதான் நிதர்சனம். இது இஸ்லாம் இருக்கும்வரை தொடரும்.