Followers

Tuesday, March 03, 2020

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா?

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

எதுவாக இருப்பினும், வருமுன் காப்பதே சிறந்தது என்னும் பழமொழிக்கேற்ப, நம்மை கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கு அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் சற்று அதிக கவனம் செலுத்தினால், எப்பேற்பட்ட நோயும் நம்மை அண்டாமல் தடுக்கலாம். முக்கியமாக ஆன்டி-வைரல் பண்புகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தால், எப்பேற்பட்ட வைரஸின் தாக்கத்தில் இருந்தும் பாதுகாப்புடன் இருக்கலாம்.


துளசி துளசியில் ஆன்டி-வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. துளசியை தினமும் உட்கொண்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தி வலுவாகும். அதுவும் துளசியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். அதுவும் 5 துளசி இலைகளுடன், 3-4 மிளகு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

பூண்டு பூண்டில் ஆன்டி-வைரல் பண்புகள் ஏராளமாக உள்ளது. இதை பச்சையாகவோ, சமையலில் சேர்த்தோ உட்கொள்ளலாம். பூண்டின் முழு சத்தையும் பெற நினைத்தால், பூண்டு பற்களைப் பொடியாக நறுக்கி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து, ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிடுங்கள். இப்படி செய்தால், நோயெதிர்ப்பு மண்டலம் சீக்கிரம் வலுபெறும்.

பெர்ரிப் பழங்கள் ரெஸ்வெரட்ரால் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான வேர்க்கடலை, பிஸ்தா, திராட்சை, சிவப்பு மற்றும் வெள்ளை ஒயின், ப்ளூபெர்ரி, கிரான்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் டார்க் சாக்லேட் போன்றவை பூஞ்சை தொற்றுக்கள், புறஊதாக் கதிர் தாக்கங்கள், மன அழுத்தம் மற்றும் காயம் போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவும். அதோடு இவை உடலைத் தாக்கும் வைரஸ்களையும் எதிர்த்துப் போராடி பாதுகாப்பளிக்கும்.

இஞ்சி உடலுக்கு பாதுகாப்பு கவசமாக இருந்து பாதுகாப்பளிக்கும் மற்றொரு உணவுப் பொருள் தான் இஞ்சி. இஞ்சியில் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. இந்த இஞ்சியை அன்னாசிப்பூ மற்றும் தேனுடன் சேர்த்து உட்கொண்டால், நோயெதிர்ப்பு மண்டலம் பலப்படும். அதுவும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, அதில் அன்னாசிப்பூ சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை குடிக்க வேண்டும்.

அன்னாசிப்பூவில் சிகிமிக் அமிலம் உள்ளது. இது இன்ப்ளுயன்சா வைரஸை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி வாய்ந்த ஆன்டி-வைரல் பண்புகளைக் கொண்டது. அன்னாசிப்பூவில் உள்ள முழு சத்தையும் பெற நினைத்தால், நீரில் அன்னாசிப்பூவைப் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம் அல்லது க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீயில் சேர்த்தும் குடிக்கலாம்.


Read more at: https://tamil.boldsky.com/health/food/coronavirus-spread-foods-that-can-help-boost-your-immunity/articlecontent-pf206672-027769.html

1 comment:

Dr.Anburaj said...

அனைவருக்கும் பயனுள்ள தகவல்.பதிவிட்டமைக்கு நன்றி.

அண்ணாசி பழத்தின் மலருக்கு மருத்துவ குணம் உள்ளது என்பது தெரியாது.

துளசியை நான் பலவகைகளிலும் பயன்படுத்தி வருகின்றேன்.