Followers

Wednesday, May 31, 2017

அன்புள்ள ஆசான் கோபாலய்யர் அவர்களுக்கு.....



அன்புள்ள ஆசான் கோபாலய்யர் அவர்களுக்கு.........

உங்களிடம் ஆறு வருடம் தனி போதனா பயிற்சி (ட்யூஷன்) எடுத்த மாணவன் நஜீர் அஹமது எழுதிக் கொள்வது. பல மாணவர்களுக்கு பாடம் எடுத்ததால் நீங்கள் என்னை மறந்திருக்கலாம். ஆனால் உங்களை இன்று வரை நான் மறக்கவில்லை. 

நானும் எனது குடும்பத்தவரும் நலம்.  உங்களது நண்பரும் எனது தாத்தாவுமான இப்றாஹிம் பாய் அவர்கள் பல வருடங்கள் முன்பே இறப்பெய்து விட்டார்கள்.

இதுபோல் தங்கள் குடும்பத்தில் தாங்களும் தங்கள் மனைவி சரஸ்வதி அம்மாளும் உங்களின் மூன்று குழந்தைகளான ஷாலினி அக்கா, கோமதி அக்கா மற்றும் லட்சுமி அனைவரும் நலமா? 45 வருடங்களுக்கு பிறகு கடிதம் எழுதுவதால் உங்கள் குழந்தைகள் அனைவரும் பேரன் பேத்தி எடுத்திருப்பார்கள். அனைவரையும் விசாரித்ததாக சொல்லுங்கள்.

நான் ஐந்து வயதாக இருக்கும் போது மிகவும் வால் பையனாக இருந்தேன். உங்கள் நண்பரும் எனது தாத்தாவுமான இப்றாஹிம் பாய் நான் நன்றாக படிக்க வேண்டும் என்ற நோக்கில் உங்களிடம் தனி போதனா பயிற்சிக்காக (ட்யூஷன்) சேர்த்து விட்டார். முதலில் எனக்கு இது சிரமமாக இருந்தது. அதுவும் கல்வி பயிற்சியானது உங்கள் வீட்டிலேயே நடக்கும். இஸ்லாமிய சூழலில் வளர்ந்த நான் ஒரு பிராமணிய குடும்பத்தில் மூன்று மணி நேரம் கழிப்பதென்பது ஆரம்பத்தில் சற்று சிரமமாகவே இருந்தது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை தினமும் பள்ளி முடித்து ஐந்து மணிக்கு உங்கள் வீட்டுக்கு வரும் நான் எட்டு மணி வரை உங்கள் வீட்டிலேயே இருப்பேன். பிறகு தாத்தா வந்து என்னை எங்களின் சொந்த ஊருக்கு அழைத்து செல்வார். இந்த நடைமுறையானது ஆறு வருடங்கள் தொடர்ச்சியாக இருந்தது.

எனது வயதையொத்த உங்கள் கடைசி மகள் லட்சுமி எனக்கு நண்பியானாள். அவளுக்கும் எனக்கும் சேர்த்தே பாடங்கள் எடுப்பீர்கள். சிலேட்டு பலகையில் குண்டு குண்டாக அழகிய எழுத்தில் தமிழையும் ஆங்கிலத்தையும் கணக்கையும் பாடங்களாக எடுப்பீர்கள். வயதின் முதிர்ச்சியால் நீங்கள் சற்று ஓய்வெடுக்கப் போகும் போது நானும் லட்சுமியும் விளையாட சென்று விடுவோம். எந்த தடையும் நீங்களும் சொல்வதில்லை.

வருடா வருடம் நவராத்திரியும் வரும். வீட்டில் கொலு வைப்பதற்காக ஓரமாக கிடந்த மரப் பலகைள் கூடத்துக்கு வரும். அதனை தூசி தட்டி பொம்மைகளை வரிசையாக அடுக்கி வைப்பதை நானும் லட்சுமியும் சேர்ந்தே செய்வோம். கொலுவுக்காக வைக்கப்படும் பொம்மைகளை துணி கொண்டு துடைத்து அழகுபடுத்தி வைப்போம். கொலுவிற்கு வரும் விருந்தினர்கள் 'பையன் துறு துறு.. ன்னு இருக்கானே.... உன் பேர் என்னடா அம்பி'  என்று சில மடிசார் மாமிகள் கேட்டு வைப்பார்கள். 'என்னோட பேர் நஜீர் அஹமது மாமி' என்று சொன்னவுடன் சில மாமிகளின் முகம் அஷ்ட கோணலாக மாறும். :-)  பிறகு சகஜ நிலைக்கு வந்து விடுவர். அவ்வாறு சகஜ நிலைக்கு வராதவர்களை நீங்கள் சகஜ நிலைக்கு கொண்டு வருவதை பார்த்துள்ளேன்.  கொலு நேரங்களில் பரிமாறப்படும் சுண்டல் மற்றும் பலகாரங்கள் எனக்கும் ஒரு தட்டில் வரும். பிரியாணி, கோழி குருமா, புலவ், தேங்காய்பால் சோறு என்றே சாப்பிட்டு பழக்கப்பட்ட எனக்கு முறுக்கு, அதிரசம், சுண்டல் என்பது ஒரு புது வகை சுவையை தந்தது. எந்த பலகாரம் பண்ணினாலும் 'நஜீருக்கும் கொடுத்தியா?' என்று உங்கள் மனைவியிடம் கேட்டு வாங்கிக் கொடுப்பீர்கள். எனது தாத்தா உங்களுக்கு ஆசிரிய பணிக்காக கொடுத்த சம்பளத்தில் பாதிக்கு மேல் உங்கள் வீட்டில் பலகாரங்களாக சாப்பிட்டே சரி கட்டி விட்டேன். :-)

ஒரு முறை கொலுவில் இருந்த சாமி பொம்மை அழகாக இருக்கவே உங்களின் அனுமதியோடு எனது வீட்டுக்கு எடுத்துச் சென்றேன். புத்தகப் பையில் சாமி பொம்மையை பார்த்த எனது தாயார் 'இதை எல்லாம் நாம வைத்துக் கொள்ளக் கூடாது. திரும்ப அவர்களிடமே கொடுத்து விடு' என்று சொன்னார். நடந்த சம்பவங்களை நான் உங்களிடம் சொன்னவுடன் சிரித்துக் கொண்டே அந்த பொம்மையை வாங்கி திரும்பவும் கொலுவிலேயே வைத்து விட்டீர்கள். 

ஆறு வருடங்கள் என்னை உங்கள் வீட்டில் உங்களின் மகனாகவே பாவித்து வளர்த்தீர்கள். நானும் எனது வீடாகவே பாவித்து வளர்ந்தேன். லட்சுமியோடு சகோதர வாஞ்சையோடு பழகிய அந்த ஆறு வருடங்களை இன்றும் நான் மறக்கவில்லை.

அந்த ஞாபகங்களுடனேயே பாபாநாசம் மஹாலட்சுமி தியேட்டருக்கு எதிரேயுள்ள வீட்டுக்கு சில வருடங்கள் முன்பு உங்களை சந்திக்க வந்தேன். குருதட்சணையாக சில ஆயிரங்களையும் கூடவே எடுத்து வந்தேன். ஆனால் உங்கள் பூர்வீக வீடு பூட்டிக் கிடந்தது. இரண்டு முறை சென்றும் உங்களை காணவில்லை. பக்கத்தில் இருந்த கடைக்காரர்களிடம் கேட்டேன். அவர்களும் சரியான பதில் அளிக்கவில்லை. இனி வரும் காலங்களிலாவது உங்களையோ உங்களின் சந்ததிகளையோ சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

என்றும் உங்கள் அன்பு மாணவன்

ஜே.நஜீர் அஹமது.

















மிருகங்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல்!



மிருகங்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல்!

மைசூர்: மாட்டிறைச்சி தடை உத்தரவால் வன உயிரின பூங்கா விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்றும், விவசாயப்பணிகளுக்கு வாங்கக்கூட கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வன உயிரின பூங்காக்களில் மிருகக் காட்சி சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, மைசூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ள காட்டுநாய்கள், புலி, சிங்கம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சுமார் 113 டன் மாட்டிறைச்சி தேவைப்படுகிறது. இந்த மாட்டிறைச்சி குறிப்பிட்ட இடைவௌிகளில் புலி, சிங்கம் விலங்குகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு விதித்துள்ள தடை காரணமாக மிருக காட்சி சாலையில் உள்ள இந்த விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தாலும் அவற்றை இந்த விலங்குகள் ஏற்பதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தகவல் உதவி
தின மலர்

31-05-2017

ரத்த தான முகாம் பற்றி சவுதி கெஜட்டில் வந்த செய்தி

ரத்த தான முகாம் பற்றி சவுதி கெஜட்டில் வந்த செய்தி
-----------------------------------------------------------------
RIYADH — Tamil Nadu Thowheed Jamath (TNTJ) Riyadh Chapter organized its 59th Mega Blood Donation Camp for Ramadan Umrah pilgrims in coordination with King Saud Medical City (KSMC).
Two hundred and eighty-one people Total participated and donated 245 units of blood.
KSMC Deputy Head of Blood bank Khaled I. Zawbaee provided full support to TNTJ volunteers. The Regional Laboratory and Blood Bank Director Dr. Kamel Al Dosari thanked TNTJ organizers for organizing such noble work continuously.
TNTJ Blood Donation campaign coordinator Raisul Kamal said, “So far his organization has conducted 58 camps and TNTJ continues to be No. 1 organization for the last 10 years and the Hospital authorities has awarded more than 15 awards to TNTJ praising the noble contribution”
Further, he said by the grace of Almighty Allah, Riyadh TNTJ continues to be No. 1 on the voluntary blood donation campaign in the Gulf Country.
தகவல் உதவி
சவுதி கெஜட்
30-05-2017

உம்ரா வரும் பல லட்சக்கணக்கான மக்களின் தேவையை கருத்தில் கொண்டு சென்ற சில தினங்கள் முன்பு ரியாத் டிஎன்டிஜே சார்பாக 59 வது இரத்ததான முகாம் நடைபெற்றது.  281 சகோதரர்கள் தங்களின் ரத்தத்தை தானமாக கொடுத்தனர். மொத்தம் 245 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. ரத்த வங்கியின் இயக்குனர் காமில் அல் தோஸ்ரி டிஎன்டிஜேயின் இந்த மனித நேயப் பணியை வெகுவாக பாராட்டினார்.


எல்லா புகழும் இறைவனுக்கே!


இதெல்லாம் சட்டம் போட்ட மோடிக்கு எங்கே தெரியப் போகுது?

இதெல்லாம் சட்டம் போட்ட மோடிக்கு எங்கே தெரியப் போகுது?

கீழே உள்ள ஆங்கில நாளிதழில் வந்துள்ள முதற்பக்க செய்தி:

வேலூரிலுள்ள பொய்கை மாட்டுச் சந்தையில் வேலூர்,திருவண்ணாமலை
மாவட்டங்களின் கால்நடைகள் விற்பனை நடைபெறுகிறது.

மத்திய அரசின் மாடு விற்பனைத் தடைச் சட்டத்தால் 80% விற்பனை நடைபெறவில்லை. ஒரு மாட்டுக்கு 25000/ரூபாய் வரை விலை வீழ்ச்சி, வாங்க ஆளில்லை.

கதிரவன் என்ற விவசாயி ஆறு உருப்படிகளை கொண்டு வந்து விற்க முடியாமல் திருப்பி கொண்டு சென்றுள்ளார். வண்டிவாடகை ரூ 2500/ நட்டம் வறட்சி பாதித்து தீனி இல்லாத கொடுமையில் விற்கவும் முடியாமல் விவசாயிகள் சொல்லமுடியாத வேதனை அடைந்துள்ளனர்.
இன்டியன் எக்ஸபிரஸ்(31-05-2017)

இந்துத்வாவின் கொள்கைகள் அனைத்தும் இந்து மக்களுக்கே எதிரானது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.




Tuesday, May 30, 2017

பசு இந்துக்களுக்குப் புனிதமான விலங்கா?

பசு இந்துக்களுக்குப் புனிதமான விலங்கா?

இந்துக்கள் மாட்டிறைச்சி உண்டதில்லையா?

நீங்கள் சிறந்த இந்துவாக
இருக்க விரும்பினால்,
பின்வருவனவற்றைக் கவனமாகப் படியுங்கள்...

டாக்டர் அம்பேத்கரின்,

Did the Hindus never eat beef?’ நூலிலிருந்து சில பகுதிகள்...

 சுருக்கமான மொழிபெயர்ப்பில்.

"இந்து வேதங்களின்படி, மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது!" - விவேகானந்தர்.  (The Complete Works of Swami Vivekanand, vol.3, p. 536).

"பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் காளை மாட்டையும் அறுக்க வேண்டும்" - ரிக் வேதம் (10/85/13)

"இந்திரனுக்குப் பிடித்த இறைச்சி பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகியவனவாம்". - ரிக் வேதம் (6/17/1)

"பரோபகரம் இடம் சரீரம்" என்பது இந்து தர்ம சாஸ்திரத்தின் கூற்றாகும். அதாவது இவ் உடல் இறைவனால் கொடுக்கப்பட்டதே, பிறருக்கு உதவவே!  அதன் அடிப்படையில்...
இறைச்சிக்குரிய மிருகங்களை மனிதர்கள் உண்ணுவது பாவமில்லை. உண்ணுபவர்களையும் உணவுகளையும் பிரம்மனே படைத்தான். - மனு ஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 30)

அறுத்துப் பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன், 21 ஜென்மங்களுக்குப் பலியிடும் விலங்காக உருவெடுப்பான். - மனு ஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 35)

ஒரு பிராமணர், வழிபாட்டின்போது தனக்குக் கொடுக்கப்பட்ட இறைச்சியை உண்ண மறுத்தால் நரகம் செல்வார்.
-வசிஷ்ட முனிவர் (11/34)

விருந்தினர் வந்தால் பசு மாட்டின் இறைச்சி அளிப்போம். - அபஸ்டாம் கிரிசூத்திரம் (1/3/10)

மிக மிருதுவாகவும் சுவையாகவும் இருப்பதால் பசு மாட்டிறைச்சியை உண்கிறேன். - இராமாயணத்தின் மகரிசி யாக்யவல்க்கியர் (சீதையின் தந்தையின் குரு) சத்பத் பிராமணம் (3/1/2/21)

[சுருக்கமான மொழிபெயர்ப்பு டாக்டர் அம்பேத்கரின்,
‘Did the Hindus never eat beef?’ in The Untouchables: Who Were They and Why They Became Untouchables?
in Dr. Babasaheb Ambedkar Writings and Speeches, vol. 7, (Government of Maharashtra, Bombay, 1990, first edition 1948) pp. 323-328.]

படியுங்கள்...


உணருங்கள்...!

இது ஹிட்லரைப் பற்றிய பதிவு.......

வாட்ஸ்ஆப்பில் வைரலாகிற ஜஸ்டிஸ் வினோத் குமார் அவர்கள் 'ஹிட்லரை' பற்றி பதிந்த பதிவு....!!!

1.     ஹிட்லர் திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் ஒரு காதலி இருந்தாள்.

2. நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் எதிரியாக இருந்ததாக நினைத்தார்

3. ஹிட்லரின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஹிட்லரை அவதார புருஷராக நம்பினார்கள், ஹிட்லர் பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

4. ஹிட்லர் தனது சிறு வயதில் ஓவியங்களை வரைந்து விற்று சம்பாதித்தார்..

5. ஹிட்லர் நாளிதழ், ஊடகங்கள் அனைத்தும் தன்னை பற்றிய செய்திகளை பதியுமாறு செய்தார்..ஊடகங்களும் அவ்வாறே ஹிட்லர் புகழ் பாடி செய்தி வெளியிட்டன...

6. உழைப்பாளர் சங்கங்கள் அனைத்தையும் ஒடுக்கினார்...

7. ஹிட்லர் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்தினார்,  நயவஞ்சகர்கள் என்று அழைத்தார்..

8. ஹிட்லர், சாதாரண அடிப்படை தொண்டராக பாசிச நாஜி படையில் சேர்ந்தார்... தனக்கு எதிரானவர்களுக்கு குழிகளை பறித்து பாசிச நாஜி படைக்கு தலைமை பதவியை பிடித்தார்...

9. நாட்டின் அனைத்து பிரச்சினையும் ஒரு நொடியில், மிக துரிதமாக தீர்வு காண தன்னால் முடியும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தார்...

10. ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த ஹிட்லரால் நாட்டின் சாதாரண ஒரு பிரச்சினைக்கு கூட தீர்வு காண முடியவில்லை... ஆனால் ஜெர்மனியை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றார்..

11. ''நாட்டிற்கு நல்ல காலம் வர போகிறது, நாடு வல்லரசு ஆக போகிறது'' என்பது தான் ஹிட்லரின் தேர்தல் ஸ்லோகமாக இருந்தது...

12. ஹிட்லரின் நாஜி கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக பார்லிமென்றிக்கு ஹிட்லர் சென்ற போது அங்கு உணர்ச்சி மிகுதியால் அழுதார்...

13. பொய்கள் மற்றும் வெறுப்புகளை மட்டுமே மக்கள் மத்தியில் பரப்பி ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்...

14. விலையுயர்ந்த ஆடைகள் அணிவதை ஹிட்லர் அதிகமாக விரும்பினார்...

15. ஹிட்லர் பொய்களை உண்மைகள் போலவும், உண்மைகளை பொய்கள் போலவும் பேச கலையை அறிந்தவர்...

16. ஹிட்லர் தன்னை முதன்மை படுத்தி ''நான், எனது'' என்று மட்டும் தான் அனைத்து தருணத்திலும் பேசினார்...

17. ஹிட்லர் ரேடியோவில் பேசுவதை மக்களுக்கு ஒலிப்பரப்புவதை அதிகம் விரும்பினார்...

18. ஹிட்லருக்கு ரகசிய காதலி இருந்தால் அவளை உளவு பார்க்க தனிகுழு வைத்து இருந்தார்...

19. "நண்பர்களே, தோழர்களே'' என்ற வார்த்தையை தான் தனது பிரச்சாரங்களில் அதிகம் உபயோகம் செய்தார்...

20. ஹிட்லர் தன்னை புகைப்படம் எடுப்பதை அதிகம் விரும்பினார்...

குறிப்பு: இந்தப் பதிவு முழுக்க முழுக்க ஹிட்லர் பற்றிய வரலாற்றுப் பதிவு மட்டுமே. வேறு யாராவது உங்கள் நினைவுக்கு வந்தால் வரலாறு பொறுப்பு அல்ல....!! https://www.facebook.com/images/emoji.php/v9/fd0/1/16/1f602.png😂https://www.facebook.com/images/emoji.php/v9/fd0/1/16/1f602.png😂https://www.facebook.com/images/emoji.php/v9/fd0/1/16/1f602.png😂
- பகிரி


Monday, May 29, 2017

புனித பசு!

நேற்று இரவு ஆங்கிலத்தில் சிறுகதை ஒன்றை வாசித்தேன் காலத்தின் தேவை கருதி தமிழில் அதனை பதிவிடுகின்றேன்!

புனித பசு!

ஓரு நாள், சிறுவன் ஒருவன் குப்பை கிடங்கில் இருந்து ஓரு வாழைப்பழ தோலை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.அப்போது அங்கே வந்த பசு ஓன்று அந்த பழத்தோலை அவனிடம் இருந்து பிடுங்கியது. 

உடனே அந்த சிறுவன் பசுவை அங்கிருந்து விரட்டினான்.

 
இதனால் பசு சப்தமிட்டுக்கொண்டே தெருவில் ஓடியது.

அப்போது திடீரென அங்கு வந்த சந்நியாசிகள்( இப்போது பசு பாதுகாவலர்கள்)சிறுவனை நோக்கி புனித பசுவை தாக்கியது நீதானே என்று கேள்வி எழுப்பினர்?

"நான் பசுவை தாக்கவில்லை, நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த பழத்தோலை அது பிடுங்கியது, எனவே நான் சப்தமிட்டு அதனை விரட்டினேன்" என்று பதிலளித்தான் அந்த சிறுவன்.

நீ எந்த மதத்தை சேர்ந்தவன் என்று வினவினர் அந்த புனிதர்கள்!

மதம் என்றால் என்ன ?என்று கேட்டான் அந்த சிறுவன்.

நீ ஓரு இந்துவா அல்லது முஸ்லிமா அல்லது கிறிஸ்தவனா?

நீ கோவிலுக்கு செல்வாயா

பள்ளிவாசல் அல்லது தேவாலயத்திற்கு செல்வாயா என்று வினவினர் அந்த சாதுக்கள்!

நான் எங்கும் செல்வதில்லை என்றான் அந்த சிறுவன்.

அப்படியெனில் நீ கடவுள் நம்பிக்கையற்றவனா? என்றனர் சந்நியாசிகள்.

எனக்கு உடுத்துவதற்கு உடைகள் ஒன்றும் இல்லை. என்னுடைய ட்ரவுசரின்(அரைக்கால் சட்டை) பின்பக்கங்கள் கிழிந்து மிகவும் மோசமாக இருக்கின்றது என்றான் அந்த சிறுவன்.

அந்த சந்நியாசிகள் (சாதுக்கள் அல்லது பசு பாதுகாவலர்கள் ) தங்களுக்குள் சிறிது விவாதித்து விட்டு இப்படி சொன்னார்கள்;

"
கண்டிப்பாக நீ ஒரு முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும். நீதான் பசுவை தாக்கியிருக்கின்றாய் என்றனர்".

நீங்கள் தான் பசுவின் உரிமையாளர்களா என்று கேட்டான் அந்த சிறுவன்.

உடனே கோபம் கொண்ட சந்நியாசிகள் அந்த சிறுவனின் கழுத்தை நெரித்துக் ( இப்போது கல்லால் அடித்து )கொலை செய்து பிணத்தை குப்பைத் தொட்டியில் வீசினர்.

பின்பு அந்த சந்நியாசிகள் ஒருமித்த குரலில் சொன்னார்கள்;
ஓம் நமச்சிவாய!உன்னுடைய இந்த முடிவு மகிமை படுத்தப்படட்டும்!

(இந்தக் கதை 1960களில் புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் அவர்களால் எழுதப்பட்டது.நாயர் சமூகத்தை சேர்ந்த அவர் 1999ல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு 2009ல் இறப்பெய்தினார்.
Love
Haha
Wow
Sad
Angry
Bottom of Form


உலகின் மிக பெரிய இஃப்தார் நிகழ்வு

உலகின் மிக பெரிய இஃப்தார் நிகழ்வு

அல்-ஹரம் மதீனா இதற்க்கு சாட்சிம் அளிக்கிறது. தினமும் ஏறத்தாள  மூன்று இலட்சம் நோன்பாளிகள் அமர வசதி செய்யப்படுகிறது.

இஃப்தாரில்  நுகரப்படும் 1,30,000 லிட்டர் ஜம் ஜம் தண்ணீர், 50,000 லிட்டர் அரபிக் காபி, 3.00,000 ரொட்டி சுருள்களும், 50,000 லிட்டர் தயிர், 50,000 லிட்டர் ஜூஸ் மற்றும் 40 டன் பேரிட்சை பழத்திற்கான ஆகுமான ஒரு நாளைய செலவு ஏறத்தாள இந்திய மதிப்பிற்கு ₹ 1,70,00,000. (1 மில்லியன் சவூதி ரியால்) இதன் பொறுப்புகளை பல கொடையாளர்கள் ஏற்றுக்- கொள்கின்றார்கள்.

இந்த நிகழ்வு 15 நிமிடங்களில் நடந்தேறியவுடன் மஸ்ஜித் (அல் ஹரம்) முழுவதும் சுவடுகள் தெரியாத வண்ணம் சுத்தத்துடன் அதனுடைய பழைய ஒளிக்கு மாறிவிடும்.

-சுபஹானல்லா

-எல்லா புகழும் அல்லாவுக்கே!




Sunday, May 28, 2017

குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே!"

குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே!"

//"ஒன்றது பேரூர் வழி அதற்குள்
என்றதுபோல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே!"

அரேபிய மாா்க்கம் தான் உண்மை என வாதிடுபவனை குரைக்கும் நாய் என்கிறாா் திருமூலா்...... சுவனப்பிாியன் நாயா ?// Dr Anbu Raj

நான் நாயா? அல்லது திரு மூலர் திருமந்திரத்தின்படி யாரை நாய் என்கிறார் என்பதை சற்று விரிவாக பார்போம்.

திருமந்திரம் கூறும் ஆறு சமயங்கள் சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் என்று சிலரும்

பாசுபதம், மாவிரதம், வைரவம்,சாத்தம். காணாபதீயம், கௌமாரம் என்று சிலரும்

சைவம், வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்` என்று சிலரும்

வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்,சௌமியம் என்று சிலரும் கூறுகின்றனர்.

இந்த சமயங்களுக்குள் அடிதடி நிறையவே நடந்துள்ளது. அதிலும் சைவமும் வைணவமும் மிக அதிகமாக பூசலை ஏற்படுத்தி பல கொலைகளையும் நடத்தியுள்ளது. கமலஹாசனும் தனது 'தசாவதாரத்தில்' சிறிதாக இந்த நிகழ்வுகளை தொட்டிருப்பார். திருமூலர் வாழ்ந்த காலத்தில் இந்து ஆறு சமயங்களே மக்களின் பயன் பாட்டில் இருந்துள்ளன. எனவே தான் அதனை தனது பாட்டில் எடுத்தாள்கிறார் திருமூலர்.

பாடலின் முதல் இரண்டு வரிகளில் வீடுபேறு எனும் முக்தி நிலையை ஒரு பெருநகரமாகவும், ஆறு சமயங்களையும் அந்த நகரத்தைச் சென்றடையும் ஆறு வீதிகளாகவும் உருவகப் படுத்துகிறார் திருமூலர். பெரும்பாலான கிராமங்களுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கும். கிராமத்தின் உள்ளே செல்லும் அந்த வீதியில்தான் வெளியே வரவும் முடியும். ஆனால் பெரு நகரங்களைப் பொறுத்தவரையில் பல வீதிகள் பல இடங்களிலிருந்து அங்கே வந்து சேரும் நகரத்தின் அளவும் முக்கியத்துவமும் அதிகமாக அதிகமாக, அதில் வந்து சேரும் வீதிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

ஊருக்குச் செல்ல பல வழிகள் இருப்பது போல் கடவுளை அடைய பல சமயங்கள் நம்மிடையே உள்ளன. அதில் இரு பெரும் சமயங்களான சைவமும் வைணமும் நீ பெரிதா நான் பெரிதா என்று போட்டியிட்டு உயிர் பலி வரை சென்றதை தனது வாழ்நாளில் பார்க்கிறார் திரு மூலர். இந்த கொடுமையை கடவுளின் பெயரால் நிகழ்த்திய மாபாதகர்கள் அசையாத மலையைப் பார்த்து குரைக்கும் நாயைப் போன்றவர்கள் என்கிறார் திரு மூலர். குரைத்து குரைத்தே ஒரு பெரிய மலையை வீழ்த்திவிட முடியும் என்று நினைக்கும் நாய்களுக்கு ஒப்பானவர்கள் இவர்கள் என்பதே இந்த நான்காவது வரியின் பொருளாகும்.

பல வழிகள் இருந்தாலும் சென்றடையும் இலக்கு ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் சைவ வைணவ கடவுள் கொள்கையாகட்டும், மனு ஸ்ருமிதியாகட்டும், நான்கு வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களாகட்டும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களாகட்டும் ஒவ்வொன்றும் தனித் தனி ஊருக்கு வழி காட்டுகின்றன. இதை நீங்களும் மறுக்க முடியாது.

இரு சமயங்களோடுதான் விட்டு தொலைத்தீர்களா? அந்த சமயத்திலும் சாதிகளை உண்டாக்கி அந்த சாதிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கடவுளையும் உண்டாக்கி 'நீ சூத்திரன்: நீ ஷத்திரியன், நீ பஞ்சமன், நான் பிராமணன்' என்று மக்களை பிளவு படுத்தி கடவுளை வணங்கக் கூட தலித்களை அனுமதிக்காத மாபாவிகளைப் பார்த்துதான் 'மலையைப் பார்த்து குரைக்கும் நாய்கள்' என்கிறார் திரு மூலர். கடவுளின் பெயரால் சமணத்தையும் பவுத்தத்தையும் இருந்த சுவடே தெரியாமல் தமிழகத்தில் அழித்து எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றார்களே அந்த மாபாவிகளைப் பார்த்துதான் 'மலையைப் பார்த்துக் குரைக்கும் நாய்கள்' என்கிறார் திருமூலர்.

திரு மூலர் வாழ்ந்த காலத்தில் அராபியாவும் பல தெய்வ வழிபாட்டில்தான் இருந்தது. 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் நபிகள் நாயகம் இஸ்லாத்தை அந்த மக்களுக்கு போதிக்கிறார். நபிகள் நாயகம் காலத்துக்கு முன்பே திரு மூலர் திரு மந்திரத்தை சொல்லி விட்டு சென்றுள்ளார். எனவே எந்த வகையில் பார்த்தாலும் திருமூலர் இஸ்லாமியர்களை சொல்லவில்லை. மனிதனை வர்ணாசிரமத்தால் நான்கு வர்ணங்களாக பிரித்து அதனை இன்று வரை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மனிதர்களை நோக்கித்தான் 'நாய்கள்' என்கிறார் திருமூலர். அன்பு ராஜ் என்று புனை பெயரை வைத்திருக்கும் நீங்கள் இந்துத்வாவை தூக்கிப் பிடிப்பதால் கண்டிப்பாக வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்குவீர்கள். இவ்வாறு கடவுளை பல கூறுகளாக பிரித்து மனிதர்களின் தொழிலை வைத்து ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி அதற்கு ஆதரவும் நல்கிக் கொண்டிருக்கும் அன்பு ராஜ் போன்றவர்களைப் பார்த்தே 'குரைக்கும் நாய்கள்' என்கிறார் திரு மூலர்.

இனி இஸ்லாமிய கருத்தை எவ்வாறு திரு மூலர் தனது பாடலில் கொண்டு வருகிறார் என்பதையும் பார்போம்.

"
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே" (திருமந்திரம் - 2104)