Followers

Wednesday, April 26, 2006

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்!

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்!

இஸ்லாத்துக்கும், இந்து மதத்துக்கும் உள்ள வேற்றுமைகள் நமக்கு முன்பே தெரியும். இரணடு மார்க்கத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன என்பதை சில ஆதாரங்களோடு பார்ப்போம். இஸ்லாமியனான உனக்கு இந்து மத ஆராய்ச்சி ஏன்? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. நான் பிறந்த மண்ணில் தோன்றிய மதம். நான்கைந்து தலைமுறைக்கு முன்பு என் மூதாதையர் பின் பற்றிய மதம். இதைப் பற்றி நான் ஆராயாமல் வேறு யார்தான் ஆராய முடியும்?

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'

-குர்ஆன் 14 :4

'இது முந்தய வேதங்களிலும் இப்றாகிம் மூஸாவுக்கு அருளிய வேதங்களிலும் உள்ளது.'

-குர்ஆன் 87 : 18,19

மேற் கண்ட வசனங்களின் மூலம் உலகம் முழுவதற்கும் கொடுக்கப் பட்ட வேதங்களின் உரிமையாளன் ஒருவனே என்பது விளங்குகிறது. அந்த உரிமையாளனை இறைவன், கடவுள்,அல்லாஹ், கர்த்தர் என்று பல்வேறு பெயர்களில் அழைத்து வருகிறோம்.

'இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.'

-குர்ஆன் 2 :75

'யூதர்களில் சிலர் வேதங்களின் வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர்'

-குர்ஆன் 4 : 46

யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களுக்கு அருளப்பட்ட வேதங்களை மாற்றி விட்டனர் என்று சொல்லும் குர்ஆன் மாற்றப் பட்ட அந்த வேதங்களை பின் பற்றக் கூடாது என்று நமக்கு கட்டளையிடுகிறது.நம் நாட்டில் இருக்கும் பிராமணர்களும் இஸ்ரவேல் சமூகத்திலிருந்து தோன்றிய ஒரு பிரிவினர்கள் தான். எகிப்து,ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நாட்டு பண்டைய மக்களின் பழக்க வழக்கங்கள், தோற்றம் போன்றவை நம் நாட்டு பிராமணர்களை ஒத்திருப்பதன் மூலம் இதை நாம் அறிந்து கொள்ளலாம். எனவே தான் பிராமணர்களுக்கு எப்போதுமே யூதர்களின் மீது ஒரு பிரியம் இருக்கும். திரு டோண்டு அவர்களின் பதிவுகளிலிருந்தும் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஹிந்து மதம் என்ற பெயர் எப்படி வந்தது?

சிந்து நதியை ஒட்டி வாழ்ந்த மக்கள் பின் பற்றிய மதம் ஆகையால் சிந்துக்கள் என்றாகி நாளடைவில் மறுவி இந்துக்கள் என்றாகி விட்டது. இதைத்தான் மொகலாயர்களின் குறிப்புகளிலிருந்தும், நேருவின் குறிப்பிலிருந்தும், மற்ற ஆதாரங்களின் மூலமும் அறிகிறோம். ஹிந்து என்ற பெயர் தாங்கிய இந்த மதம் ஆரம்ப காலங்களில் ஒரு இறைவனைத் தான் வழிபடச் சொல்கிறது. நாளடைவில் ஊர் பெரியவர்கள்,மகான்கள்,அரசர்கள் அனைவரையும் கடவுளின் அவதாரமாக்கி, இன்று நாம் பார்க்கும் பல ஆயிரம் தெய்வங்களை உருவாக்கி விட்டார்கள். இதற்கு ஒரு சில ஆதாரங்களை இந்து மத கிரந்தங்களிலிருந்தே எடுத்தாய்வோம்.

உபனிஷத் இந்து மதத்தின் முக்கிய வேத நூல்

'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்'
'அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை'
(The principal Upanishad by S. Radha krishnan page 745)
(And in sacred books of the east volume 15> The Upanishadpart 2, page 263)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
'நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி'
'அவனைப் போன்று வேறு யாரும் இல்லை'
(The principal Upanishad by S.Radha Krishnan page 736-737)
(And sacred books of the east volume 15, the Upanishad part 2, page 253)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'

யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)

யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

பகவத் கீதை அதிகாரம் 10 :3
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'

மேலே எடுத்துக் காட்டிய இந்து மத வேதங்களின் வசனங்கள் இறை வேதமாகிய குர்ஆனோடு எந்த அளவு ஒத்துப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

குர்ஆனின் சிறிய அத்தியாயமாகிய 'குல ஹீ அல்லாஹீ அகத்' என்று வரும் வசனங்களை மனனம் செய்யாத முஸ்லிம்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு பிரபல்யமான ஓரிறைக் கொள்கையையும் உளத் தூய்மையையும் பேசும் இந்த அத்தியாயத்தின் மொழி பெயர்ப்பைப் பாருங்கள்:

'இறைவன் ஒருவன் என்று முகம்மதே கூறுவீராக!'
'இறைவன் தேவையற்றவன்'
'யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் பிறக்கவுமில்லை'
'அவனுக்கு நிகராக யாருமில்லை'


குர்ஆன் - 112 :1,2,3,4

'இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனையோ சந்திரனையோ வணங்காதீர்கள். வணங்குவதாக இருந்தால் அவற்றைப் படைத்த இறைவனையே வணங்குங்கள்'

-குர்ஆன் 41 ;37

'குறிப்பிட்டுச் சொல்லப் படும் ஒரு பொருளாகக் கூட இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா? மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.'

-குர்ஆன் 76 : 1,2

'அவனைக் கண்கள் பார்க்காது.அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்: நன்கறிந்தவன்.'

-குர்ஆன் 6 : 103

மேற் கூறிய வசனங்கள் எந்த அளவு முந்தய வசனங்களோடு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். அனைத்தையும் சொன்னது ஒரே இறைவன் தான் என்பது நமக்கு விளங்குகிறது. ஒரே ஒரு வித்தியாசம் மற்ற வேதங்களில் மனிதக் கருத்துகளும் இடைச் செருகலாக சேர்க்கப் பட்டு விட்டன. குர்ஆன் அத்தகைய இடைச் செருகல் இல்லாமல் பாதுகாக்கப் பட்டுள்ளது.

நேரம் கிடைக்கும் போது மற்ற ஆதாரங்களையும் அலசுவோம். இந்து மத வேதங்களில் வசன எண்கள் அல்லது பொருள் ஏதும் தவறாக இருந்து அதனைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,

சுவனப் பிரியன்.

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்!

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்!

இஸ்லாத்துக்கும், இந்து மதத்துக்கும் உள்ள வேற்றுமைகள் நமக்கு முன்பே தெரியும். இரணடு மார்க்கத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன என்பதை சில ஆதாரங்களோடு பார்ப்போம். இஸ்லாமியனான உனக்கு இந்து மத ஆராய்ச்சி ஏன்? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. நான் பிறந்த மண்ணில் தோன்றிய மதம். நான்கைந்து தலைமுறைக்கு முன்பு என் மூதாதையர் பின் பற்றிய மதம். இதைப் பற்றி நான் ஆராயாமல் வேறு யார்தான் ஆராய முடியும்?

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'

-குர்ஆன் 14 :4

'இது முந்தய வேதங்களிலும் இப்றாகிம் மூஸாவுக்கு அருளிய வேதங்களிலும் உள்ளது.'

-குர்ஆன் 87 : 18,19

மேற் கண்ட வசனங்களின் மூலம் உலகம் முழுவதற்கும் கொடுக்கப் பட்ட வேதங்களின் உரிமையாளன் ஒருவனே என்பது விளங்குகிறது. அந்த உரிமையாளனை இறைவன், கடவுள்,அல்லாஹ், கர்த்தர் என்று பல்வேறு பெயர்களில் அழைத்து வருகிறோம்.

'இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.'

-குர்ஆன் 2 :75

'யூதர்களில் சிலர் வேதங்களின் வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர்'

-குர்ஆன் 4 : 46

யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களுக்கு அருளப்பட்ட வேதங்களை மாற்றி விட்டனர் என்று சொல்லும் குர்ஆன் மாற்றப் பட்ட அந்த வேதங்களை பின் பற்றக் கூடாது என்று நமக்கு கட்டளையிடுகிறது.நம் நாட்டில் இருக்கும் பிராமணர்களும் இஸ்ரவேல் சமூகத்திலிருந்து தோன்றிய ஒரு பிரிவினர்கள் தான். எகிப்து,ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நாட்டு பண்டைய மக்களின் பழக்க வழக்கங்கள், தோற்றம் போன்றவை நம் நாட்டு பிராமணர்களை ஒத்திருப்பதன் மூலம் இதை நாம் அறிந்து கொள்ளலாம். எனவே தான் பிராமணர்களுக்கு எப்போதுமே யூதர்களின் மீது ஒரு பிரியம் இருக்கும். திரு டோண்டு அவர்களின் பதிவுகளிலிருந்தும் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஹிந்து மதம் என்ற பெயர் எப்படி வந்தது?

சிந்து நதியை ஒட்டி வாழ்ந்த மக்கள் பின் பற்றிய மதம் ஆகையால் சிந்துக்கள் என்றாகி நாளடைவில் மறுவி இந்துக்கள் என்றாகி விட்டது. இதைத்தான் மொகலாயர்களின் குறிப்புகளிலிருந்தும், நேருவின் குறிப்பிலிருந்தும், மற்ற ஆதாரங்களின் மூலமும் அறிகிறோம். ஹிந்து என்ற பெயர் தாங்கிய இந்த மதம் ஆரம்ப காலங்களில் ஒரு இறைவனைத் தான் வழிபடச் சொல்கிறது. நாளடைவில் ஊர் பெரியவர்கள்,மகான்கள்,அரசர்கள் அனைவரையும் கடவுளின் அவதாரமாக்கி, இன்று நாம் பார்க்கும் பல ஆயிரம் தெய்வங்களை உருவாக்கி விட்டார்கள். இதற்கு ஒரு சில ஆதாரங்களை இந்து மத கிரந்தங்களிலிருந்தே எடுத்தாய்வோம்.

உபனிஷத் இந்து மதத்தின் முக்கிய வேத நூல்

'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்'
'அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை'
(The principal Upanishad by S. Radha krishnan page 745)
(And in sacred books of the east volume 15> The Upanishadpart 2, page 263)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
'நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி'
'அவனைப் போன்று வேறு யாரும் இல்லை'
(The principal Upanishad by S.Radha Krishnan page 736-737)
(And sacred books of the east volume 15, the Upanishad part 2, page 253)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'

யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)

யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

பகவத் கீதை அதிகாரம் 10 :3
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'

மேலே எடுத்துக் காட்டிய இந்து மத வேதங்களின் வசனங்கள் இறை வேதமாகிய குர்ஆனோடு எந்த அளவு ஒத்துப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

குர்ஆனின் சிறிய அத்தியாயமாகிய 'குல ஹீ அல்லாஹீ அகத்' என்று வரும் வசனங்களை மனனம் செய்யாத முஸ்லிம்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு பிரபல்யமான ஓரிறைக் கொள்கையையும் உளத் தூய்மையையும் பேசும் இந்த அத்தியாயத்தின் மொழி பெயர்ப்பைப் பாருங்கள்:

'இறைவன் ஒருவன் என்று முகம்மதே கூறுவீராக!'
'இறைவன் தேவையற்றவன்'
'யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் பிறக்கவுமில்லை'
'அவனுக்கு நிகராக யாருமில்லை'


குர்ஆன் - 112 :1,2,3,4

'இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனையோ சந்திரனையோ வணங்காதீர்கள். வணங்குவதாக இருந்தால் அவற்றைப் படைத்த இறைவனையே வணங்குங்கள்'

-குர்ஆன் 41 ;37

'குறிப்பிட்டுச் சொல்லப் படும் ஒரு பொருளாகக் கூட இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா? மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.'

-குர்ஆன் 76 : 1,2

'அவனைக் கண்கள் பார்க்காது.அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்: நன்கறிந்தவன்.'

-குர்ஆன் 6 : 103

மேற் கூறிய வசனங்கள் எந்த அளவு முந்தய வசனங்களோடு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். அனைத்தையும் சொன்னது ஒரே இறைவன் தான் என்பது நமக்கு விளங்குகிறது. ஒரே ஒரு வித்தியாசம் மற்ற வேதங்களில் மனிதக் கருத்துகளும் இடைச் செருகலாக சேர்க்கப் பட்டு விட்டன. குர்ஆன் அத்தகைய இடைச் செருகல் இல்லாமல் பாதுகாக்கப் பட்டுள்ளது.

நேரம் கிடைக்கும் போது மற்ற ஆதாரங்களையும் அலசுவோம். இந்து மத வேதங்களில் வசன எண்கள் அல்லது பொருள் ஏதும் தவறாக இருந்து அதனைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,

சுவனப் பிரியன்.

பூமி உங்களுக்கு தொட்டில்!

பூமி உங்களுக்கு தொட்டில்!

'அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான்.'

-குர்ஆன் - 20 :53

'பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும நாம் ஆக்கவில்லையா?'

-குர்ஆன் - 78 :6,7

திருக் குர்ஆன் பல இடங்களில் பூமியைத் தொட்டிலாக ஆக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பூமி சூரியனால் ஈர்க்கப் பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்க ராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப் படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.

வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை ஒரு ரங்க ராட்டினம் போல் பூமி சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்குத் தெரிவதும் இல்லை.

குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும் போது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது சுகமாகவும் நித்திரை தரக் கூடியதாகவும் இருக்கும்.

பூமி வேகமாக சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. தொட்டிலாக என்ற சொல் மூலம் இதைத் தான் இறைவன் குறிப்பிடுகின்றான்.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு அமைப்பு இருப்பதை எல்லாம் மனிதனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

----------------------------------------

'மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?'

-குர்ஆன் - 78 : 6,7

இது பற்றி வரும் வேறு வசனங்கள்: 15 :19, 16 :15, 21 :31, 27 :61, 41 :10, 50 :7, 78 :7, 79:32.

பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அதை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று கூறுகிறான்.

ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப் படுவதே முளைகளாகும். இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப் பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன.

வேகமாக பூமி சுழலும் போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருடகளும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது.

இந்த நிலை ஏற்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப் படுவார்கள். கட்டடங்களெல்லாம் நொறுங்கி விடும்.

இதைத் தடுக்க வேண்டுமானபல் கனமான அடுக்குகளையும், கனம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப் பட வேண்டும். அதைத்தான் மலைகள் செய்கின்றன.

ஆங்காங்கே நிறுவப் பட்டுள்ள மலைகள் காரணமாக மேல் அடுக்குகளும் கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் சுழல முடிகிறது.

பூமி முதலில் உருவாகி பிறகு தான் மலைகள் உருவாகின என்றும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு மலைகள் முளைகளாக நாட்டப் பட்டுள்ளன என்ற வசனங்கள் எதிரானவை என்று கருதக் கூடாது.

முதல் இரண்டு நாட்களில் பூமியைப் படைத்ததாகவும், பிறகு இரண்டு நாட்களில் பூமியில் மலைகளை நிறுவி அதிலுள்ள உணவு உற்பத்திக்கான ஏற்பாடுகள் செய்ததாகவும் திருக் குர்ஆன் கூறுகிறது. (பார்க்க திருக் குர்ஆன் 41:10)

இது போன்ற அறிவியல் உண்மைகளை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு எழதப் படிக்கத் தெரியாத முகமது நபியால் தன் சொந்த கற்பனையில் இந்த குர்ஆனை உருவாக்கியிருக்க முடியுமா? என்ற கேள்வி நமக்கு எழுகிறதல்லவா?

நன்றி : திரு பி.ஜெய்னுல்லாபிதீன்

கடல்களின் சங்கமம் -ஓர் ஆய்வு

கடல்களின் சங்கமம் -ஓர் ஆய்வு

'அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும் கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.

குர்ஆன் - 25 : 53

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. அவை ஒன்றையொன்று கடக்காது.

குர்ஆன் - 55 : 19

'(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.'

குர்ஆன் - 27 :62

இரண்டு கடல்கள் சேரக் கூடிய இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே தடுப்பையும் தடையையும் ஏற்படுத்தியிருப்பதாக மேற்ச் சொன்ன வசனங்கள் அமைந்துள்ளன.

அரபிக் கடலையும் செங் கடலையும் பார்க்கும் போது இதை நாம் உணர்ந்து கொள்ளலாம். இரண்டின் வண்ணத்திலும் வித்தியாசம் தெரியும். ஜோர்டான் நாட்டு எல்லையில் அமைந்துள்ள DEAD SEA சாக் கடல் இதற்கு மேலும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த கடலில் உப்பின் அடர்த்தி மிகவும் அதிகம்.இது போல் உலகில் உள்ள பல கடல்களின் நிறம் சுவை அதிகம் மாறுபட்டிருக்கிறது. நம் நாட்டில் முக்கடல் சங்கமம் ஆகும் கன்னியாக் குமரியிலும் இதே போன்ற வேறுபாட்டை நாம் காண முடியும்

இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமம் ஆகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும் அடர்த்தியிலும் உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

'அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றெரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போதுஅதை கூட அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.

குர்ஆன் - 24 : 40

இந்த வசனத்தில் கடலைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது அங்கே அவன் மேல் அலை அடிக்கும் எனவும், அதற்கு மேலேயும் அலை இருக்கும் எனவும் கூறுகிறான்.

கடலின் மேற் பரப்பில் அதுவும் கடற்கரை ஓரங்களில் மாத்திரமே அலை இருக்கும் என்று கருதப்பட்ட காலத்தில் கடலின் அடியில் அலைக்கு மேல் அலை இருக்கும் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை இவ்வசனம் கூறுகிறது. கடலின் ஆழத்தில் கடுமையான அலைகளின் சுழற்சி இருப்பதை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடல் ஆழத்தைப் பற்றிய அறிவு எதுவும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபியால் இதைச் சொந்தமாகக் கூறியிருக்க முடியாது. எனவே இந்த வசனமும், இதற்கு முன்பு சொன்ன வசனங்களும் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பது மேலும் நிரூபணம் ஆகிறது.

பூமியின் எடை குறைந்து வருகிறது!

பூமியின் எடை குறைந்து வருகிறது!

'அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை அறிவோம்'
-குர்ஆன் 50;4

'அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான்'
-குர்ஆன் 71;17

மேற்கண்ட இரண்டு வசனங்களின் மூலம் மனிதர்களால் பூமி குறைகிறது என்ற உண்மை சொல்லப் பட்டிருக்கிறது.இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது.

பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உருவானாலும் அதற்குரிய எடை வெளியிலுருந்து கிடைப்பதில்லை. பூமியுடைய எடை குறைந்து தான் அது மனிதனாக,மிருகங்களாக,மரங்களாக, மற்ற உயிரினங்களாக உற்பத்தியாகின்றன.

இப்படியே முளைக்கின்ற,வளருகின்ற எல்லாப் பொருட்களுமே தங்களின் எடையை பூமியிலிருந்து தான் எடுத்துக் கொள்கின்றன.

எத்தனை கோடி மக்கள் பெருகினாலும் அதனால் பூமியுடைய எடை கூடாது இந்த மக்களோடு சேர்த்து பூமியை எடை போட்டால் ஆரம்பத்தில் படைத்த போது இருந்த எடை தான் இருக்கும்.இதற்கு மாற்றமாக பூமியின் எடை கூடினால் பவியீர்ப்பு விசையின் தாக்கம் குறைந்து மற்ற கோள்களோடு மோதும் அபாயமும் உண்டு. மனிதன் குரங்கு போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் மூலம் மண்தான் என்ற உண்மையும் வெளியாகிறது. பரிணாமத் தத்துவம்(மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தான் -டார்வின்) பொய் என்பதும் இதிலிருந்து விளங்குகிறது.

அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்து தான் தனது எடையை எடுத்துக் கொண்டு வளர்கின்றன என்ற அறிவியல் உண்மையை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே விளக்கியதன் முலம் இது இறைவனின் வேதம்தான் என்பது நிரூபணம் ஆகிறது.

'மனிதர்களுக்கு தங்குமிடமும் ஒப்படைக்கப் படும் இடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்துக்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்'

-குர்ஆன்6:98

இந்த வசனத்தில் கூறப்படும் தங்குமிடம் என்பது இந்த உலகத்தில் வாழுகின்ற பூமியைக் குறிக்கும் என்பதையும் ஒப்படைக்கப் படும் இடம் என்பது மனிதன் மண்ணுக்குள் அடக்கம் செய்யப் படக் கூடிய இடம் என்பதையும் சாதாரணமாக யாரும் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் ஒப்படைக்கப் படும் இடம் என்று தேர்ந்தெடுத்து பயன் படுத்தியிருக்கின்ற வார்த்தை மிகப் பெரிய உண்மையைச் சொல்கிறது.

மனிதன் இந்த உலகில் சின்னஞ் சிறிய அளவில் பிறப்பெடுக்கிறான். அவன் பிறப்பெடுத்த போதுஇருந்த அளவை விட பலப் பல மடங்கு பெரிதாக வளர்ந்து பின்னர் மரணிக்கிறான். அவன் பிறப்பெடுக்கும் போது இருந்த அந்த எடை பல மடங்கு பெரிதாக எப்படி ஆனது என்றால் இந்த மண்ணிலிருந்து சத்துக்களை அவன் பெறுவதால் தான் ஆனது.

மண்ணிலிருந்து உற்பத்தியாகின்ற தானியங்கள்,பருப்புகள்,இன்ன பிற சத்துக்களைப் பெற்று தன்னைப் பெரிதாக்கிக் கொண்டு பூமியின் எடையை மனிதன் குறைத்தான். அய்ம்பது கிலோ எடையுள்ள ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால் இவன் வாழ்வதனால் மண்ணிலிருந்து அய்ம்பது கிலோ குறைந்து விட்டது என்பது பொருள். எங்கிருந்து இந்த அய்ம்பது கிலோ எடையைப் பெற்றிருக்கிறானோ அதனை அங்கே அவன் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்படைக்கப் படும் இடம் என்று சொன்னால் இவன் பூமிக்கு உடமையான ஒரு பொருளாக இருக்கிறான்.ஏனெனில் அங்கிருந்துதான் இவன் எடுக்கப் பட்டிருக்கிறான் என்பது கருத்து.மனிதன் பூமியிலுள்ள பொருளை நேரிடையாக ச் சாப்பிடுவதில்லை. மண் வேறு பொருளாக மாறி அதனை மனிதன் சாப்பிட்டு தன் உடலை வளர்த்துக் கொண்டான் என்ற தத்துவத்தை உள்ளடக்கி ஒப்படைக்கப் படுகின்ற இடம் என்ற சொல்லை இறைவன் மிகப் பொருத்தமாக பயன் படுத்தியிருக்கிறான். இதுவும் ஒரு அறிவியல் உண்மை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

Thanks Mr P. Jainullabdeen.

திருக் குறள் - எனக்குள் எழும் கேள்விகள்!

திருக் குறள் - எனக்குள் எழும் கேள்விகள்!

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்' - குர்ஆன் 14;4

'மனிதர்களாகிய நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். மறுமையே சிறந்ததும் நிலையானதுமாகும். இது முந்தைய வேதங்களிலும், இப்றாகிம்,மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது. - குர்ஆன் 87- 16,17,18

மேற் கண்ட குர்ஆன் வசனத்தின் படி செம் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியிலும் நிச்சயமாக வேதமும், தூதரும் வந்திருக்கலாம். அது திருக் குறளும், திருவள்ளுவரும் ஆக கூட இருக்கலாம். ஆனால் கடைசி வேதமான குர்ஆன் இறங்கிய பிறகு இதற்கு முன் அருளப் பட்ட வேதங்களின் சட்டங்களை பின் பற்ற வேண்டும் என்ற கட்டளை முஸ்லிம்களுக்கு இடப் படவில்லை. அவர்களை கட்டுப் படுத்தக் கூடிய வேதம் குர்ஆன் ஒன்றுதான். இனி மேலே திருக் குறளைப் பற்றிப் பார்ப்போம்.

நன்றி மறப்பது நன்றன்று - நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் - ஆறாதே
நாவினால் சுட்ட வடு

மகன் தந்தைக்காற்றும் உதவி - இவன்தந்தை
என்னோற்றான் கொல் என்சொல்

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் - தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.

படிக்கும் காலங்களில் மனனம் செய்ததை எடுத்து எழுதியுள்ளேன். ஏதும் தவறுகள் இருப்பின் திருத்தி வாசிக்கவும. இது போன்ற பல குறள்களை நான் படிக்கும் போது இவ்வளவு எளிமையாக இரண்டு அடிகளில் சொல்ல வந்த கருத்தை திருக்குறள் எவ்வளவு அழகாக விளக்குகிறது என்று வியந்து போவேன். அதிலும் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடிய வகையில் இதன் சட்டங்கள் பலதும் அமைந்துள்ளது இதற்கு மேலும் சிறப்பு. திருக்குறளின் பல கருத்துகள் குர்ஆனோடு ஒத்துப் போவதையும் பல இடங்களில் பார்க்கிறோம். குர்ஆனில் இறைவன் சொல்லக் கூடிய பல உதாரணங்கள் திருக் குறளிலும் வருவதைப் பார்த்து நான் சில நேரம் ஆச்சரியப் பட்டுப் போவேன்.

இது போன்று எண்பது சதவீத குறள்கள் உலக மாந்தர் அனைவருக்கும் பொருந்தும் படியாக அமைந்துள்ளது. இதில் குறைந்த எண்ணிக்கையில் சில குறள்கள் உலகத்தார் அனைவருக்கும் பொருந்தாததாகவும், சில அறிவியல் கருத்துக்களோடு மோதுவதாகவும் உள்ளது.எனவே அது போன்று வரக் கூடிய கருத்துக்கள் திருவள்ளுவருக்குப் பிறகு சேர்க்கப் பட்ட இடைச் செருகலாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது. ஒருக்கால் என் எண்ணம் தவறாக கூட இருக்கலாம் பைபிள்,தௌராத்,ஜபூர் போன்ற இதற்கு முன் அருளப் பட்ட வேதங்களை நம்பச் சொல்லும் குர்ஆன், அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து மாற்றப் பட்டதால் அதை பின் பற்றக் கூடாது என்றும் முஸ்லிம்களுக்கு கட்டளை இடுகிறது.

'இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவினர் இறைவனின் வார்த்தைகளை செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.' - 2;75

'இது இறைவனிடமிருந்து வந்தது எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவன் பெயரால் பொய் கூறுகின்றனர்.' - குர்ஆன் 3;78

மேற்கண்ட வசனங்களின் மூலம் இறை வேதங்கள் பலவும் மனிதக் கரங்களால் மாசு படுத்தப் பட்டுள்ளன என்று விளங்க முடிகிறது. ஆது போன்று நான் நினைக்கும் ஒரு சில குறள்களை பட்டியலிடுகிறேன். குறளை புரிந்து கொண்ட விதத்தில் ஏதும் தவறுகள் என்னிடம் தென் பட்டு நண்பர்கள் சுட்டிக் காட்டினால் தவறை திருத்திக் கொள்கிறேன்.

தெய்வம் தொழ அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

வேறு தெய்வங்களை தேடி அலையாமல் தன் கணவனையே தெய்வமாகக் கருதி வாழும் மனைவி நினைத்தால் மழை வேண்டும் போது அப் பெண்ணினால் பெய்விக்கச் செய்ய முடியும்.
இது பெண்ணடிமையை வலியுறுத்துகிறது. கணவன் அவன் எவ்வளவு அரக்கனாக இருந்தாலும் அவனை தெய்வமாக பூஜிக்க வேண்டும் என்று கூறுவதை நடை முறைப் படுத்த இயலாது. இத்தகைய பெண்களால் மழை பெய்விக்க முடியும் என்றால் உலகில் வறட்சி நிலவும் இடங்களில் இவர்களை பயன் படுத்திக் கொள்ளலாம் அல்லவா! இறைவனை வணங்க வேண்டும் என்று பல குறள்களில் சொல்லும் அறிவுறுத்தும் வள்ளுவர் இந்த குறளில் கணவனை வணங்கினாலே போதும் என்று தன் கருத்திலேயே மாறு படுகிறார்.

கொல்லான் புலால் மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

உயிர்க் கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் ஒழுக்கம் காப்பவனை எல்லோரும் கை குவித்து வணங்குவர்.இவ்விரண்டு அறங்களும் இருந்தால் அவர்களை தேவர்களும் தொழுவர்.
உலகம் முழுவதற்கும் இக் குறளை நடைமுறைப் படுத்த இயலாது. ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு புலால் உணவைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. பிறகு அவர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது?கடற்கரை ஓரம் வாழும் மீனவர்கள் தங்கள் தொழிலையும் விட வேண்டி வரும். அடுத்து நம் நாட்டில் காய்கறிகளையே உண்டு வாழும் ஒரு குறிப்பிட்டசமூகத்தாரை எந்த உயிரும் கை கூப்பி தொழுததை நாம் பார்க்க முடியவில்லை.

தன் ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம் ஆளும் அருள்.

தனது உடம்பை வளர்ப்பதற்கு பிற உயிர்களை கொன்று சாப்பிடும் இயல்புடையோன் எங்ஙனம் அருளாட்சி செய்ய முடியும்? உடம்பை வளர்க்க புலால் தேவையில்லை. சைவ உணவே சிறந்தது என்பது கருத்து.
சைவம் சாப்பிட்டவர்கள் எல்லாம் அருளாட்சி செய்ததாக நாம் வரலாறுகளில் பார்க்க முடியவில்லை.அறிவியல் முடிவின் படி காயகறிகளுக்கும் உயிர் இருப்பதை நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம். பிறகு மனிதன் எதைத்தான் சாப்பிடுவது? மான்,ஆடு,மாடு போன்ற மிருகங்களை புலி, சிங்கம் போன்றவை அடித்து சாப்பிடாமல் விட்டால் அவைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிகாடுகள் அழியும் அபாயமும் உண்டு. புலால் உணவில் தான் புரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளதாகவும் அறிகிறோம். அனைத்து மனிதர்களும் சைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டால் காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறி விடும் அபாயமும் உண்டு. எனவே இந்தக் குறளும் இந்த அதிகாரத்தில் புலால் உண்ணுதலுக்கு எதிராக வருகிற குறள்களும் உலகத்தார் அனைவருக்கும் நடைமுறைப் படுத்த இயலாதவைகளாகும்.

கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்கமுற் றற்று.

படிப்பு சிறிதும் இல்லாத அறிவிலி ஒரு சபையில் பேச விரும்புவது, மார்புகள் இல்லாத ஒரு பெண் காதலை விரும்புவது போன்றதாம். அவள் விருப்பம் நிறைவேறாது.
பெண்களை இதை விட கீழாக இழிவு படுத்த முடியாது. அறிவாளிக்கு உதாரணம் சொல்ல உலகில் எத்தனையோ இருக்க புனிதமான பெண்களின் மார்பு தானா வள்ளுவருக்கு கிடைத்தது?ஹார்மோன்கள் அதிகம் சுரக்காதவர்களுக்கு மார்பு சிறிதாக இருப்பது இயற்கை. இதனால் அந்தப் பெண் இல்லறத்துக்கு தகுதி இல்லாதவள் என்றாகி விடுமா? இந்தக் கருத்தும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மண்ணும்
திங்களை பாம்பு கொணடற்று

'நான் என் காதலரை கண்டது ஒரு நாள்தான். அதனால்உண்டான உணர்வோ, நிலாவை பாம்பு கவ்வியது போல் எங்கும் பரவியுள்ளது.
அறிவியல் வளராத காலத்தில் சொல்லப் பட்ட ஒரு கதையை கேட்டு விட்டு உதாரணத்திற்கு சந்திர கிரகணத்தை எடுத்தெழுதியுள்ளார். பாம்பு சந்திரனை விழுங்கியதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்ற கருத்து தற்போதய அறிவியலோடு மோதக் கூடிய கருத்தாகும்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ள தும்மினீர் என்று

'நான் தும்மினேன் வழக்கம் போல் அவள் வாழ்த்தினாள். அங்ஙனம் வாழ்த்தியவளே தன் கருத்தை மாற்றிக் கொண்டு உம் காதலியருள் யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.
தும்மல் என்பது உடம்பில் ஏற்படும் அலர்ஜியினால் வருவது. யாரோ நம்மை நினைப்பதால் தான் இந்த தும்மல் வருகிறது என்பது மூடப் பழக்கங்களை ஊக்குவிப்பதாகும். பெண்கள் எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொள்ளக் கூடியவர்கள் என்ற எண்ணத்தையும் இந்த குறள் ஏற்படுத்துகிறது.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.

'இப்பிறப்பில் நாம் ஒரு போதும் பிரிய மாட்டோம் என்று கூறினேனாக. மறு பிறப்பில் பிரிந்து போவேன் என்று சொன்னதாகக் கருதித் தன் கண்கள் நிறையக் கண்ணீரை பெருக்கி விட்டாள்.
புராணங்களில் சொல்லப் பட்ட மறு பிறவி கதைகளை நம்பி இக் குறளில் மறு பிறவி என்று ஒன்று உண்டு என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். இந்த குறளிலும் எனக்கு உடன் பாடு இல்லை.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு

ஒருவன் ஒருத்தியை மணந்து இல்லறம் நடத்துவதன் நோக்கமே, வரும் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்க்காகவே ஆகும். விருந்தோம்பல் ஒரு அறமாகவே கருதப்படும்.
விருந்தினரை உபசரிப்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒருவன் மனைவியை அடைவதன் நோக்கமே விருந்தினரை உபசரிப்பதற்காகத்தான் என்ற வாதத்தை எவரும் ஒத்துக் கொள்ளார். இந்த குறளின் கருத்திலும் நான் மாறுபடுகிறேன்.

இது போன்று எழுதுவதால் திருக்குறளை நான் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்திய இலக்கியங்களிலேயே ராமாயணம், பகவத் கீதை,சிலப்பதிகாரம் போன்ற நூல்களையெல்லாம் விட மிக உயர்ந்த தரத்தில் வைக்கப் பட வேண்டியது திருக்குறள் என்பது என் எண்ணம். அதுவும் திருவள்ளுவர் தந்த திருக்குறள் தமிழில் உள்ளதால் தமிழன் என்ற முறையில் பெருமையும் அடைகிறேன்.

அம்பேத்காரும் இஸ்லாமும்!

அம்பேத்காரும் இஸ்லாமும்!
் அம்பேத்கர் இஸ்லாம்ஆகப் போகிறேன் என்று சொன்னார். நானும் எஸ். ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். “தயவு செய்து அவசரப்பட்டு சேர்ந்து விடாதீர்கள். குறைந்தது ஒரு லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது'’ என்று தந்தியில் சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக் கூடாதென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக, இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கனவே புத்தர்தான்.
(28.10.1956 அன்று, வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு)
நன்றி: கீற்று
// இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள்.//

உண்மைதான்! கை வைப்பதற்கு என்ன அவசியம் வந்து விட்டது? இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் மனித சட்டங்கள் அல்லவே!குர்ஆன் நம் அனைவரையும் படைத்த இறைவனின் வார்த்தைகள் என்று நம்புபவர்கள் முஸ்லிம்கள். இந்த நாட்டுக்கு, இந்த மக்களுக்கு,அல்லது இந்த காலத்துக்கு குறிப்பிட்ட இந்த சட்டம் பொருந்தாது என்று ஏதாவது ஒன்றைக் காட்ட முடியுமா? பிறகு மாற்றுவதற்கு என்ன அவசியம் வந்திருக்கிறது? ஜீவனாம்சம்,தலாக் போன்ற பிரச்னைகள் கூட முஸ்லிம்கள் குர்ஆனை சரியாக பின் பற்றாததினால் வந்த கேடுதானே ஒழிய, இதிலும் குர்ஆனை குறை சொல்ல முடியாது.

// இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும்.//

இதுவும் தவறாக பெரியாரால் விளங்கப் பட்டிருக்கிறது. குர்ஆனுக்கும் முகமது நபியின் போதனைக்கும் மாற்றமாக எவ்வளவு பெரிய மௌலானா தன் கருத்துக்களைச் சொன்னாலும் தங்கள் காலடியில் போட்டு மிதித்து விடுவார்கள் முஸ்லிம்கள். முகமது நபிக்குப் பிறகு ஆன்மீகத் தலைமை என்று ஒன்று கிடையாது. கிறித்துவத்துக்கு ஒரு போப், இந்துக்களுக்கு சங்காராச்சாரியார் போன்று முஸ்லிம்களுக்கும் மௌலானாக்கள் என்று தவறாக நினைத்து விட்டார் பெரியார். அன்றே அம்பேத்கார் விருப்பத்துக்கு விட்டிருந்தால் பல லட்சம் ஹரிஜனங்கள் அன்று பலனடைந்து இருப்பார்கள். அதன் முழுபலனையும் இன்று அவர்களின் பிள்ளைகள் அடைந்திருப்பார்கள்.

ஆனால் இஸ்லாத்தைப் பற்றி அவர் கொண்டிருந்த கொள்கை பிறகு மாறுதலடைந்தது.தமிழ் நாட்டில் முதல் முதலாக மதம் மாறிய கிராமம் - 63 ஆண்டுகளுக்கு முன்னால் -சீலயம்பட்டி கிராமம்தான். அரிஜனங்கள் கூட்டாக இஸ்லாத்தை தழுவிய போது அந்த கிராமத்துக்கு பெரியார் சென்றிருந்தார். அவர்களை நோக்கி 'நீங்கள் காட்டுமிராண்டி மாதிரி மயிர் வளர்த்து வைத்திருந்நததை எல்லாம் இன்றிலிருந்து மழுக்கி விட்டு மனிதனாகி இருக்கிறீர்கள். நான் எந்த ஊருக்கு பிரச்சாரத்துக்கு சென்றாலும் பெட்ரோலுக்கான காசை அந்த ஊர்க் காரர்களிடம் வாங்கி விடுவேன்.ஆனால் இன்று என் சொந்த செலவில் உங்களைப் பார்க்க வந்துள்ளேன். இஸ்லாத்துக்கு மாறிய உங்கள் அனைவரையும் பார்த்து மிகுந்த சந்தோஷமடைகிறேன்' என்று பெரியார் சொன்னார்.

'கடவுள் இல்லை' என்ற ஒரு கொள்கை தான் பெரியாரை இஸ்லாத்திலிருந்து தூரமாக்கி வைத்திருந்தது. இந்த முடிவுக்கு வந்தது கூட தன் சொந்த மதத்தின் மேல் உள்ள வெறுப்பினால் தான். இந்த ஒரு கொள்கையை விடுத்து மற்ற நடவடிக்கை எல்லாம் பெரியாரை ஒரு இஸ்லாமியராகவே மாற்றி விட்டது.

ஆனால் அவரின் சீடர்கள் இன்று அந்த பெரியாருக்கு ஊருக்கு ஊர் சிலைகளை எழுப்பி வருகிறார்கள். மாலைகளும் போட ஆரம்பித்தாகி விட்டது. உயிரற்ற சிலைக்கு மாலை போட்டால் அந்த சிலையால் அதை உணர முடியுமா? என்று இந்த பகுத்தறிவாளர்கள் சிந்திப்பதில்லை. இன்னும் சூடம் சாம்பிராணிதான் பாக்கி. சில நாட்களுக்குப் பிறகு அதுவும் ஆரம்பமாகி விடும். நாத்திகத்தை போதித்த புத்தர் எப்படி கடவுளாக்கப் பட்டாரோ அதே போல் பெரியாரும் நம் பேரப் பிள்ளைகளின் காலத்தில் கடவுளாக்கப் படும் அபாயம் உள்ளது. திரு கி. வீரமணி அவர்கள் இதை கவனித்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

'திருவள்ளுவர் ஒரு தத்துவ ஞானி, பொருளாதார மேதை. நான் நாத்திகனாயினும் வள்ளுவன் என்ற தெய்வத்தை ஏற்றுக் கொள்கிறேன்'
- கருணாநிதி உரை, முரசொலி, 1-1-2000

நம் நாட்டில் இத்தனை தெய்வங்கள் வந்ததன் காரணம் இப்போது விளங்குகிறதல்லவா! பகுத்தறிவாதியான கலைஞருக்கே இப்படி தடுமாற்றம் என்றால் படிக்காத பாமரனுக்கு சொல்லவா வேண்டும். வள்ளுவர் கோட்டம், அண்ணா அறிவாலயம் என்று வணங்குதற்கு ஏற்றாற்போல் வழி செய்தாகி விட்டது. இனி ஸ்டாலின் காலத்தில் சூடம்,சாம்பிராணி ஏற்ற வேண்டியதுதான் பாக்கி.

குர்ஆனில் மனிதக் கைகள் புகாததனால்தான் மேலே சொன்னது போன்ற குளறுபடிகள் எதுவும் இல்லாமல் தெளிந்த நீரோடையாக இஸ்லாம் வளர்ந்து வருகிறது.

பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்.

பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்.

'ஒவ்வொரு பெண்ணும் தனது கருவறையில் சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது.' குர்ஆன் 13:8

திருக் குர்ஆனின் 13;8 வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மையைக் கூறும் வசனமாகும்.

பொதுவாக மனித உடலுக்கு என சில தனிப் பட்ட தன்மைகள் உண்டு. தனக்குள் அது அன்னியப் பொருள் எதனையும் ஏற்றுக் கொள்ளாது.நாம் சாப்பிடும் உணவுகளையும் ஜீரணித்துக் கொண்டு பிறகு கழிவாக வெளியேற்ற முயற்ச்சிக்கிறது. நம் கண்களை எடுத்துக் கொள்வோம். கண்களில் ஏதேனும் தூசிகள் விழுந்து விட்டால்அதை எப்படியாவது வெளியேற்றவே கண் முயற்ச்சிக்கும்.

இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உடலின் விந்துத் துளியை தன்னுள் ஏற்றுக் கொள்கிறது. பல மாதங்கள் தனக்குள் விந்துத் துளியை கருவாக வளர்த்து திடீரென அதை வெளியேற்றுவதற்காக முயற்ச்சிக்கிறது. இவ்வாறு முயற்ச்சிக்கும் போது கருவறை சுருங்கி விரிகிறது.இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத் தான் இவ் வசனம் கூறுகிறது.

'ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது' என்ற சொற்றொடர் மிகவும் முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். இயற்கைக்கு மாற்றமாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் குழந்தையை வெளியேற்றுவதற்கு முயற்ச்சிக்கிறது. அந்த குறிப்பிட்ட நேரத்தை நானே தீர்மானித்தேன் என்று இறைவன் கூறுகிறான்.

அன்னிய பொருளை கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

இயற்கைக்கு மாறாக இறைவன் தன் வல்லமையை புகுத்தி ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயித்தின் படியே நீண்ட காலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது என இந்தச் சொற்றொடர் விளக்குகிறது.

எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி தன் கற்பனையால் இத்தகைய அறிவியல் உண்மைகளை சொல்ல முடியாது. இது நம் அனைவரையும் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

Friday, April 21, 2006

சோ ராமசாமி பரப்பும் அவதூறுகள்!

சோ ராமசாமி பரப்பும் அவதூறுகள்!

கேள்வி : பௌத்த - சமண சமயங்களை இந்து மதம் வீழ்த்தியதற்கும், இஸ்லாம் கிறித்தவ சமயங்கள் இந்து மதத்தை வீழ்த்துவதற்கும் என்ன வித்தியாசம்?

சோ பதில் : இந்து மதம் - பௌத்த, சமண மதங்களை வாதம் செய்து வீழ்த்தியது. இஸ்லாம்,கிறிஸ்தவ சமயங்கள் மதமாற்றம் செய்து இந்து மதத்தை வீழ்த்துகின்றன.

துக்ளக் - 26.10.2005

மக்களை மடையர்களாக கருதி மனம் போன படி கருத்துக் கூறி உண்மைகளை உருக்குலைத்து, பொய்மைகளைப் புகழேணியில் ஏற்றலாம் என்பது சோ கண்டு வரும் சொப்பனம்.

பௌத்த சமண சமயங்களை இந்து மதம் வாதத்தால் வீழ்த்தியது என்பது உண்மையின் கலப்பு ஒரு சதவீதம் கூட இல்லாத இமாலயப் பொய். எவரும் சொல்லத் துணியாத பொய்.

இந்து மதம் பௌத்த சமண சமயங்களோடு அறிவுப் பூர்வமாக, நளினமான முறையில் த்ததுவ அடிப்படையில் விவாதம் செய்து மேற்படி மதங்களைப் பொய்ப்பித்தது போலவும்: இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களில் தத்துவ வறட்சி இருப்பதால், அறிவு பூர்வமான விவாதங்கள் மூலம் பிற மதத்தினரை ஈர்க்காமல் ஆசை காட்டி மதம் மாற்றம் செய்வது போலவும் ஒரு போலிச் சித்திரத்தைத் தீட்டுகிறது துக்ளக் சோவின் துடுக்குப் பேனா...

இந்து மதத்தின் கொள்கை எது? என்று கேட்டால் துக்ளக் சோவால் பதில் கூற முடியுமா? அப்படியே அவர் பதில் சொன்னாலும் அதை எல்லா பிரிவு இந்துக்களும் ஏற்பார்களா?

இந்து மதம் என்ற பெயரே பிற் காலத்தில் வைக்கப் பட்ட பெயர்தான். வைதீக மதங்களான சைவம் வைணவம் ஆகியவற்றோடு சிறு தெய்வ வழிபாடுகளையும் சேர்த்து ஒரு தொகுப்பாக்கி 'இந்து மதம்' எனப் பிற்காலத்தில் ஒரு பொதுப் பெயர் சூட்டப் பட்டது.

பௌத்தத்தையும் சமணத்தையும் இந்து மதம் வாதங்களின் மூலம் வீழ்த்தியது என்பதில் அணுவளவும் உண்மையில்லை என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உள்ளன.

இந்து மதம் சமணத்தையும் பௌத்தத்தையும் வன்முறையின் முலம் அழித்ததை மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் தமது 'சமணமும் - தமிழும்' என்ற நூலில் வரலாற்று ஆதாரங்களோடு விளக்கியுள்ளார்.

தமிழகத்தில் ஏராளமான பௌத்த ஊர்கள், பக்தி இயக்கம் பரப்பிய வன்முறையால் அழிக்கப் பட்டுள்ளதை மிகத் துல்லியமான ஆதாரங்களோடு புலவர் ஜெ. ஆனந்த ராசன் தமது 'பௌத்தமும், பழந் தமிழ்க் குடி மக்களும்' என்ற நூலில் விளக்கியுள்ளார்.

குருவிக் கரம்பை வேலு எழுதிய 'சிந்து முதல் குமரி வரை' என்ற நூலும் ஆரியர்களின் அடாவடிகளை விவரிக்கிறது.

நாகப் பட்டினத்தில் இருந்த மிகப் பெரிய புத்த விகாரத்தில் தஙகத்தாலான புத்தர் சிலை இருந்துள்ளது.இதனை வைணவப் பிரிவைச் சேர்ந்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இரவோடிரவாகச் சூறையாடினார். அப்படி சூறையாடிய தங்க புத்தர் சிலையையும் ஆபரணங்களையும் எடுத்துச் செல்லும் போது வழியிலேயே பொழுது விடிந்து விட்டது. ஆகவே பொருள்களை ஓரிடத்தில் பதுக்கி வைத்தனர். அந்த ஊர் தான் இப்போது சிக்கலுக்கும்- மஞ்சக் கொல்லைக்கும் இடைப் பட்ட 'பொரவச் சேரி' என்றழைக்கப் படும் முஸ்லிம் ஊராகும். பொருள் வைத்த சேரி - பொரவச்சேரி என மருவி விட்டது.

நாகை புத்த கோவிலை சூறையாடிய பணத்தில்தான் ஸ்ரீரங்கம் கோவில் புணரமைக்கப் பட்டது என்பதை 'குரு பரம்பரைப் பிரவாகம்' என்ற வைணவ நூலும் குறிப்பிடுகிறது.

காஞ்சிபுரத்தில் வன்முறைகள்

பௌத்த நகரமாகத் திகழ்ந்த காஞ்சிபுரத்தில் வன்முறையால் பௌத்த அடையாளங்கள் அடியோடு அழிக்கப் பட்டுள்ளன. காஞ்சிபுரத்தின் கச்சீஸ்வர் கோவில், கைலாச நாதர் கோவில் ஆகியவை பௌத்த கோவில்களாக முன்பு இருந்தவை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

காஞ்சியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகச் சக்ரவர்த்தி எழுப்பிய பிரம்மாண்டமான புத்த தூபி இருந்ததாக கி.பி ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வருகை புரிந்த சீனப் பயணி யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார்.

சைவ வன்முறைகள்

சீர்காழி அருகே ஆறாயிரம் சமணர்களை கழுமரத்தில் ஏற்றி கொடுமையாக கொலை செய்த பெருமை சைவத்திற்கு உண்டு.

சோ குறிப்பிடும் இந்து மத வாதம் எப்படிப் பட்டதென அறிந்தால் மிரண்டு போக வேண்டும். சமணர்களோடு சைவர்கள் அனல் வாதம், புனல்வாதம் என இருவகை வாதங்களை நிகழ்த்துவார்கள்.'உண்மைக்கு அழிவில்லை' எனக் கூறும் சைவர்கள் சமண நூல்களை தீயிலிடச் சொல்வார்கள். எல்லா நூலும் தீயில் எரியும் சமண நூலும் எரியும். தீயில் எரிந்து போனதால் சமணம் உண்மையல்ல எனத் தீர்ப்பாகும். சைவர்கள் தங்கள் நூல்களைத் தீயில் போடுவதில்லை. இது அனல்வாதம்.

காட்டாற்று வெள்ளத்தில் புத்தகங்களை வீச வேண்டும். எது எதிர் நீச்சல் போட்டுக் கரையேறுகிறதோ அது சத்தியம். இது புனல் வாதம். சமண நூல்களை எரிவார்கள். அவை ஆற்றோடு போய் விடும். அவை பொய்யானவை என உறுதியாகி விடும். சைவம் சமணம் இவற்றிற்கிடையேயான வாதத்தில் சமணம் பொய்யானது என நிரூபணமாகி விட்டதால் சைவத்தைப் பரிசோதிக்க அவசியமில்லை. வாதத்தில் தோல்வியடைந்த சமணர்கள் கழுமரத்தில் (கூர்மையான ஈட்டி) ஏற்றிக் கொல்லப் படுவார்கள்.

சிவத் தொண்டர்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறை விளக்கும் பெரிய புராணம்:

'வாதில் அமணர் வலி தொலைய வண் கழுவில் தைத்த மறையோன்'

சமணர்களை வாதத்தில் வென்று, அவர்களை கழுமரத்தில் ஏற்றிக் கொன்ற மறையோன் திருஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகிறது.

கழுத்தை அறுக்கக் கட்டளையிடும் கவிதை

சமணர்களையும், பௌத்தர்களையும் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யுமாறு ஒரு பக்தி இலக்கியப் பாடல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்ற வைணவ நூலில் திருவரங்கப் பதிகம் என்ற பகுதியின் 879 ஆம் பாடலைப் பாருங்கள்.

'வெறுப்பொடு சமணர், முண்டர்
விதியில் சாக்கியர் நின்பால்
பொறுப்பரி யங்கள் பேசில்
போவதே நோய தாகிக்
குறிப்பெனக் கடையு மாஇல்
கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய்
அரங்கமா நகருளானே'

'வெறுக்கத் தக்க சமணர்களும், பௌத்தர்களும் உன்னிடம் வந்து பொறுப்பற்ற செய்திகளைப் பேசினால் அவர்களின் தலைகளை அறுத்து விடுவதே நல்லது. அரங்கமா நகரில் உள்ளவனே அது உன் கடமை'

- இது ஆன்மீக வாதமா? இல்லை பயங்கர வாதமா?

தேவாரத்தில் 360 க்கும் மேற்பட்ட பாடல்கள் பௌத்த, சமண சமயத்தவரை மிகக் கீழ்த்தரமாக வர்ணிக்கின்றன.

இவை யாவும் இன்றைய தலை முறைக்குத் தெரியாது என்ற நம்பிக்கையில் பவுத்த,சமண சமயங்களை இந்து மதம் வாதத்தால் வீழ்த்தியது என்கிறார் சோ.

வைதீக மதம் வாதம் செய்ததா? அல்லது பிற மதத்தினரை வதம் செய்ததா? என்பதை வரலாற்றெங்கிலும் காண முடிகிறது.

இஸ்லாமும், கிறித்தவமும் இந்துக்களை மதம் மாற்றுகின்றன எனக் கூக்குரலிடும் சோ, ஏன் மக்கள் மதம் மாறுகிறார்கள் என்பதை சிந்திக்கட்டும்.

-மக்கள் உரிமை - 24-18-2005

Tuesday, April 18, 2006

சவூதி மன்னரின் உயர்ந்த உள்ளம்!

சவூதி மன்னரின் உயர்ந்த உள்ளம்!

மன்னர் அப்துல்லா என் தாய் நாட்டுக்கு அரசு முறைப் பயணத்தை முடித்து விட்டு வந்திருக்கும் இந்த தருணத்தில் என் எண்ணங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். என் பெயர் வி.ஆர்.சோன்டி. இந்து மதத்தைச் சேர்ந்தவன்.. தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறேன்.

முதலாவதாக 1955 ஆம் வருடம் மதிப்பிற்குரிய மன்னர் அப்துல் அஜீஸ் இந்தியா விஜயம் செய்திருந்தார். மும்பை நகரத்தில் திறந்த காரில் வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களுக்கு நிறைய தங்க காசுகளை இலவசமாக அளித்தார். ஏழை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்க காசுகளை வாங்கிச் சென்றார்கள. அது போல் தங்க நாணயம் பெற்றவர்களில் நானும் ஒருவன். ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் மக்களோடு மக்களாக அனைவரையும் ஒன்றாக நினைத்து அன்பு செலுத்தியது என் மனக்கண் முன் இன்றும் நிழலாடுகிறது.

இரண்டாவது நிகழ்வு 1976 ஆம் ஆண்டு நடந்தது. உலக வங்கி துங்கபத்ரா அணையின் பாக்கி உள்ள கட்டுமான பணிகளை முடிப்பதற்கு 120 மில்லியன் டாலரை இந்திய அரசிடம் கேட்டது. இதை கேள்விப் பட்ட மன்னர் காலித் அப்போதய இந்திய தூதரை அழைத்து அதற்கான ஒரு மாபெரும் தொகைக்கான காசோலையை தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து கொடுத்தார். இந்த தொகை சவூதி மக்கள் இந்திய மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்பு என்று மன்னர் காலித் அப்போது கூறினார். அவருக்கு இந்திய மக்களின் பால் உள்ள அன்பை எண்ணி அப்போது வியந்தேன்.

அந்த அணை உள்ள நிலப் பரப்புக்கு பக்கத்தில் தான் என் கிராமம் உள்ளது. அந்த அணையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மன்னர் குடும்பத்தின் அந்த அன்பளிப்புதான் ஞாபகத்துக்கு வரும். அந்த அணையினால் எத்தனையோ ஆயிரம் பேர் தற்போது பயனடைகிறோம்.

சமீபத்தில் இறந்த மன்னர் பஹதுக்காக சொர்க்கம் கிடைப்பதற்காக இறைவனைப் பரார்த்திக்கிறேன். தற்போதய மன்னர் அப்துல்லாவின் ஆட்சியும் சிறப்புற பிரார்த்தித்து, தீராத தலைவலியாய் இருக்கும் இந்தியா காஷ்மீர் பாகிஸ்தான் பிரச்னையும் ஒரு முடிவுக்கு வர பிரார்த்தித்தவனாக இம் மடலை முடிக்கிறேன்.


வி.ஆர்.சோண்டி, இந்தியானா

வாசகர் கடிதம், அரப் நியூஸ், 1-2-2006

இது போன்ற நல்ல உள்ளங்களைப் பெற்றதால்தான் இந்தியா இன்றும் உலகில் தலை சிறந்த நாடாக மிளிர்கிறது.



.

ரோமப் பேரரசர் ஹெர்குலிசைப் பற்றி...

ரோமப் பேரரசர் ஹெர்குலிசைப் பற்றி...

ரோமப் பேரரசின் சக்ரவர்த்தி ஹெர்குலிசைப் பற்றி நாம் வரலாறுகளில் அதிகம் படித்திருப்போம். ஹெர்குலிசுக்கும் முகமது நபிக்கும் நடந்த கடிதப் போக்குவரத்தும் அதோடு அபு சுப்யானுக்கும் ஹெர்குலிசுக்கும் நடந்த வாதங்களும் புகாரி ஹதீது கிரந்தத்தில் பதியப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்துள்ளேன். மொழி பெயர்ப்பில் ஏதும் தவறுகள் தென் பட்டால் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன். இந்த விபரங்களைச் சொல்லும் அபு சுப்யான் என்ற நபித் தோழர் சம்பவம் நடக்கும் போது முகமது நபியை கடுமையாக எதிர்த்து வந்தார். முகமது நபிக்கு நெருங்கிய உறவினர்.அந்த நேரம் இஸ்லாத்தை ஏற்காதவராகவே இருந்தார்.அதன் பிறகு பல நாட்களுக்குப் பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இனி வரலாறைப் பார்ப்போம்.

ரோமப் பேரரசர் ஹெர்குலிஸ் அரசாங்க அலுவல் நிமித்தமாக அப்போது ரோமாபுரியின் கட்டுப் பாட்டில் இருந்த சிரியாவுக்கு வந்திருந்தார். அந்த நேரம் வியாபார நிமித்தமாக அபூ சுப்யானும் சிரியாவுக்கு வருகிறார். முகமது நபியின் பிரச்சாரத்தைக் கேள்விப் பட்ட ஹெர்குலிஸ், சில நபர்களை அபு சுப்யான் வசம் அனுப்பி அவரையும் அவரது கூட்டத்தாரையும் அழைத்து வரச் சொல்கிறார். அதன்படி அவர்களை மன்னர் வசம் அழைத்து வருகிறார்கள். இவர்களின் சந்திப்பு சிரியாவில் உள்ள இல்யா என்ற நகரில் நடைபெறுகிறது. அபு சுப்யானையும் அவரது வியாபார கூட்டத்தாரையும் நீதி மன்றத்துக்கு அழைத்த ஹெர்குலிஸ் அரபு மொழி தெரிந்த மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வைத்துக் கொண்டு கீழ் வரும் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

ஹெரகுலிஸ் : 'இறைவனின் தூதர் ' என்று சொல்லிக் கொண்டிருக்கும் முகமது என்ற நபருக்கு நெருக்கமானவர்கள் உங்களில் எவரும் உண்டா?

அபூ சுப்யான் : 'நான் தான் இங்குள்ளவர்களில் அவருக்கு நெருங்கிய உறவினர்'

ஹெர்குலிஸ் : 'அவரை எனக்கு நெருக்கமாக கொண்டு வாருங்கள். மற்றவர்கள் அவருக்கு பின்னே சென்று நில்லுங்கள்'. மொழி பெயர்ப்பாளரை நோக்கி 'சொல்வீராக! இந்த மனிதரிடத்தில் (அபு சுப்யான்) இறைத் தூதர் என்று அவர்கள் நாட்டில் சொல்லிக் கொண்டிருப்பவரைப் பற்றி ஒரு சில கேள்விகள் கேட்பேன். இவர் ஏதும் அவரைப் பற்றி பொய்யாக தகவல் தந்தால், அதை எனக்கு மற்றவர்கள் தெரிவிக்க வேண்டும்'. என்று கூறி விட்டு 'அவருடைய பரம்பரை எத்தகையது?' எனற முதல் கேள்வியை அபு சுப்யானைப் பார்த்து மன்னர் ஹெர்குலிஸ் கேட்டார்.

அபு சுப்யான் : உயர்ந்த பாரம்பரியம் உடையது அவருடைய குடும்பம்.

ஹெர்குலிஸ் : அவர் சொல்லக் கூடிய உபதேசங்களை இதற்கு முன் நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

அபுசுப்யான் : இல்லை.

ஹெர்குலிஸ் : அவருடைய முன்னோர்களில் எவரும் இதற்கு முன் ஆட்சியாளர்களாக இருந்திருக்கிறார்களா?

அபுசுப்யான் : இல்லை.

ஹெர்குலிஸ் : அவரைப் பின் பற்றுபவர்கள் பலமுள்ள உயர்ந்த சமூகமா! அல்லது ஒடுக்கப் பட்டவர்களா?

அபுசுப்யான் : ஒடுக்கப் பட்டவர்கள்.

ஹெர்குலிஸ் : அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா?

அபுசுப்யான் : அதிகரிக்கிறது.

ஹெர்குலிஸ் : அவர்களில் எவரும் மார்க்கத்தை தழுவி அது பிடிக்காமல் பிறகு இஸ்லாத்தை விட்டு வெளியாகி இருக்கிறார்களா?

அபுசுப்யான் : இல்லை.

ஹெர்குலிஸ் : முகமது எப்போதாவது வாக்கு தவறி இருக்கிறாரா?

அபுசுப்யான் : இல்லை. ஆனால் தற்போது அவரோடு போர் நிறுத்தம் சம்பந்தமாக உடன் படிக்கை செய்திருக்கிறோம். அதை அவர் மீறுவாரா மாட்டாரா என்பது எனக்குத் தெரியாது. ('இது ஒன்று தான் நான் அவரைப் பற்றி மாறு பட்டு சொன்ன கருத்து' என்று பிறகு ஒரு குறிப்பில் கூறுகிறார்.)

ஹெர்குலிஸ் : நீங்கள் அவரோடு போர் புரிந்து இருக்கிறீர்களா?

அபுசுப்யான் : ஆம்.

ஹெர்குலிஸ் : அந்த போர்களின் முடிவுகள் பற்றி கூறுவீராக!

அபுசுப்யான் : அந்தப் போர்களில் சில சமயம் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். சில நேரம் நாங்கள் வெற்றிப் பெற்றிருக்கிறோம்.

ஹெர்குலிஸ் : உங்களுக்கு அவர் என்ன கட்டளை இடுகிறார்?

அபுசுப்யான் : 'ஒரே இறைவனை வணங்குங்கள். அந்த இறைவனோடு சேர்த்து வேறு எதனையும் வணங்காதீர்கள். உங்கள் முன்னோர்களின் தவறான வழிகளைப் பின் பற்றி வழி கெடாதீர்கள்' என்று சொல்கிறார். 'தொழுகையை நிலை நாட்டும் படியும், உண்மையே பேச வேண்டும் என்றும், நேர்மையை கடை பிடிக்க வேண்டும் என்றும், உறவினர்களின் நலம் பேண வேண்டும்' என்றும் கட்டளை இடுகிறார்.

மொழி பெயர்ப்பாளரை நோக்கி, 'அவர்களுக்கு நான் சொல்வதை மொழி பெயர்த்து சொல்வீராக!' என்று கூறிவிட்டு பின் வருமாறு மன்னர் ஹெர்குலிஸ் தொடர்ந்தார்.

'நான் உம்மிடம் அவரின் குடும்பத்தைப் பற்றிக் கேட்டேன். சமூகத்தில் மதிக்கத்தக்க குடும்ப பரம்பரை என்று சொன்னீர். இதற்கு முன் வந்த இறைத் தூதர்களும் சிறந்த குடும்பத்திலுருந்தே வந்துள்ளனர்

அவர் சொல்லும் கருத்துக்களை இதற்கு முன் வேறு யாரும் கூறக் கேட்டிருக்கிறீர்களா? எனக் கேட்டதற்கு 'இல்லை' என்று சொன்னீர். நான் கேட்டதற்கு காரணம், இதற்கு முன் வேறு யாரும் அது போல் சொல்லி இருந்தால் மற்றவர்களின் கருத்தைத் தான் பிரதிபலிக்கிறார் என்று கண்டு பிடித்து விடலாம் என்பதற்க்காகவே!

அவரின் முன்னேர்களில் யாரும் அரசராக இருந்திருக்கிறார்களா? என்றதற்கு 'இல்லை' என்று சொன்னீர். ஒருக்கால் தன் தந்தையின் நாட்டைப் பிடிக்கத்தான்இதுபோல் சொல்கிறாரோ என்று நினைத்துத் தான் அவ்வாறு கேட்டேன்.

இதற்கு முன் பொய் சொல்பவராக இருந்திருக்கிறாரா? என்று கேட்டதற்கு 'இல்லை' என்று பதில் சொன்னீர். எனவே முன்பு பொய் சொல்லி பழக்கம் இல்லாதவர் இறைவன் விஷயத்திலும் பொய் சொல்பவராக இருக்க மாட்டார் என்று நினைத்தே கேட்டேன்.

அவரைப் பின் பற்றுபவர்கள் சமூக அந்தஸ்து உள்ளவர்களா? அல்லது ஒடுக்கப் பட்டவர்களா? என்று கேட்டதற்கு 'ஒடுக்கப் பட்டவர்கள்' என்று பதிலளித்தீர். இதற்கு முன்னால் வந்த இறைத் தூதர்களையும் வறியவர்களும் ஒடுக்கப் பட்டவர்களும் தான் முதலில் பின் பற்றி இருக்கிறார்கள்.

அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? என்று கேட்டதற்கு 'அதிகரிக்கிறது' என்று பதிலளித்தீர். உண்மையான மார்க்கம் வளர்ந்து கொண்டு தான் இருக்கும்.

அவர்களில் எவரும் இஸ்லாம் மார்க்கத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்களா? என்று கேட்டதற்கு 'இல்லை' என்று பதிலளித்தீர். உண்மையான நம்பிக்கை ஒரு உள்ளத்தில் புகுந்து விட்டால் பிறகு எப்படி மாறுவதற்கு மனம் வரும்.

அவர் உங்களிடம் வாக்கு தவறி இருக்கிறாரா? என்று கேட்டதற்கு 'இல்லை' என்று பதிலுரைத்தீர். ஆம். இறைத் தூதர்கள் எவ்வாறு வாக்கு தவற முடியும்.

அவர் உங்களுக்கு என்ன போதிக்கிறார் என்று கேட்டதற்கு 'ஒரே இறைவனை வணங்கச் சொல்வதாகவும், தொழுகை,உண்மை,நம்பிக்கை,நேர்மை,உறவினர்களைப் பேணுதல் போன்றவற்றை வாழ்க்கையில் செயல் படுத்தக் கட்டளை இடுகிறார் என்று சொன்னீர். நீர் சொன்ன அனைத்து விபரங்களும் உண்மையாய் இருந்தால் என்னைக் கட்டுப் படுத்தக் கூடியவராக உங்கள் முகமது இருப்பார். இறைத் தூதர்களைப் பற்றி நான் நன்கு அறிவேன்.உங்கள் நாட்டில் வந்திருப்பவர் அந்த இறைத் தூதர் தானா என்று நான் இன்னும் சரியாக அறியவில்லை.நான் அவரை சந்திக்க விரும்புகிறேன்.எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும் அவரைக் கண்டிப்பாக சந்திப்பேன்.அவர் உண்மையாளராக இருந்தால் அவருடன் நானும் இருப்பேன்.அப்போது அவரின் கால்களைக் கழுவக் கூடிய சேவகனாகவும் இருப்பேன்.' என்று கூறினார்.

சில நாடகளில் முகமது நபியிடம் இருந்து ஹெர்குலிஸ் மன்னருக்கு ஒரு கடிதம் அனுப்பப் பட்டது. பஸ்ராவை ஆட்சி செய்து வந்த திஹ்யா என்பவர் மூலமாக இக் கடிதம் ஹெர்குலிசுக்கு அனுப்பப் பட்டது. அக் கடிதத்தில்

'அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனைப் போற்றி புகழ்ந்ததன் பின், இறைவனின் தூதராகிய முகமது ரோமாபுரியின் ஆட்சியாளரான ஹெர்குலிசுக்கு எழுதிக் கொள்வது.நேர் வழியைப் பின் பற்றுவோர் மீதுசாந்தி உண்டாகட்டுமாக! நான் உங்களை தூய இஸ்லாத்தின் பால் வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் இறைவனின் பாதுகாவலில் வந்து விடுவீர்.இதற்கான மகத்தான கூலியும் இறைவன் இடத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இதை விடுத்து வேறு மார்க்கத்தை பின் பற்றினால் நஷ்டமடைந்தோரில் நீரும் ஒருவராக ஆகி விடுவீர்.' என்று வேறொரு நபரால் எழுதப் பட்டு முகமது நபியின் மோதிர முத்திரை கடிதத்தில் பதிக்கப் பட்டு மன்னரிடம் அளிக்கப் பட்டது. இந்த கடிதம் இன்றும் கூட அருங் காட்சி அகத்தில் வைக்கப் பட்டு பாதுகாக்கப் படுகிறது.

புகாரி ஹதீது கிரந்தத்தில் 2978 வது ஹதீஸில் நபித் தோழர் அபூ சுப்யான் அவர்கள் அறிவிப்பதாவது

'நாங்கள் ஈலியா (ஜெருசலம்) நகரில் இருந்தபோது ரோம (பைசாந்தியப்) பேரரசர் ஹெர்குலிஸ் எங்களை கூப்பிட்டனுப்பினார். பிறகு இறைவனின் தூதர் முகமது நபி அவர்களுடைய கடிதத்தை வரவழைத்தார். கடிதத்தைப் படித்துக் காட்டி முடித்தவுடன் மன்னரிடம் இருந்த பிரமுகர்களிடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. குரல்கள் உயர்ந்தன. நாங்கள் அரசவையிலிருந்து வெளியேற்றப் பட்டோம். அப்போது நான் என் தோழர்களிடம், 'அபூ கப்ஸாவின் மகனுடைய (முகமது நபியுடைய)அந்தஸ்து உயர்ந்து விட்டது. மஞ்சள் நிறத்தவரின் (கிழக்கு அய்ரோப்பியர்களின்) அதிபரே கூட அவருக்கு அஞ்சுகிறார்', என்று கூறினேன்';.

Friday, April 14, 2006

இசைப் புயல்களின் சங்கமம்!

இசைப் புயல்களின் சங்கமம்!

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவரின் பெயர் மட்டும் மாறுவதில்லை. அவரின் வாழ்க்கையே முற்றிலுமாக மாறி விடுகின்றது. நம் ஊர் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானை எடுத்துக் கொள்ளுங்கள். நம் கண்ணுக்கு முன்னால் திலீப் குமாராக இருந்தவர் இன்று ஏ.ஆர்.ரஹ்மானாக வலம் வருகிறார்.

பேசும் படம் நிருபர் உங்களை சிலர் திலீப் குமார் என்று அழைக்கிறார்கள். சிலர் ரஹ்மான் என்று அழைக்கிறார்கள். உங்களுக்கு எது விருப்பம்.

ஏ.ஆர்.ரஹ்மான்: மற்றவர்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக் கொள்ளட்டும். இறைவனுக்கு பிடித்தமான பெயர்கள் அப்துல்லா, ரஹ்மான் என்ற பெயர்கள். அந்த இரண்டில் ஒன்றை நான் வைத்திருக்கிறேன். எனவே என்னை ரஹ்மான் என்று கூப்பிடுவதைத்தான் நான் விரும்புகிறேன்.

ஒரு சில நாட்களிலேயே ஒருவரின் எண்ணங்களில் எத்தகைய மாற்றங்கள் வந்து விடுகிறது பாருங்கள். திருமணமும் பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுத்தார். தன் முதல் குழந்தைக்கு கதீஜா என்ற அழகிய பெயரை சூட்டினார். காலைத் தொழுகையை(பஜ்ர்) தவற விடக் கூடாது என்பதற்காக ரெகார்டிங் முதற் கொண்டு அனைத்தையும் இரவு நான்கு மணி வரை வைத்துக் கொள்கிறார். அய்ந்து மணிக்கு தொழுகை அதன் பிறகு தூக்கம். ஹஜ் பயணங்களையும் தவற விடுவதில்லை. நாளுக்கு நாள் இஸ்லாத்தின் பால் அவரின் ஈடுபாடு அதிகரிக்கிறதே ஒழிய குறைந்த பாடில்லை.இசையை இஸ்லாம் வெறுப்பதால், தன் தொழிலை மட்டும் மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும். பிரிட்டிஷ் பாப் பாடகர் கேட் ஸ்டீவன்ஸன் பல கோடி டாலர்களை துச்சமென தூக்கி எறிந்து விட்டு இன்று யூசுப் இஸ்லாமாக பெயர் மாற்றம் பெற்று மிகச் சிறந்த பிரச்சாரகராக இருக்கிறார்.அவர் வழியில் ரஹ்மானும் இந்த சினிமாத் துறையை விட வேண்டும்.நாகூர் போன்ற தர்காக்களை வலம் வருவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதனை இறைவன் குர்ஆனில் கடுமையாக கண்டிக்கிறான். சூபி இசத்தின் மேலும் இவருக்கு சற்று மயக்கம் இருக்கிறது. குர்ஆனும், முகமது நபியின் வழி காட்டல் மட்டுமே இஸ்லாமாக முடியும்.அது தவிர்த்து மற்ற வழிகள் எல்லாம் நம்மை இஸ்லாத்தை விட்டு தூர மாக்கி விடும். இன்னும் சில நாட்களில் இதை எல்லாம் குறைத்துக் கொள்வார் என்று நம்புவோமாக!

இது போல் பிரபல பாடகர் மைக்கேல் ஜாக்ஸனின் ககோதரர் ஜெராமின்் ஜாக்ஸன் இஸ்லாத்தை ஏற்று இன்று அப்துல் அஜீஸாக தன் வாழ்க்கையை தொடர்கிறார். அவரின் பத்திரிக்கைப் பேட்டியை அப்படியே தருகிறேன். நீங்களும் படித்துப் பாருங்களேன்.


Jermaine Jackson

In a starling Interview, Jermaine Jackson, brother of world-famous star Michael Jackson, tells how he embraced Islam.
Islam is a religion, which transcends all petty prejudices of color, race and territorial boundaries. That is why the followers of other religions, with a nearsighted vision, have a sense of overflowing pride and relief when they embrace Islam. Deserting the religion of one?s forefathers is one of the most difficult decisions, but the golden principles and the virtues of broadmindedness of Islam have persuaded mankind to adopt it as a way of life.
Now, therefore, Islam has emerged as the greatest religion of the world. Jermaine Jackson, brother of world-famous Michael Jackson is one of those men who have left the religion of their forefathers and made Islam the inseparable part of their life. From Jermaine Jackson, he has re-named as Muhammad Abdul-Aziz. He lives in one of the luxurious palaces in the outskirts of Los Angeles (USA). The palace of Abdul-Aziz is surrounded by beautiful gardens. This is the place where he and his sisters compose their musical notes. This remains under surveillance of more than 15 security vans round the clock. This area which is known as ?Falis? in Los Angeles is considered one of the most expensive areas the world over London based Arabic "al-Mujallah" has recently published an interview of Jermaine Jackson for the first time since he became Muslim. In this interview, he has expressed his passionate love for Islam. Let us see how he responded to various questions: -
When and How did you start your journey towards Islam?
It was way back in 1989 when I, along with my sister, conducted a tour to some of the countries of Middle East. During our stay in Bahrain, we were accorded warm welcome. There I happened to meet some children and had a light chitchat with them. I put certain questions to them and they flung at me their innocent queries. During the course of this interaction, they inquired about my religion. I told them, "I am a Christian." I asked them, as to what was their religion? A wave of serenity took over them. They replied in one voice ? Islam. Their enthusiastic answer really shook me from within. Then they started telling me about Islam. They were giving me information, much in piece with their age. The pitch of their voice would reveal that they were highly proud of Islam. This is how I paced toward Islam.
A very short interaction with a group of children ultimately led me to have long discourses about Islam with Muslim scholars. A great ripple had taken place in my thought. I made failing attempt to console myself that nothing had happened but I could not conceal this fact any longer from myself that at heart I had converted to Islam. This I disclosed first to my family friend, Qunber Ali. The same Qunber Ali managed to take me to Riyadh, capital of Saudi Arabia. Till that time, I did not know much about Islam. From there, in the company of a Saudi family, I proceeded for Mecca for the performance of "Umrah". There I made public for the first time that I had become Muslim.
What were your feelings after you proclaimed that you were a Muslim?
Having embraced Islam, I felt as if I were born again. I found in Islam the answers to those queries which I had failed to find in Christianity. Particularly, it was only Islam that provided satisfactory answer to the question relating to the birth of Christ. For the first time I was convinced about the religion itself. I pray my family members might appreciate these facts. My family is the follower of that cult of Christianity, which is known as AVENDANCE of JEHOVA (Jehova's Witness). According to its creeds, only 144,000 men would finally qualify to enter into paradise. ?How comes, It remained always a perplexing creed for me. I was surprised to know that Bible was compiled by so many men, particularly about a volume scripted by King James. I wondered if a man compiles a directory and then ascribes it to God, but he does not fully comply with these directions. During my stay in Saudi Arabia I have had the opportunity to buy a cassette released by the erstwhile British pop-singer and the present Muslim preacher, Yusuf Islam (formerly Cat Stevens). I learnt a lot from this as well.
What happened when you got back to the US after embracing Islam?
When I returned to USA, American media orchestrated heinous propaganda against Islam and the Muslims. The gossips were let loose on me which really disturbed my peace of mind. The Hollywood was hell-bent upon maligning the Muslims. They were being projected as terrorists. There are many things where there is consensus between Christianity and Islam, and Quran presents Holy Christ as a virtuous Prophet. Then, I wondered, why Christian America levels baseless allegations against Muslims?
This made me gloomy. I made up my mind that I would do my best to dispel the wrong image of Muslims, portrayed by the American media. I had not the slightest idea that American media would not digest the news of my accepting Islam and raise such a great hue and cry. It was virtually acting against all its tall and much-publicized claims about the freedom of _expression and the freedom of conscience. So the hypocrisy of American society came to surface and lay uncovered before me. Islam unknotted many complications for me. As a matter of fact, I came to think of myself as a complete human being, in the literal sense of the word. After becoming Muslim, I felt a tremendous change in me. I discarded all thing prohibited in Islam. This made things difficult for my family too. In short, the Jackson family tumbled altogether. Threatening letters poured in, which further intensified the worries of my family.
What sort of threats?
Well, they would tell me that I had nurtured the animosity of American society and culture, by entering into the laps of Islam, you have deprived yourself of the right to live with others. WE would make life unbearable for you in America so on, so forth. But I confess that my family is broadminded. We have held all religions in esteem. Our parents have trained and groomed us in that way. Therefore, I may say that the Jackson family enjoys friendly relation with people belonging to almost all religions. This is the result of that training that I am being tolerated by them so far.
What was the reaction of your brother Michael Jackson?
On my way back to America, I brought a number of books from Saudi Arabia. Michael Jackson asked me himself for some of these books for study. Before this, his opinion was influenced by the propaganda of American media against Islam and the Muslims. He was not inimical towards Islam, but he was not favorably disposed towards Muslims either. But after reading these books, he would keep mum and not say anything against Muslims. I think perhaps this is the impact of the study of Islam that he diverted his business interests towards Muslim traders. Now, he has equal shares with the Saudi billionaire prince Waleed bin Talal, in his multi-national company.
It was said earlier that Michael Jackson was against Muslims, then there are rumors that he had become Muslim. What is the real story?
I testify this fact, at least there is nothing in my knowledge that Michael Jackson ever said anything derogatory against Muslims. His songs, too, give message of love for others. We have learnt from our parents to love others. Only those who have their own ax to grind hurl allegations on him. When there can be a nasty uproar against me when I became Muslim, why can it not be so against Michael Jackson. But, so far, media has not subjected him to scathing criticism, although he is threatened for his getting somewhat closer to Islam. But who knows what would it look like when Michael Jackson embraces Islam.
What are the views of the rest of the members of your family about you?
When I returned to America, my mother had already heard the news of my conversion to Islam. My mother is a religious and civilized woman. When I reached home, she put forth only one question, "you have taken this decision all of a sudden, or is it the outcome of some deep and long thinking behind it?" "I have decided after a lot of thinking about it," I replied, let me say we are known as a religious family. Whatever we possess, is due to the blessing of God. Then why we should not be grateful to Him? This is why we actively participate in the charity institutions. We dispatched medicines to the poor African countries through special aircraft. During Bosnian war, our aircraft were engaged in supplying aids to the affectees. We are sensitive to such things because we have witnessed abject poverty. We used to live in a house which was hardly a few square meters capacious.
Did you ever discuss about Islam with your sister pop star Janet Jackson?
Like other members of my family, my sudden conversion to Islam was a great surprise for her. In the beginning, she was worried. She has stashed into her head only one thing that Muslims are polygamous, they do have as much as four wives. When I explained this permission granted by Islam with reference to the state of the present American society, she was satisfied. This is fact that promiscuity and infidelity is very common in the western society. In spite of the fact that they are married, western men enjoy extramarital relations with a number of women. This has caused devastating moral decay in that society. Islam safeguards the social fabric from this destruction.
As per Islamic teachings, if a man is emotionally attracted towards a woman, he should honorably give this relation a legal shape otherwise he must be contented with only one wife. On the other hand, Islam has laid down so much conditions for second marriage that I do not think that an ordinary Muslim can afford to meet these conditions financially. There is hardly one percent Muslims in the Islamic world who have more than one wife. To my view, the women in an Islamic society is just like a well-protected flower which is safe from the stray penetrating looks of the viewers. Whereas western society is devoid of the vision to appreciate this wisdom and philosophy.
What are your spontaneous feelings when you look at the Muslim society?
For the larger interest of humanity, Islamic society presents the safest place on this planet. For instance, take the example of women. American women are clad in their out-fit in such a manner that gives temptation to the male for harassment. But this is unthinkable in an Islamic society. Besides, the prevalent sins and vices have disfigured the moral fabric of western society. I believe if there is any place left where the humanity is still visible, it can not be anywhere else than in an Islamic society. Time would come when the world would be obliged to accept this reality.
What is your candid opinion about the American media?
American media is suffering from self-contradictions. Take the example of Hollywood. The status of an artist is measured here keeping in view the model of his car, the standard of this restaurant that he visits, etc. This is the media that raises someone from the dust to the skies. They do not consider the artist as a human being. But I have met so many artists in the Middle East. They have no misplaced arrogance in them.
Just look at the CNN, they do that much exaggeration about some news that it appears that nothing else has happened except that event in the world. The news of fire in the forests of Florida was given such a wide coverage as it gave the impression that the whole globe has caught fire. In fact, it was a small area, which was affected by that fire.
I was in Africa, when the bomb-blast took place in Oklahoma City. The Media, without any proof, started hinting at the involvement of Muslims in that blast. Later on the Saboteur turned out to be a CHRISTIAN!!! We may term this attitude of American media as its willful ignorance.
Can you maintain a Linkage between your Islamic personality and the culture of your family?
Why not? This linkage can be kept up for the achievement of good things.
After becoming Muslim, did you ever happen to see Muhammad Ali?
Muhammad Ali is our family friend. I have met him a number of times, after embracing Islam. He has provided useful guidance about Islam.
Have you visited Shah Faisal mosque in Los Angeles city?
Yes, of course! This is a beautiful mosque. I am myself interested to construct a similar mosque in ?Falise? area because there is no mosques in this area and the Muslim community is not resourceful enough purchase a piece of land for a mosque in such a posh area. God willing, I would do it.
Who is ignorant of the services of Saudi Arabia for the glorious cause of Islam? No doubt it has leisurely financed the projects for mosques. But this American media even does not spare Saudi Arabia; it spreads quite strange news about this country. When I first visited Saudi Arabia, I had the impression that there would be muddy housed and a very poor communication network. But when I reached there, to my great surprise, I found it culturally the most beautiful country of the world.
Who has influenced you, so far as Islam is concerned?
Many persons have impressed me. But the fact is that first I turn to the Holy Quran, therefore I do not run a risk of getting strayed on the way. However, there are many Islamic scholars that one can be duly proud of. God willing, I plan to go to Saudi Arabia with my family to perform, ?Umrah?.
Your wife and children are Muslims too?
I have seven sons and two daughter who, like me, are fully Islamic-oriented. My wife is still studying Islam. She insists on going over to Saudi Arabia. I trust InshaAllah, she would sooner join Islam. May God Almighty give us the courage and perseverance to remain on this true religion, Islam. (Ameen)

Tuesday, April 11, 2006

எகிப்தில் முதலைகளை வணங்குகிறார்களா?

எகிப்தில் முதலைகளை வணங்குகிறார்களா?

கேள்வி : இறந்தாலும் நல்லதானாலும் கெட்டதானாலும் குழந்தைக்கும் நோயாளிக்கும் பாலை உபயோகிக்க காரணம் என்ன?- ஆர்.சுந்தரலிங்கம், முக்கட்டி சோலாடி, பிதர் நாடு.

பதில : பால், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பச்சரிசி போன்றவை தமிழக கலாச்சாரத்துடன் நெடு நாளைய தொடர்பு கொண்டிருப்பவை. ஒவ்வொரு நாட்டு கலாச்சாரங்களில் இந்த மாதிரியான பொருட்கள் மாறுபடும்.

நாம் பாம்பை நாகராஜவாக வணங்குகிறோம். எகிப்தியர்களுக்கு நைல் நதியில் வாழும் முதலைகள் தெய்வங்கள். சிலருக்கு ஆமை ஓரிடத்தில் புனிதமாகக் கருதப் படுபவை வேறு இடத்தில் அபசகுணமாகவும் இருக்கலாம்.

மனிதர்கள் வேளாண்மையைக் கடை பிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே கால்நடைகளை வளர்க்க ஆரம்பித்து விட்டனர். அதனால் பால் தயிர் நெய் ஆகியவை நமது சடங்குகளில் ஒரு அங்கமாக மாறி விட்டது.

தினமலர் - அறிவியல் ஆயிரம் - 17-01-2006

//எகிப்தில் வாழ்பவர்கள் முதலையை தெய்வமாக கொண்டுள்ளனர்//

இந்த செய்தியை எதிலிருந்து எடுத்தார்கள்? என்னுடன் ஒன்றாக அலுவலகத்தில் வேலை செய்யும் எகிப்தியரிடத்தில் 'முதலையை தெய்வமாக வணங்கும் பழக்கம் உண்டா?' என்று கேட்டேன். மிகவும் கோபப் பட்டார். என்பது சதவிதம் முஸ்லிம்களும் இருபது சதவீதம் கிறிஸ்தவர்களும் உள்ள நாட்டில் எப்படி முதலைகளை தெய்வமாக்குவோம்? என்று திருப்பிக் கேட்டார். இஸ்லாம் எகிப்துக்கு வருவதற்கு முன்பு ஹிந்துக்களைப் போல் சிலைகளையும் காளைக் கன்றுகளையும் வணங்கி வந்ததாக சரித்திரம் சொல்கிறது. தற்போது அந்த பழக்கங்கள் எல்லாம் முற்றிலும் ஒழிந்து விட்டது என்கிறார். எகிப்திலிருந்து கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்ததனால் தினமலர்க் காரருக்கு பழைய ஞாபகம் இன்னும் இருக்கிறதோ என்னவோ!

//நாம் பாம்பை நாகராஜவாக வணங்குகிறோம்//

வணங்கி விட்டுப் போங்கள். உங்களுக்கு நாகராஜாவை மட்டும் தானா வணங்கத் தெரியும்!பசு கழுகு மூஞ்சுறு பன்றி யானை என்று எதை விட்டு வைத்தீர்கள்.எல்லாமே வணங்கப் பட வேண்டியவை உங்கள் அகராதியில். ஆனால் மதிக்கப்பட வேண்டிய மனிதன் மட்டும், அதுவும் தாழ்த்தப் பட்டவன் மட்டும் தொட்டால் தீட்டு. கடவுளைக் கூட அந்த பாவப் பட்டவன் தூரத்திலிருந்து தான் தரிசிக்க வேண்டும். என்ன அழகிய மார்க்கம் அய்யா தினமலர்க் காரரே! புல்லரிக்கிறது போங்கள்.

இது போன்ற அபத்தங்களை இனி அறிவியல் பகுதியில் வெளியிடாமல் உங்களின் ஆன்மீகப் பகுதியில் வெளியிடுமாறு நெடு நாளைய வாசகனான நான் கேட்டுக் கொள்கிறேன்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் -2

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் -2

ஜி. மார்கோலத் கூறுகிறார்:

உலகத்திலுள்ள பெரும் மதக் கிரந்தங்களில் குர்ஆன் திண்ணமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகில் புரட்சி சகாப்தத்தைத் தோற்றுவித்த இந்த கிரந்தங்களில் அது இளைய வயது கொண்டதாக இருந்தாலும் மக்களின் உள்ளங்களை மாற்றுவதிலும் பெரும் பெரும் மக்கள் கூட்டத்தையே வியக்கத் தக்க முறையில் மாற்றி அமைப்பதிலும் அதற்கு இணையான வேறு கிரந்தம் இல்லை. அது முற்றிலும் புதிய சிந்தனையை மக்கள் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது.நவீன பண்பாட்டை உருவாக்குகிறது. அது முதலில்அரேபிய பாலைவனத்தில் சிதறிக் கிடந்த மக்களை இலட்சியத்தைப் பேணும் குழுவாக ஒன்றினைத்தது. அவர்களை மக்களில் சிறந்தவர்களாய் மாற்றியது. அய்ரோப்பிய மக்களும் கிழக்கத்திய மக்களும் இன்றைக்கும் மதிக்கும் அளவுக்குசமய அரசியல் அமைப்புகளை அது தோற்றுவித்துள்ளது.

Introduction to J.M.Rodwells The Koran, New York: Every Mans Library 1977, page 711.

மாரீஸ் புகைல் கூறுகிறார்:

முகம்மது நபி குர்ஆனைப் புனைந்தார் என்று சொல்லப் படும் கூற்று அடிப்படை யற்றது.கலிவி அறிவில்லாத ஒருவர் திடீரென சிறந்த இலக்கிய நயம் வாய்ந்த ஒரு கிரந்தத்தின் - இன்றைக்கும் அரபி இலக்கியத்தில் இணையற்று விளங்கும் ஒரு கிரந்தத்தின் ஆசிரியராக முடியுமா? அது மட்டுமல்ல, அந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் கற்பனை செய்து பார்த்திராத- இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புகளின் எதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படித் துல்லியமாக தெரிவிக்க முடிந்தது?

Maurice Bucaille – The Bible, The Quran, and Science 1978, page 125


டாக்டர் ஸ்டெயின் காஸ் கூறும்போது:

அதனுடைய வலிமையை இலக்கிய நயம் மற்றும் முன் கூட்டியே வைத்த சில துலாக் கோல்களைக் கொண்டுபார்க்கக் கூடாது.மாறாக முகமது நபியுடன் வாழ்ந்த தோழர்கள் மீது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது, அந்த நாட்டு மக்களிடையே எத்தகைய மாற்றங்களை உருவாகக்கியது என்பவற்றைக் கொண்டு அதன் வலிமையை நாம் கணிக்க வேண்டும். கருத்துகளில் முற்றிலும் மாறுபட்ட பரஸ்பர பகைமை கொண்ட மக்களின் உள்ளங்களை அது தொட்டு அவர்களின் உணர்சச்சிகளை மாற்றி ஓர் இணக்கமான சமூகமாக பிணைத்தது என்பதுவரலாற்று உண்மையாகும். இந்த உண்மையே அது அளவற்ற இலக்கிய நயம் கொண்ட வேதம் என்பதைத் தெளிவாக்குகிறது. பண்பாடற்ற மக்களை மிகவும் நாகரிகம் வாய்ந்த சமூகமாக மாற்றிவரலாற்றின் வெற்றிச் சிகரத்திற்கு அவர்களை இட்டுச் சென்றிருப்பதில் இருந்தே அந்த வேதத்தின் மகிமையை நாம் உணரலாம்.

Dr Steingass – Quoted in Hughes Dictionary Of Islam, Page 528


ஸர். வில்லியம் மூர் கூறுகிறார்:

குர்ஆன் இஸ்லாத்தின் மாபெரும் சாதனையாகும். அதன் ஆதிக்கம், சமயம், ஒழுக்கம்,விஞ்ஞானம் போன்ற அனைத்து துறைகளிலும் படர்ந்து நிற்கிறது.- குர்ஆன் அனைத்துக்கும் மேலானது என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பன்னிரண்டு நூற்றாண்டுகள் உருண்டோடி விட்ட போதிலும் தான் அருளப் பட்ட காலத்தில் இருந்தது போலவே இன்றளவும் தூய்மையுடன் விளங்கும் நூல் குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இல்லை.

Sir William Muir – The Life Of Mohamed, London 1903,Ch. The Coran Page 711

கேனான் டெய்லர்

ஒதுங்கிச் செல்லும் துறவு மனப் பான்மைக்குப் பதிலாக பிரச்னைகளைத் துணிச்சலுடன் சந்திக்கும் மனோ பாவத்தை இஸ்லாம் உருவாக்கியது. அடிமைகளுக்கு நம்பிக்கையும் மனித குலத்திற்கு சகோதரத்துவத்தையும்அளித்து மனித இயல்பின் அடிப்படைத் தன்மையை அங்கீகரித்தது.

Canon Taylor, Paper Read Before The Church Congress at Walver hamlton, Oct 7, 1887, Quoted by Arnod in The Preaching of Islam, Page71-72

டி லேசி ஓலேரி

'' வெற்றி கொள்ளப் பட்ட மக்கள் மீது வாள் முனையில் இஸ்லாத்தை முஸ்லிம் வெறியர்கள் திணித்தனர்' என்பது சில சரித்திர ஆசிரியர்கள் மிகச் சாதுர்யமாக மீண்டும் மீண்டும் சொல்லி வந்த செய்தியாகும். ஆனால் இந்த கருத்தோ - கற்பனையே ஆகும். அதுவும் அபத்த கற்பனையே ஆகும்.

De Lacy O’Leary. Islam at the Crossroads, London 1923. page 8

ஹெச்.ஏ.ஆர்.கிப்

இஸ்லாம் மனித குலத்திற்கு இன்னும் ஓர் சேவையினை ஆற்ற வேண்டியுள்ளது. அய்ரோப்பாவை விட கிழக்கு நாடுகளுக்கு மிக அருகில் இஸ்லாம் நிற்கிறது. இனங்களுக்கு இடையேயான ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இஸ்லாம் ஓர் அழுத்தமான பின்னணியைக் கொண்டுள்ளது. பல் வேறு பட்ட இனங்களைச் சார்ந்த மக்களை ஒன்றினைத்து அவர்களுக்கு சம அந்தஸ்து சம வாய்ப்பு முயற்ச்சிகளுக்கான சம உரிமை வழங்குவதில் இஸ்லாமியச் சமூகம் கண்டுள்ள வெற்றிக்கு இணையான சாதனையை வேறு எந்த சமூகமும் பெற்றிருக்கவில்லை. மரபுகளுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்தும் வலிமை இன்றும் இஸ்லாத்திடம் இருக்கிறது. கிழக்கிலும் மேற்கிலும் இன்று மோதிக் கொள்ளும் பெரும் சமூகங்கள் ஒற்றுமை ஒத்துழைப்புக்கானசூழ் நிலையை ஏற்படுத்த விரும்பினால் அதற்கு இஸ்லாம் மிகச் சிறந்த கருவியாக தவிர்க்க முடியாத வழி முறையாக இருப்பதைஅவர்கள் காண்பார்கள். அய்ரோப்பாவுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் இஸ்லாத்தின் கரங்களில் தீர்வுகள் உண்டு. அந்த இரு பெரும் சமூகங்களும் ஒன்று பட்டால் அமைதியான சூழ் நிலை உருவாகும் வாய்ப்புகள் பன் மடங்கு பெருகி விடும். இந்தச் சாதனை புரிய இஸ்லாத்தின் உதவியைப் புறக்கணித்து அதற்கு விரோதமான போக்கினை மேற் கொண்டால் இருவருக்குமே அழிவு தான் நிச்சயம்.

H.A.R.Gibb, Whither Islam, London, 1932, Page 379

Sunday, April 09, 2006

வேறு கிரகங்களில் மனிதன் வாழ முடியுமா?

வேறு கிரகங்களில் மனிதன் வாழ முடியுமா?

'பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்' - குர்ஆன் 7;175

பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். குர்ஆன் 7;10

இது சம்பந்தமாக வரும் வேறு வசனங்கள் (2;36- 7;24- 30;25)

பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!

மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே! சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.

மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

------------------------------------------------------------------------------------------------

'எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரோ?'

'கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரோ?'

'இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்'

அடடா! என்ன அருமையான சிந்தனை!(உப்புக் கருவாடு ஊற வச்ச சோறு கூட நீங்க எழுதுனது தானோ!)சரி. வைரமுத்து சார்!அதை இயற்கை என்று சொல்வது தவறுங்க.அது தான் நம்மை படைத்த இறைவன்.

'இதை எண்ணி எண்ணி இறைவனை வியக்கிறேன்'

என்று சிறிது மாற்றம் செய்து பாருங்கள். அழகாக பொருந்திப் போகும. ஏ.ஆர். ரஹ்மானும் மிகுந்த சந்தோஷமடைவார்.

Friday, April 07, 2006

இஸ்லாத்தின் மேல் அப்படி என்ன வெறுப்பு?

இஸ்லாத்தின் மேல் அப்படி என்ன வெறுப்பு?

நெடு நாட்களாக சிவா சவூதியைப் பற்றி ஒரு பதிவு போடப் போகிறேன். இஸ்லாத்தை தோலுரித்துக் காட்டப் போகிறேன் என்றெல்லாம் எழுதி வந்தார். நானும் ஏதோ இஸ்லாத்தைப் பற்றி விமர்சனங்கள் கடுமையாக வரும் என்று எதிர் பார்த்தேன். தற்போது பார்த்தால் யாரோ ஒரு சவூதி தன் வீட்டு வேலைக்காரியை உபயோகப் படுத்திக் கொள் என்று சொன்னதாவும், தான் மறுத்து விட்டதாகவும் தனக்குத் தானே சர்டிபிகேட் கொடுத்துக் கொள்ளும் சுய புராணத்தைத்தான் பார்க்கிறோம்.

நான் முன்பே 'சிறையில் வாடும் நம்மவர்கள்' என்ற என் பதிவில் சவூதியைப் பற்றி சிவாவுக்கு விளக்கி இருக்கிறேன். சவுதி நாட்டவர் ஒரு சிலர் செய்யும் தவறுக்கு இஸ்லாம் பொறுப்பாக முடியாது. குர்ஆனிலோ முகமது நபியின் போதனைகளிலோ உங்களுக்கு ஏதும் விமர்சனங்கள் இருந்தால் தெரிவியுங்கள். என்னால் முடிந்த வரை தெளிவிக்கிறேன் என்று சொன்னாலும் இவர் பழைய பல்லவியை விடுவதாக இல்லை. நேசகுமார், ஆரோக்கியம் போன்றவர்களைப் பொல் சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்து உள்ளார். இறைத்துக் கொண்டிருக்கட்டும். அவருக்கும் நேரம் போக வேண்டும் இல்லையா!

இதற்கு மாற்றாக நானும் ஹிந்து மதத்தைச் சார்ந்த பிரேமானந்தா, சதுர்வேதி, சிவா தெய்வமாக போற்றிடும் சங்கராச்சாரியார் மூத்தவர் இளையவர் போன்றோரின் லீலைகளை நக்கீரனில் இருந்தும் விடுதலையில் இருந்தும் எடுத்துப் போட்டால் இவர் எங்கு போய் ஒளிந்து கொள்வார். அப்படி அந்த சாமியார்களை விமர்சிப்பதும் எனக்கு அழகாக இருக்குமா? சிவா செய்து வந்தாலும் அதற்கு மாற்றமாக இது போன்ற தனி நபர் விமர்சனத்தை நான் செய்ய மாட்டேன்.

இது ஒரு புறம் இருக்க நேசகுமார்,ஆரோக்கியம், கால்கர்சிவா, ஸ்ரீநிவாஸ் போன்றோருக்கு இஸ்லாத்தின் மேல் அப்படி என்ன வெறுப்பு? உலகில் உள்ள அறிஞர்கள் பெர்னாட்ஷா முதல் நம் மகாத்மா காந்தி வரை மனித விடுதலைக்கு ஒரே வழி இஸ்லாம் தான் என்று கூறும் போது இவர்கள் மட்டும் ஏன் இவ்வாறு அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்? காரணம் இருக்கிறது.

இந்த இஸ்லாத்தினால் தற்போது அதிக பலன் பெறுவது யார? நம் நாட்டு பூர்வ குடி மக்களான தாழ்த்தப் பட்டவர்கள் மற்ற எந்த மதத்துக்கு போனாலும் பெயரும் மதமும் தான் மாறுமே யொழிய அவன் கலாச்சாரம் மாறாது. அவன் செய்து வரும் தொழிலும் மாறாது. அதே தாழ்த்தப் பட்டவன் முஸ்லிமாக மாறினால் பெயர் கலாச்சாரம் தொழில் அனைத்தும் உடன் மாறிவிடுகிறது. இழி தொழில்கள் எதுவும் செய்ய மாட்டான். சிவா போன்றவர்களும் அவன் முஸ்லிமாக மாறியவுடன் அத்தொழில்களைச் செய்வதற்கு ஏவவும் மாட்டார்கள்.

ஒரு குப்பனோ சுப்பனோ முஸ்லிமாக மாறி ரஹீம் பாயாகவும் ரஹ்மான் பாயாகவும மாறி விட்டால் நேசகுமார், கால்கரி சிவா போன்றோரின் வீட்டில் மலம் அள்ள யார் வருவார்? சுடுகாட்டில் பிணத்தை சுடுவது யார்? கிராமத்துக்குள் நுழைந்தவுடன் செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு மேல் ஜாதிக் காரர்களைப் பார்த்து கூழை கும்பிடு போடுவது யார்? அவன் முஸ்லிமாக மாறிவிட்டால் மலம் தின்ன வைத்து அழகு பார்ப்பது யாரை?தேனிர்க் கடையிலசிரட்டையில் யாருக்கு டீ தந்து கந்தோஷப்படுவது? அல்லது இரட்டைக் குவளை முறையை யாருக்கு வைப்பது?இதை எல்லாம் காலம் காலமாக ஆண்டு அனுபவித்து வரும் நேசகுமார், ஆரோக்கியம், காலகரிசிவா,ஸ்ரீநிவாஸ் போன்றோருக்கு நொடிப் பொழுதில் இதெல்லாம் கை விட்டுப் போகிறதே என்ற பீதியில் கூப்பாடு போடுகிறார்கள். இதனால்தான் இதெற்கெல்லாம் காரணியான இஸ்லாத்தின் மேல் இவர்களின் கோபம் திரும்புகிறது.எனவே தான் இதை வளர விடக் கூடாது என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். குதிக்கட்டும். நன்றாக குதிக்கட்டும். இவர்கள் குதிப்பதால் ஏற்படும் சப்தம் பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, கீழ்வெண்மணி இன்னும் தீண்டாமை கொடுமை தலை விரித்தாடும் அனைத்து கிராமங்களுக்கும் சென்று கேட்கட்டும்.

இதே நேசகுமார்,சிவா போன்றோர் தன் மதத்தில் உள்ள தீண்டாமை கொடுமைக்கு எதிராக ஒரு துரும்பையாவது இதுவரை எடுத்துப் போட்டதுண்டா? தேர்ந்தெடுக்கப் படட பஞ்சாயத்து தலைவர் அவர் தாழ்த்தப் பட்டவர் என்பதற்காகவே வெட்டி கொலை செய்யப் படுகிறார்.வேறொரு கிராமத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட மறுநாளே ராஜினாமா செய்கிறார். குமுதம் பத்திரிக்கை அந்த கிராமத்துக்கு சென்று பேட்டி எடுத்தது. ஒரு முதியவர் சொல்கிறார் 'காலம் காலமா எங்களுக்கு கீழே இருந்தவன் இன்று தேர்தலில் ஜெயித்து எங்களுக்கு தலைவராக வர முடியுங்களா? அதனால தான் அவனிடம் எடுத்து சொல்லி ராஜினாமா பண்ண வச்சுடுறோம' என்று சர்வ சாதாரணமாக சொல்கிறாராம். இதை எல்லாம் இல்லை என்று மறுக்க முடியுமா? இதற்கு அல்லவா முதலில் குரல் கொடுத்திருக்க வேண்டும்?

பசுக்கள் இவர்களுக்கு தெய்வமாம். இதை அறுத்து சாப்பிட்டதால் 4 தாழ்த்தப்பட்டவர்களை வட நாட்டில் அடித்தே கொன்றிருக்கிறது ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம்.தற்போது ஒரு பெண்ணும் மாட்டை அறுத்ததினால் இதே போல் 15 வருட சிறைத் தண்டனையை விதித்து இருக்கிறார்களாம். சிவா! உங்கள் பார்வையில் மனிதனை விட மாடு உயர்ந்ததா?புராணங்களில் யாகத்துக்கு பசுவைப் பயன் னடுத்தி இருக்கிறார்களே! உங்கள் கடவுள்களும் அதை ருசித்து சாப்பிட்டு இருக்கிறார்களே! மறுக்க முடியுமா? புராணம் இப்படி இருக்க அப்பாவிகளான தாழ்த்தப் பட்டவர்களை எப்படி கொலை செய்யலாம்? என்று ஒரு பதிவை இதுவரை சிவாவும் நேசகுமாரும் ஆரோக்கியமும் போட்டிருக்க வேண்டாமோ? போட்டார்களா? இல்லையே!

. பல்வான்சிங், ஐ.ஏ. எஸ்1959ல ஐ.ஏ.எஸ்ல தேறி வேலையில சேர்ந்தார். அந்தக் கால கட்டத்துல எல்லாரையும் போல சமுதாயத்தை மாத்தனும்கற மனநிலையில இருந்தவர். 1964ல பதவி விலகினார். நடந்தது என்ன? யாரோ ஒரு தலித். முடி வெட்டிக்கப் போயிருக்காரு. கடைக்காரர் வெட்ட முடியாதுன்னார். இல்ல வெட்டணும்னு தலித் கேட்க. அப்பன்னா இத்தன ரூவா குடுன்னு கூலிய உயர்த்திக் கேட்க. சரின்னு தலித் ஒத்துக்கிட்டாலும், கடைக்கு வெளியில ஒக்கார வச்சு முடி வெட்டிவிட்ட கேஸ் ஒன்னு. இத விசாரிச்சாரு பல்வான் சிங். இந்த வன்முறையைக் கண்டிச்சு எழுதியிருக்கார். வந்தது அரசச் செயலர் ஓலை. விசாரணை. அதுவரைக்கும் நல்லா வேலை செய்றன்னு சொன்ன உயரதிகாரியெல்லாம் உன் வேலை மோசம், இது தப்பு, அது தப்பு, சாதாரண விஷயத்தையெல்லாம் பெருசாக்குற, நீ ரொம்ப உணர்ச்சி வசப் படுற, ஒத்துப் போமாட்டங்கிற அப்படின்னெல்லாம் சொல்ல ஆரம்பிக்கிறாங்க. வேலை மாத்தல் வருது. கேள்வி கேக்குறார். கடைசியில ஒன்னும் முடியாம பதவி விலகுறார். அப்புறமா ஒரு புத்தகம் எழுதியிருக்கார் - Balwan Singh’s autobiography: an untouchable in the IAS.
படித்த ஒரு கலெக்டருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண படிப்றிவில்லாத தாழ்த்தப் பட்டவனின் நிலைமையை அவன் நிலைமையில் இருந்து சற்று சிந்தித்து பாருங்கள்.

இன்று தமிழகத்தில் கோடிகளை நெருங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் அரபு நாட்டு இறக்குமதியா? இல்லையே! உங்களைப் போன்றோரும் உங்களின் மூதாதையரும் செய்த தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டு பொறுக்காமல் இஸ்லாத்துக்கு ஓடியவர்கள் தானே தமிழகத்தில் வாழும் பரம்பரை முஸ்லிம்கள்.! மறுக்க முடியுமா? அவர்கள் யாரிடமாவது சென்று நீங்கள் முன்பு எந்த சாதி என்று கேளுங்கள். அவர்களுக்கே தெரியாது. அந்த அளவு அவர்களின் வாழ்க்கையே இஸ்லாமாக மாறியிருக்கிறதே! இதைத்தான் மறுக்க முடியுமா? அம்பேத்கார்,அண்ணல் காந்தி, பெரியார் போன்றோர் சாதி ஒழிப்பிற்கு எத்தனை பிரச்சாரங்களைச் செய்தனர்! ஒழிக்க முடிந்ததா? இல்லையே!

மனு கொல்கிறது 'மனிதன் நான்கு வருணமாக பிரிக்கப் பட்டவன்' என்று. 'நான் ஹிந்துவாக இருந்து மனுவையும் பின்பற்றுவேன்.ஆனால் தீண்டாமையும் ஒழிக்கப் பட வேண்டும்' என்றால் 'கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று சொல்வது போல் இல்லையா? இதற்காக வெல்லாம் இதுவரை நீங்கள் குரல் கொடுத்தது உண்டா? முதலில் உங்கள் வீட்டை சுத்தப் படுத்திக் கொண்டு பிறகு அடுத்த வீட்டுக்கு வாருங்கள். அதுதான் நியாயமும் கூட.

இந்த பதிவு காழ்ப்புணர்வோடு இஸ்லாத்தை தூற்றிக் கொண்டிருக்கும் சிவா, ஆரோக்கியம், நேச குமார், போன்றவர்களுக்கான சிறிய பதிலே! மற்றபடி ஹிந்து மதத்தை விமர்சித்து யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. தங்கமணி, சிறில் அலெக்ஸ் ரோசா வசந்த், டோணடு சார், மோகன்தாஸ், மதி கந்தசாமி, ஜெயஸ்ரீ போன்ற நல்ல உள்ளங்களை நான் என்றுமே மதிப்பவன். அவர்களின் பதிவுகளையும் இனனும்பலரின் ஆக்கபூர்வமான பதிவுகளையும் தொடர்ந்தும் படித்து வருபவன் என்றும் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.