Followers

Monday, December 31, 2018

தோழர் திருச்சி சிவாவின் அழகிய உரை.

தோழர் திருச்சி சிவாவின் அழகிய உரை.
"பாகிஸ்தான் சென்று விட பல வாய்ப்புகள் இருந்தும் அதனை எல்லாம் தூரமாக்கி இந்திய நாட்டின் மீது பற்று கொண்டு இங்கேயே தங்கி விட்ட இஸ்லாமியர்களுக்குத்தான் அதிக தேச பக்தி உண்டு. எங்கள் மீ து நம்பிக்கை வைத்து எங்களோடு தங்கி விட்ட உங்களை பாதுகாப்பது எங்கள் கடமையல்லவா?"
சங்கிகளுக்கு மிக அழகாக உணர்த்திய சிவாவுக்கு பாராட்டுக்கள்.


முத்தலாக் பற்றி சாருஹாஸன்....

முத்தலாக் பற்றி சாருஹாஸன்....
ஆண்களுக்கு தலாக் என்று உள்ளது போல் பெண்களுக்கும் அந்த உரிமையை கொடுக்கச் சொல்கிறார் சாருஹாஸன். சட்டம் தெரியாமல் பேசியுள்ளார் சாருஹாஸன். பெண்களுக்கும் தனக்கு பிரியமில்லாத கணவனை பிரிய 'குலா' என்ற சட்டம் உள்ளது. அதனை சகோதரர் சாருஹாஸனுக்கு யாராவது விளக்கினால் நல்லது.
இனி இது பற்றி சற்று விரிவாக பார்போம்....
மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும்.
கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும்.
விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.
ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அவர், ஆம் (தந்து விடுகிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 5273
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை மேற்கண்ட செய்தியிலிருந்து அறியலாம்.
ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர் அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையை கணவன் பெற்றுக் கொண்டு மனைவியை விட்டு விலகுமாறு கணவனுக்கு கட்டளையிட வேண்டும். திருமணத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்துவிடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவனிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவாகரத்துப் பெற்றதற்குப் பின்னால் பெண்கள் அதிக சிரமத்திற்கு ஆளாக நேர்வதால் இத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. எனவே சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.
பிடிக்காத கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பெண்னைக் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட பரீரா என்ற பெண்ணிற்கு பிரிந்த தன் கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பரிந்துரை செய்தார்களே தவிர நிர்பந்திக்கவில்லை.
பரீராவின் கணவர் முகீஸ் அடிமையாக இருந்தார். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஃகீஸ், பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா? என்று பரீராவிடம் கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா, (அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 5283
குலா சட்டத்தின் சுருக்கம்
ஒரு பெண்ணிற்குத் தன் கணவனைப் பிடிக்கவில்லையானால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும்.
அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராக எதை வாங்கினாளோ அதைக் கணவனிடமே திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும்.
அந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளை விட்டுப் பிரிந்துவிடுமாறு அந்தக் கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படாவிட்டாலும் கூட தலைவர் அந்தத் திருமண உறவை இரத்துச் செய்ய வேண்டும்.
கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைத் தெளிவாகக் கூற வேண்டியதில்லை.
கணவன் தலாக் கூறும் போது மூன்று மாதவிடாய் காலத்திற்குள் அவளைத் திரும்பவும் அழைத்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு இருப்பது போல் மனைவி குலா செய்து பிரியும் போது அழைத்துக் கொள்ள முடியாது.
தலாக் விடப்படும் போது மூன்று மாதவிடாய்க் காலம் வரை அவள் மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால் குலா அடிப்படையில் பிரியும் போது ஒரே ஒரு மாதவிடாய்க் காலம் வரை அவள் மறுமணம் செய்யக் கூடாது.
அதன் பிறகு தான் நாடுபவரை அவள் திருமணம் செய்து கொள்ளலாம். தான் குலா செய்தது தவறு என்று தெரிந்து குலா செய்த கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால் அந்தக் கணவனும் சம்மதித்தால் இருவரும் முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம்.


Sunday, December 30, 2018

ஓமன் நாட்டைச் சேர்ந்த அரபியர் தமிழ் பேசும் அழகு!

ஓமன் நாட்டைச் சேர்ந்த அரபியர் தமிழ் பேசும் அழகு!

நம் தாய் மொழியான தமிழை ஒரு அரபியர் பேசுவதை கேட்க ஆனந்தமாக உள்ளது. அதிலும் திருக்குறளை அழகுற சொல்வதை கேட்க இன்பம் கூடுகிறது. நீங்களும் கேட்டுப் பாருங்கள்.



Saturday, December 29, 2018

பாகிஸ்தானிலிருந்து –சீனாவிற்கு செல்லும், 1300 கிலோமீட்டர்

உலகத்தின் 8-வது அதிசயமாக கருதப்படும் எஞ்சினீரிங்க் தொழில்நுட்பம் தான் "மார்வெல் –காரகோரம் ஹைவே" ஆகும்!
கீழே இருக்கும் வீடியோவை காண்பதற்கு முன்னால்,
இதைப்பற்றிய பிரமிக்க வைக்கும் சில விவரங்கள்….
பாகிஸ்தானிலிருந்து –சீனாவிற்கு செல்லும்,
1300 கிலோமீட்டர் தூர மலைப்பாதை “காரகோரம் ஹைவே” ( Karakoram Highway )
இந்த பெருஞ்சாலை பால்டிஸ்தானில்
உள்ள கில்கிட்டை (gilgit -ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள ஒரு பகுதி ) பண்டைக்கால சில்க் ரோடுடன் இணைக்கிறது.
இதில் 806 கி.மீ. பாகிஸ்தான் எல்லைக்குள்ளும்,
மீதி தூரம் சீன எல்லைக்குள்ளும் அமைந்திருக்கிறது….
இந்தப் பாதையை அமைக்க 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட
உடன்பாட்டின்படி, இதன் பெரும்பாலான செலவு, சீனாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
1959-ல் துவங்கிய பணி இருபது ஆண்டுகள் கழித்து
1979-ல் முடிவடைந்து இருக்கிறது.
அதன் பின்னர் பல சமயம் பாதை பல இடங்களில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு,
புதுப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருந்து இருக்கிறது.
இந்த பாதையை உருவாக்கும் பணியில் –
நிலச்சரிவுகளாலும், மலையிலிருந்து சறுக்கி விழ நேர்ந்ததாலும், பணியில் இருக்கும்போதே – 810 பாகிஸ்தானியர்களும், 200 சீனர்களும் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.
காரகோரம் மலைச்சிகரங்களை கடக்கும்போது,
இந்த பாதை சுமார் 15,466 அடி அதாவது 4,714 மீட்டர்
உயரத்தில் செல்கிறது….
உலகத்தின் 26,000 அடி (எட்டாயிரம் மீட்டர்) உயரத்தில்
அமைந்திருக்கும் 5 சிகரங்களை இந்தப்பாதையில்
பயணிக்கும்போது பார்க்க முடியும்….
இதிலிருந்து நெருங்க முடியும்…
இனி – உலகத்தின் மிக அதிசயமான, ஆபத்தான (Thrilling) பாதையில் பயணம் போகலாம் வாருங்கள்...
மீண்டும் ஒரு முறை பாருங்கள்...
அப்போது தான் அதன் அருமையை உங்களால் உணர முடியும்!
மீண்டும் மீண்டும் பலமுறை பார்த்தும்,
இன்னும் பிரமிப்பு அடங்கவில்லை.
எப்படித்தான் திட்டம் போட்டு, எப்படித்தான் கட்டினார்களோ…?
அதுவும் அவ்வளவு உயரத்தில், செங்குத்தான சிகரங்களில்….!!!
அங்கு செல்ல முடியாவிட்டாலும்.. இந்த காணொளியை கண்டு ரசிக்கலாம் அல்லவா?
(யாரோ அடிக்கல் நாட்டி யார் யாராலோ தொடரப்பட்டு இன்று மோடியால் திறக்கப்பட்டிருக்கும் பாலத்துக்கு பிஜேபியினர் கொடுத்த பில்டப்பையும் இங்கு எண்ணிப் பார்தேன்.)


Friday, December 28, 2018

சுதந்திரம் கேட்டுப் போராடினாயா "நீதிபதி கேட்கிறார்."

1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.
சுதந்திரம் கேட்டுப் போராடினாயா "நீதிபதி கேட்கிறார்."
இல்லை,
நான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்!
அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது!
சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை!
கோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை.
தண்டனை வாங்கிக் கொண்டு, விடுதலை கனல் நெஞ்சில் எறிய சிறை புகுகிறான் அந்த இளைஞன்!
நாடு விடுதலை அடைகிறது...!
50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமண்ணில் தேர்தல் நடக்கிறது. அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர் ஆகிறார்.
அந்த வடநாட்டு இளைஞன் வாழ்வின் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறான்.
இவனோ, துறவி போல மக்கள் நல அரசியலை இன்றைக்கும் முன்னெடுத்துப் போராடுகிறான்.
அவன், ஒரு குறிப்பிட்ட வயதோடு அரசியல் போதும் என்று ஓய்வெடுத்துக் கொள்ளப் போகிறான். இவனோ, மரணிக்கும் வரையும் ஓய்வு கிடையாது என்று சொல்லி, மண்ணின் வளம் கொள்ளை போவதையும், நதிகளை மீட்கவும் காலம் பார்க்காமல் இன்றைக்கும் ஓடி ஓடி உழைக்கிறான்!
90 வயது முடியும் போது, ஓய்வில் இருக்கும் அந்த வடநாட்டு இளைஞனுக்கு "பாரத ரத்னா" விருது கிடைக்கிறது! இந்த தமிழ்நாட்டு இளைஞனுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்னும் பழிச்சொல் பரிசாகக் கிடைக்கிறது!
இதுதான் இந்தியாவின் அரசியல்! தர்மம் வெல்லும்...
1924 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் அந்த வடநாட்டு இளைஞர். 1925 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் இந்தத் தென்னாட்டு இளைஞர்.
அவர் அடல் பிகாரி வாஜ்பாய்...
இவர் அருமை அய்யா நல்லகண்ணு!!!
அன்று அவர் தேசத் துரோகி, இவர் விடுதலைப் போராட்ட தியாகி.
இன்று அவர் தேசபக்தர்... இவர் தேச விரோதி!!
பாரத் மாத்தாக்கி ஜே!!
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். - குறள் 510
குறள் விளக்கம்:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.
பக்தருக்கும் , பதருக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க தெரியாத தேசம், தியாகங்களை மதிக்கத் தெரியாத தேசம் அல்லலுறும்.
நண்பர் அனுப்பிய வாட்ஸ்அப் தகவல்.....


ரஞ்சித் ரஞ்சன் - இவரின் பாரளுமன்ற உரை

I am proud of Quran as Quranic guidelines on divorce are the best, govt. should enact them: MP Ranjeeta Ranjan
Mrs.Ranjeet Ranjan, INC,Bihar.
ரஞ்சித் ரஞ்சன் - இவரின் பாரளுமன்ற உரை
மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள மசோதா என்பது பெண்கள் சம்பந்தப்பட்ட மட்டும் அல்ல அது குடும்பவியல் சார்ந்தது இதன் சாதகம்,பாதகம் குடும்பம் சம்மந்தப்பட்டது.
இந்த மாசோதா விவாதம் பொருட்டு திருக்குர்ஆனை உள்ளார்ந்து பொருள்பட படிக்க நேரிட்டது
இதில் சூரத்துன் நிசாவில் தலாக் குறித்த ஐந்து அம்சங்களை தெளிவாககூறப்பட்டுள்ளது., மேலும் "சூரத்துல் பக்ரா"வில் தலாக் சட்டம் குறித்த தெளிவான வழிகாட்டுதல்
உள்ளன .
எந்தெந்த காரணங்களுக்காக பெண் விவாகரத்து கோரலாம், எந்தெந்த காரணங்களுக்காக ஆண் விவாகரத்து கோரலாம் என்ற தெளிவான சட்ட நடைமுறை உள்ளது.
மூன்று தாலாக் கூற குறைந்தது 90 நாட்கள் கால இடைவெளி தேவைப்படுகிறது இதில் ஒருமுறையாவது கணவன் மனைவி ஒன்று சேர்ந்தால் கூட மீண்டும் முதல் முறையிலிருந்தே சட்டம் செல்லுபடியாகும்.
இவ்வளவு தொலைநோக்கு பார்வை, உலகில் எந்தச் சட்டத்திலும் இல்லை மேலும் இதை இந்திய விவாகரத்து சட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும் ஆனால் நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள் உங்கள் எண்ணம் தவறு, உங்கள் நோக்கம் தவறு.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்பது வெகு சொட்பமே இதை அளவுகோலாக கொண்டு இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது
இதில் பெண்களுக்கான நீதி எங்குள்ளது? கணவனை சிறைக்கு அனுப்பிய பின் அந்தப் கணவன் மூன்று வருடம் கழித்து மீண்டும் விவாகரத்து தருவானேயன்றி ஜீவானாம்சம் தரமாட்டான், இதில் குழந்தைகளின் பொறுப்பு யாருக்கு சார்ந்தது? உங்களுக்கு பெண்களின் மீதோ, முஸ்லீம்கள் மீதோ எந்த அக்கறையும் இல்லை.
இந்த மசோதா நிறைவேற்றினால் முஸ்லீம் பெண்கள் பஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் இதன் மூலம் முஸ்லீம்கள் வாக்கு பெற்றுவிடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு ஒரு ஓட்டும் கிடைக்காது.
இந்த மசோதா பெண்கள் நலன் சார்ந்தது எனில் முஸ்லீம் பெண்களின் மீது மட்டும் கரிசனம் ஏன் இந்து பெண்கள் மீது இந்த கரிசனம் இல்லை எத்தனை பலாத்கார வழக்குகள், எத்துனை விவாகரத்துகள் இந்து கணவன்கள் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்களே இவர்களுக்காக ஏன் உங்களால் சட்டம் இயற்றவில்லை.
சில ஆண்கள், தவறு செய்யும் ஆண்கள் அனைத்து சமூகத்திலும் இருக்கிறார்கள் அவர்கள் சட்டத்தையும் தவறாக பயன்படுத்துபவர்களே அவர்களை தடுக்க நடவடிக்கை எடுங்கள்.
முஸ்லீம் சமூகம் தலாக் சட்டத்தை புரிந்து கொள்ளவும் இல்லை அதன் இயல்பில் அதை கடைபிடிக்கவும் இல்லை, இது புரிதல் மற்றும் பின்பற்றுதல் குறைபாடு அதை இந்த சமுகமே சட்டத்தின் அம்சங்களை அனைத்து முஸ்லிம்களும் எடுத்து கூற வேண்டும்.
முஸ்லிம் பெண்களில் கல்வியறிவு குறைந்தே உள்ளது. இந்துப்பெண்களில் கல்வி கற்றவர்கள் மிகுந்து உள்ளனர். உங்களது சட்ட நுணுக்கங்களை புரிந்து தனது வழக்கை எங்கு கொண்டு செல்வாள்?
அவளுக்கு யார்தான் உதவி புரிவார்கள். கணவனை சிறைக்கு அனுப்பி விட்டு அவளது, அவள் குழந்தைகளுக்கு யார் செலவு செய்வார்கள்.
நீங்கள் அவளை அவளது சமுதாயத்திலிருந்து வெளியேற்றி அவளை நிர்க்கதியாக்கும் வகையில் சட்டம் இயற்ற முயற்சிக்கின்றீர்கள்.
இஸ்லாமிய விவாகரத்து சட்டங்களை முஸ்லிம் அறிஞர்கள் துணையுடன் இய்ற்றப்பட வேண்டும்.
என்னைக்கேட்டால் குர்ஆனின் அடிப்படையில் விவாகரத்து சட்டம் தான் ஆக சிறந்த சட்டமாக இருக்கும்.
பெண்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் என்பதே எனது கோரிக்கை.
thanks :Zafar Rahmani


Monday, December 24, 2018

இந்து முன்னணி பிரமுகர் மாடு திருடி மாட்டிக் கொண்டார்.

இந்து முன்னணி பிரமுகர் மாடு திருடி மாட்டிக் கொண்டார்.
திருச்செந்தூரில் பல நாட்களாக தோட்டத்தில், வீடுகளில் கட்டப்படடிருந்த கறவை மாடுகள் காளை மாடுகள் திடீர் திடீரென்று காணாமல் போயுள்ளன. வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் ஒரு மினி வேனில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதைப் பார்த்து டிரைவரை விசாரித்துள்ளனர். முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே டிரைவரை காவலர்கள் நன்றாக கவனித்துள்ளனர். உடனே அவன் உண்மையை சொல்ல ஆரம்பித்து விட்டான்.
அதாவது ஏழை விவசாயிகளிடமிருந்து காணாமல் போன பல மாடுகளை இந்த திருட்டு கும்பல் பல காலமாக திருடி விற்று வந்துள்ளது. இதற்கு தலைவனாக இருந்தவன் திருச்செந்தூர் இந்து முன்னணி பிரமுகர் கந்தன். இவனோடு சேர்ந்து முருகேஷன், கார்த்தி, ஹனீஃபா என்ற மூவரும் கூட்டு களவாணிகளாக திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந்து முன்னணி திருட்டு கும்பலில் ஹனீஃபா என்ற முஸ்லிம் எதற்கு என்று கேட்கலாம். அதாவது கோமாதாவை திருடும் போது மாட்டிக் கொண்டால் ஹனீஃபாவை மாட்டி விட்டு விட்டு இவர்கள் தப்பித்து விடலாம் என்பது திட்டம். இந்த கிறுக்கு கும்பல் அதனையும் காவல் துறையிடம் ஒப்பித்துள்ளது. அர்ஜூன் சம்பத்தை பிடித்து விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளி வரலாம்.
இந்த திருட்டு கும்பல் கோமாதாவின் மீது பாசமழை பொழிவதெல்லாம் வெளி வேஷம் என்பது தெரிகிறதல்லவா? வட மாநிலங்களில் மாட்டுக் கறி வைத்திருந்தார் என்று பொய் கூறி முதியவரை கொன்றது இந்த காட்டு மிராண்டி கும்பல். கோமாதாவை ஏழை விவசாயிகளிடமிருந்து திருடி 25000 பெறுமானமுள்ள மாடுகளை அடிமாடுகளாக 3000 க்கும் 4000 க்கும் விற்ற இந்து முன்னணி திருட்டுக் கும்பலுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.
நேற்று (24-12-2018) நியூஸ்18 சேனல் இதனை ஒளிபரப்பியது. அந்த செய்தியை பதிவதற்காக எனது அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். உண்மை தகவலை துணிந்து பதிந்த நியூஸ்18 சேனலுக்கு நன்றிகள். இதே வட மாநிலமாக இருந்திருந்தால் சம்பவத்தையே மாற்றி முஸ்லிம்களை பலிகடா ஆக்கியிருப்பார்கள்.




நீச்சல் வீராங்கனை "கசனா இவிகா"

ரஷ்யாவில் பயிற்சி பெற்ற மொராக்கோவின் நீச்சல் வீராங்கனை "கசனா இவிகா" நேற்று காசா பிலாங்காவில் சத்திய இஸ்லாத்தை ஏற்று கொண்டார். தனது பெயரை "கதீஜா இவிகா" என்று மாற்றி கொண்டார்.


மனு ஸ்ருமிதியின் சில சட்டங்களை கீழே தருகிறேன்

விளை நிலங்களை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கார்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் தாரை வார்ப்பதைக் கண்டு நமது மனம் துடிக்கிறது. ஆனால் ஆளும் வர்க்கத்துக்கு சிறிது கூட மன உளைச்சல் வருவதில்லை. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆளும் வர்க்கமான மேல் சாதியினர் வாழையடி வாழையாக சிறு வயதிலிருந்தே மனு ஸ்மிருதிகளை படித்து வருகின்றனர். சூத்திரன் என்றால் அவனுக்கு சட்டம் இதுதான்: பிராமணன் என்றால் அவனுக்கு சட்டம் இதுதான் என்று முன்பே வகுக்கப்பட்டு விட்டதால் ஆளும் வர்க்கத்துக்கு ஏழைகளை வஞ்சிக்கிறோமே என்ற மன உளைச்சல் வருவதில்லை. எட்டு வழி சாலையாக இருக்கட்டும், தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையாக இருக்கட்டும் எங்கும் சாமான்யன் பழி வாங்கப்படுவதை பார்த்து வருகிறோம்.
மனு ஸ்ருமிதியின் சில சட்டங்களை கீழே தருகிறேன் படித்துப் பாருங்கள்.
மனு ஸ்ருமிதி சொல்லும் சட்டமானது......
“ஒரு பிராமணன் ஒரு சூத்திரனுடைய பொருள்களை முழு மன அமைதியோடு எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் சூத்திரனுக்கென்று எதுவும் சொந்தமில்லை. அவனது சொத்துக்களை அவனது எஜமானன் எடுத்துக் கொள்ளலாம். (இயல் 8, பாடல் 417)
சூத்திரன் அவனது எஜமானனிடமிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவன் அடிமைத் தொழில் செய்வதிலிருந்து விடுவிக்கப் படுவதில்லை. அடிமைத் தொழில் செய்வது அவனோடு பிறந்ததாகும். அப்படி இருக்கையில் யாரால் அவனை அதிலிருந்து விலக்க முடியும்? (இயல் 7, பாடல்கள் 412-414)
நாரத ஸ்மிருதி சொல்லுகிறது:
சூத்திர சாதியைச் சார்ந்தவர்கள் இரு பிறப்பாளரான ஆரிய சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராகப் பொய்க் குற்றம் சாட்டுவார்களேயானால் அரசன் தன்னுடைய அலுவலர்கள் மூலம் அவர்களது நாவைப் பிளந்து விட வேண்டும். மற்றும் அரசன் அவர்களை கழுமரத்தில் ஏற்றிட வேண்டும்.
ஒரு சூத்திரன் இருபிறப்பாளரை கேவலமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி விட்டால், அவனது நாவை அறுத்து விட வேண்டும். காரணம் அவன் கீழ் சாதிக்காரன்.
அவன் அவர்களது பெயரையோ அல்லது சாதியையோ இழிவாகப் பேசிவிட்டால், பத்து அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பிகளைப் பழுக்கக் காய்ச்சி அவனது வாயில் செலுத்திவிட வேண்டும்.

அவன் துடுக்குத்தனமாக அவரது பணியைப்பற்றிப் பிராமணனுக்கு அறிவுரை சொல்வானேயாகில், அரசன் அவனது வாயிலும் காதுகளிலும் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிட வேண்டும்.
எந்த ஒரு உறுப்பால் கீழ்சாதியைச் சார்ந்தவன் ஒரு பிராமணனைத் தாக்குகிறானோ அந்த உறுப்பைத் துண்டித்திட வேண்டும். அதுதான் அவன் செய்த குற்றத்திற்குத் தக்க பிராயச்சித்தமாகும்.
ஒரு கீழ் சாதியில் பிறந்தவன் ஒரு உயர்சாதிக்காரன் அமர்ந்திருக்கும் இடத்தில் சமமாக உட்கார முயற்சித்து விட்டாலும் அவனது இடுப்பில் சூடு போட்டு அடையாளமிட்டு அவனைத் தேசப் பிரஷ்டம் செய்திட வேண்டும். அல்லது அரசன் தக்க நடவடிக்கை எடுத்து அவனது ஆசனப் பகுதியைச் சிதைத்திட வேண்டும்.
அவன் அகங்காரத்தால் மேல்சாதிக்காரன் மீது துப்பி விட்டால், அரசன் தக்க நடவடிக்கை எடுத்து அவனது இரு உதடுகளையும் அறுத்து விட வேண்டும். மூத்திரத்தை மேல் சாதிக்காரன் மீது பெய்துவிட்டால், அவனது ஆண்குறியை அறுத்துவிட வேண்டும். மேல் சாதிக்காரன் மீது வாயு படிய விட்டால், அவனது குதத்தை அறுத்துவிட வேண்டும்.” (இயல் 15, பாடல்கள் 22-27)

என்றும் மனித நேய பணியில் முன்னணியில்.....

என்றும் மனித நேய பணியில் முன்னணியில்.....
TNTJ ரியாத் மண்டலத்தின் இரத்ததான சேவையை பாராட்டி கிங் சவுத் (சுமைஸி) மருத்துவமனையின் சார்பாக பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது.
சவுதி அரேபியா சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (சுமைஸி) மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி ஆகிய மருத்துவமனைகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக பல்வேறு இரத்ததான முகாம்கள் மற்றும் அவசர இரத்ததானம் செய்து பல யூனிட்கள் குருதி கொடையளிக்கப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில்-2018 மட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக, ரியாத் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இரத்ததான முகாம்களில் சுமார் 1517க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு உடல் தகுதி மற்றும் நேரம் பற்றாக்குறை அடிப்படையில் சுமார் 1321 நபர்கள் வரை குருதி கொடை அளித்ததின் அடிப்படையில் (594.45 மில்லி லிட்டர்கள்) வரை இரத்தம் தானமாக கொடுக்கப்பட்டுள்ளது...
அல்ஹம்துலில்லாஹ்!
இந்த மனித நேய சேவையைப் பாராட்டி கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (சுமைஸி) மருத்துவமனையின் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த இரத்ததான விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனை சுமைஸி மருத்துவமனையின் இரத்த வங்கி தலைவர் டாக்டர். இப்ராஹிம் அல் தலீல் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மைக் குழு தலைவர் சகோ.எம்.எஸ் சுலைமான் அவர்களிடம் வழங்கினார்கள்.
மேலும் சுமைஸி மருத்துவமனை இரத்த வங்கி தலைவர் டாக்டர். இப்ராஹிம் அல் தலீல் அவர்கள் கூறுகையில், “மறுமை நன்மையை மட்டும் நாடி செய்யப்படும் இது போன்ற மனித நேய பணி பாராட்டுக்குரியது” என்றும் இது போன்ற பிறருக்கு உதவுவதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய சமூகத்திற்கு ஏவினார்கள், அதனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருவது மிக்க மகிழ்ச்சி என்று தனது வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
இது போன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம், உலக இரத்த நன்கொடையாளர்கள் தினம் மற்றும் மருத்துவமனைகளின் சிறப்பு அழைப்புகளின் மூலம் நடப்பாண்டில்-2018 மட்டும் இது வரை மூன்று பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சவுதி அரேபியா சுகாதாரத் துறை சார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் ஏராளமான விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களை இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் பெற்றுள்ளது.
—எல்லா புகழும் இறைவனுக்கே—
தகவல் உதவி
TNTJ
ரியாத் மண்டலம்





Saturday, December 22, 2018

இறந்த கணவருக்காக பள்ளிவாசல் கட்டிய சவூதி நாட்டு பெண்

இறந்த கணவருக்காக பள்ளிவாசல் கட்டிய சவூதி நாட்டு பெண்

இறந்த கணவருக்காக தன் கணவர் பெயரிலேயே பள்ளிவாசல் கட்டியுள்ளார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்மணி. 30 வருடமாக வந்த கணவரின் பென்சன் பணத்தை சேமித்து செய்த இந்த செயலால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

பொதுவாகவே, கணவனிடம் வாழப் பிடிக்கவில்லை என்று விவாகரத்து செய்யும் பெண்களையும், கணவன் தலையில் கல்லைப் போட்டுக் கொள்ளும் பெண்களைப் பற்றிய செய்திகளையும் தான் அடிக்கடி நாம் படித்திருக்கிறோம். இது போக ஜீவனாம்சமாக பல கோடி தரவேண்டும், ஆடம்பர வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும் என்று நீதிமன்றம் செல்லக்கூடிய பெண்கள் மத்தியில், அன்பு, பாசம் மற்றும் காதலை பறை சாற்றும் விதமாக முன்னுதாரணமாக இருக்கிறார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்.

இறந்த தன் கணவருக்காக, அவர் பெயரில் வரும் பென்சன் பணத்தை சிறுக, சிறுக சேமித்து, தன் கணவர் பெயரிலேயே ஒரு பள்ளிவாசலை கட்டியுள்ளார் ஒரு பெண்மணி. இது குறித்து இப்பெண்ணின் மகன், தனது தாயாரை பாராட்டி பதிவு செய்துள்ள ட்விட்டர் டிரண்டாகி வருகிறது.

இவரது மகன் முஹம்மது அல் ஹர்பி தனது ட்விட்டரில்,

நீங்கள் எவ்வளவு சிறந்தவர் அம்மா, நீங்கள் நினைத்திருந்தால் அத்தாவின் பென்சன் பணத்தில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு ரியாலையும் சேமித்து வைத்து தந்தையின் பெயரிலேயே பள்ளிவாசலை உருவாக்கியுள்ளீர்கள். தந்தைக்கு இறைவன் சொர்கத்தை அருள்வானாக” என்று பதிவு செய்துள்ளார்.

https://twitter.com/News_Brk24/status/1001488541052960768/photo/1

இந்த பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சொர்க்கத்தில் உங்கள் இருவரையும் இணைப்பானாக என்று மக்கள் அவர்களுக்கு வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள். நாமும் அதே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மும்தாஜ் மீது கொண்ட காதலால் தாஜ்மகாலை கட்டினார் ஷாஜகான். அது காதலின் அடையாள சின்னமாக கருதப்பட்டு, உலக அதிசயமாக இருக்கிறது. ஆனால் அதை விட, இறந்த கணவருக்காக 30 வருடங்களாக சேமித்து வைத்த பணத்தில் இந்த ஏழை பெண்மணி கட்டிய பள்ளிவாசல் சிறந்தது என்றால் மிகையாகாது.

இறந்த கணவரை நினைத்து உருகுகிறார் இப்பெண். ஆனால் நாமோ, வாழும் போதே சின்ன சின்ன சண்டைகளை எல்லாம் பெரிதாக்கி இறுதியில் விவாகரத்தில் வந்து நிற்கிறோம். இப்பெண்மணியை போல, கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால், விவாகரத்து என்ற பேச்சிற்கே இடமிருக்காது என்பதே உண்மை. ஒவ்வொரு கணவரும் தன் மனைவிக்கும், ஒவ்வொரு மனைவியும் தன் கணவருக்கு இதை பகிர்ந்து அன்பை வெளிப்படுத்துங்கள்


Wednesday, December 19, 2018

தந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள்

*தந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்தது....
சவுதி அரேபிய தலைநகரம் ரியாத் நீதிமன்றத்தில் 80 மற்றும் 70 வயதான இரண்டு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.....
*வழக்கிற்கான காரணம்தான் விசித்திரமானது.
100 வயதிற்கும் மேலான தனது தந்தையை கடந்த 40 வருடங்களுக்கும் மேல் கவனித்து வருவது தனது 80 வயதான அண்ணன் என்றும், இனியுள்ள காலம் தந்தையை நான் கவனித்துக்கொள்கிறேன் என்று சொன்ன பிறகு அண்ணன் அனுமதிக்கவில்லை, என்றும் எனவே நீதிமன்றம் தந்தையை கவனிக்கும் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் 70 வயதான சகோதரன் வழக்கு தொடர்ந்தார்...
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. என்ன வந்தாலும் தந்தையை கவனிக்கும் பொறுப்பை யாருக்கும் நான் விட்டுத்தரமாட்டேன் என்று அண்ணனும், கடந்த 40 வருடங்களாக அண்ணன் தந்தையை கவனித்து வருவதால் இனிமேலுள்ள காலம் தந்தையை கவனிக்கும் பொறுப்பு தனக்கு வேண்டும் என்று தம்பியும் வாதம் செய்தனர்.
நீதிபதிக்கு ஒரு முடிவு எடுக்க முடியாமல் திணறினார். இருந்தாலும் ஒரு தீர்ப்பு சொல்லியாக வேண்டுமே....எனவே இனியுள்ள காலம் இரண்டு பேரும் தந்தையை மாறி மாறி கவனித்து கொள்ளலாமே என்ற கருத்தை சொன்னார். ஆனால் இதற்கு இரண்டு பேரும் உடன் படவில்லை.
நீதிபதி தந்தையிடம் கருத்து கேட்டார். தந்தை எனக்கு என்னுடைய மக்கள் எல்லாரும் சமம். அவர்களிடம் எனக்கு வேற்றுமை காண முடியாது என்று அழுது கொண்டே சொன்னார்.
*நீதிபதி மீண்டும் குழப்பத்தில்.....
கடைசியில் நீதிபதி ஒரு முடிவுக்கு வந்து தனது தீர்ப்பைக் கூறினார்.*
கடந்த 40 வருடங்களாக தந்தை பெரிய மகனின் கவனிப்பில் இருந்து வந்துள்ளார். இப்போது பெரிய மகனுக்கு 80 வயதாகி முதுமை அடைந்துள்ளதாலும், மேலும் தந்தையை கவனிக்கும் பொறுப்பு மக்கள் அனைவரின் கடமை என்பதாலும் இனிவரும் காலம் தந்தையை கவனிக்கும் பொறுப்பை இளைய மகனிடம் ஒப்படைக்கிறேன்.
தீர்ப்பைக் கேட்டு அழுது புலம்பிய பெரிய மகன் நீதிபதியைப் பார்த்து, "நீங்கள் சொர்க்க வாசலில் இருந்து என்னை அகற்றியுள்ளீர்கள்.. என்னுடைய சொர்க்க வழியை நீங்கள் அடைத்து விட்டீர்கள்....”
பெரிய மகனாகிய முதியவர் அழுது புலம்பும் இந்த காட்சியுடன் கூடிய செய்தியை சவுதி செய்தித்தாள்களும் ஊடகங்களும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன...
இந்த வழக்கு தன்னுடைய வாழ்க்கையில் ஒரு வேறுபட்ட வழக்கு என்றும், இந்த வழக்கில் தீர்ப்பு கூற தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும் நீதிபதி கூறினார்....இதையும் செய்தித் தாள்கள் வெளியிட்டன.
*தாய் தந்தையரை கால்பந்தைப் போல் அங்கும், இங்கும் தட்டி விளையாடுவதும், முதியோர் இல்லங்களில் அநாதைகளைப்போல் கொண்டு தள்ளுவதும் நடக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு அபூர்வமான வழக்கு வந்ததை பார்க்கும் போதுதான் இந்த வழக்கு ஏன் இவ்வளவு பிரபலமடைந்தது என்று தெரிந்தது.
தாய் தந்தையருக்கு சேவை செய்து சுவர்க்கத்தை அடையும் நற்பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக....

Tuesday, December 18, 2018

விசாரணைக் கைதிகளை 'தீவிரவாதி' என்று முத்திரை குத்தும் சன் டிவி!

விசாரணைக் கைதிகளை 'தீவிரவாதி' என்று முத்திரை குத்தும் சன் டிவி!
கோவையில் இந்துத்வா தலைவர்களை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக ஐந்து இஸ்லாமியர்களை கைது செய்து அவர்கள் வீட்டில் இன்று சோதனை நடைபெறுவதாக இன்று (19-12-2018) சன் செய்திகளில் செய்தி வாசிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர் 'தீவிரவாதி இஸ்மாயீல்' என்றும் 'தீவிரவாதி ஹூசைன்' என்றும் திரும்ப திரும்ப சொல்கிறார். விசாரணைக் கைதிகளை 'தீவிரவாதி: என்று முத்திரை குத்த இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? ஸ்டாலின் சன் குழுமத்தை விசாரித்து உண்மையை அறிய வேண்டும்.
பொதுவாக தமிழகத்தை பொருத்த வரை இந்துக்களும், முஸ்லிம்களும், கிருத்துவர்களும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். பேரிடர் காலங்களில் இஸ்லாமியர்கள் ஓடோடி வந்து தங்கள் உழைப்பையும், பொருளாதாரத்தையும் வாரி இறைத்து தொப்புள் கொடி உறவுகளின் உயிரையும் உடமைகளையும் காக்கின்றனர். பசித்தவர்களுக்கு உணவளிக்கின்றனர். இவ்வளவு வாஞ்சையோடு வாழ்ந்து வரும் இஸ்லாமியர் இந்துக்களை கொல்ல முடிவெடுப்பார்களா? அப்படி முடிவெடுப்பவன் ஒரு முஸ்லிமாக இருக்க முடியுமா? இந்துத்வா தலைவர்கள் கொல்லப்பட்டால் அதனால் பலனடைவது யார்?
சிறு பிள்ளைக்கும் தெரியும் இந்துத்வாக்கள் கொல்லப்பட்டால் பிஜேபியின் ஓட்டு வங்கி தமிழகத்தில் அதிகரிக்கும். சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது. மண் குதிரையான அதிமுகவோடு பிஜேபி களம் காணப் போகிறது. சில சீட்டுக்களையாவது பெற்று விட பிஜேபி முயலும். அதற்காக இது போன்ற கைது நடவடிக்கைகள் அதிகமாக நிகழலாம். பிஜேபியினரே அவர்கள் அலுவலகத்தக்கு தீ வைத்து விட்டு அதனை இஸ்லாமியர் மேல் போடலாம். அவர்கள் ஆட்களை அவர்களே கொன்று விட்டு அதனையும் இஸ்லாமியர் மேல் போடலாம். காவல்துறையும், நீதித் துறையும், உளவு அமைப்புகளும் அவர்களின் கையில் இருப்பதால் எதனையும் அவர்களால் சாதிக்க முடியும். எனவே இனி வரும் காலங்களில் இஸ்லாமியர் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது. தவ்ஹீத் ஜமாத், தமுமுக, எஸ்டிபிஐ போன்ற அமைப்புகள் பகைமைகளை மறந்து ஒன்று பட்டு எதிரிகளை வீழ்த்த முன் வர வேண்டும். தவறினால் வட மாநிலங்களின் நிலையையே நாம் இங்கும் காண்போம்.
அத்தகைய துர்பாக்கியமான நிலையிலிருந்து இறைவன் நம்மைக் காப்பானாக!

Sunday, December 16, 2018

'பேடி பச்சாவ்' என்று ஊருக்கு ஊர் சென்று மோடி கத்துவது வெறும் பகல் வேஷமே...


அலஹாபாத்தில் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் மோடிக்கு எதிராக ஒரு பெண் குரல் எழுப்பினார். அவரை பலரும் சேர்ந்து அடிக்கும் காட்சியைத்தான் பார்க்கிறோம். சோரம் போன இந்திய ஊடகங்கள் இதனை அதிகம் வெளியில் கொண்டு வரவில்லை. பாஜக பாசிச ஆட்சியில் கருத்து சுதந்திரத்தக்கு இதுதான் மதிப்பு.
'பேடி பச்சாவ்' என்று ஊருக்கு ஊர் சென்று மோடி கத்துவது வெறும் பகல் வேஷமே....

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி.....

அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி.....
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வட சென்னை மாவட்டம் தாதாஷா மக்கான் கிளையில் இன்று V.விக்னேஷ்வரன் வயது 23 என்ற மாற்றுமத சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்,
பெயர் ,சமீர் முஹம்மது இவருக்காகவும், இஸ்லாத்தில்  கொள்கையோடு பயனிக்கவும்
துவா செய்யவும்.
திருக்குர்ஆன் தமிழாக்கம் மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் 3 புத்தகங்கள் வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்


Wednesday, December 12, 2018

ஆபத்து காலங்களில் உங்களுக்கு உதவுவது யார்?


வட மாநில மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளார்கள்.

தனக்கு கிடைத்த தற்காலிக வெற்றிகளால் திமிர், அகங்காரம், ஆணவம், கிண்டல், கேலி, கொலை வெறி என்று சுற்றித் திரிந்த இவருக்கு வட மாநில மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளார்கள்.
அனைத்து விதமான கிண்டல் கேலிகளையும் புன் முறுவலோடு எதிர் கொண்ட ராகுலுக்கு மக்கள் அங்கீகாரத்தையும் தந்துள்ளார்கள்.
இது தொடரட்டுமாக!


முஸ்லிமாக மாறியவுடன் 'பாய்' என்று கூப்பிடும்

இந்துத்வாவாதிகள் முஸ்லிம்களை மட்டும் குறிப்பாக எதிர்க்க காரணம் மதப் பற்றா அல்லது சாதிப்பற்றா?

சாதி இந்து ஒரு தலித்தை 'ஏய்' என்று கூப்பிடுபவன் முஸ்லிமாக மாறியவுடன் 'பாய்' என்று கூப்பிடும் அதிசயம் நிகழ்கிறதா இல்லையா?




Sunday, December 09, 2018

பிராமின் இனத்தை சேர்ந்த சகோதரி மஹாலஷ்மி இஸ்லாத்துக்கு வந்த கதை...


உய்குர் முஸ்லிம்களின் தொடரும் துயரம்.....

உய்குர் முஸ்லிம்களின் தொடரும் துயரம்.....

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று தங்கி விட்ட உய்குர் முஸ்லிமான அய்தின் அன்வர் தரும் செய்திகளே இவை......

'கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் பல உய்குர் முஸ்லிம்கள் விசாரணையின்றி சித்தரவதை கூடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அரபியில் பெயர் வைத்தாலோ இஸ்லாமிய நடைமுறைகளை பின் பற்றினாலோ உங்களை விசாரணையின்றி அழைத்துச் செல்கின்றனர். அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கம்யூனிஷ சித்தாந்தை பின்பற்றவில்லையானால் முடிவில் கொன்று விடுகின்றனர். உடலைக் கூட உறவினர்களிடம் ஒப்படைப்பதில்லை. துர்கிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் இன்று வரை வீடு திரும்பவில்லை.

சித்தரவதைக் கூடம் மிகவும் கொடூரமானது. பாம்புகளை விடுதல், பற்களை பிடுங்குதல், நகங்களை பிடுங்குதல் என்று வெறித்தனமாக தங்கள் சித்தாந்தத்தை அந்த மக்கள் மேல் புகுத்துகிறார்கள். எனது உறவினர் 2017ல் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவரை பிணமாகத்தான் வெளிக் கொண்டு வந்துள்ளனர். சிலருக்கு உடல்களும் கிடைப்பதில்லை. மற்றொரு உறவினர் தனது உறவினரை பார்க்க அமெரிக்கா சென்றதை காரணம் காட்டி 15 வருட தண்டனையை கொடுத்துள்ளார்கள்.....' இவ்வாறாக அந்த பெண்மணியின் பேட்டி தொடர்கிறது.

எந்த ஒரு சித்தாந்தமும் வன்முறையாலோ, சித்திரவதையாலோ பரவி விடாது. மக்களின் மனதை அது வெல்ல வேண்டும். இதனை அந்த சீன மூடர்கள் சீக்கிரமே உணர்ந்து கொள்வார்கள். வன்முறையால் ஒரு சித்தாந்தம் நிறுவப்பட வேண்டுமானால் குஜராத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் இன்று இந்துக்களாக மாறியிருக்க வேண்டும். அந்த அளவு மோடியாலும், அமீத்ஷாவாலும் சித்தரவதையை அனுபவித்தவர்கள் முஸ்லிம்கள். உயிரைத்தான் விட்டார்களோயொழிய ஒரு முஸ்லிமும் இதுவரை இந்துவாக மனம் மாறவில்லை. உலகம் முழுக்க இதுதான் நிதர்சனம். வாள் முனையில் எந்த சித்தாந்தமும் வெற்றி பெறாது என்பதனை பாசிச வாதிகள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.


Friday, December 07, 2018

சிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும்....

சிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும் பல குழந்தைகளை சகோதரர் காலித் தனது அரவணைப்பில் வளர்த்து வருகிறார். அந்த பிஞ்சு குழந்தைகள் அவர் மீது பாசத்தை பொழிகின்றன. இறைவன் சகோதரர் காலிதைப் போன்ற பல தனவந்தர்களை அந்த நாட்டுக்கு தரட்டுமாக!


சுபோத் குமார் சிங்கின் மகன் அபிஷேக் சிங்கின் பேட்டி

சுபோத் குமார் சிங்கின் மகன் அபிஷேக் சிங்கின் பேட்டி

'எனது தந்தை பசு காவலர்களால் கொல்லப்பட்டு விட்டார். எனது தந்தை எப்போதுமே இந்து, முஸ்லிம், சீக் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. அனைவரையுமே ஒரே கண்ணோடு பார்த்தார். இன்று இந்து, முஸ்லிம் என்ற பிரிவினையில் எனது தந்தையை திட்டமிட்டு கொன்று விட்டார்கள். எனது தந்தையை இனி யார் மீட்டுத் தருவார்'

இந்த மகனின் கண்ணீருக்கு யோகி ஆதித்யநாத்தின் தேச விரோத கும்பல் என்ன பதிலை வைத்துள்ளது.


Thursday, December 06, 2018

பாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது!

பாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது!
பாலஸ்தீன் ஹெப்ரானில் உள்ள சிமியா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு இன்னும் சில தினங்களில் மாணவர்கள் வருகை தரும் நேரம் பார்த்து இஸ்ரேலிய ராணுவம் இடித்து தரை மட்டமாக்கியுள்ளது. 40000 டாலர் செலவில் கட்டப்பட்ட இப்பள்ளி 7 வகுப்பறைகளை கொண்டது. 50 மாணவர்கள் பாடம் படிக்கும் வகையில் கட்டப்பட்டிருந்தது. பாலஸ்தீனர்கள் கல்வியறிவு பெற்று விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளது இஸ்ரேலிய பாசிச அரசு.
தகவல் உதவி
மில்லிகெஜட்
06-12-2018

தாங்கள் மட்டும் அறிவு பெற வேண்டும் மற்றவர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்ற பாசிச மனப்பான்மை நம் நாட்டிலும் அரங்கேறுவதைக் காண்கிறோம். நீட் தேர்வு போன்றவற்றை புகுத்தி மற்ற இனத்தவர் மருத்துவம் போன்ற சிறந்த படிப்புகளில் நுழைந்து விடக் கூடாது என்பதில் இங்கும் உள் அடி வேலை நடப்பதை பார்க்கிறோம். பாசிசவாதிகளின் எண்ண ஓட்டம் எப்போதுமே ஒரே திசையிலேயே பயணிக்கும் என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.



மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA…

டிசம்பர் 6 போராட்டம்: 

களத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA…!!!


திருப்பதி ஏழுமலையானே புத்தரின் நின்ற கோலம் - ஆய்வு நூல்

திருப்பதி ஏழுமலையானே புத்தரின் நின்ற கோலம் என்று ஆய்வு செய்து மும்பையில் ஆய்வு நூல் வெளி வந்துள்ளது.
“Tirupati Balaji was a Buddhist Shrine” என்ற ஒரு நூல் வெளிவந்துள்ளது. மராட்டியத்தைச் சேர்ந்த டாக்டர் கே. ஜமனாதாஸ் F.R.C.S. என்பவர் எழுதியுள்ளார். இந்நூலைப் பற்றிய குறிப்புரை இதோ: Lord Venkateswara, the presiding deity on the famous Tirumali Hills, popularly known as Balaji of Tirupati, is an important Vaishnava Shrine of South India. The Nature of Lord Venkateswara has always been a matter of dispute for centuries. Some consider Him as Vishnu some as Siva, Some as Sakti, some as Skanda and some as Harihara. In fact it was an old Buddhist shrine, murthi itself being Buddhist; and it was taken over for Brahmanic worship during the general fall of Buddhism. He was a god of tribal Buddhist and was,Vaishnavized by saints and latter sanskritized and brahmanized by pundits to his present form. The weapons on Him are not original but provided at a latter date. How this was brought about, is explained with all historical and archaeological evidences. Cults of Vitthala of pandarpur, Jagannatha of Prui, Ayappa on Sabarimala etc., which were originally Buddhist are discussed and many other Buddhist shrines which were hinduized are described and the history of India in general and South India in particular, from seventh to tenth century, during the period of fall of Buddhism and rise of Brahmanic Tirupati, is traced.”
"வெங்கடாசலபதி கடவுள் இருக்கும் திருப்பதி கோயில் என்பது தென்னகத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவக் கோயிலாகும். வெங்கடாசலபதியின் வடிவம் பல நூற்றாண்டுக் காலமாகப் பிரச்சினைக்-குரியதாகவே இருந்து வந்திருக்கின்றது. சிலர் அந்தக் கடவுளை விஷ்ணு என்றும், வேறு சிலர் சிவா என்றும், சக்தி என்றும், ஸ்கந்தா என்றும், ஹரிஹரன் என்றும் பலவாறாகக் கருதுகிறார்கள். உண்மையிலேயே திருப்பதி கோயில் என்பது துவக்கத்தில் புத்தர் கோயிலாகவே இருந்தது; உள்ளே இருக்கும் மூர்த்தி சிலை என்பது புத்தபிரானே ஆவார்.
புத்த மார்க்கம் இந்தியாவில் வீழ்ச்சி அடைந்த போது, அது பார்ப்பனீயத்தால் தங்களுடைய வழிபாட்டுக்குரிய இடமாக மாற்றப்பட்டது.
புத்தர் கோயில் வைஷ்ணவ கோயிலாக இப் போதுள்ள தன்மையில் பார்ப்பன மயமாக்கப்பட்டது - அப்பொழுது இருந்த பார்ப்பனப் பண்டிதர்களால்!
தொல்பொருள் ஆய்வு, வரலாற்று ஆய்வு அடிப்படையிலே இந்தக் கருத்தை இந்நூலில் நூலாசிரியர் நிறுவியுள்ளார். பந்தர் பூர், பூரி செகந்நாதம், சபரிமலை அய்யப்பன் இவை யெல்லாமே ஒரு காலத்தில் புத்த விகார்களாக இருந்து பிற்காலத்தில் இந்துக் கோயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
7ஆம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை புத்த மார்க்கம் வீழ்ச்சி அடைந்த கால கட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்திலும், சிறப்பாக தென்னிந்தியாவிலும், புத்த விகாரங்கள் எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளது பற்றி இந்நூல் விவரிக்கிறது."
இதற்கு என்ன பதில்? பாபர் மசூதிக்கு முன் ராமன் கோயில் இருந்தது; அதனால் அங்கு ராமன் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற இந்துத்வாவின் வாதப்படியே வந்தாலும் திருப்பதி ஏழுமலையான் கோயில் புத்த விகாரமாக இருந்ததே - அதன்படி ஏழுமலையான் கோயில் புத்த விகாரமாக மாற்றப்படுமா? தயார் தானா?


Monday, December 03, 2018

இவரின் அழுகையை துடைக்க மோடியோ, ஆதித்யநாத்தோ, வருவார்களா?

பாபர் மசூதி ராமர் பிறந்த இடம் என்ற பொய்யை திரும்ப திரும்ப சொல்லி பல அப்பாவி இந்துக்களை மூளை சலவை செய்தனர். அத்வானி வகையறாக்கள் இன்று வாய் திறக்காமல் மவுனமாக உள்ளனர். ஆனால் இவர்களின் பொய்யை நம்பி சென்று பாபர் மசூதியை உடைத்தவரின் இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இதே நிலைதான். இன்று தான் செய்த தவறை எண்ணி கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.
இவரின் அழுகையை துடைக்க மோடியோ, ஆதித்யநாத்தோ, அத்வானியோ, அமீத்ஸாவோ வருவார்களா?


தன் தாய்நாட்டை நேசிக்காதவன் இருந்தும், இறந்தவன்.


//தன் தாய்நாட்டை நேசிக்காதவன் இருந்தும், இறந்தவன். இனிமேலும் கொள்ளையடிக்க வந்தவனை வாழ்த்துவதை நிறுத்துங்கள் என வேண்டுகிறேன்.// - Narendran

பிறந்த தாய் நாட்டை நேசிக்காதவன் உண்மையான இஸ்லாமியனாக இருக்க முடியாது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு பேச்சுக்கு மொகலாயர்கள் அந்நியர்கள் என்றால் நம் நாட்டு பிராமணர்கள் யார்? வெள்ளைத் தோலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? சமஸ்கிரதத்துக்கும் நம் நாட்டு தமிழ் மொழிக்கும் என்ன சம்பந்தம்? அனல் வாது புனல் வாது செய்து சமணர்களை கழுவிலேற்றிய கொடூரத்தை செய்தது யார்? இயற்கை வழி முறைகளில் வாழ்ந்த தமிழர்களை மாட்டையும், பன்றியையும், நாயையும், பருந்தையும் கடவுளாக்கி அவனை சூத்திரனாக்கியது யார்? இன்று வரை மண்ணின் மைந்தனை கருவறைக்குள் நுழைய விடாமல் தடுப்பது யார்?


//அவ்ரங்சீப்பினால் திணிக்கப்பட்ட ஜிஸியாவும், கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் காரணமாகவும் மதம்மாறிய ஹிந்துக்களே இன்றைய இந்திய முஸ்லிம்கள். இது வரலாறு. மொகலாயர்களே எழுதி வைத்த வரலாறு. நான் எழுதிய வரலாறல்ல.//

உங்கள் வாதப்படி வாள் முனையினால் மாற்றப்பட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இன்று நடப்பதோ மோடி, ஆதித்யநாத் போன்றோரின் பாசிச ஆட்சி. இப்போது இந்துவாக மாறினால் பல சலுகைகளை பெறலாம். ஆனால் ஒரு முஸ்லிமும் இந்துவாக மாறவில்லையே ஏன்? ஏனென்றால் இந்து மதம் என்பது பார்பனிய மதம். பார்பனர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட மதம். இதனாலேயே மக்கள் இந்த காலத்திலும் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி அவர்களாகவே வருகின்றனர். இதுதான் உண்மை.

Sunday, December 02, 2018

அலகாபாத் நகரில் ஜனவரி முதல் மார்ச் வரை யாரும் திருமணம் வைபவம் வைக்கக் கூடாது!

அலகாபாத் (பிரயாக்ராஜ்) நகரில் ஜனவரி முதல் மார்ச் வரை யாரும் திருமணம் வைபவம் வைக்கக் கூடாது!
இந்த மூன்று மாதங்களில் அதிக சாமியார்கள் மற்றும் பக்தர்கள் இங்கு வருகை தர இருப்பதால் உங்கள் குடும்பத்தின் திருமணங்களை மூன்று மாதம் தள்ளி வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆணை பிறப்பித்துள்ளார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத். அனைத்து அரங்க உரிமையாளர்களுக்கும் அரசாணை அனுப்பப்பட்டுள்ளது.
கும்பமேளா நடப்பதற்கும் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்? திருமணம் முடித்து குடும்பம் குழந்தை குட்டிகளோடு வாழ்ந்துவந்திருந்தால் யோகிக்கு திருமணத்தின் அருமை புரியும். போதை மருந்துகளை ஏற்றிக் கொண்டு எந்த குடும்ப கவலையும் இல்லாமல் நாடோடிகளாக சுற்றித் திரியும் இவர்களுக்கு திருமணத்தின் அவசியம் விளங்கவா செய்யும்?
தகவல் உதவி
News 18
02-12-2018

Saturday, December 01, 2018

சிவயோகி சிவகுமார் வித்தியாசமாக சொல்கிறார்

சிவயோகி சிவகுமார் கருத்துக்களை கொஞ்சம் வித்தியாசமாக சொல்கிறார். ரசிக்கும் படி உள்ளது.


ஹஜ் பயணம் மேற் கொண்டதால் மரண தண்டனை அளித்த சீன அரசு....

ஹஜ் பயணம் மேற் கொண்டதால் மரண தண்டனை அளித்த சீன அரசு....
அப்துல் கஃப்பார் வயது 42. சீனாவின் உய்குர் மாகாணத்தை சேர்ந்தவர். நான்கு குழந்தைகளுக்கு தந்தை. 14.4 மில்லியன் டாலர்கள் இவரது சொத்து மதிப்பு. பல பள்ளி வாசல்களை கட்டியுள்ளார். பல தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் பற்று உடையவர். கம்யுனிஷ அரசுக்கு இவரது முன்னேற்றம் பெரும் பிரச்னையாக இருந்தது. எனவே இவரை பழி வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.
சென்ற வருடம் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார் அப்துல் கஃப்பார். அரசு அனுமதித்த குழுவில் செல்லாமல் இவர் தனியாக தனது ஹஜ் பயணத்தை முடித்துள்ளார். இதனை காரணமாக காட்டி கம்யூனிஷ அரசு இவரை கைது செய்துள்ளது. இவர் மட்டுமல்லாது இவரது மனைவி, இவரது பிள்ளைகள் மற்றும் இவரது நண்பர்கள் மொத்தம் 50 பேரையும் கைது செய்துள்ளது சீன அரசு. தற்போது இவருக்கு மரண தண்டனை என்று நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இவரது மனைவி விசாரணைக் காலத்தில் சிறைச் சாலையிலேயே மரணத்தை தழுவியுள்ளார்.
ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது மரண தண்டனைக்கு உரிய குற்றமா? இவரது சொத்துக்கள் அனைத்தையும் கம்யூனிஷ அரசு பிடுங்கிக் கொண்டது. இது ஒரு பகல் கொள்ளை. இதைப் பற்றி உலக மீடியாக்களோ நமது இந்திய மீடியாக்களோ வாயைத் திறக்கவில்லை.
தங்கள் உயிரையும் இழக்க முஸ்லிம்கள் துணிவார்களேயொழிய சீனா, ரஷ்யாவிலேயே துடைத்தெறியப்பட்ட கம்யூனிஷ சித்தாங்களை தங்கள் வாழ்வியலாக எடுக்க மாட்டார்கள் என்பதை மட்டும் சீன அரசுக்கு சொல்லிக் கொள்கிறோம்.
தகவல் உதவி
rfa.org/english/news/