Followers

Wednesday, February 28, 2018

உலகம் அழிவதைப் பற்றி அறிவியல் உலகம் என்ன சொல்கிறது?


உலகம் அழிவதைப் பற்றி அறிவியல் உலகம் என்ன சொல்கிறது?

சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதை நாம் அறிவோம். அவ்வாறு சுற்றும் போது அவை ஆண்டி க்ளாக் வைஸில் சுற்றுகின்றன. அதாவது கடிகார முள் எத்திசையில் செல்கிறதோ அதற்கு எதிர் திசையில் சுழல்கின்றன. வெள்ளி(வீனஸ்), நெப்டியூன் என்ற இந்த இரண்டு கிரகங்கள் மட்டும் வழக்கத்துக்கு மாற்றமாக க்ளாக் வைஸில் சுற்றுகின்றன. இது எப்படி ஏற்பட்டது? அறிவியல் ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

வீனஸூம், நெப்டியூனும் பல ஆண்டுகளுக்கு முன்பு மற்ற கிரகங்களைப் போல ஆண்டி க்ளாக் வைஸில் சுற்றியதாகவும் அந்த கிரகங்களில் காந்த மண்டலங்களில் நடந்த பல மாற்றங்களினால் க்ளாக் வைஸில் தற்போது சுற்றுவதாக கண்டு பிடித்திருக்கின்றனர். இதே போன்ற மாற்றங்கள் மற்ற கோள்களுகளுக்கும் நடக்கும். அதில் பூமிக்கு நடக்கப் போவது மிக சமீபத்தில் என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள். அவ்வாறு பூமி எதிர் திசையில் சுழல ஆரம்பித்தால் என்னவெல்லாம் நடக்கும்?

நாற்பது மைல் வேகத்தில் செல்லக் கூடிய ஒரு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டால் அதில் பயணம் செய்தவர்கள் தூக்கி எறியப்படுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். திடீரென நிறுத்தப்படுவது மட்டுமின்றி உடனேயே பின்புறமாக அதே வேகத்தில் இந்தப் பேருந்து செல்வதாக கற்பனை செய்து பாருங்கள்! இது இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

அப்படியானால் ஆயிரம் மைல் வேகத்தில் சுழலும் இந்தப் பூமி திடீரென நிறுத்தப்பட்டு எதிர்த் திசையில் அதே வேகத்தில் சுழன்றால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். கட்டிடங்கள் மலைகள் மனிதர்கள், விலங்குகள் என்று அனைத்து பொருட்களும் தூக்கி வீசப்படும். இது இன்றைய அறிவியல் கண்டுபிடித்துள்ள மகத்தான உண்மை. இதனைக் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதையும் பார்போம்.


சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன் கியாமத் நாள் ஏற்படாது. அதைக் கண்டவுடன் மக்கள் இறைவனை நம்புவார்கள். ஆயினும் அதற்கு முன்பே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அந்த நம்பிக்கைபயனளிக்காது என்று நபிகள் நாயகம்  அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
நூல்: புகாரி 4635, 4636, 6506, 7121

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியையும்,அவன் படைத்துள்ள ஏனைய பொருட்களையும், அவர்களின் காலக்கெடு அருகில் இருக்கக் கூடும் என்பதையும் அவர்கள் கவனிக்கவில்லையா?இதன் பிறகு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்பப் போகிறார்கள்?
(திருக்குர்ஆன் 7:185)

நபிகள் நாயகம்  அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும்,நடு விரலையும் இணைத்துக் காட்டிநானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம்'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி),
நூல்: புகாரி 4936, 5301, 6503