Followers

Sunday, October 15, 2006

இந்து மதத்தின் தூதர்- கால்கரி சிவாவுக்கு!

இந்து மதத்தின் தூதர்- கால்கரி சிவாவுக்கு!

நான் சில நாடகள் முன்பு 'இந்து மதத்துக்கு அனுப்பப் பட்ட இறைத் தூதர் யார்?'என்ற தலைப்பில் சொன்ன சில செய்திகளுக்கு கால்கரி சிவா சில மறுப்புகளைக் கொடுத்துள்ளார். விரிவாக விளக்க வேண்டி இருப்பதால் இதைத் தனிப் பதிவாகவே போடுகிறேன்.

//முதலில் இந்து மதத்திற்கு தூதுவர்.. ..........இந்த கான்செப்டே தப்பு.அவர் முகமதிய மதத்தை ஒரு பெஞ்ச் மார்க்காக வைத்து கேள்விகள் கேட்கிறார். அதுவே தவறு. .//

சிவா சொல்வது தவறு. நான்அந்தப் பதிவில் வைத்த ஆதாரங்கள் அனைத்தும் இறை வேதமான குர்ஆனிலிருந்து அல்ல. அனைத்து ஆதாரங்களையும் நான் தந்நது ரிக், யஜீர்,சாம, அதர்வண வேதங்களில் இருந்து. உங்கள் கருத்துப்படி இந்து மதத்துக்கு இறைத் தூதர்வரவில்லை என்றால் இந்த வேதங்களை அருளியது யார் என்ற கேள்வி வருமல்லவா? இந்த நான்கு வேதங்களையும் யார் எழுதியது. எப்பொழுது எழுதப'பட்டது என்ற விபரத்தை தாருங்கள்.

//நானும் கூகுளில் தேட போக இந்துமத குப்பைகளை மட்டும் அவர்கள் கண்ணுக்குத் தெரிய அதன் பக்கத்தில் உள்ள முகமதிய மதத்தின் குப்பைகள் என் கண்ணுக்கு தெரிந்தது. சரி நானும் குப்பைகளை அள்ளி வீசலாம்.//

இந்து மத கருத்துக்களும்,இஸ்லாம் மத கருத்துக்களும் உங்களுக்கு குப்பையாக தெரிந்திருக்கிறது. ஓசோவைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு வேதங்களெல்லாம் குப்பைகளாகத் தான் தெரியும். மேலும் இணையத்தில் இஸ்லாம் சம்பந்தமாக வலம் வரும் கருத்துக்கள் முகமது நபி சொன்னதுதானா அல்லது உங்கள் பாணியில் அவை குப்பைகளா? என்று பிரித்தறிய முஸ்லிம்களிடம் குர்ஆனும், நபி மொழிகளும் பாதுகாக்கப் பட்டிருக்கிறது. அதில் உரசிப் பார்த்தால் அசல் எது நகல் எது என்று உடன் தெரிந்து விடும்.

//ஐயோகோ நான் செய்வது வேறு தொழில் அல்லவா.//

இங்கு தான் நம்மில் பலரும் தவறு செய்கிறோம். மதத்தின் கருத்துக்களைச் சொல்வதற்கென்று சில நபர்களை நியமித்து விட்டு நாம் நம் குடும்பத்தைப் பார்க்க சென்று விடுவதால்தான் பல மார்க்கங்களிலும் சிக்கல்கள் தலை எடுக்கிறது. புரோகிதத்தை இஸ்லாம் ஒழித்ததால் தான் இன்று முஸ்லிம்கள் தங்கள் வேதத்தைப் பற்றிய அறிவில் தெளிவாக இருக்கிறார்கள்.

//அவர் தான் நம் இணைய இஸ்லாமிஸ்ட்டுகளின் friend, philospher and guide அவர் இடுப்பில் இருந்து தான் இவர்கள் சுடுவார்கள்.//

முதலில் ஒரு கருத்தை யார் சொல்கிறார்கள் என்று பார்க்காதீர்கள். அந்த கருத்து சொல்ல வரும் செய்தி என்ன? அது உண்மையா? என்று பார்க்கும் மனப்பாங்கு நமக்கு வரவேண்டும். சொல்வது சுவனப்பிரியனா, ஜாகிர் நாயக்கா, ஜெய்னுல்லாபுதீனா, ரவி சங்கரா, சங்கராச்சாரியாரா என்று ஆட்களைப் பார்த்து படிக்கும் வழக்கம் நம்மில் மாற வேண்டும்.. மேலும் நாம் ஒரு கருத்தை சொல்லும் போது நம்மைவிட அறிவிற் சிறந்தவர்களின் ஆக்கங்களை மேற்கோள் காட்டுவது நமது வாதத்தை மேலும் வலுசேர்ப்பதாகவே அமையும். இதை நான் மட்டும் செய்யவில்லை. நீங்களும்தான் செய்திருக்கிறீர்கள்.

//ஆகையால் இந்த குப்பைகளை கிளறும் தலைவர் யார் என்று பார்த்தேன். இவர் எனக்கு அறிமுகமானவர்தான். இவர் பெயர் Dr. ஜாகிர் நாயக். இவர் எம்.பி.பி.எஸ் படித்தவர். பம்பாயில் உள்ளவர். (சிலபேர் எம்.பி.பி.எஸ் படித்து விட்டு வேறு வேலைப் பார்த்து கவர்மெண்ட் பணத்தை வீணடிப்பர். இவரைப் போல் இன்னொருவர் தமிழ் நாட்டில் டாக்டர் மாத்ருபூதமுடன் சேர்ந்து புதிரா புனிதமா என்ற நிகழ்சிகளை நடத்திய Dr.சர்மிளா.)//

இவர் மருத்துவராக இருப்பதால்தான் குர்ஆன் சொல்லக் கூடிய வைத்திய முறைகள், குர்ஆனுக்கும் அறிவியலுக்கும் உள்ள ஒற்றுமைகள் போன்றவற்றை விளக்கி இந்த குர்ஆன் எக்காலத்துக்கும் எந்நாட்டவருக்கும் பொருந்தும் என்பதை நிரூபித்தும் வருபவர். ஐஆர்எஃப் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தையும், இஸ்லாமிய பாடத்திட்டத்தோடு கூடிய மெட்ரிகுலேசன் பள்ளியையும் நடத்தி வருபவர். அரசு தந்த சலுகைகளில் படித்து விட்டு இன்று கனடாவே என் சொர்க்கம் என்று சொல்லி வரும் நீங்கள் ஜாகிர் நாயக்கை குறை காணலாமா சிவா! 'புதிரா? புனிதமா?' ரசிகரா நீங்கள் :-)

//இணைய இஸ்லாமிஸ்ட்கள் கையில் இந்தமதத்தின் நான்கு வேதப் புத்தகங்கள் இருக்கும் என நம்பிய நான் ஒரு முட்டாள். இவர்கள் இருப்பது சவூதி அல்லவா//

என் அலுவலகத்திலும், வீட்டிலும் திருக்குறள் முதற்கொண்டு பைபிள் வரை அனைத்து மத புத்தகங்களும் உண்டு. இதுவரை யாரும் வந்து என்னை எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. சும்மாவாச்சும் போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டு போகக் கூடாது சிவா!

//வானத்தில் அமர்ந்துக் கொண்டு அவ்வப்போது தூதுவர்களை அனுப்பி வேதங்களை பப்ளிஷ் செய்யும் இறைவன் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கடைசி ஆளை அனுப்பி கடைசி புத்தகத்தை வெளியிட்டுவிட்டு கடையை மூடிவிட்டார் என்பது காஃபிரல்லாதவரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு இந்துமதத்தின் சிபாரிசும் தேவைபடுகிறது//

உண்மைதான்! சனாதன தர்மத்தின் ஆதிகிரந்தம் கூறுவதைத்தான் இஸ்லாத்தின் இறுதி கிரந்தம் கூறுகிறது. ஏக தெய்வக் கொள்கையை விட்டு பல தெய்வங்களுக்குத் தாவியதாலும், இறைத் தூதர்களை இறை அவதாரங்களாகவும் இன்னும் பலரையும் பலதையும் (ஓசோ உட்பட) இறைவனாகவும் நம்பி உண்மை இறைத் தூதர்களை நிராகரித்ததாலும், மறு உலக கொள்கையை விட்டு மறு பிறவி தத்துவத்தை ஏற்றுக் கொண்டதாலும் வேதங்கள் இடைச்செருகல்களுக்கு உண்டாகி வர்ணாசிரமம் புகுத்தப் பட்டதாலும் சனாதன தர்மமானது வைதீக பிராமண மதமாகி பின் இந்து மதமானது. இந்த உண்மையை என் நண்பரான சிவாவுக்கு எடுத்துச் சொல்வதில் தப்பில்லையே!

//"உனை எனதுள் அறியும் அன்பை தருவாயே" என உருகிய அருணகிரிநாதரின் வார்த்தைகளில் என்னை போன்ற காஃபிர்களின் நம்பிக்கைஇறந்தபிறகு கடவுளுடன் ஜாலியாக பார்ட்டி செய்யவேண்டுமென்பது காஃபிரல்லாதவரின் நம்பிக்கைஅந்த கடவுளாக மாறி அவருடன் கலப்பது என்பது என்னை போன்ற காஃபிர்களின் நம்பிக்கைஒரு புத்தகத்தில் காலை முதல் இரவு வரை ஆண் என்ன செய்யவேண்டும் பெண் என்னசெய்யவேண்டும் என உத்திரவிடுவது காஃபிரல்லாதவரின் கடவுள்//

அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்
1 : 2 - குர்ஆன்.

அன்பே உருவானவர் இறைவன் என்பதைத்தான் குர்ஆனும் விவரிக்கிறதுஅதனால்தான் இறைவனை கிண்டலடிக்கும் உங்களுக்கும், இறைவனே இல்லை என்று சொல்பவர்க்கும் தன்னால் படைக்கப் பட்ட மனிதன் தானே என்ற பெருந்தன்மையால் இறைவன் கோபப் படாமல் இருக்கிறான்.

'நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை இறைவனே உயர்த்தினான். பின்னர்ஆட்சி செய்யும் ஆசனத்தில் அமர்ந்தான். சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன். காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.'
'அவனே பூமியை விரித்தான். மலைகளையும் நதிகளையும் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
13 : 2,3 - குர்ஆன்.

ஆதாம, நோவா, ஏசுஅருணகிரி நாதர் முதற்கொண்டு நம் சித்தர்களிலிருந்து நம் திருவள்ளுவர் வரை இறைவனைப் பற்றி என்ன சொன்னார்களோ அவற்றை எல்லாம் ஒன்றாக்கி வடித்து தரப்பட்டதுதான் குர்ஆன். இறைவனுக் கென்று சில தகுதிகள் சிறப்புகள் உள்ளன. இது பற்றி விரிவாக பிறகு விளக்குகிறேன்.

//இந்து மதத்தின் இறைத்தூதுவர்.............நீங்கள் தான்..........நானும் தான் //

சிவா! நீங்க ஜோக்கடிக்கிறதுக்கு ஒரு அளவே இல்லாமல் போயிடுச்சு :-(

ஆரம்பத்தில் இப்படி சொல்லி ஆசிரமம் ஆரம்பித்த இஸ்லாமிய, கிறித்தவ புரோகிதர்கள், பிரேமானந்தா, சதுர்வேதி, போன்றோரின் பித்தலாட்டங்களை நீங்கள் படிக்கவில்லையா? இன்னுமா மனிதனும தெய்வமாகலாம் என்ற நம்பிக்கை. என்றுமே மனிதன் மனிதனாகத்தான் இருப்பான் என்றுமே இறைத் தன்மையை அடைய முடியாது என்று கூறிக் கொள்கிறேன்.அதே போல் நான் துறவறம் பூண்டு இறைவனை அடையப் போகிறேன் என்றவர்களின் உண்மை முகங்கள் நாளடைவில் நமக்கு தெரிய வந்ததையும் இங்கு தெரியப்படுத்துகிறேன்.

இஸ்லாம் சொல்லும் வாழ்க்கை முறை துறவறத்துக்கும், உலக ஆசாபாசங்களுக்கும் இடைப்பட்ட நிலை. எனவே தான் இதன் கொள்கைகள் அனைத்தையும் அனேக இஸ்லாமியர்களால் வாழ்க்கையில் எந்த சிரமமும் இன்றி கடைபிடிக்க முடிகிறது.

'நோவாவுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல முஹம்மதே உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம்.'
4 : 163 -குரஆன்.

'எந்தஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'
14 : 4- குர்ஆன்

'மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும் நற்செய்தி கூறவும் தூதர்களை இறைவன் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான்.'
2 : 213 - குர்ஆன்.

'ஏ அக்னீ !நியூஹ் அவர் தூதர் என்று ஒப்புக் கொள்கிறேன்.'

1 : 13,14 - ரிக் வேதம்

நோவாவுடைய பெயர் ரிக் வேதத்தில் 51 இடங்களிலும், யஜீர் வேதத்தில் இரண்டு இடங்களிலும், சாம வேதத்தில் எட்டு இடங்களிலும், அதர்வண வேதத்தில் பதினான்கு இடத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது

ஆதாரம் வேத ஆராய்ச்சி தொகுப்பான”NOW OR NEVER” – written by Shames Navad

1). புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே
1 : 1 - குர்ஆன்

புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
8 : 1 : 1 -ரிக் வேதம்

2). இறைவன் அளவற்ற அருளாளன் : நிகரற்ற அன்புடையோன்
1 : 2 - குர்ஆன்

அவன் அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன்
3 : 34 : 1 - ரிக் வேதம்

3). நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
1 : 5

எங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு
40 : 16 - யஜுர் வேதம்.

4). நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
2 : 107 - குர்ஆன்

பரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே! அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.
1 : 100 : 1 - ரிக் வேதம்

5). கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.
2 : 115 - குர்ஆன்

அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான்
10 :12 :14 - ரிக் வேதம்

கிழக்கிலும் மேற்கிலும் மேலிழும் கீழிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கிறான்
10 : 36 : 14 - ரிக் வேதம்

இறைவனின் பார்வை எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. இறைவனின் முகம் எல்லா திசைகளிலும் இருக்கிறது.
10 : 81 : 3 - ரிக் வேதம்

6). அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்
25 : 2 - குர்ஆன்

பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
7 : 19 : 1 - அதர்வண வேதம்

7). அவன் தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்
25 : 62 - குர்ஆன்

இரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத்ததே
10 : 190 : 2 - ரிக் வேதம்

8). நீங்கள் களைப்பாறி அமைதி பெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
6 : 96 - குர்ஆன்

அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
10 : 190 : 3 - ரிக் வேதம்

9). யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே. பிந்தியவனும் அவனே. பகிரங்கமானவனும் அவனே. அந்தரங்கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
57 : 3 - குர்ஆன்

ஏ பரமேஸ்வர்! நீ அந்தரங்கமானவனும், முந்தியவனும் நன்கறிந்தவனுமாவாய்.
1 : 31 : 2 - ரிக் வேதம்.

10). அல்லாஹ்வுடைய நடை முறையில் நீர் எவ்வித மாறுதலையும் காண மாட்டீர்.
48 : 23 - குர்ஆன்

அவன் நடைமுறையில் ஒன்று கூட மாற்றத்திற்கு உரியத அல்ல.
18 : 15 - அதர்வண வேதம்

11). அல்லாஹ்வுடைய வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
10 : 64 - குர்ஆன்

இறைவனின் புனித வாக்குகளில் மாற்றங்களே இல்லை.
1 : 24 : 10 - ரிக் வேதம்

12). அல்லாஹ் அவன் மிகவும் பெரியவன், மிகவும் உயர்ந்தவன்
13 : 9 - குர்ஆன்

இறைவன் உண்மையில் மிகப் பெரியவன்
20 : 58 : 3 - அதர்வண வேதம்

மேற் கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் கருத்துக்களின் ஒற்றுமையைப் பாருங்கள். ஒரு சில வார்த்தை வித்தியாசங்களைத் தவிர்த்து பொருள் ஒன்றாக வருவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். பொருள் மட்டும் அல்லாது வசன நடையும் ஏறக்குறைய ஒன்றாக வருவதைப் பார்க்கிறோம்.


இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

55 comments:

வஜ்ரா said...

ஐயன்மீர்,

அப்படியானால், ஒரே ஒரு முறையேனும் ஏதாவது ஒரு முக்கிய மசூதியில் ரிக்வேத சூத்திரத்தை பிரயோகித்து பிரார்த்தனை செய்வீர்களா?

bala said...

//ஐயன்மீர்,

அப்படியானால், ஒரே ஒரு முறையேனும் ஏதாவது ஒரு முக்கிய மசூதியில் ரிக்வேத சூத்திரத்தை பிரயோகித்து பிரார்த்தனை செய்வீர்களா//

வஜ்ரா அய்யா,

நீங்க ஒண்ணு,

வந்தே மாதரம் ஒரு நாள் பாடுவது இஸ்லாமியர்களுக்கு ஒவ்வாதது என்று ஃபட்வா விட்ட முல்லா கும்பல் ரிக் வேதத்தை, அதுவும் மசூதியில்..?
ஹிந்துக்கள் நாகூர் தர்க்காவிற்கு மரியாதையுடன் செல்வார்கள்,வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கும் செல்வார்கள்..அந்த tolerance இங்கு இல்லை..

பாலா

வஜ்ரா said...

நிச்சயமாக பிரார்த்தனை செய்ய மாட்டீர்கள்..

குர் ஆனுடன் 90% ஒத்துப் போகும் யூத விவிலியம் வைத்து பிரார்த்தனை செய்யப்படுமா?

கால்கரி சிவா கேட்டதில் எந்த தவறுமில்லை. மற்ற மதங்களை "இணங்க" வைத்து மத நில்லிணக்கம் வளர்க்க நினைப்பது ஒன்றும் தெரியாதது அல்ல.

உங்கள் மதத்தில் சொல்லியிருப்பது உங்களுக்கு, எங்கள் மதத்தில் சொல்லியிருப்பது எங்களுக்கு என்று மதத்தை தனிமையில் வைத்துக் கொண்டு, பொதுவில் உங்களால் மதத்தைவிட்டு வெளியில் வந்து வாழ முடியுமா என்ற கேள்விக்கு விடை தேடுங்கள்.

எங்கள் மதம் தான் சிறந்தது என்று மார்த்தட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த மார்க்கத்தில் பெயரைச் சொல்லிச் சொல்லிப் பல அப்பாவிகளை கொன்று குவிக்கிறார்கள். உங்கள் மதத்துக்கு இந்து மத வேதம் சர்டிபிக்கேட் கொடுக்கவேண்டுமா?

உங்கள் வேதத்தின் மூலம் யூத வேதம் கடைபிடிப்பவர்களிடம் என்ன சர்டிபிக்கேட் இஸ்லாத்திற்கு இருக்கிறது என்று பார்த்தால் சந்தி சிரிக்கிறது.

ஜயராமன் said...

திரு.சுவனப்ரியன் அவர்களே,

இது மாதிரி அபத்தமான மொழிபெயர்ப்புகளும், ஒட்டுவேலைகளும் ஏற்கனவே பலமுறை இந்து அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நீங்கள் மறுபடியும் இந்த மாதிரி விசயங்களை கடை விரிப்பதேன் என்று விளங்கவில்லை.

தங்கள் பதிவுக்கு பதில் இங்கே. படிக்க வேண்டுகிறேன்..

"Muhammad is not predicted in Hindu scriptures

Zakir Naik and Abdul Haque Vidyarthi Exposed "

http://www.faithfreedom.org/Articles/Prasadh51229.htm

நன்றி

வணக்கம்

NoMad said...

தேவார திருவாசகத்தை வைனவக் கோவிலுக்குள் அனுமதிக்காத நீர் , ஒரே மதத்திற்குள்ளேயே இன்னொரு பிரிவு சொல்லும் கருத்தை ஏற்காத நீர் , முற்றிலும் புதிய ஒரு மதத்தை உம் வேதத்தை ஏற்கச் சொல்கிறீரா . ஞாபகம் வைத்துக்கொள்ளும் - நீர் ஏசியாட்டிக் டிரைபல் மைனாரிட்டி மதத்தை சேர்ந்தவர் . அவர் உம்முடையதைவிட வலிமையான ஆபிரஹாமிய மதத்தில் இருந்து உம்மிடம் உன் வேதமும் என் வேதமும் ஒன்றைத்தான் சொல்கிறது என்கிறார் .

உம் போன்ற சொந்த மதத்தின் இன்னொரு கருத்தையே ஜீரனிக்க முடியாதவரின் வேதத்தை , இன்னொரு மதம் எப்படி ஜீரனிக்கும் . முதலில் நீர் திருந்தும் , பிறகு அடுத்தவரிடம் குறை காணலாம் . சரியா ஓய் .

கோவி.கண்ணன் [GK] said...

//இந்து மதத்தின் தூதர்- கால்கரி சிவாவுக்கு!//

சுவனப்பிரியன்...!
என்னது, இந்துமதத்தின் தூதர் கால்கரி சிவாவா ?
தலைபில் எதோ குழப்பம் இருக்கே !
:)

Leo Suresh said...

//என் அலுவலகத்திலும், வீட்டிலும் திருக்குறள் முதற்கொண்டு பைபிள் வரை அனைத்து மத புத்தகங்களும் உண்டு. இதுவரை யாரும் வந்து என்னை எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. சும்மாவாச்சும் போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டு போகக் கூடாது சிவா!//
அன்பு சுவனப்பிரியன், நான் 15வருடங்கள் சவுதியில் வாழ்ந்துயிருக்கிறேன்.நீங்கள் சொல்வதை மறுக்கிறேன்.அங்கு மாற்று மதம் சம்மந்தமான எதையும் வைத்திருக்கமுடியாது.இங்கு எனக்கு நேர்ந்த ஒரு நகைச்சுவை.நானும் என் மணைவியும் சவுதி customs சோதனையின் போது எங்களிடம் இருந்த பைபிளை என்ன என்று கேட்டபொழுது என் மனைவி நாவல் என்று கூற அடுத்து போப் போட்டோவை பார்த்து கேட்க்க my uncle என்று கூற இரண்டும் தப்பித்தது.
உங்கள் எழுத்து மிகவும் நாகரீகமாக இருக்கிறது.நன்றி.
லியோ சுரேஷ்
துபாய்

suvanappiriyan said...

வஜ்ரா!

//அப்படியானால், ஒரே ஒரு முறையேனும் ஏதாவது ஒரு முக்கிய மசூதியில் ரிக்வேத சூத்திரத்தை பிரயோகித்து பிரார்த்தனை செய்வீர்களா?//

பண்ணலாமே! ரிக் வேதம் மட்டும் அல்ல. யஜீர், சாம, அதர்வண வேதங்களையும் பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்ளலாம். மற்ற வேதங்களையும் பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்ள கடைசி வேதமான குர்ஆனில் இறைவன் அனுமதி அளித்திருக்க வேண்டும். அதை தூதர் முகமது நபியும் செயல் படுத்திக் காட்டியிருக்க வேண்டும். அது அல்லாமல் நாமாக ஒன்றை வணக்கமாக உருவாக்க இஸ்லாம் அனுமதி அளிக்கவில்லை நண்பரே! குர்ஆனுக்கு முந்திய வேதமான பைபிளேயே மனிதக் கரங்கள் புகுந்து விட்டதால் அதை பின் பற்றக் கூடாது என்ற தடை இருக்கிறது.

'நாங்கள் கிறித்தவர்கள்' என்று கூறியோரிடமும் உடன்படிக்கை எடுத்தோம். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர்.'
5 : 14 -குர்ஆன்

'வேதமுடையோரே! நம்முடைய தூதர் முஹம்மத் உங்களிடம் வந்து விட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார்.'
5 : 15 - குர்ஆன்

'நோவாவையும், ஆப்ரஹாமையும் தூதர்களாக அனுப்பினோம். அவர்களது வழித்தோன்றல்களில் தூதர் எனும் தகுதியையும் வேதத்தையும் அருளினோம். அவர்களில் நேர் வழி பெற்றவரும் உண்டு. அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.'
57 : 26 - குர்ஆன்.

suvanappiriyan said...

தருமி ஐயாவுக்கும், எழிலுக்கும என் பதில்!

//எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவன் ஒருவரை மட்டும் உயர்த்தி மற்றவர்களை தாழ்த்துவது எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவனுக்கு சரியாகாது.//

'இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை முஹம்மதே நீர் அறிந்திருக்கவில்லை.'
42 : 52 - குர்ஆன்

இதன் மூலம் முகமது நபியும் நம்மைப் போன்ற ஒரு மனிதர்தான். தூதராக நியமிக்கப் படுவதற்கு முன்பு வரை வேதம் என்றால் என்ன? என்று தெரியாதவராகத்தான் இருந்தார். இந்த இறைக் செய்தியே நாற்பது வயதுக்குப் பிறகுதான் முகமது நபிக்கு கிடைக்கிறது. 'இறைச் செய்தி வருகிறது என்ற சிறப்பு ஒன்றைத் தவிர நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் தான்' என்று முகமது நபி பலமுறை விளக்கியும் இருக்கிறார்.

//அப்படிப்பட்ட ஒரு குருவாகவே என் கண்ணுக்கு ஜனாப் முகம்மது நபிகள் தெரிகிறார். வாழ்க்கையில் குருவுக்கு வந்தனம் செய்யவேண்டும். ஆனால், குருவையும் தாண்டி சிந்திக்கத்தான் குரு சொல்லித்தர வேண்டும். குரு சொன்னதில் வரிக்கு வரி அப்படியே எடுத்துக்கொண்டு மேலே சிந்திக்க, பரிணாமம் அடைய மறுப்பவன், குருவுக்கு துரோகம் இழைக்கிறான்.//

'குதிதைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும் மதிப்புக்காகவும் அவன் படைத்தான். நீங்கள் அறியாதவற்றையும் இனி படைப்பான்.'
16 : 8 - குர்ஆன்

இந்த வசனம் அன்றைய அரபுகளைப் பார்த்து சொல்லப் பட்டது. அவர்கள் பயன் படுத்திய வாகனம் மட்டும் அல்ல இன்னும் விமானம், கார, சைக்கிள், ராக்கெட், போன்ற மக்களின் போக்குவரத்துக்கான சாதனங்களையும் இனியும் படைக்கவிருக்கிறேன் என்று இறைவன் கூறுவதிலிருந்து அறிவியல் கண்டு பிடிப்புகளை குர்ஆன் ஊக்கப் படுத்துகிறது. குர்ஆன் முழுக்க மனிதர்களைப் பார்த்து 'சிந்திக்க மாட்டீர்களா?' என்று பல தடவை இறைவன் கேட்கிறான்.

முகமது நபியை முஸ்லிம்கள் பின் பற்றுவது வணக்க வழிபாடுகளில் மாத்திரமே. அன்றைய மக்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழ வேண்டும் என்றால் நமக்கும் அதே சட்டம் தான். வாழ்நாளில் ஒரு முறை செல்வந்தர்கள் மெக்கா புனிதப் பயணம் செல்ல வேண்டும் என்பதும் அனைவருக்கும் பொதுவானது.

'அதே நேரம் முகமது நபி ஒட்டகையிலும், குதிரையிலும்தான் பிரயாணித்தார். நான் விமானத்தில் ஏற மாட்டேன். முகமது நபி ரொட்டி சாப்பிட்டார். எனவே நான் சோறு சாப்பிடாமல் ரொட்டி மட்டும்தான் சாப்பிடுவேன். முகமது நபி மேலுக்கும் கீழுக்கும் சேர்த்து ஒரே ஆடையைத்தான் அணிந்தார். எனவே நான் பேண்ட் சர்ட் அணிய மாட்டேன்.முகமது நபி டிவியோ, கணிணியோ இன்ன பிற அறிவியல் சாதனங்களையோ பயன் படுத்தியது இல்லை. எனவே இவை எதையும் நான் பயன் படுத்த மாட்டேன்' என்று எந்த முஸ்லிமாவது சொன்னாரா? அல்லது இஸ்லாம்தான் இதற்கு தடை விதிக்கிறதா? இல்லையே!

அதே போல் குர்ஆனுடைய வசனம் இந்த காலத்திற்கு இந்த நாட்டிற்கு பொருந்தவில்லை என்று எப்போதாவது பிரச்னை வந்துள்ளதா? அல்லது ஏதேனும் அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு குர்ஆன் தடை விதிக்கிறதா? இல்லையே ! இது போன்ற முன்னேற்றத்துக்கு தடையாக குர்ஆன் இருந்தால் உங்கள் வாதம் எடுபடும். ஆனால் அறிவியலை ஊக்கப் படுத்துவதாகத்தானே குர்ஆனிய வசனங்கள் அமைந்துள்ளது!

suvanappiriyan said...

‘’நீங்களும் நாமும் தான் இறைத்தூதர் என்பது உண்மை.’’- Kalkari Siva, koothadi


‘’இனிமே என்ன, தினம் தலை வாரிக் கொள்ளும் போது தெய்வ தரிசனம் தான்’’-Bala

‘’பாலா , தெய்வமே எங்கேயோ...போயீட்டிங்க்’’-kalkari siva

“மனிதனுக்கு தேவை நிம்மதி. அதை கடவுளிடமிருந்து பெறுபவனே இந்து என்றார் கவியரசர் கண்ணதாசன்.”-Selvan

“சிவா..வேதங்களின் மகிமையே அதன் ஒலி அதிர்வுகள் தான்.அவைகளை நாம் சரியான விதத்தில் உச்சரிக்க வேண்டுமானால் ஒரு குருவிடமிரிந்து முறையாக கற்க வேண்டும்.”-Maya

‘’குரு சூரியனை காட்டுகிறார். சீடன் விரலை மட்டுமே பார்க்கிறான்.’’-Ezhil

“இந்து மதத்தின் இறைத்தூதுவர் உம் போன்ற எம்போன்றவர்கள் என்றால் காஞ்சி கைலாசநாதன் கோவிலிலும் மயிலை கபாலீஸ்வரன் கோவிலிலும் ரிக்ஷாக்கார மாயாண்டியையோ அல்லது தெருக்கூட்டும் முனியம்மாவையோ பூசை செய்ய அனுமதிப்பீர்களா?

பிரேமானந்தா, சதுர்வேதி, காஞ்சி சுப்பிரமணியன் etc... இவங்களும் இந்துமதத்தின் தூதுவர்களா? பேஷ் பேஷ் பிரம்மாதாமய்யா உம் உளறல்.

(உம் போன்ற மரமண்டைகள் இருக்கும்வரை இந்து மதத்தை மொகலாயர்களோ அல்லது அல்காயிதாவோ ஒழிக்க வேண்டியதில்லை. தானாகவே மண்ணைப் போட்டு மூடிக்கொள்ளும் என்பது எம் போன்ற வந்தேறி அல்லாத திராவிடர்களின் கூற்று)” – Arivudai nambi

“இத்தகைய புராண பிதற்றல் பேர்வழிகள் இறைத்தூதரானால் சாதிச்சண்டை போல் தூதர் சண்டைதான் விஞ்சும் என்பதை இணைய அம்பிகள் புரிந்து கொண்டால் ஆறாம் அறிவுக்கு பயனுண்டு. “- Arivudai nimbi

“ஹய்யோ! ஹய்யோ!!
காமெடியோ காமெடி!!!

நானும் ஒரு கடவுளா??”- Lodukku

“ஆமாங்க, காமெடி கடவுளே” – Kalkari Siva

"இந்து மத இறைத்தூதர் நீயும்தான், நானும்தான்"

”ஏதோ அன்பே சிவம் படம் பாக்கிற மாதிரி இருந்தது.” – Dondu Ragavan

ஒரே மதமான ஹிந்து மதத்தை பின்பற்றக் கூடிய சகோதரர்கள் மத்தியில் இறைவனைப் பற்றி எத்தனை குளறுபடிகள் பார்த்தீர்களா? தமிழ் மொழி பேசுபவர்களுக்குள் இத்தனை வேறுபாடு. இன்னும் தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி, என்று மொழிவாரியாக பார்த்தால் இதைவிட கூத்துக்கள் இன்னும் அதிகம் அரங்கேறும்.

இறைவன் அருளிய வேதத்தை பின்பற்றாமல், அந்த இறைவன் காட்டிய தூதரை நம்பாமல் தன் மனம் போன போக்கில் இறைவனைத் தேடினால் இது போன்ற காமெடி ஷோக்களெல்லாம் அரங்கேறும்.

'முஹம்மதே! உமக்கு முன் பல தூதர்கள் கேலி செய்யப் பட்டனர். எதைக் கேலி செய்தார்களோ அதுவே கேலி செய்தோரைச் சூழ்ந்தது. பூமியில் பயணம் செய்து 'பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது? என்பதைச் சிந்தியுங்கள்' என்று கூறுவீராக.
6 : 10,11 - குர்ஆன்

Muse (# 01429798200730556938) said...

அனைத்து ஆதாரங்களையும் நான் தந்நது ரிக், யஜீர்,சாம, அதர்வண வேதங்களில் இருந்து


சுவனப்பிரியரே,

தாங்கள் ரிக், யஜூர், சாம, அதர்வணத்திலிருந்தவை என்று சொன்ன ஸ்லோகங்கள் ஒன்றுகூட அந்தப் பெயரால் அழைக்கப்படும் ஸ்க்ரிப்ச்சர்களில் இல்லை. ஏதேனும் புதுப் புத்தகம் போட்டிருக்கிறீர்களா?

Muse (# 01429798200730556938) said...

அவர்கள் பயன் படுத்திய வாகனம் மட்டும் அல்ல இன்னும் விமானம், கார, சைக்கிள், ராக்கெட், போன்ற மக்களின் போக்குவரத்துக்கான சாதனங்களையும் இனியும் படைக்கவிருக்கிறேன் என்று இறைவன் கூறுவதிலிருந்து

பெட்ரோலுக்கு மாற்றுப்பொருளை எப்போது படைக்கப்போகிறார்? இங்கே வீட்டுப் பட்ஜட் முதல், நாட்டுப் பட்ஜட் வரை பெரும் ப்ரச்சினையாக இருக்கிறதே.

Muse (# 01429798200730556938) said...

இதையெல்லாம் படைத்தது அல்லாதான் என்று தெரியாமல் நிறைய பேர் ரைட் சகோதரர்களையும், ஹென்றி போர்டையும் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். மடையர்கள்.

Muse (# 01429798200730556938) said...

பிரேமானந்தா, சதுர்வேதி, காஞ்சி சுப்பிரமணியன் etc... இவங்களும் இந்துமதத்தின் தூதுவர்களா?


எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மட்டுமல்ல, எப்படி இருக்ககூடாது என்று புரிந்துகொள்ளவும் கடவுள் இப்படிப்பட்ட அடையாளங்களை படைக்கிறாரோ என்னமோ. ஆனால், இப்படி அனுப்புவதெல்லாம் பின்பற்றக்கூடாதவை என்பதை புரிந்துகொள்ளும் ஷக்தியுள்ளவர்களுக்கு மட்டும்தான்.

Muse (# 01429798200730556938) said...

இந்து மதத்தின் இறைத்தூதுவர் உம் போன்ற எம்போன்றவர்கள் என்றால் காஞ்சி கைலாசநாதன் கோவிலிலும் மயிலை கபாலீஸ்வரன் கோவிலிலும் ரிக்ஷாக்கார மாயாண்டியையோ அல்லது தெருக்கூட்டும் முனியம்மாவையோ பூசை செய்ய அனுமதிப்பீர்களா?


அனுமதிக்க வேண்டும் என்றுதான் ஹிந்து மதப் பெரியவர்கள் கூறிவந்திருக்கிறார்கள். முயற்சியும் செய்கிறார்கள்.

அது கிடக்கட்டும். டெல்லி இமாமாக சுவனப்பிரியன் வரமுடியுமா? ஏன் புகாரி குடும்பத்தவர் மட்டுமே வருகின்றனர்? புகாரியை இங்கே கொண்டுவந்தது யார்? ஏன்?

எழில் said...

உங்களது பழைய பதிவுகளில் விவாதங்களை பார்த்தேன்.

உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பதில் சொல்லமுடியாத போது, "இத்துடன் இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்" என்று நழுவுகிறீர்கள்.


சகோதரர் அபுமுஹையிடம் கேட்ட கேள்வியை உங்களிடமும் கேட்கிறேன்.

--
நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?
--

தயவு செய்து கவனியுங்கள். அப்போது இயேசு கிரிஸ்துவோ அல்லது குரானோ வரவில்லை. அதனால், குரானிலிருந்து மேற்கோள்காட்டி எதையும் நிரூபிக்க முடியாது.

கேள்வி மிக எளியது. அடிப்படையில் ஒரு நபரை இறைதூதர் என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்?

ஒருவர் இறைதூதர் என்பது யாருக்குத் தெரியும்? அந்த நபருக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரியும்.
ஆகவே நான்கு நபர்கள் தானே இறைதூதர் என்று கோரிக்கொண்டால், அவர்களில் யார் உண்மையான இறைதூதர் என்று மக்களிடம் தெரிவிக்கக்கூடிய ஒரே நபர் இறைவன் மட்டுமே.

இறைவன் அனைத்து மக்களிடம் இவர்தான் இறைதூதர் என்று பேச முடியுமென்றால், ஏன் இடையே இறைதூதர் என்ற இடைத்தரகர்? சொல்ல வேண்டியதை நேரடியாக இறைவனே எல்லா மக்களிடம் கூறிவிடலாமே? அது ஒன்றும் கடினமான வேலையாக இறைவனுக்கு இருக்காதே?

பதில் கூறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

அன்புடன்
எழில்

மஸ்தூக்கா said...

அருமையான கருத்துக்களை நாகரீகமாகவும் நளினமாகவும் சொல்லி அனைவரையும் ஈர்க்கும் சுவனப்ரியன் அவர்களே சகோதரர் கால்கரி சிவாவும் இனி சிந்திக்க ஆரம்பித்திருப்பார். கவலைப்படாதீர்கள். இஸலாத்திற்கு எதிராக களம் இறங்கிய எத்தனையோ பேரை ஈர்த்த இஸ்லாம் கனடாவில் காலகரி சிவாவையும் இனி ஈர்க்கும்.

இப்னு பஷீர் said...

//இதையெல்லாம் படைத்தது அல்லாதான் என்று தெரியாமல் நிறைய பேர் ரைட் சகோதரர்களையும், ஹென்றி போர்டையும் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். மடையர்கள்.//

விகடனில் வெளியான ஒரு நிமிடக் கதைகளுள் ஒன்று.

யாருக்கு நன்றி?

"இனி பயம் இல்லை!" இரண்டு நாட்களாகக் கடும் ஜுரத்தில் இருந்த குழந்தை அனுவுக்கு ஊசி போட்டுவிட்டு, மாத்திரைகளும் எழுதிக்கொடுத்துவிட்டு டாக்டர் கிளம்ப, "நன்றி முருகா" என்று பூஜை ரூமில் மாட்டியிருந்த முருகன் படத்தை வணங்கினாள் ராஜி.

"என்ன ராஜி, ஊசி போட்டுக் குழந்தையைக் காப்பாத்தினது டாக்டர். நன்றி முருகனுக்கா?" என்று சிரித்தான் அவினாஷ்.

அதே நேரம், வாசலில் தபால்காரர். ரிஜிஸ்டர் தபாலைப் பெற்றுக்கொண்டு, அவர் நீட்டியஃபாரத்தில் கையெழுத்துப் போட்டு அனுப்பிவிட்டு கவரைப் பிரித்தவன், உற்சாகமானான். உடனே செல்போனில் எண்கள் அழுத்தி, "ராஜேஷ்! சரியான நேரத்துல உன் டி.டி. கிடைச்சுது. ரொம்ப தேங்க்ஸ்டா!" என்றான்.

அவன் பேசி முடித்ததும், "என்னங்க... வேகாத வெயில்ல, சைக்கிள்ல வந்து டி.டியைக் கொடுத்துட்டுப் போனது தபால்காரர். நன்றி உங்க நண்பருக்கா?" என்று சிரித்தாள் ராஜி.

Leo Suresh said...

அன்பு சுவனபிரியன்,
'லக்கும் தீணுக்கும் வலிய தீண்' இறைவசனம் ஒன்று என் நியாபகத்திற்க்கு வருகிறது, அதை விரிவாக விளக்கமுடியுமா.மறந்துவிட்டேன், அதனால் கேட்கிறேன்.நன்றி.
லியோ சுரேஷ்
துபாய்

Leo Suresh said...

அன்பு சுவனப்பிரியன்,
இறைவசனத்தை பிழையாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.
லியோ சுரேஷ்
துபாய்

suvanappiriyan said...

கோவிக் கண்ணன்!

என்னது, இந்துமதத்தின் தூதர் கால்கரி சிவாவா ?
தலைபில் எதோ குழப்பம் இருக்கே !
:)
"இந்து மத இறைத்தூதர் நீங்கள் தான்.........., நானும்தான்" -கால்கரி சிவா

ஒரு நாட்டுக்காக தூதுவர்கள் இருப்பதில்லையா? அந்த அர்த்தத்தில்தான் 'இறைத் தூதர்' என்ற வார்த்தையை எடுத்து விட்டு 'தூதர' என்று மட்டும் வைத்தேன். இந்து மதத்துக்காக வாதாடுவதால் இந்து மதத்தின் தூதர் என்று தலைப்பிட்டேன். ஆனால் இப்படி சிவா இறைத் தூதர் என்ற வார்த்தையை பயன் படுத்துவது எவ்வளவு பெரிய தவறு என்றும் விளக்கி இருக்கிறேன். குழப்பம் நீங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

தமிழ்த் தீவிரவாதி!

என்ன சார் பெயரை எல்லாம் இவ்வளவு பயங்கரமாக வைக்கிறீங்க... சொல்லும் கருத்தை கொஞ்சம் சாந்தமாகவும் மற்றவர் மனம் புண்படாமலும் சொல்லுங்களேன். ப்ளீஸ்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

suvanappiriyan said...

பாலா!

//வந்தே மாதரம் ஒரு நாள் பாடுவது இஸ்லாமியர்களுக்கு ஒவ்வாதது என்று ஃபட்வா விட்ட முல்லா கும்பல் ரிக் வேதத்தை, அதுவும் மசூதியில்..?//

வந்தே மாதரம் பாடல் உருவான விதமும், அது ஒரு பெண் தெய்வத்தை நோக்கி பாடப்பட்டதாகவும் சமீபத்தில் இணையத்திலேயே அது பற்றிய சூடான விவாதம் நடந்தது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஏக இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார்கள். இதைத் தெரிந்து கொண்ட இந்துத்துவவாதிகள் வேண்டுமென்றே இப்பாடலைப் பாட வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது குதர்க்கமல்லாமல் வேறு என்ன? வந்தே மாதரம் பாடலை பாடி விட்டால் தேச பக்தி பீறிட்டு வந்து விடுமா என்ன? நாட்டுப் பற்றை உண்டாக்க எத்தனையோ வழி முறைகள் இருக்க நம் முன்னோர்களாலேயே ஒதுக்கப் பட்ட ஒரு பாடலுக்கு இப்பொழுது முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன?

எந்த முஸ்லிமும் நம் நாட்டு தேசிய கீதத்தை பாட மறுப்பதில்லையே!

//ஹிந்துக்கள் நாகூர் தர்க்காவிற்கு மரியாதையுடன் செல்வார்கள்,வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கும் செல்வார்கள்..அந்த tolerance இங்கு இல்லை..//

'படைத்த இறைவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக்் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பலகீனமானது. அதை அவர்கள் அறியக் கூடாதா?'
29 : 41 -குர்ஆன்

'படைத்த இறைவனையன்றி நீங்கள் யாரை அழைக்கின்றீர்கனோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.'
7 : 197 - குர்ஆன்

இதன் மூலம் தர்காக்களுக்கு செல்வதையும் அங்கு சென்று பிரார்த்திப்பதையும் இறைவன் தடுக்கிறான். முகமது நபி நாகூர் தர்காவைப் போன்ற கட்டிடங்களை இடித்து தரை மட்டமாக்க முஸ்லிம்களை பணித்திருக்கிறார். எனவே நாகூர் தர்காவுக்கு முஸ்லிம்களும் போகக் கூடாது என்பது தான் இஸ்லாமிய கட்டளை. நாகூர் தர்காவுக்கே தடை விதித்த இஸ்லாம் உருவங்களை வைத்து வணங்கும் கோவிலுக்கு செல்ல எப்படி அனுமதிக்கும்?

மத நல்லிணக்கம் என்பது நான் பாலாவை மதிக்க வேண்டும். பாலாவும் என்னை மதிக்க வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒரே குடையின் கீழ் சங்கமமாக வேண்டும். அதை விடுத்து ஒருவர் மற்றவரின் வழிபாட்டுத் தலத்துக்கு செல்வதனால் என்ன ஒற்றுமையை கொண்டு வந்து விடப் போகிறீர்கள்.?

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா!

suvanappiriyan said...

ம்யூஸ்!

//தாங்கள் ரிக், யஜூர், சாம, அதர்வணத்திலிருந்தவை என்று சொன்ன ஸ்லோகங்கள் ஒன்றுகூட அந்தப் பெயரால் அழைக்கப்படும் ஸ்க்ரிப்ச்சர்களில் இல்லை. ஏதேனும் புதுப் புத்தகம் போட்டிருக்கிறீர்களா?//

எந்த அத்தியாயம் வசன எண் தவறாக வந்துள்ளது. அந்த இடத்தில் வேறு எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது என்ற விபரத்தைத் தாருங்கள். தவறு எங்கு நடந்துள்ளது என்று உங்களுக்கு அறியத் தருகிறேன்.

இந்து மத வேதங்களை ஆராய்வதற்க்கென்றே ஒரு குழுவை ஏற்படுத்தி சமஸ்கிரத பண்டிதர்கள் பலரையும் அமர்த்தி உருவாக்கியவையே ஜாகிர் நாயக்கின் வேதங்களின் மொழி பெயர்ப்புகள். அதில் தவறு இருந்தால் பொது மேடையிலேயே அவரிடம் இதுபற்றி இந்துக்கள் விவாதித்திருப்பார்கள். பண்டிட் ரவி சங்கருடன் நடத்திய விவாதத்தில் கூட 'முகமது நபியைப் பற்றி முன்னறிவிப்பு செய்யப் பட்டிருக்கும் இந்து வேதங்களை மதியுங்கள்' என்று தான் சொன்னாரே ஒழிய ஜாகிர் நாயக்கின் வாதத்தில் பொய்யிருப்பதாக ரவி சங்கர் சொல்லவில்லை. ஆகவே எந்த வசனம் தவறான மொழி பெயர்ப்பு என்பதை சமஸ்கிரத மூலத்தோடு சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

//இதையெல்லாம் படைத்தது அல்லாதான் என்று தெரியாமல் நிறைய பேர் ரைட் சகோதரர்களையும், ஹென்றி போர்டையும் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். மடையர்கள்.//

ரைட் சகோதரர்களை படைத்ததும் அந்த இறைவன்தானே! அப்படி உண்டாக்கும் அறிவை அளித்ததும் அதே இறைவன் அல்லவா!

//பிரேமானந்தா, சதுர்வேதி, காஞ்சி சுப்பிரமணியன் etc... இவங்களும் இந்துமதத்தின் தூதுவர்களா?

இப்படி அனுப்புவதெல்லாம் பின்பற்றக்கூடாதவை என்பதை புரிந்துகொள்ளும் ஷக்தியுள்ளவர்களுக்கு மட்டும்தான்.//

இதற்கு அறிவுடை நம்பிதான் பதில் சொல்ல வேண்டும். சொல்வார் என்று நினைக்கிறேன்.

//அனுமதிக்க வேண்டும் என்றுதான் ஹிந்து மதப் பெரியவர்கள் கூறிவந்திருக்கிறார்கள். முயற்சியும் செய்கிறார்கள்.//

எப்போது அனுமதிக்கப் போகிறீர்கள்? அந்த நாளை ஆவலோடு எதிர்ப் பார்க்கிறேன். அட முதல்ல பாப்பாரப்பட்டியில ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் தேர்தலை நடத்த முயற்ச்சியுங்கள் ம்யூஸ்!

//அது கிடக்கட்டும். டெல்லி இமாமாக சுவனப்பிரியன் வரமுடியுமா?//

தாராளமாக வரலாமே! இதற்கு இஸ்லாம் ஒன்றும் தடையில்லையே! முஸ்லிமாகவும் இருந்து குர்ஆனிய சட்டதிட்டங்களை விளங்கி, அழகாக ஓதவும் தெரிந்தவர் எந்த பள்ளியிலும் இமாமாக தொழ வைக்கலாம். இவ்வளவு ஏன் சார்? சவூதியில் பல முறை நான் இமாமாக நின்று தொழ வைத்திருக்கிறேன்.'நான் சிறு வயதினனாக இருக்கிறேன் ' என்று மறுத்தாலும், 'நீ அழகாக தவறின்றி ஓதுகிறாய். நீயே இமாமாக நில்' என்று பல முறை இமாமாக நிறுத்தப் பட்டுள்ளேன். எனக்கு பின்னால் எகிப்து,பாகிஸ்தான், சவூதி,சூடான் என்று பல நாட்டு முஸ்லிம்கள் என்னைப் பின் பற்றி தொழுதிருக்கிறார்கள். இங்கு நான் எந்த நாடு என்ன நிறம் எந்த குலம் என்றெல்லாம் பார்க்கப் படவில்லை. நான் ஒரு முஸ்லிம் என்றுதான் பார்க்கப் படுகிறேன். இரும்புக் கரம் கொண்டு சட்டம் போட்டும் நம் நாட்டில் தீணடாமையை ஒழிக்கமுடியாமல் திண்டாடுகிறோம். ஆனால் முகமது நபியின் ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு தொழுகையில் நான் குனிந்தால் குனியவும் நான் நிமிர்ந்தால் நிமிரவும் செய்கிறார்களே! தொழுகையில் நாம் விலகி நின்றாலும் இழுத்து தன் தோளோடு தோள் சேர்த்து வைத்துக் கொள்கிறார்களே! இதைத்தான் புரட்சி என்று சொல்ல வேண்டும்.

suvanappiriyan said...

லியோ சுரேஷ்!

//நான் 15வருடங்கள் சவுதியில் வாழ்ந்துயிருக்கிறேன்.நீங்கள் சொல்வதை மறுக்கிறேன்.அங்கு மாற்று மதம் சம்மந்தமான எதையும் வைத்திருக்கமுடியாது.//

அத்தகைய சம்பவம் எதுவும் இதுவரை எனக்கு ஏற்படவில்லை என்று தான் சொன்னேன். யாருக்குமே ஏற்படாது என்று கூறவில்லை.

முதலில் சவூதியைப் பொறுத்தவரை நூறு சதவீதம் இஸ்லாத்தை கடைபிடிக்கும் நாடு. முகமது நபி பிறந்த நாடாகவும், இறை இல்லமான கஃபாவையும் தன்னகத்தே கொண்டுள்ள நாடு. நாம் இந்த நாட்டுக்கு வரும் போதே இந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பேன் என்ற உறுதி மொழியோடுதான் வருகிறோம். சில புத்தகங்களை இங்கு சென்சார் பண்ணுவார்கள். ஆபாசம், அல்லது மன்னராட்சிக்கு எதிராக கருத்து கொண்ட புத்தகங்கள், மற்ற மத பிரசாரங்கள் வெளிநாடுகளிலிருந்து வருவதை இவர்கள் விரும்பவில்லை. எனவே சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்கள். இதில்ஒரு சில முத்தவாக்கள்கடுமையாக நடந்து கொள்வது வருத்தத்திற்குரியதே!

ஒரு முறை முத்தவாக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. குறைகளை கேட்கலாம் என்றும் அறிவித்திருந்தார்கள். பிலிப்பைன்,இந்தியா, ஆப்ரிக்க நாட்டு சகோதரர்கள் பல கேள்விகளைக் கேட்டார்கள். இவை அனைத்திற்கும் முத்தவாக்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் அனைவருக்கும் பதில் சொன்னார். இந்தியர்கள் சார்பாக நான் அவரிடம்.' சில முத்தவாக்கள் முஸ்லிம் அல்லாத சகோதரர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். இது இஸ்லாத்தின் மேல் அவர்களுக்கு வெறுப்பை உண்டாக்காதா?' என்று கேட்டேன்.

அதற்கு அவர் 'இதுபோன்ற குற்றச் சாட்டு நிறைய வருகிறது. எங்களுக்கு கீழ் உள்ளவர்களிடம் இது பற்றி நிறைய எடுத்துக் கூறுகிறோம். பாலஸ்தீன்,செசன்யா,காஷ்மீர், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளை தொலைக் காட்சியில் பார்க்கும் ஒரு சில காவலர்கள் இஸ்லாம் அல்லாதவர்கள் அனைவரும் இப்படித்தானோ என்ற எண்ணத்தில் இங்குள்ளவர்களிடமும் சற்று கடுமையாக நடந்து கொள்கிறார்கள். இது தவறு என்று நாங்களும் எடுத்து சொல்லி வருகிறோம்.' என்றார். ஆக தவறிழைப்பவர்கள் எல்லா நாடுகளிலும் உள்ளது போல் சவூதியிலும் உள்ளனர். நிலைமை இனி மேலாவது மாறும் என்று நினைப்போம்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஜ்ரா!

//உங்கள் மதத்தில் சொல்லியிருப்பது உங்களுக்கு, எங்கள் மதத்தில் சொல்லியிருப்பது எங்களுக்கு என்று மதத்தை தனிமையில் வைத்துக் கொண்டு,//

முகமது நபி இஸ்லாமிய பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது அன்றைய அரபுகளில் சிலர் 'முகம்மதே! உன்னுடைய கொள்கை நன்றாகத்தான் இருக்கிறது. ஒரு உடன்பாட்டுக்கு வருவோம். ஒரு நாள் நீர் சொல்வது போல் இறைவனை நாங்கள் வணங்குகிறோம். மறுநாள் நாங்கள் சொல்லும் இறைவனை நீர் வணங்க வேண்டும்.இந்த உடன்படிக்கைக்கு ஒத்துவந்தால் நாங்கள் இஸ்லாத்தில் இணைகிறோம் என்றனர்.' இவர்களின் கோரிக்கையை மறுக்கும் முகமாகத்தான் நீங்கள் சொல்லும் குர்ஆன் வசனம் இறங்கியது.

'நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு' என முஹம்மதே கூறுவீராக.
109 : 3,4,5,6 - குர்ஆன்

மார்க்கத்தில் சமரசம் செய்து கொண்டால் குழப்பமே மிஞ்சும் என்பதை சுட்டிக் காட்டவே இந்த வசனம் இறங்கியது. இதன் மூலம் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ இறைவனோ, தூதரோ கட்டளையிடவில்லை எனக் கூறிக் கொள்கிறேன்.

//உங்கள் வேதத்தின் மூலம் யூத வேதம் கடைபிடிப்பவர்களிடம் என்ன சர்டிபிக்கேட் இஸ்லாத்திற்கு இருக்கிறது என்று பார்த்தால் சந்தி சிரிக்கிறது.//

நாடில்லாமல் நாடோடிகளாக திரிந்த யூதர்களை தங்கள் நாட்டில் பரிதாபப்பட்டு பாலஸ்தீனியர் அனுமதித்தனர். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியக் கதையாக இன்று தங்கள் சொந்த நாட்டின் பல பகுதிகளை யூதர்களிடம் இழந்து அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்துள'ளனர் பல பாலஸ்தீனியக் குடும்பங்கள். இஸ்ரேலியர்களின் அடக்குமுறையையும், காட்டுமிராண்டித் தனத்தையும் தினம் தினம் தொலைக்காட்சியில் பார்க்கும் உலக மக்கள் இஸ்ரேலை காரி உமிழ்கிறார்களே! அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? ஓ... இஸ்ரேலியர் கொடுக்கும் சம்பளத்தில் சொகுசாக வாழும் நீங்கள் முதலாளிகளை எப்படி குறை காண்பீர்கள்?

//உங்கள் மதத்துக்கு இந்து மத வேதம் சர்டிபிக்கேட் கொடுக்கவேண்டுமா? //

இஸ்லாத்துக்கு எந்த மத சர்டிபிகேட்டும் தேவையில்லை. இன்னும் சில வருடங்களில் அமெரிக்காவும், ஐரோப்பாவில் பல நாடுகளும் இஸ்லாமிய குடியரசாக மாறும் காட்சியை நானும் நீங்களும் பார்க்கத்தான் போகிறோம். இந்து மதத்தின் நிலைமையை நான் சொல்ல வேண்டியதில்லை. அறிவுடை நம்பி, ராஜாவனஜ், லக்கிலுக், விடாதுகருப்பு, தங்கமணி, முத்து தமிழினி,ரோஸாவசந்த் போன்ற நண்பர்கள் அழகாக சொல்லி வருகின்றனர். அவர்களின் பதிவுகளையும் படித்து தெளிவு பெறுங்கள் வஜ்ரா!

பல தலைமுறைகளுக்கு முன்னால் என் முன்னோர்கள்பின் பற்றிய மதம். என் தாய் நாட்டில் அதிகமானோர் பின் பற்றும் ஒரு மதம். யார் அருளியது? இதன் வரலாறு என்ன? என்று குழம்பிப் போய் இருக்கும் வஜ்ரா போன்றோருக்கு விளக்க வேண்டித்தான் சில ஆதாரங்களை எடுத்துப் போட்டு இதுவும் ஒரு இறை வேதம்தான். இதைக் கொண்டு வந்த தூதர் நோவாதான் என்பதை எனக்குத் தெரிந்த பாணியில் விளக்கி வருகிறேன். இந்து மதத்தைக் காப்பாற்றும் முயற்ச்சியில் இருக்கும் என்னைப் பாராட்டாமல் ஏசுகிறீர்களே இது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா?

சுவாமி விவேகானந்தர்

மற்ற அனைத்து மக்களையும் விட அத்வைத கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாய் இருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் நடைமுறை அத்வைதம்- அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மைப் போல் சமமானவர் என்று பாவிப்பதும், அவ்வாறே நடந்து கொள்ளும் தன்மையும் இந்துக்கள் மத்தியில் அறவே மலரவில்லை. ஆனால் இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாராட்டத்தக்க அளவில் அணுகி இருக்கிறது என்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று நான் அனுபவ பூர்வமாய்க் கூறுகிறேன்.

நான் அழுத்தமாய்ச் சொல்கிறேன், நடைமுறைக்கு இசைவான இந்த இஸ்லாமிய செயல் பாடின்றி வேதாந்தக் கருத்துக்கள் - அது எவ்வளவு தான் சிறப்பானதாக பெருமைக்குரியதாக இருந்தாலும்- பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே அமையும்.

Letters Of Swamy Vivekananda page 463

மகாத்மா காந்தி

தென் ஆப்ரிக்காவில் உள்ள அய்ரோப்பியர்கள் இஸ்லாம் பரவி விடும் என்று பயப்படுவதாக சிலர் கூறினார்கள். இஸ்லாம் ஸ்பெயினுக்கு நாகரீகத்தைக் கற்று தந்தது. மொராக்கோவுக்கு ஒளியைக் கொண்டு வந்தது. உலகுக்குச் சகோதரத்துவம் எனும் கொள்கையை போதித்தது. தென் ஆப்ரிக்காவில் உள்ளவர்கள் வெள்ளை இனத்தாருடன் சம உரிமை கோரக் கூடும் என்பதால் தென் ஆப்ரிக்காவில் உள்ள அய்ரோப்பியர்கள் இஸ்லாமின் வருகைக்காக அஞ்சுகிறார்கள். அவர்கள் நன்றாக பயப்படலாம். சகோதரத்துவம் என்பது பாவம் என்றால். கறுப்பு நிறத்தவர்களுடன் சமத்துவத்திற்காக அவர்கள் அஞ்சினால் அந்த அச்சத்துக்கும் காரணம் உண்டுதான்.

Mahatma Gandhi Quoted in “Mohamed The Prophet Of The Islam” by Ramakrishna Roa. Page 8

suvanappiriyan said...

வாங்க ஜெயராமன்!

//இது மாதிரி அபத்தமான மொழிபெயர்ப்புகளும், ஒட்டுவேலைகளும் ஏற்கனவே பலமுறை இந்து அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.//

யார் நிராகரித்தது என்ற விபரத்தைச் சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்.

//நீங்கள் மறுபடியும் இந்த மாதிரி விசயங்களை கடை விரிப்பதேன் என்று விளங்கவில்லை.//

என் பழைய பதிவை கால்கரி சிவா எடுத்து கடை விரித்ததால், பதிலுக்கு நானும் கடை விரிக்க வேண்டியதாகி விட்டது. சாதாரண எண்ணப் பரிமாற்றம் தான் ஜெயராமன். இதப் போய் அதிக சீரியசாக எடுத்துக்காதீங்க!

Muse (# 01429798200730556938) said...

"என்னங்க... வேகாத வெயில்ல, சைக்கிள்ல வந்து டி.டியைக் கொடுத்துட்டுப் போனது தபால்காரர். நன்றி உங்க நண்பருக்கா?" என்று சிரித்தாள் ராஜி.


தலைப்புச் செய்திகள்:

இப்னு பஷீர் தன் சம்பளப் பணம் முழுவதையும் இறைவனுக்கே அனுப்பி விடுகிறார்.

Anonymous said...

1.
முகமது நபி நாகூர் தர்காவைப் போன்ற கட்டிடங்களை இடித்து தரை மட்டமாக்க முஸ்லிம்களை பணித்திருக்கிறார். எனவே நாகூர் தர்காவுக்கு முஸ்லிம்களும் போகக் கூடாது என்பது தான் இஸ்லாமிய கட்டளை. நாகூர் தர்காவுக்கே தடை விதித்த இஸ்லாம் உருவங்களை வைத்து வணங்கும் கோவிலுக்கு செல்ல எப்படி அனுமதிக்கும்?

மத நல்லிணக்கம் என்பது நான் பாலாவை மதிக்க வேண்டும். பாலாவும் என்னை மதிக்க வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒரே குடையின் கீழ் சங்கமமாக வேண்டும். அதை விடுத்து ஒருவர் மற்றவரின் வழிபாட்டுத் தலத்துக்கு செல்வதனால் என்ன ஒற்றுமையை கொண்டு வந்து விடப் போகிறீர்கள்.?


அதாகப்பட்டது பாலவோடு உங்களுக்கு எந்த விரோதமும் இல்லை. ஆனால் நீங்கள் பாலா வழிபடும் கோவிலை இடிப்பீர்கள். இதை சரியாகப் புரிந்துகொண்டு பா�

suvanappiriyan said...

அன்பு லியோ சுரேஷ்!

//'லக்கும் தீணுக்கும் வலிய தீண்' இறைவசனம் ஒன்று என் நியாபகத்திற்க்கு வருகிறது, அதை விரிவாக விளக்கமுடியுமா.//

அந்த குர்ஆனிய வசனத்திற்கு நேரடியான மொழி பெயர்ப்பு 'உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு' என்பதாகும். இதற்கான முழு விளக்கத்தை இதே பதிவில் வஜ்ராவுக்கு கொடுத்த பதிலில் தெளிவாக்கியிருக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

//இறைவசனத்தை பிழையாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.//

பிழை இல்லை சரியாகவே எழுதியுள்ளீர்கள். அப்படியே எழுதுவதில் தவறுகள் இருந்தால் அதை நான் சரி செய்து கொள்கிறேன். எனவே தாராளமாக உங்கள் சந்தேகங்களை அனுப்புங்கள்.


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

இப்னு பஷீர்!

//விகடனில் வெளியான ஒரு நிமிடக் கதைகளுள் ஒன்று.//

கதையைப் படித்து ம்யூஸ் தெளிவாகியிருப்பார் என்று நம்புகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

மஸ்தூக்கா!

//இஸலாத்திற்கு எதிராக களம் இறங்கிய எத்தனையோ பேரை ஈர்த்த இஸ்லாம் கனடாவில் காலகரி சிவாவையும் இனி ஈர்க்கும்.//

இறைவன் நாடினால் சிவா என்ன! நேச குமாரும், ஆரோக்கியமும், மலர் மன்னனும் கூட மனம் மாறலாம்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

சகோதரர் எழிலுக்கு!

//உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பதில் சொல்லமுடியாத போது, "இத்துடன் இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்" என்று நழுவுகிறீர்கள். //

எந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று நழுவினேன் என்பதை விளக்கினால் நானும் தெரிந்து கொள்வேன்.

//நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?//

'மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும் நற்செய்தி கூறவும் நபிமார்களை இறைவன் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான்.'
2 : 213 - குர்ஆன்

ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று சொல்வதற்கு முதல் தகுதி அவருக்கு இறைவனிடம் இருந்து வேதம் வர வேண்டும். ஒவ்வொரு தூதருக்கும் தான் வேதங்களை அருளியதாக இறைவன் குர்ஆனிலும் இதற்கு முந்திய வேதங்களிலும் குறிப்பிடுகிறான்.

என்னிடமும் வேதம் இருக்கிறது என்று யாரும் பொய் சொல்ல முடியாது. ஏனெனில் இறைவனின் வார்த்தைக்கும் மனிதனின் வார்த்தைக்கும் மிகப் பெரும் வித்தியாசம் இருக்கும். உதாரணத்திற்கு அரபி மொழி தெரிந்தவர்கள் குர்ஆனின் போதனைக்கும், முகமது நபியின் போதனைக்கும் உள்ள வித்தியாசத்தை மிக எளிதில் விளங்கிக் கொள்வார்கள். குர்ஆனின் எழுத்து நடை மிக உயர்ந்த தரமாக இருக்கும். முகமது நபியின் போதனைகளோ நாம் சாதாரணமாக உரையாடுவது போன்று சாதாரண மொழியில் இருக்கும். இதன் வித்தியாசத்தை மொழி பெயர்ப்புகளிலேயும் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். மேலும் இன்றைய அறிவியல் கண்டு பிடிப்புகளோடு மோதாமலும் அத்தகைய வசனங்கள் இருக்க வேண்டும். எல்லா காலத்துக்கும் பொருந்தியும் வர வேண்டும்.

அடுத்து அந்த இறைத் தூதர்களுக்கு கொடுக்கப் பட்ட அதீத சக்திகள். அந்த மக்கள் தூதர்களிடம் அத்தாட்சியைக் கேட்கும் போது இறைவன் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான். ஏசு இஸ்ரவேலர்களைப் பார்த்துக் கூறியதாக குர்ஆன் சொல்லும் போது...

'உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து அதில் ஊதுவேன். இறைவனின் விருப்பப்படி அது பறவையாக மாறும். இறைவனின் விருப்பப்படி பிறவிக் குருடையும் குஷ்டத்தையும் நீக்குவேன். இறந்தோரை உயிர்ப்பிப்பேன்.நீங்கள் உண்பதையும் உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்'
3 : 49 - குர்ஆன்

அந்த மக்களை இவர் இறைத் தூதர்தான் என்று விசுவாசம் கொள்வதற்காக இறைவன் இது போன்ற சக்திகளை அந்த தூதர்களுக்குத் தருவான். இதைப் பார்த்தும் இவர் இறைத் தூதர்தான் என்று விசுவாசம் கொள்வர். முகமது நபி காலத்தில் சந்திரன் பிளந்த அற்புதத்தை கேரள அரசன் சேரமான் பெருமாள் தன் சாளரத்தின் வழியாகப் பார்த்து அதிசயிததார். பிறகு தன் ஆஸ்தான ஜோதிடர்களிடம் இது பற்றிக் கேட்க அவர்கள் முந்தய வேதங்களை ஆராய்ந்து அரபுலகில் தூதர்அவதரித்திருப்பதன உண்மையை விளக்குகின்றனர். அதன் பிறகு அரசர் இஸ்லாமியராக மாறி முகமது நபியைச் சந்திக்க மெக்கா நோக்கி புறப்பட்டதையும் நாம் நம் நாட்டு வரலாறுகளில் பார்க்கிறோம். கண்ணதாசனும் கல்கியில் 'சேரமான் காதலி' என்ற தொடரை எழுதியதையம் நாம் அறிவோம். இது போன்று பல அற்புதங்களினால் நாம் ஒருவரை இறைவனின் தூதர் என்று முடிவு செய்கிறோம்.

//இறைவன் அனைத்து மக்களிடம் இவர்தான் இறைதூதர் என்று பேச முடியுமென்றால், ஏன் இடையே இறைதூதர் என்ற இடைத்தரகர்? சொல்ல வேண்டியதை நேரடியாக இறைவனே எல்லா மக்களிடம் கூறிவிடலாமே? அது ஒன்றும் கடினமான வேலையாக இறைவனுக்கு இருக்காதே?

பதில் கூறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்//

'அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து 'ஆகு' என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும்.'
2 : 117 -குர்ஆன்

'இறைவன் எங்களிடம் பேசக் கூடாதா? அல்லது எங்களுக்கு ஓர் சான்று வரக் கூடாதா?' என்று அறியாதோர் கூறுகின்றனர். இவர்களுக்கு முன் சென்றோர் இவர்களின் கூற்றைப் போலவே கூறினர். அவர்களின் உள்ளங்கள் ஒத்ததாக இருக்கின்றன. உறுதியான நம்பிக்கைக் கொள்ளும் சமுதாயத்திற்கு சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.'
2 : 118 - குர்ஆன்.

தன்னுடைய அடியானான எழில் மற்றொரு அடியானான சுவனப்பிரியனிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று இறைவனுக்குத் தெரிந்ததால்தான் பதிலை இறைவன் குர்ஆனிலேயேத் தருகிறான்.

ஒரு முதலாளி தன் வெலைக்காரனை அனுப்பி தனக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த முதலாளியால் கடையில் சென்று வாங்குவதற்கு இயலாது. அதனால்தான் அவர் வேலையாட்களை வைத்துள்ளார் என்று நாம் கூற மாட்டோம். அவரால் அந்தக் காரியத்தை செய்ய முடியும். என்றாலும் அவர் தனது அந்தஸ்து காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்கோ கூட வேலையாட்களை வைத்திருக்கலாம். இந்த உதாரணத்தை உங்கள் கேள்வியோடு பொருத்திப் பாருங்கள். உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கும்.

இறைவனால் முடியாதது ஒன்றும் இல்லை. ஆனால் இங்கு மனிதர்களை நேர்வழிப் படுத்த வேண்டும். மனிதர்களை நேர்வழிப் படுத்த மனிதர்களைத்தான் தூதராக அனுப்ப முடியும். ஒரு மனிதன் எப்படி இறை வணக்கம் புரிவது? எப்படி திருமணம் செய்து கொள்வது? கொடுக்கல் வாங்கலை எவ்வாறு அமைத்துக் கொள்வது? மாற்று மதத்தவரோடு எவ்வாறு நடந்து கொள்வது? என்பதை எல்லாம் ஒரு மனிதன்தான் செய்து காட்ட முடியும். பிரச்சாரம் பண்ணும் போது எதிர்ப்புகள் வரலாம். நாடு கடத்தப் படலாம். சில நேரங்களில் கொலையும் செய்யப் படலாம். இதற்கு முந்திய சமுதாயங்களில் கூட சில நபிமார்கள் கொல்லப் பட்டும் இருக்கிறார்கள். சில நபிமார்களுக்கு ஆட்சி அதிகாரத்தையும் இறைவன் கொடுத்துள்ளான். எனவே தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாக இறைவன் மனிதனையே அனுப்புகிறான். இந்த ஏற்பாடுஇல்லாமல் வேறொரு ஏற்ப்பாட்டை இறைவன் செய்திருந்தால் 'மனிதர்களாகிய எங்களுக்கு எங்களிலிருந்து ஒரு வழிகாட்டியை இறைவன் அனுப்பியிருக்கக் கூடாதா?' என்று மாற்றியும் கேட்பான் மனிதன்.

இறைவனே மிக அறிந்தவன்.

Muse (# 01429798200730556938) said...

1.
முகமது நபி நாகூர் தர்காவைப் போன்ற கட்டிடங்களை இடித்து தரை மட்டமாக்க முஸ்லிம்களை பணித்திருக்கிறார். எனவே நாகூர் தர்காவுக்கு முஸ்லிம்களும் போகக் கூடாது என்பது தான் இஸ்லாமிய கட்டளை. நாகூர் தர்காவுக்கே தடை விதித்த இஸ்லாம் உருவங்களை வைத்து வணங்கும் கோவிலுக்கு செல்ல எப்படி அனுமதிக்கும்?

மத நல்லிணக்கம் என்பது நான் பாலாவை மதிக்க வேண்டும். பாலாவும் என்னை மதிக்க வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒரே குடையின் கீழ் சங்கமமாக வேண்டும். அதை விடுத்து ஒருவர் மற்றவரின் வழிபாட்டுத் தலத்துக்கு செல்வதனால் என்ன ஒற்றுமையை கொண்டு வந்து விடப் போகிறீர்கள்.?


அதாகப்பட்டது பாலவோடு உங்களுக்கு எந்த விரோதமும் இல்லை. ஆனால் நீங்கள் பாலா வழிபடும் கோவிலை இடிப்பீர்கள். இதை சரியாகப் புரிந்துகொண்டு பாலா உங்களை மதித்து ஒரே குடையின் கீழ் சங்கமமாகவேண்டும்.

இப்படி கூறுவது உயிருக்கு பயந்தோ, காஸுக்கு ஆஸைப்பட்டோ மதம் மாறிய, "முஹம்மது" என்பதைக்கூட சரியாக உச்சரிக்கத் தெரியாத, படிப்பறிவில்லாத, பாமர, முதல்தலைமுறை இஸ்லாமியராகவிருந்தால் பரவாயில்லை. ஆனால், மிக அருமையான உச்சரிப்புக்கள் செய்கின்ற, அரபிக்களாலேயே மற்றவர்களை தொழுகையின்போது வழிநடத்த வேண்டப்படுகின்ற சுவனப்பிரியன் என்பதால் இதுவே இஸ்லாம் கூறும் மார்க்கம் என்பது தெள்ளெனத் தெரிகின்றது.

நீங்கள் இப்படி பேசுவதற்குப் பெயர் "மத நல்லிணக்கம்". இந்த "மத நல்லிணக்கம்" அமெரிக்கா, ஐரோப்பாவரை பரவவும் வேண்டும்.

இஸ்லாம் தீவிரவாத மதம் என்று கூறுபவர்களின் கருத்தை உறுதி செய்கிறீர்கள்.

அப்புறம் பாலா, இந்த இஸ்லாம் இனிக்கிறதா?

2.
இன்னும் சில வருடங்களில் அமெரிக்காவும், ஐரோப்பாவில் பல நாடுகளும் இஸ்லாமிய குடியரசாக மாறும் காட்சியை நானும் நீங்களும் பார்க்கத்தான் போகிறோம். இந்து மதத்தின் நிலைமையை நான் சொல்ல வேண்டியதில்லை. அறிவுடை நம்பி, ராஜாவனஜ், லக்கிலுக், விடாதுகருப்பு, தங்கமணி, முத்து தமிழினி,ரோஸாவசந்த் போன்ற நண்பர்கள் அழகாக சொல்லி வருகின்றனர்.

இறைநேசன், இவர்கள் சொல்லி வருகின்ற விஷயங்களில் உண்மையுண்டு. பெரிதுபடுத்தப்படுகின்ற உண்மை என்பது என் கருத்து. இதனால் இவர்கள் இஸ்லாத்திலிருக்கும் தாழ்நிலையை அறியாதவர்கள் என்றோ, இஸ்லாத்திற்கு கிடைத்திருக்கும் வரம் என்றோ மனப்பால் குடிக்க வேண்டாம். இவர்கள் சீர்திருத்த விரும்புவது இந்த தேஸத்து மக்களை. அது இஸ்லாத்திற்கு மாறுவதால் நடவாது என்பதும் இவர்களுக்கு நன்கு தெரியும். சிலருடன் எனக்கு நேரடி, நெருங்கிய பழக்கமும் உண்டு. இவர்களின் நுண்ணிய அறிவும், பொது நல நோக்கும் இவர்களின்மேல் எனக்கு அன்பையும், மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள் அதிகாரத்திற்கு வருவாராயின் மற்ற இறை நம்பிக்கையாளரைக்கூட பொறுப்பர். ஆனால், இறைநம்பிக்கையே இல்லாதவரைத்தான் முதலில் போட்டுத் தள்ளுவர் என்பது அவர்களுக்குத் தெரியும். நீங்கள் நினைப்பது போல அவர்கள் மடையர்கள் இல்லை.

3.
தாராளமாக வரலாமே! இதற்கு இஸ்லாம் ஒன்றும் தடையில்லையே! முஸ்லிமாகவும் இருந்து குர்ஆனிய சட்டதிட்டங்களை விளங்கி, அழகாக ஓதவும் தெரிந்தவர் எந்த பள்ளியிலும் இமாமாக தொழ வைக்கலாம்.

அப்புறம் ஏன் ஸார், டெல்லியில் புகாரி குடும்பத்தவர் மட்டும் இமாமாக இருக்கிறார்கள்? அதுவும் பாபர் காலத்திலிருந்து. ஸுவனப்பிரியன் வந்தாலாவது திருந்தாதா என்று ஏங்கும் என்போன்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற அல்லாவிற்கு மனம் வரவில்லையா?

அப்புறம் இன்னொரு கேள்வி. ஸவூதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட குளத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தவிர்த்து மற்றவர் குளிக்க தடையுள்ளதே. ஏன்?

4.
பண்டிட் ரவி சங்கருடன் நடத்திய விவாதத்தில் கூட

இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். ஸ்ரீ ஸ்ரீ அந்த மேடையில் தோன்றியதற்குக் காரணம் எப்படியாவது இஸ்லாமியரை மற்ற மதத்தவர்கள்மேல் மரியாதைகொள்ளச் செய்யவே. ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் நடத்தியது மத நல்லிணக்க மாநாடு. உங்களுக்கு அது "விவாதம்" என்று தோன்றுகின்றது. உங்களுக்கு எப்போது புரியும்?

5.
பண்டிட் ரவி சங்கருடன் நடத்திய விவாதத்தில் கூட

பண்டிட் ரவிஷங்கர் சிதார் வாஸிப்பார். கீதை வாஸிப்பார். குரான் வாஸிக்கமாட்டார்.

6.
ரைட் சகோதரர்களை படைத்ததும் அந்த இறைவன்தானே! அப்படி உண்டாக்கும் அறிவை அளித்ததும் அதே இறைவன் அல்லவா!

இந்த விஷயத்தில் ரைட் சகோதரர்களின் அப்பாவின் அபிப்பிராயம் என்ன என்பது தெரிய வாய்ப்பில்லை என்பதால் வேறொரு கேள்வி. தற்கொலைப் படை, மதத் தீவிரவாதம், விபச்சாரம், பெண்களின்மேல் அடக்குமுறை, தன் இனத்தை தவிர மற்றோரெல்லாம் தாழ்ந்தவர் என்ற எண்ணம், இறைவனால் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தை கட்டிடங்களை இடிக்கப் பயன்படுத்துவது, பொய்சொல்லுவது, எப்படியாவது தன்னுடைய கொள்கையை மற்றவர்கள் பின்பற்றவேண்டும் என்று நினைப்பது, ............ இதெல்லாம் யார் படைத்தார்கள்?

6.a
'குதிதைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும் மதிப்புக்காகவும் அவன் படைத்தான். நீங்கள் அறியாதவற்றையும் இனி படைப்பான்.'
16 : 8 - குர்ஆன்


எய்ட்ஸ்?

7.
எப்போது அனுமதிக்கப் போகிறீர்கள்? அந்த நாளை ஆவலோடு எதிர்ப் பார்க்கிறேன். அட முதல்ல பாப்பாரப்பட்டியில ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் தேர்தலை நடத்த முயற்ச்சியுங்கள் ம்யூஸ்!


அனுமதிக்கும், மறுக்கும் உரிமையே யாருக்கும் இல்லை என்றல்லவோ கூறிவருகிறோம். அதுவுமன்றி, இஸ்லாமிய கிருத்துவ மதங்களால் மேலும் இறுகி இந்தக் கொடூர நிலையை அடைந்துவிட்ட ஹிந்து மதங்களை திருத்தல்லவோ பெரியோர்கள் பாடுபடுகின்றனர். ஹிந்து மதங்களின் உண்மை தன்மைபற்றி ஓரளவேனும் அறிந்தவர் யாரும் ஜாதிவெறி கொண்டோரில்லை. பங்காரு அடிகளின் பாதம் பணிபவர்களில் பார்ப்பனரும் உண்டு. வேளாளரும் உண்டு. தேவரும் உண்டு. இது மேலும் மேலும் பரவி இஸ்லாமிய கிருத்துவ தாக்கங்களிலிருந்து வெளியேறி ஹிந்து மதங்கள் தன் பழைய நிலையை அடையவேண்டும். இன்ஷாஹ் முருகா, அது நடக்கும்.

7.a.
அட முதல்ல பாப்பாரப்பட்டியில ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் தேர்தலை நடத்த முயற்ச்சியுங்கள் ம்யூஸ்!

முழுமனதாக முயற்சிக்கிறோம் நண்பரே. புண்ணுக்கு புனுகு பூசுவது போல அரபி கலாச்சாரத்திற்கு ஆராதனை செய்வதில்லை.

ஹிந்துக் கடவுளரை ஏளனம் செய்தும், ஹிந்துக்களை தாழ்த்தியும் பேஸிவிட்டு "நோன்பு கஞ்சி" குடித்து சிறுபான்மையினரால் ஆதரிக்கப்படுபவர்கள் இருக்கும்வரை ஜாதிவெறி ஒழியாது. இவர்களுக்கு நோன்பு கஞ்சி ப்ரஸாதம் கிடைப்பதே இவர்கள் ஜாதி பாகுபாட்டை வளர்ப்பதால்தானே.

8.
பல தலைமுறைகளுக்கு முன்னால் என் முன்னோர்கள்பின் பற்றிய மதம். என் தாய் நாட்டில் அதிகமானோர் பின் பற்றும் ஒரு மதம். யார் அருளியது? இதன் வரலாறு என்ன? என்று குழம்பிப் போய் இருக்கும் வஜ்ரா போன்றோருக்கு

தாங்கள் சொல்லுவதுபோலத்தான் கிருத்துவர்களும் ஹிந்துமதங்களெல்லாம் கிருத்துவையே வணங்கிவருகின்றன என்று கதைவிடுகிறார்கள். நீங்கள் யேசுவுக்குப் பதிலாக முகம்மது என்று போட்டிருக்கிறீர்கள். இந்த வித்தியாஸம் கூட தெரியாமல் இருப்பதற்கு வஜ்ரா என்ன உங்களால் மூளை சலவை செய்யப்படும் பாமரர்களில் ஒருவர் என்று நினைத்தீரோ? வஜ்ரா தெளிவாகத்தான் இருக்கிறார்.

9.
சுவாமி விவேகானந்தர் etc.

ஸ்வாமி விவேகானந்தர் இஸ்லாம் பற்றியும், முகம்மது பற்றியும் கூறியுள்ள மற்ற விஷயங்களையும் ஒத்துக்கொள்கிறீர்களா?

10.
மகாத்மா காந்தி etc.

இப்படியெல்லாம் மகாத்மா காந்தி பேசியதற்குப் பலன் அவரது மகனையே இஸ்லாத்திற்கு மாற்றி தந்தைக்கு எல்லாவகையிலும் மன உளைச்சலை தந்தது இஸ்லாம் என்பதே.

மகாத்மா காந்தி "பொதுவாகவே இஸ்லாமியர்கள் ரௌடிகள்" என்று சொன்னதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

11.
கவலைப்படாதீர்கள். இஸலாத்திற்கு எதிராக களம் இறங்கிய எத்தனையோ பேரை ஈர்த்த இஸ்லாம் கனடாவில் காலகரி சிவாவையும் இனி ஈர்க்கும்.

ஈரும் பேனும் ஈயும் மொய்க்கும் இஸ்லாம் ஈர்க்காது.

12.
யார் நிராகரித்தது என்ற விபரத்தைச் சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்.

மதிப்பிற்குரிய ஜயராமன் சொல்லியிருக்கிறாரே. உண்மையை பார்த்தும் பார்க்காததுபோல் இருப்பது தப்பு, உம்மாச்சி கண்ணை குத்திடும், (அல்லது ஸுவனத்தில் அழகிய பெண்கள் கிடைக்கமாட்டார்கள்) என்று எதேனும் முகம்மது சொல்லவில்லையா?

உங்களுக்காக மதிப்பிற்குரிய ஜயராமன் அவர்கள் சுட்டியதை கீழே தருகிறேன்:

தங்கள் பதிவுக்கு பதில் இங்கே. படிக்க வேண்டுகிறேன்..

"Muhammad is not predicted in Hindu scriptures

Zakir Naik and Abdul Haque Vidyarthi Exposed "

http://www.faithfreedom.org/Articles/Prasadh51229.htm

நன்றி

வணக்கம்


உங்களுக்காக நன்றி எல்லாம் சொல்லி வணக்கமும் சொல்லியிருக்கிறார். அல்லாவின் நினைவில் தாங்கள் இதை கவனிக்கவில்லை போலிருக்கிறது.

13.எழில் எழிலான கேள்வி ஒன்று கேட்டிருக்கிறாரே. எழுதுவீரா பதில்?

Muse (# 01429798200730556938) said...

இறைவன் நாடினால் சிவா என்ன! நேச குமாரும், ஆரோக்கியமும், மலர் மன்னனும் கூட மனம் மாறலாம்.

அல்லா அந்த அளவு கொடூரமனாவளல்ல என்று நினைக்கிறேன். இவர்களுக்கு குறைந்த பக்ஷ தண்டனையாக நரகத்தை வேண்டுமானாலும் தருவாளே ஒழிந்து, ஒரேயடியாகக் கைவிட மாட்டாள்.

Muse (# 01429798200730556938) said...

சுவனப்பிரியன்,

தாங்கள் எழிலுக்கு சொல்லியிருக்கும் அனைத்துப் பதில்களும் மற்ற மதங்களுக்கும் பொருந்தும் என்பதை அறிவீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா மதத் தலைவர்கௌம் தாங்கள் சொல்வதைத்தான் சொல்லுகிறார்கள். இதில் முஹம்மது சொன்னது மட்டும் எங்கனம் வேறுபட்டுவிட்டது?

'உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து அதில் ஊதுவேன். இறைவனின் விருப்பப்படி அது பறவையாக மாறும். இறைவனின் விருப்பப்படி பிறவிக் குருடையும் குஷ்டத்தையும் நீக்குவேன். இறந்தோரை உயிர்ப்பிப்பேன்.நீங்கள் உண்பதையும் உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்'

இதையெல்லாம் இயேஸுபிரான் செய்ததாக படித்துள்ளேன். முஹம்மது அவர்களும் இதுபோல ஏதேனும் செய்துள்ளாரா?

கால்கரி சிவா said...

//இறைவன் நாடினால் சிவா என்ன! நேச குமாரும், ஆரோக்கியமும், மலர் மன்னனும் கூட மனம் மாறலாம்.
//

சுவனப்ரியன், சிரிப்பு வரவழைக்கிறீர்கள்

நான் நாடவில்லை அதாவது என் இறைவனாகிய நான் நாடவில்லை இஸ்லாமிற்கு மாற. இது உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கும்.

நானும் நேசகுமாரும் மறை கழண்ட கேசுகள் என் உங்களவர்கள் கொடுத்த சர்டிபிகேட் படி

suvanappiriyan said...

ம்யூஸ்!

1.
//அதாகப்பட்டது பாலவோடு உங்களுக்கு எந்த விரோதமும் இல்லை. ஆனால் நீங்கள் பாலா வழிபடும் கோவிலை இடிப்பீர்கள். இதை சரியாகப் புரிந்துகொண்டு பாலா உங்களை மதித்து ஒரே குடையின் கீழ் சங்கமமாகவேண்டும். //

நான் சொல்ல வந்தது ஒரு மதத்தவர் மற்ற மதத்தவரை மதிக்க வேண்டும். எனக்கு விருப்பமில்லாத கோவிலுக்கும் அல்லது அவருக்கு விருப்பமில்லாத மசூதிக்கும் நட்பை வளர்க்கிறோம் என்ற பெயரில் செல்வது நடிப்பாகாதா? இதன் மூலம் தான் மத நல்லிணக்கம் வளருமா? நான் சொல்ல வந்த கருத்தை பாலா சரியாகவே விளங்கியிருப்பார்.

மேலும் தர்காக்களை இடிக்கச் சொல்லித்தான் முகமது நபி சொன்னதாக நான் சொன்னேன். கோவிலை இடிக்கச் சொல்லி நான் சொன்னதாக நெஞ்சறிந்து பொய் சொல்கிறீர்களே! பதிவைப் படிப்பவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

2.
//இறைநேசன், இவர்கள் சொல்லி வருகின்ற விஷயங்களில் உண்மையுண்டு. பெரிதுபடுத்தப்படுகின்ற உண்மை என்பது என் கருத்து. இதனால் இவர்கள் இஸ்லாத்திலிருக்கும் தாழ்நிலையை அறியாதவர்கள் என்றோ, இஸ்லாத்திற்கு கிடைத்திருக்கும் வரம் என்றோ மனப்பால் குடிக்க வேண்டாம். இவர்கள் சீர்திருத்த விரும்புவது இந்த தேஸத்து மக்களை. அது இஸ்லாத்திற்கு மாறுவதால் நடவாது என்பதும் இவர்களுக்கு நன்கு தெரியும்.//

அப்பாடா! அவர்கள் சொல்வதில் உண்மையுண்டு என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி.

மாடு புனிதமானது என்றும் : பாம்புக்கு பால் வார்க்க வேண்டும். எறும்புக்கு அரிசி இட வேண்டும். காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும். வியாழக்கிழமை தோறும் கருடனை தரிசிக்க வேண்டும் என்றும் காத்துக் கிடக்கின்றீர்கள். ஏன்? உங்கள் வேதங்களும் புராணங்களும் இவை எல்லாம் புனிதமானது என்று சொன்னதால் இவற்றை எல்லாம் வணக்கத்திலும் சேர்த்துக் கொள்கிறீர்கள். எனவே ஒரு இந்து இந்த உயிரனங்களிடத்தில் பாசத்தைப் பொழிகிறார். இபபடி பாசத்தை பொழியும் அதே இந்து தன் இனத்தைச் சேர்ந்த ஒரு ஆதி திராவிடரை தீண்டத்தகாதவன் என்றும் சமூகத்திலிருந்தே ஒதுக்கி வைப்பது எதனால்? அதே வேதங்களும்,ஸ்மிருதிகளும், புராணங்களும் மனிதனை நான்கு வருணமாக பிரித்து அவரவர்க்குள்ள தகுதிகளையும் நிர்ணயித்து விட்டது. தன் மதம் சொல்வதால் ஒரு இந்து தீண்டாமையைக் கடை பிடிக்கிறார். எனவே 'நோய் நாடி' என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப பிரச்னைக்கு மூல காரணமான மனிதர்களால் வேதங்களில் புகுத்தப்பட்ட தீண்டாமை கருத்துகளை களைய வேண்டும். இது நடைபெறாத பட்சத்தில் எத்தனை நூற்றாண்டானாலும் நம் நாட்டில் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்றும் கூறிக் கொள்கிறேன்.

3.
//அப்புறம் ஏன் ஸார், டெல்லியில் புகாரி குடும்பத்தவர் மட்டும் இமாமாக இருக்கிறார்கள்? அதுவும் பாபர் காலத்திலிரு//

ஒரு பள்ளியில் இமாமாக இருப்பவரை நியமிப்பது அந்த பள்ளியை நிர்வகிக்கும் நிர்வாகிகளின் அதிகாரத்தில் வரும். டெல்லியில் உள்ள முஸ்லிம்கள் அவர் மேல் ஏதும் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு அவர் தேவையில்லை என்று நிர்வாகிகள் தீர்மானித்தால் அடுத்த நாளே அவர் நீக்கப் பட்டு வேறொருவர் அந்த இடத்துக்கு வருவார். டெல்லி இமாம் பொறுப்பு என்பது காஞ்சி சங்கர மடம் போல் நிரந்தரமான நியமனம் ஒன்றும் அல்ல என்றும் கூறிக் கொள்கிறேன்.

//அப்புறம் இன்னொரு கேள்வி. ஸவூதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட குளத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தவிர்த்து மற்றவர் குளிக்க தடையுள்ளதே. ஏன்? //

இது என்ன புதுக் கதை. இத்தனை வருடம் சவூதியில் இருக்கும் எனக்கு இது தெரியாமல் போய் விட்டது. ரீல் விடுவதற்கு ஒரு அளவே இல்லையா ம்யூஸ.? எந்த இடம் என்ற ஆதாரத்தைக் சொல்லுங்கள்.

கேள்வி நான்கும் ஐந்தும் உங்களின் மதிப்பீடு என்பதால் ஆறுக்குள் செல்வோம்.

6.
//அடக்குமுறை, தன் இனத்தை தவிர மற்றோரெல்லாம் தாழ்ந்தவர்//

இதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் உங்களை நீங்களே (தீண்டாமை) கேட்டுக் கொண்டதால் விடை தேடுங்கள் என்று கூறி அடுத்த கேள்வியில் நுழைவோம்.

//எய்ட்ஸ்?//

'அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல மழை பொழிந்து அவ்வூரின் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக்கினோம். சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அவ்வூர் நீங்கள் சென்று வரும் நிலையான சாலையில்தான் உள்ளது. '
15 : 74,75,76 - குர்ஆன்

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மக்களை எவ்வாறு அழித்தோம் என்று இங்கு இறைவன் கூறுகிறான். ஜோர்டானில் 'சாக்கடல்' (Dead Sea) சென்று பார்த்தவர்களுக்கு இறைவன் அந்த ஊரை எவ்வாறு அழித்துள்ளான் அந்த கடல் எதற்கும் பயன் படாமல் இன்று வரை இருப்பதையும் நாம் நேரிலேயே பார்க்கலாம். அந்த கால மக்களுக்கு அத்தகைய தண்டனை. இன்று இந்த தவறில் ஈடுபடுபவர்களுக்கு இறைவன் கொடுக்கும் தண்டனை எய்ட்ஸ். குர்ஆன் சொல்வது போல் நீங்கள் சிந்திப்பதில்லையா?

7.
//இது மேலும் மேலும் பரவி இஸ்லாமிய கிருத்துவ தாக்கங்களிலிருந்து வெளியேறி ஹிந்து மதங்கள் தன் பழைய நிலையை அடையவேண்டும். இன்ஷாஹ் முருகா, அது நடக்கும். //

இந்த இடத்தில் நாம் இருவருமே ஒத்த கருத்துடையவர்களாக இருக்கிறோம். இந்த பதிவு சொல்ல வரும் கருத்தே பழைய இந்து மதத்தை மீட்டெடுங்கள் என்பதுதான். இன்ஷா அல்லாஹ் நிறைவேறும் என்று நானும் பிரார்த்திக்கிறேன்.

8.
//ஹிந்துக் கடவுளரை ஏளனம் செய்தும், ஹிந்துக்களை தாழ்த்தியும் பேஸிவிட்டு "நோன்பு கஞ்சி" குடித்து//

அப்போ தீண்டாமைக்கு காரணம் கலைஞர் என்கிறீர்களா? ம்யூஸ் அப்போ பொய்களையே சொல்வது என்று முடிவே எடுத்துவிட்டீர்கள்! நான் என்னத்தை சொலறது.

9.
//ஸ்வாமி விவேகானந்தர் இஸ்லாம் பற்றியும், முகம்மது பற்றியும் கூறியுள்ள மற்ற விஷயங்களையும் ஒத்துக்கொள்கிறீர்களா?//

ஆதாரத்தோடு பட்டியலிடுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்.

10.
//இப்படியெல்லாம் மகாத்மா காந்தி பேசியதற்குப் பலன் அவரது மகனையே இஸ்லாத்திற்கு மாற்றி தந்தைக்கு எல்லாவகையிலும் மன உளைச்சலை தந்தது இஸ்லாம் என்பதே.

மகாத்மா காந்தி "பொதுவாகவே இஸ்லாமியர்கள் ரௌடிகள்" என்று சொன்னதை ஏற்றுக்கொள்கிறீர்களா?//

காந்தி தன் மகன் இஸ்லாத்துக்கு மாறியதில் சந்தோஷம் அல்லவா பட்டிருப்பார். மன உளைச்சலுக்கு ஆளானதாக எதில் படித்தீர்கள்.

'இஸ்லாமியர்கள் ரௌடிகள்' என்று காந்தி எப்பொழுது சொன்னார்? வழக்கமான ரீல்தானே!

11.
//ஈரும் பேனும் ஈயும் மொய்க்கும் இஸ்லாம் ஈர்க்காது.//

அப்போ பரேமானந்தாவும், சதுர்வேதியும், etc.... வந்தால்தான் உங்களை ஈர்க்குமோ!

12.
ஜெயராமன் கொடுத்த சுட்டியை தேடினேன். ஆனால் அது சவூதியில் தடை செய்யப் பட்ட வெப் சைட். எனவே என்னால் பார்க்க முடியவில்லை.

'வேதங்களை நான் பார்த்தேன். அதில் நான் (சுவனப்பிரியன்) குறிப்பிட்டபடி எதுவும் தென்பட வில்லை' என்று கூறியதற்கு அத்தியாயம் வசன எண்ணைக் கேட்டிருந்தேன். அதற்கு எதுவும் பதில் தரவில்லையே ம்யூஸ்.

13.
//.எழில் எழிலான கேள்வி ஒன்று கேட்டிருக்கிறாரே. எழுதுவீரா பதில்?//

எழுச்சியாக நான் கொடுத்திருக்கும் பதிலை படித்து விட்டீரா?

நாடோடி said...

//ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மக்களை எவ்வாறு அழித்தோம் என்று இங்கு இறைவன் கூறுகிறான். ஜோர்டானில் 'சாக்கடல்' (Dead Sea) சென்று பார்த்தவர்களுக்கு இறைவன் அந்த ஊரை எவ்வாறு அழித்துள்ளான் அந்த கடல் எதற்கும் பயன் படாமல் இன்று வரை இருப்பதையும் நாம் நேரிலேயே பார்க்கலாம். அந்த கால மக்களுக்கு அத்தகைய தண்டனை. இன்று இந்த தவறில் ஈடுபடுபவர்களுக்கு இறைவன் கொடுக்கும் தண்டனை எய்ட்ஸ். குர்ஆன் சொல்வது போல் நீங்கள் சிந்திப்பதில்லையா?//

அய்யா தங்களுக்கு Dead Sea பற்றி தெறிந்ததை மேலும் சொல்ல முடியுமா?...

suvanappiriyan said...

கால்கரி சிவா!

//நான் நாடவில்லை அதாவது என் இறைவனாகிய நான் நாடவில்லை இஸ்லாமிற்கு மாற. இது உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கும்.//

சிரித்து வயிறு வலியே வந்து விட்டது. சிரித்து முடித்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று பார்த்தால் எதுவும் புரியவில்லை. எனவே சிவாவின் கடவுள் கொள்கையை தெரிந்தவர்கள் யாராவது விளக்குங்களேன்.

suvanappiriyan said...

ம்யூஸ்!

//தாங்கள் எழிலுக்கு சொல்லியிருக்கும் அனைத்துப் பதில்களும் மற்ற மதங்களுக்கும் பொருந்தும் என்பதை அறிவீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா மதத் தலைவர்கௌம் தாங்கள் சொல்வதைத்தான் சொல்லுகிறார்கள். இதில் முஹம்மது சொன்னது மட்டும் எங்கனம் வேறுபட்டுவிட்டது?//

நான் முன்பே சொன்னது போல் இந்த ஓரிறைக் கொள்கையை முகமது நபி மட்டும் சொல்லவில்லை. இதற்கு முன்வந்த ஏசு, மோசே, லோத், ஆப்ரஹாம், நோவா ஆதம் வரை உலகுக்கு வந்த இறைத் தூதர்கள் எந்த இறைவனை வணங்கச் சொன்னார்களோ அதே இறைவனைத்தான் முகமது நபியும் வணங்கச் சொன்னார். இஸ்லாத்தின் அடிப்படையே 'லாஇலாஹா இல்லல்லாஹ் முகமம்மதுர் ரசூலுல்லாஹ்' என்பது. அதாவது 'இறைவன் இல்லை அல்லாஹ்வைத் தவிர: முகமது அந்த இறைவனின் தூதராக இருக்கிறார்' என்று யாரெல்லாம் மனதாலும் செயலாலும் வாழ்கிறார்களோ அவர்கள் இஸ்லாமியர் எனப்படுவர். ஆனால் கிறித்தவர்களை எடுத்துக் கொண்டால் தேவன், பரிசுத்த ஆவி,தேவ மகன், மேரி என்று தங்களின் வணக்கங்களை பங்கு போட ஆரம்பித்து விட்டனர். இந்துக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் எத்தனை தெய்வங்களை வணங்குகிறார்கள் என்று அவர்களுக்கே கணக்கு தெரியாது. இந்த பதிவிலேயே நீங்கள் சொல்லும் ஒரு கருத்து

//பங்காரு அடிகளின் பாதம் பணிபவர்களில் பார்ப்பனரும் உண்டு. வேளாளரும் உண்டு. தேவரும் உண்டு.//

நம்மைப் போன்ற ஒரு மனிதர். நமக்குள்ள பலகீனங்கள் அனைத்தும் அமையப் பெற்றவர். நம்மைப் போலவே மரணிக்கவும் போகிறவர். இப்படிப் பட்டவரின் கால்களில் விழுந்து வணங்குவது எந்த அளவு அறிவில் சிறந்த செயல் என்று நினைக்கிறீர்கள்? இவரைவிட மேல் மட்டத்தில் வைத்து பூஜிக்கப் பட்ட சங்கராச்சாரியர் நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதர்தான் என்று சமீபத்தில் நாம் விளங்கினோம். இது போன்ற தனி மனித வழிபாடு காலில் விழும் கலாச்சாரம் என்பதற்கெல்லாம் இஸ்லாம் தடை போட்டு விட்டது. தான் வரும்போது தனக்காக யாரும் எழுந்திருக்க வேண்டாம் யாரும் யார் காலிலும் விழவும் கூடாது என்று கடுமையாக தடை செய்து விட்டு முகமது நபி சென்றதால் இன்று வரை இந்தபழக்கம் இஸ்லாமியரிடத்தில் இல்லை.

இறை வணக்கத்திலேயே இத்தனை வேறுபாடு இருக்க உலக மதங்கள் சொல்வதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?

//முஹம்மது அவர்களும் இதுபோல ஏதேனும் செய்துள்ளாரா?//

'இறைவன் ஒவ்வொரு தூதருக்கும் ஒரு அற்புதத்தைக் கொடுத்தான். எனக்கு கொடுக்கப்பட்ட அற்புதம் இந்த குர்ஆனாகும்.' என்று முகமதுநபி கூறியுள்ளதால் குர்ஆன் ஒன்றையே நாம் அற்புதமாக எடுத்துக் கொள்ள முடியும்.

அதோடு எழிலுக்கு கொடுத்த பதிலில் இறைவன் உதவியால் ஒரு அற்புதத்தை முகமது நபி செய்து காண்பித்ததாக சொல்லியிருந்தேன். பார்க்கவில்லையா?

Floraipuyal said...

சுவனப்பிரியன், மிக அழகாகவும் பொறுமையுடனும் தங்கள் கருத்துக்களைச் சொல்கிறீர்கள். எனது பாராட்டுக்களுடன் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவா சொல்லம் "நானே இறைவன்" கொள்கை மற்றோருக்குப் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் கடினமாக இருக்கும். ஒரு காலத்தில் ஐரோப்பியர்களுக்கு சுழியம் என்னும் கருத்தை ஏற்றுக் கொள்வது இயலாததாக இருந்தது. அது போலத்தான் இதுவும்.

இயற்கையே இறைவன் இறைவனே இயற்கை என்பது புரிந்தால் அனைத்து மதங்களையும் நொடியில் புரிந்து கொள்ளலாம். இசுலாமியக் கொள்கைப் படி இயற்கை என்பதை ஒருவனே இறைவன் என்று பார்க்கிறீர்கள். இந்து கொள்கைப் படி அனைத்திலும் இயற்கையை ( இறைவனை) பார்க்கிறார்கள்.

நன்மையும் தீமையும் அவனே. நான், சிவா, நீங்கள் மற்றும் அனைவரும் அனைத்தும் இயற்கையே. இயற்கையின் விதிகளை யாரும் மீறுதல் இயலாது. நான் இயற்கை என்று கூறுகிறேன். நீங்கள் அல்லாஹ் என்கிறீர்கள். சிவா இறைவன் என்கிறார். சொற்கள் வேறாயினும் பொருள் ஒன்றே.

இந்துக்களின் பல கடவுள் கொள்கை உங்களுக்கு புரியவில்லை என்று எண்ணுகிறேன். நான் குறித்தது போல் கண்டீர்களானால் அழிவு என்ற இயற்கையின் ஒரு முகத்தை சிவனாகவும் ஆக்கம் என்ற ஒரு முகத்தை பிரமனாகவும் காத்தல் என்பதை விண்ணவனாகவும் இதே போல் இயற்கையின் ஒவ்வொரு முகத்தையும் பல்வேறு கடவுள்களாகக் காண்கின்றனர் இந்துக்கள். இதுவும் சரியே.

இவற்றைப் புரிந்து கொண்டால் நீங்களும் இயற்கையே (இறைவனே) என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

Leo Suresh said...

அன்பு சுவனப்பிரியன்,
குல்லு ஆம் இன் தும்பி கேர்.
லியோ சுரேஷ்
துபாய்

suvanappiriyan said...

நாடோடி!

//அய்யா தங்களுக்கு Dead Sea பற்றி தெறிந்ததை மேலும் சொல்ல முடியுமா?...//

நீங்கள் கேட்ட விளக்கத்தை எழுத ஆரம்பித்தேன். பதில் நீண்டு விட்டதால் சிரமத்தைத் தவிர்க்க தனிப் பதிவாகவே கொடுத்துள்ளேன். படித்துப் பார்த்து உங்களின் கருத்துக்களையும் எழுதுங்கள்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Muse (# 01429798200730556938) said...

மேலும் தர்காக்களை இடிக்கச் சொல்லித்தான் முகமது நபி சொன்னதாக நான் சொன்னேன். கோவிலை இடிக்கச் சொல்லி நான் சொன்னதாக நெஞ்சறிந்து பொய் சொல்கிறீர்களே!

பதிவைப் படிப்பவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்?


சுவனப்பிரியன் அவர்களே, தங்கள் பதிவைப் படிப்பவர்கள்பற்றி உங்களது அபிப்ராயம் இவ்வளவுதானா? பொழுதுபோகாமல் உங்களது பதிவுகளைப் படித்துவிடுவதாலேயே அவர்களுக்கு

புத்திகூர்மை இல்லை என்று அர்த்தமாகாது.

முஹம்மது நாகூர் தர்க்காவை இடிக்க வேண்டும், வேறு எந்த வழிபடுதலத்தையும் இடிக்கவேண்டாம் என்று சொல்லியிருக்கிறாரா? அல்லாவைத் தவிர வேறு எந்தவிதத்திலும் உருவ

வழிபாடு நடக்குமாயின் அந்த கட்டிடங்களை இடிக்கலாம் என்று சொல்லியிருக்கலாம். ஏன், தாங்கள் இங்கே சொல்லியிருப்பதையே பார்ப்போமே;

முகமது நபி நாகூர் தர்காவைப் போன்ற கட்டிடங்களை இடித்து தரை மட்டமாக்க முஸ்லிம்களை பணித்திருக்கிறார்

அதாவது உருவவழிபாடு எங்கனம் நடந்தாலும் அந்த கட்டிடங்களை இடிக்க முஹம்மது உத்தரவிட்டுள்ளார். இப்போது படிப்பவர்களே முடிவு செய்துகொள்ளட்டும். யார் நெஞ்சறிந்து பொய்

சொல்பவர் என்பதை. ஆமாம் சுவனப்பிரியன், இஸ்லாத்தை பரப்புவதற்காக பொய் சொன்னால் நரகத்தில் தண்டனை கம்மியாகுமா?

இது ஒரு புறமிருக்கட்டும். தர்காக்களை இடிக்கவேண்டும் என்பதுகூட மதவெறியைத்தானே காட்டுகின்றது. மற்ற நம்பிக்கையாளர்களை மதிக்கவேண்டும் என்றால் தர்காக்கள் மூலம்

இறையை வணங்குபவர்களையும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும். அவர்களின் கட்டிடங்களை இடிக்கவேண்டியது நமது கடமை என்று சொல்லுவது

வெறி. கொடூரமான வெறி.

உங்கள் நம்பிக்கை உங்களுக்கு, எம்முடையது எமக்கு என்கிற வகையில் ஒழுகும் இஸ்லாம் இப்படி சொல்லலாமா?

மற்ற நம்பிக்கையாளர்களையும் மதிக்கவேண்டும் என்பது இஸ்லாத்தின் கொள்கையாக இருக்குமானால் சுவனப்பிரியன் அவர்கள் சொல்லுவது தவறாகும். சுவனப்பிரியன் சொல்லுவதுதான்

இஸ்லாத்தின் கருத்து என்றால் மதப்பொறை இல்லா இஸ்லாம் மதவெறி மதமாகும்.

மாடு புனிதமானது என்றும் : பாம்புக்கு பால் வார்க்க வேண்டும். எறும்புக்கு அரிசி இட வேண்டும். காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும். வியாழக்கிழமை தோறும் கருடனை

தரிசிக்க வேண்டும் என்றும் காத்துக் கிடக்கின்றீர்கள். ஏன்?


அருமையான கேள்வி கேட்டிருக்கிறீர்கள். விலங்குகள், பறவைகள், புல், பூச்சிகளுக்குக்கூட அன்பு செலுத்தச் சொல்லும் மதம் மனிதர்களை அவலம் செய்யுமா? செய்யச்சொல்லவில்லை

என்பதுதான் உண்மை. மனிதர்களை அவர்களின் செயலின் அடிப்படையில் நான்காக வேதங்கள் அடையாளம் கண்டாலும், ஒருவர் பிறப்பின் அடிப்படையில் மட்டும் இந்த வர்ணத்தை

அடைகிறார் என்று அவை சொன்னதே இல்லை. ஒரு வர்ணம் மற்றொரு வர்ணத்தைவிட உயர்ந்தது என்றும் அவை சொன்னதில்லை.

பின்னால் வந்த சமூக ரீதியிலான சட்டதிட்டங்கள் இங்கனம் சொல்லின. காரணம் அந்த சட்ட திட்டங்கள் ஏற்படுத்தப்பட்ட காலத்தில் உலகில் இருந்த மற்ற நாடுகளில் இதைவிடக் கீழாக

மனிதர்களை நடத்துவது இருந்துவந்தது. சம காலத்தில் அவலங்களும் பின்பற்றப்படுவது வரலாறு சொல்லும் பாடம். அவற்றோடு கம்பேர் செய்தால் இந்தியாவில் இருந்த சட்டதிட்டங்கள்

ஸாதாரணமானவைதான்.

பரத கண்டத்தில் ஏற்கனவே, அதீத அஹிம்ஸையின் மூலமும், உடல்தூய்மையினை முன்னிட்டும் ஏற்பட்டுவிட்ட ஏற்றத்தாழ்வுகள் இஸ்லாம், கிருத்துவ ஆட்சிகளால் மேலும் பெரிதாகி

இறுகியது.

மனிதர்களை அடிமைகளாக, இரண்டாம்தர குடிமக்களாக, மாக்களினும் இழிவாக நடத்தும்போக்கு ஹிந்துக்களை இஸ்லாமும், கிருத்துவமும் ஆண்ட காலம்முதல் பெரிதாகி இறுகியது.

இவற்றை விலக்கவேண்டும் என்றுதான் ஹிந்துமதச் சான்றோர்கள் முயன்று வருகின்றனர். உதாரணத்திற்கு ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி, ஸ்வாமி விவேகானந்தர், ஆதி ஷங்கரர், ஸ்ரீ

ராமானுஜர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். தாங்கள் இதற்கு எதிராக ஏதேனும் ஓரிரண்டு உதாரணங்களை சொல்லலாம். அவை ஓரிரண்டாகவே இருக்கின்றன என்பது எல்லாரும்

அறிந்ததுதான். ஏனையவை அதிகம்.

தன் மதம் சொல்வதால் ஒரு இந்து தீண்டாமையைக் கடை பிடிக்கிறார்.

தீண்டாமையை பின்பற்றுபவர் ஹிந்துவாகவே இருக்க முடியாது. அதுதான் ஹிந்து மத கருத்துக்கள் கூறுவது.

டெல்லி இமாம் பொறுப்பு என்பது காஞ்சி சங்கர மடம் போல் நிரந்தரமான நியமனம் ஒன்றும் அல்ல என்றும் கூறிக் கொள்கிறேன்.

அப்புறம் ஏன் ஸகோதரரே, பாபர் காலத்திலிருந்து புகாரியின் குடும்பத்தினர் மட்டுமே இமாமாக இருந்து வருகிறார்கள்?

தாங்கள் மழுப்பலாக பதில் சொல்லியிருப்பதிலேயே மறைந்துள்ளது புலப்படுகின்றதே. நான் கேட்டிருந்த கேள்விக்கு தாங்கள் நேரடியாக பதில் சொல்லமாட்டீர்கள் என்பது தெரியும். நானே

சொல்லிவிடுகிறேன். இந்தியாவிலுள்ள இஸ்லாமியர் என்னவிருந்தாலும் தாழ்ந்தவர்கள்தான் என்பதால் பாபர் புகாரியை இந்தியாவிற்கு வரவழைத்தார். அவர் குடும்பத்தினர் மட்டுமே, அவர்கள்

உயர் ஜாதியினர் என்பதால் டெல்லி இமாமாக முடியும். அதனால்தான் இதுவரை இமாமாக புகாரி குடும்பத்தார் மட்டுமே இருந்துவருகின்றனர். சுவனப்பிரியன் எட்டு குட்டிக்கரணங்கள்

போட்டாலும், அதிக பக்ஷம் அரேபியாவில் போய் மற்ற நாட்டினருக்கு முன்நின்று தொழுகை நடத்துவிப்பதுதான் இயலும். இதுவே நான் கேள்வியுற்றது.

இது என்ன புதுக் கதை. இத்தனை வருடம் சவூதியில் இருக்கும் எனக்கு இது தெரியாமல் போய் விட்டது. ரீல் விடுவதற்கு ஒரு அளவே இல்லையா ம்யூஸ.? எந்த இடம் என்ற

ஆதாரத்தைக் சொல்லுங்கள்.


(முகமது) பிறகு அங்கிருந்து வாகனம் மூலம் கஅபத்துல்லாஹ் வந்தார்கள்.
அங்கு ளுஹ்ர் தொழுதுவிட்டு ஜம்ஜம் கிணற்றருகே வந்தார்கள். அங்கு
முத்தலிப் கிளையினர் ஜம்ஜம் கிணற்றில் இருந்து நீரிறைத்து மக்களுக்கு
வழங்கினார்கள். அவர்களைப் பார்த்து "முத்தலிப் கிளையினரே நன்றாக நீரை
இறைத்து வழங்குங்கள்.உங்களுடன் போட்டியிட்டு மக்களும் நீரை இறைக்க
ஆரம்பித்துவிட்டால் நீங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடுவீர்கள் எனும்
அச்சம் மட்டும் எனக்கு இல்லாதிருந்தால் நானும் உங்களுடன் தண்ணீர்
இறைப்பதில் பங்கு பெறுவேன் என்றார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்) (ரஹீக் பக்.562)

இன்றைக்கும் ஸம்ஸம் கிணற்றில் நீர் இறைக்கும் உரிமை முத்தலிப் கிளையினர் என தம்மை குல உரிமை கொண்டாடும் முஸ்லீம்களுக்கு மட்டுமே உரியது.

கேள்வி நான்கும் ஐந்தும் உங்களின் மதிப்பீடு என்பதால் ஆறுக்குள் செல்வோம்.

அதாவது மதநல்லிணக்க மாநாடாக அறிவிப்பு செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சி தங்களது கருத்தின்படி "விவாதமாக" மாறியது என்பது என் மதிப்பீடு என்பதால் இவற்றை விட்டுவிட வேண்டும்.

தாராளமாக.

ஆனால், நான் தங்களோடு நடத்தும் இந்த கலந்துரையாடலில் விவாதம் என்று சொல்லக்கூடிய அம்ஸங்கள் உண்டு.

தங்கள் விருப்பபடி அடுத்த கேள்விக்குச் செல்லலாம்.

6.
//அடக்குமுறை, தன் இனத்தை தவிர மற்றோரெல்லாம் தாழ்ந்தவர்//

இதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் உங்களை நீங்களே (தீண்டாமை) கேட்டுக் கொண்டதால் விடை தேடுங்கள் என்று கூறி அடுத்த கேள்வியில் நுழைவோம்.


நான் என்னை மட்டும் கேட்கவில்லை. உங்களையும்தான் கேட்டேன். சொல்லப்போனால் உங்களைமட்டும்தான் கேட்டேன். இது போன்ற செயல்களை செய்துவரும் இஸ்லாம் நாட்டினர்

பற்றியது இந்தக் கேள்விகள் என்பது உங்களுக்குத் தெரிந்தும் தெரியாததுபோல தாங்கள் அடுத்தக் கேள்விக்குப் போகலாமா என்று கேட்பீர்கள் என்று தெரிந்துதான் கேட்டேன். முகம்மதுவை

பின்பற்றும் நாடுகளாலேயே சரி செய்யமுடியாதவை மற்ற நாடுகளும் இஸ்லாத்திற்கு மாறுவதால் மாறிவிடும் என்று தாங்கள் சொல்லுவது குழந்தகளுக்கு சிரிப்புத் தரும் மிக்கி மவுஸ்

விளையாட்டுத்தனம்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட மக்களை எவ்வாறு அழித்தோம் என்று இங்கு இறைவன் கூறுகிறான். ஜோர்டானில் 'சாக்கடல்' (Dead Sea) சென்று பார்த்தவர்களுக்கு இறைவன்

அந்த ஊரை எவ்வாறு அழித்துள்ளான் அந்த கடல் எதற்கும் பயன் படாமல் இன்று வரை இருப்பதையும் நாம் நேரிலேயே பார்க்கலாம். அந்த கால மக்களுக்கு அத்தகைய தண்டனை. இன்று

இந்த தவறில் ஈடுபடுபவர்களுக்கு இறைவன் கொடுக்கும் தண்டனை எய்ட்ஸ். குர்ஆன் சொல்வது போல் நீங்கள் சிந்திப்பதில்லையா?


ஆச்சரியாமாயிருக்கிறது சுவனப்பிரியன் அவர்களே. என்ன இருந்தாலும் தாங்கள் ஒரு இந்தியர். மற்றவரோடு கம்பேர் செய்தால் அதிக அளவு அறிவுடைய மக்கள் வாழும் நாட்டைச்

சேர்ந்தவர். தாங்கள் இப்படிப் பதிலளிப்பது விவாதத்திற்கு மட்டுமே என்றும், தாங்கள் அறிவுடையவர் என்பதும் நெடுநாளாய் தங்களை அறிந்த எனக்குத் தெரியும். மற்றவருக்கு?

எயிட்ஸ் ஓரினச் சேர்க்கையால் மட்டும்தான் பரவுகின்றதா? (ஓரினச் சேர்க்கை தவறானதா என்பது இங்கு விவாதிக்கத் தேவையில்லாத விஷயம்). ஓரினச் சேர்க்கையில் ஈடுபடாத

பலருக்கும் இந்த வியாதி இருக்கிறதே. பல மனைவியர், அடிமைப் பெண்கள் என்று உறவு கொள்பவருக்கும் இது வருகிறதே. அதை விடுங்கள்.

கணவரைத் தவிர வேறோர் ஆண்மகன் அறியாத, அல்லது (ஒரே ஒரு) மனைவியைத் தவிர மற்றோர் பெண்ணை அறியாதிருக்கும் மாந்தருக்கும் இந்த வியாதி வருகின்றதே. உடல் உறவின்

மூலம் மட்டுமன்றி, ரத்ததானம் மூலமும், சுத்தம் செய்யப்படாத ஊசிகளின் மூலமும் ஏற்படுகின்றதே. அப்பாவி குழந்தைகளும் அல்லவா பலியாகின்றனர். இப்படி குழந்தைகளைக்கூட

கொல்லுவதுதான் அல்லாவின் தண்டனையா? அப்படித்தான் என்றால் ஏன்? இப்படிப்பட்ட ஒரு இறை எப்படி கருணையுள்ளவனாக முடியும்?

குழந்தைகளின் சிரிப்பை அனுபவித்திருக்கும் ஒரு தந்தையாக இதற்குப் பதிலளியுங்கள்.

குர்ஆன் சொல்வது போல் நீங்கள் சிந்திப்பதில்லையா?

நல்லவேளையாக இல்லை.

இந்த இடத்தில் நாம் இருவருமே ஒத்த கருத்துடையவர்களாக இருக்கிறோம். இந்த பதிவு சொல்ல வரும் கருத்தே பழைய இந்து மதத்தை மீட்டெடுங்கள் என்பதுதான். இன்ஷா

அல்லாஹ் நிறைவேறும் என்று நானும் பிரார்த்திக்கிறேன்.


நல்ல உள்ளத்திலிருந்து எழும் வேண்டுகோளை இறை என்றும் நிறைவேற்றும். தங்களது ப்ரார்த்தனைக்கு நன்றிகள்.

அப்போ தீண்டாமைக்கு காரணம் கலைஞர் என்கிறீர்களா?

இல்லை. கலைஞர் மட்டும் காரணம் இல்லை. இந்திய இஸ்லாமியரின் ஆதரவைப் பெற்ற அனைத்துக் கட்சியினருமே தீண்டாமையை, ஜாதிவெறியை மக்களிடம் பரப்புகின்ற கட்சிகள்தான்.

குறைந்தபக்ஷம் தமிழகத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ப்ரச்சினையைத் தீர்க்க விரும்பாத த்ராவிட கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை என்று தமிழக் இஸ்லாமியர்கள் அறிவிக்கலாமே. ஏன்

செய்வதில்லை?

ஏனெனில், ஜாதிவெறியை பயன்படுத்தும் கட்சிகளால் ஹிந்துமதங்கள் பலஹீனமடையும். சிறுபான்மையினரின் ஆதரவை இந்தக் கட்சிகளுக்கு அளிப்பதன்மூலம் ஹிந்துக்களை ஏளனம்

செய்யவும் இஸ்லாமியரால் இயலும். அத்தோடு தங்கள் மதத்தில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று பொய்கள் பகன்று கூட்டம் சேர்க்கவும் முடியும்.

நடத்துங்கள்.

காந்தி தன் மகன் இஸ்லாத்துக்கு மாறியதில் சந்தோஷம் அல்லவா பட்டிருப்பார்.

அவர் இந்த நிகழ்ச்சியின் காரணமாய் அடைந்த வேதனை ஒரு வரலாற்று விஷயம். காந்தியை இதைவிடக் கீழாய் சொல்லுவது என்பது வேறு யாருக்கும் இயலாது. இது போன்ற

கருத்துக்களை கேட்பதிலிருந்து காந்திக்கு விடுதலை அளித்த அந்த ஒரு விஷயத்திற்கு மட்டுமாவது கோட்ஸேயை பாராட்டத்தான் வேண்டும்.

'இஸ்லாமியர்கள் ரௌடிகள்' என்று காந்தி எப்பொழுது சொன்னார்? வழக்கமான ரீல்தானே!

வழக்கமாக நான் சொல்லுவதெல்லாம் ரீல் என்றால், காந்தி என்ற ஒருவர் வாழ்ந்தது, அவர் Young India என்கிற பத்திரிக்கையில் எழுதியது, அந்த பத்திரிக்கையில் பின்வருமாறு

சொன்னது எல்லாமே ரீல்தான்:

Mussalman as a rule is a bully, and the Hindu as a rule is a coward.

Page: 176, Young India, 29 May 1924


Young India பத்திரிக்கையில் மட்டுமல்லாது, அவர் எழுதிய மற்ற எழுத்துக்களும், பேச்சுக்களும் Collected Works of Mahathma Gandhi என்கிற தொகுப்புக்களில் கிடைக்கின்றன.

எனவே, நான் இங்கே மேற்கோள் காட்டியிருப்பது பற்றிய நம்பிக்கையின்மை தங்களுக்கு இருப்பின் அந்த புத்தகங்களில் தேடிப் பெறலாம். அதாவது, குரானைத் தவிர மற்ற புத்தகங்களை

படிக்க தாங்கள் விரும்பினால், உண்மை அறிய அவை உதவும் என்று தாங்கள் நம்பினால்.

அப்போ பரேமானந்தாவும், சதுர்வேதியும், etc.... வந்தால்தான் உங்களை ஈர்க்குமோ!

இதுபோன்றவர்களை அடையாளம் காட்டும் வஸதி வழக்கம் இருப்பதால், இவர்களுக்குத் தண்டனை கிடைக்கவும் வழி இருப்பதால் ஹிந்துமதங்களே என்னை ஈர்க்கின்றன. ஈனச்

செயல்களை உயர்வாய் நடைமுறைப்படுத்தும் எவையும் ஈர்ப்பதில்லை.

ஈனச் செயல்கள் புரிவதை உயர்வாகக் கொள்ளும் மதங்களை ஈக்கள் மட்டுமே மொய்க்கும். ஹிந்து மதப் பூக்கள் ஈக்களைத் தேனெடுக்க அனுமதிப்பதால், ஈக்கள் மொய்த்தவை

உயர்ந்ததாகிவிடாது. எப்படியாயினும் தாங்கள் மொய்ப்பது உயர்வு என்று காட்ட ஹிந்துமதங்களின் தேன் நாங்கள் மொய்த்ததில் இருப்பதுதான் என்றும், அதனால் பூக்களுக்குப் பதில்

தாங்கள் மொய்ப்பதை தலையில் சூடிக்கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லி ஏமாளிகளைத் தேடுவது ஈக்களின் புனிதப் பணியாக இருந்துவருகின்றது. பாவம். நரகம் கிட்டுமோ என்கிற

பயமே காரணம்.


'வேதங்களை நான் பார்த்தேன். அதில் நான் (சுவனப்பிரியன்) குறிப்பிட்டபடி எதுவும் தென்பட வில்லை' என்று கூறியதற்கு அத்தியாயம் வசன எண்ணைக் கேட்டிருந்தேன். அதற்கு

எதுவும் பதில் தரவில்லையே ம்யூஸ்.


இல்லாத ஸ்லோகங்களின் எண்களை எப்படிக் கொடுப்பது சுவனப்பிரியன்? இதற்குப் பதிலாகத்தான் மதிப்பிற்குரிய ஜயராமன் ஒரு உரலை அளித்திருந்தாரே.

ஜெயராமன் கொடுத்த சுட்டியை தேடினேன். ஆனால் அது சவூதியில் தடை செய்யப் பட்ட வெப் சைட். எனவே என்னால் பார்க்க முடியவில்லை.

"நம்பிக்கைகளுக்கு சுதந்திரம்" என்ற தலைப்பில் இருக்கும் (faithfreedom) ஒரு விஷயத்தை இஸ்லாமிய நாடு ஒன்று அனுமதித்தால்தான் ஆச்சரியப்படவேண்டும். தங்களால் பார்க்க

முடியாதது ஒன்றும் புதிரான விஷயமில்லை.

அதனால் என்ன? இந்தியாவில் இந்த ஸைட் கிடைக்கிறது. தங்களின் அறிவுப் பஸிக்காக அந்த விஷயம் முழுவதையும் இங்கே கட்-பேஸ்ட் செய்கிறேன். படித்து மகிழுங்கள்:

Muhammad is not predicted in Hindu scriptures

Zakir Naik and Abdul Haque Vidyarthi Exposed

By S. Prasadh

Purpose Of Article

Recently, it has become a fad for all Islamic websites to publish Dr.Zakir Naik’s (An Islamic Propagator from India ) and Dr.Abdul Haque Vidyarthi’s

article on Muhammad foretold in Hinduism. It is a well know fact that the same websites insult HINDU scriptures, their idols, their ideology and

criticize them vulgarly. But their desperation leads them to cherry pick some verses from Hindu scriptures and decipher them in their own terminology

and claim that many mantras point to MUHAMMAD. Let us take some of the alleged prophesies of Muhammad in Vedas. Any internet search engine

containing the worlds Muhammad and Hindu returns a large number of results on this theme. A number of textual proofs are given in support of this

claim. While this comforts the faithful, let us analyze these proofs rationally and see whether the claim holds up under the clear light of reason, not

fogged by religious sentimentality. However, I must confess that I have been unable to get hold of the book written by Dr. Vidyarthi, and therefore I

am refuting the material available on this page, a clear material about claims of Dr.Zakir Naik has been presented in his home site. I shall be

arguing on the premises of 5 aspects of such claims. At the end of this article, you shall infer the truth about these Islamic propagandists.


The Rebuttal



1. The first premise is based on the Qur’anic belief that There Never Was A People Without A Warner:

Qur'an 35:24, Qur'an 16:36, Qur'an 4:164, Qur'an 3:81-82 all declare that Allah had sent messengers or apostles before to various nations of the

earth telling them to worship Allah and accept the apostles as His messenger. To the Muslims these verses mean that every religion had its prophet

of whom Muhammad is the last and final. From this they deduce that scriptures of other religions must contain mention of Muhammad. To a Muslim

there is no proof needed but the Koran; but for unbelievers the Koran by itself is no proof. Satisfactory proof is yet to be given that Allah exists or

that the Koran is God's Revelation. Nor does it automatically follow that Mohammed's arrival would be predicted anywhere. FFI contains many articles

that actually questions and sometimes disproves the credibility of both.



2. The next argument is based on linguistics:

I have already given sufficient substantiation on how linguistics play an important role in interpreting other scriptures related to the Qur’an in my

previous article titled Quran And Royal Plural .

The writers seem to indicate that Sanskrit has been borrowed from Arabic. They have found this by an analysis of the Vedas. However, when we come

to the actual words given as examples, the ground is too shaky to withstand scrutiny.

(a) Brahma, the Creator in the Hindu Trinity, is declared to be actually Abraham. The initial letter A in Abraham has apparently been moved to the end

making it Brahma. We are told "This analysis is accurate when one writes the two words in Arabic script, a language close to that spoken by Prophet

Abraham". This immediately raises the problem of what language Abraham actually spoke and also that "a language close to that spoken" is not the

same thing as the actual language. Also since the analysis is based on only phonetic similarity and on changing the position of the alphabets, the

Hindus can with equal justice claim that Ramadan/Ramazan is actually a corruption of 'Ramanavami'.

Not only that, let us take a look at the linguistic root of Brahma. The term Brah comes from the root Bri which means "to worship, to select, to

surround". When an h is added to Bri it becomes Briha meaning to "increase, to grow". By addition of 'an', we have the word Brahman who in Hinduism

is the Supreme God. Brahman thus is the original word. Brahman is without form, without gender and cannot be plural. The cosmos came into being by

its will alone. When Brahman is imagined as a masculine being engaged in the act of creation, then it is called Brahma. When Brahman is imagined as

a feminine being, who is the source of energy without which the act of creation cannot take place, then it is called Brahmani. Brahma thus has nothing

to do with Abraham (incidentally we can also claim that Abraham comes from Brahma), but comes from Brahman and is clearly the God of creation/the

creative aspect of God and not a human.

(b) "Similarly, Abraham’s first wife Sarah is mentioned in the Vedas as Saraswati". This again depends on mere phonetic similarity. Unfortunately,

when we study the Rigvedic verses we see that Saraswati was actually a river. There is great dispute as to where this river was, but there is no doubt

that it is a river. Rigveda again and again declares it to be a river with descriptions of flowing down from the mountains into the sea and it is

worshipped as a river-goddess. Later on, somehow or other she became the goddess of learning as well. It was only in the Middle Ages that she

became the consort of Brahma. In the Vedas, she is definitely not Brahma's wife. Unless one is willing to grant that the Sara of the Bible was

originally a river, one cannot see any connection between the two.

( c ) "Noah or Nuh is mentioned as Manuh or Manu." The only similarity between the two characters lies in their stories. Like Noah Manu too was

saved by God during the Flood. But this proves nothing except that these are two stories that involve flood. Moreover, the rest of the story simply

does not match: Manu had no ark (only a boat tugged by God in the form of a fish) and definitely no kind of animals with him to repopulate the world.

Not only that, Manu is a generic name for 14 sovereigns of the world in the myths and there is a female Manu as well who is the Mother of mankind

(Manava > children of Manu (fem.) )

(d) Similarly, it is argued that 'Maleccha' (unclean ones) come from Hebrew word "Ma-Hekha which means 'thy brethren'. (e.g., And he (Ishmael) shall

dwell in the presence of all his brethren. Genesis 16:12; i.e., Ismaelites are the brethren of the Israelites). This word therefore means a descendant

of Ishmael, and it is well known that Muhammad (s) is a descendant of Prophet Ismail through his second son Kedar. Those who can read Arabic Script

can easily see that a mistake in separating Ma from Hekha will produce a single word ‘Malhekha,’ and when adapted in another tongue like Sanskrit

might sound like Malechha". Again this relies on the belief that ancient Hindus knew Hebrew and had read the version of the Bible, as we find it

today. Linguistically, the term comes from 'mlech', meaning to speak indistinctly, barbarously. So 'mlechha' came to mean those who could not speak

the Vedic language, those who are outside Hindu society. The term is definitely ancient since it is found in Vedas.

3. The third argument draws heavily from what is known as Bhavishya Purana or Book of Prophecies. Prati Sarg Parv III: 3, 3, verses 5-27 give detailed

descriptions of Mohammed's doings, the establishment of the new religion and even gets the Prophet's name right. So we immediately come to the

question of how authentic this book is. According to most scholars, this book is a work of compilation that went on through centuries, with the writers

pretending to pass off historical knowledge as prophecies of the future. The writer argues, "A case has been made that the present Puranas are not

the same collection that Vedas refer to and the real books were lost". I would be very astonished if any Hindu had actually made such a claim,

because it is common knowledge that Puranas were written after the Vedas and the Vedas never mention any Purnanas. However this allows Mr. Haq

and Dr.Naik to set up an useful non-existent strawman for them to demolish. He also argues that materials could not have been added in later dates

because Puranas were read in public and so could not have been altered. However, only the more popular stories from the 18 Puranas were read in

assemblies and Bhavishya Purana is a text that was seldom read out in public. Even if we accept the book as authentic, two questions arise. One is,

why does the book contain prophecies only till Victoria 's reign? Why did God suddenly decide to suspend his revelations at that particular moment?

Surely it would have been more proper to continue it (even through Muslim holy men) or to end all such prophecies with the emergence of Islam and

the 'perfect' Book of Qur’an which was to replace all others. Secondly, the Purana is filled with stories of the doings of various gods and concludes that

the only god who is worthy of worship is the Surya, the sun-god. If the book is authentic then all such stories are also true and therefore it is the sun

we must worship. However, most Muslims have not read the whole book; those who have, argue that all such portions are corruptions. But Hindus can

too use such pick-and-choose methods by declaring that it is the portions relating to Islam which are degenerations. The Bhavishya Purana is

precisely described as :

“ Bhavishya Purana. This is what is told to Manu by Surya (Sun). This contains statements about future events. The book praises the worship of Surya

(Sun), Agni (fire) and Naga (serpent). There is an annexure dealing with the several holy places of Bharata and the rights of pilgrims. The book

contains fourteen thousand verses and it is considered to be uttama (best) to give this book along with treacle as a gift to a brahmin on the full-moon

day in the month of Pausha “

Bhavishya purana also is allegedly claiming that JESUS has come to INDIA . You can find such an argument here. If muslims believe Bhavishya Purana

predicts Muhammad, then why don’t they believe Jesus came to INDIA and learnt tricks from Siddhas? Bhavishya Purana also praises worship of Surya,

Agni and Naga. Muslims will pray any of these? When they never will approbate any of these, how come they only believe that some unrelated verses

point to Muhammad? Can you see the desperation among these two men?



4. Prophecy in Vedas:

(The Vedas are the oldest scriptures of Hinduism. They date back to around 4000BC approximately or even older. They are written in an archaic

language, so ancient that when Sanskrit as a language was codified ordinary people had already started forgetting the meanings of the verses. The

great pundits of the time therefore started to write commentaries and grammar books on them. Even today, it is not possible to translate the verses

without these texts. However today's scholars also have the help of comparing them with other languages.)

Dr.Zakir Naik and Dr.Haq declare that Atharva Veda, Kanda (chapter) 20, Mantras 126-137 prefigures about Muhammad. This portion is known as

Kuntap sukta. He says that the word Kuntap means to consume sin and misery, and it is composed from Kuh (sin and misery) and tap (to consume).

This is not wholly correct. The Gopatha Brahman defines the term as "that which burns away whatever is evil or ugly". However the meaning is close

enough. But he goes onto say that the word Kuntap also means "the ‘hidden glands in the abdomen,’ inferring the true meaning to be revealed only to

those who are able to develop sufficient insight". It is a pity that he does not give his source for this meaning. But apparently he has developed

sufficient insight to read its hidden meaning: that this meaning proves it is actually a reference to Mecca which is called navel of the earth by

Muslims. Then Dr.Naik and Dr. Haq "shows that the word "Kuntap is derived from Bakkah (Makkah). In the analysis of Sanskrit and Arabic words having

the same meaning … , the word ‘b’ in Arabic is used as ‘p’ in Sanskrit (in our times, one example is that of soft drink Pepsi; it is written and

pronounced as Bebsi in the Arab world). A certain ‘t’ in Arabic becomes silent and pronounced as h depending on its position in that word … For

example, ‘tun’ in Medinatun is replaced by h when pronounced (both t and n are dropped). Further, many Sanskrit words having parallel in Arabic are

written backwards … Thus one can see the similarity between the word Kuntap and Bakkah (each containing letters k, n, t, p)".

This once again is absolutely childish, on the same level as Brahma and Abraham. "Kuyang ang nam kutsitang bhavati taddopatti , tasmat [from

there] Kuntap" --- the letters k, u, n, t, a, p all come from the Sanskrit words in the definition. (I have used Roman alphabets for the ordinary reader,

though the pronunciation is not absolutely accurately transcribed thereby). Also, another term for the Kuntap sukt is left out. It is also called 'Khila-

parva' meaning supplement; these verses are taken mostly from the Rig-Veda and are not considered to be of any great importance. Indeed many

translations skip this chapter altogether, which no doubt Dr.Naik and Dr. Vidyarthi felt can only help their cause.

(Just to muddy the waters further, a Hindu has argued that the word Mecca comes from the Sanskrit root Makh or Yajna; the name Mohammad is a

derivative of Krishna's another name, Madan Mohan and the word Aab (water) comes from the pure Sanskrit word Aap meaning water. We have exactly

the same type of argument here that Vidyarthi/Haq gives, except that it is turned upside down: but the latter is equally valid in its methodology as

the former. In fact since no analysis is given that can expose its weaknesses, -- only an assertion is made --- the Hindu claim appears more valid!).

The writers say that the third Mantra of the Kuntap Sukt translated by someone called Pandit Raja Ram is:

"He gave the Mamah Rishi a hundred gold coins, ten chaplets, three hundred steeds and ten thousand cows."

They go onto explain " The root of the word Mamah is Mah which means to esteem highly, honor, revere, to magnify and to exalt. The word

"Mohammad" means "the praised one" in Arabic. Therefore, Mamah is synonymous with Mohammad when the full meaning of the verse is considered.

The 'd' dropped as in the case of Mamah (Mohammad, which is derived from root letters h, m, and d)". It is a very ingenious explanation. Alas! the

only problem is that Mamah is not a single word nor a name. It is a combination of two words 'mamo' and 'ahe', meaning "to me".

Then Dr.Naik and Dr.Haq go on to explain the 'hidden' (!) symbolism in the line. The hundred gold coins apparently refer to the early companions of

Prophet Muhammad,. The ten chaplets refer to ten companions of Prophet Muhammad, who were given the good news of Paradise by the Prophet.

Three Hundred Good Steeds (horses of Arab Breed) refers to those companions of Prophet Muhammad who fought at ‘Badr.’ We are told that though

their actual number was 313, in many prophecies the numbers are usually rounded up. Ten Thousand Cows refer to ten thousand companions who

accompanied the Prophet when he conquered Mecca . The interpretation is based on a hadith in Sahih Al-Bukhari, Vol. 9, number 159, where

Muhammad narrates a dream where cows symbolize the believers. Is there any other evidence to suggest that the hymn is a symbol of anything, far

less of the meaning the writers finds? There is not. Also both of them reveal their shoddy Vedic scholarship when they declare "The Sanskrit word

Arvah means a swift Arab horse particularly used by Asuras (non-Aryans)". In the Vedas the Asuras are not non-Aryans; gods like Indra and Varuna are

addressed as 'Asur' which simply means 'lord'. It was far later that Asuras came to symbolize demons.

They then give their version of the mantras 1 through 13 of the Kuntap Sukt which according to them is amassed from some Hindu Pundits. However

the work of Griffith and Whitney are usually considered sufficient :

1. Listen to this O people! a praiseworthy shall be praised. O Kaurama we have received among the Rushamas sixty thousand and ninety. [population

of Makkah at the time of Prophet’s triumphant entry in Makkah].

The Rusama is mentioned in RigVeda as a protégé of Indra, and is elsewhere referred to as a community which has nothing to do with Mecca .

Kaurama is the alternative name for Kaurava, a generous donor in the community.

2. Twenty camels draw his carriage, with him being also his wives. The top of that carriage or chariot bows down escaping from touching the heaven.

The accepted wording Whose twice ten buffaloes move right along, together with their cows; the height of his chariot just misses the heaven which

recedes from its touch. You can find an accurate and famous translation of Vedas here . I have never heard of camels being used by INDIANS in Vedic

Times, nor can you make notice of camels in any of Hindu Scriptures.

3. He gave the Mamah Rishi a hundred gold coins, ten chaplets, three hundred steeds and ten thousand cows.

As noted earlier it is not the Mamah rishi, but simply rishi.

4. Disseminate the truth, O ye who glorifies [Ahmad], disseminate the truth, just as a bird sings on a ripe fruited tree. Thy lips and tongue move

swiftly like the sharp blade of a pair of shears. [The Prophet’s state when he received revelation through Archangel Jibril (Gabriel)].

Again, the standard translation is "Glut thee o singer, glut thee, like a bird on a ripefruited tree".However, the term 'narasansha' which is translated

as singer, can also mean someone who praises. Someone who praises is not praiseworthy. Narasansha doesn’t equate to Muhammad. Apparently this

version is relied on, so that it can be equated with Ahmad.



5. The praying ones with their prayers hurry on like powerful bulls. Only their children are at home, and at home do they wait for the cows. [Cows

refers to companions of the Prophet. Prophet’s companions strict adherence to five daily prayers at appointed times. Refers to Battles of Badr, Uhud,

and Ahzab (Ditch or Allies)].

The actual translation is”The chanters with their pious song hurry on blithely as cows; at home are their children, and at home the cows do they

attend”.

6. O you who praises (the Lord), hold fast the wisdom, which earns cows and good things. Disseminate this among the divines, just as an archer

places his shaft on the right point. [wisdom of the Qur’an].

Again, here the standard translation is "O singer bring thou forth the hymns..." . They say this verse in wisdom of Qur’an. Now if that is the case,

Vedas were written several years before the OT,NT and Qur’an. Then why don’t muslims read Vedas instead? Look how the translation has been

played with and changed to their convenience.

7. Sing the high praise of the king of the world or the Light of the Universe, who is a god and the best among men. He is a guide to all people and

gives shelter to everyone. [Prophet Mohammed's qualities].

The standard translation is, "Sing the praise of Pariksit, the sovereign whom all people love, the king who ruleth over all, excelling mortals as a god".

The name Parikshit is definitely mentioned. Parikshit is the name of a king of the Kaurava line, though it cannot be ascertained whether this is the

same king mentioned in Mahabharata. However, this name is left out. Apparently even the writer's imagination has a hard time trying to prove that

Parikshit is another name for Muhammad.

8. He who affords shelter to everybody, gave peace to the world, as soon as he mounted the throne. Men in Kuru-land are talking of his peace-making

at the time of the building of the house. [Kuru means one who protects a house in Hebrew and Kore means a house. It refers to the first house of

worship, the Ka’bah. In this sense, Kuru-land means the land of Koreish . This Mantra refers to the rebuilding of the Kabah five years before

Mohammed's prophethood and his role in peace-making when each tribe of the Koreish (Quraish) wanted the sole honor to put the Black Stone at its

right place and disputed to the point of threats to fight each other. The Black Stone is a celestial material and is the only remaining part of the

original building material of the Ka'bah].

Standard translation: "Mounting his throne Parikshit best of all hath given us peace and rest, saith a Kaurava to his wife as he is ordering his house".

A Kaurava is a member of the Kuru clan, descended from Kuru, whatever may be its meaning in Hebrew. Also why are the specific terms husband

(pati) and wife (jaya) left out? I am sure the writer could have found some hidden significance in them as well, if only he had worked hard.

9. In the realm of the King, who gives peace and protection to all, a wife asks her husband whether she should set before him curd or some other

liquor. [Due to Prophet’s protection and commandments, women could travel freely long distances without any escort or fear].

Really? Do you see any correlation between the words in the actual verses and the meaning these two muslims try to give it? Above all, liqour is

mentioned. I have never heard of any men drinking liqour when Muhammad lived, as he prohibited liqour.

10. The ripe barley springs up from the cleft and rises towards heavens. The people prosper in the reign of the king who gives protection to all.

[people rise from the depth of degradation to the height of glory].

From what degradation did Muhammad lift up the arabs? He said sex outside marriage is bad. Well, that was indeed older in INDIA ! Everyone

followed it and believed it and forbid pre-marital sex. Instead Muhammad set a great example(not exception because muslims repeat it) by marrying a

kid. Is that degrading or glorifying?

11. Indra awoke the singer of his praises and asked him to go to the people in every direction. He was asked to glorify Indra, the mighty and all pious

men would appreciate his effort and God would bestow on him His rewards. [The Prophet sent letters to several kings and rulers in every direction

inviting them to Islam].

What do Mr.Naik/ Mr.Haq want to tell? They tell Indra = Allah!!!In Hinduism Indra is god of weather and war ,and Lord of Heaven or Swargaloka He

was also an important figure in non-Hindu traditions. Mythology is that, Indra is also cursed by the supreme power. The supreme power is the only

GOD, and INDRA is supposedly a Demi-God. Refer here : http://en.wikipedia.org/wiki/Indra#The_curse_on_Indra . Well, there is mythology that Indra

rode on chariots. Does Allah drive a chariot or BMW?? How ridiculous!Only someone very determined to prove his thesis can find that these verses

refer to Islamic history.

12. Cows, horses and men multiply and increase here, because here rules the one who is bountiful and splendidly generous who gives thousands in

charity and sacrifice. [qualities of the Last Prophet].

Here another reference to a demi god is left out : "Here, O cattle, ye shall be born, here, ye horses, here, ye domestics! And Pûshan also, who

bestows a thousand (cows) as sacrificial reward, settles down here.". Pushan means Muhammad? No way! Pushan is again a demi-God.



13. O Indra, let these cows be safe, and let not their master be harmed. And let not an enemy, O Indra, or a robber overpower them. [Indra refers to

God and cows to saintly followers of the Prophet].

The so-called schollars(for dollars??) is not quiet upto the latest researches done by his other Muslim colleagues. They are assiduously writing that

Indra as the god of war and leader of Aryans, is the cruel enslaver of the indigenous inhabitants of India and is the first terrorist in the world. They

very much contradict each other in their own terms!

As can be seen the writer very carefully leaves out certain words and gives others another meaning than commonly associated with them. However,

even that is not enough to turn the verses into predictions about Muhammad. Read in the ordinary manner the verses simply show a picture of a

kingdom thriving under a benevolent king; these are simply hymns of praise. He therefore has to take the help of symbolism. The source of his

symbolism cannot be found in the Vedas themselves --- he simply imposes them arbitrarily in order to suit his theory. Only the eye of faith can

produce such an interpretation of the hymn.

Then these two quote a verse from Sama Veda, II:6,8: "Ahmad acquired religious law (Shariah) from his Lord. This religious law is full of wisdom. I

receive light from him just as from the sun." They get the translation almost right with a peculiarly Islamic twist. The proper translation is, "I from my

Father have obtained deep knowledge of eternal Law; I was born like unto the Sun". As for 'Ahmad', once again it is a typical example of sleight-of-

hand like Mamah. The actual Sanskrit term is 'ahammiddhi' , 'aham' meaning “ I ”.

To clinch the matter, the scholars then quote from Rig Veda V, 27, 1: "The wagon-possessor, the truthful and truth-loving, extremely wise, powerful

and generous, Mamah [Mohammad] has favored me with his words. The son of the All-powerful, possessing all good attributes, the mercy for the

worlds has become famous with ten thousand [companions]."

However, the standard translation of this verse reads, "The Godlike hero, famousest of nobles, hath granted me two oxen with a wagon. Trvrsan's son

Tryaruna hath distinguished himself, Vaisvanara Agni! with ten thousands". "Vaisvanara" is another name for the fire-god, but it is not known with

certainty who Trvrsan or his son might be. However, Haq leaves out the reference to the Fire-god. Trvsran becomes another name for Allah (on the

grounds perhaps that there is a possibility that the name can refer to a god) while the name Tryaruna is omitted altogether. Instead he once again

falls back on the standby of Mamah. Apparently wherever the particular combination of letters forming the word 'mamah', whether alone or whether

occurring in combination of other letters in a word, it is employed to prove that it indicates Muhammad. The maximum the verse can be stretched to

read is that, "O fire, lord of mankind! the protector of the righteous, extremely wise, lordly (incidentally the term employed here is 'asura') and rich,

Trivsran's son Tryaruna has given me two cows yoked to a wagon and ten thousand gold pieces and thus gained fame". The singer of the verse is

being favoured not with words of wisdom but with material gifts. One cannot call Haq's translation anything other than a lie. Not surprisingly he

leaves the rest of the hymn alone. In it the singer explains that the king had given him these gifts because he had pleased him with his praise and he

asks the gods to grant happiness to the donor. Further Dr.Zakir Naik in his site says

Muhammad (pbuh) prophesised in the Rigveda

A similar prophecy is also found in Rigveda Book I, Hymn 53 verse 9:

The Sanskrit word used is Sushrama, which means praiseworthy or well praised which in Arabic means Muhammad (pbuh).

The above specified Hymn and verse translates as : “ With all-outstripping chariot-wheel, O Indra, thou far-famed, hast overthrown the twice ten

Kings of men,
With sixty thousand nine-and-ninety followers, who came in arms to fight with friendless Susravas.”

It speaks about Indra, a praise to Indra and not Muhammad!! Dr.Naik Susrava is singular. Susravas = plural. Group of praiseworthy people. So it does

not point to Muhammad!



5. The last premise would be logic. Dr.Naik and Dr.Haq seem to commit several logical fallacies. They tend to contradict each other. They say they

don’t believe in HINDU scriptures once. You can find how Zakir Naik criticizes Hindu way of worship in a section called “Conveying Islam To A Hindu”.

But still he uses Hindu scriptures’ authority to prove Muhammad’s prophethood and Islam’s validity! Either this proves

*Hindu religion is truly divine.

* Allah did not give enough proofs in Qur’an to sustain his claims.

* All muslims must convert to Hinduism.

* Muslim scholars are bluffing to convert Hindus just like they do to Christian.

Dr.Zakir Naik and Dr.Haq actually commit these logical fallacies : Post hoc ergo propter hoc, Red herring, Petitio principii, Non Sequitur ,Straw man and

Tu quoque. Simply no hindus will convert because of such bad marketing skills!! Truth is powerful than any other attractive marketing techniques.

Another claim of Muhammad being Kalki Avatar is also doing rounds. Due to space and time constraint, let me tell you, AVATAR = GOD INCARNATE.

Muhammad was a normal arab who did nothing! Kalki Avatar will have 8 superhuman qualities. Muhammad had none. For a more detailed explanation,

of why Muhammad cannot be Kalki Avatar can be found here.

A Point To Ponder Upon

The Vedas are supposed to be most supreme text of Hindus along with the Gita. There are 4 Vedas.

The number of verses in the Rig Veda total 10800

The Number of verses in Atharva Veda total 5987

The Number of verses in Yajur Veda total 2000

The number of verses in Sama Veda total 1875

Therefore, length of Vedas = 10800 + 5987 + 2000 + 1875 = 20662

Length of Qur’an = 6346

Ratio = Length of Vedas / Length of Qur’an = 3.255

The Qur’an is thrice as small as Vedas. When muslim scholars take a lots of time to learn Arabic, memorise Qur’an,read hadiths, do you believe they

can learn Sanskrit, or even if not, read such big Vedas, interpret them, and present it? Some people who get money do this, for them, they just vomit

whatever they get on hand without giving it a thinking. Imagine, Upanishads, Puranas, Bhagavad gita,etc. when put together will take a lifetime to

read and understand them.

I strongly feel, Dr.Ali Sina is of much higher caliber than any of these meek so-called scholars (for dollars??). Ali doesn’t provide stupid data like these

people. Hope Hindus now have a clear idea of what this hoax of Muhammad in Hindu scriptures are all about. They are nothing but words on water.



Conclusion

The amount of manipulation and misdirection we see with these men is astonishing. The Islamic propagators are either grossly misled or are

apparently relying on the fact that not enough of their readers will know Sanskrit or bother to look up references. They happily mistranslate and use

symbolism without any shred of proof. One understands their eagerness to prove that Islam is the culmination of every religion. However one has to

wonder, if the faith of the writers like these is so insecure that they have to search in other religions for legitimacy. Also one has to wonder what this

says of other Muslim scholars who have read the Vedas before. None of them had ever read any of the meanings that Dr.Naik or Dr.Haq finds;

obviously they were either more foolish or less learned than our Dr.Naik/Dr.Haq. However, the climax comes in this assertion: "The Vedas contain

many prophecies about Prophet Muhammad. Some European and Hindu translators of the Vedas have removed the name referring to the Prophet,

while others have tried to explain away the mantras (verses) on his life events, Ka’bah, Makkah, Medinah, Arabia, and other events using the

terminology of the Hindus, such as purification rituals, and lands and rivers in India". In other words, explain what scholars might like, our good

Islamic Sanskrit scholar knows that they would be lies. Dr.Naik/Dr.Haq operates under the assumption that anyone who tries to refute them is by the

very definition a liar. This assertion is a wonderful way of not having to face the truth. (Of course I personally believe that Haq's book/ Zakir Naik’s

Da’wah material is not meant for either the Hindu or the serious scholar; it is targeted at the Muslims to strengthen their faith). Hope I have made it

clear to many people, especially Hindus about the lies of Dr.Zakir Naik and Dr.Abdul Haq, of how they write articles,books,da’wah material,etc. just to

fool the ignorant Hindus, because most Hindus are not fanatically religious and conaequently they don’t read much of their books. Infact when a Hindu

reads this article, he/she will have increased faith in HINDUISM than converting to Islam. Thanks to bad marketing techniques of Dr.Zakir Naik

blemished with lies.

References

www.sacred-texts.com/hin/
www.hindunet.org/vedas/
www.irf.net
www.vedarahasya.net/
www.san.beck.org/EC7-Vedas.html
http://http:/www.geocities.com/~abdulwahid/dawah


படித்தாயிற்றா?

எழுச்சியாக நான் கொடுத்திருக்கும் பதிலை படித்து விட்டீரா?

பொதுவாகவே தங்களுடைய பதில்கள் ஹிந்துக்களை எழுச்சிகொள்ளச் செய்யும் வகையில் இருப்பவை. அதுமட்டுமல்லாது நாகரீகமாகவும் இருக்கும். தங்களுடைய அந்தப் பதிலைப்

படித்தேன்.

நான் முன்பே சொன்னது போல் இந்த ஓரிறைக் கொள்கையை முகமது நபி மட்டும் சொல்லவில்லை.... etc.

சுவனப்பிரியன் ஐயா,

நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே. நான் கேட்ட கேள்வி பின்வருமாறு:

//தாங்கள் எழிலுக்கு சொல்லியிருக்கும் அனைத்துப் பதில்களும் மற்ற மதங்களுக்கும் பொருந்தும் என்பதை அறிவீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா மதத் தலைவர்கௌம்

தாங்கள் சொல்வதைத்தான் சொல்லுகிறார்கள். இதில் முஹம்மது சொன்னது மட்டும் எங்கனம் வேறுபட்டுவிட்டது?//


அதாவது, ஒருவரை போலீஸ்காரர் பிடித்து விஸாரிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். பிடிபட்டவர் நான் நல்லவன் என்பதற்கு நான் கூறுவதே அத்தாக்ஷி என்று கூறினால் அதை

எங்கனம் ஏற்றுக்கொள்வது. இதற்கு அத்தாக்ஷியாக ஏற்றுக்கொள்ளக்கூடியது நடத்தை மட்டும்தான். இஸ்லாத்தின் நடத்தையாக தற்போது தீவிரவாதம் மட்டுமே அறியப்படுகின்றது. அது

தீவிரவாத மதம் இல்லை என்று மென்வழி போக்குள்ளவராக தங்களைக் காட்டிக்கொள்ளும் நீங்களும் தர்காக்களை இடிக்கவேண்டும் என்கிறீர்கள். மென்வழியே இப்படி என்றால், தீவிரமாக

இஸ்லாமைப் பின்பற்றுபவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

இஸ்லாத்திற்கு பரிந்து பேசும் மற்றவர்களும் பொதுவாக, "இஸ்லாம் ஒரு நல்ல பையந்தான், ஆனாக்க கோபம் வந்தா கொல பன்னிப்புடுறான் பய" என்கிறார்கள்.

தான் சொல்லுவதைக் கேட்காதவர்களை தண்டிப்பவர்களுக்கு எங்கள் ஊரில் ரௌடி என்று பெயர். அதைத்தான் காந்தியும் சொல்லியிருக்கிறார்.

நம்மைப் போன்ற ஒரு மனிதர். நமக்குள்ள பலகீனங்கள் அனைத்தும் அமையப் பெற்றவர். நம்மைப் போலவே மரணிக்கவும் போகிறவர். இப்படிப் பட்டவரின் கால்களில் விழுந்து

வணங்குவது எந்த அளவு அறிவில் சிறந்த செயல் என்று நினைக்கிறீர்கள்? ...etc.

தான் வரும்போது தனக்காக யாரும் எழுந்திருக்க வேண்டாம் யாரும் யார் காலிலும் விழவும் கூடாது என்று கடுமையாக தடை செய்து விட்டு முகமது நபி சென்றதால் இன்று வரை

இந்தபழக்கம் இஸ்லாமியரிடத்தில் இல்லை.


முஹம்மதுவும் நம்மைப் போன்ற ஒரு மனிதர்தானே. நம்மிடமுள்ள பலகீனங்கள் உள்ளவராகத்தானே இருந்தார். நம்மைப்போலத்தானே மரணித்தார். ஆனால் அவர் சொன்னதைமட்டும்

செய்யவேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்?


அதோடு எழிலுக்கு கொடுத்த பதிலில் இறைவன் உதவியால் ஒரு அற்புதத்தை முகமது நபி செய்து காண்பித்ததாக சொல்லியிருந்தேன். பார்க்கவில்லையா?

பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை தாங்கள் களிமண்ணில் பறவையை செய்து அதற்கு உயிரளிப்பேன்... etc. என்று எழுதியிருந்ததைக் குறிக்கிறீர்களா?

அப்படியெல்லாம் அற்புதங்கள் செய்வேன் என்று சொல்லிவிட்டுப் பின்னாளில் நான் இப்படியெல்லாம் செய்வேன் என்று சொன்னதே (கதை விட்டதே) ஒரு அற்புதம்தான் என்று ஜகா வாங்குவது எந்த அளவு நியாயமான செயல்? எந்த ஒரு நியாயவான் இங்கனம் செய்வார்?

suvanappiriyan said...

பின்னூட்டம் இடுபவர்கள் நான்கு நாட்கள் பொறுக்க வேண்டுகிறேன். விடுமுறை கழிந்து வழக்கம் போல் சந்தித்துக் கொள்வோம்.

suvanappiriyan said...

அன்பு லியோ சுரேஷ்!

//அன்பு சுவனப்பிரியன்,
குல்லு ஆம் இன் தும்பி கேர்.
லியோ சுரேஷ்
துபாய்//

பெருநாள் வாழ்த்துக்கு நன்றி! உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

suvanappiriyan said...

ம்யூஸ்!

நீண்ட கேள்விகளை வைத்துள்ளீர்கள். அலுவலக வேலையையும் பார்க்க வேண்டும். மற்ற பதிவுகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். முன்பு நான் கொடுத்த பதில்களையே திரும்பவும் கேள்வியாக்கியிருக்கிறீர்கள். சிலவற்றுக்கு மட்டும் மற்ற பதிவுகள் மூலமாக நேரம் கிடைக்கும் போது பதில் தருகிறேன்.

//இது போன்ற கருத்துக்களை கேட்பதிலிருந்து காந்திக்கு விடுதலை அளித்த அந்த ஒரு விஷயத்திற்கு மட்டுமாவது கோட்ஸேயை பாராட்டத்தான் வேண்டும். //

எவ்வளவு தான் மனதுக்குள் போட்டு அமுக்கி வைத்தாலும் உங்களை அறியாமலேயே உங்கள் எண்ணங்கள் பீறிட்டு வெளிக் கிளம்பும் என்பதற்கு கோட்ஸேயைப் பாராட்டியதிலேயே தெரிகிறது. உங்களின்உண்மை முகத்தை வெளிக் காட்டியமைக்கு நன்றி!

மற்ற கேள்விகளுக்கும் அவசியம் பிறிதொரு நாளில் பதிலளிக்கிறேன்.

suvanappiriyan said...

புளோரைப் புயல்!

//இந்துக்களின் பல கடவுள் கொள்கை உங்களுக்கு புரியவில்லை என்று எண்ணுகிறேன். நான் குறித்தது போல் கண்டீர்களானால் அழிவு என்ற இயற்கையின் ஒரு முகத்தை சிவனாகவும் ஆக்கம் என்ற ஒரு முகத்தை பிரமனாகவும் காத்தல் என்பதை விண்ணவனாகவும் இதே போல் இயற்கையின் ஒவ்வொரு முகத்தையும் பல்வேறு கடவுள்களாகக் காண்கின்றனர் இந்துக்கள். இதுவும் சரியே.//

'ஏகாம் சத் விப்ரா பஹுதா வதன்தி'

-ரிக் வேதம் 1:164:46

'ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.'

உண்மை ஒன்றுதான். படைத்த இறைவன் ஒருவன்தான். அவனை பல பெயர்களில் அழைத்துக் கொள்ளட்டும் என்று விளக்கப் படுகிறது.

அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை பிரம்மா, விஷ்ணு என்று வரிசையாக பட்டியலிடுகிறது.

-ரிக் வேதம் 2 : 1

இந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன.

இது சம்பந்தமாக குர்ஆன் என்ன சொல்கிறது என்றுபார்ப்போம்.

'அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'

குர்ஆன் 17 :110

இரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். இறைவனின் வல்லமையைக் காட்டக் கூடிய பல பெயர்கள் குர்ஆனில் ஆங்காங்கே வரும். இறைவனின் பண்புகளாக வரக் கூடிய சிலவற்றைப் பட்டியலிடுகிறேன் :

ரப் (அதிபதி) - பஷீர் (பார்ப்பவன்) - ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) - ஹக்கிம் (ஞானமிக்கவன்) - ஹமீது (புகழுக்குரியவன்) - ஹய்யு (உயிருள்ளவன்) - ரவூப் (இரக்கமுடையவன்) - ரஹ்மான் (அருளாளன்) - ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) - சலாம் (நிம்மதி அளிப்பவன்) - அஜீஸ் (மிகைத்தவன்) - அலீம் (அறிந்தவன்) - குத்தூஸ் (தூயவன்) - ஹாக்கிம் (தீர்ப்பு வழங்குபவன்) - மலிக் (அரசன்) - வக்கீல் (பொறுப்பாளன்)

- இது போன்று மொத்தம் 99 பண்புகளை இறைவன் ஆங்காங்கே குர்ஆனில் விவரித்துச் செல்கிறான்.

இதன் மூலம் இறைவனின் தன்மைகளையே நாம் வேறுபடுத்தி பல தெய்வங்களாக மாற்றி விட்டோம். ஒரு உதாரணத்திற்கு நானும் ஒரு இறைவன் என்று உங்கள் வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். எனக்கும் இறப்பு வருகிறது. அப்படியானால் இறைவன் இறந்து விடுகின்றானா? என் கையை ஒருவன் வெட்டி எடுத்து விடுகிறான். அப்படியானால் இறைவன் முடமாகிவிட்டானா! எனவே இறைவனைப் பற்றிய ஒரு தெளிவு அந்த இறைவனை வணங்கக் கூடிய மனிதனிடத்தில்முதலில் வர வேண்டும். அந்த தெளிவு கிடைத்து விட்டால் பிரச்னைகளும் தானாக விலக ஆரம்பிக்கும்.

முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

ம்யூஸ்!

//பரத கண்டத்தில் ஏற்கனவே, அதீத அஹிம்ஸையின் மூலமும், உடல்தூய்மையினை முன்னிட்டும் ஏற்பட்டுவிட்ட ஏற்றத்தாழ்வுகள் இஸ்லாம், கிருத்துவ ஆட்சிகளால் மேலும் பெரிதாகி

இறுகியது. //

வரலாற்றை எவ்வளவு சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கிறீர்கள்? இன்று இந்தியாவில் இருபது கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் எங்கிருந்து வந்தனர். அரபு நாட்டு இறக்குமதியா? அனைவரும் இந்நாட்டு பூர்வீக குடிகள். உங்கள் முன்னோர்கள் செய்த தீண்டாமையின் கொடூரத்தால் மனம் வெதும்பி இஸ்லாத்தை நோக்கி ஓடியவர்கள் தானே அனைவரும்? வங்காளத்தில் தீண்டாமையின் கொடூரம் உச்சக் கட்டத்தில் இருந்ததால் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தழுவி இன்று பங்களாதேஷ் என்ற நாடே உருவாகி இருக்கிறது. வெள்ளையர்கள் ஆட்சியில்தான் தீண்டாமைக்கு எதிராக பல சட்டங்களை இயற்றி தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஓரளவு உரிமை கொடுக்கப்பட்டது.

இவ்வளவு ஏன் போன வாரம் ஹரியானாவில் 'கிலா ஜபர்கார்' என்ற கிராமத்தில் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப் பட்டவர்களை தாக்கி ஒரு கிராமமே நிர்முலமாகி இருக்கிறது. சொந்த நாட்டிலேயே பூர்வ குடிகள் அகதிகளாக்கப் பட்டுள்ளனர். இதற்கும் காரணம் இஸ்லாமியரும் கிறித்தவரும் என்று காரணம் சொல்லப் போகிறீர்களா?

எங்கள் ஊரில் செட்டியார்களும், மூப்பனார்களும்தான் அதிகம். ஒருக்காலத்தில் என் முன்னோர்களில் இந்த சாதிகளில் ஏதாவது ஒன்றில் இருந்திருக்கலாம். என் முன்னோர்கள் மதம் மாறாமல் இருந்திருந்தால் நானும் ஏதாவது ஒரு சாதி சங்கத்தில் ஐக்கியமாகி 'ஸ்ரீரங்கத்தில் கருவறைக்கு செல்ல எங்களுக்கும் உரிமை கொடு, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு' என்று கத்திக் கொண்டிருப்பேன். அது போன்ற நிலை எல்லாம் ஏற்படாமல் உலக முஸ்லிம்களில் என்னையும் ஒருவனாக்கிய என் முன்னோர்களின் மனதை மாற்றிய அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். இதற்காக ஐந்து வேளை என்ன ஐம்பது வேளை கூட என் இறைவனுக்காக சிரம் பணிய தயார்.

ம்யூஸ்!

//இது ஒரு புறமிருக்கட்டும். தர்காக்களை இடிக்கவேண்டும் என்பதுகூட மதவெறியைத்தானே காட்டுகின்றது. மற்ற நம்பிக்கையாளர்களை மதிக்கவேண்டும் என்றால் தர்காக்கள் மூலம்

இறையை வணங்குபவர்களையும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும். அவர்களின் கட்டிடங்களை இடிக்கவேண்டியது நமது கடமை என்று சொல்லுவது

வெறி. கொடூரமான வெறி. //

திராவிடர் கழகத்தை எடுத்துக் கொள்வோம். அந்த கழகத்தின் கொள்கை 'இறைவன் இல்லை' என்பது. அந்த கழகத்தின் தலைவராக ஒருவர் இருந்து கொண்டு தினமும் கோவிலுக்கு சென்று வந்தால் அந்த கழகத்தின் கொள்கைளை அவமதிப்பதாக ஆகாதா? அவருக்கு ஆத்திகத்தில் நம்பிக்கை இருந்தால் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

அதே போல் முகமது நபி 'இறைவனைத் தவிர மனிதர்கள் யாரையும் வணங்கக் கூடாது. சமாதிகளை வணங்கக் கூடாது. என்னுடைய சமாதியையும் யாரும் வணங்கக் கூடாது. மனிதர்கள் யாரின் காலிலும் மரியாதை நிமித்தமாக விழக் கூடாது. நான் சபைக்கு வரும்போது மரியாதைக்காக யாரும் எழுந்திருக்கக் கூடாது' என்றெல்லாம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். மதினாவில் முகமது நபியின் அடக்கஸ்தலத்துக்கு எப்போதும் இரண்டு காவலர்கள் காவலுக்கு நிற்பர். இந்திய பாகிஸ்தானிய மக்கள் முகமது நபியின் அடக்கஸ்தலத்துக்கு நேராக நின்று கையேந்தி பிரார்த்தித்தால் காவலர்கள் அவர்களை தடுத்து 'மசூதிக்கு சென்று இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்று சொல்லும் காட்சியைப் பார்க்கிறோம்.

எனவே ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது. முகமது நபி சொன்னதுக்கு மாற்றமாக நடப்பேன் என்று எந்த முஸ்லிமாவது சொன்னால் அவர் இஸ்லாத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடட்டும். அதனால் இஸ்லாத்திற்கு எந்த நஷ்டமும் வந்து விடப் போவதில்லை. தாங்கள் ஒரு தனி மதமாக இருந்து கொண்டு வேண்டுமானால் நாகூர் தர்ஹாவை வணங்கிக் கொள்ளட்டும். எனவே இஸ்லாத்தைப் பொறுத்த வரை கொள்கையில் சமரசத்துக்கே இடம் இல்லை. அதே சமயம் இஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்என்ற கட்டளையையும் இஸ்லாம் போடுகிறது.

'இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.'
2 : 256 - குர்ஆன்.

'வேதம் கொடுக்கப் பட்டோரிடமும், எழுதப் படிக்கத் தெரியாதோரிடமும் 'இஸ்லாத்தை ஏற்கிறீர்களா?' என்று கேட்பீராக. அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர் வழி பெற்றனர். புறக்கணித்தால் எடுத்துச் சொல்வதே உமது கடமை. இறைவன் தன் அடியார்களைப் பார்ப்பவன்.
3 : 20 - குர்ஆன்.

'மார்க்க விசயத்தில் உங்களிடம் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் இறைவன் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான்.'
60 : 8 - குர்ஆன்.

'தனக்கு இணை கற்ப்பிக்கப்படுவதை (நாகூர்,அஜ்மீர்,ஏர்வாடி போன்ற அடக்கஸ்தலங்களில் சென்று அவர்களிடம் பிரார்த்திப்பதை) இறைவன் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள பாவத்தை தான் நாடியோருக்கு மன்னிப்பான் இறைவனுக்கு இணை கற்ப்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றனர்.'
4 : 48 - குர்ஆன்





ம்யூஸ்!

// "முத்தலிப் கிளையினரே நன்றாக நீரை
இறைத்து வழங்குங்கள்.உங்களுடன் போட்டியிட்டு மக்களும் நீரை இறைக்க
ஆரம்பித்துவிட்டால் நீங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடுவீர்கள் எனும்
அச்சம் மட்டும் எனக்கு இல்லாதிருந்தால் நானும் உங்களுடன் தண்ணீர்
இறைப்பதில் பங்கு பெறுவேன் என்றார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்) (ரஹீக் பக்.562)//

'மக்களுக்கு நன்மை செய்யும் விஷயத்தில் ஒருவர் மற்றவருடன் போட்டியிட வேண்டும்' என்ற போதனைதான் இந்த சம்பவத்தின் மூலம் கிடைக்கிறது. இதில் தீண்டாமை எங்கிருந்து வந்தது?

//இன்றைக்கும் ஸம்ஸம் கிணற்றில் நீர் இறைக்கும் உரிமை முத்தலிப் கிளையினர் என தம்மை குல உரிமை கொண்டாடும் முஸ்லீம்களுக்கு மட்டுமே உரியது.//

சிரிப்பு வரவழைக்கிறீர்கள் ம்யூஸ்! இன்று ஜம் ஜம் நீரை இரைப்பது அனைத்தும் ராட்ஷஸ போர்கள், மிகப் பெரிய குழாய்கள். ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜீக்கு வரும் ஹாஜிகள் இந்த நீரை பெரும் ட்ரமகளில் அடைத்து அவரவர்நாட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர். கஃபாவை சுற்றியிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் இந்த நீரே குடிநீராக உபயோகப் படுகிறது. நீங்கள் 'ஜம் ஜம்' நீரூற்று என்பது சிறிய கிணறு போல் இருக்கும் என்றும் ஒரு வாளியின் மூலம் உலக மக்களுக்கு முத்தலிபு கிளையினர் இறைத்து கொடுப்பதாகவும் நினைத்து கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

//கணவரைத் தவிர வேறோர் ஆண்மகன் அறியாத, அல்லது (ஒரே ஒரு) மனைவியைத் தவிர மற்றோர் பெண்ணை அறியாதிருக்கும் மாந்தருக்கும் இந்த வியாதி வருகின்றதே. உடல் உறவின்

மூலம் மட்டுமன்றி, ரத்ததானம் மூலமும், சுத்தம் செய்யப்படாத ஊசிகளின் மூலமும் ஏற்படுகின்றதே. அப்பாவி குழந்தைகளும் அல்லவா பலியாகின்றனர். இப்படி குழந்தைகளைக்கூட

கொல்லுவதுதான் அல்லாவின் தண்டனையா? அப்படித்தான் என்றால் ஏன்? இப்படிப்பட்ட ஒரு இறை எப்படி கருணையுள்ளவனாக முடியும்?

குழந்தைகளின் சிரிப்பை அனுபவித்திருக்கும் ஒரு தந்தையாக இதற்குப் பதிலளியுங்கள். //

எய்ட்ஸின் துவக்கத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் அது ஓரினப்புணர்ச்சியின் மூலம் தான் தோன்றியது. இந்த நோய் பாதித்த ஒருவன் ஒரு பெண்ணோடு கூடும்போது அந்த பெண்ணும் அந்த நோயை பெற்றுக் கொள்கிறாள். இவ்வாறு இருவருக்கும் நோய் தொற்றுவதால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையும் எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகிறது. எய்ட்ஸ் பாதித்த நபர்களிடமிருந்து சோதனை செய்யாமல் ரத்தம் பெறப்படுவதால் ரத்தம் ஏற்றிக் கொள்பவருக்கும் இந்நோய் தொற்றுகிறது.

மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் உடையவருக்கு இந்நோய் வருவதில்லை என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை. நீங்கள் சொல்வது பொல் தொற்றக் கூடியதாக இருந்தால் சவூதியில் பாதிக்கு மேல் எய்ட்ஸ் பாதித்தவர்களாகத்தான்இருக்க முடியும். ஏனெனில் இங்கு பெரும்பாலும் முப்பது சதவீதத்துக்கு மேல் இரண்டு மூன்று மனைவிகளை உடையவர்கள். ஒவ்வொருவருக்கும் இருபது முப்பது குழந்தைகள் இருக்கிறது. எவருக்கும் எய்ட்ஸ் தொற்றியதாக செய்தி இல்லை. ஒரு சில சவூதிகளுக்கு எய்ட்ஸ்வந்துள்ளதாக சமீபத்தில் செய்தி வந்தது. அதற்கு காரணம் அவர்கள் உல்லாசமாக அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள விலைமாதர்கள் மூலம் பெறப்பட்டிருப்பதாக அறிக்கை கூறுகிறது.

இது போன்ற தவறுகளுக்கு இறைவன் எப்படி பொறுப்பாக முடியும்? நன்மை எது தீமை எது என்று இறைவன் தெளிவாக காட்டி விட்டான். அதை மீறி ஒருவன் தகாத உறவு கொண்டு தன் மனைவிக்கு அந்த நோயைக் கொடுத்தால் மறுமையில் கணவனின் நல்லறங்கள் பாதிப்புக்குள்ளான மனைவிக்கு கொடுக்கப் படும். அதே போல் குழந்தை பாதிப்படைந்தால் இதற்கு காரணமான தாயோ அல்லது தந்தையோ இவர்களின் நல்லறங்கள் அந்த குழந்தையின் பங்கில் சேர்க்கப் படும். இஸ்லாமிய நம்பிக்கைபடி இந்த உலகம் அற்பமே! நிரந்தரமான உலகம் என்பது இறப்புக்கு பின்னரே கிடைக்கும். அங்கு இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.

'செவி,பார்வை,மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை'
17 : 36 -குர்ஆன்.

மனிதன் தன் செவியால், பார்வையால், உள்ளத்தால் செய்த தீமைகள் நன்மைகள் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் பட்டு அதற்குரிய பரிசுகளும் தண்டனைகளும் வழங்கப் படும். அப்போது உலகில் எந்த காரணமும் இல்லாமல் மற்றவர்களால் தண்டிக்கப் பட்டவர்கள் குழந்தைகள் உட்பட தக்க பரிசுகளைப் பெறுவார்கள்.

ம்யூஸ்!

//குறைந்தபக்ஷம் தமிழகத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ப்ரச்சினையைத் தீர்க்க விரும்பாத த்ராவிட கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை என்று தமிழக் இஸ்லாமியர்கள் அறிவிக்கலாமே. ஏன்

செய்வதில்லை?//

உங்கள் மதத்தில் நடக்கும் தீண்டாமைக் கொடுமையை முஸ்லிம்கள் வந்து எப்படி தடுக்க முடியும்? இதை செய்ய வேண்டியது நீங்களல்லவா? இந்த பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்பது அரசியல்வாதி முதல் அன்றாடங் காய்ச்சி வரை கேட்டுக் கொண்டிருக்கும் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் பதில்தான் யாருக்கும் சொல்லத் தெரியவில்லை.

சரி எனக்கு பதில் தெரிகிறது என்று நான் சொல்ல வந்தால் அந்த பதிலைக் கேட்டு வஜ்ரா முதல் ஜெயராமன் வரை குதிகுதியென்று குதிப்பீர்கள். நமக்கேன் வம்பு.

ம்யூஸ்!

//இந்தியாவில் இந்த ஸைட் கிடைக்கிறது. தங்களின் அறிவுப் பஸிக்காக அந்த விஷயம் முழுவதையும் இங்கே கட்-பேஸ்ட் செய்கிறேன். படித்து மகிழுங்கள//

அந்த கட்டுரையாளர் முக்கியமாக குறிப்பிடுவது ஜாகிர் நாயக் இந்து வேதங்களை பல இடங்களில் தவறாக மொழி பெயர்த்துள்ளார் எனபது தான். இதில்யார் சொல்வது உண்மை என்பதை அறிய ஒரே வழிதான் உண்டு. இந்து வேதங்கள் அனைத்தையும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். பெரும் பான்மை மதமான இந்து மதத்திற்கு இது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. அரசு செலவிலே கூட ஐந்து சமஸ்கிரத பண்டிதர்களின் குழுவால் வேதங்கள் அனைத்தையும் மொழி பெயர்த்து விட முடியும். ஆனால் இதற்கு அனைவரும் உடன்பட மாட்டீர்கள். ஏன்? அப்படி உடன்பட்டால் பல தெய்வ கொள்கைகளை விட வேண்டி வரும். தற்போது இந்து மத சம்பிரதாயம் என்று சொல்லப் படுபவைகளில் பலவற்றை தொலைக்க வேண்டி இருக்கும். இஸ்லாமிய கிறித்தவ மார்க்கங்களின் கருத்தை ஒத்து இந்து மத வேதங்களின்கருத்தும் அமைந்திருக்கும். இது போன்ற ஒற்றுமை ஏற்படுவதை இந்து மத அறிஞர்கள் விரும்ப மாட்டார்கள்.இங்கு இந்து மதத்துக்காக வாதாடும் வலைப் பதிவர்கள் அனைவரும் சேர்ந்து கூட வேதங்களை மொழி பெயர்க்கும் இந்த அரிய பணியைச் செய்வதற்கு முயற்ச்சிக்கலாமே!

மேலும் இஸ்லாமிய கருத்துக்களை பரப்ப இந்து மத வேதங்களின் துணையும் தேவைப் படுகிறது என்பது தவறான வாதம். இங்கு இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்ததற்க்கான காரணமே இந்து மதத்தில் காணப்பட்ட தீண்டாமைதான். இதை இந்து மத அறிஞர்களே ஒத்துக் கொள்கிறார்கள். எந்த இந்துவும் இந்து மதத்தின்கருத்துக்களை படித்து விட்டு இஸ்லாத்தை ஏற்கவில்லை. முஸ்லிம்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைக்க குர்ஆனின் கருத்துக்களும் முகமது நபியின் போதனைகளும் போதுமானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சர் சி.பி.ராமசாமி அய்யர்

இஸ்லாம் என்றால் எனன? இன்றைக்கு உலகில் செயல்படும் ஒரே ஜனநாயக நெறி என்றே இஸ்லாத்தை நானும் மற்ற சிந்தனையாளர்களும் கருதுகிறோம். நான் ஓர் இந்து. இந்து சமய நம்பிக்கையில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தாலும் நான் இதை தைரியமாகவே கூறுகிறேன். மனித குலம் ஒன்றே என்பது இந்து மதத்தின் அடிப்படை தத்துவமாக இருந்தாலும் அதனை நடைமுறைப் படுத்துவதில் எனது சொந்த மதம் வெற்றி பெற வில்லை. இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே எனும் அடிப்படைச் சிந்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையைப் போனறு வேறெந்த மதமும் - அவற்றின் மதக் கருத்தோட்டம் எதுவாயினும் சரியே- கடைபிடிக்கவில்லை. தென் ஆப்ரிக்காவின் போயர் இன மக்கள் பிரச்னை, ஆஸ்திரேலியா அல்லது தென் அமெரிக்க நாடுகள் அல்லது இங்கிலாந்தின் பல்வேறு தரப்பட்ட மக்களின் பிரச்னைகள் போன்று இஸ்லாத்தில் எத்தகைய இனப் பிரச்னைகளும் இருக்கவில்லை.

Sir C.P. Ramasamy Iyer, Eastern Times, 22nd December, 1944

அன்னி பெசன்ட் அம்மையார்

அரேபியாவின் இந்தத் துதருடைய வாழ்க்கையையும், ஒழுக்கப் பண்புகளையும், தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத் தூதர்களில் ஒருவரான இறுதித் தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த பல விஷயங்களையே சொல்லி இருக்கிறேன் என்றாலும் நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும் புதிய ஒரு மரியாதை உணர்வும் ஏற்படுவதை நான உணர்கிறேன்.

Annie Besant, The life and Teachings of Mohamed 1932, page 4

ம்யூஸ்!

//முஹம்மதுவும் நம்மைப் போன்ற ஒரு மனிதர்தானே. நம்மிடமுள்ள பலகீனங்கள் உள்ளவராகத்தானே இருந்தார். நம்மைப்போலத்தானே மரணித்தார். ஆனால் அவர் சொன்னதைமட்டும்

செய்யவேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்?//

வெரி சிம்பிள்.! அவரை இறைவன் தன் தூதராக நியமித்திருக்கிறான். தன் தூதருக்கு வேதத்தையும் வழங்கியிருக்கிறான். இது இறை வேதம் தான் என்பதை முஸ்லிம்களும் பரிபூரணமாக நம்புகிறார்கள். எனவே அந்த தூதரின் சொல் செயல் அங்கீகாரத்தை முஸ்லிம்களும் பின்பற்றுகிறார்கள்.

//இந்தியாவிலுள்ள இஸ்லாமியர் என்னவிருந்தாலும் தாழ்ந்தவர்கள்தான் என்பதால் பாபர் புகாரியை இந்தியாவிற்கு வரவழைத்தார். அவர் குடும்பத்தினர் மட்டுமே, அவர்கள்

உயர் ஜாதியினர் என்பதால் டெல்லி இமாமாக முடியும். அதனால்தான் இதுவரை இமாமாக புகாரி குடும்பத்தார் மட்டுமே இருந்துவருகின்றனர்.//

பாபர் உங்கள் வாதப்படியே புகாரி குடும்பத்தை டெல்லி இமாமாக நியமித்ததாக வைத்துக் கொள்வோம். இதற்கு தீண்டாமைதான் காரணம் என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? எந்த ஒரு முஸ்லிமின் வாயிலிருந்தும் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற வார்த்தை வராது. அப்படி சொல்பவன் முஸ்லிமாகவும் இருக்க முடியாது.

மேலும் டெல்லி இமாம் பதவி என்பது மிக உயர்ந்த பதவி என்று தவறாக நினைத்துக் கொண்டு கேட்கிறீர்கள். தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில் ஓலைகளால் வேயப்பட்ட ஒரு பள்ளிக்கு என்ன மதிப்பு இருக்கிறதோ அதே மதிப்பு தான் டெல்லி ஜீம்ஆ பள்ளிக்கும் இஸ்லாத்தின் பார்வையில்என்று சொல்லிக் கொள்கிறேன். உலக அளவில் மூன்றே பள்ளிகளில் தொழுவது சிறப்பு என்று இஸ்லாம் கூறுகிறது. ஒன்று மக்காவில் உள்ள கஃபா, இரண்டு மதினாவில் உள்ள மசூதி, முன்றாவது பெத்லஹேமில் உள்ள முஸ்ஜிதுல் அக்ஸா. இந்த மூன்றைத் தவிர வேறு எந்த மசூதியும் இஸ்லாமிய பார்வையில் சிறப்புத் தகுதியை அடையாது. டெல்லி இமாமின் பேச்சை டெல்லி முஸ்லிம்களே கேட்பதில்லை. டெல்லியில் உள்ள ஒரு மசூதிக்கு தமிழகத்தில் ஒரு மூலையில் இருக்கும் நான் சென்று இமாமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் வைக்கும் கோரிக்கை சிறு பிள்ளைத் தனமானது ம்யூஸ்.

Unknown said...

முதலில் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி போன்றவர்களிடமிருந்து போட்டீர்கள். இப்பொது அன்னி பெசன்ட் அம்மையார், சர்.சி.பி. இராமசாமி ஆகியோர் கூறியதை எடுத்துக் கூறியிருக்கிறீர்கள். 'அப்படியென்றால் அவர்கள் சொன்ன எல்வாவற்றையும் ஒப்புக் கொள்கிறீர்களா?' எனக் இன்னொரு முறை கேள்வி வரப் போகிறது.

இந்த மாதிரி கேள்வி கேட்பவர்கள் 'நீங்கள் குறிப்பிட்ட நபர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசக்கூடியவர்கள். நேரத்துக்குத் தகுந்தார்போல் தம் கருத்ததை மாற்றிப் பேசுபவர்கள் ' என்று சொல்லி விட்டு கேள்வி கேட்டால் நல்லது.

suvanappiriyan said...

Thanks for your comments Mr Sultan!

Anonymous said...

பள்ளிவாசல்களுக்கு திறப்புவிழா கொண்டாடுவது கூடுமா?கூடாதா?தமிழ் இஸ்லாம்

Maajin Buu said...

அட போங்கப்பா
கிருஷ்துவனா இல்ல ன்னா இயேசு கோவிச்சுக்கறாரு முஸ்லீமா இல்ல ன்னா அல்லாஹ் கோவிச்சுக்கறாரு
அல்லாஹ் வ வணங்குனா இயேசு நரகத்துல தள்ளிடறாரு
அல்லாஹ் வ வணங்குளன்னா அல்லாஹ் நரகத்துல தள்ளிடறாரு
ஆனா எந்த மத கடவுள வணங்குணாலும் மத்த மத கடவுளுங்க நரகத்துல தள்ளிடறாங்கன்னா எல்லோருக்கும் நரகம் மட்டும் தான்னா இப்ப இருக்கிற கடவுளுங்க கிட்ட இருந்து என்னய காப்பாத்திக்க நான் வேற ஒரு கடவுள தேடி கண்டுபிடிக்கனும்
கடவுளா இல்ல சாத்தானா
எந்த கடவுள வணங்குணாலும் நரகம் வணங்கலணாலும் நரகம்
ன்னு சொன்னா நான் என்ன தான் பண்றது
இதனால தான் கடவுள்னா வே
கோபம் தான் வருது.


ஆனா அல்லாஹ் இயேசு மாதிரி
கிருஷ்ணர் இல்ல

பகவத் கீதைல கிருஷ்ணர் தன்ன தான் கடவுள்னு சொன்னாலும் தன்னை வணங்காதவங்கள நரகத்துல தள்ளாம நீ எங்க வேணாலும் போ யார வேணாலும் வணங்கிக் கோ
ஆனா கடைசில நீ எங்கிட்ட தான் வந்தாகனும் ன்னு சொல்றார்
நான் கிருஷ்ணர மட்டுமே இறைவன்னு ஏத்துக்கறேன்
வேற யாரும் தேவையில்லை

தினமதி said...

👍🏻👍🏻