Followers

Tuesday, January 30, 2007

இந்திய முஸ்லிம்கள் சவுதிகளை மணக்க வேண்டுமாம்!

இந்திய முஸ்லிம்கள் சவுதிகளை மணக்க வேண்டுமாம்!

//அந்த பெண்ணை கணவனிடமிருந்து விவாகரத்து என்று பிரித்ததும் ஏன் அந்த பெண் இன்னொருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்? தன் கணவனையே மீண்டும் திருமணம் செய்துகொள்ளலாமே? அப்படி தன் கணவனையே மீண்டும் திருமணம் செய்துகொண்டால் யார் என்ன சொல்ல முடியும்?//
-Ezhil

சமீபத்தில் நம்ம எழில் அண்ணாச்சி 'இதுதான் இஸ்லாமிய ஷரீயாவா?' என்ற ஒரு பதிவு போட்டுள்ளார். ஒரு பெண் மண விலக்கு பெற்றவுடன் அந்த கணவனோடு சேர்ந்து வாழ்ந்தால் அதற்கு ஷரீயா கொடுக்கும் தண்டனை என்ன? என்பதை முதலில் விளங்க வேண்டும். அதேபோல் ஒரு கணவன் முறைப்படி தலாக் கொடுத்து அது நடைமுறைக்கும் வந்து விட்டால் அதே கணவன் அப்பெண்ணை நேரிடையாக திருமணம் செய்து கொள்ள முடியாது. அந்த பெண்ணுக்கு வேறொரு திருமணம் செய்வித்து அந்த திருமணம் ரத்தாகி பிறகுதான் பழைய கணவனோடு திருமண உறவை வைக்க முடியும். தலாக்கை விளையாட்டாக யாரும் கையாளக் கூடாது என்ற நோக்கிலேயே இத்தகைய சட்டங்களை இஸ்லாம் வகுத்துள்ளது.

'பெண்களை விவாகரத்துச் செய்தபின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தமக்குப் பிடித்த கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்.'
-குர்ஆன் 2 : 232

இந்த வசனத்தின் மூலம் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்வதை ஊக்குவிக்கிறது இஸ்லாம். ஆனால் நம் நாட்டிலோ இன்றுவரை வெள்ளை உடை உடுத்தி பொட்டுவைக்கக் கூடாது நகைகள் அணியக் கூடாது சுபகாரியங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று பெண்களை கொடுமை படுத்தும் நிலை நீடிக்கிறது. முதலில் இதற்கல்லவா நம்ம அண்ணாச்சி குரல் கொடுக்கணும். முதலில் இஸ்லாமிய சட்டங்களை நன்றாக விளங்கிக் கொண்டு பிறகு விமர்சனத்தை வைத்தால் நாமும் பதில் அளிக்கலாம்.

//நான் எளிமையான ஒரு கேள்வியை இங்குள்ள இணைய இஸ்லாமிஸ்டுகளிடம் முன்வைத்தேன். அரபி அஜமி வித்தியாசத்தை ஒழித்தார் முகமது. இங்கே எங்களுக்குள் வித்தியாசம் இல்லையே என்கிறீர்களே - இத்தனை வகாபிக்கள் சவுதியில் மாங்கு மாங்கென்று வேலை செய்கின்றீர்கள். உங்களில் எத்துனை பேர் அரபிப் பெண்களை மணந்திருக்கின்றீர்கள் என்பதே அக்கேள்வி. இது வரை ஒருவரும் அதற்கு பதில் சொல்ல முன்வரவில்லை.//
-Nesakumar

அதே பதிவில் நம்ம நேசகுமார் அண்ணாச்சியின் பின்னூட்டம் இது. திருமணம் என்பதற்கு முதலில் இஸ்லாம் சொல்லும் வரையறையைப் பார்ப்போம்.

'இணை கற்ப்பிக்கும் பெண்கள் நம்பிக்கைக் கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்.இணை கற்ப்பிப்பவள் எவ்வளவுதான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கைக் கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள்.'
-குர்ஆன் 2:221

இதன் மூலம் திருமணம் செய்வதற்கு இருவரும் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற கட்டளையை இஸ்லாம் இடுகிறது.

'நல்ல பெண்கள் நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள் நல்ல பெண்களுக்கும் தகுதியானோர்'
-குர்ஆன் 24:26

இதன் மூலம் ஒழுக்கமுள்ள ஆண்களையும் பெண்களையும் திருமணம் முடித்துக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. மற்றபடி பெண்களையும் ஆண்களையும் தீர்மானிக்கும் உரிமையை அவரரவர்களிடத்திலேயே இஸ்லாம் விட்டுவிடுகிறது. இப்பொழுது நான் சவுதி பெண்ணை மண முடிக்க நினைத்தால் அந்த பெண் கேட்கும் ஒரு லட்சம் ரியால் (12 லட்சம் ரூபாய்), வீடு போன்றவற்றை நான் சரி செய்து கொடுக்க வேண்டும். அடுத்து மொழி பிரச்னை. அந்த பெண்ணை நான் இந்தியா கொண்டு வந்தால் என் குடும்பத்தவர் பேசும் தமிழ் மொழி அந்த பெண்ணுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். நானும் அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும். அடுத்து குழந்தை எந்த நாட்டில் வளருவது என்ற பிரச்னை. இவ்வளவு சிரமத்தையும் தாங்கிக் கொண்டு நான் எதற்கு சவுதி பெண்ணை மணக்க வேண்டும். வெளிநாட்டவரை மணப்பதற்கு முன்பு இருந்த தடையையும் தற்போது சவுதி அரசு நீக்கி விட்டது. எனவே சவுதி பெண்களை மணப்பதற்கு இஸ்லாமோ, சவுதி அரசாங்கமோ தடை இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், மொழிப் பிரச்னைகளுமே பிரதான காரணங்களாகும். அடுத்து இந்தியாவில் அனைத்து செலவுகளையும் பெண் வீட்டாரே ஏற்றுக் கொண்டு (இந்துமத உபயம்) பெண் தர தயாராய் இருக்கும் போது யார் சார் சவுதி பெண்களை திருமணம் செய்து கொள்வார்?

//அதனால்தான், கவுரவக் கொலைகள் அதிகமாக நிகழும் சமுதாயமாக இஸ்லாமிய சமூகம் விளங்குகிறது. கவுரவக் கொலைகளை நியாயப்படுத்தும் சட்டங்களும் இஸ்லாமிய நாடுகளால் இயற்றப்பட்டு அமலில் உள்ளன.//
-Nesakumar

ஆமாம! அதனால்தான் ஸ்டவ் வெடித்து இறக்கும் இளம்பெண்கள் நம் இந்தியாவில் அனைவருமே இந்துக்களாக இருக்கிறார்கள்.(வரதட்சணைக் கொடுமையாலும், மறுமணம் செய்து கொள்ளும் ஆசையாலும்)

//சட்டத்தினைப் பற்றிய ஒரு பதிவு என்ற அளவில், ஆர்வத்துடன் நான் எழுதிய எதிர்வினை, இவ்வாறு எனக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதலாக மாறும் என்று நான் நினைக்கவில்லை...அதுவும் நான் இணையத்தில் பெரிதும் மதித்த திரு.திருமலைராஜன் அவர்களிடம் இருந்து.//
-Prabhu Rajadhurai

வக்கீல் பிரபு ராஜதுரை அவர்களே!

உண்மையை எடுத்துச் சொன்னால் இது போன்ற எதிர்ப்புக்கள் வரத்தான் செய்யும். காலகாலமாக கட்டி வைத்த வர்ணாசிரம தர்மம் இஸ்லாத்தினால் தகர்க்கப்படும்போது இது போன்று சேற்றை வாரி இறைப்பது எழிலுக்கும் நேசகுமாருக்கும் சிவாவுக்கும் கட்டாயமே. ஆனால் இஸ்லாத்துக்காக குரல்கொடுக்கும் எழில் தன் மதத்தில் கோவிலுக்குள் இருக்கும் வழிபடும் தெய்வங்களை தொட்டு வணங்குவதற்கு முதலில் அனுமதியைப் பெறட்டும். மேல்சாதிக்காரரரான நேசகுமாரை அனுமதிக்கும் கோவில் குருக்கள் எழிலை ஏன் அனுமதிப்பதில்லை என்பதை எனக்கு கொஞ்சம் விளக்குவாரா?

//முதலியார், கவுண்டர், தேவர், ஐயர் என்பதெல்லாம் அர்த்தமில்லாத பெயர்களா? ஐயர் என்றால் சய்யத் என்பதன் அதே மறு உருவாக்கம் தான். அதனால், ஐயர் என்பது ஜாதி இல்லை என்றாகிவிடுமா//
-Nesakumar

சாதி என்பதற்கும் குழு குலம் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஏமனிலிருந்து சவுதி வந்தவர்கள் அந்நாட்டிலேயே தங்கி அந்நாட்டு பிரஜையானவர்கள். அதுபோல் ஆப்ரிக்காவிலிருந்து அடிமைகளாக கொண்டு வரப்பட்ட கறுப்பின மக்கள் பல கோடி பேர் சவுதி பிரஜைகளாக மாறி உள்ளனர்.அதே போல் சிரியா பாலஸ்தீன் லெபனான் நாட்டவரும் இங்கு பிரஜா உரிமை பெற்றுள்ளனர். அதேபோல் பாகிஸ்தான், இந்திய ஹைதராபாத் வாசிகளும் சவுதி பிரஜா உரிமை பெற்று வாழ்கின்றனர். இந்த வெளிசாட்டவர் அனைவரின் மொழி, கலாசாரம், உணவு, உடை அனைத்தும் வித்தியாசப்படுபவை. ஆனால் அனைவரும் மதத்தால் முஸ்லிம்கள். தொழும் இடத்துக்கு வந்து விட்டால் அனைத்து வித்தியாசங்களையும் மறந்து விடுவர். பள்ளிக்கு யார் முதலில் வருகிறாரோ அவரே முன் வரிசையில் நிற்பார். இந்த நிலை நம் தமிழக கோயில்களில் பார்க்க முடிகிறதா என்பதே என் கேள்வி!

Monday, January 29, 2007

இஸ்ரேலியர்களின் வேதமும் இறைத்தூதர்களின் நிலையும்!

இஸ்ரேலியர்களின் வேதமும் இறைத்தூதர்களின் நிலையும்!

இறைத்தூதர் மோஸே அவர்களின் போதனைகளும் அவர்களுக்குப் பின் வந்த நபிமார்களின் போதனைகளும் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகின்றன. வரலாற்றுக் கண் கொண்டு விவிலியத்தை சற்று பார்ப்போம். உண்மையான தௌராத் (தோரா)இறைத்தூதர் மோஸே அவர்களுக்கு இறக்கப்பட்டது கி.மு. ஆறாம் நூற்றாண்டில். ஜெருசலத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் சேதப்படுத்தப்பட்டபோது அந்த உண்மை வேதமான தோரா அழிக்கப்பட்டுவிட்டது. அக்காலத்துக்கு முந்திய இறைத்தூதர்களுக்கு அருளப்பட்ட ஆகமங்களும்(ஏடுகள்) அழிக்கப்பட்டு விட்டன. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்ரவேலர்கள் பாபிலோனியாவிலிருந்து விடுதலைப் பெற்று பாலஸ்தீனுக்குச் சென்றார்கள். அப்பொழுது மார்க்கப் பெரியார் உஜைர் (எஸ்ரா) அவர்கள் மற்ற பெரியோர்களின் துணை கொண்டு இறைத் தூதர் மோஸே அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தையும் இஸ்ரவேலர்களின் வரலாற்றையும் தொகுத்தார்கள். அபபோது அந்த துணையாளர்களின் மூலம் 'தோராவின் வசனங்கள்' என்று கிடைத்தவற்றை எல்லாம் அத்தொகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள்.

இதன்பிறகு கி.மு.2-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 4-ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு அறிஞர்கள் தங்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிமார்களுக்கு அருளப்பட்டதாகச் சொல்லப்படும் ஆகமங்களைத் தொகுத்தார்கள். அந்த அறிஞர்கள் யார்? எவர் என்று யாருக்குமே தெரியாது. மேலும் எந்த மூலாதாரத்தைக் கொண்டு அவர்கள் அதைத் தொகுத்தார்கள் என்றும் தெரியாது. உதாரணமாக கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இறைத்தூதர் யுனுஸ் அவர்களின் பெயரைக் கொண்டு ஒரு நூலை எழுதி அதை விவிலியத்துடன் ஒருவர் இணைத்து விட்டார். இறைத்தூதர் யுனுஸ் அவர்களோ கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார்.

சபுர் (psalms) வேதம் இறைத்தூதர் தாவுத் அவர்கள் காலமான பின்பு 500 ஆண்டுகள் கழித்து தொகுக்கப்பட்டது. அதில் தாவுத் அவர்கள் அளித்த போதனைகளுடன் மேலும் 100 கவிஞர்களின் கவிதைகளும் இணைக்கப்பட்டன.ஜபுர் வேதத்தைத் தொகுத்தவர் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அதைத் தொகுத்தார் என்பதற்கு சரித்திரச் சான்றுகள் எதுவும் இல்லை. இறைத் தூதர் சுலைமான் அவர்களின் நீதிமொழிகள் (Proverbs) கி.மு.250-ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டது. அதிலும் பிற அறிஞர்களின், ஞானிகளின் வாக்குகளும், கருத்துகளும் இணைக்கப்பட்டன.

ஆகவே விவிலியத்தின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் எந்த இறைத் தூதரின் பெயரால் அது தொகுக்கப்பட்டுள்ளதோ அந்த தொகுப்புக் காலத்துக்கும் அந்த தூதர்கள் வாழ்ந்த காலத்துக்கும் இடையே பல நூற்றாண்டு கால இடைவெளி இருக்கிறது என்பதை நாம் அறிகிறோம். மேலும் மற்றொரு கோணத்திலிருந்து கவனியுங்கள். ஹுப்ரூ மொழியில் உள்ள விவிலியத்தின் இந்த கிரந்தங்கள் கி.பி 70-ஆம் ஆண்டில் ஜெருசலம் இரண்டாவது முறையாக தாக்கப்பட்டபோது முழுமையாக அழிந்து விட்டன. அவற்றின் கிரேக்க லத்தீன் மொழிப் பெயர்ப்புகள் எஞ்சி நின்றன. அவையும் கி.மு. 258-ஆம் ஆண்டு முதல் கி.பி.முதல் நூற்றாண்டு வரையில் தொகுக்கப்பட்டவையாகும். கி.மு.2-ஆம் நூற்றாண்டில் யுத அறிஞர்கள் அன்று எஞ்சியிருந்த பலகைப் பிரதிகளின் துணைக் கொண்டு விவிலியத்தை மீண்டும் ஹீப்ரூ மொழியில் தொகுத்தார்கள். அதனுடைய இப்பொழுதுள்ள மிகப் பழைய பிரதி கி.பி.916-ல் எழுதப்பட்டதாகும். அதைத் தவிர விவிலியத்தின் பழைய ஹீப்ரு மொழியின் வேறு எந்தப் பிரதியும் இன்று நம்மிடம் இல்லை. ஜோர்டானில் சாக்கடலுக்கு அண்மையில் உள்ள கம்ரான் குகையில் கிடைத்திருக்கிற ஹுப்ரூ மொழியின் சுவடிகளும் அதிகபட்சம் கி.மு.2-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.முதல் நூற்றாண்டு வரை எழுதப்பட்டவையாக இருக்கின்றன. அவற்றிலும் விவிலியத்தின் தாறுமாறான ஒரு சில பகுதிகள் தான் கிடைத்துள்ளன.

விவிலியத்தின் முதல் ஐந்து ஏடுகளின் தொகுப்பு சுமேரியர்களிடம் இருந்தது. அதனுடைய மிக பண்டைக்கால பிரதி கி.மு. 11-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும். கி.மு.இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டில் மொழி பெயர்க்கப் பட்ட கிரேக்க மொழி விவிலியத்தில் எண்ணற்ற பிழைகள் இருந்தன. பிறகு அதன் லத்தீன் மொழி பெயர்ப்பு கி.பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. தூதர் மோசே அவர்கள் மற்றும் அவர்களுக்குப்பின் இஸ்ரவேலர்களில் தோன்றிய இறைத் தூதர்கள் ஆகியோரின் வாழ்வும், வாக்கும் பற்றி இத்தகைய விவிலியங்களிலிருந்து கிடைக்கும் அறிவிப்புகளை எந்த அளவுக்கு ஆதாரப்புர்வமானவை என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியும்?

இவையல்லாது யுதர்களின் வாய் மொழியாக வந்த பல அறிவிப்புகளும் உள்ளன. அவற்றை வாய் மொழியாக வந்த சட்டம் ( Oral-Law ) என்று கூறுவார்கள். இவையோ சுமார் 13, 14 நூற்றாண்டுகள் வரை எழுதப்படாத நிலையில் இருந்தன. கி.பி. 2-ஆம் நூற்றாண்டின் கடைசியிலும், 3-ஆம் நுஸற்றாண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்த எஹுதா இப்னு ஸம்ஊன் என்ற யுத பாதிரியார் மிஷனா ( MISHNAH ) என்ற பெயரில் இதற்கு எழுத்து வடிவம் கொடுத்தார். பாலஸ்தீன யுத அறிஞர்கள் 'மிஷனாவுக்கு' விரிவுரைகள் எழுதினார்கள். அதற்கு ஹலகா ( HALAKAH ) என்று பெயர் வைத்தார்கள். பாபிலோனியாவிலிருந்து வந்த யுத அறிஞர்களும், ஹகாதா ( HAGGADAH ) என்ற பெயரில் அதற்கு விரிவுரைகள் கி.பி 5-ஆம் நூற்றாண்டு வரை எழுதினார்கள். இந்த மூன்றுத் தொகுப்புகளும் சேர்ந்த நூலுக்கு தல்மூது என்று பெயர். இதில் கிடைக்கும் எந்த அறிவிப்புகள் எவரிடமிருந்து யார் மூலமாக நம் வரை வந்தள்ளது என்பதற்கான ஆதாரம் எதுவுமே நமக்கு கிடைக்கவில்லை.

இவை யுத வேதம் சம்பந்தமானவை. அடுத்த பதிவில் இறைத்தூதர் ஏசுவைப் பற்றியும் அவருக்கு அருளப்பட்ட வேதத்தைப் பற்றியும் சொற்பொழிவாளர் சொல்வதைப் பார்ப்போம்.

-சையித் அபுல் அஃலா மௌதூதி
-வரலாற்று ஒளியில் இஸ்லாம்.
-பஞ்சாப் பல்கலைக் கழகம்-1975

Friday, January 26, 2007

ரத்தம் குடித்து வளர்ந்த அமெரிக்கா!

பஹாமாஸின் ஆதி குடிகளான அராவக்கியர்களை 'இந்தியர்கள்' என்று அழைத்த கொலம்பஸ் 'கட்டுடலும் அழகிய தோற்றமும் கொண்ட மனிதர்கள் அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை: ஆயுதங்களை அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை.... நம்மிடம் ஐம்பது பேர் இருந்தால் போதும் அவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி விடலாம்' என்று குறிப்பிட்டார்.

அதை அவர் செயல்படுத்தியும் காட்டினார். ஆற்றங்கரைகளில் இருந்து தங்கத்தைத் தேடி எடுத்து வருமாறு அரவாக்கியர்களுக்கு ஆணையிடப்பட்டது. எங்கிருந்தாவது தங்கத்தைக் கொண்டு வந்தவர்களுக்கு கழுத்தில் செப்பு வில்லைகள் கட்டித் தொங்க விடப் பட்டன. சிறிது காலம் கழித்து யாருக்கெல்லாம் கழுத்தில் செப்பு வில்லைகள் இல்லையோ அவர்கள் எல்லாம் கைகள் வெட்டப்பட்டு ரத்தம் வற்றிச் சாகடிக்கப் பட்டனர்.

பஹாமாஸ் ஒன்றும் தங்கச் சுரங்கம் அல்ல. எனவெ உள்ளூர் மக்களைக் கொல்வது ஐரோப்பியர்களுக்கு விரைவிலேயே அலுத்து விட்டது. அதைத் தொடர்ந்து புதிய எஸ்டேட்டுகளுக்கு அரவாக்கியவர்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப் பட்டனர். அங்கே அவர்கள் கசக்கிப் பிழியப்பட்டனர். அதில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். 1515 ஆம் ஆண்டில் இந்தியர்கள் எனப்பட்ட 50000 அரவாக்கியர்கள் மட்டுமே விட்டு வைக்கப்பட்டனர். 1550 ஆம் ஆண்டு வாக்கில் எஞ்சியவர்கள் எண்ணிக்கை 500 ஆகக் குறைந்து விட்டது. 1650 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை பஹாமாஸில் அராவக்கியர்கள் என்ற பழங்குடியினரோ அவர்களது வழி வந்தவர்களோ எவரும் இல்லை என்று குறிப்பிடப்பட்டது.

ரத்தத்தை உறைய வைக்கும் இந்தச் செய்திகளையும் இன்னும் பல உண்மைகளையும் வரலாற்று ஆசிரியரும் நாடக ஆசிரியரும் சமூக ஆர்வலருமான ஹோவர்ட்ஸின் 'அமெரிக்காவின் மக்கள் வரலாறு' (A Peoples History Of United States) என்ற நூலில் விவரித்துள்ளார். 1980-ல் வெளியான இந்த நூல் 2005-ல் புகழ் பெற்ற பேரிலக்கியமாக மீண்டும் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பழங்குடிகள் திட்டமிட்டு அழித்து ஒழிக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி அவரது விரிவான ஆராய்ச்சி விளக்கியிருக்கிறது.

புதிய நாட்டைக் கண்டு பிடித்த அந்த ஆரம்பகால கண்டுபிடிப்பாளர்களின் ரத்த வெறியாட்டத்துக்குப் பிறகு வரலாறு எபபடித் தொடர்ந்தது? அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை எழுச்சி மிக்க சொற்களால் வர்ணித்த தாமஸ் ஜெபர்ஸன் (எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்...) பல நூறு அடிமைகளுக்கு எஜமானர். இந்தியர்களை அப்புறப்படுத்துதல் என்ற கொன்கையால் பெரிதும் பயன் அடைந்தவர் பின்னாளில் அமெரிக்க அமெரிக்க அதிபரான ஆண்டரூ ஜாக்ஸன்தான். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரிப்பதற்கு அக்கொள்கை அவருக்கு மிகவும் உதவியது.

நம் காலத்தில் இந்த வரலாற்றில் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா?வியத்நாம் மீதான அமெரிக்க யுத்தம் 1969-ல் தோல்வியுறப் போகும் லட்சியமாகத் தோன்றியபோது கிஸ்ஸிங்கருக்கு ஓர் அபார யோசனை உதித்தது. நடுநிலை நாடான கம்போடியா மீது சல்லடைக் கண்கள் போலத் துளைக்கும் விமான குண்டு வீச்சுக்கு அவர் ஆணையிட்டார். கண்மூடித்தனமான அந்த விமானத் தாக்குதல் 14 மாதங்களுக்குத் தொடர்ந்தது. பதிவான கணக்குப்படி அதில் 6 லட்சம் பேர் கொல்லப் பட்டனர். அமெரிக்க நாடாளுமன்றத்துக்கோ அமெரிக்க மக்களுக்கோ தெரியாமல் அதை கிஸ்ஸிங்கர் மறைத்து விட்டார். இதுதான் 'பேரரசுக்காக பொய் சொல்வது எப்படி? எந்த சலனமும் இன்றி போர்க் குற்றங்களை இழைப்பது எப்படி? (Lying for Empire: How tp commit War Crimes With a Straight Face)என்ற நூலை 2005-ல் டேவிட் மாடல் எழுதி வெளியிடக் காரணம் ஆயிற்று.

கடைசி நிமிடத்தில் கொலைவெறியாட்டம் ஆடியும் வியத்நாமில் கிஸ்ஸிங்கர் தோற்றுப் போனார். ஆயிரக்கணக்கான விவசாயிகளை விரட்டி அடித்ததன் மூலம் அவர்கள் தலைமறைவு கெமர் ரூஜ் கம்யுனிஸ்ட் இயக்கத்தில் சேர்வதற்கும் அமெரிக்காவின் கைப்பாவை அரசை அவர்கள் தோற்கடிப்பதற்கும் கிஸ்ஸிங்கரே காரணமாக இருந்தார். இதன் மூலம் கம்போடியாவையும் இழந்தார் கிஸ்ஸிங்கர்.

கொலம்பஸால் எது தொடங்கி வைக்கப் பட்டதோ அமெரிக்காவின் ஸ்தாபகர்களும் அமெரிக்க அதிபர்களும் எதைத் தொடர்ந்து செய்தார்களோ அது இன்றும் மாறாமல் தொடர்வதை நாம் பார்க்கிறோமா இல்லையா? கொரியாவைத் தாக்கினார்கள்: வியத்நாம்,கம்போடியா,லாவோஸைத் தாக்கினார்கள்: தலைவர்களைப் படுகொலை செய்தார்கள். (உதாரணம் சிலி அதிபர் ஆலண்டே) ராணுவத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தினார்கள்.(உதாரணம் இந்தோனேஷpயா) தற்போது ஹை-டெக் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.(உதாரணம் ஈராக்)

சதாம் ஹீசைன் தூக்கிலிடப்பட்டு அவரது சடலம் அவமதிக்கப்பட்டபோது நம் காலத்தின் மிகவும் அநியாய யுத்தம் கடைசியில் முடிவுக்கு வரப் போகிறது என்று உலகம் நினைத்தது. ஆனால் ஏற்கெனவே 130000 அமெரிக்க வீரர்கள் இராக்கில் இருக்கும் நிலையில் மேலும் 20000 அமெரிக்க வீரர்களை அங்கு புஷ அனுப்ப இருக்கிறார்.

இறந்தவரின் சடலத்தை அவமதிப்பது என்பது தூக்கிலிடப்பட்டவரின் மதத்துக்கும் அவரைத் தூக்கிலிடக் காரணமாக இருந்தவரின் மதத்துக்கும விரோதமானது. இதன் மூலம் மதத்தை மீறி செயல்பட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர். இராக் போரைத் தீவிரப் படுத்துவதன் மூலம் உலக மக்களின் கருத்தை மீறி அமெரிக்க மக்களின் எண்ணத்தை மீறி அமெரிக்க ராணுவ நிபுணர்கள் மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்கள் பலரின் ஆலோசனைகளை மீறி ஜார்ஜ் புஷ செயல்பட்டிருக்கிறார்.

அமெரிக்க வரலாற்றின் ரத்தம் தோய்ந்த தடத்தை விட்டு ஜார்ஜ் புஷ விலகவில்லை. அதுதான் ஆபத்து நமது நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும்.

நன்றி
டி.ஜே.எஸ். ஜார்ஜ்
தினமணி 21-01-2007

Thursday, January 25, 2007

ஈராக் விஞ்ஞானிகளைக் கொன்ற இஸ்ரேலியர்!

ஈராக் விஞ்ஞானிகளைக் கொன்ற இஸ்ரேலியர்!

அமெரிக்காவுடன் ஒத்துழைக்க மறுத்த 530 ஈராக் விஞ்ஞானிகளை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் கொடூரமாகக் கொன்று குவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களில் இவ்வளவு அதிகமாக உயர் விஞ்ஞானிகளை மொசாத் பல்வேறு வழி முறைகளில் கொன்றுள்ளது. இந்தப் படுகொலைகளுக்கு அமெரிக்க ராணுவத் தலைமையின் அனுமதியும் உதவியும் இருந்ததாக 'அல்ஜஜுரா'வார இதழ் கூறியுள்ளது.

கொல்லப் பட்ட விஞ்ஞானிகளின் பெயர்கள் அடங்கிய திடுக்கிடும் தகவல்களை நான்கைந்து மாதங்களுக்கு முன்பு குடியுரிமை இயக்கங்கள் வெளியிட்டன. படுகொலை தொடர்பான தகவல்களை அமெரிக்க ஏஜென்ஸிகள் அதிபர் ஜார்ஜ் புஷஷpடம் தெரிவித்ததாகவும் அல் ஜஜுரா அறிவித்துள்ளது.

ஒத்துழைக்க மறுப்பவர்களைக் கொல்வதே நல்லது என்ற அறிவுரையை மொசாத் முதலில் முன் வைத்தது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் இதனை அங்கீகரித்தது என இது குறித்து ஆய்வு நடத்திய இஸ்மாயில் ஜலீலி என்ற ஆய்வாளர் வெளிப்படுத்தியுள்ளார்.

கொல்லப்பட வேண்டிய விஞ்ஞானிகளின் விரிவான பட்டியலை அமெரிக்காதான் இஸ்ரேலுக்குக் கொடுத்தது. இப்படுகொலைத் தொடர் இப்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இறந்தவர்களில் 350 பேர் உயர் விஞ்ஞானிகள் ஆவர். மீதியுள்ளவர்கள் பல்கலைக் கழக பேராசியர்கள். உயிர் பிழைக்க நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் நாட்டைத் துறந்து மறைவிடங்களில் வசிக்கின்றனர். மொசாத்தின் பல்வேறு தாக்குதல்களில் இறந்த 230 ஈராக் விஞ்ஞானிகள் பெயர்ப் பட்டியலை பிரஸ்ஸல்ஸ் டிரிப்யுனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

இவை தவிர பல்கலைக் கழக பேராசியர்கள் ஆய்வாளர்கள் என ஆயிரம் பேர் மூன்று வருடத்துக்குள் ஈராக்கில் கொல்லப்பட்டதாக அல் ஜஜீரா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

ஈராக் விஞ்ஞானிகளைக் கொல்லும் முயற்சிகளில் அவர்களது குடும்பத்தினரும் பெரும்பாலும் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு முறை கொலை முயற்ச்சியிலிருந்து தப்பியவரை மீண்டும் தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளனர். பாலஸ்தீனில் சில தலைவர்களை மொசாத் சாக்லெட்டில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக ஒரு ஆய்வாளர் கூறியுள்ளார்.ஈரான் அதிபர் அஹமது நஜாதைக் கொல்ல முன்பு ஒரு முறை முயற்சி நடந்தது. இது இஸ்ரேல் நாளிதழான ஹாரட்ஸ்ஸில் செய்தியாகவும் வெளி வந்தது.

இதன் மூலம் நமக்கு விளங்க வருவது முஸ்லிம் நாடுகளில் ஓரளவு படித்தவர்களும், அமெரிக்க இஸ்ரேலியரின் வஞ்சகங்களை விளங்கிய மக்களும் அதிகம் உள்ள நாடுகள் ஈரானும் ஈராக்கும். இந்த இரண்டு நாடுகளையும் ஒடுக்கி விட்டால் பெட்ரோலுக்கு ஏக போக உரிமையாளராகி விடலாம் என்ற மனப்பால் குடிக்கிறது அமெரிக்கா.

'முஸ்லிம்களாகிய உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது எதிரிகளுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்களாகிய உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு இறைவனை அஞ்சினால் அவர்களின் வஞ்சகங்கள் உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை இறைவன் முழுமையாக அறிபவன்'
3 : 120 - குர்ஆன்

என்ற இறைவனின் வாக்கு மெய்ப்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதுவரை நாமும் பொறுத்திருப்போம்

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

Saturday, January 20, 2007

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்!

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்!

இஸ்லாமியத் திருமறையின் பெருமைகளையெல்லாம் நன்குணர்ந்த கவிஞர் கண்ணதாசன் திருக்குர்அனின் சிறப்புகளையெல்லாம் ஓர் அழகிய கட்டுரையாக வழங்கியுள்ளார். கண்ணதாசனின் இஸ்லாமிய புலமைக்கு அந்தக் கட்டுரை சான்றாக அமைகின்றது. 'ஞானரதம்' 1978 மே இதழில் வெளியான அந்தக் கட்டுரையில் கவிஞர் கண்ணதாசன் கீழ்க் கண்டவாறு திருக்குர்ஆனின் சிறப்புக்களை எடுத்துறைக்கிறார்.

'உலகமெங்கும் பல மொழிகளில் இஸ்லாமியத் திருமறை திருக்குர்ஆன் வந்துள்ளது. இந்தத் திருமறை ஒரு ரமளான் மாதத்தில் துவக்கப் பட்டு பல கட்டங்களில் இருபத்து மூன்று ஆண்டுகளில் இறைவனால் கூறப்பட்டது.

மக்காவில் உபதேசிக்கப் பட்டது ஒரு பகுதி. மறு பகுதி மதினாவில் உபதேசிக்கப் பட்டது.

பெரும்பாலும் எல்லா மதத்து வேதங்களுக்குள்ளும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. எல்லாமே சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டவை. மக்களை ஒழுங்காக வாழ வைப்பவை.

இறைவனுக்கு இணை வைத்துப் பேசக் கூடாது: வணங்கக் கூடாது என்று இத்திருமறையிலேயே கூறப்படுகிறது. அதனால் பிற மத நூல்களை ஒப்புவமை கூற நான் விரும்பவில்லை.

பொது நோக்கில் இஸ்லாமியத் திருமறை சமூக வாழ்க்கையைப் பேசுகிறது: பொருளாதாரத்தைப் பேசுகிறது: லாபத்தில் எவ்வளவு சதவீதம் ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பதையும் கூறுகிறது: சொத்துப் பிரிவினை, பெண்ணுரிமை அனைத்தையும் விவரிக்கிறது.

இத்திருமறை ஒரு வேதமாக மட்டுமின்றிச் சமய மக்களுக்கு சிவில் சட்டமாகவும் பயன்படுகிறது.

எனக்குத் தெரிந்து ஒரு மூல வேதம் குடும்ப வாழ்க்கையை இவ்வளவு விவரமாக விவரிப்பது இத்திருமறை ஒன்றே!

திருக்குர்ஆனை முழுமையாகப் படித்தவர்கள் சராசரி குடும்ப வாழ்க்கையை ஒழுங்காக நடத்த முடியும்.

இது ஒரு தெய்வீக போதனை நூலாக மட்டுமின்றி சமூக வாழ்க்கைக்கான நியாய நூலாகவும் இருப்பதால் எல்லா மக்களும் இதைப் படிக்க வேண்டும்.

அல்லாஹ் எல்லையற்ற பேராளன்: கருணைக் கடல்: கஷடப்படுபவர்களை எப்போதும் அவன் திரும்பிப் பார்க்கிறான் - இந்தச் செய்தி ஒரு மனிதனை மத நம்பிக்கையில் அழுத்தமாக வேரூன்றச் செய்வதற்கு நிச்சயமாகப் பயன்படும்.

இறைவன் அனுப்பிய தூதுச் செய்தியை உலகுக்குத் தெரிவித்த திருத் தூதராகவே நபிகள் பெருமகனாரும் கருதப் படுகிறார்.

பெருமகனாருக்கு முன்னால் வேறு சில தூதர்களையும் வேறு சில வேதங்களையும் உலகின் பல்வேறு பாகங்களுக்கு இறைவன் அனுப்பியிருந்தான் என்ற செய்தியும் இதில் காணப்படுகிறது. நம்பிக்கை வைப்பதை இது மேலும் அதிகப் படுத்துகிறது.

இது ஒரு சமய நூல் மட்டும் அன்று: சரித்திர நூல்: சமூக நூல்.

எல்லா மதத்தவரும் இதைப் படிக்க வேண்டும்.

-கண்ணதாசன்,
ஞானரதம
மே, 1978

திருமறையின் தோற்றுவாய்க்கு கண்ணதாசனின் மொழி பெயர்ப்பு :

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்

எல்லையில்லா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்.

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

உலகமெலாம் காக்கின்ற
உயர்தலைவன் அல்லாவே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்

அர் ரஹ்மானிர் ரஹீம்

அவன் அருளாளன்:
அன்புடையோன்:

மாலிகி யவ்மித்தீன்

நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்:

இய்யாக்க நவ்புது
வ இய்யாக்க நஸ்தயீன்


உன்னையே நாங்கள்
உறுதியாய் வணங்குகிறோம்:
உன்னுடைய உதவியையே
ஓயாமல் கோருகிறோம்

இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம்

நேரான பாதையிலே
நீ எம்மை நடத்திடுவாய்:

ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம்
ஹைரில் மஹ்லூபி அலைஹிம்
வலள்ளால்லீன்

எவர் மீது உன் கோபம்
எப்போதும் இறங்கிடுமோ
எவர்கள் வழிதவறி
இடம் மாறிப் போனாரோ
அவர்களது வழி விட்டு
அடியவரைக் காத்து விடு!

எவ்வளவு அழகாக எளிய தமிழில் கவிஞரின் மொழி பெயர்ப்பு வந்துள்ளது! இது அல்லாமல் திருக்குர்ஆன் முழுமைக்குமே விளக்கவுரை எழுத கண்ணதாசன் அவர்கள் விருப்பப் பட்டார். அந்த எண்ணம் முஸ்லிம் அன்பர்கள் சிலரின் எதிர்ப்பால் தடைப் பட்டுப் போயிற்று. குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர் குர்ஆனுக்கு உரை எழுதக் கூடாது என்று மார்க்க அறிஞர்கள் ஒரு சிலரின் எதிர்ப்பால் அந்த முயற்சி தடைப் பட்டது. குர்ஆன் என்பது எந்த ஒரு நபருக்கும் சொந்தமானதல்ல. உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒன்று.

'இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. குர்ஆன் மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்'
-குரஆன் 2 : 185

என்று இறைவன் பல இடங்களில் மனித குலத்துக்கு சொந்தமானது என்று கூறியிருக்க எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கண்ணதானின் மொழி பெயர்ப்பை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்த்தனர். முகமது நபியை வெட்டுவதற்கு வாள் எடுத்து வந்த உமரை இஸ்லாமிய ராஜ்ஜியத்தின் ஜனாதிபதியாக்கியது இதே குர்ஆன் வசனங்கள் அல்லவா! கண்ணதாசன் குர்ஆனை மொழி பெயர்க்கும் காலங்களில் இறைவனின் வார்த்தைகளில் கட்டுண்டு மதுவையும், மாதுவையும் விடுவதற்கு மொழி பெயர்ப்பு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் அல்லவா!

இது சம்பந்தமாக கவிஞரே 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளி வந்த 'ஞானரதத்தில்' அறிக்கை ஒன்றும் விடுத்துள்ளார்:

'இஸ்லாமிய நண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கினங்க திருக்குர்ஆன் உரை எழுதுவதை நான் நிறுத்தி விட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இஸ்லாமியத் திருமறையின் தமிழுரையைத் துவக்கி வைத்ததோடு அப்பணியை முடித்துக் கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'
-கண்ணதாசன், 30.12.1977

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

Thursday, January 18, 2007

ரோமப் பேரரசர் ஹெர்குலிசைப் பற்றி...

ரோமப் பேரரசின் சக்ரவர்த்தி ஹெர்குலிசைப் பற்றி நாம் வரலாறுகளில் அதிகம் படித்திருப்போம். ஹெர்குலிசுக்கும் முகமது நபிக்கும் நடந்த கடிதப் போக்குவரத்தும் அதோடு அபு சுப்யானுக்கும் ஹெர்குலிசுக்கும் நடந்த வாதங்களும் புகாரி ஹதீது கிரந்தத்தில் பதியப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்துள்ளேன். மொழி பெயர்ப்பில் ஏதும் தவறுகள் தென் பட்டால் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

இந்த விபரங்களைச் சொல்லும் அபு சுப்யான் என்ற நபித் தோழர் சம்பவம் நடக்கும் போது முகமது நபியை கடுமையாக எதிர்த்து வந்தார். முகமது நபிக்கு நெருங்கிய உறவினர்.அந்த நேரம் இஸ்லாத்தை ஏற்காதவராகவே இருந்தார்.அதன் பிறகு பல நாட்களுக்குப் பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இனி வரலாறைப் பார்ப்போம்.ரோமப் பேரரசர் ஹெர்குலிஸ் அரசாங்க அலுவல் நிமித்தமாக அப்போது ரோமாபுரியின் கட்டுப் பாட்டில் இருந்த சிரியாவுக்கு வந்திருந்தார். அந்த நேரம் வியாபார நிமித்தமாக அபூ சுப்யானும் சிரியாவுக்கு வருகிறார். முகமது நபியின் பிரச்சாரத்தைக் கேள்விப் பட்ட ஹெர்குலிஸ், சில நபர்களை அபு சுப்யான் வசம் அனுப்பி அவரையும் அவரது கூட்டத்தாரையும் அழைத்து வரச் சொல்கிறார். அதன்படி அவர்களை மன்னர் வசம் அழைத்து வருகிறார்கள். இவர்களின் சந்திப்பு சிரியாவில் உள்ள இல்யா என்ற நகரில் நடைபெறுகிறது.
அபு சுப்யானையும் அவரது வியாபார கூட்டத்தாரையும் நீதி மன்றத்துக்கு அழைத்த ஹெர்குலிஸ் அரபு மொழி தெரிந்த மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வைத்துக் கொண்டு கீழ் வரும் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.ஹெரகுலிஸ் :

'இறைவனின் தூதர் ' என்று சொல்லிக் கொண்டிருக்கும் முகமது என்ற நபருக்கு நெருக்கமானவர்கள் உங்களில் எவரும் உண்டா?

அபூ சுப்யான் : 'நான் தான் இங்குள்ளவர்களில் அவருக்கு நெருங்கிய உறவினர்'ஹெர்குலிஸ் : 'அவரை எனக்கு நெருக்கமாக கொண்டு வாருங்கள். மற்றவர்கள் அவருக்கு பின்னே சென்று நில்லுங்கள்'. மொழி பெயர்ப்பாளரை நோக்கி 'சொல்வீராக! இந்த மனிதரிடத்தில் (அபு சுப்யான்) இறைத் தூதர் என்று அவர்கள் நாட்டில் சொல்லிக் கொண்டிருப்பவரைப் பற்றி ஒரு சில கேள்விகள் கேட்பேன். இவர் ஏதும் அவரைப் பற்றி பொய்யாக தகவல் தந்தால், அதை எனக்கு மற்றவர்கள் தெரிவிக்க வேண்டும்'. என்று கூறி விட்டு

'அவருடைய பரம்பரை எத்தகையது?' எனற முதல் கேள்வியை அபு சுப்யானைப் பார்த்து மன்னர் ஹெர்குலிஸ் கேட்டார்.

அபு சுப்யான் : உயர்ந்த பாரம்பரியம் உடையது அவருடைய குடும்பம்.

ஹெர்குலிஸ் : அவர் சொல்லக் கூடிய உபதேசங்களை இதற்கு முன் நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

அபுசுப்யான் : இல்லை.

ஹெர்குலிஸ் : அவருடைய முன்னோர்களில் எவரும் இதற்கு முன் ஆட்சியாளர்களாக இருந்திருக்கிறார்களா?

அபுசுப்யான் : இல்லை.

ஹெர்குலிஸ் : அவரைப் பின் பற்றுபவர்கள் பலமுள்ள உயர்ந்த சமூகமா! அல்லது ஒடுக்கப் பட்டவர்களா?

அபுசுப்யான் : ஒடுக்கப் பட்டவர்கள்.

ஹெர்குலிஸ் : அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா?

அபுசுப்யான் : அதிகரிக்கிறது.

ஹெர்குலிஸ் : அவர்களில் எவரும் மார்க்கத்தை தழுவி அது பிடிக்காமல் பிறகு இஸ்லாத்தை விட்டு வெளியாகி இருக்கிறார்களா?

அபுசுப்யான் : இல்லை.

ஹெர்குலிஸ் : முகமது எப்போதாவது வாக்கு தவறி இருக்கிறாரா?

அபுசுப்யான் : இல்லை. ஆனால் தற்போது அவரோடு போர் நிறுத்தம் சம்பந்தமாக உடன் படிக்கை செய்திருக்கிறோம். அதை அவர் மீறுவாரா மாட்டாரா என்பது எனக்குத் தெரியாது. ('இது ஒன்று தான் நான் அவரைப் பற்றி மாறு பட்டு சொன்ன கருத்து' என்று பிறகு ஒரு குறிப்பில் கூறுகிறார்.)

ஹெர்குலிஸ் : நீங்கள் அவரோடு போர் புரிந்து இருக்கிறீர்களா?

அபுசுப்யான் : ஆம்.

ஹெர்குலிஸ் : அந்த போர்களின் முடிவுகள் பற்றி கூறுவீராக!

அபுசுப்யான் : அந்தப் போர்களில் சில சமயம் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். சில நேரம் நாங்கள் வெற்றிப் பெற்றிருக்கிறோம்.

ஹெர்குலிஸ் : உங்களுக்கு அவர் என்ன கட்டளை இடுகிறார்?

அபுசுப்யான் : 'ஒரே இறைவனை வணங்குங்கள். அந்த இறைவனோடு சேர்த்து வேறு எதனையும் வணங்காதீர்கள். உங்கள் முன்னோர்களின் தவறான வழிகளைப் பின் பற்றி வழி கெடாதீர்கள்' என்று சொல்கிறார். 'தொழுகையை நிலை நாட்டும் படியும், உண்மையே பேச வேண்டும் என்றும், நேர்மையை கடை பிடிக்க வேண்டும் என்றும், உறவினர்களின் நலம் பேண வேண்டும்' என்றும் கட்டளை இடுகிறார்.

மொழி பெயர்ப்பாளரை நோக்கி, 'அவர்களுக்கு நான் சொல்வதை மொழி பெயர்த்து சொல்வீராக!' என்று கூறிவிட்டு பின் வருமாறு மன்னர் ஹெர்குலிஸ் தொடர்ந்தார்.

'நான் உம்மிடம் அவரின் குடும்பத்தைப் பற்றிக் கேட்டேன். சமூகத்தில் மதிக்கத்தக்க குடும்ப பரம்பரை என்று சொன்னீர். இதற்கு முன் வந்த இறைத் தூதர்களும் சிறந்த குடும்பத்திலுருந்தே வந்துள்ளனர்அவர் சொல்லும் கருத்துக்களை இதற்கு முன் வேறு யாரும் கூறக் கேட்டிருக்கிறீர்களா? எனக் கேட்டதற்கு 'இல்லை' என்று சொன்னீர். நான் கேட்டதற்கு காரணம், இதற்கு முன் வேறு யாரும் அது போல் சொல்லி இருந்தால் மற்றவர்களின் கருத்தைத் தான் பிரதிபலிக்கிறார் என்று கண்டு பிடித்து விடலாம் என்பதற்க்காகவே!அவரின் முன்னேர்களில் யாரும் அரசராக இருந்திருக்கிறார்களா? என்றதற்கு 'இல்லை' என்று சொன்னீர். ஒருக்கால் தன் தந்தையின் நாட்டைப் பிடிக்கத்தான்இதுபோல் சொல்கிறாரோ என்று நினைத்துத் தான் அவ்வாறு கேட்டேன்.இதற்கு முன் பொய் சொல்பவராக இருந்திருக்கிறாரா? என்று கேட்டதற்கு 'இல்லை' என்று பதில் சொன்னீர். எனவே முன்பு பொய் சொல்லி பழக்கம் இல்லாதவர் இறைவன் விஷயத்திலும் பொய் சொல்பவராக இருக்க மாட்டார் என்று நினைத்தே கேட்டேன்.அவரைப் பின் பற்றுபவர்கள் சமூக அந்தஸ்து உள்ளவர்களா? அல்லது ஒடுக்கப் பட்டவர்களா? என்று கேட்டதற்கு 'ஒடுக்கப் பட்டவர்கள்' என்று பதிலளித்தீர். இதற்கு முன்னால் வந்த இறைத் தூதர்களையும் வறியவர்களும் ஒடுக்கப் பட்டவர்களும் தான் முதலில் பின் பற்றி இருக்கிறார்கள்.அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? என்று கேட்டதற்கு 'அதிகரிக்கிறது' என்று பதிலளித்தீர். உண்மையான மார்க்கம் வளர்ந்து கொண்டு தான் இருக்கும்.அவர்களில் எவரும் இஸ்லாம் மார்க்கத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்களா? என்று கேட்டதற்கு 'இல்லை' என்று பதிலளித்தீர். உண்மையான நம்பிக்கை ஒரு உள்ளத்தில் புகுந்து விட்டால் பிறகு எப்படி மாறுவதற்கு மனம் வரும்.அவர் உங்களிடம் வாக்கு தவறி இருக்கிறாரா? என்று கேட்டதற்கு 'இல்லை' என்று பதிலுரைத்தீர். ஆம். இறைத் தூதர்கள் எவ்வாறு வாக்கு தவற முடியும்.அவர் உங்களுக்கு என்ன போதிக்கிறார் என்று கேட்டதற்கு 'ஒரே இறைவனை வணங்கச் சொல்வதாகவும், தொழுகை,உண்மை,நம்பிக்கை,நேர்மை,உறவினர்களைப் பேணுதல் போன்றவற்றை வாழ்க்கையில் செயல் படுத்தக் கட்டளை இடுகிறார் என்று சொன்னீர். நீர் சொன்ன அனைத்து விபரங்களும் உண்மையாய் இருந்தால் என்னைக் கட்டுப் படுத்தக் கூடியவராக உங்கள் முகமது இருப்பார். இறைத் தூதர்களைப் பற்றி நான் நன்கு அறிவேன்.உங்கள் நாட்டில் வந்திருப்பவர் அந்த இறைத் தூதர் தானா என்று நான் இன்னும் சரியாக அறியவில்லை.நான் அவரை சந்திக்க விரும்புகிறேன்.எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும் அவரைக் கண்டிப்பாக சந்திப்பேன்.அவர் உண்மையாளராக இருந்தால் அவருடன் நானும் இருப்பேன்.அப்போது அவரின் கால்களைக் கழுவக் கூடிய சேவகனாகவும் இருப்பேன்.' என்று கூறினார்.சில நாடகளில் முகமது நபியிடம் இருந்து ஹெர்குலிஸ் மன்னருக்கு ஒரு கடிதம் அனுப்பப் பட்டது. பஸ்ராவை ஆட்சி செய்து வந்த திஹ்யா என்பவர் மூலமாக இக் கடிதம் ஹெர்குலிசுக்கு அனுப்பப் பட்டது. அக் கடிதத்தில்

'அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனைப் போற்றி புகழ்ந்ததன் பின், இறைவனின் தூதராகிய முகமது ரோமாபுரியின் ஆட்சியாளரான ஹெர்குலிசுக்கு எழுதிக் கொள்வது.நேர் வழியைப் பின் பற்றுவோர் மீதுசாந்தி உண்டாகட்டுமாக! நான் உங்களை தூய இஸ்லாத்தின் பால் வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் இறைவனின் பாதுகாவலில் வந்து விடுவீர்.இதற்கான மகத்தான கூலியும் இறைவன் இடத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இதை விடுத்து வேறு மார்க்கத்தை பின் பற்றினால் நஷ்டமடைந்தோரில் நீரும் ஒருவராக ஆகி விடுவீர்.' என்று வேறொரு நபரால் எழுதப் பட்டு முகமது நபியின் மோதிர முத்திரை கடிதத்தில் பதிக்கப் பட்டு மன்னரிடம் அளிக்கப் பட்டது. இந்த கடிதம் இன்றும் கூட அருங் காட்சி அகத்தில் வைக்கப் பட்டு பாதுகாக்கப் படுகிறது.

புகாரி ஹதீது கிரந்தத்தில் 2978 வது ஹதீஸில் நபித் தோழர் அபூ சுப்யான் அவர்கள் அறிவிப்பதாவது'நாங்கள் ஈலியா (ஜெருசலம்) நகரில் இருந்தபோது ரோம (பைசாந்தியப்) பேரரசர் ஹெர்குலிஸ் எங்களை கூப்பிட்டனுப்பினார். பிறகு இறைவனின் தூதர் முகமது நபி அவர்களுடைய கடிதத்தை வரவழைத்தார். கடிதத்தைப் படித்துக் காட்டி முடித்தவுடன் மன்னரிடம் இருந்த பிரமுகர்களிடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. குரல்கள் உயர்ந்தன. நாங்கள் அரசவையிலிருந்து வெளியேற்றப் பட்டோம். அப்போது நான் என் தோழர்களிடம், 'அபூ கப்ஸாவின் மகனுடைய (முகமது நபியுடைய)அந்தஸ்து உயர்ந்து விட்டது. மஞ்சள் நிறத்தவரின் (கிழக்கு அய்ரோப்பியர்களின்) அதிபரே கூட அவருக்கு அஞ்சுகிறார்', என்று கூறினேன்';.

Friday, January 12, 2007

இட ஒதுக்கீடு ஏன் வேண்டும்

இட ஒதுக்கீடு ஏன் வேண்டும்

இட ஒதுக்கீடு ஏன் வேண்டும் என்பதை அறிவதற்கு,
மனித செல்களின் செயல் பாடுகள் எவ்வாறு அமைந்து
இருக்கிறது என்பதை அறிவது அவசியமாகும். செல்களின்
செயல்பாடுகளை ஒருவன் அறிந்து கொண்டால்
இட ஒதுக்கீடு என்பது எவ்வளவு அவசியமானது என்பதை
அவன் அறிந்து கொள்ள முடியும்.


ஒருவன் அறிவு மிகுந்தவனா கவும், வலிமை
உள்ளவனாகவும்
இருப்பதற்கு அடிப்படையான காரணம் அவர்களுடைய
மூதாதையர்களின் கல்வி, தொழில், பண்பாடு ஆகியவைகள்
அவர் களின் செல்களில் பதிவாகி உள்ளதே காரணமாகும்.
இந்திய நாட்டில் கி.பி. 1500ஆம் ஆண்டு முதல் கி.பி. 1900ஆம்
ஆண்டு வரை வாழ்ந்த மக்கள் தொகை சுமார் 20
கோடியை விட குறைவாகவே இருந்து வந்துள்ளது.
கிராமங் களிலோ, பெரிய ஊர்களிலோ போதிய கல்விக்
கூடங்கள் இல்லை. ஆங்காங்கே திண் ணைப் பள்ளிக்
கூடங்களில் ஒரு சிலரே கல்வி கற்றனர். தொழில்
கல்வி என்பது எங்கோ அரிதாகக் காணப்பட்டன.
அந்தக் காலத் தில் தந்தை தொழிலை மகன் கற்றான்.
தொழிலின் பெயரே சாதியின் பெயராக அமைந் திருந்தன.
ஒவ்வொரு சாதியி னரும் ஏதோ ஒரு குறிப்பிட்ட
தொழிலை செய்து வந்தனர். ஆகவே, சில குறிப்பிட்ட
சாதி யினர், தொடர்ந்து பொருளா தாரத்திலும்
சத்துக் குறைவு நோய்களாலும் பாதிக்கப்பட்டு,
அந்த சாதியினரின் செல்களில் விஞ்ஞானப்பூர்வமான
பதிவுகள் ஏற்பட்டு அந்த சாதியினர்
தாழ்த்தப்பட்டவர்களாகவும்,
பிற்படுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டு
உள்ளதை எந்த மருத்துவர்களும் மறுக்க முடியாது.
மனித செல்களில் ஏற்பட்ட பழங்கால பதிவுகளை
அகற்றாவிட்டால் சமத்துவ சமுதாயத்தை
ஏற்படுத்துவது எந்தக் காலத்திலும்
இயலாத ஒன்றாகவே அமைந்துவிடும்.

செல்களின் செயல்பாடு அல்லது கருவமைப்பு என்றால்
என்ன? நமது உடலானது எலும்பு, சதை,
ரத்தம், தோல் ஆகிய வற்றால் உருவானது
போல தோன்றினாலும் கோடிக்கணக் கான
செல்களின் தொகுப்பே நமது தோற்றத்திற்குக்
கார ணமாகும்.�மைக்ரோ�கோப்� கருவி மூலமாக
மட்டுமே பார்க்கக் கூடிய ஒவ்வொரு
செல்லிலும் �உட்கரு� உள்ளது.
உட்கருவில் 23 ஜோடி �குரோமோசோம்�
எனப்படு பவை
இருக்கின்றன. ஒவ்வொரு குரோமோசோமிலும்
மிகவும் நுட்பமான 5 அடி நீளம்
கொண்ட ரிப்பன் போன்ற அமைப்பு
உள்ளது. அதுவே �டிஎன்ஏ�
(னுசூஹ) என்று கூறப் படுகிறது.
இந்த �டிஎன்ஏ� என்பதில்
தான் நமது உடலின்
ரகசியங்கள் அடங்கிய
ஜீன் என்பது உள்ளது.
ஒவ்வொரு டிஎன்ஏ சுருளிலும் 320
கோடி ரகசிய குறியீடுகள்
இருப்பதாகவும் விஞ்ஞானிகள்
தெரிவிக்கிறார்கள்.டிஎன்ஏ-ல்
உள்ள ஜீன் என்ற படி
போன்ற அமைப்பில் �ஏ-டி� மற்றும்
�சி-ஜி� என்று ஜோடி சேர்ந்துள்ள
4 வித ரசாயன குறியீடுகள் மாறி, மாறி
இடம் பெறுவதால் அதற்குத்
தக்கபடி ஒருவரது உடல்
அமைப்பு, குணநலன், செயல்
பாடுகள் மற்றும் அனைத்தும்
நிர்ணயிக்கப்படுவதாக விஞ்
ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
சிலர் குண்டாகவும், சிலர் ஒல்
லியாகவும், சிலர் சாந்தமாகவும்,
சிலர் சிடுமூஞ்சிகளாகவும்,
சிலர் மேதைகளாகவும், சிலர் முட்
டாள்களாகவும் இருப்பதற்குக்
காரணம் டிஎன்ஏ-ல் உள்ள
பதிவுகளே என்று விஞ்ஞானம்
தெரிவிக்கிறது. ஜீன்களில்
உள்ள ரகசிய குறியீடுகளில்
85 சதவீதம் துல்லியமாக
கண்டுபிடிக்கப் பட்டுவிட்டதாகவும்
மீதி குறியீடுகளையும்
விரைவில் கண்டுபிடித்து
விடுவதாகவும் விஞ்ஞானிகள்
நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்கள்.
இந்தக் கண்டுபிடிப்பை
அமெரிக்கா, இங்கிலாந்து,
பிரான்�, ஜப்பான், சீனா ஆகிய
நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள்
�ஹியூமன் ஜினோம் புராஜக்ட்�
என்ற திட்டத்தின் கீழ் 10
ஆண்டுகள் திறமையாக செயல்பட்டு
இந்த அரிய கண்டுபிடிப்பை
கி.பி. 2000ஆம் ஆண்டில்
வெளியிட் டுள்ளார்கள்.

சாதி செல்களின் செயல்பாடு
களை மாற்றி விட்டன!
மனித செல்களின் செயல்
பாடுகளிலிருந்து மனிதனின்
உருவம், குணங்கள், செயல்
பாடுகள் தோன்றுகின்றன
என்ப தும், குணம், செயல்,
தொழில் காரணமாக செல்கள்
மாற்றம் பெறுகிறது என்பதும்
உண்மை யாகும். பல ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட
சாதியினர் ஒரு குறிப்பிட்ட
தொழிலை செய்த காரணத்தா
லும், அந்த தொழிலின் அடிப்
படையில் சில தனிப்பட்ட
பழக்க வழக்கங்களை கடைப்பிடித்
ததாலும் அவர்களின் குறைந்த
பொருளாதாரத்தில் அவர்களின்
உணவும், சுகாதா ரமும்
முறையாக இல்லாததாலும் அவர்களின்
செல்களில் சிறிது சிறிதாக
குறைவு பெற்று அவர் களின்
உருவம், குணம், நிறம்,
செயல்பாடுகள் அனைத்தும்
மாற்றம் பெற்றிருப்பதை
அல்லது குறைவுபட்டிருப்பதை
நாம் உணர முடியும். ஆகவே,
தாழ்த்தப்பட்ட மற்றும்
பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு
இன்னமும் இட ஒதுக்கீடு என்பது
மிகவும் அவசியமானதாகும். அதன்
மூலமாகவே ஒரு சமத்துவ சமுதாயத்தை
நாம் உருவாக்க முடியும்.
இது ஒரு சமூக நீதியும்
தர்மமுமாகும்.

- அன்பரசன் (எ)
மு.நாராயணசாமி

Wednesday, January 10, 2007

இப்படியும் ஒரு சதி முஸ்லிம்களுக்கு எதிராக!

இப்படியும் ஒரு சதி முஸ்லிம்களுக்கு எதிராக!

நான்கு பேர் நல்ல முறையில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற செவிலியர்கள். இவர்களோடு சேர்த்து ஒரு மருத்துவர். இவர்கள் அனைவரும் பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர்கள். லிபியாவில் மருத்துவ சேவைக்காக வந்தவர்கள்.

ஆனால் இவர்களுக்கு லிபிய அரசு விரைவில் மரண தண்டனை வழங்க இருக்கின்றது. கடந்த டிசம்பர் பத்தொன்பது அன்று திரிபோலி உயர்நீதி மன்றத்தில் இவர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதி அரசர் மஹ்மூத் ஹவீஸா. தீர்ப்பைக் கேட்டதும் திரிபோலி வீதிகளில் திரண்ட மக்கள் இறைவனின் புகழ் பாடி கொண்டாடி இருக்கின்றார்கள்.

இவர்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா?

இதயத்தை உறைய வைக்கும் அந்தச் செய்தியை நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கேளுங்கள். பச்சிளம் குழந்தைகளின் உடலில் ஹெச்.ஐ.வி வைரஸ் கிருமிகளைச் செலுத்தியதுதான்.

இவ்வாறு நானூறு குழந்தைகளை எய்ட்ஸ் நோயாளிகளாக ஆக்கி இருக்கின்றார்கள் இந்த ஐரோப்பியர்கள்...! குழந்தைகளின் பெற்றோருக்கு இல்லாத எய்ட்ஸ் நோய் குழந்தைகளை தொற்றிக் கொண்டதெப்படி?

விசாரணையில் பல்கேரியாவைச் சேர்ந்த செவிலியர்களும் மருத்துவர்களும்தான் குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி வைரஸைச் செலுத்தியுள்ளனர் என்று கண்டு பிடிக்கப் பட்டது. தலைநகர் திரிபோலியில் இயங்கி வருகின்ற பின்காஜி மருத்துவ மனையில்தான் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

உலகிலேயே ஆபாசத்தின் பிறப்பிடமாக நிர்வாண வக்கிரத்தின் உறைவிடமாக உல்லாச கேளிக்கைகளின் இருப்பிடமாக இருப்பது அமெரிக்காவும் ஐரோப்பாவும்தான். ஆனால் அங்கு ஏன் எய்ட்ஸ் பரவவில்லை?

இந்த ஒழுக்கச் சீர்கேடுகள் அதிகமாக வேரூன்றாத குடும்ப அமைப்பு சிதறாமல் இருக்கின்ற ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் அது ஏன் பரவிக் கொண்டிருக்கிறது?

எய்ட்ஸ் நோய் ஹெச்.ஐ.வி என்கிற வைரஸ் மூலம் பரவுகின்றது என்று ஆணித்தரமாகச் சொல்கின்றார்கள். ஆனால் அந்த வைரஸ் உருவானதெப்படி? யார் உருவாக்கினார்கள்? அறிவியல் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப் பட்டதா?

இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் விதத்தில்தான் லிபியாவிலிருந்து வந்த செய்தி அமைந்துள்ளது.

பல்கேரிய செவிலியர்களுக்கு பின் புலமாக இயங்குகின்ற சக்தி எது? உலகம் முழுவதும் எத்தனை மருத்துவ மனைகளில் எத்தனை செவிலியர்கள் இவ்வாறு 'மருத்துவ சேவையில்' ஈடுபட்டிருக்கின்றார்கள்? இந்தச் சேவகர்களிடமிருந்து உலகைக் காப்பாற்றுவது யார்?

நினைத்தாலே நெஞ்சம் பதறுகின்றது.

நன்றி : சமரசம்.