Followers

Monday, April 29, 2019

அம்பட்டயன் என்று என்னை இழிவுபடுத்தினார்கள்.

அம்பட்டயன் என்று என்னை இழிவுபடுத்தினார்கள்.

இஸ்லாத்தை ஏற்றேன்; யாரெல்லாம் என்னை இழிவுபடுத்தி அழைத்தார்களோ அவர்களே என்னை மரியாதையுடன் 'வாங்க பாய்' என அன்புடன் அழைக்க வைத்தது இஸ்லாம்.
முஸ்லிம்கள் என்னோடு நகமும் சதையுமாக இல்லை; இரத்தமும் சதையுமாக பழகுகின்றனர்.
இஸ்லாத்தை தழுவிய சகோதரர் மாரிமுத்து அவர்கள் ஜி.சுலைமானாக மாறி சாதியால் தான்பட்ட துன்பங்களையும், இஸ்லாத்தால் தனக்கு கிடைத்த இன்பங்களையும் நம்மோடு பகிர்கின்றார்.
இஸ்லாத்தை ஏற்ற அந்த சகோதரர் முஸ்லிம்களுக்கு தலைமையேற்று தொழுகை நடத்த, அவர் பின்னால் இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்து வளர்ந்த பரம்பரை முஸ்லிம்கள் நின்று தொழும் காட்சியை காணுங்கள்.


Sunday, April 28, 2019

நோன்பின் நோக்கம் என்ன ?

நோன்பின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இஸ்லாமியர்களை விட இஸ்லாம் அல்லாதவர்கள் மிக தெளிவாக விளங்கி வைத்துள்ளனர்...
எல்லா புகழும் இறைவனுக்கே!


இலங்கை குண்டுவெடிப்பால் சந்தேகங்களை எதிர்கொள்ளும் TNTJ

இலங்கை குண்டுவெடிப்பால் சந்தேகங்களை எதிர்கொள்ளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கையில் ஏப்ரல் 21ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னர், தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் இஸ்லாமிய சமூகத்தை மேலும் பின்னுக்கு தள்ளும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் இ.முகமது தெரிவித்துள்ளார்.

வஹாபிஸ கொள்கைகளை நாங்கள் பின்பற்றுவதில்லை, அதை நாங்கள் முன்மொழிவதும் இல்லை. இறந்தவர்களை தர்கா அமைத்து வழிபடும் முறையை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை வஹாபிஸத்தை பின்பற்றுகிறவர்களும் எதிர்க்கிறார்கள் என்பதால், சிலர் எங்களை வஹாபிஸ்டுகளாக பார்க்கிறார்கள். எங்களுக்கு அந்த பின்புலம் கிடையாது, இஸ்லாம் மதத்தை மட்டும் பின்பற்றுகிறோம் என அவர் கூறுகிறார்.

தமிழகத்தில் சமூகப்பணிகளை செய்து, தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரசாரத்தை மேற்கொள்வதாக கூறும் முகமது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மீது எழுப்பப்பட்ட சந்தேகங்களை எதிர்கொண்டது எப்படி, சந்தேகத்தின் பேரில் கைதாகும் இஸ்லாமிய இளைஞர்களின் நிலை பற்றி பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் பேசினார்.

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு காரணம் என இலங்கை அரசாங்கம் சந்தேகப்படுகிறது. அந்த அமைப்பு இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பிரிந்துவந்த அமைப்பு. அதே சமயம் தவ்ஹீத் ஜாமஅத் என்ற பெயரை கொண்டுள்ள உங்களுடைய அமைப்பு மற்றும் பிற இஸ்லாமிய அமைப்புகள் மீது பரவும் செய்திகளை பற்றி உங்கள் கருத்து என்ன?

இலங்கையில் நடந்த சம்பவம் கண்டனத்திற்கு உரியது. தேசிய தவ்ஹீத் ஜமாஅத், இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பிரிந்து வந்த அமைப்பு இல்லை. ஒருவேளை அந்த அமைப்பில் இருந்தவர்கள் யாராவது தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்திருக்கலாம். எங்களுடைய அமைப்பின் முழுபெயர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தோடு எங்களுக்கு தொடர்புள்ளது.

இந்த இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு எங்களின் பிரதிநிதி. எங்களை பின்பற்றும் அமைப்பு. இந்த இரண்டு அமைப்புகளும் தீவிரவாதத்தை தீவிரமாக எதிர்ப்பவர்கள். இலங்கையில் நடந்த சம்பவத்திற்கு தொடர்பில்லாத எங்களை பற்றி சந்தேகிக்கும் வகையில் செய்தியை ஒரு ஊடகம் வெளியிட்டது. அதற்கான விளக்கத்தையும் நாங்கள் கொடுத்துவிட்டோம். தீவிரவாதத்திற்கு எதிராக போரிடக்கூடியவர்கள் நாங்கள். ரத்ததானம், கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்ட சேவைகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிசம்பவம்

இலங்கை சம்பவம் அதிர்ச்சிகரமான சம்பவம்

இலங்கை சம்பவம் அதிர்ச்சிகரமான சம்பவம் என்பதில் மாற்றுகருத்து இல்லை. இதுநாள்வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே அறியப்பட்ட அமைப்பாக எங்கள் அமைப்பு இருந்துவந்தது. ஆனால், இலங்கை சம்பவத்தை அடுத்து பலரும் எங்களைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். நாங்கள் பல சமூகசேவைகளை செய்துவருகிறோம். ஆனால் எங்கள்மீது சந்தேக பார்வை ஏற்படுகிறது. நாங்கள் மட்டுமல்ல, இத்தகைய சூழலில் எந்த அமைப்பாக இருந்தாலும், ஒரு சோர்வு ஏற்படும். உறுதியோடு இந்த விவகாரத்தை எதிர்கொண்டோம்.

இந்த நேரத்தை எங்களைப் பற்றிய முழுவிவரத்தை தெரிவுப்படுத்தும் நேரமாக நாங்கள் நினைத்துகொள்கிறோம். காவல் துறையோ, இல்லை எங்களை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களோ யாரவது வந்து எங்களிடம் கேள்விகள் கேட்டு, விசாரணை செய்வதை நாங்கள் விரும்புகிறோம். எங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நாங்கள் என்னவிதமாக இந்த சமூகத்திற்கு பணியாற்றுகிறோம் என தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறுகிறோம். தொடர்ந்து எங்கள் சமூகத்தை குறிவைத்து சந்தேகம் எழுப்பப்படுவது என்பது வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது.

சமீபத்தில் இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு தகவலை அனுப்பியது. அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆட்சியை இலங்கை, தமிழகம் மற்றும் கேரளாவில் பரவலாக்கவேண்டும் என தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் சஹ்ரான் கூறிய காணொளி ஒன்று உள்ளது. கோவையில் உள்ள இளைஞர்களிடம் இந்த காணொளி இருந்ததாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு கூறுகிறது. இதைபற்றி உங்கள் கருத்து.

குண்டுவெடிப்பு சம்பவத்திற்குபின், அமரா மஜீத் என்ற பெண்ணிய செயற்பாட்டாளரின் புகைப்படத்தை சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் இலங்கை அரசாங்கம் வெளியிட்டுவிட்டது. இது உலகம் முழுவதும், சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் அமரா மஜீதின் புகைப்படத்தை பாத்திமா என தவறாக வெளியிட்டுவிட்டதாக இலங்கை அரசாங்கம் மன்னிப்பு கோரியது. உளவு தகவல் என வெளியாகும் தகவல்களில் எவ்வளவு உண்மை, ஆதாரங்கள் என்ற பெயரில் வெளியிடப்படும் படங்கள், பெயர்களில் எவ்வளவு குளறுபடிகள் உள்ளன என்பதற்கு இந்த சமீபத்திய ஆதாரம் ஒரு எடுத்துக்காட்டு.

அரசாங்கம் சந்தேகம் என கருதும் நபரின் பெயர் ஏன் ஒரு இஸ்லாமிய பெயராக இருக்க வேண்டும்? தவறான தகவலை வெளியிட்டு மன்னிப்பு கேட்கிறார்கள், ஆனால் இந்த தகவலால் ஏற்பட்ட பாதிப்பை யார் சரிசெய்வார்கள்?

அடுத்ததாக சஹ்ரான் நச்சு கருத்துக்களை விதைக்கிறார் என இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. அவரின் போக்கை எதிர்த்து அங்கு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என தெரிந்துகொண்டோம். விழிப்புணர்வு அடையாமல் இருந்தது இலங்கை. இந்திய புலனாய்வு அமைப்பு சொல்வதற்கு முன்பே இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் சொல்லிவிட்டது என்ற உண்மையை சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த இலங்கை சம்பவதற்கு பிறகு உங்களின் செயல்பாடுகள் என்னவாக மாறும்?

நாங்கள் முன்பை போல சமூக சேவையை தொடருவோம், ஆறு மாதங்களுக்கு முன்பு, தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை செய்தோம். அதை மீண்டும் தொடரவேண்டும். மனிதநேயத்தை குர்-ஆன் எவ்வாறு போதிக்கிறது என்பதை மேலும் எல்லோருக்கும் எடுத்துச்செல்லும் பணியில் ஈடுபடுவோம்.



Saturday, April 27, 2019

யார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ?

யார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ?
குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோர் (2014) பிரதியைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, ஓர் ஆய்வுக் கட்டுரை படிக்க நேர்ந்தது. கட்டுரையை ஃபிரான்ஸ் கலாசாரத் துறை பேராசிரியர் டாக்டர், ஸைனப் அப்துல் அஸீஸ் எழுதியிருக்கிறார். ‘இராக் கிறித்தவர்களும் இனப் படுகொலை பற்றிய ஊகங்களும்’ என்பது கட்டுரையின் தலைப்பு. கட்டுரையின் இறுதியில் டாக்டர் ஸைனப் எழுதியிருப்பதன் தமிழாக்கத்தை அப்படியே கீழே தருகிறோம். (இதில் நமது சொந்தக் கருத்து எதுவும் இல்லை.) நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்:
ஐ.எஸ். இயக்கத்தை அரபி இதழ்கள் சுருக்கமாக ‘தாஇஷ்’ எனக் குறிப்பிடுகின்றன. இதன் பொருள் ‘அத்தவ்லத்துல் இஸ்லாமிய்யா’ (இஸ்லாமிய அரசு) என்பதாகும். ‘கிலாஃபத்’ ஆட்சி என விளக்கம் கூறலாம். இந்த இயக்கத்தின் தலைவர் ‘அபூபக்ர் அல்பஃக்தாதி’யை ‘பஃக்தாது கலீஃபா’ என அவருடைய ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். இவரது பின்புலம் குறித்து முன்னணி இணைய தளங்கள், குறிப்பாக ‘Veteran Today’ எனும் இணையதளம் தோலுரித்துக்காட்டியிருக்கிறது.
பக்தாத் கலீஃபா, இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாத்’தின் கையாள். இவர் யூதப் பெற்றோருக்குப் பிறந்தவர். அபூபக்ர் அல்பஃக்தாதியின் உண்மையான பெயர்: ஷைமோன் எலியூட். இவரை சியோனிஸ மொசாத், தன் உளவுப் பணிகளுக்காக உருவாக்கிப் பயிற்சியையும் அளித்துள்ளது. உளவுத் துறையிலும் வெளியுறவுத் துறையிலும் அவர் பயிற்சியை முடித்துள்ளார். அத்துடன், பல்வேறு இராணுவப் பயிற்சிகளுக்கும் உட்படுத்தப்பட்டார். பல்வேறு சோதனைகளையும் அவர் கடந்துவந்துள்ளார். இதுவெல்லாம் எதற்காக? அரபு மற்றும் முஸ்லிம்களின் வாழ்வையும் இஸ்லாமியச் சிந்தனைகளையும் அழிக்கும் சதிவேலைகளுக்கு எலியூட் தலைமை ஏற்க வேண்டும்; அழிவு சக்திகளை ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும் என்பதற்காகத்தான்!
இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? ஐ.எஸ். (Islamic State) அமைப்பு, பயங்கரவாத இயக்கங்களின் ஐ.நா. பட்டியலில் இடம்பெற்றுள்ள அதே வேளையில், அதற்குப் பொருளுதவி செய்வது அமெரிக்காவாகும். 2014 வரி ஆண்டுக்கான இரகசிய கூட்டத்தில் முடிவான சட்டத்திற்கேற்ப ஐ.எஸ். அமைப்புக்குப் பொருளுதவி செய்ய அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இது, 2014 செப்டம்பர் 30 வரைக்குமான ஒப்புதலாகும்.
இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், 2004 முதல் 2009 வரை 5 ஆண்டு காலம் குவாண்டநாமோ சிறையில் அபூபக்ர் அல்பஃப்தாதி இருந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் சி.ஐ.ஏ. மற்றும் மொசாத் ஆகிய உளவுத் துறை அமைப்புகள் தம் பணிகளுக்காக ஆள் திரட்டியபோது அபூபக்ரைப் பயன்படுத்த எண்ணின. பல்வேறு நாடுகளில் இருக்கும் முஜாஹித்களை ஒரே இடத்தில் திரட்டுவதற்கு வசதியாக ஒரு குழுவை அமைக்கும் பெரிய பொறுப்பினை அபூபக்ரிடம் அவை கொடுத்தன. இக்குழு, முஜாஹித்கள் யாரும் இஸ்ரேலைத் தாக்கிவிடாமல் தடுக்கும் பணியைச் செய்ய வேண்டும் என்பது மொசாத்தின் திட்டமாகும்.
அபூபக்ர் என்ற ஒற்றரை மொசாத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்ற நாடுகளின் இராணுவ மற்றும் சிவில் வட்டாரங்களில் ஊடுருவுவதே ஆகும். அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதற்கு வசதியாகவும் அந்நாடுகளின் ஒவ்வொரு பகுதிமீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கு வசதியாகவும் சியோனிஸ ஆட்சியை உருவாக்கும் பணியை எளிதாக்க வேண்டும்.
உலகின் நாலா பாகங்களிலிருந்தும் தீவிரவாதிகளின் ஒரு பெரும் படையை ஓரிடத்தில் ஒன்றுசேர்த்து, ஷைத்தானின் உண்மையான படை இதுதான் என உலகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். அவர்கள் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் கலிமா பொறிக்கப்பட்ட கறுப்புக் கொடியைத் தூக்கிக் காட்டுவார்கள். இதன்மூலம், இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பை உலக மக்களிடம் விதைக்க முடியும் என்பது மொசாத்தின் கனவாகும். இப்படையினர், ஈவிரக்கமின்றி கைதிகளைத் துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை செய்வார்கள். இந்தப் பயங்கரமான காட்சிகளைப் படமாக்கி இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிடுவார்கள்.
இவர்கள் இரத்த வெறிபிடித்த காட்டுமிராண்டிகள் என உலகம் அடையாளம் காண வேண்டும். யாராலும் சகிக்க முடியாத, மனிதாபிமானமே இல்லாத இந்த நிலைக்கு ஒரு மனிதன் வரவேண்டுமென்றால், ஒன்று அவன் போதைக்கு அடிமையாக இருக்க வேண்டும்; அல்லது இரத்தத்தையும் பயங்கரத்தையும் பார்த்துப் பார்த்துப் பழகிப்போனவனாக இருக்க வேண்டும். இதுதான் அமெரிக்க சியோனிஸ போர் உத்தியாகக் காலம் காலமாக இருந்துவருகிறது.
சுருங்கக்கூறின், ஐ.எஸ். எனும் இந்தப் படைக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் அறவே இல்லை. இது, முஸ்லிம்களின் கரத்தாலேயே இஸ்லாத்தின் மீது போர் தொடுப்பதற்காக ‘பிளாக் வோட்டர்’கள் மூலம் அமெரிக்கா நிகழ்த்தும் நாடகமாகும்.
-முஹமது கான் பாகவி



Tuesday, April 23, 2019

“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்!”

“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்!”
- இந்தியக் குழந்தைக்குத் தாயான துபாய் பெண்.
உலகம் முழுக்க அன்பு கொட்டிகிடக்கிறது.
யாரோ ஒருவர்தானே என பிறரை உதாசினப்படுத்தாத நல்ல உள்ளங்களும் நிறைந்து இருக்கின்றன. துபாய் விமான நிலையத்தில் பிரசவ வலியால் துடித்தவர், ஓர் இந்தியப் பெண். அவருக்குப் பிரசவம் பார்த்தவர், மருத்துவர் அல்ல... துபாய் விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்! குழந்தையோ குறைப்பிரசவத்தில் பிறந்தது. பிறகு என்ன நடந்தது?
இரு நாள்களுக்கு முன்பு, துபாய் விமான நிலையத்துக்கு இந்தியப் பெண் ஒருவர் வந்தார். இமிகிரேஷன் பகுதியில் வந்த அவரின் உடையில் ஆங்காங்கே ரத்தக்கறை படிந்திருந்தது. முகத்தில் பெரும் பதற்றம் காணப்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் ஹனான் ஹூசைன் முகமதுவுக்குப் பணி முடிய 10 நிமிடமே இருந்தது. பெண்ணின் உடைகளில் ரத்தக்கறை படிந்துள்ளதைப் பார்த்த, ஹனான், அதிர்ச்சியடைந்தவாறே, “என்னாச்சு, ஏன் ரத்தக்கறை?” என்றார். பயத்திலேயே பெண்ணுக்கு வலி ஏற்படத் தொடங்க, தான் ஆறு மாதக் கர்ப்பிணி என்றவாறே தரையில் படுத்து வலியால் அலற ஆரம்பித்தார்.
சப் இன்ஸ்பெக்டர் ஹனானுக்கு, என்ன செய்வதெனத் தெரியவில்லை. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நிலையில் அந்தப் பெண்ணும் இல்லை. ரத்தப்போக்கு அதிகரித்தது. மற்றவர்களுடன் சேர்ந்து கர்ப்பிணிப் பெண்ணை தனி அறைக்குள் கொண்டு சென்றார். மருத்துவர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணோ வலியால் துடிக்க, வேறு வழி தோன்றாமல் ஹனானே பிரசவம் பார்த்தார். ஆண் குழந்தை பிறந்தது.
இந்த இடத்தில் வேறு ஒரு பிரச்னையும் தலை தூக்கியது. குறைப் பிரசவத்தில் பிறந்ததால் குழந்தையின் இதயம் துடிக்கவில்லை. மூச்சும் விடவில்லை. போலீஸ் அதிகாரி என்பதால் ஹனானுக்கு சி.பி.ஆர். (cardiopulmonary resuscitation) கொடுக்கும் முறை தெரிந்திருந்தது. குழந்தைக்கு சி.பி.ஆர் கொடுத்தது குறித்து ஹனான், “பொதுவாகக் குழந்தைகள் பிறந்ததும் வீல் எனக் கத்தும்... அழும். இந்தக் குழந்தையோ ஒன்றுமே செய்யவில்லை. எனக்கு ஏதோ பிரச்னை என்பது மட்டும் புரிந்தது. குழந்தையின் பின்புறம் தட்டினேன். அப்போதும், குழந்தை அழவில்லை. தொடர்ந்து 3 நிமிடம் வரை சி.பி.ஆர் கொடுத்தேன். குழந்தை அலறியது. அப்போதுதான் எனக்கு உயிரே வந்தது. குழந்தை அலறவும் டாக்டர் குழு அங்கே வரவும் டைம் சரியாக இருந்தது. தொப்புள்கொடியில் இருந்து குழந்தையைப் பிரித்து அருகில் இருந்த லஃதீபா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்'' என்று அந்த `திக் திக்' நிமிடத்தை விவரித்தார்.
தற்போது, துபாய் மருத்துவமனையில் குழந்தைக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கடந்த 19-ம் தேதி துபாய் விமானநிலையத்துக்கு வந்த பெண், தான் கர்ப்பிணி என்பதை மறைக்க முயன்றுள்ளார். மும்பை செல்வதற்கு டிக்கெட் வைத்திருந்தார். துபாயில் குழந்தை பெற்றுக்கொள்ள அதிக செலவு பிடிக்கும் என்பதால், கணவர் டிக்கெட் எடுத்து அவரைத் தாய்நாட்டுக்கு அனுப்பியுள்ளார். கர்ப்பிணி என்பதால், விமானத்தில் ஏற்றுவார்களோ, இல்லையோ என்ற பயம் அவரைத் தொற்றிக்கொண்டது. விளைவு... குறைப் பிரசவம். நல்லவேளையாக, கடவுள் வடிவில் ஹனான் வந்து குழந்தையைக் காப்பாற்றியுள்ளார்.
ஹனானின் சேவையைப் பாராட்டி, அமீரக அரசு அவருக்கு விருது அளித்துக் கௌரவித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் இருக்கும் குழந்தையையும் பெண்ணையும் தினமும் சென்று ஹனான் பார்த்துக்கொள்கிறார். ஹனான் மட்டுமல்ல, அவருடன் பணிபுரியும் மற்றவர்களும் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையின் தாய்க்கு ஆதரவாக இருந்துவருகின்றனர். குழந்தை இன்குபேட்டரில் உள்ளது. இன்னும் இரு மாதத்துக்கு மருத்துவமனையில் குழந்தை இருக்க வேண்டும். பிரசவச் செலவுகளை ஹனான் மற்றும் உடன் பணிபுரிபவர்கள் ஏற்றுக்கொள்ள முடிவுசெய்துள்ளனர்.
“என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. ஒரு குழந்தையின் உயிரை நான் காப்பாற்றியுள்ளேன். இந்தக் குழந்தை, அந்தத் தம்பதியின் முதல் குழந்தை. அதை நான் காப்பாற்றிக் கொடுத்துள்ளேன். தம்பதி இதனால் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள். ஏழு ஆண்டுகளாகத் துபாய் போலீஸில் பணிபுரிகிறேன். என் பணியில் நான் நிறைவு கண்ட நாள் இது. எனக்கு மூன்று பெண் குழந்தைகள். இப்போது, ஒரு மகனும் பிறந்திருக்கிறான் அவன் இன்குபெட்டரில் வளர்கிறான்'' என்று நெகிழ்கிறார் ஹனான்.
எம் .குமரேசன் @விகடன் .காம்
V Premkumar Babu


ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்!

சில நாட்களுக்கு முன்பு நியூஸிலாந்த் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதன் மூலம் இஸ்லாத்தின் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. பலர் இஸ்லாத்தையும் ஏற்ற வண்ணம் உள்ளனர். இப்படி மாற்றம் வருவதை இஸ்ரேலும் அமெரிக்காவும் விரும்பவில்லை. இஸ்லாத்தின் மேல் வெறுப்பை விதைக்க என்ன செய்ய வேண்டும். இதோ... இலங்கை குண்டு வெடிப்பும் அதனால் 250 பேர் இறப்பும் நடத்தியாகி விட்டது. அதற்கு ஐஎஸ் அமைப்பும் பொருப்பு ஏற்றுக் கொண்டு விட்டது.
ஐஎஸ் யாரால் இயக்கப்படுகிறது என்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு ஆக்கத்தை அப்படியே தருகிறேன். படித்துப் பாருங்கள்.
---------------------------------------------------------
ஈராக்கின் மசூல் நகர ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் சித்தார்த்!
ஈராக்கிலுள்ள மசூல் நகரத்தின் ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பெயர் என்ன தெரியுமா? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சித்தார்தா! அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு? சித்தார்த்தா சில வருடங்கள் முன்பு இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை அபு ருமைஷா என்று மாற்றிக் கொண்டார்.
இஸ்லாத்தை ஏற்ற ஒருவன் என்னசெய்ய வேண்டும்? தொழுகை, நோன்பு, மனித நேயம், ஏழைகளின் பால் அன்பு, ஹராம் ஹலால் பார்த்து சம்பாதிப்பது என்று அவனது வாழ்க்கை அமைய வேண்டும். ஆனால் இவனோ தீவிரவாதத்தை கையிலெடுத்து ஐஎஸ்ஐஎஸில் சேர்ந்து இஸ்லாத்துக்கு விரோதமான செயலில் ஈடுபடுகிறான். இங்கிலாந்தில் பல முறை சிறையிலடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளான்.
ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள படித்த இளைஞர்களை யூதர்கள் வலை விரித்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள். பல பரம்பரைகளாக இஸ்லாத்தில் உள்ள ஒருவன் யூதர்களின் பாவச் செயலுக்கு அடி பணிய மாட்டான். எனவே பாசிச சிந்தனையுடைய சித்தார்த் போன்ற இளைஞர்களை பிடித்து மூளை சலவை செய்கின்றனர். அவர்களை இஸ்லாத்தை ஏற்பதாக நடிக்க வைத்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர்.
பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகளை கொன்றவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள். அவர்கள் உடலில் பச்சை குத்தியிருந்ததை முன்பு ஆதாரங்களோடு பார்த்தோம். ஃப்ரான்ஸில் நடந்த பல குண்டு வெடிப்புகள் இன்று வரை மர்மாகவே உள்ளன. அங்கும் யூதர்கள் சம்பந்தப்பட்டுள்ளது முடிவில் தெரிய வந்தது. இதனை கண்டு பிடித்த விசாரணை அதிகாரியை கொன்று விட்டு அதனை தற்கொலையாக உலகுக்கு சொன்னதை நாம் மறந்து விட முடியாது.
நம் நாட்டில் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்புகளில் முதலில் இஸ்லாமியர்கள்தான் கைது செய்யப்பட்டனர். முடிவில் ஹேமந்த் கர்கரே என்ற நியாயவான் உண்மையை வெளிக் கொண்டு வந்தார். இன்று இந்துத்வாவாதிகள் சிறையில் உள்ளனர். யூதர்களுக்கும் நம் நாட்டு இந்துத்வாவாதிகளுக்கும் எப்போதும் ஒரு நெருக்கம் இருப்பதை நாம் அறிவோம்.
ஐஎஸ்ஐஎஸ் செய்து வரும் காரியம் எல்லாம் இஸ்லாம் தடுத்தது. பெண்களை செக்ஸ் தொழிலாளிகளாக பயன்படுத்துகின்றனர். பத்திரிக்கையாளர்களை கழுத்தை வெட்டி அதனை வீடியோவாக்கி வெளியிடுகின்றனர். அப்பாவி மக்களை கொல்கின்றனர். சிரியா, ஈராக்குக்கு சொந்தமான எண்ணெய் வயல்களை திருடி விற்று காசு பார்க்கின்றனர்.
இவை அனைத்தும் இஸ்லாம் தடுத்த செயல்கள். இவற்றை செய்வதன் மூலம் யூதர்களுக்கு பணமும் கிடைக்கிறது. அதே நேரம் உலக அளவில் இஸ்லாத்திற்கு கெட்ட பெயரும் ஏற்படுத்தப் படுகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்களாம். ஆனால் இவர்களின் சூழ்ச்சியை உலகம் தற்போது நன்றாக புரிந்து கொண்டு விட்டது. முன்பை விட ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இஸ்லாம் வேகமாக பரவுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் யூதர்களின் ஆட்டத்தை இறைவன் ஒரு முடிவுக்கு கொண்டு வருவான்.
தகவல் உதவி
தி ஹிந்து ஆங்கில நாளிதழ்
03-05-2016


Sunday, April 21, 2019

இலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்...??

இலங்கை தொடர் குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்...??
இலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் அபரிமிதமான இயற்கை எரிவாயு உள்ளதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளை மேற்கொண்டது முழுக்க முழுக்க வெளிநாட்டு நிறுவனங்களே.
50 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இயற்கை எரிவாயு இருப்பதை உறுதி செய்துள்ளன. குறிப்பாக தமிழகத்தின் அருகேயுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மிக அதிகமான அளவில் எரிவாயு உள்ளதாக முப்பரிமாண சோதனைகள் தெளிவுபடுத்தியுள்ளன.
இந்த எரிவாயு வளங்களை பயன்படுத்திக் கொள்ளும் தொழில்நுட்பம் இலங்கையிடம் இல்லை. இதற்கான டெண்டர் கோரி பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான காலக்கெடு வரும் மே மாதம் 7-ம் தேதியுடன் முடிவடைகிறது. டெண்டர் பெறப்பட்ட மூன்று மாதங்களுக்குள் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எரிவாயு எடுக்கும் பணிகள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.
இது இப்படியிருக்க இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பில் நடத்தப்பட்ட ஆய்விலும் எரிவாயு உள்ளதாக, பிரான்ஸை சேர்ந்த டோடா நிறுவனம் கண்டறிந்துள்ளது. அடுத்தக்கட்ட பணிகளை தீர்மானிப்பதில் பிரான்ஸ் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கும் என சமீபத்தில் செய்திகள் வெளியானது. பிரான்ஸில் தேவாலயம் சமீபத்தில் தீவிபத்துக்குள்ளானது ஞாபகம் வருகிறதா?
இலங்கையில் சீனா ஏகப்பட்ட முதலீடுகளை செய்துள்ளது. எவனோ ஒரு பிரான்ஸ் கம்பெனிக்காரன் இலங்கையில் கால் பதிப்பதை சீனா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. செய்த முதலீட்டுக்கு அதிகப்படியான லாபத்தை எதிர்பார்க்கும்தானே?
மத்திய கிழக்கு நாடுகளில் பெட்ரோலிய வளம் உள்ளதையும் வெளிநாட்டு நிறுவனங்களே கண்டறிந்து உறுதிப்படுத்தின. கடலுக்கடியில் இருந்து கச்சா எண்ணெய்யை உறிஞ்சி எடுப்பதற்காக மத்திய கிழக்கு நாடுகளில், ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் கால் பதித்த பின்னரே அங்கு பிரிவினைகள், கலவரங்கள், குண்டுவெடிப்பு, உயிரிழப்புகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், போர்கள் நடைபெற்றன. இதைக் காரணம் காட்டி பெட்ரோலிய வளமுள்ள அரசுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக வல்லரசுகள் களத்தில் இறங்கி கல்லா கட்டும்.
இலங்கை கடற்பரப்பில் இருந்து எரிவாயு எடுக்கும் பணியினை 2023 க்குள் ஆரம்பிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஒருபக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் பெட்ரோலிய வளம் குறைந்து வருகிறது. இன்னொருபுறம் இலங்கையில் அபரிமிதமான இயற்கை எரிவாயு கண்டறியப்படுகிறது. மத்திய கிழக்கில் ஐ.எஸ். ஆதிக்கம் மட்டுப்படுகிறது. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்கிறது. குறிப்பாக கிறிஸ்தவ பண்டிகையின்போது தேவாலயங்களில் தாக்குதல் நடந்துள்ளது. 35 வெளிநாட்டினர்களும் பலியாகியுள்ளனர்.
ஆக இலங்கையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. உலகத்தில் எங்கெல்லாம் பாதுகாப்பு குறைபாடு உள்ளதோ அங்கெல்லாம் வல்லரசுகள் கால் பதிக்கும் அமைதியை நிலைநாட்டும் போர்வையில் தேவையான காரியத்தை சாதிக்கும்.
இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்து சீனாவும் உதவத் தயாராக இருப்பதாக செய்திகள் வரும்.
எப்படியோ இலங்கையில் குட்டையைக் குழப்பி குழப்பத்தை உண்டாக்கிவிட்டாயிற்று. இந்த குழப்பத்தில் மீன் பிடிக்கப்போவது அமெரிக்காவா? சீனாவா? சீனாவின் ஆதரவுடன் ரஷ்யாவா? என்பது போகப் போக தெரியும்.
குண்டுவெடிப்பில் பலியான அப்பாவிகளின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
-இரா.சுந்தரபாண்டியன்.


ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தொழுகையை காண வரும் கூட்டம்

நியூஸிலாந்தில் இந்த வாரம் நடந்த வெள்ளிக் கிழமை தொழுகையை காண வந்த மாற்று மத சகோதரர்கள். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தொழுகையை காண வரும் கூட்டம் அதிகரித்தவண்ணமே உள்ளது. இதில் கவரப்பட்டு பலர் அந்த இடத்திலேயே இஸ்லாத்தையும் ஏற்றுக் கொள்கின்றனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே!


Saturday, April 20, 2019

இஸ்லாத்தில் அப்படி என்ன இருக்கிறது ?

ஒரு இந்து சகோதரர் இஸ்லாத்தை ஏற்று அவரின் குடும்பத்தில் உள்ள 15 பேரையும் இஸ்லாத்தை ஏற்க வைத்துள்ளார்



அந்த இஸ்லாத்தில் அப்படி என்ன இருக்கிறது என்பதை விளக்குகிறார் இந்த சகோதரர்.


RSS ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கே எதிரானவர்கள்....

ராமநாதபுரம் மாவட்டம் ,வேதாளை ஊராட்சிகுட்பட்ட , குஞ்சார் வலசையில் #திமுக கூட்டணி கட்சியான முஸ்லீம் லீக்கின் #ஏணி சின்னத்திற்கு ஒட்டு போட்ட #இந்துக்களை ஹிந்துக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லும் #பாஜகRss காவித்தீவிரவாதிகள் "ஏணிக்கு ஓட்டுப்போடுவியா" என்று கையிலையும் , கழுத்திலும் கண்டபடி வெட்டியுள்ளனர்...
நண்பர்களே.... #பாஜக முஸ்லிம்களுக்கோ, கிருத்துவர்களுக்கோ மட்டும் எதிரானவர்கள் இல்லை.  ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கே எதிரானவர்கள்....




Monday, April 15, 2019

பார்வையற்ற சகோதரரின் குர்ஆன் கிராத்

இஸ்லாத்தை ஏற்ற பார்வையற்ற சகோதரரின் குர்ஆன் கிராத் (பகுதி - 2)ᴴᴰ┇Zakkariya B.A English (Marisamy)


பெரும்பான்மை இந்து மக்கள் அனுபவிக்கும் 69% இடஒதுக்கீடை

திராவிட இயக்கம் இந்துக்களுக்கு எதிரானது!
- அர்ஜுன் சம்பத்
பெரும்பான்மை இந்து மக்கள் அனுபவிக்கும் 69% இடஒதுக்கீடை ஆர்.எஸ்.எஸ்ஸா பெற்றுத் தந்தது? - ஆளூர் ஷா நவாஸ்


தற்கொலை விகிதம் இஸ்லாமியர்களிடத்தில் மிகவும் குறைவாக உள்ளது

ஜெர்மனியில் உள்ள மான்ஹிம் பல்கலைக் கழகம் ஒரு ஆய்வினை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.  அந்த ஆய்வு சொல்வதாவது....

'இஸ்லாமியர்கள் தங்களின் வாழ்வு முறையில் மிகவும் திருப்தியுடன் உள்ளனர். ஓரிறைக் கொள்கையில் மிகவும் பிடிப்புடன் உள்ளனர். எது தங்களின் வாழ்வில் நடந்தாலும் அது இறைவனின் நாட்டமே என்று இலகுவாக கடந்து செல்கின்றனர். கிறித்தவர்கள், யூதர்கள், பவுத்தர்கள், இந்துக்கள், நாத்திகர்களை விட தற்கொலை விகிதம் இஸ்லாமியர்களிடத்தில் மிகவும் குறைவாக உள்ளது. அதற்கான காரணம் அவர்களின் அசைக்க முடியாத இறை நம்பிக்கை' என்கிறது அந்த ஆய்வு...


Sunday, April 14, 2019

மாட்டின் பெயரை சொல்லி மற்றொரு உயிர் பலி!

மாட்டின் பெயரை சொல்லி மற்றொரு உயிர் பலி!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது கும்லா மாவட்டம். இம்மாவட்டத்தில் உள்ள ஜூம்ரோ கிராமத்தில் வசித்து வருபவர் அத்ரானீஸ் குஜூர். இவர் வளர்த்து வந்த எருது ஒன்று சுகவீனத்தால் இறந்து விட்டது. இறந்த மாட்டின் உடலை கிராமத்தினர் சமைப்பதற்காக அறுத்துள்ளனர்.
அருகில் உள்ள ஜெய்ராகி கிராமத்திலிருந்து ஒரு சில பசு குண்டர்கள் வந்து இறந்தது பசு என்று வாதிட்டுள்ளனர். அதன் பிறகு மாட்டை அறுத்துக் கொண்டிருந்தவர்களை சராமாரியாக அடிக்க ஆரம்பித்துள்ளனர். நான்கு பேரை பிடித்து காவல் நிலையத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். அடி தாங்காமல் ஒருவர் இறந்துள்ளார். மற்ற மூன்று பேரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர் கிருத்தவர். மிருகத்துக்காக இன்னும் இந்த நாட்டில் எத்தனை உயிர்களை காவு வாங்குவதாக முடிவெடுத்துள்ளனர் இந்துத்வாக்கள்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
14-04-2019

தலித் இளைஞரை மனித மலத்தை திங்க வைத்த சாதி திமிர்!

தலித் இளைஞரை மனித மலத்தை திங்க வைத்த சாதி திமிர்!
புனேயில் உள்ள முல்சி தாலுகாவில் உள்ளது ஜம்பே கிராமம். இங்குள்ள செங்கல் சூளையில் சுனில் அனில் பாவ்லே (வயது 22) வேலை செய்து வந்துள்ளார். இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவரது முதலாளி சந்திப் பவார் (வயது 42). மராட்டா சாதியை சேர்ந்தவர். சென்ற மார்ச் 13 அன்று சந்தீப் பவாரும், அவரது மனைவியும், அவரது மைத்துனரும் சேர்ந்து சுனில் என்ற தலித் இளைஞனை மனித மலத்தை சாப்பிட வைத்துள்ளனர். முடியாது என்று மறுத்தவரை வலுக்கட்டாயமாக சாப்பிட சொல்லிதுன்புறுத்தியுள்ளனர். இந்த வன் கொடுமை சம்பந்தமாக மூன்று பேர் மீதும் வழக்கு தொடர்ந்தார் அந்த தலித் இளைஞர். இதனால் காவல் துறை அந்த மூவரையும் கைது செய்தது. மறுநாளே மூவருக்கும் ஜாமீன் வழங்கி வெளியில் விட்டுள்ளது காவல் துறை.
சமூக ஆர்வலர் டாக்டர் பாபா ஆதவ் 'மோடி வர்தா கூட்டத்தில் 'இந்து தீவிரவாதம்' என்பதே இல்லை என்றார். நான் அவரிடம் கேட்கிறேன் இது இந்து தீவிரவாதம் இல்லையா? இதற்கு என்ன பெயர் என்று மோடி சொல்வாரா?' என்று கேட்கிறார்.
மோடியிடம் பதில் இருக்கிறதா?
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
14-04-2019
நமது தமிழ்நாட்டிலும் திண்ணியத்தில் தலித்களை மலம் தின்ன வைத்து அழகு பார்த்தது மேல் சாதி திமிர். மாநிலங்களும் மொழிகளும் மாறினாலும் தலித்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஒன்றாகவே உள்ளன.


Saturday, April 13, 2019

நாய்கள் வரிசையாக வந்தன....

வட மாநிலத்தில் மோடியின் சாதனைகளை சொல்லிக் கொண்டிருக்கும் போது அதனை கேட்க மக்கள் யாரும் வரவில்லை. ஆனால் நாய்கள் வரிசையாக வந்தன....


நவாஸ் கனி - ராமநாதபுர நாடாளுமன்ற வேட்பாளர்!

கஜா புயலின் போது கனடா வாழ் தமிழர்கள் (TMAC) மற்றும் இந்தியர்கள் (CCIM) சார்ந்த இயக்கங்களின் நிதி உதவியால், கிட்டத்தட்ட 2000 குடும்பக்களுக்கு 6000 கிலோ மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை மதுரையில் திரட்டினோம்.
அடுத்த கட்டம், அவற்றை கவனமாக தஞ்சை மாவட்டத்திற்கு கொண்டு சேர்ப்பது.
இரண்டு சிறிய வேன்கள் வாடகைக்கு எடுப்பதென முடிவு செய்தோம்.
அதற்கு என் தந்தை S.T.Courierஐ அணுகலாம் என்றும், அவர்கள் இலவசமாகவே செய்து தருவார்கள் எனக்கூறினார்கள். 

ஏற்கனவே சென்னை/கடலூர் வெள்ளத்தின் போதும், கேரள வெள்ளத்தின் போதும் S.T.Courier, News7உடன் இணைந்து தமிழகம் முழுதிலும் இருந்து தன்னார்வலர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்டவரிடம் இலவசமாக கொண்டுசேர்த்தனர் என்ற ஞாபகம் இருந்தது.
அதுமட்டுமில்லாமல், பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வருடந்தோறும் அவர்கள் கல்லூரிக் கல்விக்கான செலவினை ஏற்று வருகின்றனர். என் தந்தை சிபாரிசினில் மட்டும் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர்.
இவை எனக்குத்தெரிந்தும் என் மனதில் ஒரு தயக்கம். நான் பொறுப்பாளராக இருப்பதால் இன்னொரு நிறுவனத்திடம் வேலையை ஒப்படைப்பதால் எதுவும் தவறிளைத்து விடுவேனோ என்ற பயம்.
அதையும் மீறி, better sense prevailed. இதில் சேமிக்கும் பணத்தைக்கொண்டு இன்னும் சில குடும்பங்களுக்கு உதவலாமெனும் அடிப்படையில் ஒத்துக்கொண்டேன்.
என் தந்தை அந்த நிறுவனத்தின் Managing Director திரு.நவாஸ் கனி அவர்களைத் தொடர்பு கொண்டார்.

அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டது மட்டுமல்லாமல், அன்று மாலையே சென்னை, கேரளாவைப்போல் டெல்டா மாவட்டங்களுக்கும் தமிழகம் முழுவதிலுமிருந்து தன்னார்வலர்கள் அனுப்பும் நிவாரணப் பொருட்களை தன் நிறுவனம் மூலம் இலவசமாக எடுத்துச்செல்வதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அதன் பின் எங்களால் மதுரை கிளை அலுவலர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த டைப் வேன் என்பது தொடங்கி எந்த நேரத்தில் load செய்ய வேண்டும், எப்பொழுது தஞ்சை நோக்கிசெல்ல வேண்டும் என்பதில் மாற்றங்கள் இருந்துகொண்டே இருந்தன. தங்களது முதலாளியைப் போலவே மேனேஜர் தொடங்கி ட்ரைவர் வரை புன்முருவலுடன் அனைத்தையும் செய்து கொடுத்தனர்.
அடுத்தநாள் மாலை பொருட்கள் அனைத்தையும் பாதிக்கப்பட்டவர்களிடம் சேர்க்கும் வரை உறுதுணையாக இருந்தனர்.
அடுத்த ஒரு வாரத்தில் மற்றுமொரு 1000 கிலோ அரிசி அனுப்பவேண்டியிருந்தது.
அம்முறை தயக்கமின்றி அவர்களிடம் உதவியைப் பெற்றுக்கொண்டேன்.
மேற்கூறிய நிகழ்வு என் சொந்த அனுபவத்தில் நான் அறிந்தது. ஆனால் அவர் செய்த நற்காரியங்கள் இதுபோல் எண்ணற்றவை.
இந்த நிகழ்ச்சியை இப்போது நினைவு கூர்வதற்கு ஒரு காரணம் உள்ளது. திரு. கா.நவாஸ் கனி அவர்கள் தி.மு.க / காங்கிரஸ் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக இராமநாதபுரத்திற்கான நாடாளமன்ற உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எல்லா அரசியல்வாதியும் நல்லவராய் சமூக அக்கரையுடையவராய் இருப்பதில்லை. ஆனால் மக்கள் தேவை அறிந்த, நிரூபிக்கப்பட்ட சமூக சேவகர் நிச்சயம் ஒரு நல்ல அரசியல் தலைவராக இருப்பார் என நம்புகிறேன். இராமநாதபுர மாவட்டத்திலேயே பிறந்து வளர்ந்ததால், அவருடைய அர்ப்பணிப்பு அவருடைய பதவி காலத்தில் முழுமையானதாகவே இருக்கும். முகவைக்கு இது ஒரு முத்தான வாய்ப்பு!
எனது ஊர் மக்கள் திரு நவாஸ் கனி அவர்களை வெற்றி அடையச்செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இறைவன் நாடட்டும்.
இவற்றை எல்லாம் அறிந்தும் வெறும் முகநூல் போராளியாக மட்டும் இருக்க இயலவில்லை. அவருக்கு ஆதரவாக களப்பணி ஆற்ற ஆவலுடனுள்ளேன். என்னுடன் கைகோர்க்க விரும்பும் நண்பர்கள், தன்னார்வலர்கள், என்னை facebook messenger மூலமாகவும் , whatsapp'லும் (நம்பர் கீழே) தொடர்பு கொள்ளலாம்.
உண்மையுள்ள,
Shafi.
Ph. +91 6374669689.
Mohammed Shafi பதிவு


பாகிஸ்தான் விமானத்தை ஒரே அடியில் வீழ்த்திய போது.......

அம்பில் வில்லை வைத்து குறி பார்த்து பாகிஸ்தான் விமானத்தை ஒரே அடியில் வீழ்த்திய போது.......

இந்திய பிரதமராக மோடிதான் வர வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏன் விருப்பப்படுகிறார் என்பது இப்போது புரிந்திருக்குமே...... :-)

எனக்கு வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.....


இறைவனின் படைப்பின் விநோதங்கள்.....

பெண் இனத்துக்கு மதிப்பு கொடுத்து அவை பாதையை கடக்கும் வரை காவல் இருக்கும் ஆண் இனம். இது எல்லா உயிரினத்துக்கும் பொருந்தும். இறைவனின் படைப்பின் விநோதங்கள்.....
-------------------------------------------
சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.
-குர்ஆன் 4:32
சிலரை மற்றும் சிலரை விட இறைவன் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
-குர்ஆன் 4:34
குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும்,உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப் பங்கீடு கட்டாயக் கடமை.
-குர்ஆன் (4:7)
ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
-குர்ஆன் 4:124


வோட்டு எந்திரத்தை போட்டு உடைக்கும் மக்கள்.....

'என்னடா இது...கொடுமை... எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையையே காட்டுகிறது' - கோபத்தில் வோட்டு எந்திரத்தை போட்டு உடைக்கும் மக்கள்.....


இஸ்லாத்தை உண்மை படுத்தும் கருந்துளை (Black Hole) ஆய்வு முடிவுகள்

இஸ்லாத்தை உண்மை படுத்தும் கருந்துளை (Black Hole) ஆய்வு முடிவுகள்.
- உரை: அப்துர் ராஸிக் B.Com (பொதுச் செயலாளர் CTJ)
தலைமையக ஜும்மா
12.04.2019


மருத்துவர் தனது ஆதங்கங்களை கொட்டித் தீர்க்கிறார்.....

"சுட்டுக் கொல்லும் பாஜக!
SV சேகர் கும்பலை வெளியே தள்ள வேணாமா?"

- மருத்துவர் தனது ஆதங்கங்களை கொட்டித் தீர்க்கிறார்.....


"பா.ஜ.க வுக்கு எதிராக பேசினால் கொலை செய்வதாக மிரட்டுகிறார்கள்...!" --நடிகை ரோஹிணி.


Friday, April 12, 2019

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் நாட்டை பிளவு படுத்தி விடும் - துஷார் காந்தி

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் நாட்டை பிளவு படுத்தி விடும் - துஷார் காந்தி
காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாவின் 150 வது பிறந்த தினம் போர்பந்தரில் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் பேசிய காந்தியின் பேரன் துஷார் காந்தி 'ஆர்எஸஎஸின் ஒரு சில செயல்பாடுகள் நன்றாக இருந்தாலும், அதன் கொள்கைகளில் நான் முற்றிலும் மாறுபடுகிறேன். ஆர்எஸ்எஸின் சித்தாந்தமானது நமது நாட்டை பிளவு படுத்தி விடும். மஹாத்மா காந்தியை கொலை செய்தது கோட்சே. ஆனால் இன்று வரை கோட்சேயை ஒரு தியாகியாக பார்க்கிறது ஆர்எஸ்எஸ். காந்தியை கொலை செய்தது கோட்சே என்பது நிரூபணமாகி தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ள, கோட்சே யை இயக்கியது ஆர்எஸ்எஸ் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனது புத்தகத்தில் இதனை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்'
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
13-04-2019


நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்? - தினேஷ் கௌஷிக்.


Wednesday, April 10, 2019

சீக்கியர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள வேறுபாடு!

சீக்கியர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள வேறுபாடு!
உபியில் யோகி ஆதித்யநாத்தின் எடுபிடிகளான காவல் துறை சீக்கியர்களின் வாகனத்தை நிறுத்தி அவர்கள் வைத்துள்ள தாடியையும் கிண்டலடித்துள்ளனர். கோபமடைந்த சீக்கியர் வாகனத்தின் மீதேறி வாளை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். உடன் கோழைகள் பின் வாங்கி விட்டனர்.
குட்ட குட்ட குனிபவனும் மடையன்: குனிய குனிய குட்டுபவனும் மடையன்.
இஸ்லாமியர் காவிகளுக்கு எதிராக இவ்வாறு துணிந்து முன் வந்தால் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விடுவர். சீக்கியர்களிடமிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மோடி திரும்பவும் ஆட்சிக்கு வந்து இது போன்ற அவலங்கள் தொடருமானால் திருப்பி அடிப்பதை தவிர வேறு வழியில்லை. வருங்காலங்களில் இதுதான் நடக்கப் போகிறது.
இவ்வாறான அசம்பாவிதங்கள் நடந்து நமது நாடும் நாசமாவதிலிருந்து இறைவன் காப்பானாக!


பாமகவில் இருந்து விலகல்....


ஓட்டு போடுங்க சாமியோவ்.... :-)


Tuesday, April 09, 2019

ஆழமாக சிந்தித்தாக வேண்டிய அவசியம் இப்போது!

இந்த இன்டர்வியூவை கேட்டபின்பு... நாம்,
சற்று ஆழமாக சிந்தித்தாக வேண்டிய அவசியம் இப்போது!
*****
புல்வாமாவின் 40 இராணுவத்தினர்களின் உயிரிழப்பு நிகழ்வு... தேசமக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே பாஜக அரசின் ஒரு திட்டமிட்ட ஏமாற்று வேலைதான்!
*புல்வாமாவில் இறந்த இராணுவத்தினர்களில் ஒரு குஜராத்தியும் இல்லை!
அது மட்டுமல்ல, *எல்லைப்போர்களில் நடந்த வேறெந்த அசம்பாவித நிகழ்வுகளிலுமே இறந்த
இராணுவத்தினரில் *ஒரு குஜராத்தியர்கூட பலியானதே இல்லை!
*திட்டமிட்டே *ஏனையோர் மட்டுமே பலிக்கு குறிவைக்கப்படுகின்றனர்!
*புல்வாமா தாக்குதல் வெடிகுண்டு நடந்த
அன்றே... *நரேந்திர மோடி 2019 ல் மீண்டும் பிரதமாராவதற்கான *370 EVM கள் தயார் செய்யப்பட்டுவிட்டன!
*2014 ல் பாஜகவுக்கு விழுந்த அந்த 30% ஓட்டுக்கள் இப்போது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் *நரேந்திர மோடி பிரதமராவது மட்டும் உறுதி!
*போதிய அவகாசமே இல்லாததால்...
EVM பற்றி நீதிமன்றங்களும் இனி தலையிடாது!
*ஸ்லிப் கவுண்டிங் இயந்திரம் கண்துடைப்புக்காகவே வைக்கப்படும்!
*அந்த இயந்திரத்தின் கணக்கீட்டை *நீதிமன்றம் ஆய்வும் செய்யாது! *அப்பீல்களையும் ஏற்காது!
*நரேந்திர மோடி பிரதமராக தொடர்வது மட்டும் உறுதி!


Monday, April 08, 2019

அஸ்ஸாமில் மாட்டுக் கறி விவகாரத்தில் முதியவர் தாக்குதல்!

அஸ்ஸாமில் மாட்டுக் கறி விவகாரத்தில் முதியவர் தாக்குதல்!

சென்ற ஞாயிறு 7 ந்தேதி அஸ்ஸாம் பிஸ்வந்த் சராலி மார்க்கெட்டுக்கு சவுக்கத் அலி என்ற வியாபாரி வந்துள்ளார். 68 வயதான அந்த முதியவரிடம் மாட்டுக் கறி இருந்ததாக கூறி இந்துத்வா கும்பல் தாக்குதலை தொடங்கியுள்ளது. பன்றிக் கறியை கொண்டு வந்து அவர் வாயில் திணித்துள்ளது. அரசு அதிகாரங்கள் கை கட்டி வேடிக்கை பார்க்கின்றன. இந்த மனநலம் பாதித்த நாய்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இறைவா! இந்த அநியாயாக்காரர்களை நாசமாக்குவாயாக! இந்த அநியாயக்கார இந்துத்வாவை கட்டுப்படுத்தாத அரசியல் தலைவர்களை இந்த தேர்தலில் இழிவு படுத்துவாயாக!


Saturday, April 06, 2019

அமீத்ஷாவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகிறார் பீட்டர் அல்போன்ஸ்


பள்ளிவாசலாக மாற்றப்பட்ட திரையரங்கம்

பள்ளிவாசலாக மாற்றப்பட்ட திரையரங்கம்
****************************************************
மும்பையிலிருந்து அந்த இனிய செய்தி வந்துள்ளது...!
மும்பை நாக்படாவில் 1921-இலிருந்து இயங்கி வந்த அலெக்ஸான்ட்ரா என்கிற திரையரங்கம் இப்போது பள்ளிவாசலாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
எந்தத் திரையரங்கத்தில் ஆபாசத் திரைப்படங்களும் அசிங்கமான காட்சிகளும் வெளியிடப்பட்டு வந்ததோ இன்று அதே இடத்தில் மார்க்கப் போதனை வகுப்புகள் நடந்து வருகின்றன.
இந்தத் திரையரங்கத்தில் ஒரு காலத்தில் ஆபாசமான ஆங்கிலப் படங்களே வெளியிடப்பட்டு வந்தன. திரையரங்க வளாகத்தில் ஆபாசமான ஓவியங்கள் கண்களை உறுத்துகின்ற விதத்தில் பதாகைகளாய்த் தொங்கவிடப்பட்டிருக்கும். இதனால் இந்தப் பாதை வழியாகச் செல்லாமல் பள்ளிக்கூட பேருந்துகள் சுற்றுப்பாதையில் போக வேண்டிய அவலமும் நிகழ்ந்திருக்கின்றது.
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் வணிகம் செய்து வருகின்ற ரஃபீக் தூத்வாலா என்பவர் 2012-இல் 15000 சதுர அடிகளைக் கொண்ட இந்தத் திரையரங்க வளாகத்தை பல கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கினார். வாங்கிய நாளே இதனை ‘தீனியாத்’ என்கிற தொண்டு நிறுவனத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டார்.
செக்குலர் பள்ளிகளில் படிக்கின்ற பள்ளி மாணவர்களுக்கு ‘தீனியாத்’ என்கிற பெயரில் பாட நூல்களைத் தயாரிக்கின்ற பணியில் தீனியாத் ஈடுபட்டிருக்கின்றது. மூன்று ஆண்டுகளாய் இந்த நிறுவனம் இந்த வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இப்போது வளாகத்தின் முன் பகுதியில் திருத்தங்கள் செய்து ஐவேளை தொழுகைகள் நிறைவேற்றப்படுகின்றன.
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ஆரவாரங்கள் வந்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து இப்போது பாங்கொலி கேட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த மாற்றம் மகிழ்ச்சியானது. தித்திப்பானது.
தமிழகத்திலும் இது போன்ற மாற்றங்கள் வராதா என மனம் ஏங்குகின்றதா?
இறைவன் நாடினால் வரும்.


Friday, April 05, 2019

துப்புறவு தொழிலாளர்கள் 132 பேர் இறப்பு!

துப்புறவு தொழிலாளர்கள் 132 பேர் இறப்பு!
1993 லிருந்து கழிவு நீர் சுத்தகரிப்பில் இறந்தவர்கள் நாடு முழுவதும் 705 பேர். இதில் குஜராத்தில் மட்டும் 132 பேர் இறந்துள்ளனர். வெளி நாடுகளில் நவீன சாதனங்கள் வந்தும் இன்றும் மனிதர்களை பயன்படுத்தும் அவலம் நம் நாட்டில் தொடர்கிறது.
மக்கள் வரிப் பணத்தில் 3000 கோடிக்கு படேல் சிலையை வைத்த மோடிக்கு சாமான்ய மக்களின் இறப்பை தடுக்க நவீன சாதனங்களை வாங்க மனமில்லை. இதில் 'இந்தியா ஒளிர்கிளது' என்ற வெற்று கோஷம் வேறு.


முன்னால் கஞ்சா வியாபாரியின் விஷமத்தனம்!

முன்னால் கஞ்சா வியாபாரியின் விஷமத்தனம்!
லண்டன் பொருளாதார மாணவர்களுடன் கலந்துரையாடிய ஜக்கி வாசுதேவ் இஸ்லாமிய மாணவர்களை தாலிபான்களோடு ஒப்பிட்டு பேசியுள்ளார். கஞ்சா வியாபாரம் செய்து சமூக விரோதியாக வலம் வந்த ஜக்கி இன்று இஸ்லாமியர்களை வம்பிக்கிழுக்கிறார். இயற்கை வளங்களான காடுகளை அழித்து ஆசிரமம் அமைத்து அப்பாவி இந்து இளைஞர்களை மூளை சலவை செய்து அவர்களையும் போதைக்கு அடிமையாக்கும் வேலையை செய்து வருபவர்தான் ஜக்கி. காசிக்கு சென்றால் இந்து இளைஞர்கள் பக்தி என்ற பெயரில் எவ்வாறு போதைக்கு அடிமையாக்கப்படுகின்றனர் என்ற உண்மை தெரிய வரும். தற்போது அந்த கலாசாரம் தமிழகத்திலும் வர முயற்சிக்கிறார் ஜக்கி. இதனை முளையிலேயே கிள்ளி எறிந்து ஜக்கி வாசுதேவ் என்ற கஞ்சா வியாபாரியின் உண்மை முகத்தை இந்து மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.


Thursday, April 04, 2019

கேரளா வயநாட்டில் மக்கள் வெள்ளத்தில் ராகுல் காந்தி.... பிரியங்கா காந்தி..... 04-04-2019


தமிழர்கள் விழித்துக்கொள்ள வில்லையெனில்....

சிந்திக்க வேண்டிய விசயம்... தமிழர்கள் விழித்துக்கொள்ள வில்லையெனில் வட இந்திய மார்வாடி கூட்டத்திடம் பிச்சையெடுப்பது உறுதி


ராகுல் காந்தி வயநாடு வேட்பு மனு தாக்கல்

ராகுல் காந்தி வயநாட்டுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று வந்த போது மக்கள் அளித்த வரவேற்பு....


ஆரியர்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள் அல்ல -ஆய்வு சொல்கிறது.

ஆரியர்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள் அல்ல -ஆய்வு சொல்கிறது.
ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி முடிவுகளின் அறிக்கை வெளியிடப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதிச்சநல்லூர் அறிக்கையை சமர்ப்பிக்கச் சொல்லி உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் சிலவற்றை கார்பன்காமராஜ் பகுப்பாய்வுக்கு அனுப்பியிருந்தது மத்திய அரசு. அதன் ஆய்வு முடிவைத் தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது மத்திய அரசு.
அதில், ''கார்பன் பகுப்பாய்வு செய்யப்பட்ட இரண்டு பொருள்களின் காலம், 'கி.மு 905 மற்றும் கி.மு 971' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆய்வு முடிவின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் யார் அகழாய்வு செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது நீதிமன்றம். ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு அல்லது மாநில அரசில் யார் ஆய்வு நடத்தவிருக்கிறார்கள் என்பதைத் தொல்லியல் துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். பல வருடங்களாக கிடப்பில் கிடந்த ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியின் முழு அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டும் என்பதே தொல்லியல் ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. நீதிமன்றம் இதற்கு விரைவில் ஆவண செய்ய வேண்டும்.
'ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்' என்று நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Thanks
Vikatan
04-04-2019
ஹெச்.ராஜா, இல கணேசன் போன்றவர்கள் இனியும் தங்களின் பூர்வீகத்தை பூசி மொழுக முடியாது. இந்தியாவின் பூர்வீக மொழி தமிழ் என்பதும் சமஸ்கிரதம் வந்தேறி மொழி என்பதும் மற்ற இந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த கிளை மொழிகள் என்பதும் இதிலிருந்து நிரூபணமாகிறது.
ஹெச்.ராஜா இனி யாரையாவது 'ஆண்டி இந்தியன்' என்றால் 'நீ இந்தியனே அல்ல' என்று உரத்து கூறலாம்.




 

Wednesday, April 03, 2019

பிஜேபி தலைவர் வீட்டில் ஆயுதக் குவியல்!



பிஜேபி தலைவர் வீட்டில் ஆயுதக் குவியல்!
மத்திய பிரதேசம் கார்கோன் மாவட்டத்தில் பிஜேபியின் முக்கிய பொருப்பில் உள்ளவன் சஞ்சய் யாதவ். இவனது தாய் பஸந்தி முனிசபல் தேர்தலில் தலைவராக தேர்வாகியுள்ளார். எதிர்த்து நின்ற அனைவரையும் வற்புறுத்தி மிரட்டி வாபஸ் வாங்க வைத்துள்ளான்.
இரண்டு நாள் முன்பு போலீஸ் ரெய்டில் இவனது வீட்டில் கணக்கிலடங்காத துப்பாக்கிகள், வெடி பொருட்கள் சிக்கியுள்ளன. தேர்தல் நேரத்தில் இது எதற்காக இவன் வீட்டுக்கு வந்தது என்று போலீஸ் விசாரித்து வருகிறது.
சஞ்சய் யாதவ், சாஹர் சவுத்ரி, தீபக், ஹிர்திக் இந்த நால்வரையும் போலீஸ் கைது செய்து வழக்கு போட்டுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க அமீத்ஷாவும் மோடியும் என்ன திட்டங்கள் வைத்துள்ளனரோ... பயமாக உள்ளது.
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
01-04-2019


இதற்கெல்லாம் அசாத்திய தைரியம் வேணும்

மோடியின் பக்தாள் ஒருவனின் இடத்திற்கு சென்று அவனிடம் கருத்தை தெரிவித்த ஃப்யூஸ் மனூஸ்.

இதற்கெல்லாம் அசாத்திய தைரியம் வேணும்