'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, November 30, 2025
Wednesday, November 26, 2025
Tuesday, November 25, 2025
Monday, November 24, 2025
Sunday, November 23, 2025
Saturday, November 22, 2025
Wednesday, November 19, 2025
Tuesday, November 18, 2025
Saturday, November 15, 2025
Thursday, November 06, 2025
Wednesday, November 05, 2025
Monday, November 03, 2025
Thursday, October 30, 2025
Wednesday, October 29, 2025
ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார்.
சகோதரர் ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) அவர்கள். பிரிட்டன்
நாட்டவரான இவர் இன்று மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக
பணிபுரிகின்றார். (இவரை தொடர்பு கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள
முகவரியை காணவும்).
பணி நிமித்தமாக சௌதி அரேபியாவிற்கு வந்த அவருக்கு குரான் அறிமுகமாக, சில நாட்களில் குரான்
இறைவேதமென்ற முடிவுக்கு வந்து இஸ்லாத்தை தழுவலாம் என்ற முடிவுக்கும் வந்தார்.
ஆனால்............................
"எனக்கு தெளிவாகி விட்டது.
குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இறைவனின் தன்மைகளைத்தான் என்னால் தொடர்புபடுத்தி
பார்க்க முடிகின்றது.
இப்போது என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். என் மனதுக்குள் இருக்கும்
மூன்று பிரச்சனைகள் விலகி விட்டால் இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுத்தேன். அவை,
·
என் மனைவியும் இஸ்லாத்தை
தழுவ வேண்டும்.
·
அவர் தன்னுடைய வேலையை விட்டு
விலகிவிட்டு என்னுடன் சௌதி அரேபியா வந்து வாழ வேண்டும்.
·
எனக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட
பிரச்சனை தீர வேண்டும்.
என்னுடைய இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை இஸ்லாத்தை தழுவுவதை தள்ளி போடுவதென
முடிவெடுத்தேன்.
இது தொடர்பாக என் மனைவியுடன் பேச ஆரம்பித்தேன். இமெயில் இமெயிலாக அனுப்பினேன். msnனில் நீண்ட நேரம் இது
குறித்து பேசியிருக்கின்றோம். இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இஸ்லாம் குறித்த
தகவல்களை ஆவலுடன் பகிர்ந்து கொள்வேன். அதிலும் குறிப்பாக, இஸ்லாம் புதிய
மார்க்கமில்லை என்பதையும், கிருத்துவத்தின் தவறுகளை
களைய வந்த மார்க்கமென்பதையும் சுட்டி காட்டுவேன்.
என்னுடைய இந்த ஆர்வம் என் மனைவியை திகிலடைய செய்தது. ஒருமுறை கேட்டே விட்டார்,
"எனக்கென்னவோ நீங்கள்
இஸ்லாத்தை தழுவி விட்டதாக தோன்றுகின்றது"
இதனை கேட்டவுடன் பேசுவதை சற்று
நேரம் நிறுத்திவிட்டேன்.
ஆம்... நான் அப்போது தான் உணர்ந்தேன், என் வாயால் தான் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை, மனதாலோ அந்த அடியை
எடுத்து வைத்து விட்டேனென்று. என் மனைவிக்கு நான் சொன்ன பதிலும் இதையே
பிரதிபலித்தது.
"ஆம், நான்
ஏற்றுக்கொண்டேன்"
அவ்வளவுதான்...அந்த சமயத்திலிருந்து என் மனைவி என்னை கடுமையாக விமர்சிக்க
ஆரம்பித்தார். இவ்வளவு பெரிய முடிவை நான் எடுக்கும் முன் அவரிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்று கோபப்பட்டார். நான் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி
செய்தேன்.
மனதால் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன், அதிகாரப்பூர்வமாக இன்னும்
இல்லை என்பது தான் என்னுடைய விளக்கமாக இருந்தது. ஆனால் என்னுடைய இந்த அணுகுமுறை
அவருக்கு மேலும் குழப்பத்தையே தந்தது. அவரை இஸ்லாத்தை ஏற்க வைக்க வேண்டுமென்ற
என்னுடைய முயற்சியும் இதனால் தள்ளிப்போனது.
நாட்கள் சென்றன....
இந்த நேரத்தில் முஸ்லிம்களுடன் தொழக்கூடிய வாய்ப்பு அமைந்தது. அது ஒரு வார
இறுதி நாள். ஷாப்பிங் முடித்து விட்டு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது
பக்கத்தில் இருந்த மசூதியில் இருந்து தொழுவதற்கான அழைப்பு விடப்பட்டது. அவ்வளவு
தான், கடைகள் அடைக்கப்பட்டன.
தெருவோர கடைகளின் பொருட்கள் துணிகளால் மூடப்பட்டன. வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும்
மக்கள் மசூதியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். அது என்னை மிகவும் கவர்ந்தது.
முஸ்லிம்களின் தொழுகை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்வதென முடிவெடுத்து
விட்டேன்.
பள்ளிவாசலுக்கு சென்றவர்களை பின்தொடர்ந்தேன். நான் போவதற்குள் தொழுகையில்
இரண்டு வரிசைகள் பூர்த்தியாகி விட்டன. வரிசையில் மக்கள் தோளோடு தோளாக நெருங்கி
நின்றார்கள். அவர்களுடன் நானும் என்னை ஐக்கியப்படுத்தி கொண்டேன். அந்த வரிசையில்
என்னோடு பல சிறுவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.
எனக்கு அருகில் இருந்தவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்று ஓரக்கண்ணால்
கவனித்தபடியே இருந்தேன். அவர்கள் எப்படி குனிந்து நிமிர்ந்தார்களோ அப்படியே நானும் செய்தேன். அவர்களை
அப்படியே பின்பற்றினேன்.
எனக்கு நன்றாக தெரியும், இவர்கள் என்னை விட
அதிகமாக மனதை ஒருநிலைபடுத்துகின்றார்கள் என்று. அவர்கள் தொழுகையில் தங்களுக்குள்
என்ன சொல்லிக்கொள்கின்றார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு மனதில் அப்போது
என்ன வார்த்தைகள் தோன்றினவோ அதனைக்கொண்டு இறைவனை தொழுதேன்.
"இறைவா, என் விருப்பம் நிறைவேற உதவி செய்.
என்னுடைய மனைவிக்கு நேர்வழி காட்டு. உன்னிடத்தில் மட்டுமே நான் உதவி கோருகின்றேன்.
உன்னால் படைக்கப்பட்டு இன்று கடவுள்களாக இருக்கின்றனரே, அந்த மனிதர்களிடத்தில் அல்ல"
இதனை நான் ஒரு மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தேன். என்னுடன் தொழுது
கொண்டிருந்தார்களே அவர்கள் அளவுக்கு நான் இறைவனிடத்தில் தொடர்பு கொண்டிருந்தேனா
என்று தெரியாது. ஆனால் தொழுகை முடிந்தவுடன் ஒருவிதமான மன அமைதியை உணர்ந்தேன்.
என்னுடைய காலணிகளை அணிய சென்றேன். ஷூவையும், சாக்சையும் எடுத்த போது இரு சிறுவர்கள் என் முன்னால் வந்து
நின்றார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, எனக்கு அருகில் நின்று தொழுதவர்கள்.
"Anta
Muslim? Limada tusalli? ‘adam wa’dha al yedduka al yameen ala shimal.” (நீங்கள் முஸ்லிமா? நீங்கள் எதற்காக
தொழுகின்றீர்கள்? தொழும்போது வலது கையை, இடது கைக்கு மேல் வைக்க
வேண்டும்)
ஆம், அந்த சிறுவர்கள்
கண்டுபிடித்து விட்டார்கள். நான் முஸ்லிமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விட்டது.
பிறகு அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்தார்கள். எப்படி ருக்கூ (How to Bow) செய்ய வேண்டுமென்று, எப்படி சஜிதா (How to Prostrate) செய்ய வேண்டுமென்று
மற்றும் எப்படி கால்களை வைக்க வேண்டுமென்று. அவர்கள் அதோடு விடவில்லை. அவர்களை
பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்தார்கள். எனக்கு இன்னும் நிறைய பயிற்சி
வேண்டுமென்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.
அவர்களது வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார்கள். நான் வீட்டின் வெளியிலேயே
நின்று விட்டேன். சங்கடம் தான் காரணம். முன்னே சென்றே அந்த சிறுவர்களில் ஒருவன்
நான் தயங்கி நிற்பதை பார்த்து என்னருகில் வந்து "come on" என்று சைகை செய்து என்னை
உள்ளே அழைத்து சென்றான். அங்கே 15-16 வயது மதிக்கத்தக்க டீனேஜ் இளைஞர் ஒருவர் என்னை வரவேற்றார். அவர்
இந்த சிறுவர்களின் அண்ணனாம்.
என்னை மிக அன்பாக உபசரித்தார். அரேபிய காபியும், சில பேரித்தம் பழங்களையும் கொடுத்தார். ஆனால் எனக்கு
புரியவில்லை, என்னை எதற்காக இங்கே
அழைத்து வந்தார்கள் என்று. வீட்டை சுற்றிமுற்றி பார்த்தேன். இந்த சிறுவர்களை தவிர
வேறு யாருமில்லை. பேச்சை ஆரம்பித்தேன்.
"உங்கள் தாய், தந்தையர் எங்கே?"
நான் கேட்ட கேள்விக்கு அவரால் சைகையால் பதில் சொல்ல முடியவில்லை. சற்று
பொறுங்கள் என்பது போன்று சைகை செய்தார். நான், இருவரும் வெளியே போயிருப்பார்கள் போல என்று நினைத்து
கொண்டேன்.
அப்போது மற்றொரு டீனேஜ் இளைஞர் வீட்டிற்கு
வந்தார். இவரும் அவர்களது சகோதரர் தான். இருவரும் சிறிது நேரம்
பேசிக்கொண்டனர். பின்னர், உள்ளே வந்த அந்த இளைஞர் என்னைப் பார்த்து கேட்டார்.
"அமெரிக்கி?" (அமெரிக்கரா?)
"இல்லை, நான் பிரிட்டிஷ்"
"காபி அருந்துகின்றீர்களா?"
இல்லை, நான் ஏற்கனவே அருந்தி
விட்டேன் என்று சொல்வது போல தலையசைத்தேன்.
"Tawadha"
(உளு செய்யலாம் வாருங்கள்)
உளு (Wudu
is the Islamic act of washing parts of the body using water) செய்ய
சொல்லிக்கொடுத்தார்.
"வாருங்கள்
தொழப்போகலாம்"...
மாலை நேர தொழுகைக்காக கிளம்பினோம்.
"கையை உயர்த்துங்கள்" என்று சொல்லியபடியே
என்னுடைய வலது கையை மேலே எழுப்பினார். "பிறகு இப்படி
வையுங்கள்" என்று என்னுடைய இடது கையின் மேல் வலது கையை வைத்தார்.
பிறகு இரு கைகளையும் மார்பில் படியுமாறு மேலே தூக்கினார்.
நாங்கள் நடு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம். ரோட்டின் நடுவில்
நின்று கொண்டே அடுத்த பாடத்தை சொன்னார், "நான் செய்வதை போல
செய்யுங்கள்" என்று இரு கைகளையும்
உயர்த்தி காதுகளுக்கு அருகில் வைத்து கொண்டார்.
பள்ளிக்குள் நுழைந்தோம். அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டேன். இப்போது முன்பை
விட சரியான முறையில் தொழுதேன்.
பள்ளியிலிருந்து திரும்பியவுடன் இரவு நேர உணவு பரிமாறப்பட்டது. நான்
மறுபடியும் கேட்டேன்,
"உங்கள் அம்மா எங்கே?"
அவர் தலையசைத்து விட்டு, தூங்குவது போல சைகை
காட்டி கீழே பூமியை காட்டினார்.
"Baba
wa mama fiy mout, yarhamhummullah. Sister make" (மரணம் எங்கள் பெற்றோரை
தழுவிவிட்டது. அவர்கள் இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவட்டுமாக. என் சகோதரி
தான் உணவு தயாரித்தார்"
அப்போது தான் புரிந்தது, இவர்கள் பெற்றோரை இழந்த
சிறுவர்கள் என்று. குடும்பத்தை காக்கவேண்டிய பொறுப்பை இந்த இளைஞரும் அவருடைய சகோதரியும் தான்
ஏற்றிருக்கின்றார்கள். அந்த இளைஞனின் ஆங்கிலம் தெளிவாக இல்லை. அதனால் புரிந்து
கொள்வது கடினமாக இருந்தது.
"உங்களுக்கு இஸ்லாம்
பிடித்திருக்கின்றதா?" அவர் கேட்டார்.
"ஆம்"
"பிறகு ஏன் நீங்கள்
முஸ்லிமாகவில்லை"
"எனக்கு டைம் தேவை"
அவர் எனக்கு என் வீடு வரை லிப்ட் கொடுத்தார்.
"உங்களுக்கு என்ன உதவி
வேண்டுமென்றாலும் கேளுங்கள். எங்கள் வீட்டிற்கு எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்"
நான் அவருக்கு நன்றி கூறினேன்.
அந்த குடும்பத்தின் அன்பு என்னை விட்டு விலகவில்லை. அவர்கள் என் மீது காட்டிய
அக்கறையால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். எனக்கு நேர்வழி காட்ட அவர்கள் எடுத்த
முயற்சியை பாராட்டினேன்.
இதற்கு பிறகு என் வாழ்வில் நுழைந்த மனிதர் என்னால் மறக்க முடியாதவர். அவர்
பெயர் அலி ஜமீலி. ஈரான் நாட்டை சேர்ந்த
அமெரிக்கர். உம்ரா (The
Umrah is a pilgrimage to Mecca performed by Muslims that can be undertaken at
any time of the year) செய்வதற்காக சவுதி அரேபியா வந்திருந்தார்.
எனக்கு இஸ்லாத்தை பற்றி தெரியுமா? என்று கேட்டார். உங்கள் புனித நூலை நான்
படித்திருக்கின்றேன் என்று கூறினேன்.அவரது அடுத்த கேள்வி நான் எதிர்பார்த்ததுதான்...
"நீங்கள்
முஸ்லிமாகவில்லையா?"
என்னுடைய மூன்று நிபந்தனைகளைப் பற்றி கூறினேன்.
"உங்களுக்கு என்ன
பைத்தியமா?, அல்லாஹ்விடம் நிபந்தனைகள்
விதிக்க கூடாது. இப்போதே சஜிதா செய்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள். இஸ்லாம்
தான் இறைவனின் மார்க்கம் என்பதில் உங்களுக்கு ஐயங்கள் இல்லையென்றால் இப்போதே ஷஹாதா
(Shahada is the testimony of
faith indicating belief in one God, Allah, who has no partners and belief that
the Prophet Muhammad (peace be upon him) is his final prophet and
messenger) சொல்லுங்கள்"
"நான் ஏன் நிபந்தனைகள் போடக்கூடாது?, என் குடும்பமும்
முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அது தவறா?"
"இங்கே பாருங்கள். இறைவன்
யாரை நாடுகின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுகின்றான். உங்கள் குடும்பத்தை காரணமாக காட்டி அவனுடைய
வழிகாட்டுதலை அலட்சியப்படுத்துகின்றீர்களா?. இவ்வளவு ஏன்...நாயகம்
(ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கூட இறைவன் நேர்வழி
காட்டவில்லையே!!! நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்ட பிறகும் கூட அவர்களது தந்தையின்
சகோதரர் முஸ்லிமாகவில்லையே"
எனக்கு தெளிவாக விளக்கினார் ஜமீலி. ஆனால் நான் அவருடன் வாக்குவாதத்தில்
ஈடுபட்டேன்.
"நான் என்
குடும்பத்தினருடன் பேச வேண்டும்"
"நீங்கள் அதற்கு முன்னே
இறந்து விட்டால் என்ன செய்வீர்கள்?. நீங்கள் இஸ்லாம் என்னும்
மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்ட பிறகு அதனை நிராகரித்து
விட்டு இறந்தால் நீங்கள் செல்லும் இடம் நரகம் தான். நீங்கள் எவ்வளவு
அதிர்ஷ்டக்காரர் என்பது உங்களுக்கு புரியவில்லையா? உங்களை போல எல்லோருக்கும்
இறைவன் நேர்வழி காட்டுவதில்லை என்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அவன் உங்களுக்கு
கொடுத்திருக்கும் வாய்ப்பை புறக்கணிக்க போகின்றீர்களா?"
அவருடைய அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. சிந்தித்து பார்த்தால் அவர்
சொல்வது சரிதான். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் நான் ஒரு முட்டாள்.
உடனடியாக நான் அடுத்த அடியை எடுத்து வைத்தேன். இஸ்லாமிய தாவாஹ் சங்கத்திற்கு
சென்று, அதிகாரப்பூர்வமாக இஸ்லாத்தை தழுவ என்ன
செய்யவேண்டுமென்று கேட்டேன். அவர்கள் கூறினார்கள்.
என்னுடன் டேவிட், ஜான் என்ற இரு சகோதரர்களும்
இஸ்லாத்தை தழுவினார்கள்.
இஸ்லாத்தை தழுவ நினைப்பவர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இஸ்லாம், உங்களுக்கான ஆன்மீக அடைக்கலம்.
இறைவன், நம்பிக்கையாளர்களுக்கு
தொடர்ச்சியான சோதனைகளை தருவான். இவ்வுலகின் உங்கள் பிரச்சனைகளானது தானியங்கியாக
தீர்ந்து விடாது. ஆனால் இறைவனின் உதவி இருந்தால் அவை ஒன்றன் பின் ஒன்றாக
விலகிவிடும்.
அதனால் உங்களை அர்ப்பணியுங்கள், பிறகு பொறுமையோடு
காத்திருங்கள், இறைவன் உங்களுக்கு
அதிகமாக அருளை கொடுப்பானென்று"
சுபானல்லாஹ். இந்த பதிவின் மூலம், நான் இஸ்லாத்தை தழுவும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு
கூறிக்கொள்ள விரும்புவது...நீங்கள் இஸ்லாத்தை நன்றாக ஆய்வு செய்யுங்கள். அது தான்
உண்மை என்ற நிலைக்கு வந்து விட்டால் எக்காரணத்தை கொண்டும் உங்கள் முடிவை தள்ளிப் போடாதீர்கள். முதலில்
உங்களை அர்ப்பணித்து விடுங்கள், பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டுமென்று துஆ செய்யுங்கள். உங்களுக்காக நாங்களும் துவா செய்வோம் என்பதையும்
நினைவில் கொள்ளுங்கள்.
சகோதரர் ஜெறோம் பௌல்டரை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால்
பின்வரும் முகவரியில் அவரை நீங்கள் சந்திக்கலாம்...
Jerome
Boulter,
LTAP
Language Teacher,
English
Language Centre,
Faculty
of Academic Services,
Taibah
University,
PO
Box 344
Medina
42353,
Kingdom
Saudi Arabia
cel.
+966 54 3328708
jerboulter@gmail.com
