Followers

Sunday, March 15, 2020

சீன கம்யூனிஷ அரசு இஸ்லாத்தை ஒழிக்க பெரும் கேம்ப்களை...

சீன கம்யூனிஷ அரசு இஸ்லாத்தை ஒழிக்க பெரும் கேம்ப்களை கட்டி அங்கு முஸ்லிம்களை சித்திரவதை செய்கிறது. கம்யூனிஷ சித்தாந்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துகிறது. உய்குர் முஸ்லிம்கள் சொல்லொணா துயரத்தை தினமும் அனுபவித்து வருகின்றனர். பலர் இந்த முகாம்களிலேயே இறந்தும் விடுகின்றனர். அந்த மக்களிடம் இருந்து இஸ்லாத்தை துளியும் அசைத்துப் பார்க்கக் கூட கம்யூனிஷ அரசால் முடியவில்லை.
மாறாக பல சீனர்கள் தாங்களாகவே முன் வந்து இஸ்லாத்தை ஏற்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பிறகு தாங்கள் பெற்ற இன்பத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு இஸ்லாத்தை போதிக்கும் அழைப்புப் பணியையும் இன்முகத்தோடு செய்கின்றனர். சீன அரசு எதிர்பார்த்ததற்கு மாற்றமாக பல சீனர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அதைத்தான் இந்த காணொளியில் காண்கிறோம்.
சீனாவைப் போலவே அகதி முகாம்களில் முஸ்லிம்களை அடைக்க மோடியும் அமித்ஷாவும் பல தந்திரங்களை செய்து வருகின்றனர். சீன அரசைப் போலவே இவர்களும் தோல்வியையே தழுவப் போகிறார்கள். அதனை வருங்கால இந்திய வரலாறு நமக்கு உணர்த்தும்.
ஆக்கம்
சுவனப்பிரியன்


2 comments:

Dr.Anburaj said...

சீனாவில் உள்ள குடிமக்கள் அனைவரும் சிந்தனை அணுகுமுறை பழக்கவழக்கம் ஆகியற்றின் அடிப்படையில் சீனார்களாக இருக்க வேண்டும் என்று அரசு உறுதியாக இருக்கின்றது. அதுதான் நியாயம்.

சீன மண்ணில் குடிமகனாக வாழ்ந்து கொண்டு
அரேபியனாக இருந்தால்

அவன் எப்படி சீனாவிற்கு விசுவாசமாக இருப்பான். இருக்கவில்லை.அவனால் குழப்பம்தான் மிஞ்சுகிறது. அதனால் சீன அரசு அரேபியனாக வாழும் சீனா்களை திருத்த ஆவன செய்கிறது.
சரியான நடவடிக்கை.
தங்களின் வீடியோ பழைய காலத்தது. இன்றுள்ள உ்ண்மையை பிரதிபலிக்கவில்லை.

Dr.Anburaj said...

புகாரிV4B 52 N 72 Anas bin Malik
சொர்க்கம் புகுந்தவா் மீண்டும் மண்ணுலகிற்கு வர மாட்டாா்கள். ஆனால் ஒரு முஹாகிதீன் விதிவிலக்கு. அல்லாவின் பாராட்டு அவனுக்க கிடைக்கும் .எனவே பத்து முறை கூட பிறந்து வீரமரணம் அடையக் கூடும்.
------------------------
மறுபிறவியில் இசுலாம் நம்பிக்கை வைக்கின்றது.10 முறை வீரமரணம் ....என்கிறதே...