Followers

Sunday, March 01, 2020

இஸ்லாமும் கிறுத்துவமும் இல்லை எனில் மனுதர்மம் தலைவிரித்தாடும்

//ஆரியர்கள் தான் வந்தேறிகள் முஸ்லிம்கள் பூர்வ குடிகள் இந்துப் பெண்களின் மானம் காத்து மகுடம் ஏற்றியவர் திப்பு சுல்தான்
இஸ்லாமும் கிறுத்துவமும் இல்லை எனில் மனுதர்மம் தலைவிரித்தாடும்//
இதனை கூறுபவர் இந்து மதத்தை உண்மையாக பின்பற்றும் அய்யா வழி பால பிரஜாபதி.
இவரது கருத்தில் முற்றிலும் நான் உடன் படுகிறேன். ஏனெனில் பார்பனியம் தனது வாலை சுருட்டிக் கொண்டு சற்று பட்டும் படாமலும் செல்வதன் காரணமே தலித்களும் மற்ற பிற்படுத்தப்பட்ட இந்துக்களும் தீண்டாமை கொடுமை தாங்காமல் இஸ்லாத்துக்கு ஓடி விடுவார்கள் என்ற பயத்தினால்தான். தலித்களும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாத்தை நோக்கி ஓடி விட்டால் இந்தியாவில் இஸ்லாம் பெரும்பான்மை மதமாகி விடும். அப்போது வழக்கம் போல் பார்பனிய ஆதிக்கம் துடைத்தெறியப்படும். இந் நிலை வராமல் தடுக்கத்தான் குடியுரிமை சட்டம்.
நேரிடையாக இஸ்லாத்தை எதிர்த்தால் பிரச்னையாகி விடும் என்பதால் மூன்று நாட்டு மக்களுக்கு மட்டும் முஸ்லிம்களைத் தவிர அனைவருக்கும் குடியுரிமை என்ற போர்வையில் நுழைகிறது பார்பனியம்.
அமித்ஷாவுக்கும் முஸ்லிம்களுக்கும் வாய்க்கா வரப்பு  தகராறா என்ன? ஒன்றுமில்லை. இன்று இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று கூடி "பார்பனியத்தை ஏற்றுக் கொள்கிறோம். பார்பனிய கலாசாரத்தையும் ஏற்றுக் கொள்கிறோம். முஸ்லிம்களாகவும் இருந்து கொள்கிறோம். கல்வி, வேலை வாய்ப்புகளில் எந்த பங்கும் கேட்க மாட்டோம். கூலி தொழிலாளிகளாக வாழ்ந்து கொள்கிறோம்" என்று பிரகடப்படுத்தினால் முஸ்லிம்கள் தேசம் காப்பவர்கள் என்று அமித்ஷாவே முழங்குவார்.
முஸ்லிம்கள் அந்த நிலைக்கு போகப் போவதுமில்லை. உலக முடிவு நாள் வரையில் அமித்ஷாக்களோடு (ஃப்ரவுன்களோடு) நடக்கும் போராட்டமும் நிற்கப் போவதில்லை.


No comments: