Followers

Tuesday, March 10, 2020

நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...

தலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...

பதிவுலகிலும், ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில்இருக்கும் பலரும்சொல்லும் விசயம் - அடங்க மறு,அத்து மீறு, திருப்பி அடிபோன்றவைகள் எல்லாம்..இதெல்லாம் அவர்கள் பாஷையில் எதிர்வினை.. அதாவது இப்போதுஅவர்களுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும், அல்லது என்றோஅவர்களுக்கு எதிராக நடந்தவன்முறை சம்பவங்களுக்கு பழிதீர்ப்பதற்குப் பெயர் தான்எதிரிவினை.. அதாவது என்னைஇத்தனை ஆண்டுகளாக மட்டமாக,கீழ் நிலையில் பலரும்வைத்திருந்ததால் இன்றுநான் அவர்களுக்கு எதிராக தான் செய்யும் வன்முறைக்குப் பெயர்தான் எதிர்வினை..


சரி இந்த எதிர்வினையால் என்னதான் பிரயோஜனம் என்றுகேட்டால், ஒன்றும் கிடையாது..இவர்களின் எதிர்வினைக்குஅந்தப்பக்கம் இருந்து இன்னொருஎதிர்வினை வரும்.. அந்தஎதிர்வினைக்கான எதிர்வினைக்குஇவர்களிடமிருந்து மற்றொருஎதிர்வினை வரும்.. இப்படியே மாறிமாறி வெட்டிக்கொண்டும்,தூண்டிவிட்டுக்கொண்டுமேஇருக்க வேண்டியது தான்.. முடிவு?இதனால் இவர்கள் வாழ்வில்ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமாஎன்றால் நிச்சயம் இல்லை.. இது போன்ற விசயங்கள், படிப்பு, சமூக மதிப்பு என்னும் ஏணியில் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருக்கும் தலித்துக்களை இன்னும்பின்னிழுக்கும் என்பது தான் உண்மை.. வன்முறையாலும்,துவேசத்தாலும் எங்கும் எப்போதும்முன்னேற்றம் வராது என்பது உலகநியதி..

இன்னும் சிலர் இருக்கிறார்கள்..தாங்கள் உயர வேண்டுமானால்உயர் சாதி என்று கருதப்படும்பெண்களை காதலித்து,இழுத்துக்கொண்டு ஓடுவது தான்ஒரே வழி என்பது இவர்கள் மனதில்சிலரால் விதைக்கப்பட்டிருக்கும்எண்ணம். ஆனால் அப்படிஓடிப்போகும் பலவும்பிரச்சனைகளை இன்னும் தான்பெரிதாக்கியிருக்கிறதே தவிரபிரச்சனையை குறைத்தோ,தலித்துகளின் நிலையைமாற்றியதாகவோ எங்கும் கேள்விஇல்லை.. உண்மையில் தலித்முன்னேற்றம் என்கிற பெயரில்அடங்க மறுத்து, அத்துமீறி, திருப்பிஅடித்து, எதிர்வினை புரிந்து,இழுத்துக்கொண்டு ஓடி எனஇவ்வளவையும் செய்தாலும்,தலித்துகளின் நிலை என்னவோ நம்நாட்டில் இன்னும் மோசமாகத்தான்இருக்கிறது. அவர்களுக்குவாடகைக்கு வீடு கிடைப்பதே கூடஅவ்வளவு கஷ்டம் என அண்ணன்சதீஷ் கூட அடிக்கடி புலம்புவார். தங்களின் வாழ்வில் மாற்றத்தை கொடுக்கும் என அவர்கள் நம்பி செய்யும் இவ்வளவு‘எதிர்வினை’களாலும் ஏன் அவர்களை சமூக அளவில்முன்னேற்ற முடியவில்லை? இன்னும் ஏன் அவர்கள்சரிசமமாக அங்கீகரிக்கப்படவில்லை?ரொம்ப சிம்பிள், அவர்கள் செல்லும்பாதை... ஆம், அவர்கள்தேர்ந்தெடுத்திருக்கும் பாதைஅவர்களை இன்னமும் மக்கள்மத்தியில் மோசமாக சித்தரிக்கும் என்பது தான் உண்மை.. 

சரி இதற்கு என்ன தான் தீர்வு? ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் தன் முன்னேற்றத்திற்காக என்னவெல்லாம் செய்திருக்கிறது, எப்படி முன்னேறியிருக்கிறது என சில தமிழக வரலாற்று சம்பவங்களைஇங்கே குறிப்பிடுகிறேன்.. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்புஇன்றைய தலித்துகளின் நிலையைஒத்திருந்த நாடார் சாதியை இதற்கு தகுந்த உதாரணமாகக்கொள்ளலாம். 

ஆரம்ப காலத்தில் நாடார்கள்திருநெல்வேலிக்கு தெற்கே தான்மிகுந்து காணப்பட்டார்கள். ”அவர்கள் வாழும் நிலம்பாலைவனத்தைக்காட்டிலும் சிறிதுமேம்பட்டும், வெப்பமானதும்,வெறுமையானதும்,விரும்பத்தகாததாகவும்காணப்பட்டது” என்கிறார்கால்டுவெல். அதாவதுவிவசாயத்திற்கு சிறிது கூடஉபயோகப்படாத தேரி என்றுஅழைக்கப்படும் செம்மண் பூமியைசுற்றி அவர்கள் வாழ்ந்துவந்தார்கள். 

மேலும் கால்டுவெல் தனது 1857ம்ஆண்டு எழுதிய கட்டுரைதொகுப்பான, “Lectures on the Tinnevelly Mission"ல் அன்றையநாடார்களின் நிலை பற்றிச்சொல்கிறார். “நாடார்கள்ஆலயங்களில்அனுமதிக்கப்படுவதில்லை.அவர்கள் ஆலயங்களில் வெளியில்நின்று தான் தெய்வங்களுக்குவழிபாடு செய்ய வேண்டும். அவர்கள்நீதிமன்றங்களில் கூடஅனுமதிக்கப்படுவதில்லை.நீதிபதிகளிடம், நீதி மன்றத்தின்வெளியே நின்று தான் விண்ணப்பம்கொடுக்க வேண்டும். நாடார்பெண்கள் இடுப்புக்கு மேல் சேலைஅணியலாகாது என்றுவற்புறுத்தப்பட்டனர்.பொதுக்கிணறுகளில் தண்ணீர்எடுக்க அவர்களுக்கு அனுமதிஇல்லை. நாவிதரையோ,வண்ணார்களையோபயன்படுத்திக்கொள்ளஅவர்களுக்கு அனுமதிகொடுக்கப்படவில்லை.இம்மாதிரியான சூழ்நிலையிலுள்ளநாடார்களின் பழக்க வழக்கங்கள்,அவர்களைச் சூத்திரர்களை விடவும்தாழந்த சாதியினரின் நிலையுடன்இணைக்கிறது” என்கிறார்..தமிழகத்தில் இன்றையதலித்துக்களின் நிலையை விடஅன்றைய நாடார்களின் நிலைமோசமாகத்தான் இருந்திருக்கிறதுஎன்பது கால்டுவெல்லின் இந்தவார்த்தைகள் மூலம் தெரியவருகிறது.

முழுக்க முழுக்க பனை மரத்தையும்,கள்ளையும், பனைபொருட்களையும் நம்பியிருந்தநாடார்கள், எப்போதும் வறுமையில்தான் உழன்றார்கள். அவர்களதுவறுமை, “நெல் பயிராகும்மாவட்டங்களில் அடிமைகளாகவேலை செய்யும் பள்ளர்,பறையர்களுக்கிருந்த வறுமையின்தன்மையை ஒத்திருந்தது” எனதனது இன்னொரு நூலான “திருநெல்வேலிசாணார்கள்”ல் கால்டுவெல்குறிப்பிடுகிறார். 

சாமுவேல் மட்டீர் என்னும்ஆங்கிலேயரும் தனது “The Land of Charity" என்னும் நூலில்நாடார்களின் அன்றைய நிலையைவிளக்குகிறார். “நாடார் ஒருவர்நம்பூதிரி பிராமணரிடம் பேசும்போது 36 அடி தூரம் தள்ளி நின்றுதான் பேச வேண்டும். நாயர்களிடம்12 அடிகளுக்கு மேல் நெருங்கிவரக்கூடாது. நாடார்கள்,தாழ்த்தப்பட்ட சாதியைசார்ந்தவர்கள் என்கிற முறையில்குடை எடுத்துச் செல்லுதல்,காலணிகள் அணிதல், தங்கஆபரணங்கள் அணிதல்,ஆகியவற்றிற்கு தடைசெய்யப்பட்டிருந்தனர். அவர்களின்வீடுகள் ஒரு அடுக்குக்கு மேல்இருக்கக் கூடாது; பசுக்களில் பால்கறப்பத்தற்குஅனுமதிக்கப்படவில்லை; உயர்சாதி பெண்களைப்போல் நாடார்ப்பெண்கள் தண்ணீர்க் குடங்களைஇடுப்பில் வைத்துக்கொண்டுசெல்லக்கூடாது; தலையில் தான்சுமக்க வேண்டும்; மேலாடைகள்போர்த்திக்கொள்ளக் கூடஅவர்கள்அனுமதிக்கப்படவில்லை”..

தங்கள் குடும்ப பெண்கள் சாலையில், பொது இடங்களில் திறந்த மார்புடன் வருவதை எத்தனை நாள் தான் ஒருவனால் சகித்துக்கொள்ள முடியும்? சட்டம் மூலம் தீர்வு கிடைக்குமெனெ நம்பி, மாராப்பு அணிவதற்காககோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் கூடகிறிஸ்தவத்திற்கு மாறிய நாடார்பெண்கள் தாராளமாக தங்கள்மார்பை மறைத்துக்கொள்ளலாம்என்றும், இந்துவாக இருக்கும்பெண்கள், இந்து மதத்தில்இருக்கும் சாதிய முறைப்படி தான்இருக்க வேண்டும் என்றும் அதில்தாங்கள் தலையிட முடியாதுஎன்றும் நீதிமன்றம் கூறியது.  இந்தசூழலில் தான் தோள் சீலைபோராட்டம் வெடித்தது.. சட்டத்தை நம்பி பிரயோஜனம் இல்லை, என முடிவு செய்த நாடார்குலப் பெண்கள் தங்கள் மார்பைமறைத்து ஆடை உடுத்தஆரம்பித்தனர். இது ஆதிக்கசாதியினருக்குப் பிடிக்கவில்லை.அவர்கள் நாகர்கோயிலில்,கடைத்தெருவில் மார்பை மறைத்துஆடை உடுத்தியிருந்த நாடார்குலப்பெண்களை தாக்கிஅவர்களின் மேலாடைகளைகிழித்து எறிந்தனர்.இதைத்தொடர்ந்து 1858ம் ஆண்டுஅக்டோபர் மாதம் ஒரு நன்னாளில்கலவரம் மூண்டது.. கடைசியில்அன்றைய அரசு, 1859 ஜனவரி 27ம்தேதி ”தோள் சீலைபயன்படுத்துவதை தடை செய்வதுதற்காலத்திற்கு ஒவ்வாதது” என்றுநாடார்களுக்கு ஆதராவக ஒருஅரசாணையை வெளியிட்டதுஓரளவு உதவியாக இருந்தது.

சக மனிதர்களிடம் மரியாதைகிடையாது, அடிமை போன்றவாழ்க்கை, பெண்களின் மாராப்பைமறைக்கவே கலவரம் செய்து தான்உரிமை பெற வேண்டிய சூழல்.இப்படி ஒவ்வொன்றுக்கும்கலவரமும் போராட்டமும்செய்து தான் உரிமையை பெற வேண்டும் என்றால் கடைசி வரை கலவரமும், போராட்டமும் மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டியது தான், முன்னேறவே முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர்.. சமூகத்தில் எப்படி முன்னேறலாம் என்கிற தகிப்புஒவ்வொரு நாடாருக்குள்ளும்இருந்தது. பனங்காட்டில் கூலிவேலை செய்து கொண்டுதிருநெல்வேலிக்கு தெற்கில்இருந்த நாடார்கள் வியாபாரத்தின்பக்கம் தங்கள் கவனத்தைதிருப்பினர். விருதுநகர்,அருப்புக்கோட்டை, கமுதி,பாலையம்பட்டி, சாத்தங்குடி,சிவகாசி போன்ற நகரங்களைசார்ந்து தங்கள் வியாபாரத்தைஆரம்பித்தனர்.

பொருளாதார முன்னேற்றம்இல்லாமல்தங்களால் சமுதாயத்தில் ஒருநிலையை அடைய முடியாது,பொருளாதார முன்னேற்றமே ஒருசமுதாயத்தின் முன்னேற்றம்என்பதை தெளிவாக அறிந்திருந்தநாடார்கள் தங்களில் பொருளாதார முன்னேற்றத்திற்காக எடுத்து வைத்த முதல் அடி தான் வியாபாரம்.. மாட்டு வண்டியில் ஊர்ஊராக சென்று கருப்பட்டி,கருவாடு, பருத்திபோன்ற பொருட்களைவிற்கத்தொடங்கினர். ஒவ்வொருஊரிலும் கீழ் ஜாதிக்காரன் இப்படி வந்து வியாபாரம் செய்வதா என பிரச்சனைகள் வந்தன. அவர்களின் வண்டிகள், பொருட்கள் களவு போயின.. அவர்களுக்கு திருப்பி அடிக்கவெல்லாம் நேரம் இல்லை. தங்களுக்கு தாங்களே பாதுகாப்பு என்பதை உணர்ந்த அவர்கள், தங்கள்வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக சிறிய நிலம் ஒன்றை ஒவ்வொரு ஊரிலும் வாங்கி அதற்கு“பேட்டை” என்று பெயரிட்டனர். (சிவகாசியில் இப்போதும் கூடதிருநெல்வேலி தெக்‌ஷண மாறநாடார் சங்கத்தின்கருவாட்டுப்பேட்டை இன்றும்உள்ளது). அந்த பேட்டையைநிர்வகிக்க அவர்களுக்குப் பணம்தேவைப்பட்டது.. அப்போது தான்இந்திய வரி வரலாற்றில் புரட்சிஏற்படுத்திய sales taxற்குஅச்சாரமான ஒரு விசயம்நடந்தேறியது..

நாடார்கள் தங்கள் பேட்டையைநிர்வகிக்க “நாடார் மகமை பண்டு”என ஒன்றை ஆரம்பித்தனர்.ஒவ்வொரு ஊரிலும் பேட்டையைபயன்படுத்தும் ஒவ்வொருவியாபாரியும் தனது வருமானத்தின்ஒரு பகுதியை மகமை பண்டிற்குகொடுத்து விட வேண்டும்.அந்தப்பகுதியை கடந்து செல்லும்ஒவ்வொரு மாட்டு வண்டியும்குறிப்பிட்ட அளவு மகமை நிதிகொடுத்தாக வேண்டும் என்னும்விதியும் இருந்தது. இந்த மகமைநிதியைக் கொண்டு அந்த பேட்டையில் தங்களுக்கும், தங்கள் உடமைகளுக்கும் பாதுகாப்பை உருவாக்கிக்கொண்டனர்.. ஆனால் நாளாக நாளாக அந்த மகமை நிதி அவர்களே கற்பனை செய்யாத அளவிற்கு வளர்ந்தது.. ஒவ்வொரு ஊரிலும் உறவின்முறை மகமை பண்டு சந்திப்புக்களை மாதாமாதாம் நடத்தி அந்த நிதிகளை எப்படி முறையாக செலவிடுவது என யோசித்தனர்.. தான் கொடுக்கும்ஒவ்வொரு பைசாவும் எந்தஅளவுக்கு தன் நிலையைஉயர்த்தப்போகிறது என்பது நாடார்களுக்கு அன்றே தெரிந்திருக்குமா என தெரியவில்லை.. 

அந்த மகமைப் பண்டில் ஒவ்வொருவியாபாரியும், ஒவ்வொரு குடும்பத்தலைவனும்கட்டும் பணமானது அந்த ஊரின்,அந்த சமூகத்தின்நன்மைகளுக்காகப் பயன்பட்டன.வியாபாரத் திறமை மட்டும்போதாது, அதை நிர்வகிக்கபடிப்புத்திறமையும் வேண்டும் எனஅறிந்து கொண்ட நாடார் சமுதாயமக்களின் கவனம் கல்வி பக்கம் திரும்பியது.. அந்த மகமைநிதியைக் கொண்டு பலஊர்களிலும் பள்ளிகளைத்திறந்தனர். விருதுநகரில் 1885ம்ஆண்டில் திறக்கப்பட்ட KVS என்றுஅழைக்கப்படும் ஷத்ரிய வித்யாசாலா பள்ளி தான் அந்தமாதிரியான முதல் பள்ளி. பின்மருத்துவமனைகள், கோயில்கள்என தங்கள் சமூகத்திற்குதேவையான அனைத்தையும்உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஊரிலும் மகமை பண்டு நிதியின் மூலமாக இவை செயல்படுத்தப்பட்டன.. சமூகத்தில்நல்வுற்றோர்களுக்கு உணவும்,ஆடையும்,வலிமையுள்ளோர்களுக்குவேலையும் தரப்பட்டன. போதுமானநிதியை பயன்படுத்தி வியாபாரநஷ்டங்கள் சரி செய்யப்பட்டன.சமூகத்திற்காக கிணறுகளும்,பொதுக்கட்டிடங்களும்உருவாக்கப்பட்டன. ஆனால்அதிகமான நிதிகல்விக்கூடங்களுக்கு தான்ஒதுக்கப்பட்டது. அனைத்துஊர்களிலும் பள்ளிகளைத்திறந்தனர். அதாவது எந்த ஒருசூழலிலும் பிறரை சார்ந்தோ, அரசுஉதவிகளை எதிர்பார்த்தோஅவர்கள் எதற்கும்காத்திருக்கவில்லை. தங்களுக்குவேண்டியதை தாங்களே செய்துகொண்டார்கள்.


நாடார்களின் இந்த மகமை பண்டு செயல்பாடுகளை கவனித்த அன்றைய முதல்வர் ராஜாஜி இதனை அடிப்படையாகக் கொண்டு தான் விற்பனை வரி என்னும் salestax ஐ அறிமுகப்படுத்தினார் என்பதே சொல்லும் இந்த மகமை பண்டு என்னும் நிதி மேலாண்மையின் மேன்மையை..

ஒரு காலத்தில் தங்களது சாதியைகாட்டி என்னவெல்லாம்அவர்களுக்கு மறுக்கப்பட்டதோஅவை அனைத்தையும் பிறரைசார்ந்திருக்காமல் தாங்களேஅடைந்து கொண்டனர். கிணற்றில்தண்ணீர் எடுக்க உரிமைஇல்லையா? நானே ஒரு கிணறுவெட்டிக்கொள்கிறேன்..கோயிலுக்குள் விட மாட்டாயா?எனக்கான கடவுளுக்கு நானேகோயில் கட்டிக்கொள்கிறேன், படிக்க விட மாட்டாயா? வா நான் ஆரம்பிக்கும் பள்ளியில் என்னோடு சேர்ந்து உன் பிள்ளைகளும் படிக்கட்டும் என்றுஒவ்வொன்றையும் ஒற்றுமையாகசெயல்படுத்தினர். எந்தக்கோயில்களில் எல்லாம் ஒருகாலத்தில் தங்களை உள்ளேஅனுமதிக்கவில்லையோ அந்தகோயில்களுக்கும் அள்ளி அள்ளிநிதி வழங்கினார்கள். மூடியகோயில்க் கதவுகள் எல்லாம்தன்னால் திறந்தன. ஒரு காலத்தில்நாடார்களை உள்ளேயே விடாதகோயில்களில் கூட, இன்றுநாடார்கள் இல்லாமல் எந்தபண்டிகைகளும் நடப்பதில்லைஎன்பது கண் கூடாகத்தெரியும்உண்மை.


இது போக தாழ்த்தப்பட்டவர்கள்என்று இருந்த தங்களின் நிலையைசுதந்திரத்திற்கு முந்தையஅன்றைய மக்கள் தொகைகணக்கெடுப்பின் போது போராடி,பிற்படுத்தப்பட்டோர் எனமாற்றிக்கொண்டனர். தாங்கள்தாழந்தவர் இல்லை, அத்தகையசொல் பிரயோகம் தங்களுக்குதேவையில்லை என்று தூக்கிவீசினர். மகமை பண்டு ஒரு புறம்என்றால், 1910ம் ஆண்டுஆரம்பிக்கப்பட்ட நாடார் மகாஜனசங்கம் இன்னொரு புறம்..இவர்களின் முக்கிய குறிக்கோளும்கல்வி தான். 1921ம் ஆண்டில்இருந்து 1964 வரையில் சுமார்மூவாயிரம் மாணவர்களுக்கு,அன்றைய மதிப்பில் நான்கு லட்சரூபாய் வரை கல்விக்கானஉதவியாக மட்டும் செய்துள்ளனர்.இது கடனாகத்தான்கொடுக்கப்பட்டது..வட்டியில்லாக்கடன். படித்துமுடித்ததும் அந்த மாணவன் அதைத்திருப்பி செலுத்திவிட வேண்டும்.வெளிநாடுகள் சென்றுபடிப்பதற்கும் கூட உதவிகள்செய்யப்பட்டன. பள்ளிகளில்இருந்து கல்லூரிகள் பக்கமும்தங்கள் கவனத்தைசெலுத்தினார்கள். இன்று இருப்பதுபோல் பொறியியல் கல்லூரிகளைஆரம்பிக்காமல் ஒவ்வொருஊரிலும் கலை, அறிவியல்கல்லூரிகளை ஆரம்பித்து சமுதாயமாணவர்களை பட்டதாரிகளாக்கமுழுமுனைப்புடன் இருந்தன இந்தசங்கங்கள்..

பொருளாதார முன்னேற்றம்இருந்தாலும், ஆதிக்கசாதியினரான மறவர், வேளாளர்போன்றோர்களின் எதிர்ப்புநாடார்களுக்கு சிலஆண்டுகளுக்கு முன்பு வரை கூடஇருந்து வந்தது. ஆனால் தங்களின்பள்ளி, கல்லூரிகளில் அவர்களின்பிள்ளைகளுக்கும் இடம் கொடுத்து,தங்கள் நிறுவனங்களில் பிறசாதியினருக்கும் வேலைகொடுத்து, ஒரு இணக்கமானசூழலைஉருவாக்கிக்கொண்டார்கள்.இன்று சிவகாசி, விருதுநகர்போன்ற நகரங்களில் இருக்கும்பள்ளி, கல்லூரி, எண்ணெய்நிறுவனங்கள், தீப்பெட்டி, அச்சுநிறுவனங்கள்,பட்டாசுத்தொழிற்சாலைகளில்இதை வெகு சகஜமாக காணலாம்.அதாவது ஜாதியால் தன்னைதாழ்ந்தவன் என்று மட்டமாகநினைத்த உயர் ஜாதி ஆட்களைக்கூட தங்கள் ஒற்றுமையால்தங்களை சார்ந்து வாழ வைத்ததுதான் நாடார்களின் வெற்றி.

இது தான் நாடார்களின்சுருக்கமான முன்னேற்ற வரலாறு.இதில் எத்தனையை இன்றையதலித் சங்கங்களோ, அவர்களைவைத்து பிழைப்பு நடத்தும்அரசியல்வாதிகளோசெய்திருக்கிறார்கள்? நாடார்கள்,எதிர்வினை என்னும் பெயரில்எவனெல்லாம் தங்கள்வீட்டுப்பெண்களின் மாராப்பைகிழித்தெறிந்தானோ, அவன்வீட்டுப்பெண்களின் மாராப்பையும்கிழித்து எறிந்திருக்கலாம். ஆனால்செய்யவில்லை. தங்களின் இழிநிலை ஒழிய வேண்டுமானால் உயர்ஜாதி பெண்களை இழுத்து ஓடுவதுதான் ஒரே வழி என்றும் அவர்கள்நினைக்கவில்லை.. ஒற்றுமையும்,முன்னேற்றமுமே குறிக்கோளாய்க்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.இன்றைய இட ஒதுக்கீடு ஒருமனிதனை மட்டும் தான்முன்னேற்றும். அவன் தனக்குப் பின்தன் பிள்ளைகளுக்கு தான் அதைபெற்றுத்தர முனைவானே ஒழிய,தன் சமூகத்தை சார்ந்த, இன்னும்கீழ் நிலையில் இருக்கும் பிறர்அதை அனுபவிக்க விடுவதில்லைபெரும்பாலும். ஆனால்இடஒதுக்கீட்டையும் தாண்டி ஒருசமூகம் முன்னேற வேண்டுமானால்அதற்கு ஒற்றுமை அவசியம். பிறர்நம்மை மட்டமாக பேசுகிறார்என்பதற்காக அதை நினைத்துவருந்தாமல், சண்டை போடாமல்,வைராக்கியமாக தன்முன்னேற்றத்தை மட்டுமேகுறிக்கோளாக கொண்டிருந்தால்,தன்னை பேசியவனையும் தாண்டிஒரு காலத்தில் வளர்ந்துநிற்கலாம்.. அல்லது கடைசி வரைசண்டை போட்டுக்கொண்டு தானும்முன்னேறாமல், அவனையும்முன்னேற விடாமல் இழிநிலையிலேயே இருக்கலாம்..இதில் எதை தேர்ந்தெடுப்பதுஎன்பது சில தலித் சங்கங்களின்கைகளில் தான் உள்ளன..

இன்னொரு முக்கியமான விசயம்,நாடார்கள் எந்த சூழ்நிலையிலும்தங்களுக்கென்று ஒரு அரசியல்தலைவரைஉருவாக்கிக்கொண்டதில்லை,உருவாக விட்டதும் இல்லை..என்று ஜாதியத்திற்குள் ஓட்டுஅரசியல் வருகிறதோ, அன்றே அதுஅந்த ஜாதியின் முன்னேற்றத்தைதடுத்து நிறுத்தி, அந்த ஜாதியைவளர விடாமல் செய்துவிடும்.. அப்போது தானே அந்தஜாதிய தலைவர்களால்வெற்றிகரமாக அரசியல் செய்யமுடியும்? முன்னேறி விட்டால் அரசியல் செய்ய முடியாதே? இன்றுதங்களை தலித்துகளின் அரசியல்தலைவர்களாக காட்டிக்கொள்ளும்பலரும் செய்வது இதைத்தான்..அதனால் அரசியல்தலைவர்களையும், இடஒதுக்கீட்டையும், நம்புவதை விடதலித்துகள் தங்களுக்குள்ஒற்றுமையாக சிறு சிறு குழுக்கள்அமைத்துக்கொண்டு நாடார்களின், “மகமை பண்டு” போன்றவிசயங்களை அதில் செயல்படுத்திமுன்னேறலாம்..

அடங்க மறு, அத்து மீறு, திருப்பிஅடி, அடுத்தவன் வீட்டுப் பெண்ணைகையப்பிடித்து இழு, எதிர்வினைசெய் என்பதெல்லாம்அரசியல்வாதிகளுக்கு அன்றாடபிழைப்பை ஓட்டத்தான் பயன்படுமேஒழிய, அந்த சமூகத்திற்கு எந்தவிதத்திலும் அதுபயனைக்கொடுக்காது.. ஒருசமூகம் முன்னேற வேண்டுமானால்படிப்பும், பணமும் தான் பிரதானம்.அரசு கொடுக்கும் இடஒதுகீட்டைமட்டும் நம்பிக்கொண்டிருந்தால்அந்த படிப்பும் பணமும்அனைவருக்கும் கிடைக்க இன்னும்200 ஆண்டுகள் கூட ஆகலாம்..அதுவே தங்கள் சொந்தக்காலில்ஒற்றுமையாக நின்று முன்னேறும்போது, சீக்கிரத்தில் பொருளாதாரநிலையில் வளர்ச்சியை அடைந்துவிடலாம்.. பொருளாதார வளர்ச்சிமட்டும் தான் ஒரு ஜாதியை அதன்கீழ் நிலையில் இருந்து மேலேஉயர்த்தும் முக்கிய காரணி..அதனால் பொருளாதாரவளர்ச்சிக்கு என்ன மாதிரியானமுன்னெடுப்புக்களை எடுக்கவேண்டும் என தலித் மக்கள்சிந்திப்பதே அவர்கள் முன்னேற்றத்துக்கான ஆரோக்கியமான முதல் படியாக இருக்கும்..

இல்லை இன்னமும் நாங்கள்எங்கள் அரசியல் தலைவர்கள்வகுத்துக்கொடுத்த சீரிய பாதையில்தான் செல்வோம் என்றால்,தலித்துகளுக்கு சமூகத்தில் இன்றுஇருக்கும் மதிப்பு மாற வெகு காலம்பிடிக்கும் என்பது மட்டும் உறுதி...

-sivakasikaran

3 comments:

Dr.Anburaj said...

தாங்கள் செய்த உருப்படியாக காரியங்களில் இதுவும் ஒன்று.வாழ்த்துக்கள்ஃ
-------------------------------------------------------------------------------
ஒரு காலத்தில் தங்களது சாதியைகாட்டி என்னவெல்லாம்அவர்களுக்கு மறுக்கப்பட்டதோ
அவை அனைத்தையும் பிறரைசார்ந்திருக்காமல் தாங்களேஅடைந்து கொண்டனர். கிணற்றில்தண்ணீர் எடுக்க உரிமைஇல்லையா? நானே ஒரு கிணறுவெட்டிக்கொள்கிறேன்..
கோயிலுக்குள் விட மாட்டாயா?
எனக்கான கடவுளுக்கு நானேகோயில் கட்டிக்கொள்கிறேன்,
படிக்க விட மாட்டாயா? வா நான் ஆரம்பிக்கும் பள்ளியில் என்னோடு சேர்ந்து உன் பிள்ளைகளும் படிக்கட்டும்
என்றுஒவ்வொன்றையும் ஒற்றுமையாகசெயல்படுத்தினர்.

எந்தக்கோயில்களில் எல்லாம் ஒருகாலத்தில் தங்களை உள்ளேஅனுமதிக்கவில்லையோ அந்தகோயில்களுக்கும் அள்ளி அள்ளிநிதி வழங்கினார்கள்.
மூடியகோயில்க் கதவுகள் எல்லாம்தன்னால் திறந்தன.

ஒரு காலத்தில்நாடார்களை உள்ளேயே விடாதகோயில்களில் கூட, இன்றுநாடார்கள் இல்லாமல் எந்தபண்டிகைகளும் நடப்பதில்லை என்பது கண் கூடாகத்தெரியும்உண்மை.
--------------------------------------------------------------
முன்னேற்றம் பெற இதுதான் சிறந்த வழி.
நாடார்களுக்கு நிலம் இருந்தது. ஒழுக்கம் இருந்தது. கள் குடி எல்லாம் மிகக்குறைவே.
ஒழுக்கம் கு்னறினால் மனிதர் களிடையே பரஸ்பரம் நமபிக்கை அற்று போகும். குழுவாக சங்கமாக செயல்பட முடியாது
---------------------------------------------------------------------------
தலித் இளைஞர்கள் பிரம்மச்சரியம் கடைபிடித்தால் விிரும்பிய முன்னேற்றம் 3 தலைமுறைக்குள் வந்து விடும்.
ஆனால் தலீத தலைவா்கள் அவர்களை உருபபட விடமாட்டார்கள்.

மதுவை ஒழிக்க வேண்டும் என்று தொல் திருமா என்றாவது பேசி தாங்கள் கேட்டதுண்டா ?

கற்புநெறியோடு ஆண்கள் வாழ்ந்து பெண்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்று திருமா பேசி கேட்டிருக்கினறீரா ?

திமிறு அடங்க மறு என்ற உபதேசத்தால் வன்முறை உணா்வு வளா்ந்து வம்பு சண்டையில் மாட்டி
காவல்துறை ............நீதி மன்றம் .............வழக்கு ..........வக்கில் வீடு....... தெண்டச் செலவு என்று தலீத் மக்களின் வாழ்க்கையை பாழாக்கவே தலீத் தலைவா்கள் உள்ளார்கள்.

Dr.Anburaj said...

பிறர்நம்மை மட்டமாக பேசுகிறார்என்பதற்காக அதை நினைத்துவருந்தாமல், சண்டை போடாமல்,வைராக்கியமாக தன்முன்னேற்றத்தை மட்டுமேகுறிக்கோளாக கொண்டிருந்தால்,தன்னை பேசியவனையும் தாண்டிஒரு காலத்தில் வளர்ந்துநிற்கலாம்.. அல்லது கடைசி வரைசண்டை போட்டுக்கொண்டு தானும்முன்னேறாமல், அவனையும்முன்னேற விடாமல் இழிநிலையிலேயே இருக்கலாம்..இதில் எதை தேர்ந்தெடுப்பதுஎன்பது சில தலித் சங்கங்களின்கைகளில் தான் உள்ளன..
இதுதான் முன்னேற்றத்திற்கு இராஜபாட்டை.
-----------------------------------------------------------------------------------------
தீண்டாமையை பொருத்த மட்டில் நாடார்களை முஸ்லீம்களும் பிற சாதியினா் போலவே தீண்டத்தகாதவர்களாகவே நடத்தினா். இதுவும் உண்மை.

Dr.Anburaj said...

பார்பனர்களின் சூழ்ச்சி அறியாமல் அன்பு ராஜ் போன்ற ஓபிசிக்கள் பார்பனர்களுக்கு தெரிந்தே பல்லக்கு தூக்கிக் கொண்டுள்ளனர். :

இந்து நாடாா் சமூகத்தைச் சார்ந்த நான் யாருக்கும் பல்லக்கு தூக்கவில்லை என்பதை மேற்படி கட்டுரையில் ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.